தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

3 posters

Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by karumalaithamizhazhan Tue Oct 21, 2014 1:15 pm

பாவலர் கருமலைத்தமிழாழன் பற்றிய விவரம்
01.      இயற்பெயர்      :            கி.நரேந்திரன்
02.      புனைபெயர்      :            கருமலைத்தமிழாழன்
03.      சொந்த ஊர்      :            கிருட்டிணகிரி (கருமலை)
04.      பெற்றோர்        :            மு.கிருட்டிணன் - இராசம்மாள்
05.      பிறந்தநாள்       :            16.07.1951
06.      கல்வித்தகுதி     :            புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்.,
07.      முகவரி             :            2/16/6, ஆர்.கே.இல்லம்,
                                                முதல்தெரு, புதிய வசந்தநகர்,
                                                ஒசூர் - 635 109, கிருட்டிணகிரி மாவட்டம்.

08.      பணி                 :            25 ஆண்டுகள் தமிழாசிரியர்,
                                                10 ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளித்
                                                தலைமையாசிரியர்

09.      தொலைப்பேசி  :            04344 - 245350, 09443458550
10.      முதற்கவிதை வெளிவந்த ஏடு :
                                                பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களால்
                                                நிறுவப்பட்ட குயில் ஏடு 1969

11.      கவிதைகள் வெளிவந்த ஏடுகள்:
                                   01.         குயில்                    02. காஞ்சி
                             03. கண்ணதாசன்            04. தமிழ்ப்பணி
                             05. முல்லைச்சரம்            06. புன்னகை
                             07. காவியப்பாவை         08. தெசிணியின் கவிதை
                             09. தமிழரசு                     10. அமுதசுரபி
                             11. தென்மொழி              12. தெளிதமிழ்
                             13. நற்றமிழ்                     14. வெல்லும் தூயதமிழ்
                             15. ஓம்சக்தி                     16. செந்தமிழ்ச் செல்வி
                             17. கணையாழி                18. இனிய உதயம்
                             19. கவிக்குயில்                20. காக்கைச்சிறகினிலே
                             21. எழுகதிர்                    22. இலக்கியச்சோலை
                             23. ராணி                        24. தேமதுரத் தமிழோசை
                             25. தினத்தந்தி                 26. தமிழ் இலெமுரியா
                             27. தினகரன்                   28. தினமணி
                             29. தினமலர்                   30. மாலைமுரசு
                             31. மாலைமலர்                32. முரசொலி
                             -போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன.
12.     வெளிவந்த கவிதை நூல்கள்:
                                   01.         நெஞ்சின் நிழல்கள் (1976)
                                   02.         மலர்விழி (காவியம் (1978)
                                   03.         காவியத்தலைவன் (1978)
                                   04.         காற்றை மணந்த கவிதைகள் (1995)
                                   05.         நீர்க்கால்கள் (1998)
                                   06.         ஒப்பனைப்பூக்கள் (1998)
                                   07.         மண்ணும் மரபும் (1999)
                                   08.         தமிழவேள் தமிழ்ப்பாவை (1999)
                                   09.         வீணை மத்தளமாகிறது (2000)
                                   10.         மரபின் வேர்கள் (2002)
                                   11.         புதிய குறுந்தொகை (2003)
                                   12.         வேரின் விழுதுகள் (2004)
                                   13.         களம் வெல்லும் கலைஞர் (2005)
                                   14.         சுவடுகள் (2008)
                                   15.         உன்முகமாய் இரு (2010)
                                   16.         அருள்மிகு மரகதாம்பிகை
                                      சந்திரசூடேசுவரர் பாமாலை (1997)

                                             17.       கல்லெழுத்து (2004 )
13.     உரைநடை மற்றும் ஆய்வு நூல்கள் :
                                   18.       புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு (1998)
                                   19.         பண்பில் வாடை (2001)
                                   20.         திருக்குறள் (உரை) (2000)
                                   21.         ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர
                                                சூடேசுவரர் திருக்கோயில் தலவரலாறு (2001)

14.     சிறப்பு :         01.         தமிழ்நாடு பாடநூல்களில் செய்யுட்
                                                பகுதியில் கவிதை பாடமாக சேர்க்கப்பட்டது.

                                   02.         (அ) வீணை மத்தளமாகிறது
                                   (ஆ) வேரின் விழுதுகள்
                                      - ஆகிய நூல்கள் எம்ஃபில் பட்டத்திற்காக ஆய்வு
                                      மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுபட்டம்
                                      வழங்கப்பட்டுள்ளது.

15.     பெற்ற விருதுகள்        :
01.     சென்னை பாவேந்தர் பாசறையால் 2002ஆம்  ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது அளிக்கப்பட்டது.
02.     ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும் 'துளி' இதழும் இணைந்து 2003ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து ஒட்டக்கூத்தர் விருது அளித்தன.
03.     சென்னை கவிதை உறவு அமைப்பு 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து கவிதைச்செல்வர் விருது அளித்தது.
04.     தமிழறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூற்றாண்டு விழா குழுவினரால் 2010இல் இலக்குவனார் விருது அளிக்கப்பட்டது.
05.     உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும், தஞ்சை தாய் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய எழுத்தாளர் மாநாட்டில் 2011இல் குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.
06.     நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாரால் 2010ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டது.
07.     உரத்தசிந்தனை திங்களிதழ் சிறந்த வெண்பாக்கள் எழுதியமைக்காக 2012ஆம் ஆண்டு வெண்பாவேந்தர் விருது அளித்தது.
08.     டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை சார்பில் 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைக் கருவூலம் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
09.     தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் 2012ஆம் ஆண்டில் பாவேந்தர் நெறி செம்மல் விருது வழங்கியது.
10.     தங்கவயல் டாக்டர் பேரா.வ.பெருமாள் அறக்கட்டளையால் 2005இல் தமிழ் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது.
11.     கரூர் திரு.வி.க.மன்றம் சார்பில் 1992இல் இலக்கியச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
12.     சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளையின் இலக்கியக்குழு 2003இல் மரபுப்பா பாவலர் விருது அளித்து சிறப்பித்தது.
13.     அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் சிறந்த இலக்கியப்பணிக்காக 2005ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்தது.
14.     சேலம் “சங்கொலி” இதழ் ஆசிரியர் சோலை இருசனாரின் மணிவிழா குழுவினரால் “தேன்மழைக்கவிஞர்” விருது வழங்கப்பட்டது.
15.     2008-2009ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருட்டிணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
16.     நூல்கள் பெற்ற பரிசுகள் :
01.     பாரதஸ்டேட் வங்கி 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வீணை மத்தளமாகிறது நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
02.     பாரத ஸ்டேட் வங்கி 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக மரபின் வேர்கள் நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
03.     சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.
04.     அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது.
17.    கவிதைப்போட்டிகளில் பெற்ற பரிசுகள்   :
01.     மதுரை காந்தி நிறுவனம் கஸ்தூரிபாய் காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி “வருமோ புதிய உலகு” என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
02.     பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப்பேரவை “புதிய சமுதாயம் படைப்போம்” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
03.     ஈரோடு தமிழ்ப் பேரவையும், துளி இதழும் இணைந்து நடத்திய “தமிழ் ஒளி ஓங்கும்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
04.     தினகரன் நாளிதழ் நடத்திய தொழில்மலர் கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
05.     தமிழ் படைப்பாளர்கள் சங்கம் 2013இல் “பொசுங்கட்டும் பொய்மை” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
06.     கவிஞர் செந்தமிழ்ச் செழியன் அறக்கட்டளை “மயக்கத்தில் தமிழன்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
07.     பெங்களுர்த் தமிழ்ச்சங்கம் 2012 பொங்கல் விழாவை ஒட்டி “அயலகத்தமிழர்” என்ற தலைப்பில் இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
08.     கண்ணியம் இதழ் அதன் ஆசிரியர் முனைவர் குலோத்துங்கன் அவர்களின் 70ஆம் பிறந்த நாளை ஒட்டி “தடை தகர்த்து வாழும் தமிழ்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
09.     கவிக்குயில் இதழ் “ஊழலற்ற புதிய சமுதாயம் காண” எனும் தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
10.     புதுக்கோட்டை வெண்மணிப் பதிப்பகம் “குழந்தைத் தொழிலாளர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.
11.     தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கமும், பரிவு இதழும் இணைந்து 2013இல் “வெகுண்டெழுவோம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
12.     இலண்டன் தமிழ்ச்சங்கம் உலக அளவில் “புதுயுகத்தமிழர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.
13.     வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சார்பில் இலக்கியப்பீடம் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
14.     கவிக்கொண்டல், உரத்த சிந்தனை, குயில், மின்னல் தமிழ்ப்பணி, தெளிதமிழ், நற்றமிழ், சோலைக்குயில், இதழ்கள் நடத்திய வெண்பா, விருத்தப்பா போட்டிகளில் பலமுறை முதல்பரிசுகள்.
8.     தமிழ் வளர்ச்சிப் பணிகள் :
01.     மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் உலகத் தமிழ்க்கழகம் தொடங்கிய போது தருமபுரி மாவட்ட அமைப்பாளராகத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தார்.
02.     தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம் பெறச்செய்யத் தனியாளாக நின்று போராடியபோது 1972இல் பணியாற்றிய தமிழாசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
03.     தென்மொழி, காஞ்சி, குயில் போன்ற இலக்கிய இதழ்களைத் தருமபுரி நகரச் சுற்று புறங்களில் முகவராக இருந்து அறிமுகம் செய்தார்.
04.     கன்னடம், தெலுங்கு மொழிகள் அதிகமாகப் பேசப்படும் ஒசூர் பகுதியில் 1985 முதல் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களுக்கு தமிழுணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
19.    இலக்கிய நிகழ்ச்சிகள் :
01.     பெங்களுர், பம்பாய், ஐதராபாத், தில்லி, திருவனந்தபுரம், அந்தமான் தமிழ் சங்கங்களில் இலக்கிய சொற்பொழிவு, கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
02.     மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் அமைப்புகளின் அழைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
03.     தமிழகம் மற்றும் அயலகங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
04.     பொதிகை, சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
****
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 72
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty Re: பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 24, 2014 9:58 pm

[You must be registered and logged in to see this image.]

வாங்கோ வாங்கோ வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..

உங்கள் படைப்புகளையும் தருக

உங்கள் வருகையால் நமது தோட்டத்தில் மகிழ்வே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty Re: பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 15, 2014 12:14 pm

பன்திறத்தாரை வரவேற்பதில் மகிழ்கின்றோம்... வருக... வருக...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty Re: பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum