தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
+4
manjubashini
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
(மிகச் சுருக்கமாகவே விளக்கியுள்ளேன். ஹைக்கூ வாசகர்கள் எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டால் சரி... உங்கள் விளக்கம் தேவையில்லை என்று விலக்கி விட்டாலும் சரி... ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். விளக்கங்களுடன் படித்தால் நீங்களும் ஒரு 10 ஹைக்கூ எழுதலாம் என்பது என் கணிப்பு)
மனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது:
உண்டாக்கி உடைத்து
அழுது மகிழ்ச்சியடையும்
சலவைக்குமிழியுடன் குழந்தை (1)
குழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது:
உலகை உடைத்து
விளையாடும் குழந்தை
சலவைக் குமிழி (2)
உலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
சலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ:
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
குழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ:
சேர்த்த ஆசைகள்
சிதறுதேங்காயாகிவிட்டது
மரணம் (5)
இதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும்.
குழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது:
மண்ணினால் உருவம்
மூச்சடைத்ததால் மரணம்
குமிழி உண்டாகி உடையும் (6)
இதில் பைபிள் குறிப்புப்படி மண்ணினால் உருவம் செய்து கடவுள் நாசி வழியாக காற்றை ஊதி நிரப்ப மனிதனாக உயிர்பெறுகிறான். அவ்வாறு ஊதி நிரப்பியதால் அம்மூச்சிக்காற்று பெருகுகிறது அல்லது குறைந்து விடுகிறது அதனால் மரணம் உண்டாகிறது (அறிவியல், மருத்துவக் காரணம் வேண்டாம்) என வைத்துக்கொள்வோம். அதே போல்தான் குழந்தை சோப்புக்குமிழியைப் பெரியதாக ஊத அது உண்டாகி உடைந்துபோகிறது. இயற்கையான மரணமும் இவ்வாறே உண்டாகிறது என்று நினைத்துக்கொண்டதால் மேற்கண்ட ஹைக்கூ உருவானது.
சலவைக் குமிழியுடன் பனித்துளியை இணைத்துப் பார்க்கிறேன். இப்படியும் ஒரு ஹைக்கூ:
மழைக்குமிழி
பனித்துளி
சலவைக்குமிழியுடன் நாம் (7)
மேற்கண்ட ஹைக்கூ நிலையாமையைப் பேசுகிறது.
சரி... பல வேளைகளில் நம் நிலையாமைக்குக் காரணம் நாமாகவே இருப்போம். சில வேளைகளில் சமூகக் காரணமும் ஒன்றாக இருக்கும். நாமே காரணம் என வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ:
மழைக்குமிழியை
உடைக்கும்
மழைத்துளி (8)
சரி... நாமே காரணம் இல்லை. சமுதாயமும், சமூகமும்தான் காரணம் என்று வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ என்று சொல்லி ஏமாற்ற மாட்டேன். இப்படி ஒரு சென்ரியு (இதை ஹைக்கூ என்று சொல்லக்கூடாது சென்ரியு வகை ஆகும்).
மனிதனை
அழிக்கும்
மனிதன் (9)
(ஹைக்கூவும் சென்ரியுவும் எப்படி வேறுபட்ட வடிவங்களாகிறது என்ற பாகுபாடு தெரியுமா? தெரியும் என்றால் மகிழ்ச்சி. தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.)
சரி… ஹைக்கூவிற்குத் திரும்ப வருவோம். குழந்தைச் செய்து விளையாடும் குமிழியில் வேறு என்ன தெரியும் (உலகமே தெரியுது) வேறு எதாவது தெரியாமலா போகும் என்று உற்றுப்பார்க்கிறேன். தெரிந்து விட்டது வானவில். சரி இப்படி ஒரு ஹைக்கூ:
மழையில்லை
வானவில் தோன்றியது!
சலவைக் குமிழியில். (10)
காதலி இல்லாத நேரத்தில் காதலியின் நினைவு தோன்றாதா? மனைவி துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது காதலியின் நினைவா? அதானே...! சரி... சரி என்ன செய்வது நினைவு வந்து விட்டது. ஹைக்கூவும் பிறந்துவிட்டது இப்படி:
கையை விட்டு ஓடும்
சலவைக் குமிழியானது
பிரிந்த காதல் உறவு (11)
இதற்குப் பல பக்கம் விளக்கம் தேவை. யாராவது எழுதுங்கள். நான் கொஞ்சமாகச் சொல்லிவிடுகிறேன். குழந்தையின் கையை விட்டுப் பிரிந்து ஓடும்/போகும்/பிரியும் குமிழி முதலில் குழந்தையின் கையைச் சுத்தப்படுத்திவிட்டுப்போகும். போனதுத் திரும்பாது உடைந்துவிடும். குழந்தைக்குச் சிறிது நேரம் அது மகிழ்ச்சி/ விளையாட்டுப் பொருள்/ உடைந்ததால் அழுகைக்கும் சோகத்துக்கும் உரிய பொருளாகி விடுகிறது. இப்படி பல குறியீடாக விரிந்து செல்லும். சரி... பிரிந்த காதலிக்கு வருவோம். காதல் பிரிவுக்குப் பின்னரோ தோல்விக்குப் பின்னரோ பழைய நினைவுகள் மகிழ்ச்சியையோ துன்பத்தையோ வருத்தத்தையோ இழப்பையோ ஏன்? மரணத்தையோ கூடத் தருகிறது. இந்த (11வது) ஹைக்கூ எனக்குச் சுமார் 25 ஹைக்கூக்களைத் தந்திருக்கிறது. அதையும் வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாகப் பதிவு செய்கிறேன்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். சலவைக்குமிழியை வைத்தே 10 ஹைக்கூக்கள் எழுதுவது சரியா? ஹைக்கூ இதனை ஏற்றுக் கொள்கிறதா என்று. கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூ கவிஞர்களிடம் ஒரு ஹைக்கூவை எழுதிக் கேட்டால் வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூக்கள் கிடைக்கும். ஆனால் கீழ்கண்ட முறைதான் தவறு. எடுத்துக்காட்டுக்கு என் ஹைக்கூவையே சான்றாகக் காட்டலாம்.
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
மேற்கண்ட ஹைக்கூவில் உடைந்துபோகும் என்பது குறியீடு. அது சிதைந்துபோகும் / அழிந்துபோகும் என்பதையும் குறிக்கும். சரி... மேற்கண்ட ஹைக்கூவை அடிகள் மாற்றிப்போட்டுப் பார்த்தால் மேலும் நான்கு ஹைக்கூக்கள் கிடைக்கும். இதோ இப்படி:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் / (முதலாவதாக எழுதியது) (1)
உடைந்துபோகும்
வளர்ந்த உலகம்
சலவைக்குமிழியாய் (அடி மாறியிருக்கிறது) (2)
சலவைக்குமிழியாய்
உடைந்துபோகும்
வளர்ந்த உலகம் (அடி மாறியிருக்கிறது) (3)
உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (4)
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய்
உலகம் (5)
மேற்கண்ட ஐந்துமே ஹைக்கூதான். ஆனால் இப்படிச் செய்வதுதான் தவறு. இச்செயல் நான் நிறைய ஹைக்கூ எழுதியிருக்கிறேன் என்பதைக் காட்டுமே ஒழிய, சிறந்த ஹைக்கூக் கவிஞராக உங்களை அடையாளப் படுத்தாது.
10 ஹைக்கூக்களில் உங்களுக்குப் பிடித்த ஒரு ஹைக்கூ சொல்லுங்களேன் நான் மகிழ...
உங்ளின் நேரத்தைக் கருத்தில் கொண்டு கவிதைக்கானத் தோற்றம் குறித்த சிந்தனையை மிகக் குறைவாகவே பதிவு செய்துள்ளேன். நீங்கள் விரித்துரைத்துப் பொருள் கொள்ள வேண்டுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கிப் படித்தமைக்கு உங்களுக்கு என் நன்றி
அனைத்தையும் ரசிக்க:
உண்டாக்கி உடைத்து
அழது மகிழ்ச்சியடையும்
சலவைக்குமிழியுடன் குழந்தை (1)
உலகை உடைத்து
விளையாடும் குழந்தை
சலவைக் குமிழி (2)
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
சேர்த்த ஆசைகள்
சிதறுதேங்காயாகிவிட்டது
மரணம் (5)
மண்ணினால் உருவம்
மூச்சடைத்ததால் மரணம்
குமிழி உண்டாகி உடையும் (6)
மழைக்குமிழி
பனித்துளி
சலவைக்குமிழியுடன் நாம் (7)
மழைக்குமிழியை
உடைக்கும்
மழைத்துளி (8)
மழையில்லை
வானவில் தோன்றியது!
சலவைக் குமிழியில். (10)
கையை விட்டு ஓடும்
சலவைக் குமிழியானது
பிரிந்த காதல் உறவு (11)
மனிதனை
அழிக்கும்
மனிதன் (9) - (சென்ரியு)
© ம. ரமேஷ் ஹைக்கூ
மனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது:
உண்டாக்கி உடைத்து
அழுது மகிழ்ச்சியடையும்
சலவைக்குமிழியுடன் குழந்தை (1)
குழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது:
உலகை உடைத்து
விளையாடும் குழந்தை
சலவைக் குமிழி (2)
உலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
சலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ:
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
குழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ:
சேர்த்த ஆசைகள்
சிதறுதேங்காயாகிவிட்டது
மரணம் (5)
இதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும்.
குழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது:
மண்ணினால் உருவம்
மூச்சடைத்ததால் மரணம்
குமிழி உண்டாகி உடையும் (6)
இதில் பைபிள் குறிப்புப்படி மண்ணினால் உருவம் செய்து கடவுள் நாசி வழியாக காற்றை ஊதி நிரப்ப மனிதனாக உயிர்பெறுகிறான். அவ்வாறு ஊதி நிரப்பியதால் அம்மூச்சிக்காற்று பெருகுகிறது அல்லது குறைந்து விடுகிறது அதனால் மரணம் உண்டாகிறது (அறிவியல், மருத்துவக் காரணம் வேண்டாம்) என வைத்துக்கொள்வோம். அதே போல்தான் குழந்தை சோப்புக்குமிழியைப் பெரியதாக ஊத அது உண்டாகி உடைந்துபோகிறது. இயற்கையான மரணமும் இவ்வாறே உண்டாகிறது என்று நினைத்துக்கொண்டதால் மேற்கண்ட ஹைக்கூ உருவானது.
சலவைக் குமிழியுடன் பனித்துளியை இணைத்துப் பார்க்கிறேன். இப்படியும் ஒரு ஹைக்கூ:
மழைக்குமிழி
பனித்துளி
சலவைக்குமிழியுடன் நாம் (7)
மேற்கண்ட ஹைக்கூ நிலையாமையைப் பேசுகிறது.
சரி... பல வேளைகளில் நம் நிலையாமைக்குக் காரணம் நாமாகவே இருப்போம். சில வேளைகளில் சமூகக் காரணமும் ஒன்றாக இருக்கும். நாமே காரணம் என வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ:
மழைக்குமிழியை
உடைக்கும்
மழைத்துளி (8)
சரி... நாமே காரணம் இல்லை. சமுதாயமும், சமூகமும்தான் காரணம் என்று வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ என்று சொல்லி ஏமாற்ற மாட்டேன். இப்படி ஒரு சென்ரியு (இதை ஹைக்கூ என்று சொல்லக்கூடாது சென்ரியு வகை ஆகும்).
மனிதனை
அழிக்கும்
மனிதன் (9)
(ஹைக்கூவும் சென்ரியுவும் எப்படி வேறுபட்ட வடிவங்களாகிறது என்ற பாகுபாடு தெரியுமா? தெரியும் என்றால் மகிழ்ச்சி. தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.)
சரி… ஹைக்கூவிற்குத் திரும்ப வருவோம். குழந்தைச் செய்து விளையாடும் குமிழியில் வேறு என்ன தெரியும் (உலகமே தெரியுது) வேறு எதாவது தெரியாமலா போகும் என்று உற்றுப்பார்க்கிறேன். தெரிந்து விட்டது வானவில். சரி இப்படி ஒரு ஹைக்கூ:
மழையில்லை
வானவில் தோன்றியது!
சலவைக் குமிழியில். (10)
காதலி இல்லாத நேரத்தில் காதலியின் நினைவு தோன்றாதா? மனைவி துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது காதலியின் நினைவா? அதானே...! சரி... சரி என்ன செய்வது நினைவு வந்து விட்டது. ஹைக்கூவும் பிறந்துவிட்டது இப்படி:
கையை விட்டு ஓடும்
சலவைக் குமிழியானது
பிரிந்த காதல் உறவு (11)
இதற்குப் பல பக்கம் விளக்கம் தேவை. யாராவது எழுதுங்கள். நான் கொஞ்சமாகச் சொல்லிவிடுகிறேன். குழந்தையின் கையை விட்டுப் பிரிந்து ஓடும்/போகும்/பிரியும் குமிழி முதலில் குழந்தையின் கையைச் சுத்தப்படுத்திவிட்டுப்போகும். போனதுத் திரும்பாது உடைந்துவிடும். குழந்தைக்குச் சிறிது நேரம் அது மகிழ்ச்சி/ விளையாட்டுப் பொருள்/ உடைந்ததால் அழுகைக்கும் சோகத்துக்கும் உரிய பொருளாகி விடுகிறது. இப்படி பல குறியீடாக விரிந்து செல்லும். சரி... பிரிந்த காதலிக்கு வருவோம். காதல் பிரிவுக்குப் பின்னரோ தோல்விக்குப் பின்னரோ பழைய நினைவுகள் மகிழ்ச்சியையோ துன்பத்தையோ வருத்தத்தையோ இழப்பையோ ஏன்? மரணத்தையோ கூடத் தருகிறது. இந்த (11வது) ஹைக்கூ எனக்குச் சுமார் 25 ஹைக்கூக்களைத் தந்திருக்கிறது. அதையும் வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாகப் பதிவு செய்கிறேன்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். சலவைக்குமிழியை வைத்தே 10 ஹைக்கூக்கள் எழுதுவது சரியா? ஹைக்கூ இதனை ஏற்றுக் கொள்கிறதா என்று. கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூ கவிஞர்களிடம் ஒரு ஹைக்கூவை எழுதிக் கேட்டால் வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூக்கள் கிடைக்கும். ஆனால் கீழ்கண்ட முறைதான் தவறு. எடுத்துக்காட்டுக்கு என் ஹைக்கூவையே சான்றாகக் காட்டலாம்.
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
மேற்கண்ட ஹைக்கூவில் உடைந்துபோகும் என்பது குறியீடு. அது சிதைந்துபோகும் / அழிந்துபோகும் என்பதையும் குறிக்கும். சரி... மேற்கண்ட ஹைக்கூவை அடிகள் மாற்றிப்போட்டுப் பார்த்தால் மேலும் நான்கு ஹைக்கூக்கள் கிடைக்கும். இதோ இப்படி:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் / (முதலாவதாக எழுதியது) (1)
உடைந்துபோகும்
வளர்ந்த உலகம்
சலவைக்குமிழியாய் (அடி மாறியிருக்கிறது) (2)
சலவைக்குமிழியாய்
உடைந்துபோகும்
வளர்ந்த உலகம் (அடி மாறியிருக்கிறது) (3)
உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (4)
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய்
உலகம் (5)
மேற்கண்ட ஐந்துமே ஹைக்கூதான். ஆனால் இப்படிச் செய்வதுதான் தவறு. இச்செயல் நான் நிறைய ஹைக்கூ எழுதியிருக்கிறேன் என்பதைக் காட்டுமே ஒழிய, சிறந்த ஹைக்கூக் கவிஞராக உங்களை அடையாளப் படுத்தாது.
10 ஹைக்கூக்களில் உங்களுக்குப் பிடித்த ஒரு ஹைக்கூ சொல்லுங்களேன் நான் மகிழ...
உங்ளின் நேரத்தைக் கருத்தில் கொண்டு கவிதைக்கானத் தோற்றம் குறித்த சிந்தனையை மிகக் குறைவாகவே பதிவு செய்துள்ளேன். நீங்கள் விரித்துரைத்துப் பொருள் கொள்ள வேண்டுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கிப் படித்தமைக்கு உங்களுக்கு என் நன்றி
அனைத்தையும் ரசிக்க:
உண்டாக்கி உடைத்து
அழது மகிழ்ச்சியடையும்
சலவைக்குமிழியுடன் குழந்தை (1)
உலகை உடைத்து
விளையாடும் குழந்தை
சலவைக் குமிழி (2)
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
சேர்த்த ஆசைகள்
சிதறுதேங்காயாகிவிட்டது
மரணம் (5)
மண்ணினால் உருவம்
மூச்சடைத்ததால் மரணம்
குமிழி உண்டாகி உடையும் (6)
மழைக்குமிழி
பனித்துளி
சலவைக்குமிழியுடன் நாம் (7)
மழைக்குமிழியை
உடைக்கும்
மழைத்துளி (8)
மழையில்லை
வானவில் தோன்றியது!
சலவைக் குமிழியில். (10)
கையை விட்டு ஓடும்
சலவைக் குமிழியானது
பிரிந்த காதல் உறவு (11)
மனிதனை
அழிக்கும்
மனிதன் (9) - (சென்ரியு)
© ம. ரமேஷ் ஹைக்கூ
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 12, 2012 3:16 pm; edited 5 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
அருமையான விளக்கத்துடன் கூடிய ஹைக்கூக்கள் அருமை..
எளிய நடையில் புரிந்துக் கொள்ளும் விதமாக உள்ளது
விரைவில் நானும் ஹைக்கூ எழுதுகிறேன்.. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருந்து கரம் கோர்த்து படைப்பாளர்களை உருவாக்குவோம்..
எளிய நடையில் புரிந்துக் கொள்ளும் விதமாக உள்ளது
விரைவில் நானும் ஹைக்கூ எழுதுகிறேன்.. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருந்து கரம் கோர்த்து படைப்பாளர்களை உருவாக்குவோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
நன்றி... இதில் நான் கற்றுக்கொண்டதும் கூட நிறையவே... இதனால் யாராவது படைப்பாளர் ஆனால் மகிழ்ச்சியே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
தேவையில்லை என்று விளக்கி விட்டாலும் சரி..
என்பது விலக்கி என இருத்தல் நலம்...
-
அணுயுலைகள் என்பது பிழை என கருதுகிறேன்..
அணு உலைகள் என்றே இருக்க வேண்டும்..
-
தங்கள் முயற்சியில் நிச்சயமாக சிலர் படைப்பாளர்
ஆவார்கள்...
என்பது விலக்கி என இருத்தல் நலம்...
-
அணுயுலைகள் என்பது பிழை என கருதுகிறேன்..
அணு உலைகள் என்றே இருக்க வேண்டும்..
-
தங்கள் முயற்சியில் நிச்சயமாக சிலர் படைப்பாளர்
ஆவார்கள்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
நன்றி... திருத்தங்கள் செய்து விட்டேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
விளக்கங்களும் அருமை... ஹைக்கூக்களும் அருமை...
அன்பு வாழ்த்துகள் ரமேஷ்...
அன்பு வாழ்த்துகள் ரமேஷ்...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
வாழ்த்துகள் கூறியமைக்கு நன்றி... மிக்க மகிழ்ச்சி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
பின்னூட்டம் அளித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
அருமை நானும் எழுதி பாத்துட்டு வாரேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
விரைவில் படைப்பாளராக வாழ்த்துகள்.
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்களும்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
ஹைக்கூ எழுதலாம் வாங்க – 6
கண்ணின் வெந்நீரில்
உன் பழைய நினைவுகள்
மன்னிப்பு இன்றி நான்
என்று ஹைக்கூவாக எழுதிப் படித்துப் பார்த்தேன்… ஆனால் ஹைக்கூவாக இல்லை… என்ன மாற்றம் செய்யலாம் என்று திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து கடைசியாக இந்த ஹைக்கூ இப்படி ஒரு சிறப்பான ஹைக்கூவாக மாற்றம் பெற்றது.
கண்ணில் வெந்நீர்
நினைவுகள்
மன்னிப்பு
சிறு விளக்கம்: முதலாவதாக எழுதிய ஹைக்கூவில் “கண்ணின் வெந்நீரில்” என்பது “கண்ணில் வெந்நீர்” என்று மாறி இருக்கிறது. ஹைக்கூவிற்குத் தேவையற்ற “உன் பழைய”, “இன்றி நான்” என்ற இணைப்பு சொற்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
முதலடியில் “கண்ணில் கொதிநீர்” என்று போடலாம் என்றுகூட நினைத்தேன். இரண்டாம் அடியில் நினைவுகள் என்று வந்ததால் (பழையவற்றை நினைக்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் எப்பொழுது வந்தது என்றுகூட தெரியாத நிலை… அதனால் வெந்நீர் சிறப்பாக இருந்தது) விட்டுவிட்டேன்.
சரி “மன்னிப்பு” மன்னிப்பு பல பொருள் தரும் இப்படியாக,
யார் மன்னித்தது ஆணா பெண்ணா?
யார் எதற்காக மன்னிப்பு கேட்டார்கள்?
மன்னிப்பு கொடுக்கப்பட்டதா இல்லையா?
மன்னிப்பு கொடுத்ததால் – கொடுக்காததால் இன்று கண்ணீரா?
இன்னும் நிறைய இருக்கும் உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்...
கண்ணில் வெந்நீர்
நினைவுகள்
மன்னிப்பு
-© ம. ரமேஷ் ஹைக்கூ
உன் பழைய நினைவுகள்
மன்னிப்பு இன்றி நான்
என்று ஹைக்கூவாக எழுதிப் படித்துப் பார்த்தேன்… ஆனால் ஹைக்கூவாக இல்லை… என்ன மாற்றம் செய்யலாம் என்று திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து கடைசியாக இந்த ஹைக்கூ இப்படி ஒரு சிறப்பான ஹைக்கூவாக மாற்றம் பெற்றது.
கண்ணில் வெந்நீர்
நினைவுகள்
மன்னிப்பு
சிறு விளக்கம்: முதலாவதாக எழுதிய ஹைக்கூவில் “கண்ணின் வெந்நீரில்” என்பது “கண்ணில் வெந்நீர்” என்று மாறி இருக்கிறது. ஹைக்கூவிற்குத் தேவையற்ற “உன் பழைய”, “இன்றி நான்” என்ற இணைப்பு சொற்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
முதலடியில் “கண்ணில் கொதிநீர்” என்று போடலாம் என்றுகூட நினைத்தேன். இரண்டாம் அடியில் நினைவுகள் என்று வந்ததால் (பழையவற்றை நினைக்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் எப்பொழுது வந்தது என்றுகூட தெரியாத நிலை… அதனால் வெந்நீர் சிறப்பாக இருந்தது) விட்டுவிட்டேன்.
சரி “மன்னிப்பு” மன்னிப்பு பல பொருள் தரும் இப்படியாக,
யார் மன்னித்தது ஆணா பெண்ணா?
யார் எதற்காக மன்னிப்பு கேட்டார்கள்?
மன்னிப்பு கொடுக்கப்பட்டதா இல்லையா?
மன்னிப்பு கொடுத்ததால் – கொடுக்காததால் இன்று கண்ணீரா?
இன்னும் நிறைய இருக்கும் உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்...
கண்ணில் வெந்நீர்
நினைவுகள்
மன்னிப்பு
-© ம. ரமேஷ் ஹைக்கூ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
அருமையான விளக்கத்துடன் கூடிய நல்ல பகிர்வு தோழரே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
கவியருவி ம. ரமேஷ் wrote:கண்ணின் வெந்நீரில்
உன் பழைய நினைவுகள்
மன்னிப்பு இன்றி நான்
என்று ஹைக்கூவாக எழுதிப் படித்துப் பார்த்தேன்… ஆனால் ஹைக்கூவாக இல்லை… என்ன மாற்றம் செய்யலாம் என்று திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து கடைசியாக இந்த ஹைக்கூ இப்படி ஒரு சிறப்பான ஹைக்கூவாக மாற்றம் பெற்றது.
கண்ணில் வெந்நீர்
நினைவுகள்
மன்னிப்பு
சிறு விளக்கம்: முதலாவதாக எழுதிய ஹைக்கூவில் “கண்ணின் வெந்நீரில்” என்பது “கண்ணில் வெந்நீர்” என்று மாறி இருக்கிறது. ஹைக்கூவிற்குத் தேவையற்ற “உன் பழைய”, “இன்றி நான்” என்ற இணைப்பு சொற்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
முதலடியில் “கண்ணில் கொதிநீர்” என்று போடலாம் என்றுகூட நினைத்தேன். இரண்டாம் அடியில் நினைவுகள் என்று வந்ததால் (பழையவற்றை நினைக்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் எப்பொழுது வந்தது என்றுகூட தெரியாத நிலை… அதனால் வெந்நீர் சிறப்பாக இருந்தது) விட்டுவிட்டேன்.
சரி “மன்னிப்பு” மன்னிப்பு பல பொருள் தரும் இப்படியாக,
யார் மன்னித்தது ஆணா பெண்ணா?
யார் எதற்காக மன்னிப்பு கேட்டார்கள்?
மன்னிப்பு கொடுக்கப்பட்டதா இல்லையா?
மன்னிப்பு கொடுத்ததால் – கொடுக்காததால் இன்று கண்ணீரா?
இன்னும் நிறைய இருக்கும் உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்...
கண்ணில் வெந்நீர்
நினைவுகள்
மன்னிப்பு
-© ம. ரமேஷ் ஹைக்கூ
இதற்கு நான் ஒன்று எழுதியுள்ளேன் அதை ஏனோட ஹைக்கூ எண்ணிக்கையில் கொண்டுவருகிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
மகிழ்ச்சி... படிக்க ஆவலாக உள்ளேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி... படிக்க ஆவலாக உள்ளேன்...
என்னோட ஹைக்கூ கவியில் பாருங்கள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
பார்க்கிறேன்...
சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
ம் இதுதானே சிறப்பாக இருக்கிறது... hishalee
சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
ம் இதுதானே சிறப்பாக இருக்கிறது... hishalee
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
கவியருவி ம. ரமேஷ் wrote:பார்க்கிறேன்...
சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
ம் இதுதானே சிறப்பாக இருக்கிறது... hishalee
மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
ஹைக்கூ எழுதலாம் வாங்க –7
கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறது
தாயின் தாலாட்டு
(கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறது
-எது கட்டாயப்படுத்தி உறங்க வைக்கிறது? தாய். தாய் எப்படி அதுவாக இருக்க முடியும்?
கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறாள்
-என்றுதானே வந்திருக்க வேண்டும்?
ஆமாம். ஆமாம் என்றால் ஏன் வரவில்லை?
கட்டாயப்படுத்தி உறங்க வைப்பவள் தாயாக இருக்க முடியுமா? முடியாது.
சரி தாய் ஏன் கட்டாயப்படுத்தி உறங்க வைக்கிறாள் என்று யோசிப்போமா?
வேலையின் நிமித்தமாக, அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தால், கலவியின் நிமித்தமாக…
சரி இந்த ஹைக்கூவில் மூன்றாம் அடியில் தாலாட்டு என்று மட்டும் போடலாம் என்று இருந்தேன்… அப்படித்தான் எழுதினேன்… திரும்ப, தாலாட்டு யார் வேண்டுமானாலும் பாடலாம்… தாய் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றுதான் தாயின் தாலாட்டு என்று மாற்றிக் கொண்டேன்.)
கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறது
தாயின் தாலாட்டு
(ம. ரமேஷ் ஹைக்கூ -626)
உறங்க வைக்கிறது
தாயின் தாலாட்டு
(கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறது
-எது கட்டாயப்படுத்தி உறங்க வைக்கிறது? தாய். தாய் எப்படி அதுவாக இருக்க முடியும்?
கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறாள்
-என்றுதானே வந்திருக்க வேண்டும்?
ஆமாம். ஆமாம் என்றால் ஏன் வரவில்லை?
கட்டாயப்படுத்தி உறங்க வைப்பவள் தாயாக இருக்க முடியுமா? முடியாது.
சரி தாய் ஏன் கட்டாயப்படுத்தி உறங்க வைக்கிறாள் என்று யோசிப்போமா?
வேலையின் நிமித்தமாக, அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தால், கலவியின் நிமித்தமாக…
சரி இந்த ஹைக்கூவில் மூன்றாம் அடியில் தாலாட்டு என்று மட்டும் போடலாம் என்று இருந்தேன்… அப்படித்தான் எழுதினேன்… திரும்ப, தாலாட்டு யார் வேண்டுமானாலும் பாடலாம்… தாய் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றுதான் தாயின் தாலாட்டு என்று மாற்றிக் கொண்டேன்.)
கட்டாயப்படுத்தி
உறங்க வைக்கிறது
தாயின் தாலாட்டு
(ம. ரமேஷ் ஹைக்கூ -626)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
சூப்பர் இதற்க்கும் நான் ஒரு ஹைக்கூ தரலாமா ..?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
ஹிஷாலீ wrote:சூப்பர் இதற்க்கும் நான் ஒரு ஹைக்கூ தரலாமா ..?
தமிழில் ற், ல் ஆகிய இரண்டுக்கும் அடுத்து எப்போதும் எங்கேயும் கட்டாயம் ஒற்று மிகக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி...
கண்டிப்பாக எழுதலாம்... இதில் என்ன கேள்வி... நன்றாக எழுதுங்கள் காத்திருக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:சூப்பர் இதற்க்கும் நான் ஒரு ஹைக்கூ தரலாமா ..?
தமிழில் ற், ல் ஆகிய இரண்டுக்கும் அடுத்து எப்போதும் எங்கேயும் கட்டாயம் ஒற்று மிகக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி...
கண்டிப்பாக எழுதலாம்... இதில் என்ன கேள்வி... நன்றாக எழுதுங்கள் காத்திருக்கிறேன்...
தமிழ் டைப் செய்யும் போது தவறு வந்து விடுகிறது இனிமேல் வராமல் பார்த்துக்கொள்கிறேன்
இரண்டு எழுதியுள்ளேன் பாருங்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 2
ம்... மகிழ்ச்சி... நன்றாக இருக்கிறது பாராட்டுகள்...
120. இருள் மேடையில்
அழகிய நடனம்
வெள்ளி விழா கோலம்
121. பணத்திற்காக (கட்டாயப்படுத்தி)
உறங்க வைக்கிறது
குழந்தைகள் காப்பகம்
ஹைக்கூவுக்கு பதில் ஹைக்கூ சிறப்பாக இருக்கிறது...
120. இருள் மேடையில்
அழகிய நடனம்
வெள்ளி விழா கோலம்
- ல் சிறு மாற்றம் தேவை,
120. இருள் மேடை
அழகிய நடனம்
வெள்ளி விழா
என்று இருந்தாலே போதும்... நன்று...
120. இருள் மேடையில்
அழகிய நடனம்
வெள்ளி விழா கோலம்
121. பணத்திற்காக (கட்டாயப்படுத்தி)
உறங்க வைக்கிறது
குழந்தைகள் காப்பகம்
ஹைக்கூவுக்கு பதில் ஹைக்கூ சிறப்பாக இருக்கிறது...
120. இருள் மேடையில்
அழகிய நடனம்
வெள்ளி விழா கோலம்
- ல் சிறு மாற்றம் தேவை,
120. இருள் மேடை
அழகிய நடனம்
வெள்ளி விழா
என்று இருந்தாலே போதும்... நன்று...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹைக்கூ எழுதலாம் வாங்க
» ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14
» ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23
» ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
» ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19
» ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14
» ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23
» ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
» ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|