தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
பணம் - அத்தியாயம் - 21 - மணியம் கொலை வழக்கு...
3 posters
Page 1 of 1
பணம் - அத்தியாயம் - 21 - மணியம் கொலை வழக்கு...
ஜுலைகா பேகம்
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.- தமிழக பொன்மொழி..
Dieting is murder on the road. Show me a man who travels and I'll show you one who eats. -Bruce Froemming
சிங்கப்பூரில் 1999 ஏப்ரல் 21 ஆம் தேதியன்று சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் மணியம் கொலை செய்யப்பட்டார். தன் பங்களாவில் கல்லை தலையில் போட்டு பணத்திற்காக கொலை செய்யப்பட்டதுபோல் சித்தரிக்கப்பட்ட அந்தக் கொலையை அங்குள்ள போலிஸ் பற்றிய விசாரணையை துவங்கியதும் படிப்படியாக மொத்த சிங்கப்பூரையும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது அந்த வழக்கு. அதுவும் ஒரு சி.ஐ.டி அதிகாரியை துணிச்சலாக கொன்றிருக்கிறார்கள் என்றதால் வழக்கை துரிதப்படுத்தியது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைதும் செய்தது. ஆனால் அதில் ஒருவர் மட்டும் தப்பி விட்டார். சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் முன்பாகவே ஒரு கும்பல் உதவி ஆய்வாளரை நடு சாலையில் வைத்து வெட்டினார்கள், அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை அவர் சம்பந்தப்பட்ட காவல்துறையும் அமைச்சர் பெருமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.உடனே மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்தால் காப்பற்றபட்டிருப்பார். இத்தனைக்கும் தவறுதலாக வெட்டிவிட்டோம் என கைதானவர்கள் ஒரு மரத்தை வெட்டியது போல வாக்குமூலம் கொடுத்தனர். இன்னும் வழக்கு நடைபெறுகிறது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் இத்தனைபேர் முன்னிலையில் நடைபெற்ற கொலையில் அதன் வழக்கை இந்நேரம் முடித்திருக்க வேண்டாமா? காரணம் இது இந்தியா.
56 வயதான மணியத்துக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். இவரை தன் கணவன் மீது போடப்பட்டிருந்த வழக்கிற்காக பார்க்க வந்தவர்தான். 52 வயதான ( குற்றம் நடந்தபோது இருந்த வயது ) ஜுலைகா பேகம், இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் தன் 52 வது வயதிலும் கூட வசீகரமான அழகை கொண்டிருந்தார். வழக்குக்காக நடந்த சந்திப்பு, இருவருக்குள்ளும் காதலை ஏற்ப்படுத்த தன் கணவரை ஜுலைகா பேகம் விவாகரத்து செய்தபின் தானும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இருவரும் சேர்ந்து அல்லது திருமணம் செய்துகொண்டு ( இந்த வழக்கின் முழு விபரம் நண்பரிடம் கேட்டிருந்தேன், அவர் இன்னும் அனுப்பவில்லை என்பதால் நினைவு அடுக்குகளில் இருக்கும் தகவல்களைக்கொண்டு எழுதுகிறேன்) வாழ்ந்து வந்தனர். ஜுலைகா பேகத்தின் மகளும் இவர்களோடு வாழ்ந்து வந்தார். மிகவும் நன்றாக போய்கொண்டிருந்த வாழ்வில் இந்தியாவில் இருந்து கட்டிட வேலைக்குப்போன லோகநாதன் வெங்கடேசன் என்பவரால் சிக்கல் நுழைந்தது.
ஜுலைகா பேகமும், மணியமும் வசிக்கும் பங்களாவுக்கு அடுத்த பங்களாவை ஒருவர் வாங்கி அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த கட்டுமான நிறுவனத்தில்தான் லோகநாதன் வெங்கடேசன் வேலைபார்த்து வந்தார். பக்கத்து வீட்டை இடித்து அதனை மீண்டும் கட்டித்தரும் வரைக்கும் அங்கு வேலை பார்ப்பதற்காக சில இந்திய ஆடவர்களுடன் லோகநாதனும் அங்கு சென்று தற்காலிகமாக ஏற்படுத்தபட்டிருந்த டெண்டில் தங்கினார். முதலில் மணியம் அவர்களை தமிழர் என்கிற முறையில் பார்த்து பேச ஆரம்பிக்க பின் மெல்ல வீட்டுக்குள் வந்து பழகும் அளவுக்கு லோகநாதனுக்கு பழக்கம் ஏற்ப்பட அது ஒரு கட்டத்தில் ஜுலைஹா பேகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்த கணவர் வீட்டில் இல்லாதபோது இருவரும் உல்லாசமாக இருக்க ஆரம்பித்து இருக்கின்றனர். ஒருநாள் மணியத்திடம் இருவரும் மாட்டிக்கொள்ள இருவரையும் மிரட்டி பின் லோகநாதனை தனியே அழைத்து இனி நீ பக்கத்து கட்டிட வேலை பார்க்க கூடாது, என மிரட்டி அனுப்பிவிட்டார்.
ஆனால் இருவரின் காதலும் வெளியிடங்களில் தொடர ஆரம்பித்து, அது மணியத்துக்கும், ஜுலைகா பேகத்துக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அவரின் சொத்துக்காகவும், தன் சுகத்துக்காகவும் மணியத்தை தீர்த்து கட்டிவிடலாம் என திட்டம் போட்டு லோகநாதன் தன் கூட்டாளிகளை இந்த கொலைக்கு துணையாக இருப்பதற்கு ஜுலைகாவிடம், மணியத்தை கொலை செய்ய S$50,000 பேசி அதற்கு முன்பணமாக S$15,000 டாலர்கள் பணம்பெற்றுக்கொடுத்து மணியம் தனியாக வீட்டில் இருக்கும் சமயத்தில் அவரைக் கொலை செய்துவிட்டனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியே ஜூலைகா பேகத்தின் முன்னால் கணவருக்கு பிறந்த மகள்தான். இந்த வழக்கில் ஜுலைகா பேகம் அவரின் காதலன் லோகநாதன் வெங்கடேசன், கொலைக்கு உதவியாக இருந்த சந்திரன் ராஜகோபால் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் லோகநாதனும், சந்திரனும் தமிழகத்தில் இருந்து அங்கு கட்டுமான வேலைக்கு சென்றவர்கள். இருவருக்கும் அப்போது 25 வயது. பிப்ரவரி 15, 2001 ஆம் ஆண்டு இம்மூவரும் தூக்கில் இடப்பட்டனர். இந்த வழக்கில் அப்ரூவராக இருந்த ரவி என்பவர் சிங்கப்பூரில் இருந்து தப்பிவிட்டார். இன்றுவரை இவர் சிக்கவில்லை.
இதன் தொடர்பான இரு சுட்டிகள்..
[You must be registered and logged in to see this link.]
தன் குடும்பத்துக்காகவும், தனக்காகவும் சம்பாதிக்க சென்ற இருவரும் பெண் சுகத்துக்காகவும், பணத்துக்காகவும் கொலை செய்து அதற்குத் தண்டனையாக தூக்கிலிடப்பட்டு தங்கள் குடும்பத்தினர் தங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கைகளுக்கும் சேர்த்து சமாதி காட்டினர். வெளிநாட்டு வேலைக்கு நாம் எதற்காக போகிறோம், அங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன, எனத் தெரியாமல்தான் அத்தனைபேருமே வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். முதல்வருடம் கழியும்வரைக்கும் ஒழுங்காக சம்பாதித்து மிச்சபடுத்தி வீட்டுக்கு பணம் அனுப்பும் பெரும்பாலோர் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து ஊருக்கு வராமல் அங்கேயே இருக்க நேர்கையில் மெல்ல தங்கள் கடமைகளை மறந்து அந்த நாட்டு மக்களைபோலவே வாழ ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு தேசத்தின் வாழ்வியல் முறைகளும் வேறு வேறாகவே இருக்கும். நாம் நமக்கான வேரில் இருந்துதான் கிளைகளை பரப்பிகொள்ள முடியும்.
அண்ணன் ஜோதிஜி வெளிநாட்டுக்கு செல்வது பற்றிய ஒரு எளிமையாக தொடரை எழுத சொல்லி பணித்திருக்கிறார்.. தகவல்களை சேமித்துக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் ஒரு தனி தொடராக அதனை எழுதுகிறேன்..
சம்பவங்கள் தொடரும்...
krpsenthil- புதிய மொட்டு
- Posts : 2
Points : 6
Join date : 20/11/2010
Re: பணம் - அத்தியாயம் - 21 - மணியம் கொலை வழக்கு...
அடுத்தது என்ன நடக்கும் என்று எதிர் பார்த்து காத்திருகிறோம்.
உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்..
உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பணம் - அத்தியாயம் - 21 - மணியம் கொலை வழக்கு...
இது உண்மை சம்பவமா
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 36
Location : madurai
Similar topics
» வங்கி காவலாளி கொலை வழக்கு: துப்பு துலங்காததால் ஜோதிடரிடம் குறிகேட்ட போலீசார்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» பணம் வேனுமா பணம்
» வாழ்வின் அத்தியாயம்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» பணம் வேனுமா பணம்
» வாழ்வின் அத்தியாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|