தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கதை படைப்புகள்

2 posters

Go down

கதை படைப்புகள் Empty கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:57 am

கடலோடி கழுகு
---------------------------
சூர்யா
--------------
கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி.

அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கியதில்லை. தினமும் கடல்க்கு மீன் பிடிக்க செல்வது அவன் பழக்கம் . மீன்களுக்கு அவன் வலைகளுக்கு மாட்டால் தப்பிச்செல்வது பழக்கம்.வருமானம் பெரிதாக இல்லை ஆனால் அவன் தன் தொழிலை விட்டதில்லை.

கோடைக்கால மீன்பிடிதடைகால அறிவிப்பு.அதற்கு முன் நடந்த கதை அதிகம் .இந்தியாவின் கால்களில் தொங்கிகொண்டிருப்பது போன்று உலக வரைபடத்தில் இருக்கும் தேசம் இலங்கை.அங்கு தமிழர்களுக்கு எதிரான இனவெறியும், இந்திய பெருங்கடலே என் அப்பன்வீட்டு சொத்து என எண்ணும் சிங்கள இனத்தவர் மிகுதியாய் ஆக்கிரமித்திருந்த தேசம்.அதுபோல தான் மகாஇந்திய சாம்ராஜ்யத்தின் கடல் எல்லையை மதிக்காமல் எல்லைதாண்டி வந்து இந்திய தேசத்தின் பிரஜையை சுட்டுக்கொன்றும்,கைது செய்தும் அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து வரும் தேசம் அது.இது நிலை ராமேஸ்வரத்திலும் இருந்தது.தமிழக அரசியல் நிலையோ ஏதோ ஐ.நா சபை மாதிரி தீர்மானங்களும் காரசார விவாதங்களும்,தத்தம் ஆதாயங்களுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி கொண்டன.

தினசரி ஏதாவது ஒரு செய்தியாவது மீனவர் கைது பற்றி இருந்தே ஆகும்.மீன்பிடி தடைக்காலம் மட்டும் யாரும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் கைது இருக்காது. மற்றபடி மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டதும் சிங்கள கடற்படையினருக்கும் கைது செய்ய போடப்பட்ட தடைக்காலம் நீக்கப்பட்டதாக அர்த்தம்.
மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள 

பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.

மைக்கேலுக்கு ஒரு விரோதி உண்டு அவள் பெயர் ஆச்சரியமாக இருக்கிறதா அவள் பெயர் மகதலினா. ஏனெனில் ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க தெரியாதவன் மைக்கேல். மேலும் அவன் ஒரு அழகன்.சிறுவயதில் இருந்தே மைக்கேல் மீது மகதலினாவுக்கு ஒரு கண்.அதாவது ஒரு அழகிய கிராமத்து காதல்.கண்ணால் பேசிவிடுவாள் அவள் ஆனால் அவன் பேசி கண்ணைமூடிவிடுவான்.கேட்டால் காதல் என்பால் அவள்.அவனோ ஒன்னும் இல்லை தூரப்போ என்பான்.காதலின் ஏமாற்றம் பகையாய் மாறுவதில் சந்தேகம் இல்லை.அது போலத்தான் மகதலினா வாழ்க்கையும்.அவள் வெறுப்பு பகைமையை அவன் அடுத்த இளம் பெண்களிடம் பேசும் போது 

வெளிப்படுத்தினாள்.ஆனால் இறைவன் என்பவன் விசித்திரமான ஒரு விலங்கு என்பதை நிருபிக்க அங்கு காலம் ஒரு கணக்கு போட்டது.மகதலினா ஒரு கடலோர அழகி. அழகிய கண்கள்.அவள் கண்சிமிட்டல் மின்னல்கள் வெட்டுவதைபோலவும்,அவள் உதடுகள் ஒரு தேன்சிந்தும் வளைகுடா போல அழகாக பார்ப்பவரை சுண்டியிழுத்துவிடும் அழகு.இடையோ வளைந்த வில் போல பார்ப்பவர்களின் மீது அம்பை ஏய்து கொண்டே செல்லும். அவள் நடை ஒரு அழகு.அவள் உடை இத்தனை அழகையும் புதையலை மூடுவது போல இருக்கும். இப்படி வர்ணிக்கும்படியான அழகு தேவதை.யாருக்கு தான் காதல் வராது அவள் மீது.ஆனால் மைக்கேலுக்கு இதில் விருப்பம் இல்லை.மகதலினாவுக்கு அவன் மீது விருப்பம் உண்டு.

பிரான்சிஸ் ஒர் இளைஞன் . பொதுவுடமைக்காரன்.உலகம் அறிந்தவன்.அவனுக்கும் காதலில் விருப்பம் உண்டு.ஒரு வேளை பிரான்சிஸ்ன் வைரமுத்து காதல் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தால் காதலில் விருப்பம் வந்திருக்கலாம்.பிரான்சிஸ் மகதலினாவை ஒருதலையாக காதலித்து வந்தான்.ஏனெனில் ஒரு தலைஉள்ள அனைவருக்கும் வருமல்லவா இந்த ஒரு தலைக்காதல்.பொறாமை வளர்ந்தது நண்பர்களான மைக்கேல் மற்றும் பிரான்சிஸ் இடையே.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சும்மாவா சொன்னாங்க.ஒரு நாள் டீக்கடையில் காரசார விவாதம் காதல் திருமணங்களால் வன்முறை ஏற்படுகிறது ஏன் என்பது. இதில் வாக்குவாதம் முற்றி வழக்கு போல மைக்கேல் பெண்களை இழிவுபடுத்தி பேச,அதாவது மகதலினாவை பற்றி தவறாக பேச கைகலப்பானது.இது மகதலினாவுக்கு தெரிய வர அவள் மனவருத்தத்தில் மைக்கேலை மறப்பதாக நடித்தாள்.உயிர்நண்பர்கள் பகைவர்களாக மிலிட்டரிகாரர் அல்போன்ஸ் சமாதானபடுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிவு பெற பகைமை தொடர்ந்தது.

இருவரும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க மைக்கேல் பிரான்சிஸின் கொள்கையை எதிர்ப்பதென முடிவெடுத்தான்.ஏனெனில் பிரான்சிஸ் ஒரு பொதுவுடமை வாதி.அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக மாறினான்.அந்த ஊரில் ஒரு சிறு பனிப்போரே நடத்தினர்.இதில் மகதலினா,அல்போன்ஸ் நடுநிலைமை வகித்தனர்.எப்போதுமே பொதுவுடமைவாதியிடம் வேகம்,மூர்க்ககுணம் அதிகமாக இருக்கும்.அன்று மீன்பிடி தடைகால இறுதி நாள்.மைக்கேல்க்கு அங்கு இருந்த அகதிகள் முகாமில் இருந்த சில அமெரிக்க நண்பர்களின் நட்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவை வேவுபார்க்கவந்த சி.ஐ.ஏ உளவாளிகள்.அவர்கள் தமிழகத்தில் அதாவது இலங்கைக்கு அருகாமை பகுதியில் பொதுவுடமைவாதத்தை வீழ்த்த வந்தவர்கள்.அவர்கள் மைக்கேலின் பொதுவுடமை வெறுப்பை பயன்படுத்தி தங்கள் வேலையை செய்ய முடிவு செய்தனர்.ஆனால் அதே நேரம் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள பொதுவுடமை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்.ஆனால் அவன் தன் மீன்பிடித்தொழிலை விடவில்லை.இரு கொலைமுயற்சி அவனுக்கு எதிராக.ஆனால் அவன் அதில் இருந்து மீண்டிருந்தான்.

அமெரிக்க உளவுத்துறை பிரான்சிஸ்ஐ கொலைசெய்ய முடிவு செய்திருந்தது.அதற்கு மைக்கேலை பகடைக்காயாக பயன்படுத்த திட்டம் தீட்டிருந்தது.மைக்கேலுக்கு சி.ஐ.ஏ உறுப்பினர் அட்டை வழங்கி அவனுக்கு பணம் அளித்தது.மீன் பிடி தடை காலம் முடிவடைந்தது.காலையில் கதிரவன் மீனவர்களை வரவேற்றான் கடலுக்கு வரும்படி.மைக்கேலுக்கு மீன்பிடிக்கும் ஆசையில்லை ஆனால் கடலுக்கு செல்ல ஆயத்தமானான் பிரான்சிஸ்ஸை வீழ்த்தி பொதுவுடமை வேரை அறுக்க. ஆனால் பிரான்சிஸ்ஸோ கண்முழுவதும் மீன்களை பற்றிய கனவு.இருவரும் கடலுக்கு புறப்பட்டனர்.ஆனால் மகதலினாவுக்கு புரிந்து போனது மைக்கேல் மாறிவிட்டான்.காதல் அழிக்க இயலாததது.அவள் மனதில் இருந்தது அவனை நீக்க இயலவில்லை என.இருவரும் கடலுக்கு சென்றனர் நவீன படகேறி. நடுகடலில் சி.ஐ.ஏ. திட்டப்படி பிரான்சிஸ்ஸை கொல்ல முயன்ற வேளையில்,அங்கு தடைகாலம் நீங்கியதால் சிங்கள ராணுவம் எல்லோரையும் கைது செய்யதது.அவர்களை செய்த சோதனையில் மைக்கேல் ஒரு உளவாளி என கண்டறிந்தனர்.இலங்கையில் மெல்ல சீனா தன் ஆதிக்கத்தை நுழைதந்துகொண்டிருந்த நேரம் இந்த உளவு விவகாரம் சீன-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நிழல்பாதிப்பை நுழைத்தது.அன்றில் இருந்து மைக்கேல் உலகம் அறியும் உளவாளியாகவும்,தேச துரோகியாகவும் அறியப்பட்டான்.மைக்கேலை தவிர அனைவரையும் இலங்கையில் இருந்த மீட்டது.மைக்கேல் தன் சிறைவாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவேண்டியாயிற்று.

எங்கோ இருந்து வந்த இளைஞன் உலகம் பேசும் உளவாளிகள் வரிசையில் இடம்பெற்றான்.தன் முன்னாள் காதலனை எண்ணி மகதலினா,கடலோரம் பறக்கும் கழுகுகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.அந்த கடலோரம் எங்கும் பொதுவுடமை கொடி மைக்கேலின் வீழ்சியில் ஆர்பரித்து கடலோர கழுகளை பார்த்து சுடர் விட்டு பறந்து கொண்டிருந்தது மகதலினாவின் கண்ணீருடன்.

நன்றி ;திண்னை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:06 am

விலை போகும் நம்பிக்கை
-----------------
வே.ம.அருச்சுணன்
-------------------------

அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின்இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கிஅவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது.

மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல்அலையாய் மனதில் அலைமோதியது.இன்னும் அரை நாள் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளதுஎன்று கவலை நெற்றிப் பொட்டில் தெரித்துக் கொண்டிருந்த வலி விலைவாசி போலஏறிக்கொண்டிருந்தது. உற்சாகத்தை தொலைத்தவராய்த் தளர்ந்த நடையோடுதோழியுடன் உணவு விடுதிக்குச் செல்கிறார் அருளினி.

“இருபது வயசில இந்த கம்பனியில நீங்க வேலைக்குச் சேர்ந்திங்க அக்கா….”“ஆமா….வள்ளி. இந்தக் கம்பெனியில நாற்பது வருசமா வேலைசெஞ்சிட்டேன்.பள்ளிப் படிப்பு முடிஞ்சக் கையோட குமரியா வேலையில சேர்ந்த
நான்,இன்றைக்கு அறுபது வயசு ஆன கிழவியா இந்தக் கம்பெனியே விட்டுவீட்டுக்குப் போகப்போறேன்” மனதுக்குள் மலையாய்க் கூடு கட்டியிருந்தகவலைகள் எல்லாம் ஒரு நொடியில் பறந்தது போல் வாய்விட்டு சிரிக்கிறார்அருளினி.

அருளினியுடன் மதிய உணவருந்தி கொண்டிருந்த வள்ளி அருளினி நகைச்சுவையுடன்பேசுவதைக் கேட்டு கடகட வென்று சிரிக்கிறாள்.அந்த தொழிற்சாலை உணவகத்தில்பல வருடங்களாக அவர்கள் இருவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணும்வழக்கத்தைக் கொண்டவர்கள்.அவர்கள் இருவருக்குமிடையில் ஐந்து வயது
வித்தியாசம். வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் அருளினியைத் தம் உடன் பிறந்தஅக்காவாக எண்ணிப் பழகி வருபவள் வள்ளி.

“அக்கா….நாளையிலிருந்து அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு நீங்கஅரக்கப்பரக்க எழ வேண்டிய அவசியமில்ல. ஆறவமர அமைதியா எழலாம். உங்களுக்குரொம்ப விருப்பமான நாசிலெமாவை ருசிச்சி…ருசிச்சிச் சாப்பிடலாம்…..!”“அட….நீ போ வள்ளி…..! என்ன இருந்தாலும்…..நாளு பேரோட இப்படி ஒன்னா
உட்கார்ந்து கலகலப்பா பேசிச் சிரிச்சு, விதவிதமான உணவுகள ஒவ்வொரு நாளும்சாப்பிடுறது மகிழ்ச்சி இருக்கே…. அந்த மகிழ்ச்சி வீட்டுலத் தன்னந்தனியாசாப்பிடும் போது கிடைக்குமா?” கவலையுடன் கூறுகிறார் அருளினி.“ம்….நீங்க சொல்றது உண்மைதான்…….!அதற்காக அறுபது வயச தாண்டியும்இதே கம்பெனியிலே நீங்க வேலை செய்யலாமுனு சொல்ல வர்ரிங்களா….?” எதையும்மறைத்துப் பேசும் வழக்கம் இல்லாத வள்ளி தம் மனதில் பட்டதைப் பட்டனக்கூறுகிறாள்.

“இது நாள் வரையிலும் மாடா உழைச்சுத் துரும்பா போனது போதுமுனுநினைக்கிறேன் வள்ளி…..! கடவுள் புண்ணியத்தால, உடல் ஆரோக்கியத்தோடஇதுநாள் வரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லாம வேலை செஞ்சது போதும்….!இருக்கிற நல்ல பேரோட சோறு போட்ட கம்பெனியவிட்டுப் போயிடுறதுதான்நல்லதுன்னு நினைக்கிறேன் வள்ளி!” உணர்ச்சியுடன் அருளினி கூறுவதைஅமைதியுடன் கேட்கிறாள் வள்ளி.

“உங்க நினைப்பு சரியானது.அக்கா….நான் கேட்கிறேனு என்னை தப்பாநினைக்காதிங்க” தயங்கினாள் வள்ளி.

“இதுதானே வேண்டாங்கிறது.உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதாவள்ளி…..?அக்கா தவறா நினைக்க மாட்டேன்…..! நீ….கேட்க நினைக்கிறதத்தாராளமா கேளு…..! வள்ளி நாம இரண்டு பேரும் ஒரு வயிற்றுலப்பிறக்கலன்னாலும் நாம இரண்டு பேரும் உடன் பிறக்காத அக்கா தங்கச்சிங்கதான்”“அப்படிச் சொல்லுங்க அக்கா…..இப்பதான் என் மனசே நிறைஞ்சிருக்கு.எனக்குக் கூடப்பிறந்த அக்கா இல்லாதக் குறையத் தீர்த்து வைக்க வந்தபுண்ணியவதியாச்சே நீங்க. அக்கா….உங்க பணி ஓய்வுக்குப் பிறகு ….நீங்கயாரோடத் தங்கப்போறீங்க….?”

“என்ன வள்ளி நீ தெரியாமத்தான் கேட்கிறியா….? நான் ஆசையோடு வளர்த்துவர்ர அக்காள் மகள் சீதனாவோடுதான் தங்கப் போறேன்!” மகிழ்ச்சியோடுகூறுகிறார் அருளினி.

இருபது ஆண்டுகளுக்கு முன்,அக்காளும் அவர் கணவரும் மோட்டார் விபத்தில்காலமான பிறகு,அனாதையாகிப்போன சீதனாவை வளர்க்கும் பொறுப்பினை அருளினிஏற்றுக் கொண்டார்.சீதனாவுக்கு அப்போது ஐந்து வயது இருக்கும்.இந்தஉலகத்துல அவருக்கிருந்த ஒரு இரத்த உறவு அக்காதான்.அவரும் விபத்துல
இறந்த போது அருளினி நொறுங்கிப் போனார். வாழ்வு இருண்டு போனதாக எண்ணினார்.தனது அக்காளுக்குச் செய்யும் கைமாறாக எண்ணி அன்று முதல் சீதனாவைப்பாசத்தைக் கொட்டி வளர்க்கத் தொடங்கினார். சீதனாதான் அருளினிக்குஉலகமாகிவிட்டது. தனது திருமணத்தைக்கூட அவர் நினைத்துப் பார்க்காமல்
கண்ணும் கருத்துமாக சீதனாவை வளர்ப்பதிலேயே காலத்தைக் கரையவிட்ட மகராசி
அருளினி அக்கானு வள்ளிதான் பெருமையாகப் பேசுவாள்.

சீதனா பல்கலைக்கழத்துலப் பட்டம் பெற்ற காட்சியை அவளது பெற்றோர்கள்பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையேனு என்ற கவலையினால் அருளினிதுயரமடைந்தார். எந்தக் குறையுமில்லாமல்,கல்விக்கான செலவுகளையெல்லாம் தானேஏற்றுக்கொண்டு,சீதனாவுக்கு எந்த கல்விக்கடன்களையும் வைக்காமல்
பட்டதாரியாக உயர்த்திக்காட்டியதில் மகிழ்ச்சி அடைந்தார்.தற்போது தனியார்நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறாள்; கைநிறைய வருமானம்.“அக்கா….உங்க நல்ல மனசுக்கு….எந்த குறையுமில்லாம கடவுள் நல்லபடியாவைச்சிருப்பாரு. நீங்க நினைச்ச மாதிரி சீதனாவோடு சந்தோசமா
இருங்கக்கா.கடைசி காலம் வரை அன்போடு வளர்த்த சீதனா உங்களக் கண் கலங்காமக்
காப்பாற்றுவா….!” வள்ளி உணர்சியுடன் கூறுகிறாள்.

“நான் வணங்கும் ஆத்தா, உன்னோட உருவத்துல நேர்ல வந்து சொன்ன அருள் வாக்குபோல இருக்கு….! உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் வள்ளி!” அருள்வந்தவர் போல் ஒரு கணம் சிலையாகிப் போகிறார் அருளினி.மறுகணம் வள்ளியின்நெற்றியில் முத்தமிடுகிறார்.

ஒன்றாய் அமர்ந்து இருவரும் மதிய உணவு உண்ணும் இறுதி நாள் அதுவென்றுஇருவர் மனதிலும் உதித்திருக்க வேண்டும்.இருவர் முகத்திலும் ஒருவிதஇறுக்கம் பளிச்சிடவே செய்தது. எனினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல்இருவரும் அமைதியுடன் உணவருந்தி கொண்டிருக்கின்றனர்.அணையை உடைத்துக்
கொண்டு பாயவிருக்கும் நீரைப்போல் இருவர் விழியோரங்களிலும் கண்ணீர்
ததும்பி நிற்கிறது.அப்போது,கண்டினில் ஒலிபெருக்கி ஒலிக்கிறது.அங்கு உணவருந்தி கொண்டிருந்த
அனைவரும் இடம் பெறப்போகும் அறிவிப்பைக் கவனமுடன்
கேட்கின்றனர்.அந்நிறுவனத்தின் நிர்வாகி டத்தோ செல்வாதான் ஆங்கிலத்திலும்
தமிழிலும் பேசினார்.

“இன்று, வேலையிலிருந்து ஓய்வு பெறும் அருளினி அவர்கள், இந்த தொழிற்சாலைதொடங்கிய போது வேலையில் சேர்ந்தவர்.அவர் கடந்த நாற்பது வருடங்களாகநேர்மையாகப் பணியாற்றிய அவருக்கு நிர்வாகம் பாராட்டும் நன்றியும்தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளை அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும்வகையில் அவருக்கு நினைவு பரிசும் பத்தாயிரம் ரிங்கிட்டு சன்மானமும்வழங்கப்படுகிறது” இந்த அறிவிப்பைக் கேட்டு உணவருந்தி கொண்டிருந்த பலர்உணர்ச்சி பொங்க அருளினிக்குப் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்.

“அக்கா….கம்பெனியே உங்க சேவைக்கு அங்கிகாரம் கொடுத்திருக்கு.உங்களுக்கு என் வாழ்த்துகள்” அருளினியைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில்முத்தமிடுகிறாள் வள்ளி.அருளினியைச்சுற்றி சிறு கூட்டமே கூடிவிடுகிறது.இந்நிகழ்வை அருளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பலரது வாழ்த்துகள்திடுதிப்புனு வந்து சேர்ந்ததில் அவர் திக்குமுக்காடிப் போகிறார்.நிர்வாகம் தம்மை பெருமைப் படுத்தியது கண்டு அருளினி ஆனந்தக் கண்ணீர்வடிக்கிறார்.பின்னர் விசும்பத்தொடங்குகிறார்.

“அக்கா….ஏன் அழுவிரீங்க….?” வள்ளி ஆறுதல் படுத்துகிறாள்.“ஒரு பெரிய குடும்பத்தை விட்டுப் பிரிந்து,நாளை முதல் வீட்டில இருக்கவேண்டுமே என்று நினைக்கும் போதே கவலையா இருக்கு வள்ளி….”அருளினிக்குத்
துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. கண்களில் கட்டி நின்ற கண்ணீரைச்சிரமத்தோடு அடக்கிக் கொள்கிறார்.

“அக்கா….நீங்க நினைச்சா கொமூட்டர்ல ஏறி அரை மணி நேரத்தில கம்பெனியிலஎங்கள வந்துப் பார்க்கலாம்.நினைச்ச மாத்திரத்துல கைபேசியில எங்களோடுபேசலாம்,வாட்சாப்பு மூலமா எங்களுக்கு விபரம் சொல்லலாம்.எதுக்கு வீணாமனசப்போட்டு குழப்பிக்கிறீங்க…..நான் இருக்கேன் தினமும் உங்களோட
பேசரேன்,கண்ணீரைத் தொடைங்க கவலைய விடுங்க….வாழ்க்கை மகிழ்ச்சியாவாழத்தான்…” குட்டிதன்னம்பிக்கை உரையை ஆற்றி முடிக்கிறாள் வள்ளி.அவளது உரையைக்கேட்டு அருளினி அக்கா முகம் மலர்ந்தது வள்ளிக்குப்பெருமையாகைப் போகிறது.

மாலையில் வேலை முடிந்ததற்கான சைரன் ஒலி வேகமாகஒலிக்கிறது.நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தத்தம் இல்லம் நோக்கி மிகுந்தஆவலுடன் புறப்படுகின்றனர்.ஆனால்,அருளினி மட்டும் தளர்ந்த நடையுடன் நடந்து
செல்கிறார்.கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தம் சொந்த நிறுவனமாய் நினைத்துஇனிதாய்ப் பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு இன்றுடன் விடை பெற்றுச் செல்வதைஎண்ணும் போது அவரையும் அறியாமல் மனம் சஞ்சலம் அடைகிறது.இதுநாள் வரையிலும் தாம் பணியாற்றிய தொழிற்சாலையில் நாளை முதல் அதன்
வாசலில் கூட கால் வைக்க முடியாது என்ற எண்ணம் மனதில் துளிர்த்த போதுகவலையின் வாட்டம் முகத்தில் வட்டமிடுகிறது.அந்த நிறுவனத்துக்கும்தனக்குமுள்ள உறவு இன்று முதல் முற்றாய் அறுபடுவதை எண்ணிப்
பார்க்கிறார்.தாம் நேசித்த வேலையகத்தை விட்டுப் பிரிவது அவருக்குப்பெரும் துயரமாக இருந்தது. அவரையும் மீறி கண்களில் கண்ணீர்.

மனச்சுமையோடு வீடு செல்ல அருளினி சாலையைக் கடக்கிறார். அவரோடு பலரும்சாலையைக் கடக்கின்றனர்.எல்லாரும் சாலையை விரைவாக கடக்கும்வேளையில்,அருளனி மட்டும் சாலையை மெதுவாக கடக்கிறார்.“ஓய்….வீட்டுல சொல்லிட்டு வந்தாச்சா……?” மோட்டோரில் வேகமாக வந்தஇளைஞன் ஒருவன் அருளினியை நோக்கிக் காட்டுக் கத்தாகக் கத்திவிட்டுப்பறக்கிறான் முகமூடி அணிந்த அந்த இளைஞன்.

“நீங்க வாங்கக்கா…..அவன் கிடக்கிறான் அராத்தல் பிடிச்சவன்….. மெதுவாபோனாதான் என்ன? இவனெல்லாம் உருபடியா வீடு போய் சேரமாட்டானுங்க….!”கோபத்தில் வாய்க்கு வந்தபடி கரித்துக் கொட்டினால் வள்ளி. அதர்ச்சியில்அருளியின் உடம்பே ஆடிப்போய்விடுகிறது.அதர்ச்சியில் அவர் உடல்
நடுங்குகிறது.அருளினியை அணைத்தபடி பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கஉதவுகிறாள் வள்ளி.

பத்து நிமிட நடைக்குப் பின் கொமூட்டர் இரயில் பயணம் வழக்கம் போல்தொடங்குகிறது.“அக்கா…வாங்க இங்க உட்காருங்க….”வள்ளி வழக்கம் போல்இடம் பிடித்துக் கொடுக்கிறாள்.இருவரும் வசதியாக அமர்ந்து கொள்கின்றனர்.கொமூட்டர் வசதி வந்த பிறகு அருளினிக்கு வேலைக்கு வந்து போகும் போக்கு
வரத்து சிரமமில்லாமல் போய்விட்டது.பஸ்சில் பயணிக்கும் போதெல்லாம் பட்டசிரமங்கள் சொல்லிமாளாது.நெரிசலில் கால் கடுக்க நின்று கொண்டு பயணம்செய்திருக்கிறார்.இன்று குளுகுளு அறையில் நவீனமான இருக்கைகளில் அமர்ந்துபயணம் செய்வது நிம்மதியைத் தந்தது.அரை மணி நேர பயணம் என்றாலும்
அலுப்பில்லா நிம்மதியான பயணத்தை அனுபவிக்கும் போதெல்லாம் அரசாங்கம்
மக்களுக்காக ஏற்படுத்தித் தந்ததுள்ள வசதிகளுக்காக மனதுக்குள் நன்றி
சொல்ல அருளினி ஒருநாளும் தவறுவதில்லை.

வள்ளி தனது இருப்பிடம் வந்ததும் இறங்கிக் கொள்கிறாள்.அருளினி அடுத்த சில
நிமிட துரித பயணத்துக்குப் பின் இறங்கிக் கொள்கிறார். தனது பயத்தைத்
தொடங்கும் முன்பே பயணம் செய்த கொமூட்டர் சில வினாடிக்குள் அங்கிருந்து
புறப்பட்டுவிடுகிறது. அங்கு ஒரே அமைதி நிலவுகிறது. சில நிமிடங்களில்
பயணிகள் அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.
அருளினி தம் வீட்டை நோக்கி நடக்கிறார்.ஐந்து நிமிட நேரத்தில் அருளினி
வீட்டை அடைந்துவிடுவார்.வீட்டை அடைவதற்குள் அருளியின் உள்ளத்தில் பல்வேறு
சிந்தனை மலர்கள் பூக்கின்றன.தம்மை வரவேற்க சீதனா வாசலில் விழி வைத்துக்
காத்துக் கொண்டிருப்பாள்.அவள் இருக்கும் வரையில் தமக்கு என்ன கவலை.
தமக்குக் கிடைத்த பரிசுகளை அவளிடம் கொடுத்தாள் மிகவும் மகிழ்வாள்.
சிந்தனை முடிவதற்குள் வீட்டை அடைகிறார்.அவர் கண்கள் வாசலை நோக்கிப்
பாய்கிறது.தாம் ஆவலோடு எதிர்பார்த்த சீதனா அங்கு இல்லாதது கண்டு
வியப்படைகிறார்.உள்ளே ஏதும் வேலையாக இருப்பாள்.தம்மை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு வாசலை அடைகிறார்.வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. வேலை முடிந்து
இன்னும் வீடு வரவில்லையோ? இது நாள் வரையிலும் ஒரு நாள் கூட அவள் தாமதமாக
வீடு திரும்பியதில்லையே? இன்று அவளுக்கு என்ன ஆச்சு? அவருக்கு ஒரே
குழப்பமாக இருந்தது.

பூட்டைத்திறந்து வீட்டிற்குள் செல்கிறார்.தனது வாசிப்பிற்காக வரவேற்பு
அறையில் போடப்பட்டிருந்த சிறிய மேசை மீது வெள்ளைத் தாள் ஒன்று
வைக்கப்பட்டிருந்தது.அருளினி அதை எடுத்து பதற்றமுடன் வாசிக்கிறார்.
“சித்தி…. நான் விரும்பியவரோடு வாழ்வதற்காக வெளிநாடு
செல்கிறேன்…..இனி என்னைத் தேடவேண்டாம், கூட் பை ! ”
முற்றும்

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:11 am

தாண்டுதல்
--------------
சுப்ரபாரதிமணியன்
---------------
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க”
“என்ன கதையா”
“சின்னக் கதையா“
“குட்டிக் கதையா“
“குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா”
“சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது”

“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் மல்லி……”“மல்லிகையா மல்லிகைக்கு அவ்வளவு முக்கியத்துவமா”
“மல்லிகா”
“உம்”
“மல்லிகாவைப் படச்சிருக்கார்”
“என்ன ஐஸ் வெக்கரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா”

வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது மல்லிகாவிற்கு வீரக்குமாரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கம்பளிப் பூச்சியாய் அவன் மீசை உட்கார்ந்திருந்தது. இடது கன்னத்து மச்சம் பளபளத்துக் கொண்டிருந்தது, கண் புருவத்திலிருந்து ஒரு மயிர் நீண்டதாய் தொங்கியது. அவன் மெல்ல அதை இழுக்க சாய்ந்தான் வீரக்குமார் “அய்யே வலிக்குது”
“பேர்லதா வீரக்குமார். இந்த மயிரை இழுத்ததுக்கே அய்யோவா?”

“என் வீரத்தை எங்க காட்டனும்கறே மல்லிகா”

“காம்பவுண்ட் சுவரை எட்டிக் குதிக்கறதிலதா காமிக்கிறீங்க.. போதும். செரியா.”

வீரக்குமாரின் வீட்டிலிருந்து நூறடியில் புகைவண்டி நிலைய காம்பவுண்ட் சுவர் ஆரம்பிக்கும். அது புகைவண்டி இருப்புப் பாதையை ஒட்டி ஒரு கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும். புகைவண்டி நிலையத்திற்கு போக வேண்டுமென்றால் காம்பவுண்ட் சுவரையொட்டி ஒரு கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும். பல வருடங்களாய் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு போகிறவன். காலை நேரத்தில் அவசர கதியில் கிளம்புகிறவனுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிய தடையாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் வலது பக்கத்தில் ஒரு வேப்பமரம் அதன் வேர்கள் காம்பவுண்ட் சுவரை ஊடுருவிக் கொண்டு நின்றிருந்தது. அதன் கிளையொன்றைப் பிடித்து காம்பவுண்ட் சுவற்றின் மேல் ஏறி உட்கார்வான். பின் எம்பிக் குதிப்பான். வேப்பமரம் பெருத்துக் கொண்டே போனபோது அதை வெட்டிவிட்டார்கள். அதன் அடிப்பாகம் மட்டும் தலையை மண்ணுள் புதைந்திருக்கிற மனிதனைப் போல நின்றிருந்தது. வேப்ப மரத்தை வெட்ட விட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான்.

 அதனடியில் சிறிய கல்லை  நட்டு இரண்டு நாள் குங்குமம் தெளித்திருந்தால் சிறு தெய்வம் ஆகியிருக்கும். வாரம் இரண்டு முழப் பூவை உதிர்த்துவிட்டுப் போனால் நிரந்தரமாகியிருக்கும். முனியப்பனோ அங்காளம்மாளோ ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். வேப்பமரமும் நிரந்தரமாயிருக்கும். நழுவவிட்டு விட்டோமே என்றிருந்தது வீரக்குமாருக்கு.

காலை புகைவண்டி நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றிப் போவது அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. வேப்பமரத்தின் அடிப்பகுதியில் கால்களை வைத்து எம்பியபோது சட்டென காம்பவுண்ட் சுவரின் மேல் அவன் உடம்பு, உட்கார்ந்து கொண்டது ஒருமுறை. அது எதேச்சையாக நடந்தது போலிருந்தது. அதற்குப் பின் அப்படி எம்பி காம்பவுண்ட் சுவரின் மேல் உட்கார முடியவில்லை.

திருப்பூருக்குப் பேருந்தில் கிளம்பிப் போவதென்பது பெரிய அவஸ்தையாக இருந்தது அவனுக்கு. வஞ்சிபாளையம், மங்கலம், கருவம்பாளையம் கடந்து பேருந்தில் தடக்தடக்கென்று உடம்பை இம்சைப் படுத்திக் கொண்டு போவதில் அலுப்பிருந்தது. பேருந்து நெரிசல் வேறு மூச்சு திணற வைத்தது. திருப்பூரின் குப்பையும், சாயக் கழிவும், அசுத்தமும் இன்னமும் மூச்சடைக்க வைக்கும் பனியன் கம்பெனியில் பேட்லாக் ஸ்டூலில் உட்கார்ந்தால்தான் ஆசுவாசம் பிறக்கும் அவனுக்கு.

அவனின் அம்மா கல்யாணப் பேச்சை எடுக்கிற போதெல்லாம் எரிச்சலடைவான். “ஏண்டா எரிச்சல் படறே. வார்ரவ ஒரு டி.வி.எஸ்ஸோ, பைக்கோ வாங்கிட்டு வரமாட்டாளா”
“வர்ரவகிட்ட எதுக்குக் கேட்டுட்டு. நானே சம்பாதிச்சு வாங்கிக்கிறேன்”
“சம்பாதிக்கிற வரைக்கும் என்ன பண்ணப் போறே”

இரட்டைச் சக்கர வாகனம் வாங்குவதை விட காம்பவுண்ட் சுவரைக் கடப்பதுதான் அவனின் அப்போதைய லட்சியமாயிருந்தது. பள்ளியில் விளையாட்டில் அக்கறையில்லாதவன் ஓட்டப் பந்தயமோ, உயரந்தாண்டுதலோ மனசில் இருந்திருந்தால் காம்பவுண்ட் சுவரைக் கடப்பது சுலபம். பேட்லாக் மிஷின் முன்னால் உட்கார்ந்து பனியன் தைக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் பனியன் கம்பெனி இளம் பெண்கள் அவனை இம்சித்ததை விட காம்பவுண்ட் சுவர்தான் இம்சித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் வீட்டிலிருந்து சற்றே வேகமாகக் கிளம்பியவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட் சுவரின் வலது பக்க மூலையிலிருந்து கால்களை எம்பி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிவிட்டான். அவனுக்கு மலைப்பாக இருந்தது. எப்படித் தாண்டினோம் என்று ஆச்சரியப்பட்டபடியே பனியன் கம்பெனிக்குப் புகைவண்டி பிடித்துப் போனான். பிறகு தினந்தோறும் உடற்பயிற்சி போல வேகமெடுப்பதும், ஓடுவதும், காம்பவுண்ட் சுவரை அந்த வேகத்திலேயெ கடப்பதும் சாதாரணமாகிவிட்டது. தாண்டுவது வெகுவாக இருக்கட்டும் என்று “பவர் ஷு” ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.கொஞ்சம் வயிறு கனமில்லாமல் இருந்தால் சுலபமாயிற்று.

பனியன் கம்பெனி வேலைக்கு காலையில் கிளம்பும்போது   அம்மா வருவதைத் தவிர்ப்பான். “என்னடா வர்ரேன்னு சொன்னாக்கூட விறுவிறுன்னு போயிர்ரே”
“டிரெயினைப் பிடிக்க வேண்டாமாம்மா”
“வேற யாரையாச்சும் பாக்கணுமா, சைகை காட்டணுமா, பேசணுமா”
“நீதா ஆள் பிடிச்சுத் தரணும்”
“ச்சீ..பேச்சைப் பாரு”
 
அவன் அம்மாவும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தாள். புகைவண்டி நிலையத்திலிருந்து அடுத்த வீதியில் அவளை ஏற்றிச் செல்ல மில்லின் ஒரு சிறப்புப் பேருந்து வரும்.
“எப்படிம்மா உன்னை அந்த பஸ்ல ஏத்திக்கிறாங்க”

“ஏண்டா”
“சின்ன வயதில் பொண்ணுகளை சுமங்கலித் திட்டமுன்னு சொல்லி ஏத்திட்டுப் போறாங்க. அஞ்சு வருசம் வேலை செய், உங்க கல்யாணத்துக்கு முப்பதாயிரம் தர்ரமுன்னு கூட்டிட்டுப் போறாங்க, நீயும் அந்த மில்லுல வேலை செய்யற… உனக்கும் முப்பதாயிரம் கெடைக்குமா”
“சும்மா இருடா…. அது சுமங்கலிகளுக்கு”

அம்மாவை துன்புறுத்தி விட்டோமோ என்றிருக்கும் அவனுக்கு ஏதோ பேசுவதாக நினைத்துக் கொண்டு, அம்மாவை துன்புறுத்தி விடுவதாகத் தோன்றும். அப்பா மட்டும் இருந்திருந்தால், ” சுமங்கலி “ பேருந்தில் அவள் வேலைக்குப் போகும் அவசியம் இருந்திருக்காது.
ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்து வந்த அம்மா அவன் காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் புகைவண்டி இருப்புப் பாதைக்குப் போவதைப் பார்த்தாள். அதிர்ந்து போய்விட்டவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அன்று மாலை உடம்பு சுகமில்லையென்று சீக்கிரமே மில்லிலிருந்து வந்துவிட்டாள். இப்படி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கிற வீரகுமாரை எந்த சிரமமும்  இல்லாமல் முழுசாய் பார்க்க முடியுமா என்ற பயத்தினாலேயே வீட்டிற்கு வந்துவிட்டாள்.

“என்னடா எத்தனை நாளா இந்தப் பழக்கம்”
“என்னமா………. என்ன கண்டுபிடிச்சிட்டியா………எந்த பிரண்டும் இல்லம்மா, கேர்ல்ஸ் கூட”
“அதெல்லா இல்லடா….. காம்பவுண்ட் சுவற்றை எட்டிக் குதிச்சு தாண்டிப் போறது”
“ரொம்ப நாளா நடக்குதம்மா”
“எப்படிடா”

“பழகிருச்சும்மா…..பயப்படாத”
“ஐய்யோ….பாத்தப்போ திக்குன்னு இருந்துச்சு. விசுக்குன்னு தாண்டிப் போயிட்டே இருந்தே”
“பழகிட்டம்மா”
“இதுக்காகவே உனக்கு ஒரு வண்டி வாங்கிக் குடுத்துரணும்”
“நீங்க காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டிப் போனதை நானும் இரண்டு மூணுதரம் பார்த்த ஞாபகம். என்னவோ பொண்ணுகளக் கவர் பண்றதுக்குக் குதிக்கிறீங்கன்னு நெனச்சேன். கொரங்கு தாவிப் போனது மாதிரி இருந்திச்சு”
“அப்பவே கொரங்குன்னு முடிவு பண்ணிட்டியா”

“இப்பவுந்தா……நாலு வீதித் தள்ளித்தானே, அப்புறம் என்னைப் பொண்ண பாக்க வந்தப்போ காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குரங்கென்ன நாலு வீதி தள்ளி வந்திருக்கன்னு நெனச்சேன். சிரிப்பா இருந்துச்சு அப்படி வெரசலா காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் போகாட்டி என்ன.. போயி ரயில்வே ஷ்டேசன் கூட்டத்தில் கலந்துர்ணுமா”
“உன்னைக் கூட மொதல் மொதலா விநோதமான எடத்திலதா பாத்தேன். பெரியாஸ்பத்திரியில”
“ஆமாமா”

“பெரியாஸ்பத்திரியில மார்ச்சுவரி ரூமுக்கு முன்னால உட்கார்ந்திருந்தீங்க, என்னமோ ரொம்பவும் பழகினமாதிரி என்ன இங்க உட்கார்ந்துன்னு சட்டுன்னு கேட்டுட்டேன்”
“ஆமா நானும் சட்டுனு திரும்பிப் பாத்தா, பிணவறைன்னு போர்டு தொங்குது. பயமாப் போச்சு. பெரியாஸ்பத்திரியில கூட்டம். ஒரே க்யூ மயம். எங்காச்சும் நெழல்லே உக்காரணும்னு ஒதுங்கினேன். நீங்க சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது. அது மார்ச்சுவரி கட்டிடம்னு”
“என்ன உங்களுக்கு மார்ச்சுவரி கட்டடம்னா பயமா”

“ரொம்ப பயம். அந்தக் கூட்டத்தைக் கண்டாவே ஓடி ஒளிஞ்சுக்குவேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு தரம், சந்தைக் கூட்டத்தில் ஒரு தரம்ன்னு தொலைஞ்சு போயிட்டேன். ஒரு தரம் திருப்பூர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவுல எங்கப்பாவை விட்டுட்டு யாரோ ஆம்பளை ஒருத்தர் கையைப் புடுச்சுட்டு நடந்துட்டிருக்கேன். தெரிஞ்சதும் பகீர்ன்னு பயம் வந்தது. வீர்ன்னு அலறிட்டேன். ரயில்வே ஸ்டேசன்ல காலையில பனியன் கம்பெனிக்குப் போற கூட்டத்தைப் பாத்த பயமா இருக்கும். நீங்க எப்படித்தா அந்தக் கூட்டத்தில் போறீங்களோ”

“உங்கக் கல்யாணத்துக்குக் கூட்டம் வருமே…. அதப் பாத்துட்டு ஒளிஞ்சிருவீங்களோ, மாப்பிள்ளைக் கோலத்தில் என்ன உக்கார வெச்சிட்டுத் தவிக்க வுட்டுறாதீங்க.. காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டறதில் ஒரு திரில். திருப்பூருக்குப் போற டிரென் கூட்டத்தில் நசுங்கறது ஒரு திரில், அப்புறம் திருப்பூர் போயி குப்பையில, ஜனங்க நெரிசல்ல நடமாடறதும் திரில்தா….”

இலவச அரசாங்க வண்ணத் தொலைக்காட்சி இருட்டாய் சும்மா பார்துக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி கண்ணாடியில் மல்லிகா உருவம் வந்து வந்து போனது. குளித்து முடித்து தலையை லகுவாக்கிக் கட்டியிருந்தாள். தலைமயிரிலிருந்து நீர் சொட்டி பின் ஜாக்கெட்டை நனைத்திருந்தது.
“என்ன உடுமலைக்காரியை வெச்சுட்டு அரட்டை……..”
“ஒண்ணுமில்ல…. திலகவதிகிட்டே சட்டுன்னு  மனசுல வந்ததைச் சொல்லிட்டு இருந்தேன்”
“திலகவதிக்கென்ன திருமூர்த்திமலை தண்ணியும், உடுமலை குளுகுளுமாக நெலச்சு நிக்கறவளாச்சே, கௌம்பு. திலகதி…. ஞாயிற்றுக்கிழமை வேலை எவ்வளவோ  கெடக்குது. இவருக்கென்ன அசடு வழிய எதாச்சும் சொல்லிட்டிருப்பாரு….”  திலகவதி முன்புறம் போட்டிருந்த சடையை லாவகமாக பின்புறம் தள்ளி விட்டபடி பவித்ராவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுக் கிளம்பினாள். பவித்ரா வலி தாங்காது போல் வலியால் உஸ்ஸென்றாள். “கொழந்தையைக் கிள்ளறது உனக்குக் கெட்ட பழக்கம். எத்தனை தரம் சொல்றது….” திலகவதி முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு பவித்ராவிற்குக் கையசைத்துக் கிளம்பினாள்.

“திலகவதிகிட்ட என்ன சொல்லிக்கிட்டிருந்தீங்க……”
“உங்கிட்ட சொல்ல வேண்டாமுன்னுதா”
“சின்னதா கவிதை மாதிரி ஒரு ஸ்பார்க் மனசில வந்தது. அதுதா.“
“என்ன”
“மூத்திரப் புரையைப் பெண்கள் கடக்கும் போது அதன் நாற்றம் உணர்வதில்லை நான். இதில் மூத்திரப் புரைன்னா என்னன்னு திலகவதி கேட்டிருந்தா,…..”
“பெரிய கவிதைதா……. எங்கிருந்து புடுச்சீங்க”
“டைரியைப் புரட்டினான். நான் எழுதுனது இருந்துச்சு”
“அவளுக்கு புரிஞ்சுதாமா”
“அதுக்குள்ளதா நீ வந்துட்டியே, செரி உனக்கொண்ணு”

“கதையல்லா வேண்டா. சின்னதா துணுக்கு மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க. இட்லிக்கு மாவு கலக்கிட்டு இருக்கேன். கதை எல்லாம் வேண்டாம். இப்பதா கதையெல்லாம் அரை நிமிசக் கதை, கால்பக்கக் கதைன்னு ஆயிப்போச்சு. துணுக்கா சொல்லுங்க. நேத்திக்கு தொட்டிச் செடி ஒன்னு காமிச்சான். அது வளர்வதற்கு நிழல் தேவையாமா? இருட்டிலே ராத்திரியிலே ஒளி வீசும்னு சொன்னான். அதுக்கு பேர் கேட்டேன். நீங்களே ஒன்னு வெச்சுக்கோங்கன்னான். நான் மல்லி…..”

“மல்லிகா” என்றால் மழலைக் குரலில் பவித்ரா. “போதும் போதும் ஐஸ் வெச்சது போதும். தலைக்குக் குளிச்சதே ஜிவ்வுன்னு இருக்கு. இதுல நீங்க வேற ஐஸ் வெச்சுட்டு, உங்களுக்குக் காலையிலே இட்லிக்கு தக்காளி குறுமாவும் மத்தியானம் சாப்பாட்டிற்கு நெத்திலி மீன் கொழம்பும் வெச்சுத் தரேன். ஐஸ் வெக்கத்தேவையில்ல. நெத்திலி மீனுக்கு பையை எடுத்துட்டுக் கிளம்புங்க.”

“மீன் மார்க்கெட்டுக்குப் போகணும்னா அலுப்பா இருக்கு. ரயில்வே ஸ்டேசனை கடந்துதான் போகணும். ரயில்வே காம்பவுண்டு சுவத்தைத் தாண்டு போறது கிண்டலா சவாலா எப்படி வேணுமின்னாலும் வெச்சுக்கங்க. கல்யாணத்திற்கு முந்தி பனியன் கம்பெனிக்குப் போக டெய்லி காம்பவுண்டு சுவத்தைத் தாண்டித்தானே போயிட்டிருந்தீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நீதானே காம்பவுண்ட்டை தாண்டறதெல்லாம் வேண்டா. எதுக்கு ரிஸ்க்குன்னு தடா போட்டே. மீறவே முடியல. எனக்கு எதுக்குச் சிரமம். தாண்டரதுல பேலன்சு தப்பி விழுந்து கைகால் முறிஞ்சிறுமுன்னு பயம். அடி மனசுல வந்துருச்சு. பிரசவத்துக்கு நீ போயிருந்தப்போ, காம்பவுண்டு சுவத்தை தாண்டிடனும்னு நெனப்பேன். தாண்டரதில உள்ளுர பயம்தான்.”
“இன்னிக்கு முயற்சி பண்றது”

“கொழந்தையை வச்சிட்டு சீண்டிப் பாக்கறயா”
“தாண்டப்பா” என்றாள் பவித்ரா.
“வேண்டாம்மா கைகால் முறிஞ்சு நான் கெடந்தா நீ அழுவியே. அதப்பாத்து எனக்கும் அழுகை வந்திரும்”
மீன் வாங்கப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், வாசலில் வந்து நின்று புகைவண்டிப் பாதை காம்பவுண்டு சுவரைப் பார்த்தான். அது நீளமாகி  ரொம்ப உயரத்திற்கு வளர்ந்து விட்டது போலிருந்தது.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:15 am

குப்பி
-------------
பத்மநாபபுரம் அரவிந்தன்
----------------
அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே அக்காவுக்கு லேசாக நோவு எடுத்ததால், அவளை தக்கலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். நானும் அத்தானும், அம்மாவும் உடன் இருந்தோம்.

அதிகாலை அக்காவுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பிறந்தது. தாய்மாமனாகிவிட்ட சந்தோஷம் மனமெங்கும் நிறைந்தது. குழந்தையையும், அக்காவையும் அறைக்கு கொண்டு வந்ததும், நான் குழந்தையை அருகில் சென்று பார்த்தேன். அழகாக இருந்தது.

அம்மா என்னிடம், வீட்டுக்குப் போய் குளித்து விட்டு சில பொருட்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு திரும்பி வரச் சொன்னாள்.

நான் என் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி, வீட்டுக்கு வந்து பின்பக்கத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது முன்பக்க வாசலில் என் நண்பர்கள் முஜீப் மற்றும் அஜீத் அழைப்பது கேட்டது. நான் அவர்களை பின் பக்கம் வருமாறு குளியலறையில் இருந்து கத்தினேன்.
அவர்கள் வந்தனர். நான் குளியலறையுள் குளித்தபடியே விஷயத்தை சொன்னதும், குழந்தையும், அக்காவும் எப்படி இருக்கிறார்களென்று கேட்டனர்.

பெண் குழந்தையென்றதும்.. முஜீப், “நீ குடுத்துவச்சவம்டே… பொம்பளப்பிள்ளதான் அழகு.. அன்பா இருக்கும்… சொல் பேச்சி கேக்கும். ஆம்பளபயக்கோ.. இன்னாபாரு.. இந்த அஜியப் போல… ஒருவக சொன்னா கேக்கமாட்டான்..,” என்றான்.

உடனே அஜீத் அவனை நோக்கி, “ஆமடே.. யோக்கியரு வாறாரு.. சொம்ப எடுத்து உள்ள வைண்ணு சொல்லுகதுமாரியாக்கும் இருக்கு.. நீ சொல்லுகது,” என்றான்.
“மக்கா.. லேய் நீ அப்பொ… தாய்மாமனாயிட்டே.. இண்ணைக்கு ராத்திரி பார்ட்டி வைக்கணும் கேட்டியா,” என்றான் முஜீப் என்னை நோக்கி…

“இண்ணைக்கு அல்லற, சில்லற பார்ட்டி இல்ல… அடிப்பொளி பார்ட்டியா இருக்கணும் கேட்டியா..,” என்றான் அஜீத்.
சரிடே.. கலக்கிருவோம்… இப்போ எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியிருக்கு.. நம்மோ மத்யானம் பாக்கலாம் என்றேன்.

நான் குளித்து முடித்து, உடைகள் மாற்றி, அம்மா எடுத்து வர சொன்ன எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

“டேய்.. ஏமாத்திரக்கூடாது… சாயங்காலம் சரக்கு வந்திருக்கணும்.. இல்லண்ணா.. தொலச்சேப் போடுவோம்..” என்றான் முஜீப்.

நான் சரியென்பதாய் தலையாட்டியபடி என் வண்டியை எடுத்தேன்.
‘இவர்களுக்கு எப்படி பார்ட்டி கொடுக்க?… கையில் காசு வேறு மிகக்குறைவாய் இருந்தது,’ யோசித்தபடியே மருத்துவமனைக்கு சென்றேன்.

நாங்கள் மூவரும் ஒன்றாம் வகுப்பு முதலே ஒன்றாகப் படித்தவர்கள். ஒவ்வொருவரின் சந்தோஷம் மற்றும் துக்கத்தில் பரஸ்பரம் பங்கேற்பவர்கள்.
கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அம்மாவிடம் கொடுத்து விட்டு குழந்தையைப் பார்த்தேன்.
அக்காவின் அருகில் கை கால்களை லேசாக அசைத்தபடி, கண்கள் மூடியிருக்க.. பால் குடிக்கும் ஞாபகத்தில் வாயை குவித்து சுருக்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்க்க எனக்கு ஒரு பஞ்சுப்பொதியின் ஞாபகம் வந்தது.

அம்மா என்னிடம், “நீ போய் எனக்கு மத்யான சாப்பாடு மட்டும் வாங்கிட்டுவா.. அத்தானையும் கூட்டிட்டு வீட்டுக்குப் போய்ரு.. போற வழியில சாப்பிட்டுப் போங்கோ.. நான் இண்ணைக்கு இங்க இருக்கேன்..,” என்றாள்.
நானும் அத்தானும் வீட்டுக்கு வந்தோம். நேற்று இரவு முழுவதும் விழித்திருந்ததால் எங்கள் இருவருக்கும் நல்ல தூக்கம் கறக்கியது.

நான் என் வீட்டின் வெளி வராந்தாவில் இருக்கும் என் அறைக்குள் வந்து டேப்ரெக்கார்டரில் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் பாடலைப் போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கும் அப்படத்தின் பாடல்கள் மிகப் பிரபலமாகி ஒலித்துக் கொண்டிருந்த நேரமது.

என் வீட்டு வேப்பமரத்தடியில் படுத்திருந்த பகவதியப்பனின் நாய் குரைத்தது. அந்த நாய் பெரும்பாலான நேரங்களிலும் இங்கே தான் கிடக்கும். பகவதியப்பன் எங்களுடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவன். பத்தாம் வகுப்பு தோல்விக்குப் பிறகு அவன் ஏதோ கார் பணிமனையில் வேலை பார்க்கிறான். முஜீப்பும், அஜீத்தும் வெளிக் கதவினைத் திறந்து படிகளில் ஏறி வருவது தெரிந்தது. அதுவரை மறந்திருந்த, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பார்ட்டி நினைவு வந்தது. இருவரையும் என் அறையுள் உட்கார வைத்து விட்டு, அரைகுறை தூக்கத்திலிருந்த அத்தானிடம் சென்றேன்.
“அத்தான் என்.. ஃபிரண்ட்ஸ்களுக்கு பார்ட்டி குடுக்கணும்,” என்றேன்.
அவர் எதுவும் கேட்காமல் எழுந்து, தன் பர்ஸினை எடுத்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தார்.
“இவ்வளவு வேண்டாம்,” என்றேன்.
“பரவாயில்ல.. மருமக பொறந்திருக்காள்ளா.. எஞ்சாய்..,” என்றார்.
எனக்கு ஒரே ஆச்சரியம்.. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் எனக்கு அது ஒரு பெரிய தொகை. வணிகக் கப்பல் கேப்டனான அவருக்கு அது ஒன்றுமில்லை என்பது எனக்குத் தெரியும்.
சந்தோஷத்தோடு வந்தேன்.

டேப்ரெக்கார்டரில், “காலத்தழுவி நிக்கும் கனகமணி கொலுசு.. யம்மா.. நானாக மாற இப்பொ நெனைக்கிதம்மா மனசு..,” வரிகள் ஓடிக் கொண்டிருந்தது. அஜீத்தும், முஜீப்பும் தாளம் போட்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை காட்டியதும், “டேய், நெறய இருக்கே.. அப்போ இண்ணைக்கு கரகாட்டந்தாங்,” என்றான் அஜீத்.
நாங்கள் திட்டம் போட்டோம்.

“அத்தான் ஒறங்குகாரு.. எனக்கும் நல்ல ஒறக்கம் வருகு.. அதனால நானும் ஒறங்கிற்று, சாயங்காலம் அவர நான் ஆஸ்பத்திரில விட்டுட்டு வாறேன்.. பொறவு.. நம்மோ போய் குப்பி, புரோட்டா, சிக்கன், சிகரெட்டு எல்லாம் வாங்கிற்று.. இங்கயே வந்துருவோம்.. இங்க ஒரு பிரச்சனையும் இல்ல.. அடிச்சி பொளிப்போம்டே..,” என்றேன்.
“லேய்.. ஒனக்க அப்பா வந்திரமாட்டாருல்லா… வந்தாரு.. நம்ம எல்லாருக்க தோலையும் உரிச்சி உப்பு தேச்சிப் போடுவாரு…மக்கா,” என்றான் அஜீத்.
“அவரு.. நாளைக்கு சாயங்காலம் தான் புதுக்கோட்டேலேருந்து பொறப்புடுவேரு… மத்த நாளு காலேல தாண்டே வருவாரு..,” என்றேன் நான்.
எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்தது. மாலையில் அத்தானை மருத்துவமனையில் விட்டு விட்டு நான் வீட்டுக்கு வந்தேன்.
இரவு எட்டு மணிக்கு தக்கலை வந்தோம். வண்டியை ஓரமாய் நிறுத்தி, நான் என் மோட்டார் சைக்கிளின் பெட்டியில் இருந்து ஒரு துணிப்பையை எடுத்து அஜீத்திடம் கொடுத்து, “லேய் .. அஜி.. நானு வள்ளி ஒயின்ஸ் பக்கத்தில வண்டிய நிறுத்துவேங்.. நீ ஓடிப்போய்.. ஒரு குப்பி…,” என்ற படியே முஜீப்பினை நோக்கி “முஜீப்.. என்னடே.. பிராண்டியா.. விஸ்கியா?,” என்று கேட்டதும் முஜீப், “அதெல்லம் வேண்டாம்டே.. நமக்கு குதிரச் சரக்குதாங் செரியா இருக்கும் கேட்டியா..,” என்றான்.

நான் மீண்டும் அஜீத்திடம், “மக்கா.. அப்போ வண்டிய நிப்பாட்டுனதும் ஓடிப்போய்.. ஒரு குப்பி ‘ரம்’ வாங்கிற்று செணம் வந்திரணுங் கேட்டியா?,” என்றபடியே மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தேன்..
வண்டியை நான் கிளப்ப இருவரும் பின்னால் ஏறிக் கொண்டனர்.
நான் வண்டியை ஒயின் ஷாப்பிலிருந்து சற்று தள்ளியிருந்த பெட்டிக்கடை பக்கத்தில் நிறுத்தினேன். முஜீப் சுற்றிலும் பார்த்தான் யாராவது ஊர்க்காரர்கள் தெரிகிறார்களாவென்று.
அவன் வண்டியில் இருந்து கீழே இறங்கிய அஜீத்தைப் பார்த்து, “டே.. அஜி, ஓடிப்போய் வாங்கிற்று சீக்கிரம்வா.. எவனாவது ஊருக்காரனுவ பாத்தாண்ணா.. நம்மோ போக முன்னால ஊரு முளுசுங் பரத்திப்போடுவானுவோ,” என்றான்.
அஜீத் சரியென்று தலையசைத்து, தன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாய்ப் போய் அந்த ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தான்.
நானும், முஜீப்பும் வண்டியை நிறுத்தி விட்டு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்தோம்.
அஜீத் ஒயின் ஷாப்பின் வாசலுக்கு வந்து, அங்கிருந்தே கத்தினான், “டேய்.. ஒரு குப்பிண்ணா.. ஃபுல்லா… ஆஃப்பாண்ணு கேக்காண்டே.. என்ன எளவடே வாங்க..?”
முஜீப் தன் வலது முழங்கை முட்டியில் இடது கைவிரல்களை வைத்துக் காண்பித்து மெதுவாய் சொன்னான்,” ஃபுள்ளுலேப் பட்டி.”
அஜீத் மீண்டும் கடைக்குள் நுழைந்தான். அவன் மீண்டும் வெளிவந்து கத்தினான் அங்கிருந்தே, “டேய் பேரு… கேக்கான்.”

“இந்த மைராண்டிய அனுப்பினதுக்கு, நம்மளேப் போய் வாங்கியிருக்கலாம், இவனே சத்தம் போட்டு ஊரெல்லாம் சொல்லிருவாங் போலிருக்கே…,” என்றபடியே நான் பாதி சைகயிலும் மீதி அவனுக்கு கேட்கும் படியும் சொன்னேன்.
ஒரு வழியாய் ஒரு முயலைத் தூக்கி வருவது போல பையை உடலை விட்டு சற்று தள்ளிப் பிடித்து தூக்கி வந்தான், அஜீத்.
“என்ன மைருலே வாங்கினே.. அங்கக் கடைல இருந்தா சத்தம் போடுக.. வட்டுப் பயலே..,” என்றான் முஜீப்.
“எனக்கு என்ன மைராத் தெரியும்.. ஒரு குப்பி ரம்முதாண்ணு கேட்டேங்… குவட்டரா.. ஆஃபா, ஃபுள்ளாண்ணு கேட்டாங்… அடுத்தால என்ன ரம்மு வேணுண்ணு கேட்டாங்… இங்க எவனுக்குத் தெரியும் எளவுடுத்தப் பேரும்… அளவும்.. மைரும்,” என்று அஜீத் கோபமாய் சொன்னான்.
“செரி.. செரி.. விடு.. சாதனத்த பெட்டில போடுறே..,” என்று சொல்லிய படியே பைக்கின் பெட்டியைத் திறந்தேன்.
பெட்டிக்குள் வைத்து, பையினை விரித்துப் பார்த்தோம்.. உள்ளே ஓல்ட் மொங்க் ரம் இருந்தது.. “எவ்வளவுடே..,” என்று கேட்டேன்.

“இருநூறு ரூவாடே..” என்றான் அஜீத்.
நேராக புரோட்டாக் கடையில் நிறுத்தி இருபத்தைந்து வீச்சு புரோட்டா, மட்டன்கறி, காடைவறுவல், ரசவடை என்று வாங்கி விட்டு, சோடா, வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.
வெளிக்கதவைத் திறந்து நானும் அஜீத்தும் உள்ளே நுழைந்தோம். முஜீப் பெட்டிக்குள்ளிருந்து எல்லாவற்றையும் எடுத்து குப்பியிருந்த பையில் வைத்து தூக்கி வந்தான்.
என் வீட்டு வேப்பமரத்தடியில் பகவதியப்பனின் நாய் படுத்திருந்தது. என்னைப் பார்த்ததும் லேசாக குழைந்தபடி வாலாட்டியது. என் பின்னால் வந்து கொண்டிருந்த அஜீத்தையும், கையில் பையோடு வந்த முஜீப்பையும் பார்த்து உறுமியது.

“இந்த சவத்தெளவு… இங்க வந்து ஏம்டே கெடக்கு,” என்று கேட்டான் முஜீப்.
“அந்த எளவு எப்பவும் இங்க தான் கெடக்கும். அதுக்கு இந்த வேப்பமர மூடு ரொம்ப பிடிக்கும்ணு நெனைக்கேன்… அந்த பகவதியப்பன் பயக்கிட்ட… எத்தனையோ தடவ சொல்லியாச்சு…. வீட்டுல கெட்டிப் போடுலேண்ணு.. மயிரங்.. கேக்க மாட்டங்கான்..,” என்றேன் நான்.
தென்னமட்டைய எடுத்து… நாலு சாத்து சாத்துவமா.. அந்த எளவுடுத்தத?..” என்று கேட்டான் அஜீத்.
“அது பாட்டுக்கு கெடக்கட்டும் விடுடே….” என்றான் முஜீப்.
நான் என் வராந்தாவின் அறைக் கதவினைத் திறந்தேன். முஜீப் அந்த பையினை கட்டிலில் வைத்தான். காடை, மற்றும் மட்டன் கறியின் வாசனை தூக்கியது.
அஜீத், பையிலிருந்து வாழைப்பழங்களையும், சோடாவையும் தனியாக எடுத்து என் மேசை மீது வைத்தான். குப்பியும், புரோட்டா, காடை, மட்டன் கறியையும் பையில் வைத்து மேசையின் கீழே வைத்தான்.
முஜீப் என்னிடம், “டேய் கிளாஸ் வேணும்.. உள்ளி கொஞ்சம் வெட்டணும்.. உள்ளி இருக்கா வீட்டிலே..?” என்றான்.
இருக்குடே.. வா.., அஜி.. நானும் முஜீப்பும் போய் கிளாஸ் கழுவி, உள்ளி வெட்டிட்டு வாறோம்,” என்றேன்.
அவன் டேப்ரிகார்டரில் ராஜாதி ராஜா படத்தின் பாடல்கள் இருந்த கேசட்டைப் போட்டான்.
முஜீப் அவனிடம், “அஜி.. மக்கா.. கதவத் தொறந்துப் போட்டுட்டு தம்மடிக்கப் போய்ராத.. அடிக்கணும்ணா இங்கயே அடிச்சுக்கோ..” என்றான்.

நானும், முஜீப்பும் அடுக்களைக்குப் போய் மேலே வைத்திருந்த பெட்டியிலிருந்து மூன்று கண்ணாடிக் கோப்பைகளை எடுத்தோம்.
கண்ணாடிக் கோப்பைகள் தூசு பிடித்துப் போயிருந்தன. முஜீப் அவற்றை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவ ஆரம்பித்தான். வெளியறையில், “மீனம்மா.. மீனம்மா.. கண்கள் மீனம்மா,” பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண்கள் எரிய வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தேன்.
ஏதோ ஆட்டோ வந்து நின்று கிளம்பும் சப்தம் கேட்டது.
என் அத்தான் ஆட்டோவில் வந்து இறங்கி அடுக்களைக்கு வந்திருந்தார்.

“இப்பவே மணிபத்தரையாகுது… என்னா.. நீங்கோ இன்னும் தொடங்கல்லியா?” என்று கேட்டார்.
“இல்ல அத்தான்.. இனி தான்.. இப்போ தயாரெடுப்பு நடக்கு,” என்றான் முஜீப்.
“ஓ.கே. எஞ்சாய்.. நான் சாப்பிட்டுட்டேன்.. ரொம்ப டயர்டா இருக்கு.. நாளைக்கு காலைலே பாக்கலாம்..,” என்று கூறிய படியே அவர் ரூமுக்குள் போகப் போனார்.
நானும், முஜீப்பும் அவரிடம் , “பிள்ளை எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.
“நல்லா இருக்கு.. சிணுங்கும், பால் குடிக்கும்.. ஒறங்கும்.. சுகமான வாழ்க்கையில்லா.. பிள்ளைகளுக்கு..,” என்று சொன்னவர், “அவனெ எங்க.. அஜீத்?”என்று கேட்டார்.

“அவன் அங்க முன்ன ரூமுல காவலுக்கு இருக்கான்,” என்றேன்.
“அங்க யாரும் இல்லயே.. பாட்டு கேட்டிற்று இருக்கு.. நான் வரப்போ பாத்தனே.. கதவு திறந்து கெடந்தது… அவன் அங்க இல்லயே..” என்றார்.
சொல்லிவிட்டு அவர் உள்ளறைக்குள் படுக்கப் போய் விட்டார்.
முஜீப் அவனை இங்கிருந்த படியே சத்தமாய் அழைத்தான்… பதிலில்லை.
நாங்கள் வராந்தாவுக்கு சென்று அறைக்குள் பார்த்தோம். கதவு திறந்து கிடந்தது, அவனைக் காணவில்லை.
முஜீப் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக் கேட்டான்.. “டேய்.. அந்த பையெங்க?”
நான் மேஜையின் கீழேப் பார்த்தேன்.. அந்த பை இருந்த இடம் காலியாக இருந்தது..
இந்த தொட்டிப்பய… எங்கடே போய்த் தொலஞ்சான்?
பின்புற கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, நான் போய் கதவினைத் திறந்தேன்.
அஜீத் நின்று கொண்டிருந்தான்.
‘’லேய்.. எங்கலப் போன.. அந்த பை எங்க?” என்று கோபமாய் கேட்டேன்.
“கக்கூஸ் முட்டிற்று டேய்… அதாங் போனேன், அந்த பை ரூம்ல தான் இருக்கு,” என்றான்.
பின்னால் வந்த முஜீப் அவனிடம், “லேய் மயிரே.. கதவ.. மக்க, மலக்க தொறந்து போட்டுற்று எங்கல.. நொட்டப் போன,” என்று சத்தமாகக் கேட்டான்.

“தூற வந்தா.. தூறாண்டாமா?” என்றான் அஜீத்.
கதவ.. அடச்சிற்று போக வேண்டியது தானே.. அல்லது எங்கள கூப்பிட வேண்டியது தானே,” என்றேன் நான்.
மூவரும் என் அறைக்குள் வந்து மீண்டும் மீண்டும் தேடினோம். காணவில்லை. மேஜை மீது வைத்திருந்த சோடாவும் வாழைப்பழங்களும் அப்படியே இருந்தன.
மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“புரோட்டாவும், சிக்கனும் போனாலும் பரவாயில்ல… கூட இருந்த குப்பியும் போயிற்றே.. ரொம்ப நாளைக்குப் பொறவு.. நல்ல குடிச்சி, திங்கலாம்ணு இருந்தப்போ.. இந்த மைராண்டியால எல்லாம் போச்சு… ஒயின் ஷாப்பும் பூட்டியிருப்பான்,” என்று முஜீப் கோபமாய் கத்தினான்.
நான் எதேச்சையாக வேப்பமரத்தடியைப் பார்க்க அங்கே பகவதியப்பனின் நாயைக் காணவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். டார்ச் விளக்கு எடுத்து வந்து வீட்டை சுற்றிலும் ஒரு இடம் விடாமல் தேடினோம், தெரு முழுக்கவும் தேடினோம்.

கறிமணத்தில், பகவதியப்பனின் நாய் தான் பையோடு தூக்கிச் சென்றிருக்கும் என்பது நிச்சயமானது. அந்த நாய் எங்கெல்லாம் சுற்றுமோ அங்கெல்லாம் தேடினோம்.
வியர்வை வழிய சலித்துப் போய் வீட்டிற்கு வந்து, வாழைப்பழங்களைத் தின்று, சோடவைக் குடித்து சோகமாய் படுத்தோம்.

“அந்த நாய்க்குப் பொறந்ததுக்க புத்திய பாத்தியா… இங்க வச்சித் திண்ணா நம்மோ பாத்து மொத்திருவமுண்ணு.. மொத்தமா தூக்கிற்று போயிற்று..,” என்றான் முஜீப் …
நாங்கள் அதன் பிறகு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

நன்றி திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:20 am

குடிக்க ஓர் இடம்
-------------
வளவ.துரையன்
-------------
“நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி இன்னும் இருந்தது. ஆளுக்கு இரண்டு தம்ளர்; அதுதான் அவர்கள் கணக்கு; கண்கள் சிவக்காமல், கால்களைத் ,தடுமாற வைக்காமல், யாரையும் சந்தேகம் கொள்ள வைக்காமல் இருக்க அந்த அளவுதான் சரியாக இருக்கும் என்று அந்த அளவைக் கடைபிடித்து வந்தார்கள். அது சரியாகவும் இருந்தது.
”ஏண்டா மாத்தணும்றே?” என்று தன் தம்ளரில் பாதி ஊற்றிக் கொண்டே கேட்டான் மோகன்.

”இந்த இடத்தைச் சுத்திக் காம்பவுண்டு சுவரு எழுப்பப் போறாங்களாம்” என்று வேலு பதில் சொல்ல “போடா, அதுக்குள்ளெ ஒண்ணும் வேலை ஆரம்பிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு ஒருவாய் குடித்தான் மோகன்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் வேலு. மோகனின் வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருந்தன. வங்கிக்குச் செல்லும் போது மட்டும் பல வண்ணங்களில் பேண்ட்டும் சட்டையும் அணியும் பழக்கமுள்ளவன் அவன். அதுவும் வங்கியில் நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் காசாளராக அமர்ந்து கொண்டு வரும் வாடிக்கையாளரிடம் அமைதியாக எப்பொழுதும் கோபமின்றிச் சிரித்துப் பேசும் அவன் குடிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.

திருமணமான பின்பு மோகன் மனைவி அவனிடம் போராடிப் பார்த்து ஒரே வழியாக விட முடியா விட்டாலும் ‘வீட்டில் குடிக்கக்கூடாது; அதுவும் வாரத்தில் ஒரு நாள்தான்’ என்ற நிபந்தனைகளுடன் அவனை அனுமதித்தாள்
”அதோ பாரு, ஒனக்கு இருட்டுல தெரியல; கருங்கல் ஜல்லி வந்து கொட்டியிருக்காங்க” என்றான் வேலு. அவன் கை காட்டின பக்கம் பார்த்தான் மோகன். வேலு சொன்னது உண்மைதான் எனத் தோன்றியது. அரைகுறை வெளிச்சத்தில் ஒரு லோடு ஜல்லி அங்கே இருந்தது.

”எத்தனை தடவைடா எடம் மாத்தறது?’ என்று கேட்ட மோகன் அவனுக்குப் பிடித்த பகோடாவைக் கொஞ்சம் போட்டு மென்று கொண்டே வேலுவைப் பார்த்தான்.
வேலுவும் பார்வைக்கு மிகவும் நாகரிகமாகத்தான் இருந்தான். தனியார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் வேலை. தன் பேச்சுத் திறமையால் பாடம் கற்பிக்கும் போது மாணவர்களைக் கட்டிப் போட்டு விடுவான். அவ்வப்போது கவிதைகள் எழுதுவான். வெளியூர்ப் பட்டி மன்றங்கள் போய்ப் பேசுவான்.
மாணவர்கள் மத்தியிலும் கல்லூரி நிர்வாகத்திலும் அவனுக்கு நல்ல பெயர். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணமானவுடன் இப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று வேலுவின் அம்மா அவனிடம் சத்தியம் வாங்கியிருந்தாள்.

மோகன் பணிபுரியும் வங்கியில் ஒரு லாக்கர் வேண்டுமென்று வேலு சொல்ல மோகனின் சிபாரிசில் அது கிடைத்தது. அதுதான் அவர்கள் இருவரும் பழக்கமாக ஆரம்பக் காரணம். அதன் பிறகு தான் பேசும் கூட்டங்களுக்கு வேலு மோகனை வரச் சொன்னான். தான் எழுதி சிற்றிதழ்களில் வந்த கவிதைகளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கருத்து கேட்டான்.

இருவரும் தங்கள் குடிப்பழக்கத்தை ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டது ஒரு தற்செயலான நிகழ்வாகத்தான் அமைந்தது.
அவர்களின் ஊரான வளவனூரிலிருந்து கோபித்துக் கொண்டு போவதைப்போல ஒரு மண்பாதை பக்கமேடு கிராமத்தை நோக்கிச் சென்றது. அக்கிராமத்திலிருந்து கிராமமாகவும் இல்லாமல் நகரமாகவும் இல்லாமல் உலகில் பிறந்த சில பாவப்பட்ட ஜென்மங்களைப் போல் இருந்த இந்த வளவனூருக்குத்தான் பக்கமேடு ஜனங்கள் தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் வர வேண்டும். நகருந்து வசதிகள் இல்லாததால் கால் நடைதான்.
பாதையிலும் விளக்கு வசதி இல்லாததால் எல்லாரும் எட்டு மணிக்குத் தங்கள் ஊருக்குத் திரும்பி விடுவார்கள். பிறகு அங்கே ஆள் நடமாட்டமே இருக்காது.அவர்கள் இருவருக்கும் அந்தப் பாதையில்தான் ஒரு நாள் பழக்கம் ஏற்பட்டது.

இரண்டு நாள்களாக வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததை எடுத்து பனியனுள்ளே போட்டுக் கொண்டு காற்று வாங்கப் போவதைப் போல அப்பாதையில் நடந்தான் வேலு. ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பாலத்தின் மீது யாரோ ஒரு ஒயர் பையிலிருந்து எதையோ எடுப்பதைப் பார்த்தான். அரை நிலா வெளிச்சத்தில் தம்ளரில் ஊற்றுவதும் வாயருகில் வைத்துக் குடிப்பதும் தெரிந்தது. அருகில் சென்றதும் அது மோகன் என்பதறிந்த போது வேலுவுக்கு வியப்பு ஏற்பட்டது.

வேலுவைப் பார்த்து விட்ட மோகன் அவசரமாக எல்லாவற்றையும் மறைக்க முயன்று தோற்றான்.
“பதற்றப் படாதீங்க: இது ஒண்ணும் தப்பில்ல; ஆன நீங்க கூட குடிப்பீங்கன்னு எனக்குத் தெரியாது” என்று கூறிக் கொண்டே தனது பாட்டிலையும் ஒருதம்ளரையும் வெளியில் எடுத்து மோகன் வைத்தவுடன்தான் வேலுவுக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. அதன் பிறகு அந்த இடம் தான் ஒன்பது மணிக்கு மேல் அவர்களது குடி சாம்ராஜ்யத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகத் திகழ்ந்தது.
ஆனால் அந்த சாம்ராஜ்யம் இடம் மாறக்கூடிய நிகழ்ச்சியும் ஒருநாள் ஏற்பட்டது. இரவு ஒன்பது மணி இருக்கும். வழக்கம் போல் இருவரும் அந்தப் பாலத்தில் உட்கார்ந்து தங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். பௌர்ணமி போய் மூன்று நாள்களாகி இருந்ததால் வெளிச்சமும் கொஞ்சமும் அதிகமாகத்தான் இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக வீசிக் கொண்டிருந்தது. அரச சபையை முடித்துக் கிளம்ப வேண்டிய நேரம். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

”என்னா வாத்தியாரே? இங்க ஒக்காந்து என்னா செய்யறீங்க? அதுவும் இந்த நேரத்துல”
வேலுவும் மோகனும் தொலைவிலேயே அவரைப் பார்க்கத் தவறி விட்டதை உணர்ந்தனர். அவசரமாக பிளாஸ்டிக் தம்ளர்களை எல்லாம் பாலத்துக்கடியில் போட்டனர். சட்டைப் பையில் இருந்த கிராம்புகளை வாயில் போட்டுக் கொண்டனர். அதற்குள் அருகே வந்துவிட்ட வைத்திலிங்கம்
“அட, பேங்காரரா? என்னா காத்து வாங்கறிங்களா?”
என்று கேட்டவாறே இவர்களுக்கு எதிரில் பாலத்தின் மறுபக்கத்தில் உட்கார்ந்தார். தங்கள் பேசினாலும் வாசனை ஏதும் வராது என்பது அவர்களுக்குத் தெரிந்தாலும் பேசுவதற்கு இருவருமே மிகவும் கூச்சப்பட்டனர். வேலு மேலே வானத்தில் தவழும் நிலவைப் பார்க்க மோகனோ கீழே குனிந்து கொண்டான்.
அவர் வேலுவுக்கும் மோகனுக்கும் நன்கு தெரிந்தவர்; வங்கியில் கணிசமான வைப்புத் தொகை வைத்திருப்பவர்; அதன் மூலம் அடிக்கடி வங்கிக்கு வர போக மோகனுக்கு மிகவும் பழக்கமானார். அது போல இலக்கியக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்த வேலுவிற்கு நன்கொடைகள் கொடுத்ததால் அவனுக்கும் அவரிடம் நெருங்கிய தொடர்பு வந்தது.

ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக மோகன் அவரைப் பார்த்து, ”என்னாங்க இவ்வளோ நேரம் கழிச்சு வரீங்க?” என்று கேட்டான்.
“அதை ஏம்பா கேக்கறே? ஒரே அலைச்சல் பொழைப்பா போச்சு; வெளச்சல் வந்ததா? வீட்டுல கொஞ்சம் சாப்பாட்டுக்கு வச்சுகிட்டு மீதியை காசாக்கினோமான்னு இல்லாம தவிக்க வேண்டி இருக்கு; கமிட்டியில போடப் போனா ஒரு நாள் பூரா இழுத்தடிக்கறாங்க; அது சொள்ள இது சொத்தன்னு வேற தள்ளறாங்க: வியாபாரிகிட்ட போட்டோம்னா அவன் வாங்கச்ச தேனு ஒழுகற மாதிரி பேசறான். ஆனா காசை அவங்கிட்ட வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடும் போல இருக்கு; அவன் ஊட்ல போயி ஒக்காந்து காத்திருந்து, ஊருக்குப் போனவன் இப்பதான் வந்தான்; அதுவும் பாதிதான் குடுத்தான்; மீதி அடுத்த வாரம் வரச் சொன்னான்”
என்று பொறிந்து தள்ளிவிட்டவர் தொடர்ந்து ”தெனம் இங்கதான் வந்து ஒக்காந்து காத்து வங்கறீங்களா? என்று கூறி முடித்தார்.
”இல்லீங்க, சனிக்கெழமை மாத்திரம் தான்” என்று கூறிய மோகன் ”ஏன் அதைக் கூறினோம்” என்று நினைக்கும் அளவிற்கு வைத்திலிங்கம் கேட்டார்.
“அப்ப சனிக்கெழமை முன்ராத்திரியில வந்தா இங்க ஒங்களைப் பாக்கலாம்” என்றார். அப்புறம் சில கிராமத்து விஷயங்கள் அரசியல் பற்றி எல்லாம் பேசிவிட்டு அரை மணி நேரம் கழித்துத்தான் அவர் போனார்.
வௌவால் இரண்டு வானத்தில் பறந்து சென்றன. எங்கோ ஓர் ஆந்தை அலறியது. தன் வேலையைத் தான் தானே செய்ய வேண்டும் என்ற நினைப்பில் ஓடுவது போல பத்து மணி பாசஞ்சர் வண்டி ஓடியது.
”என்னாடா யோசனை” என்று கேட்டான் மோகன்.
”இல்ல நீ ஏன் அவரு கிட்ட போயி சனிக்கெழமையில இங்க இருப்போம்னு சொன்ன? அடுத்த வாரமும் அவரு வந்தா என்ன செய்யறது?

ஆமாம், போடா, அவரு கரெக்டா வரப் போறாரு” என்று பதில் சொன்னான் மோகன்.
ஆனால் அடுத்த வாரம் வேலு சொன்னது போல இவர்கள் தங்கள் அரசாங்கத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவர் வந்து விட்டார். ”பேங்கில லோன் வேணுமாம் இங்க வந்தா ஒங்களைப் பாக்கலாம்னு வந்தேன்” என்று அவர் சொன்னதும் இருவருக்கும் ரொம்ப சங்கடமாகப் போய் விட்டது.

”பேங்குல லோன் கேக்குற எடம் இதுதானா”ன்னு வேலு கேட்டிருப்பான். மோகனுக்காக சும்மா இருந்தான். அவரிடம் பேசி அவரை ஒருவழியாய் அனுப்பி தங்கள் கதையை முடிக்க மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட அவர்கள் இருவருக்கும் அன்று இரவு வீட்டில் ஏகப்பட்ட அர்ச்சனைதான்.
அதற்குப் பிறகுதான் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நாராயணன் கோயிலுக்கு நாலு பக்கமும் வாசல் என்பது போல அது இருந்தது. இருந்ததே மூன்று வகுப்பறைகள்தாம். அவற்றுக்கும் கதவுகளில்லாதிருந்தது மிகவும் வசதியாயிருந்தது. தனியாய் இருந்த ஓர் அறையை மட்டும் பூட்டி இருந்தனர்.
அதுவும் மழைக்குக் கூட யாரும் ஒதுங்காத பள்ளிக்கூடம் அது. ஊருக்கு வெளியே இருந்த புறம் போக்கு நிலத்தில் அதைக் கட்டி இருந்தனர். யாரும் வராத அந்த இடம் அவர்கள் குடிக்க மிகவும் வசதியாய் இருந்தது. எந்தப்பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்களின் வண்டிக்கு இப்படி ஒரு தடங்கல் வரும் என அவர்கள் எதிர்பார்க்க வில்லை.

”நீ வாணா பாரு, சீக்கிரமா செவுரு எழும்பிடும்டா,’ என்றான் வேலு.
”எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே?
”மழைக்காலத்துக்குள்ள இதை முடிச்சாகணுமாம்; சீக்கிரமா செஞ்சிடுவாங்க; ஏன் தெரியுமா? இதை செய்யும் போதே காண்டிராக்டரு அவரு வீட்டுக்கும் செவரு எழுப்பப்போறதா பேசிக்கறாங்க”
”அப்ப நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே? வா வேற எடம் எங்க இருக்குன்னு பேசலாம்” என்று கூறிய மோகனிடம் “பத்து மணிக்கு நூலகத்துக்கு வரட்டுமா” என்று கேட்டு உறுதியாக்கிக் கொண்டான் வேலு.
அவர்களுக்கு எந்த இடமும் சரியானது எனத் தோன்றவில்லை. பழைய சத்திரம் ஒன்று இருந்தது. ஆனல் அது இரவு முழுதும் பாண்டிக்குப் பேருந்துகள் செல்லும் சாலைக்குப் பக்கத்தில் இருந்தது. யாராவது வண்டியிலிருந்து இறங்குவார்கள். அது தவிர தெருவில் இருந்த சோடியம் விளக்கு வேறு ”நீங்கள் செய்வதை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவேன்” என்று சொல்லாமல் சொல்லியது.“வேலு, போயி பழைய எடத்தையே பாப்பமா” என்று கேட்டான் மோகன்.

“போட அங்க வீடெல்லாம் கட்டி இருப்பாங்க” என்றான் வேலு.
பழைய இடம் என்றது ஊருக்கு வெளியே ரியல் எஸ்டேட் காரர்கள் பிளாட் போட்டிருந்த இடம். அங்கே ஒரு கொட்டகையும் அலுவலகத்திற்காகப் போட்டிருந்த்து வசதியாய் இருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் பிளாட் போட்டவர்கள் போய் விடுவார்கள். இவர்கள் தங்கள் புதிய அரசை அங்கே நடத்தி வந்தார்கள். என்ன ஒரு தொல்லை என்றால் தம்ளர், பாட்டில்கள் எல்லாவற்றையும் அங்கே போடாமல் எடுத்து வந்து விட வேண்டும்.
அந்த அரசும் இரண்டு பேரால் திடீரென கவிழ்க்கப்பட்டது. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளே வந்ததால் ஏற்பட்ட விபரீதம் அது. வெளியூரிலிருந்து வந்த இரு நாடோடிகள் பகல் முழுதும் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ அலைந்து திரிந்துவிட்டு இரவு ஏழு மணிக்கே அந்த கொட்டகைக்கு வர ஆரம்பித்தனர். எனவே வேலுவும் மோகனும் அந்த இடத்தையும் வந்தவர்களை வாழ வைப்போம் என்று தியாகம் செய்தனர். அதற்குப்பிறகுதான் இந்தப் பள்ளியை அவர்கள் கண்டு பிடித்தார்கள்.

மறு நாள் எப்படியோ அவர்கள் ஓர் இடத்தைக் கண்டறிந்தார்கள். சொந்த வீட்டுக்காரனுக்கு ஒருவீடுதான். ஆனால் வாடகை வீட்டுக்காரனுக்குப் பலவீடு என்பார்கள்.
அந்த இடம் ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக இருந்தது. அங்கு சமாதி போலவும் கோயில் போலவும் ஓர் கட்டிடம் இருந்தது. அதன் உள்ளே போகவும் வெளியே வரவும் ஒரு வழிதான் இருந்தது. அங்குவர யாருமே பயப்படுவார்கள். அது ஒரு தனியார் இடம்தான். கதவுகள் ஏதும் கிடையாது. தினமும் ஒரு பெரியவர் காலையில் வந்து பெருக்கிச் சுத்தம் செய்து விட்டுப் போய் விடுவார்.

”வர வாரமே இங்க ஆரம்பிச்சுடுவோம்” என்றான் வேலு.
”பின்ன என்னா? நாள் நட்சத்திரம் பார்த்து கிரகப்பிரவேசமா செய்யப்போறோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் மோகன்.

”வெளிச்சம்தான் கொஞ்சம் கம்மியாக இருக்கும் போல தெரியுது.” என்று சொன்ன வேலுவிடம் ”இல்ல; மேல ஒயரத்துல ரெண்டு ஜன்னல் இருக்கு பாத்தியா? கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் அந்த வெளிச்சம் போதும். நாம என்ன கவிதையா படிக்கப் போறோம்.”என்று பதில் கூறினான் மோகன்.
”இந்தக் கிண்டல் தானே வேணாம்; நான் எப்ப பாத்தாலும் கவிதையா படிச்சுக்கிட்டிருக்கேன்” என்றான் வேலு. “சரி, கோவிச்சுக்காதே; வர்ற சனிக்கெழமை பாப்போம்” என்று கூறிப் பிரிந்தான் மோகன்.
சனிக்கிழமை முன்னிரவு எப்பொழுது வரும் என்று காத்திருந்த அவர்கள் புதிய நாட்டைப் பிடித்த மனநிலையில் மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.

போன வாரம் வேலு வாங்கி வந்ததால் இந்த வாரம் மோகன் பாட்டில் வாங்கித் தன் பனியனுள்ளே போட்டிருந்தான். அதேபோல இந்த வாரம் தண்ணீர் பாக்கெட்டுகள் வேலுவின் முறை. பிளஸ்டிக் தம்ளர்கள்தான் ஒரு பக்கம் பெண்ணின் முலைபோல் அவன் மார்பில் புடைத்துக் கொண்டிருந்தன. அதை மறைக்க ஒரு துண்டையும் அவன் போர்த்திருந்தான். வழக்கம் போல இருவரும் அதிகம் பேசாமல் போய்க் கொண்டிருந்தனர்.
மெல்லிய காற்றும் நட்சத்திரங்களின் ஒளியும் யாருமே இல்லாத சூழலும் அவர்களுக்கு நிம்மதியை அளித்தன. ஆற்றுக்குச் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் கொஞ்ச தூரம் நடந்தவர்கள் அந்தக் கட்டிடத்தின் அருகில் போய் நின்றனர். யாராவது கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கிறார்களா என்று பார்த்தனர். ஒருவரும் இல்லை என்று நன்றாக உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் சுவர் ஓரமாகத் தங்கள் செருப்புகளை விட்ட போது காலில் ஏதோ இடறியது போலத் தெரிந்தது. கீழே குனிந்து பார்த்த இருவருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏற்கனவே அங்கு சில செருப்புகள் கிடந்தன.

வேலுவின் தோளைத் தொட்டுத் தன் வாயின் மீது விரலை வைத்து அமைதியாயிரு என்பதுபோல் சைகை காட்டிய மோகன் அடி மீது அடி வைத்து ஒரு சிறு சத்தமும் எழும்பாதவாறு மெதுவாக நடந்து குனிந்து உள்ளே எட்டிப் பார்த்தான். மோகனின் தோள் மீது கையை ஊன்றி வேலுவும் பார்த்தான். அவர்கள் கண்ட காட்சி இருவருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. உள்ளே ஆடைகள் குலைந்த நிலையில் ஓர் ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தனர். மூன்று அல்லது நான்கு நொடிகளுக்குள் அவர்கள் தங்கள் பார்வையை மீட்டனர். ஒன்றும் பேசாமல் வந்தது போலவே அமைதியாகத் திரும்பி சாலையை அடைந்தனர்.
மெல்லிய குரலில் “கொஞ்ச நேரம் ஒளிஞ்சிருந்து யார்னு பாப்பமா?” என்று கேட்டான் வேலு.
“ச்சீ, பாவம்டா: கள்ளத்தனமோ? இல்ல கல்லூரித்தனமோ? அவங்களும் கஷ்டப்பட்டுத்தான் இந்த எடத்தைக் கண்டு பிடிச்சிருப்பாங்க”

”சரி, இன்னிக்குப் பள்ளிகூடத்துக்கே போவோம்; நாளையிலேந்து வேற எடம் தேடுவோம்” என்று சோகமாகப் பதில் சொன்னான் மோகன்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:23 am

ராசி
-------------
எஸ்ஸார்சி
------------
.அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.

அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான். பி பி இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.

ஒரு சிலர் போனில் அவனிடம் வாடகைக்கு விடும் அந்த வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வந்துவிடவில்லை. ஒரு வீடு யாரும் குடி இருந்தால் மட்டுமே வீடாக இருக்கிறது.அது சும்மா பூட்டிக்கிடக்க வாடகை மட்டுமா இழப்பு.
அவன் மனைவி சைவ உண்வு சாப்பிடுவோரை மட்டுமே அந்த வீட்டில் குடி வைக்க வேண்டும் என அடம் பிடித்தாள். யாரும் அப்படி வரத்தானே இல்லை.

திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து ‘வீடு வாடகைக்கு வேண்டும்’ என்றான்.

‘யாருக்கு’
‘என் நண்பர் ஒருவருக்கு’ வந்தவன் பதில் சொன்னான்.
வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ‘ நீங்கள் சொன்னால் சரிதான்’ என்று முடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.

‘மாதம் ஆயிரம் வாடகை’ சொல்லியாயிற்று.
ஆயிரமே பெரியதொகைதான். சிறியது வீடுதானே..ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.’வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா’ அவள் கேள்வி வைத்தாள்.’சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா’ அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.

இரண்டு வாரம் சென்றது.அவன் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டான். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினான். வாடகைக்கு விட்ட அந்த வீடு முதுகுன்றம் புற நகரில் இருந்தது. அவன் பைய நடந்தான்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு பெரியவர் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.

‘சார் நான்தான் வீட்டு சொந்தக்காரன் வந்துருக்கன்’ அவன் கொஞ்சம் உரத்துக்குரலில் ஆரம்பித்தான்.’யாரு அது வூட்டுக்காரரு’ அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
‘நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு’
‘அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு’
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.

‘யாரு யாரு’
‘நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க’
‘வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்’
‘இது என்னா புது சேதி’
. வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனுக்குச் சங்கடமாக இருந்தது..
‘ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர அந்த தண்ணியும் வூட்டுக்கு உள்ள ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ளார அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு கொண்டாறணும்.வேல இருக்கு’
‘இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது’
‘அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது’
‘ரொம்ப செலவு வரும்போல’ அவன் அச்சத்தோடு சொன்னான். அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது.அமைதியாகவே இருந்தான்.

‘ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க’
‘அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?’
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி’

‘என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க’
‘வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா”.

‘காசி குடுக்குணுமுல்ல’

‘குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே’ அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேராகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
‘சாருக்கு என்ன வேணும்’

அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
‘நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்’

‘சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க’
‘நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்’
‘எதுல’
‘டெலிபோன்ல’
‘கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.போலிசோ இல்ல தாலுக்கா ஆபிசோன்னு பாத்தன்.’
‘ அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்’
‘ உங்க வூடு எங்கன்னு சாரு சொன்னிங்க’

திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பரு 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு’
‘ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஒரு ஆசாமி குடிவந்தாரு’
‘அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு படுத்துகிணு இருந்தாரு’
‘ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே.ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் பெரிய சாதிக்காரன்னு கேழ்வி.. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா ஆசைப்பட்ட பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்’
‘யாரு அந்த பையன் சாரு’

‘அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன்.’
‘அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாயில தண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன’
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆசாமி தெருவுக்கு வந்தார்.
‘வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்’
‘ நீங்க தான் குடியிருக்குறதா’ அவனிடம் கேட்டு முடித்தான்..
துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் வைத்து விட்டுப்போனது காணவில்லை.மனம் சற்று அவனுக்குக் கனத்துப்போனது.

‘ மொட்டை மாடியில் ஏறிப்பார்த்தான். எப்போதும் அது அவனுக்கு பழக்கம்தான். உப்பில் தோய்ந்த மீன்கள் மொட்டைமாடி தரைமுழுவதும் விரவி க்காய்ந்துகொன்டிருந்தன. அவனுக்கு வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. மாடிப்படியிலேயே நின்று பார்த்துவிட்டு கீழ் இறங்கினான்.
‘சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வூடு நல்ல ராசியான வூடுதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வூடும் தே இருக்குதே பின் வூீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.’ மீன் கூடையை இறுக்கி கட்டிக்கொண்டே அவனிடம் சொல்லிக்கொண்டார்.

‘கெளம்பறேன் நேரம் ஆவுது’ என்றான் அவன்.
‘முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்’
‘அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப புடிச்சிருக்குது சாரு’ மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.யாரும் அவனைப்புகழ்ந்துவிட்டால் அப்புறம் கொஞ்சம் அழகு கூடித்தான் தெரிகிறார்கள்.

வீட்டு வாசலில் இருந்த பெரியவர் ‘புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராச வம்ஷம்’ என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை..
‘ வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்கணும்னு’ அவன் மனைவி என்றோ சொன்னது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. …

நன்றி திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:30 am

கோணல் மன(ர)ங்கள்
-------------
என்.துளசி அண்ணாமலை
-----------------
“இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ”

கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால் அதற்குள் மாமியாரிடமிருந்து இரு அழைப்புகள் வந்து விட்டன.
“இதோ வந்துட்டேம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே கூடத்துக்கு வர, சன் தொலைக்காட்சியில் சக்தி விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அடுத்த நிகழ்ச்சியான திரைப்படத்தைக்காண இராசாத்தியின் கணவர் குமரன் சோபா நாற்காலியில் வாகாக உடலைச் சாய்த்தார்.

மாமியார் கல்யாணி தன்னுடைய மூக்குக் கண்ணாடியை அதன் கூட்டுக்குள் வைத்து மூடிவிட்டு நிமிர்ந்தாள். இராசாத்தி, மாமியாரின் கையைப்பற்றி வலிக்காமல் தூக்கிவிட்டாள். மாமியாருக்கு எண்பது வயதாகிவிட்டது. ஆனால், கண்பார்வை இன்னும் நன்றாகவே இருந்தது. தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும்போதும் பத்திரிக்கையோ கதைப்புத்தகமோ வாசிக்கும்போதும் மட்டுமே கண்ணாடியைப் பயன்படுத்துவாள். வெற்றிலைக் காவியேறிய பற்களால் இன்னமும் பட்டாணியையும் பக்கோடாவையும் சர்வ சாதாரணமாக மென்று தின்னக் கூடிய பல்வலிமை மிகுந்திருந்தது. எந்த சூழ்நிலையிலும் எந்த விசயத்தையும் நிதானம் தவறாமல்ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றலில் குறைவில்லை. அதேவேளையில், மற்றவர்களின் மனம் நோகப் பேசுவதிலும், தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் “நச்” “நச்”சென்று இராசாத்தியை ஏசுவதிலும் சளைக்க மாட்டாள்.

இராசாத்திக்கு இதெல்லாம் பழகிப்போய் விட்டது. அதனால் மாமியாரின் குத்தல் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தமாட்டாள். மாமியார் மட்டுமல்ல, அவளுடைய கணவரும், பெண்ணும் பிள்ளையும் கூட பல சமயங்களில் அவளைப் புண்படுத்தத் தவறியதில்லை. மனம் வேதனைப்படும் போதெல்லாம் அவளுக்குப் புகலிடம் தந்தது, சமையலறையக் கடந்த புழக்கடைப் பக்கம்தான். வேலியை ஒட்டி ஒரு மூலையில் வளர்ந்திருந்த இரண்டு வாழை மரங்களைச் சுற்றி குட்டி வாழைக்கன்றுகள் கூட்டமாய் இரண்டடி உயரத்திற்கு முளைத்திருந்தன. மறுமூலையில் உயர்ந்து பரந்து வளர்ந்திருந்த அத்தி மரத்தில் பச்சையும் மஞ்சளும் இளஞ்சிவப்புமாக அத்திக்காய்களும் பழங்களும், ஒன்றாய்க் கூடிவாழும் குடும்ப உறுப்பினர்களைப் போல கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன.

இந்த மரத்தின் மிகப்பெரிய சிறப்பு, அதன் உயரமோ, பருமனோ, காய்களோ அல்ல! தரையிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்குப் பிறகு குறுக்கு வாட்டத்தில் சாய்வாக நீண்டு, பின்னர் நிமிர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்தது. அந்த வளைவில் தாராளமாக சாய்ந்து படுத்துக் கொள்ளலாம்.
இராசாத்தி பெரும்பாலும் அங்குதான் அமர்ந்து தன் மதிய உணவை உண்பாள். மரத்தின் தாழ்ந்த கிளை ஒன்றில் அவளுடைய செல்லமான சிவப்பு சிங்கர் வானொலிப்பெட்டி பதவிசாகத் தொங்கிக்கொண்டிருக்க, இரவு தூங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரங்களிலும் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும். வேலிக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட இடத்தில், மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம், கத்தரிக்காய், பச்சைமிளகாய், வெண்டைக்காய் என எல்லாமே இராசாத்தியின் கைவண்ணத்தாலும் உழைப்பாலும் செழித்து வளர்ந்திருந்தன. சமையற்கட்டில் சமைக்கும் நேரங்களில் வானொலிப்பெட்டி அங்கே இடம்பெயர்ந்திருக்கும்.
“ரேடியோ பையித்தியம்” என்று குடும்பத்தினர் அவளைக் கேலி செய்தலும், இராசாத்தி அதைப் பொருட்படுத்துவதில்லை.

இராசாத்தி வசதி குறைவான குடும்பத்திலிருந்து வந்தவள். அவளத் தன் வீட்டுக்கு மருமகளாக அழைத்து வந்து, மகாராணியாக உயர்த்தி வைத்துவிட்டதாக கல்யாணிக்கு நினைப்பு.
“ஏதோ நீ செய்த புண்ணியம், நீ என் வீட்டுக்கு மருமகளாக வந்தது. இல்லை யென்றால், உன் அப்பன் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு, எம்புள்ள மாதிரி ஒருவன் உனக்குப் புருசனா கிடைப்பானா, என்ன?” என்று அடிக்கடி அவளைக் குத்திக்காட்டத் தவறுவதில்லை.
ஆரம்பத்தில் கணவனிடம் சொல்லிக் குறைபட்டுக் கொள்வாள். ஆனால், போகப்போக அவ்வாறு குறைபட்டுக் கொள்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். கணவன் தன்மீது கொண்டிருக்கும் அன்பில் குறைவில்லை. மாமியார் தேளாகக் கொட்டினாலும், கணவன் நல்ல நண்பனாக நடந்து கொண்டது பெரும் ஆறுதல். ஆனால், மாமியாரின் முன்னிலையில் நண்பன் காணாமல் போய்விடுவான். மாறாக, அங்கே தாயின் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாத ‘ஆமாம்சாமிப் பிள்ளையாக’ அவன் அமர்ந்திருப்பான். கணவன்தான் இப்படியென்றால், பெற்ற பிள்ளையையும் பெண்ணையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களும் பாட்டியின் கைப்பிள்ளைகள்தாம்.
நாளாக ஆக, வானொலிப்பெட்டி அன்புத் தோழியானது. அறிவிப்பாளர்கள் அவளுடைய நலம் விரும்பிகள் ஆனார்கள். பாடகர்களும் நாடக நடிகர்களும் அவளுடைய உறவினர்கள் ஆனார்கள். இசையும் பாட்டும் அவளுடைய உலகமானது.

முதன்முதலில் “இசை சொல்லும் கதை” எழுதத் தொடங்கி, பின்னர் வானொலிக்கும் பத்திரிக்கைகளுக்கும் எழுத ஆரம்பித்தாள். தன்னுடைய சொந்தப் பெயரை மறைத்து, “செந்தாமரை” என்ற தன் பாட்டியின் பெயரில் எழுதினாள். தான் எழுதுவதைக் கூட குடும்பத்தாரிடமிருந்து மறைத்து வந்தாள்.
அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டும், பாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வேலைகளைச் செய்வது ஒன்று புதிதல்ல. இப்போதும் அப்படித்தான். சற்றுமுன் கேட்ட பாடலை அசைபோட்டவாறே மாமியாரின் கையைப்பற்றித் தூக்கிவிட்டாள்.

தடுமாறிக் கொண்டே எழுந்த மாமியார், இராசாத்தியின் முகபாவத்தைப் பார்த்து முகவாயில் இடித்தாள். திடுக்கிட்ட இராசாத்தி, “ஆங்” என்று விழித்தாள்.
“என்னடி நெனப்பு?” என்று மருமகளை முறைத்தாள்.
விழிகளில் மளுக்கென்று கண்ணீர் தளும்பி, ‘இதோ, கீழே விழப்போகிறேன்” என்று பயமுறுத்த, மீண்டும் முகவாயில் ஒரு தாக்குதல் நிகழ்ந்தது. கண்ணீர்த்துளிகள் பட்டென்று விடைபெற்று கன்னங்களில் இறங்கி ஓடின. அதனைத் துடைக்கவும் மறந்து, மாமியாரைக் கைத்தாங்களாகப் பற்றி படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். சுருக்கம் ஏதுமின்றி மிக நேர்த்தியாகத் தெரிந்த படுக்கை மாமியார வாயடைக்கச் செய்தது. குறை சொல்ல வழியேதுமில்லை. போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திவிட்டு, விட்ட வேலையைத் தொடரச் சென்றாள் இராசாத்தி.
“அம்மா! நேத்தே சொன்னேனே, என்னோட சட்டையை அயர்ன் பண்ணி வைய்யின்னு…….”
மூத்தமகன் அன்பரசன் தன்னுடைய காற்சட்டையையும் பனியனையும் அவளுடைய முகத்தில் மூர்க்கத்தனமாக விட்டெறிந்தான்.

திகைப்பும் அவமானமும் ஒருங்கே அவளைத் தாக்க, தன் முன் எறியப்பட்ட துணிமணிகளைக் கையிலெடுத்தாள்.
“எப்பப் பார்த்தாலும் ரேடியோவைக் கேட்டுக்கிட்டு, பையித்தியம் மாதிரி பேசிக்கிட்டு…சிரிச்சிக்கிட்டு……உன்னை ‘அம்மா’ன்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு….. வேலை செய்ய முடியல்லன்னா ஒரு வேலைக்காரிய வைச்சுக்க வேண்டியதுதானே? இந்த வீட்டுல பணத்துக்கா பஞ்சம்?”
நஞ்சில் தோய்த்த சுடுசொற்களை அவள்மீது அள்ளித் தெளித்துவிட்டு முன்பக்கம் போய்விட்டான்.
இராசாத்தியின் உடல் பலமே குன்றிவிட்டாற்போலக் கூனிக்குறுகி அமர்ந்துவிட்டாள்.

‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?’ மணம் முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்தும் தாய்மை அடையாமல் நின்றவளை, வாய் கூசாமல் ‘மலடி’ என்று மாமியார் தேளாய்க் கொட்டி, அவளை நாளொரு சுடுசொல்லும், பொழுதொரு இடியுமாகத் துன்புறுத்தியபோது, ‘இதோ….உன் வேதனையத் தீர்க்க வந்தேன்’ என்று வந்துதித்த செல்லமகன்! தாயென்ற உயர் நிலையைத் தந்தவன்…..அதனாலேயே அவன்மீது அளவுகடந்த அன்பும் பாசமும் பெருகியிருந்தது. எல்லாருமே அவனை அன்பு மழையில் தோய்த்தெடுத்து, அவன் ஆற்றிய பெருங்குற்றங்களையும் அற்புத சாகசங்களாக, வீரதீர செயல்களாகப் போற்றிப் பாராட்டி, மொத்தத்தில் அவனை ஆணவக்காரனாக, முரட்டுத்தனம் மிகுந்தவனாக, மரியாதை தெரியாத மூர்க்கனாக வளர்த்துவிட்டனர். தன்னக் கண்டித்த தாயைப் புழுவினும் கீழாகப் பார்த்தான். தாய்க்கெதிராக அவனைத் தூண்டிவிட்ட பாட்டி, அவன் தன் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும் என்பதற்காகவே அவன் கேட்டபோதெல்லாம் பணத்த தாராளமாகத் தந்து, அவனைத் தன் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். அடுத்துப் பிறந்த சங்கீதாவையும் அவ்வாறே கவனித்துக் கொண்டாள். இனித் திரும்பிப் பார்க்க வழியில்லை. அவர்களிடம் அன்பை எதிர்பார்ப்பதும் கல்லில் நார் உரித்த கதையே!
இராசாத்தி, மகனுடைய ஆடைகளை அயர்ன் பண்ணத் தொடங்கினாள். அவளுடைய மனதைப் படித்தாற் போல வானொலியில் பழம்பாடல் தொடர்ந்தது.

“மகனே நீ வந்தாய், மழலை சொல் தந்தாய், மாறாத செல்வமும் நீதானடா…
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணயும் ஏதுக்கம்மா…”
அந்த வைரவரிகள் இராசாத்தியின் இதய நரம்புகளைச் சுண்டி இழுத்தன.
“ஹா…என்ன தவறு செய்தேன், இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற?” என்று தன்னையே நொந்து கொண்டாலும், சற்று நேரத்தில் அந்தக் கழிவிரக்க உணர்வும் வானொலியிலிருந்து கசிந்த பாடல்களில் கரைந்து போயின. விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.
ஒரு வாரமாக சங்கீதா கல்லூரியிலிருந்து தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். கணவரும் கண்டுகொள்ளவில்லை. சனிக்கிழமை காலையில் அவள் கல்லூரிக்குப் போகிறேன் என்று புறப்பட்டபோது, மனம் தாளாமல் இராசாத்தி கேட்டேவிட்டாள்.

“சங்கீதா, இன்றைக்கு உனக்கு விடுமுறை இல்லையா? எங்கே புறப்பட்டு விட்டாய்?”
தாயின் கேள்வி சங்கீதாவை மட்டுமல்ல, அன்பரசனையும் கலியாணியையும் கூட திரும்பிப் பார்க்கவைத்தது.
சண்டைக்கோழிபோல சிலிர்த்துக் கொண்டு நின்றாள் சங்கீதா. “நான் எங்கே போகிறேன் என்று உனக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. கல்லூரியைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? போய் அந்தக் கோணல் மரத்துக்கிட்ட கேட்டுக்கோ!”

சங்கீதா பேசத்தொடங்கியதும் அன்பரசனும் மாமியாரும் உடன் சேர்ந்து கொண்டனர். அவர்களுடைய கூச்சலையும் மீறிக்கொண்டு குமரனின் குரல் ஓங்கி ஒலித்தது.
“அம்மா, போதும் நிறுத்துங்க! சங்கீதா! உன்னுடைய தாயின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவள் நீ! அவள் உன் தாய் என்பதை மறந்து விடாதே!” என்று அவருடைய குரல் ஓங்கி ஒலித்ததும், கல்யாணியும் அன்பரசனும் வாயடைத்துப் போயினர்.
இராசாத்திக்கு மிகவும் அவமானமாக இருந்தது. பொங்கிவந்த அழுகையை மறைத்துக் கொண்டு புழக்கடைப்பக்கம் வந்தாள். உடல் தள்ளாடியது.
கோணல் அத்திமரம் அவளை ‘வா மகளே, வா!’ என்று அழைத்தது. ஓடிப்போய் அதன்மீது சாய்ந்து படுத்தாள். அழுகையினால் உடல் குலுங்கியது. அத்திமர இலைகளில் சில அவள்மீது விழுந்தன.
‘அழாதே மகளே!’ என்று ஆறுதல் கூறுவதைப்போல உணர்ந்தாள். மேலும் அழுதாள். இத்தனை வருடங்களாக ஏற்படாத துயரம் இன்று இதயம் முழுவதும் பரவி, அவளை பலவீனப்படுத்தியது. ஏன்? எத்தனையோ முறை எல்லருமே தன்னை அவமானப்படுத்தியபோது வராத துயரம், இப்போது மட்டும் ஏன் வந்தது? அப்படியானால் இத்தனைக் காலமும் என் இதயம் இவர்களுடைய அன்புக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததா? இராசாத்தியால் மேலும் சிந்திக்க முடியவில்ல. இந்தக் குடும்பத்தினரின் உதாசீனம் என்னைப் பாதிக்கவில்ல என்று இத்தனைக் காலமும் நான் என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தேனா?
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பெண் எழுத்தாளரின் பேட்டி இப்போது நினைவில் வந்து ஊடாடியது.
“மாமியாரின் கொடுமையும், கணவரின் உதாசீனமும் தான் இரண்டு நாவல்களை எழுத எனக்குத் துணிவையும் ஆற்றலையும் தந்தது!” என்று தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மைதான். இந்தக் குடும்பத்தின் உதாசீனம்தானே என்னை எழுதவே தூண்டியது! அப்படியிருக்க, இவர்களுக்கு நான் ஏன் மரியாதை தரவேண்டும்?
வெகுநேரம் அப்படியே படுத்திருந்தவளை வானொலி உசுப்பியது. அதில் ஒலித்த அறிவிப்பும் அவளைத் துள்ளியெழ வைத்தது. உடனே உற்சாகமும் பீறிட்டு எழுந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டபம் வருகையாளர்களால் கலகலத்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் ஒவ்வொன்றாக நிரம்பிக் கொண்டிருந்தன. இன்னும் சில
நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கிவிடும். நீலவண்ணப் பட்டுச் சேலையில் பட்டாம்பூச்சி போலத் தன் தோழிகளோடு அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த தன் பேத்தியைக் கண்கொட்டாமல் பார்த்த கல்யாணி, அருகில் அமர்ந்திருந்த தன் மகனிடம், “பார்த்தாயா உன் மகளை? என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது” என்று பூரித்தாள்.

குமரனும் அதே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஆனந்தமாக அனுபவித்தார். அதேவேளையில் மண்டபத்தின் உள்வாசலில் அன்பரசன் தன் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.
அவன் முகத்தில்தான் எவ்வளவு கம்பீரம்? கம்பீரமா, ஆணவமா? மகன் நல்ல பணி யில் அமர்ந்து விட்டால், அவனுக்கு மண்முடித்துவிட வேண்டும். மகள் இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பை முடித்து விடுவாள். அவளையும் ஒரு சிறப்பான பணியில் அமர்த்தி, பொறுப்பானதும் மேன்மையானதுமான வேலையில் இருத்திவிட வேண்டும். அப்புறம் என் கடமைகள் யாவும் முடிந்து விடும்….. பிறகு…’

குமரன் பல்வேறு சிந்தனைகளோடு தன் அருகில் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்த்தார். கரைகளில் சிவப்பு ரோஜாக்களைக் கொட்டியிருந்த வெண்ணிறப் பட்டுப் புடவையில் தேவதைபோல வீற்றிருந்தாள் இராசாத்தி. இயற்கையிலேயே நீண்ட, அடர்த்தியான கூந்தல் இடுப்புவரை நீண்டிருக்கும். இன்று அந்தக் கூந்தலை மிக நேர்த்தியான கொண்டையாக முடித்து, இரட்டை ரோஜாக்களை வலப்பக்கமாகச் சூடியிருந்தாள். முகத்தில் அளவான மேல்பூச்சு. கர்மயோகி போல அமர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் கண்பதித்திருந்தாள். முகத்தில் எவ்விதமான சலனமுமில்லை.

“அப்பா, இன்று பல்கலைக்கத்தில் ஒரு முக்கியமான விழா இருக்கின்றது. மாணவர்களான நாங்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும். நீங்களும் வாங்க!” என்ற சங்கீதாவின் இடைவிடாத நச்சரிப்புக்காகத்தான் இங்கு குமரனும் கல்யாணியும் வந்திருந்தனர். போனால் போகிறதென்று இராசாத்தியையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.

தேசியகீதம், தமிழ்வாழ்த்து, பரதநாட்டியம், வரவேற்புரை, தலைமையுரை, தகவல்துறை அமைச்சரின் சிறப்புரை என்று எதுவுமே குமரனையும் கல்யாணியையும் கவரவில்லை. சங்கீதா மேடையில் தோன்றப் போகின்றாள் என்ற எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே மனதில் தேங்கி நின்றது. காலந்தாழ்த்தி வீடு திரும்பியதற்கான காரணம், இன்றைய விழாவில் கலைநிகழ்ச்சியைப் படைக்கவிருப்பதாகக் கூறியிருந்தாள். எனவே, ஆவல் மேலிடக் காத்திருந்தபோது, மின்னல் எஃப்,எம்.மின் தேசிய அளவிலான நாவல் எழுதும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மூன்றாவது பரிசு, இரண்டாவது பரிசு என்று அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்களின் புகைப்படங்கள் காணொலித்திரையில் தெரிந்தன. அவர்களுக்குரிய மாலை, மரியாதை முதலியன நடந்தேறின.

தொடர்ந்து, “முதல் பரிசைத் தட்டிச் செல்லும் நாவல் ஆசிரியை திருமதி செந்தாமரை” என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேடையின் காணொலித்திரையில் தோன்றிய புகைப்படத்தைப் பார்த்து கல்யாணி திடுக்கிட்டாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேடையில் இராசாத்தி வந்து நின்றாள்! அவள் எப்போது மேடைக்குச் சென்றாள்?

குமரனும் அன்பரசனும் விழிகளை இமைக்கவும் மறந்தனர். அன்பரசனின் நண்பர்கள் ஆர்ப்பரித்து கரவோசை எழுப்பினர்!

சங்கீதாவின் கலகல சிரிப்பு நின்றது. இதயம் துடிக்க மறந்தது.
‘பையித்தியம்’ என்று எள்ளி நகையாடிய தன் தாயா புகழ்பெற்ற எழுத்தாளர் செந்தாமரை?’ மனம் குன்றியவளாகத் தாயைப் பார்த்தாள். இராசாத்திக்குப் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. நாட்டின் தகவல்துறை அமைச்சரின் கரங்களால் நினைவுப்பரிசும் ஊக்குவிப்புத் தொகை பத்தாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.

“நீங்கள் எழுதுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர்களைப்பற்றிக் கூறுங்கள்”. விழா நெறியாளர் ஆவலுடன் இராசாத்தியைப் பார்த்தார்.
மேடையிலிருந்து முன்னூற்றி அறுபது பாகையில் இராசாத்தியின் பார்வை பொதுமக்களை அளந்தது.
“நான் எழுதுவதற்குக் காரணம் என்னுடைய இனிய தோழி, வானொலிப்பெட்டியும், எழுத்துலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்திய மின்னல் எஃப்.எம்.பண்பலையும்தான். எனக்கு ஒவ்வொரு நாளும் உற்சாகம் தந்து எழுதத் தூண்டியவர்கள் என்னுடைய குடும்பத்தினர்! அவர்களுக்கு இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இராசாத்தி கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் முகத்தில் அறைந்தாற் போலிருந்தது குடும்பத்தினருக்கு. குறிப்பாக சங்கீதாவுக்கு. தாயைப் பார்த்தாள். ‘பையித்தியம்’ என்று ஒதுக்கப்பட்ட தாய், சதா அடுப்பங்கரையே கதி, வீட்டின் புழக்கடைப்பக்கமே உலகம் என்று அடைந்து கிடந்தவள், இன்று அண்ணாந்து பார்த்தாலும் எட்ட முடியாத இமயமாக உயர்ந்து நிற்கின்றாள்! அவள் எங்கே? அந்தத் தாயின் உன்னதத்தையும் சிறப்பையும் புரிந்து கொள்ள கடுகளவுகூட முயற்சி செய்யாத தான் எங்கே?
உடல் கூனிக்குறுக, நெஞ்சு நடுநடுங்க, விழிநீர் பார்வையை மறைக்க, தாயை நோக்கிக் கரங்களைக் குவித்தாள். இராசாத்தி பெற்றமகள்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:45 am

காலணி அலமாரி
-------------------
யூசுப் ராவுத்தர் ரஜித்
-------------------
அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. உங்களிடம் இருப்பது எத்தனை காலணிகள்? இந்த ஆண்டு நீங்கள் தொலைத்த காலணிகள் எத்தனை? உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை காலணிகள்? ஒன்றும் அவசரமில்லை. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். யோசிக்கும்போதே இந்தப் புள்ளிவிபரம் உண்மைதான் என்பது உங்களுக்குப் புரியும். 100வெள்ளிக் காலணி கூட அன்றாடப் பொருளாகிவிட்டது. அதை வெளியே எப்படி வைப்பது?

7 ஆண்டுகளுக்கு முன் ஒரு மரச்சாமான்களுக்கான பொருட்காட்சியில் ஒரு காலணி அலமாரி வாங்கினேன். 6 அடிக் கட்டிலைக் கூட நகர்த்திவிடலாம். இந்தக் காலணி அலமாரியை தனியாக ஒருவர் நகர்த்திவிடமுடியாது. அடிப்பக்கம் அப்படியே பச்சென்று 5 அடிக்கு இரண்டடி அளவில் தரையோடு தரையாக ஒட்டிக் கிடக்கிறது. மாதம் ஒரு முறை இதை நகர்த்தி ஈரத்தூரிகையால் சுத்தம் செய்வது என் வாடிக்கை. ஒருவர் அதை ஒருக்களித்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அம்மாடியோவ்! எங்கிருநதுதான் வந்ததோ இத்னை மூக்குப்பொடித் தூசும் பஞ்சுத்தூசும். இதை சுத்தம் செய்யுமுன் என் மகனை வெளியே போகச் சொல்லவேண்டும். அவனுக்கு தூசு ஒவ்வாமை. தும்ம ஆரம்பித்தால் சர்வசாதாரணமாக செஞ்சுரி போட்டுவிடுவான்.
 
நானும் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொள்வேன். பிறகு எதிர்ப்பக்கத்தை ஒருக்களித்து விட்டுப்போன மூக்குப் பொடியையும் அகற்ற வேண்டும். ஒரு வழியாக சுத்தம் செய்துவிட்டால் உங்கள் கணக்கில் யாரோ 1000 வெள்ளியை மாற்றிவிட்டதுபோல ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சியிலேயே அந்த நாள் இனிக்கும். பணிஓய்வு என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா? என்று அந்த அலமாரி கேட்பதுபோல் இருக்கிறது. அதிலுள்ள இழுவறைகள் சிக்குகிறது. சிலசமயம் இழுக்கவே வராது. அதில்தான் 35 காலுரைகளை வைக்கவேண்டும். கதவுகளை நிரந்தரமாக மூடவே முடியாது. திறந்துதான் கிடக்கும். அதை சிரமப்பட்டு மூடினாலும் இழுவறைகளை சுத்தமாக இழுக்கவே முடியாது. உள்ளே உள்ள தட்டுக்கள் அலைகள் போலாகி காலணி வைக்கும்போதெல்லாம் அதை ஊஞ்சலாட்டிவிட்டுத்தான் ஓய்கிறது. சரி. அந்த அலமாரிக்கு ஓய்வு கொடுத்துத்தான் ஆகவேண்டும். வெளியே போட்டுவிடுவோம். யாராவது எடுத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் ஏழாண்டுகளாக ஒட்டி உறவாடிய ஒரு பொருளை அனாதையாக வெளியே தூக்கிப் போடுவதில் உள்ள வலி கொடுமையானது. ஏழாண்டுகளாக வீட்டில் இருந்து பட்டுப்போய்விட்ட ஒரு கருவேப்பிலைத் தொட்டியை மின்தூக்கியின் கீழ்தளத்தில் வைத்துவிட்டு அந்த நாள் முழுதும் யாருக்குமே தெரியாமல் அழுதிருக்கிறேன். இந்த வலிகளெல்லாம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தாகிவிட்டது.
‘பாக்கியா ஃபர்னிச்சர்’ என்று ஒரு நிறுவனம். புதிய ஒரு அலமாரியை வாங்க அங்கு சென்றேன். நான்காம் மாடியில் படுக்கைப் பிரிவுக்கு அருகாமையில் என்றார்கள். யானைத்தந்த நிறத்தில் ஒரு அலமாரி இரண்டு கால்களில் நிற்கிறது. முதுகுப் பகுதியை சுவற்றோடு சேர்த்து ‘போல்ட்’ போட வேண்டுமாம். மூன்று அறைகள். திறந்தால் 120 டிகிரி சுழன்று ‘எனக்குள் எதையாவது வை’ என்று கெஞ்சுகிறது. பிறகு மூடிவிட்டால் பொத்திக்கொண்டு சிரிக்கிறது. என்ன அருமையான தொழில்நுட்ப வளர்ச்சி. விலை 300 வெள்ளியாம். சரி. 

வாங்கிவிடவேண்டியதுதான். எங்கு தேடியும் விற்பனையாளர்களைக் காணமுடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு ஒரு சீருடை விற்பனையாளர் கண்ணில் பட்டார். இந்தக் காலணி அலமாரி வேண்டும். பில் தர முடியுமா? என்றேன். ‘அந்த அலமாரியின் மேற்பகுதியில் தகவல் பதிவுகள் இருக்கும். அதை அப்படியே புகைப்படம் எடுத்து வாருங்கள். நான் அங்கே வரமுடியாது.’ என்றார். மீண்டும் வந்து புகைப்படம் எடுத்துச் சென்றேன். பதிவுகளை கணினியில் தட்டினார். ஏ4 அளவில் ஒரு பட்டியல் பொதக்கென்று விழுந்தது. எடுத்துக்கொண்டு முதல்மாடியில் இருக்கும் காசாளரிடம் சென்றேன். காசைச் செலுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி பொருத்தித் தரும் பிரிவுக்குச் சென்றேன். தகவல்களை தட்டினார். ‘109 வெள்ளி ஆகும். அதைச் செலுத்துங்கள். இன்று தேதி 11. 21ஆம் தேதி மாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் வந்து பொருத்தித் தருவார்கள். வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் எங்கள் ஆட்கள் உங்களுக்கு தொலைபேசுவார்கள்.’ என்றார். ஏழாண்டுகள் பொறுத்தாகிவிட்டது. இன்னும் 10 நாட்கள் தானே. அந்த 21ஆம் தேதி காலை எனக்கு பல்மருத்துவரோடு சந்திப்பு இருக்கிறது. பல்லில் ஆணி அடிப்பது போன்ற வலி ஒரு மாதமாக. ஆனாலும் பரவாயில்லை. இவர் மாலையில்தானே வருகிறார். அதற்குள் பல்லைப் பிடுங்கிவிடலாம்.. ‘சரி’ என்றேன்.

21ஆம் தேதி காலை 10 மணி. பல் மருத்துவமனை. வரிசை எண் எடுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். தொலைபேசி அழைத்தது. எடுத்தேன். பாக்யாவிலிருந்து அழைக்கிறார்கள். ‘காலை 11 மணிக்கு எங்கள் ஆட்கள் வருகிறார்கள். வீட்டில்தானே இருக்கிறீர்கள்?’ என்றார். என்ன செய்வது? நான்தான் போகவேண்டும். அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘மாலை என்றுதானே சொன்னீர்கள். நான் வெளியே இருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லையே’ என்றேன். ‘ஓ. அப்படியானால் அடுத்த வாரம்தான் வருவார்கள்.’ என்றார். இன்னும் ஒரு வாரமா. பல் மருத்துவரைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ‘நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். வரச் சொல்லுங்கள்.’ என்றேன்.

நான் வீடுவந்து அடுத்த 20 நிமிடங்களில் அவர்கள் வந்துவிட்டார்கள். சப்பையான செவ்வக அட்டைப் பெட்டிகள் சில மட்டும் இருந்தன. சரசரவென்று கிழித்தார்கள். பிரித்தார்கள். கொத்து மறை ஆணிகளும் சில மரத்துண்டுகளும் வந்து விழுந்தன. பின் பலகையைப் பொருத்த சுவற்றில் ‘போல்ட்’ துளை போடப்பட்டது. 20 நிமிடத்தில் அந்த யானைத்தந்த அலமாரி சுவற்றில் நச்சென்று பொருத்தப்பட்டு ‘என்ன சேதி? சௌக்கியமா?’ என்றது. ‘போய்வருகிறோம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டு அந்த ஆட்கள் வெளியேறினார்கள். அந்த ‘பாஸ்’ என்ற வார்த்தை என் தலையில் பனிக்கட்டிகளை இறக்கியது. அந்த அலமாரியின் மேல் அறையைத் திறந்தேன். 120 டிகிரி சுழன்று திறந்து ‘ம். சீக்கிரம் உன் காலணியை வை’ என்றது. ஒரு காலணியை வைத்தேன். மூடினேன். பிறகு மீண்டும் திறந்தேன். ஒரு மறை ஆணி கழன்று உள்ளேயே விழுந்து இடமும் வலமுமாய் சுற்றியது. ‘என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை’. அந்த ஆணியை எடுத்து அந்தத் துளையில் பொருத்திப் பார்த்தேன். அது சாவகாசமாய் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டது. வெளியே இழுத்தேன் வந்துவிட்டது. திருப்புளியே தேவையில்லாமல் அந்தத் துளை நிரந்தரத் துவாரமாய் ஆணிககு பிடிமானமே இல்லாமல் போய்விட்டது. பாக்யாவை அழைத்தேன். இந்த விபரத்தை எப்படிச் சொல்வது? நான் இப்படிச் சொன்னேன். ‘உங்கள் ஆட்கள் சரியாகப் பொருத்தவில்லை. சில ஆணிகள் கழன்று விழுந்துவிட்டன’ என்று . ‘சரி. இன்றைக்கு தேதி 21. 23ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள் வருவார்கள்’ என்றார். அன்று 7 மணிக்கு ஒரு கூட்டம் நான் அவசியம் போக வேண்டும். 7 மணிக்குள் அவர்கள் முடித்துவிட்டாலும் நாம் கூட்டத்துக்குப் போய்விடலாம். ‘சரி’ என்றேன்.

23ஆம் தேதி. 7 மணி ஆகியும் ஒரு அழைப்பும் இல்லை. தொலைபேசி அழைக்கவே இல்லை. தொலைபேசியை திறந்து திறந்து பைத்தியம் போல் பார்க்கிறேன். அவர்கள் வருவதுபோல் தெரியவில்லை. நான் கூட்டத்துக்கு கிளம்பினேன். பாதி வழியில் அழைப்பு. ‘நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 10 நிமிடத்தில் அங்கு இருப்போம்.’ என்றார்கள். உடனே வீட்டுக்குத் திரும்பினேன். கூட்டத்துக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. தலைவரிடம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். 10 நிமிடத்தில் வந்துவிட்டார்கள். அந்த ஆணியைப் பொருத்த மின்னியக்க திருப்புளியை எடுத்தார். ‘அது தேவையில்லை. அது தானாகவே உள்ளே போய் வெளியே வருகிறது’ என்றேன். ‘அட! ஆமாம். இந்த உருப்படி வீணாகிவிட்டது. நான் வீட்டுக்கு அனுப்பும் பிரிவிலும் வாடிக்கையாளர் பிரிவிலும் தெரிவித்து விடுகிறேன். இன்னும் சில நாளில் இதேபோல் வெறொரு காலணி அலமாரியுடன் வருகிறோம்.’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் காலணி அலமாரி கனவுதான். பெரிய அலமாரிகள் நிற்கிறது. ஆடுகிறது. விழுந்து உடைகிறது. மீண்டும் எழுகிறது. ஒரு காலணி வைத்தவுடன் மீண்டும் விழுகிறது. சே! ஒரு செருப்பு அலமாரி என்ன பாடுபடுத்துகிறது. ஒரு வழியாக விடிந்தது. அத்தனை பட்டியல்களையும் அள்ளிக்கொண்டு பாக்யாவுக்கு ஓடினேன். தகவலைச் சொன்னேன். ‘எனக்கு இந்த அலமாரியே வேண்டாம். 100 கிராம் எடையுள்ள காலணிகளுக்குத்தான் இது சரியாக வரும். என் மகனின் காலணிகள் ஒவ்வொன்றும் 1 கிலோ’ என்றேன். ‘சரி. அமருங்கள். பெரிய அதிகாரியை கேட்டுவிட்டு வருகிறேன். பொருளை மாற்ற அவர்தான் அனுமதிக்க வேண்டும்’ என்றார். அமர்ந்தேன். கனவுகளால் கிழிக்கப்பட்டு தூக்கம் இழந்ததால் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

 வந்து எழுப்பினார். ‘அதிகாரி ஒப்புக் கொண்டுவிட்டார். நீங்கள் வெறொரு பொருளைப் பாருங்கள். இந்த அட்டையைக் காண்பியுங்கள். நீங்கள் செலுத்திய வெள்ளியைக் கழித்துக் கொள்வார்கள்.’ என்றார். அதே நான்காம் மாடி. அநதக் கட்டில் பிரிவுக்கு விரைந்தேன். அந்த யானைத்தந்த அலமாரி அதே இடத்தில் இருந்தது. பார்க்கும்போதே குமட்டியது. மூன்று அறைகள் நேராக இழுத்து மூடுவதுபோல் ஒரு சாதாரண அலமாரி இருந்தது. போல்ட் சமாச்சாரமெல்லாம் தேவையில்லை. ஒவவொரு அறையும் 3 அடிக்கு 2 அடி என்று விசாலமாக இருந்தது. அது துணிமணிகள் வைக்கும் அலமாரியாம். காலணி வைத்தாலென்ன? காலணி அலமாரி என்று இருப்பது எல்லாமே சுழன்று வந்து உயிரை வாங்குகிறது. அதற்கு இது தேவலாமே. சரி. வாங்கினேன். அனுப்பும் பிரிவுக்கு வந்தேன். ‘யோசித்துக் கொள்ளுங்கள். வெறு மாற்றமில்லையே?’ என்றார். ‘மாற்றமில்லை. இதைப் பொருத்துவது சிரமமா? இல்லையென்றால் நானே எடுத்துக்கொண்டு போய்விடுகிறேனே.’ என்றேன். ‘தாராளமாக.ஒரு தொடக்கப்பள்ளி மாணவன் கூட பொருத்திவிடுவான்’ என்றார். இனிமேல் நாம் பொருத்திக் கேட்கக் கூடாது என்பதற்காகவே அப்படிச் சொன்னாரோ? ஆனாலும் அன்று பல் மருத்துவரைப் பார்க்கமுடியாமல் போனது இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்க நமக்கென்ன தலைவிதியா? அவரிடம் பொருத்தித் தரக் கேட்பதும் அவமானம்தான்.

எடுத்துக்கொண்டு வீடு வந்தேன். என் ஆயுதப் பெட்டியை எடுத்து விரித்து வைத்தேன். அட்டைப் பெட்டிகளை மிக எச்சரிக்கையுடன் பிரித்தேன். ஏகப்பட்ட பலகைகள் இரும்புச் சட்டங்கள், மறை ஆணிகள், மரத்துண்டுகள். ‘அட சண்டாளா! இதையா தொடக்கப்பள்ளி மாணவன் பொருத்தமுடியும்’ என்றான். அதில் ஒரு விளக்கப் புத்தகமும் இருந்தது. ஏதோ தேர்வு எழுதுவதுபோல வரிவிடாமல் படித்தேன். ஒவ்வொரு மறை ஆணியாய் பார்த்துப் பார்த்துப் பொருத்தினேன். மின்திருப்புளி இல்லை. கைத்திருப்புளிதான். நல்ல வேளை. போல்ட் இல்லை.

எல்லாம் ஒருவழியாக முடிந்த பின்னும் 10 மறை ஆணிகள், சில மரத்துண்டுகள் கிடக்கின்றன். இது என்ன உபரியா? அலமாரியை லேசாக அசைத்துப் பார்த்தேன். கால்களை மட்டும் ஊன்றிக்கொண்டு பக்கவாட்டிலும் முன்பின்னும் ஆடுகிறது. ‘கொஞ்சம் கூடத் தள்ளினாலும் விழுந்துவிடுவேன்’ என்று எச்சரித்தது. பாக்யாவை அழைத்தேன். ‘பொருளை நாங்கள் அனுப்பினால்தான் ஆளனுப்ப முடியும். நீஙகளே எடுத்துச் சென்றதால் உங்களுக்குத் தெரிந்த தச்சரை வைத்து சரிசெய்து கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு புரிந்துவிட்டது. இது திட்டமிட்ட சதி. இந்தப் பிரச்சினை எப்படித்தான் முடியப்போகிறதோ?

எனக்குத் தெரிந்த ஒரு தச்சர் இருக்கிறார். அவரிடம் சேதியைச் சொன்னேன். ‘அவர்களிடமே சொன்னால் அவர்களே ஆளனுப்புவார்களே’ என்று யாருக்குமே தெரியாத யோசனையைச் சொன்னார். நான் கொதித்தேன். ‘அவர்களை அழைக்க முடியுமென்றால் உன்னை ஏண்டா அழைக்கிறேன்’ என்ற வார்த்தைகள் உதடுவரை வந்து ஓசைப்படாமல் வெளியேறிவிட்டது. கோபித்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. சிரித்தபடியே அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். என் வீட்டை நீங்கள் புதுப்பபித்துக் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது’ என்று பனிக்கட்டிகளை அவர் தலையில் இறக்கினேன். ‘ ஹி ஹி ஹி… எல்லாம் சரிதான். உங்கள் இடத்துக்கு வந்தால் வண்டியை நிறுத்துவது பெரும் பிரச்சினை. நான் வண்டி இல்லாமல் வேறு வேலையாக அந்தப் பக்கம் வரும்போது தெரிவிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருங்கள் என்றார். அந்தப் பல் மருத்துவர் ஏனோ ஞாபகத்துக்கு வந்தார். என்ன செய்வது? ‘சரி’ என்றேன். 

அவருடைய தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த அலமாரியில் யாரும் கை வைக்க வேண்டாம் என்று வீட்டில் எல்லாரையும் எச்சரித்தேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அந்தத் தச்சர் அழைத்தார். எழுதிக்கொள்ளுங்கள் என்று முகவரியைத் தந்தார். இவர் முகவரி நமக்கெதற்கு? பிறகு சொன்னார். ‘அந்த அலமாரியை என் வீட்டுக்குக் கொண்டு வத்து விடுங்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது முடித்து வைக்கிறேன். பிறகு நீங்கள் தூக்கிக்கொண்டு செல்லலாம் என்றார். இதைச் சொல்லவா இவருக்கு மூன்று நாள் தேவைப்பட்டது. எல்லாரும் பேசிவைத்துக் கொண்டே செய்வது போல இருக்கிறது. நான் ஒரு தப்பும் செய்யவில்லையே. ஒரு காலணி அலமாரி வாங்க நினைத்தது தவறா? அப்படியே மீண்டும் பிரித்து ஒரு வாகனத்தை தேடுவதா அல்லது வேறு ஒரு தச்சரைப் பார்ப்பதா?

அந்த அலமாரி இன்னும் என் வீட்டில் அப்படியேதான் இருக்கிறது. யாரும் பக்கத்தில் போய்விடாதபடி ஒரு சிவப்புக் கயிறும் கட்டிவைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் சந்திப்பவர்களிடம் நான் முதலில் கேட்பது ‘உங்களுக்கு தச்சர் யாரையாவது தெரியுமா?’ என்பதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அது எப்போது என்பதுதான் பிரச்சினையே.

நன்றி ;திண்ணை 
யூசுப் ராவுத்தர் ரஜித்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:49 am

கேள்விகளால் ஆனது  
-----------------
கே.எஸ்.சுதாகர்
--------------------

சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை – திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்?
அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு தடவை இங்கே வந்திருக்கின்றேன். தனிய வருவது இதுதான் முதல் தடவை. கதவைத் தட்டிவிட்டு, சத்தம் ஒன்றும் உள்ளேயிருந்து வராததால் கதவை மெல்ல நீக்கிப் பார்த்தேன். ரெலிவிஷன் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் தலையைக் குப்புறக் கவிழ்ந்த வண்ணம் நேசம் இருந்தார். சாப்பாடு அப்படியே இருந்தது.

“அம்மா…” மெதுவாகக் கூப்பிட்டேன். நான் எப்போதும் அவரை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு, “சிவம் வரவில்லையா?” என்றார்.
“நான் வேலை விஷயமா இந்தப் பக்கம் வந்தனான். வந்தவிடத்திலை உங்களை ஒருக்கா பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்.”
அவரின் முகம் திடீரென்று மலர்ந்தது. மெளனமாக என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தேன்.
“அம்மா எப்படி இருக்கிறியள்?”
“ஏன் எனக்கு என்ன குறை? எனக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொல்லியிருப்பானே!” சொல்லும்போதே அவரின் நா தழுதழுத்தது. அந்த உரையாடலைத் திசை திருப்ப நினைத்தேன்.
“அம்மா… இப்ப எங்கடை ஊர்ப்பக்கம் போய்ப் பார்க்க ஆமிக்காரன்கள் விட்டிருக்கின்றான்கள். நான் ஒருக்கா இலங்கைக்குப் போய் எனது வீடு வளவுகளைப் பார்த்து வரலாம் எண்டு இருக்கிறன்.”
“தம்பி  ராஜன்… எனக்கொரு உதவி செய்யவேணும்” திடீரென்று எனது வலது கையைப் பிடித்து இடைமறித்தார் நேசம்.
“சொல்லுங்கோ அம்மா… செய்யிறன்”
“எனக்கொரு மகன் கோண்டாவிலிலை இருக்கிறான். என்ரை மூத்த மகன்…” சொல்லும்போதே அவரின் கண்கள் பனித்தன.

இதைத்தான் அம்மாவுக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொன்னானோ?
“என்னம்மா சொல்லுறியள்? உங்களுக்கு நியூசிலாந்திலை ஒரு மகளும், சுவிசிலை ஒரு மகனும், மற்றது இஞ்சை சிவமும்… மொத்தமாக மூண்டு பிள்ளையள்தானே!”
“அதோடை என்ரை மூத்த மகன் தேவராஜன். இலங்கையிலை கோண்டாவிலிலை இருக்கிறான். அவனுக்கு கொஞ்சம் புத்தி சுகமில்லை. அவனை நீ போய்ப் பாத்து வரவேணும்.”
“கட்டாயம்… கட்டாயம் பாத்து வருவன் அம்மா”

எனக்கு அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது. விடைபெறும்போது எனது கையிற்குள் ஒரு என்வலப்பைத் திணித்தார் நேசம். அதற்குள் தேவராஜன் கோண்டாவிலில் இருக்கும் விலாசமும், அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிவலிங்கம் என்பவருக்கு ஒரு கடிதமும், எண்ணூறு அவுஸ்திரேலிய டொலர்களும் இருந்தன. நான் திகைத்துப் போனான்.
“உலகத்தில நல்லவர்கள் எண்டு நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற எல்லாருமே நல்லவர்கள்தானா?” என்றொரு கேள்வியை திடீரென்று என்னிடம் கேட்டார்.
“உங்கடை மகனுக்கு ஏன் அப்படி வந்தது?”
அவர் தன் இரண்டு கரங்களையும் வான் நோக்கி உயர்த்தி, பழியை ஆண்டவன்மீது போட்டார். மனதுள் வேறு ஏதோ முக்கிய சமாச்சாரம் சொல்வது போல அவர் முகம் பிரதிபலித்தது. ஏதோ பெரிய கெடுதல் பற்றி நினைக்கிறார் போல என்று என் மனம் கூறியது.
“அம்மா… நான் போக இரண்டொரு கிழமைகள் எடுக்கும். வர ஒரு மாதம் செல்லும். பரவாயில்லைத்தானே உங்களுக்கு.”

“உனக்கு வசதிப்படேக்கை அவனைப் போய்ப் பார்த்து வா. அவன் பாவம். இவங்கள் ஒருத்தருமே அவனைப்பற்றி ஒண்டுமே சொல்லுறான்கள் இல்லை. அவனுக்குத் தாற காசையும், பிள்ளையளின்ரை படிப்புச் செலவு அது இது எண்டு இப்ப குறைச்சுப் போட்டான் சிவம். நியூசிலாந்திலை இருக்கிறவள் புருஷனுக்குச் சுகமில்லை எண்டு சொல்லி ஒண்டும் தாறதில்லை. சுவிசுலை இருக்கிறவன்தான் கொஞ்சம் தாறவன். அவனும் பிள்ளை குட்டியள் இல்லாததாலை தந்து கொண்டிருக்கிறான்.”

நான் சற்று நேரத்தில் அங்கிருந்து கிழம்பினேன். கதவைத் திறந்து வெளியேறும்போது, ”அவனைப் போய் பாத்துவாற விஷயத்தை ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதை. அதுதான் முக்கியம். அது சரி இப்ப போறவைக்கு அங்கே பிரச்சினை இல்லையே?” என்றார் நேசம்.
”இங்கே இருக்கிற ஆக்கள் காட்டிக் கொடுத்தால்… ஓ..” சொல்லிக் கொண்டேன்.
காரிற்குள் ஏறி சீற்றைப் பதித்துவிட்டு சரிந்து கொண்டேன். தலை வெடித்துவிடும் போல வலித்தது. ஒருவேளை நேசம் சொல்வது உண்மையாக இருக்குமோ?

நானும் சிவமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பொறியியல் படித்தோம். அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் சிவம் ’தூங்காபி’யில், நான் கிராவீனில். இரண்டும் அருகருகே உள்ள கிராமங்கள்தான். சிவத்திற்கு முதல் குழந்தை பிறந்த போதுதான் நேசம் இலங்கையில் இருந்து இங்கு வந்தார். சிவம் அவரின் கடைசிப்பிள்ளை. எங்களுக்கும் அதே காலகட்டத்தில்தான் குழந்தை பிறந்தது. இருவருக்கும் முதலில் ஆண் குழந்தைகள். நேசம் என்னையும் தனது பிள்ளையப் போலவே கருதினார். அவரின் சமையல் பக்குவம் சொல்லில் அடக்கிவிடமுடியாத சுவை நிறைந்தது. மருமகளுக்கு பத்தியம் வைக்கும்போதெல்லாம் என்னுடைய மனைவி மதிவதனிக்குமாக சேர்த்தே வைப்பார். மதிவதனிக்கும் அவர்மேல் ரொம்ப பாசம். 

இரண்டு குடும்பங்களும் ஒரே குடும்பம் போலத்தான் பழகினோம். வேறுபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வோம். பல்கலைக்கழகத்தில் இருந்ததைவிட அப்போதுதான் எங்கள் இருவரின் நட்பு மேலும் இறுக்கமடைந்தது.

நேசத்திற்கு எண்பது வயதாகும்போது அவரின் பிள்ளைகள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் ஒன்றுகூடினார்கள். அவரின் பிறந்ததினத்தை மிக எளிமையாகக் கொண்டாடினார்கள். ஒருவரையும் பிறந்ததினத்திற்குக் கூப்பிடவில்லை. எங்களைக் கூப்பிடாதது எனக்கு மிகவும் கவலை தந்தது. அதன் பிற்பாடுதான் சிவம் தனது தாயாரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டான். அவரை அங்கே கொண்டுபோய் விட்டதற்கான காரணங்களை சிவம் ஒவ்வொன்றாக அடுக்கினான்.

|எங்களைவிட அவர்கள்தான் அம்மாவை நன்றாகப் பார்ப்பார்கள் – பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், அம்மாவினால் பிள்ளைகளின் கல்வி தடைப்படுகின்றது -அம்மாவிற்கு மாறாட்டம் வந்துவிட்டது |
சிவத்தை, ‘நசுக்கிடாமல் காரியம் பார்ப்பவன்’ என்று சிலர் சொல்லுவார்கள். எல்லாருக்கும் எல்லாரையும் பிடிப்பதில்லைத்தானே! அவன் கதைக்கத் தொடங்கும்போது, முதலில் தனது முகத்தை பெரியதொரு அறிவாளி போல பாவனை செய்வான். பின் குதிரை கனைப்பது போல பல்லைக் காட்டிச் சிரிப்பான். கதைக்கத் தொடங்கினால் ஊர்ப்பெண்கள் தோற்றுப் போவார்கள் என்று சொல்வார்கள். அடுத்தவரைப் பற்றிப் புதினம் அறிவதிலும், வம்பளப்பதிலும் ’நம்பர் வன்’. பாதத்திலிருந்து தலை வரை ஒரே பருமன். குதிரையின் கனைப்பு. இவை அவனின் அடையாளங்கள்.

வேலையால் வீட்டிற்கு வந்ததும், நடந்தவற்றை மதிவதனியிடம் சொன்னேன்.
”ஏற்கனவே பிள்ளையளின்ரை படிப்பு, வேலை, வீடு எண்டு போட்டி. இதிலை  மகனுக்கு 12ஆம் வகுப்பு றிசல்ட் சரியில்லை எண்டு இப்ப கொஞ்சநாளா மூஞ்சியை நீட்டிக் கொண்டு திரியுதுகள். இதுக்குள்ளை ஊருக்குப் போய் வளவுகளைத் துப்பரவாக்கி, வீட்டைத் திருத்தப் போறியள் எண்டு கேள்விபட்டா எப்பிடியிருக்கும்?” என்றாள் மதிவதனி.
”நான் எல்லாரோடையும் நல்ல மாதிரித்தான் பழகிக்கொண்டு வாறன். அவங்கள் மாறிட்டான்கள் எண்டதுக்காக நான் மாற முடியாது!” சொல்லிக்கொண்டே சிவத்துடன் கதைப்பதற்காக ரெலிபோனைத் தூக்கினேன்.
“தயவுசெய்து அம்மாவைப் போய்ப் பாத்ததை சொல்லிப் போடாதையுங்கோ” என்றாள் மதிவதனி.
இலங்கை போகவிருக்கும் விடயத்தை சொன்னபோது, அவன் கனைத்தான். பின்னர் சிரித்தான். இவன் என்ன பகைவனைப் பார்த்து வெஞ்சம் வைத்துச் சிரிப்பது போல சிரிக்கின்றான்.
“என்னடாப்பா பிறந்த நாட்டிலை போய்ச் சாகப்போறியே!”

“உனக்கு எப்பவும் நக்கல்தான்…”
“நான் ஏன் சொல்லுறேனெண்டால்… 2009 இலை உச்சக்கட்டப் போர் நடக்கேக்கை, இஞ்சை நீ கொடி பிடிச்சாய்… ஊர்வலம் போனாய்…”

“நீயும்தான் வந்தாய். ஊர்வலம் போனது, கொடி பிடிச்சது எண்டா புலம்பெயர்ந்த நாட்டிலை இருந்து எண்பது வீதமான ஆக்கள் இலங்கைக்குப் போகேலாது”  பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். இலங்கை போகும் நினைவுகளுடன் மூழ்கிப் போய்விட்டேன்.
இதுவெல்லாம் நடந்து இரண்டு வாரங்களில் இலங்கை போய்விட்டேன். மதிவதனியும் பிள்ளைகளும் வரவில்லை.
இருபத்தொரு வருடங்களின் பின்னர் நான் பிறந்து வளர்ந்த தெல்லிப்பழைக்கு வந்துள்ளேன். எங்குமே காடு. பாதை மூடிய பற்றைகள். ‘ஷெல்’ அடியினால் தகர்ந்த வீடுகள். வீட்டுக்குள்ளிருந்து விருட்ஷமாகி வானை முட்டும் மரங்கள். பாம்புப் புற்றுகள். வீடு வளவுகளைத் துப்பரவாக்கும் முயற்சி உடனே சாத்தியமில்லை என்பதால், அந்த வேலைகளின் மத்தியில் சிவத்தின் அண்ணாவைப் பார்த்துவர முடிவு செய்தேன்.
நேசம் கொடுத்த முகவரியை விசாரித்து, வீட்டை அடைய பகல் பதினொரு மணி ஆகிவிட்டது. பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு அமைந்திருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க, ஒல்லியாய் ஒட்டகம் போல இருந்த ஒரு மனிதர் வேட்டி சால்வையுடன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். தன்னை சிவலிங்கம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். கொண்டுவந்த கடிதத்தையும் காசையும் அவரிடம் கொடுத்தேன். நின்ற நிலையில் கடிதத்தைப் படித்தார்.
”நீர் இங்கு எமது வீட்டுக்கு வாற விஷயம் சிவத்திற்குத் தெரியுமா?” என்றார்.
“இல்லை… அவரின் அம்மாதான் சிவத்திற்கு ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்”
“ஒரு கிழமைக்கு முன்னர் சிவம் என்னுடன் ரெலிபோனில் கதைத்திருந்தான். அம்மாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு யாராவது வந்தால் தேவராஜனைக் காட்ட வேண்டாம் என்றான். நேசம் சிவத்திற்கு எல்லாம் உளறிவிட்டார் போல இருக்குது. இப்ப அம்மாவின் கடிதத்தைப் பாத்த பின்புதான் எல்லாமே விளங்குது.”
வீட்டைப் பூட்டி திறப்பை கையில் எடுத்துக் கொண்டார் சிவலிங்கம். பின்னர் வீட்டின் பின்புறமாக இருந்த சீமெந்திலான கட்டடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார்.

அந்த அறையின் கூரை பனை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. கதவிற்குப் பதிலாக இரும்பிலான கேற் இருந்தது. ஜன்னல் இல்லாத அறைக்கு காற்றுப் போக வர வசதியாக இருக்கும் என்றார் சிவலிங்கம். இரும்புக்கதவின் மேல் தனது வீட்டுத் திறப்பினால் தட்டி, “ராசன்… ராசன்… “ என்று கூப்பிட்டார். உள்ளே இருட்டாக இருந்தது. கூனிக் குறுகிய ஒரு மனிதன் கைகளை விசுக்கி விசுக்கி நடந்து வாசல்வரை வந்தான். இரண்டு கால்களும் உட்புறமாக வளைந்து இருந்தன. தொளதொளத்த காற்சட்டை. உடம்பின் மேலுக்கு ஒன்றும் இல்லை. ஒரு குழந்தையைப் போல கள்ளமில்லாமல் சிரித்தான். நெற்றியிலே விபூதி சந்தணம். காதிலே ஒரு பூ. சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றான் அவன்.

“சாப்பாடு தீத்த வேணும். குளிக்க வாக்க வேணும். டொக்டரிட்டைக் கூட்டிக் கொண்டு போகவேணும். ஒரு குழந்தைக்குச் செய்யவேண்டிய சகல வேலைகளும் செய்ய வேணும்.”
”ஏன்… ஏன் எப்படி இது நடந்தது?”
சிவலிங்கம் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.
“வாருங்கள்… வீட்டிற்குப் போகலாம்.”

சில மனிதர்களின் இருண்ட பக்கம் தெரியாமலே, அவர்கள் தமது வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றார்கள். சக மனிதரை அடையாளம் காண்பதுதான் இந்நாளில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வீட்டிற்குள் வந்ததும் கதிரையில் அமரும்படி சொன்னார்.

‘ப்ளீஸ்… நீங்களாவது நான் சொல்லிறதை தயவு செய்து கேளுங்க. நாட்டுப் பிரச்சினைகள் தீர்ந்து இப்ப நாலு வருஷமாப் போச்சு. ஒருத்தர் எண்டாலும் வந்து பாக்கினம் இல்லை. வந்தால் தங்கடை தலையிலை பொறுத்துப் போய்விடும் எண்டு பயப்படுகினம்.

எத்தினையோ வருஷங்கள் வைச்சுப் பாத்திட்டன். இனியும் என்னாலை ஏலாது. எங்கையாவது அனாதை ஆச்சிரமத்தில் கொண்டுபோய் விடப்போறன்” சத்தம் போட்டார் சிவலிங்கம்.
”இதையும் வைச்சிருங்கோ. நான் போய் எல்லா ஒழுங்குகளும் செய்து தருவன்”  என் பொக்கற்றுக்குள் இருந்த இருநூற்றி ஐம்பது டொலர்களையும் அவரது கைகளிற்குள் திணித்தேன். சிவலிங்கம் குளிர்ந்து போனார். தேவராஜனின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

”சாதி ஏற்றத் தாழ்வுகள்தான் தம்பி இதுக்குக் காரணம். தேவராஜன் படிக்கிற காலத்திலை ஒரு பெண்ணை விரும்பியிருந்தான். சாதி காதலுக்குத் தடையா இருந்துது. தேவராஜனைப் பெத்தவர்கள் தடிச்ச சாதிக்காரர்கள். கலியாணம் இந்த ஜன்மத்திலை நடக்காது என்று உறுதிபடச் சொல்லிவிட்டார்கள். பூசணிக்காய் போல விளைஞ்ச தாய்க்காரியும், தம்பி சிவமுந்தான் மிகவும் மூர்கத்தனமாக அதை எதிர்த்தவர்கள். சிவம் அந்தக் குமரைக் கொல்லப் போறான் என்று ஊருக்குள்ளை கதை உலாவினது.”

கருணையும் சாந்தமும் கொண்ட அந்த அம்மாவா அப்படிச் செய்தார்? நான் திகைத்தே போய்விட்டேன்.
”நான் தேவராஜனோடை பள்ளியிலை ஒண்டாப் படிசனான். அவன்ரை காதலியின்ரை சொந்தக்காரன். அவனைப்பற்றி எனக்குத்தான் எல்லாம் தெரியும். இரண்டு பேரும் ஏழு எட்டு வருஷங்கள் எண்டு காத்திருந்திச்சினம். பிறகு பெடிச்சிக்கு கலியாணம் பேசிச்சினம். கலியாணம் முடிஞ்சு இரண்டாம் நாள் பெடிச்சி தூக்கிலை தொங்கிட்டாள். அண்டைக்குப் பிடிச்சது உவனுக்கு உந்தச் சனியன். விசராக்கிப் போட்டுது. இப்ப முப்பது வருஷமாப் போச்சு” சொல்லிவிட்டு பெருமூச்செறிந்தார் சிவலிங்கம். கனத்த மனத்துடன் சிவலிங்கம் வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

ஒரு முடக்குக் கழிந்திருக்கும். வாகனமொன்று கிரீச்சிட்டு என்னருகில் நின்றது. மளமளவென்று நாலுபேர்கள் இறங்கினார்கள். என்னைப் பிடித்து இழுத்து, வாயிற்குள் துணியொன்றை அடைத்தார்கள். கண்களைக் கட்டிப் போட்டு வாகனத்தினுள் தள்ளினார்கள். என் உடலில் இருந்து ஒட்டு மொத்த சக்தியையும் யாரோ உறிஞ்சி எடுத்தது போல இருந்தது. வாகனம் சிறிது தூரம் ஓடியபின்னர் ஒரு சுடலைக்குள் நின்றது. கட்டை அவிழ்த்து, வாயிற்குள் இருந்த துணியை இழுத்தெடுத்தார்கள். அவர்களில் ஒருவரையும் நான் முன்னர் கண்டதில்லை. கடத்தியவர்கள் தங்கள் முகத்தை மறைத்திருக்காவிடில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நான் அறிவேன். ஒருவன் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த வீடியோக்கமராவை எடுத்தான். அதனை ஓடவிட்டு சற்று நேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தான். திடீரென்று நிறுத்திவிட்டு என் தலையைப் பதித்து, “இதிலை கொடி பிடிச்சுக் கொண்டு நிக்கிற ஆள் நீதானே!” என்றான். நான் ஒன்றும் பேசாது மெளனமாக இருந்தேன்.
”உனக்கு சிவத்தைத் தெரியுமா?” என்றான் ஒருவன்.

“அவன் என் நண்பன்” என்றேன்.

”நண்பனாம்… நண்பன்” அவர்கள் வாகனம் அதிர சிரித்தார்கள்.
சிவம்… அடப் பாவி… சிட்னியிலை ஊர்வலம் போகேக்கை நீயும்தானே வந்தாய். நீதானேடா வீடியோ எடுத்தாய். இப்ப காட்டிக் கொடுத்துவிட்டாயேடா! ஏன் அப்படிச் செய்தாய்? ஒருவேளை இவ்வளவு காலமும் கட்டிக்காத்த உன் குடும்பரகசியம் என்னால் வெளிவரலாம் என்று நினைத்துவிட்டாயா?

நன்றி திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by jeba Wed Nov 23, 2016 4:59 pm

மிக்க மகிழ்ச்சி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கதை படைப்புகள் Empty Re: கதை படைப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை பாபாராஜ் படைப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள் படமாகிறது! -
»  நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
» 2011 - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 6 படைப்புகள்!
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum