தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

3 posters

Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:12 pm

பழமை புதுமை


பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் கருவிகள். (எழுத்தாளர் மாநாடு 26.11.1944) 

எழுத்தாளர்கள் 


எழுதுவது குழந்தை பிறப்பது போல்! கருவுறுவது போன்றது எண்ணம்! கருவுக்கு ஆண் - பெண் இருத்தல் போல எண்ணமும் பிறக்க காலமும் நோக்கமும் கூடவேண்டும். பிறகே எழுத்து! எழுத்தாளர் என்றால் இந்த இலட்சிய புருசனாக இருக்க வேண்டும்! (எழுத்தாளர் மாநாடு, திராவிட நாடு - 26,11,1944)

நன்றி ;மௌனம் பேசும் மொழிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:12 pm

சட்டம்


சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை! (வேலைக்காரி - நாடகம் - 1945)

பெண்


நிலவுக்கென்று தனி ஒளி இல்லை அதுபோலவே பெண்களுக்கென்று தனி வாழ்வில்லை அண்ணன், தம்பி, அப்பா, கணவன், மகன், பேரன் என்று இப்படித்தான் இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டியிருக்கிறது!

(ரங்கோன் ராதா - புதினம் - 1945)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:13 pm

ஆணிடம் சிக்கியப் பெண்


பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயில் சிக்கிவிடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியில் இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையில் தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதற்கு தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்க முடியும்? எப்படியாவது வாயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக துடிக்கும், நெளியும். தலையை தூக்கும் பல்லியன் வாயிலிருந்து வெளிப்படுவதற்காக தன்பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். உவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலிமையை நாசமாக்கவும், உயிரை போக்கவும் பயன்படுமே ஒழிய விடுதலைக்கு வழியாக முடியாது, பல்லிக்குபூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவு அற்று இருக்க வேண்டியதுதான். பூச்சி போராடுவதாக கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு தானகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையில் நான் இருந்தேன். (சங்கோன் ராதாவில் - 1945)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:13 pm

பெண்


வெங்காயம் காய்கறிகளுடன் சேர்க்க சுவையான்ன பயன் தரும் உணவாகிறது. வெங்காயத்தை நறுக்கும் போதோ நம் கண்களிலிருந்து நீரைக் கொண்டு வருகிறது. எரிக்கிறது. பெண்ணும் அப்படித்தான்! அன்புடன் நடத்தினால் இனியவளாகிறாள். சிறிது சின உணர்வை தூண்டிவிட்டாலோ எழுப்பிவிட்டாலோ ஆணை எரித்தே அழிக்கிறாள். ஆண் அழுதுதான் தீர வேண்டும். ( ரங்கோன் ராதா - 1945)

» பணக்காரன் குளம் குட்டைக்குச் சமமானவன். முதலாளி ஊற்றுக்கு சமமானவன். மழை பெய்தால்தான் குளம் குட்டைகளில் நீர் இருக்கும். இன்றேல் வறண்டு விடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்துகொண்டே இருக்கும் இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும், முதலாளிக்கும்.


(பணத்தோட்டம் - 1946)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:13 pm

புத்தறிவு 


ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிவிஷினில் ரமணர் நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும் காமிரா கொண்டு கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு நித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தனால், கல் உடைக்கும் கருவியைக் கொண்டு கனியைத் தாக்கினால், புலி வேட்டைக்குறிய துப்பாகியைக் கொண்டு எலியைக் கொல்லக் கிளம்பினால் என்ன எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது? என்ன கூறுவது?

(ரயிலேறி - திராவிட நாடு - 21.12.1947)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:14 pm

பண்பாளன்


எருமைகன் சேற்றில் புரளும் அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித்தின்கிறது. கிளி கொவ்வை கனியைதான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். (17.07.66)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:14 pm

ஓட்டுரிமை


உலைக் கூடத்தான் அமைத்து தருவது வாள் ஆயின் அந்த வாள் அவன் தலை கொய்திடும் வலிவு பெறுகிறதல்லவா. மனிதன் குளம் வெட்டுகிறான். இடறி விழுந்தால் உயிரையே குடிக்கிறதல்லவா! தேன் பருகுகின்றோம் சில துளி உடலில் இருப்பின் எறும்பு மொய்த்து கடிக்கிறதல்லவா? அது போலவே தனிமனிதனின் ஓட்டுரிமையால் அமைக்கப்படும் அரசும், பயனுணர்ந்து செயலாற்றும் திறமையற்றவர்களிடம் சிக்கிவிட்டால், உயிர்காக்கவேண்டிய அரசு உயிர் கொல்லும் அரசாக நாட்டையே நடுங்கச் செய்கிறது.

(அகமும் புறமும் - 14.01.1966)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:14 pm

பெரிய மனிதர் - சிறிய குணம்


குற்றாலம் சென்று குழாயடியில் குளிப்பதுபோல், திருக்குளத்தில் இறங்கி பாசியை எடுத்து வருவதுபோல், சந்தனத்தை கரைத்து மாட்டுத் தொழுவத்தில் தெளிப்பதுபோல், கரும்பை கொண்டு வந்து அடுப்பெரிப்பது போல், இசைப்புலமை பெற்ற பிறகு கோட்டான் போல் கூவிட முனைவதுபோல், யானை மீது அம்பாரி அமைத்து அமர்ந்து பூனை பிடிக்க செல்வதுபோல், உடைவாளை வீசி உருளை கிழங்கை வெட்டுவதுபோல், பூந்தோட்டம் சென்று ஊமத்தும் பூ கேட்டதுபோல், கழநியை உழுதுவிட்டு கள்ளிச் செடியை நடுவதுபோல், சாமியார் ஆகிவிட்டு மாமியார் வீட்டுக்குச் சாப்பிடச் செல்வதுபோல், இளநீர் பருகிட மறுத்து கழுநீர் குடிக்க துடிப்பதுபோல், தங்கத் தாம்பாளத்தில் தவிடு கொட்டி வைப்பதுபோல் பெரும் பதவியில் அமர்ந்திருக்கும் பெருந்தலைவர் இழிமொழி பேசுவது.

(மரண அடி கொடுப்பாராம் - காஞ்சி - 25.09.1966)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:15 pm

அரசியல்


ரசம் கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான் முகம் சரியாகத் தெரியும். ஜனநாயகப் பண்பு கெடாத நிலை, ஆளுங்கட்சிக்கு இருந்தால் தான் எதிர்க் கட்சியின் தரம் தெரியும்.

(விழாவும் விளக்கமும - 28.04.1957)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:15 pm

ஊழல் 


பாலை பூனை குடித்துவிட்டது என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூட புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே குழந்தையை முதுகில் அறைந்து விட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலை குடித்த பூனை மியாவ் மியாவ் என்று கத்துவதை காட்டி, பாப்பா அழாதே! அதோ, கேள் பூனை பாடுகிறது! அதை கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல தூங்கம்மா, தூங்கு என்று தாய் பேசினால் எப்படி இருக்கும்! அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு.

(கைராட்டை காவேரி - திராவிடநாடு - 02.04.1961)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:16 pm

பேதை 


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார்! கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாதியார் கூறி காட்டவேண்டியதாயிற்று! அதற்குப் பிறகும் ஜாதிப்பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து பேதையொருவன் அதன் மீதே பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருக்கிறான், என்றால் அப்படி ஒரு கதை சொன்னால் வியப்படைகிறோம். அறிவுப் பேழை இங்கு - ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு! எனினும் பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டு பிடிவாதம், முரட்டுவாதம், சே! தம்பி இதனை எண்ணும்போது உள்ளபடியே வெட்கம் விலாவினை குத்திடுகிறது.

(காஞ்சி - 14.01.1965)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:16 pm

பணம் ஒரு சிலரிடம் போய் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷலிசம் பேசுவது கன்றுக் குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின் மீது, அதன் தோலைப் போர்த்தி வைத்து, அதைக் காட்டி பசுவை ஏய்த்து, பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.

(தம்பி - அனுபவி ராசா - 21.08.1966)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:16 pm

அலை எப்போதும் ஓய்வதில்லை. கடல் அலைகள் என்றும் இருந்துகொண்டே இருப்பதுபோல தி.மு.கழகத்தின் உணர்ச்சியும் நாட்டிலே ஓயாது பரவிக்கொண்டே இருக்கும். 




தி.மு.கழகத்தில் ஓட்டை விழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது நாயனத்தில் விழுந்துள்ள ஓட்டை. எந்த ஓட்டையை அடைத்துக்கொண்டு எந்த ஓட்டையை திறந்துவிட்டால் சங்கீதம் வருமென்று எனக்குத் தெரியும்.



சேலம் ஒகேனக்கல் அருகே, ஆடு தாண்டும் அளவுள்ள காவேரி, பிறகு அகண்ட காவேரியாகிறதே, வேறு ஜில்லாவில் அது போல் இடபேதம் இயல்பு பேதத்துக்குள்ள பல காரணங்களில் ஒன்று ஒரு இடத்தில் கோபத்தை காட்ட முடிவதில்லை. ஆனால் கோபமே ஏற்படவில்லை என்று பொருளில்லை. அது பிறகு கொதித்துக் கிளம்புகிறது வேறோரிடத்தில்.

(சாது - 1947 - சிறுகதை)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:17 pm

பூசை அறைக்குள்ளே இருப்பதாலேயே புலி சாதுவாகவா மாறிவிடும்? கதராடை அணிந்து கொண்டதாலேயே காதகர்கள் இரட்சகர்களாகவா மாறிவிடுகிறார்கள்? தங்கப் பூண் போட்டத் தடியால் தலையில் அடித்தால் வலி எடுக்காமல் மகிழ்ச்சியா பிறக்கும்? வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் வந்தேமாதரம் பாடிவிட்டால் கொடுமைகளை மறந்துவிடவா முடியும்? (குன்றின் மேலிட்ட விளக்கு - 06.08.1961) 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:17 pm

வைரத்திலுள்ள ஒளியிலே, சிலப்பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச் செல்லமுடிகிறதா - பட்டை தீட்டி ஒளியேற்றியவன் வைரத்தை விட்டுவிட்டுச் செல்வானாகில் நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அது போலத்தான் கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்படும் எழுச்சியிலிருந்து எந்த ஒரு அளவையும், எவரும் தனியாக்கி எடுத்துச் செல்ல முடியாது. 


(இந்தியர் ஆகின்றனர் - 28.05.1961)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:18 pm

எஃகு தயாரிக்க வேண்டிய முயற்சி மிகப் பெரியது. இரும்பைக் காய்ச்சி ஊட்டமும் அழுத்தமும் ஏற்றி எஃகு தயாரிக்கப்படுகிறது. பின்னர் அந்த எஃகு எதையும் தாங்கும் ஆற்றலும் வலிமையும் பெறுகிறதா. வளைவதில்லை; முறிவதில்லை. அது போலவே தம்பிகள் எதையும் தாங்கும் இதயமுடைய எஃகு கம்பிகளாக உருவாகவேண்டும்; விளங்கவேண்டும். 


(எண்ணப் பிணைப்பு இதயக் கூட்டு! வண்ணக்கலவை! - 19.03.1961)


Source: http://www.arignaranna.info/
நன்றி மௌனம் பேசும் மொழிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by Muthumohamed Sun Sep 08, 2013 1:22 am

பொன்மொழிகளின் பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 5:36 pm

நன்றி முத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 10, 2013 2:21 pm

தொகுப்புக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum