தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்!

Go down

கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்! Empty கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்!

Post by அ.இராமநாதன் Mon Nov 28, 2016 9:19 am

[You must be registered and logged in to see this image.]
-
இதுதான் அவர் வேலை செஞ்ச ஆபீசா? எம்மாம் பெரிய கட்டடம்டி... அம்மோவ் நிறைய ஆம்பிளையும் பொம்பளையும் தோள்லே பையை மாட்டி, சந்தோசமாச் சிரிச்சுப் பேசி உள்ளே போறாங்க. இன்னிலேந்து நானும் இங்கே வேலை செய்யப் போறேன்னு நினைக்கக்குள்ள பெருமையா இருக்குது.
-
 உள்ளே நுளையறேன். ரூம் ரூம்பா நிறைய இருக்குது. நிறையப் பேர் நாற்காலியும் மேசையும் போட்டு உக்காந்து ஏதோ எழுதறாங்க. எங்கே நுழைய... யாரை என்ன கேக்க?
-
 குமாஸ்தா பொம்பளைங்க மாதிரி நானும் ஒரு தோல்பையைத் தோள்லே மாட்டியிருக்கேன். அதுலே கையவிட்டு ஒரு பேப்பர் எடுக்கறேன்.
-
 ஒருத்தர் மேசையிலே துணி விரிச்சிருக்குது. அவர் குண்டூசியாலே பல்லைக் குத்தினபடி இருந்தேன். நெருங்கறேன்.
-
"பிச்சை எடுக்கிற கூட்டம் பெருத்துப் போச்சு. ஆபீசு ஆபீசா நுளையுதுங்க'' ன்னு அலட்சியமா என் கைப் பேப்பரைப் பார்த்தவர் சுதாரித்து சரியாக் குந்தினார்.
-
"அடடா, இறந்து போன சூப்ரண்டு வேணு கோபால் சார் சம்சாரமா  அம்மா நீங்க? கருணை அடிப்படையில் இங்க ப்யூன் வேலை குடுத்திருக்காங்களா? இப்படி உக்காருங்க அம்மா''
-
"எங்கே  உக்கார...?'' ஒரு மூலையாப் பார்த்துத் தரையில் உக்காரப் போனேன்.
"இப்படி நாற்காலிலே உக்காருங்கம்மா'' காலியாய் கிடந்த ஒரு  நாக்காலியெக் காட்டினாங்க.
-
அய்யோ நா உக்கார மாட்டேம்பா. கூச்சமா இருக்குது. ஒடம்பெல்லாம் வெட வெடன்னு ஆடுது. "இப்படி ஒரு ஓரமா நிக்கறேனே''
வேணுகோபாலு பொஞ்சாதி, சம்சாரம், கட்டினவ... மிசசுனு ஆளுக்கு ஆள் என்னெக் காமிச்சுப் பேசினாங்க.
-
"டிங்...டிங்' மணியை அழுத்தினார் சூப்ரண்டு.  பியூன் தர்மராசன் வந்தான்.
"அட, என்னம்மா இம்புட்டு தூரம் இங்க  எங்கே? அய்யா சாவுக்கு உங்க வூட்டுக்கு வந்தேன். ரெண்டு வருசம் ஆயிப் போச்சு. இப்பத்தான் மறுபடி பாக்கறேன், சவுக்யமா தாயி..''
கும்பிட்டான் தர்மன்.
-
"தர்மா, அவங்க நம்ம ஆபீசிலே ப்யூனா வேலையில சேர வந்திருக்காங்க... நிர்வாகப் பிரிவு சூப்ரண்டு கிட்ட இட்டும் போ'' ன்னார் சூப்ரண்டு.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்! Empty Re: கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்!

Post by அ.இராமநாதன் Mon Nov 28, 2016 9:20 am

என்னெ வராந்தாவிலே நிறுத்தி தர்மன் என் சார்பா ஒரு உதவியாளர்கிட்டே சாயினிங் ரிப்போர்ட் எழுதி வாங்கினான்.  வீ.முத்தாம்பான்னு கோணல் மாணலாக கையெழுத்துப் போட்டேன்.
"தபால் பிரிவிலே வேலெ பார்த்துக்கினு இரு''ன்னு சொல்லிட்டாங்க.  ஆபீசுக்கு வர்ற தபால்களை
இருக்கை வாரியாப் பிரிச்சி எண்ணிட்டுப் பகிர்ந்தளிக்க ஒரு குமாஸ்தா   ஆபீசிலேருந்து வெளியே செல்லுற தபால்களை அனுப்ப இன்னொரு குமாஸ்தா.
உதவியாளர்களுக்குத் தபால் கொடுத்துக் கையெளுத்து வாங்கறதும்  அனுப்ப வேண்டிய தபால் உறைகளெ ஒட்டி, அஞ்சல் தலையும் ஒட்டி, அடுத்த காம்பவுண்டுக்குள் இருக்கிற போஸ்டாபீசில் கொண்டு போட்டுட்டு வர்றதும் என்னோட வேலை. பெரும் பொழுது ஸ்டூலில் சும்மாத்தான் உக்காந்திருக்கணும்.
இந்த நேரத்திலே, அவரப் பத்தி-அதான் செத்துப் போன என்  புருசனப்பத்தி நினைச்சுப் பார்க்கத் தோணுது...
 இந்த இருபத்தி அஞ்சு வருச குடித்தனத்திலே நான் அவர் கூட மனசு ஒப்பி வாழ்ந்தது வெறும் இருபத்தி அஞ்சு நாள்தான்.  மொதல் இரவிலேயே எனக்கு ஒரு அருவருப்பு ஏற்பட்டுப் போச்சு.  கழுத்துத் தொடங்கி கணுக்கால் வரை இப்படியா ஒரு ரோமக்காடு...?
"சரி, சரி ட்ரெஸ்ஸக் கழட்டவே கழட்டாதீங்க... பாக்கவே அருவருப்பா கரடி மாதிரி குமட்டுது.  கிட்டயே வராதீங்க''
"ஒரு மாசமா நீ என்னோட சந்தோசமாத்தானே இருந்தே முத்து? இப்ப திடீர்னு உனக்கு என்ன ஆயிட்டது?''
"மொதல் நாளே உங்களை ஒரு கரடியாப் பாத்ததுமே மனசு கசந்து போச்சு, நான் புதுப் பொண்ணானதால ஒரு மாசம் பல்லை கடிச்சு சகிச்சிருந்தேன்.  இனியும் முடியாது.''
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்! Empty Re: கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்!

Post by அ.இராமநாதன் Mon Nov 28, 2016 9:20 am

"முத்து, இதுக்கு நான் என்ன பண்ணுவேன்?  ஆண்டவன் அவங்க அவங்களுக்குத் குடுத்த சரீர அமைப்பு அப்படி. மத்தபடி எங்கிட்ட ஒரு கெட்டப் பழக்கமும் கிடையாது. நீ என் மனைவி, உன்னெ நான் உயிரா  நேசிக்கறேன்''
"கும்புட்றேன்க, தயவு செஞ்சு அந்த நினைப்போட என் கிட்ட வரவே வராதீங்க. தாயா, சகோதரியா உங்களுக்கு சமைச்சுப் போட்டு, உங்க வீட்டைப் பராமரிப்பேன். இது உறுதி''
"உன் மனசு மார்ற வரெ நான் பொறுமையாக் காத்திருப்பேன்''
என் மனசு மாறவே இல்லே.  அப்படியே வாழ்ந்து அது செத்தும் போயிடுச்சு....
"அம்மா, உங்களெ பக்கத்து செக்சன் சூப்ரண்டு கூப்பிடுறாரு''ன்னான் பியூன் மருதநாயகம்.
"சார்'' ன்னபடி போய் நின்னேன்.
சூப்ரண்டு அருகே ஸ்டூலில் யாரோ நண்பரு.
"இந்தாம்மா, பிளாஸ்க்கை எடுத்துக்க, ஸ்பெசல் டீ வாங்கிக்க, ரெண்டு பட்டர் பிஸ்கட்டும்... சீக்கிரம் ஓடியா...   சூப்ரண்டு 10 ரூபா கொடுத்தாரு''
அறைக்கு வெளியே வந்ததும் என் கை பிளாஸ்கை பறிச்சான் மருதநாயகம்.
"நீ எங்க மரியாதைப்பட்ட வேணு சார் சம்சாரம்.  உங்களப் போயி காபி  டீ வாங்கி வர அனுப்பறதா? நெஞ்சு கொதிக்குது எனக்கு.  வேணு சார் கிட்ட அசிஸ்டண்டா வேலெ பாத்த பய இன்னக்கு சூப்ரண்டு. பளார்னு ஒரு அறை விட்டிருப்பேன்.  நீ போய் உக்காரும்மா, நான் வாங்கியாறேன்''
"பரவாயில்லய்யா.... நாய் வேசம் போட்டாக் குரைக்க வேணாமா?''
"இன்னொரு வாட்டி அப்படிச் சொல்லாதே.  நீ நாயும் இல்ல  குரைக்கவும் வாணாம், தபால் பிரிவுல குந்து''
கலகலன்னு சிரிச்சுக்கிட்டு நாலஞ்சு இளம் பொண்ணுங்க என்னை நெருங்கி, "ரொம்ப சந்தோசம் அம்மா.  உங்க உருவிலே எங்க வேணு சாரையே பாக்கற மாதிரி இருக்குது.  அவரு  இருந்தப்போ எங்களுக்கு எவ்வளவு தெம்பா இருந்தது தெரியுமா?  கன்னிமராலேந்து ஏதாவது புஸ்தகம் எடுத்து வந்து படிச்சுக்கிட்டே இருப்பாரு, நல்ல விசயங்களை எங்களுக்கும் எடுத்துச் சொல்வாரு, இப்போ யாரு அந்த மாதிரி எல்லாம்?'' 
"சரி தான், சுத்திப் பொட்டப் புள்ளங்கள நிறுத்தி வெச்சு, இஸ்டத்துக்கும் வழிஞ்சாரா? அய்யா இப்பத் தெரியுது, உங்க  பவிசு''
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்! Empty Re: கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்!

Post by அ.இராமநாதன் Mon Nov 28, 2016 9:20 am

"நல்ல  விசயம் தெரிஞ்ச மனுசன்.  எதையும் ஒரு தடவை படிச்சாலே புரிஞ்சுப்பாரு.  நமக்கும் விளக்குவாரு.  நாங்க ஆபிசு பரீட்சைக்கு மனு அனுப்பறபோது அவர் கைல குடுத்து ஆசி வாங்கிப்போம்.  இப்பவே உங்களை அவரா நினைக்கிறோம்.  எங்களெ வாழ்த்துங்கம்மா''
ஒருத்தி ஏதேதோ கடுதாசிங்களை என் கையிலே கொடுக்கிறா.
என்ன  வாழ்த்தோ, மண்ணாங்கட்டியோன்னு எரிச்சலா வருது, அதுக்குள்ள இன்னொருத்தி என் கால் விரல்களைத் தொட்டு தன்னோட கண்ணில ஒத்திக்கிறா. அவ கண்ணு கலங்குது.
"அட, என்ன நடந்துச்சுன்னு நீ இப்ப அழ ஆரம்பிக்கறே? நீலிக்கு நெத்தியிலே கண்ணீருன்னு... போங்க எல்லாரும், என்ன சுத்தி கும்பல் கூடாதீங்க.
ஆபீசுலே வேல செய்யற பல பொம்பளைங்க என்ன  அழகா உடுத்தறாங்க. ஆள் அழகு இல்லைன்னாலும் திறமையா சிங்காரிச்சிக்கறதுலே அழகி மாதிரி ஒரு மாயத்தை எப்படியோ உருவாக்கிக்கிறாங்க.  இவங்கள எல்லாம் பாத்து அவருக்கு  புத்தி தடுமாறாமெ இருந்திருக்குமா?''  
 இப்படி வாம்மா, ஒனக்கு, அத எளுதச் சொல்லித் தாரேன்  இத எளுதக் கத்துத் தாரேன்னு எவ கையையாவது நைசாத் தடவிப் பாத்திருக்குமோ? ச்சீ, இருக்காது.  நான் கிடைக்கலியேங்கற வருத்தம் தானே தவிர, அது எந்தப் பொண்ணயும் உத்துப் பார்த்ததே இல்லே.  டீவிலே, சினிமாவிலே சும்மா காதலி மடீல காதலன் படுத்துக் கொஞ்சற மாதிரி வந்தா ஒரு பெருமூச்சு விட்டு அடுத்த ரூம் போயிடும்.  பவுர்ணமிகள்ல படுக்கையில படுக்காமெ ஜன்னல் பக்கம் நின்னு நிலாவையும், தென்னங்கீத்தையும் ஏக்கமாப் பாக்கும்.
 கூட்டமாக சிலரு எங்க பிரிவுல நுளைஞ்சாங்க, அதிலே சிலரு, கலர் கலராக பிட் நோட்டிசுகளை எல்லோருக்கும் விநியோகிச்சாங்க.  அதிலேயும் ஒருத்தன் உரத்த குரலிலே, "தோழர்களே'' ன்னு பேசினான்.  ஏதோ சம்பள கமிசனாம்.  அதிலே ஏன் தாமதம்னு கண்டனக் கூட்டம் சாப்பாட்டு இடைவேளையிலே ஆபீசு முன்னாலே நடத்துவாங்களாம்.
"இந்த நேரத்திலே தோழர் வேணுகோபால் நம்மிடையே இல்லையே. எப்படி ஆழமா,  அழுத்தமா, ஆணித்தரமா ஊழியர்களிடையே தன் கருத்துக்களை எடுத்துரைப்பாரு. அன்னாரின் துணைவியாரைப் பாத்து நாம புதிய எழுச்சி கொள்கிறோம்.''
எல்லாரும் என்னப் பார்த்து "வணக்கம் அம்மா, வணக்கம் அம்மா''ன்னாங்க. 
ஆங், ஆங். எல்லாருக்கும் வணக்கம்னேன். ஏன் இப்படி ஒரே சமயத்துலே காக்காக் கூட்டம் மாதிரிக் கத்துறீங்க?''
கூட்டம் அடுத்த அறையில நுழைஞ்சது. "தோழர்களே, தோழியர்களே... நமது உரிமையை வென்றெடுக்க'' என்கிற பிரசங்கம் அங்கே கேட்டுது.
 பியூன் சிங்காரம் சில பைல்களும், ஊசி, நூலுமாப் பைலு தைக்க வந்து உக்காந்தான். சில பைலுகளைப் பிரிச்சு என் கிட்டே காட்டினான். "இதெல்லாம் யார் கையெழுத்து தெரியுதாம்மா? வேணு சாருது, அவரே தன் கைப்பட எப்படி முத்து முத்தா எளுதி இருக்காரு. கண்ல ஒத்திக்கலாம் போல'' இன்னு நிஜமாவே கண்ணில ஒத்திக்கிட்டான்.
 மதியத்துல மூணு மூணரை மணிக்கு டீ சாப்பிட்டு வரப் புறப்பட்டேன். அடுத்த பிரிவு பதிவு எழுத்தரு மாசிலாமணி என்னெ அருகே அழைச்சாரு. போனேன். அங்கே கண்கணிப்பாளர் நாற்காலி காலியா இருந்துச்சு. அதைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிட்டாரு.
"இது எங்க வேணு சார் பெருமையோடு உக்காந்து கவுரப் படுத்தின சீட்மா, ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க எல்லாம் எந்த ஃபைல்லே என்ன சந்தேகம் வந்தாலும் வேணு சாருக்கு அனுப்புவாங்க.  சாரும் டாண் டாண்ணு தேங்கா உடைச்ச மாதிரி ஆலோசனை எழுதி அனுப்புவாரு.  அவரு பேரைக் கெடுக்க இந்த சீட்ல இப்ப ஒண்ணு உக்காந்திருக்குது.  தெனமும் மேல் அதிகாரிங்ககிட்டே டோஸ் டோஸô வாங்குது''
மாசிலாமணி சிரித்தபடியே நெத்தியில அடிச்சுக்கிறாரு.
மாலையிலே வீடு திரும்பினேன்.
"என்ன, ஒருத்தனைப் பாத்தாப்பலே எல்லாரும், எங்க சாரைப் போல உண்டாங்கறான்  போய்யா, வேற எவனும் புத்திசாலி இருந்திருக்கமாட்டான்.  குருடனுங்க மத்தியிலே ஒத்தக் கண்ணன் ராஜாங்கற மாதிரி உங்களுக்கு யோகம் அடிச்சுது''
இப்படியே ஒரு மாசம் ஓடிடுச்சு.
"எங்க சார், அப்படி, இப்படி, சார் இந்திரன், சந்திரன், நல்லவரு, வல்லவரு'' இதெல்லாம் கேட்டுக் கேட்டு எனக்குப் பழகிப் போச்சு. காது புளிச்சுப் போச்சு.
 ஒரு சாயங்காலம் அஞ்சு மணி. "எல்லா ஊழியர்களும் மீட்டிங்கு ஹாலுக்கு வரணும், ஆணையரு ஒரு முக்கிய விசயம் பேசப் போறாரு''ன்னாங்க.. பியூனுங்க ஆபீசு முழுக்க, முதல் தளம், ரெண்டாவது தளம் கீழ்தளம், தோட்டத்தில தள்ளி தள்ளி இருந்த தனிக் கட்டிடங்க, மாடிங்க இன்னு எல்லா இடங்களிலும் தகவல் சொல்லிட்டு வந்தாங்க.
 கூட்டக் கூடத்திலே குழுமினோம்.  நாற்காலிகளிலே இடம் கிடைச்சவங்க அமர்ந்தாங்க, நிறையப் பேரு நின்னாங்க, எல்லாருக்கும் பிஸ்கட்டு, தேநீரு வழங்கினாங்க. எங்க ஆணையர் பேசினாங்க:
"என் சிநேகிதியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பவிஷ்யவாணியை உங்களுக்கு அறிமுகப்படுத்துறதில  மகிழ்ச்சி கொள்கிறேன்.  ஒரு சாப்பாட்டுக் கூடைக்காரியின் மகளான இவரு இன்னைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்காரு.  இவரு ஓர் அனாதை ஆசிரம மாணவி.  இவரின் படிப்புச் செலவுக்கு இந்த அலுவலக ஊழியர் ஒருவர் தன் மாதச் சம்பளத்தில பாதியை மாசம் மாசம் கொடுத்து உதவினாரு, அவ்வப்போது தனக்கு என்ன பெருந்தொகை வந்தாலும், பிற்கால சேம நல நிதியிலே பெரும் தொகை வாங்கினாலும், சம்பள கமிசன் அரியர்சு வந்தாலும், அதிலே பாதியை நன்கொடையா ஆசிரமத்துக்கு அனுப்பினாரு.  ஆசிரமத்துக்கு நன்கொடை இன்னு கருதாமெ, தான் அனுப்புற தொகைகளை ஏதாவது ஒரு வறிய மாணவரு படிப்புச் செலவுக்குப் பயன்படுத்தக் கேட்டுகொண்ட நன்கொடையாளரு, தன் பெயரையும் வெளிப்படுத்தக் கூடாதுன்னு ஆசிரமத் தலைவியிடம் கேட்டுக் கிட்டாரு. 
 அந்த உத்தமரு செஞ்ச உதவிகளின் பலன் இதோ, செல்வி பவிஸ்யவாணி. அவரின் இதயம் துடிக்குது.  அந்தப் பண்பாளர் யார்ன்னு கண்டுபிடிச்சு நன்றி செலுத்த கண்டு பிடிச்சிட்டாரு. ஆனா அந்த உத்தமரு இப்ப நம்மிடையே வாழ்ந்திருக்கவில்லே என்கிறதை அறிஞ்சு நம் உள்ளமும் கனக்குது.
 ஆயினும் ஒரு ஆறுதல், அந்த மனிதரின் மனைவியார் தற்போது நம் அலுவலகத்தில் பணிபுரிகிறாரு.  அவரை இங்கே வருமாறு அழைக்கிறேன்.
திருமதி முத்தாம்பா வேணுகோபால்''
பலத்த கைத்தட்டல்.  அம்மா எவ்வளவு பெரிய தண்டு மாலை என் கழுத்திலே..! போட்டோ காமிரா பளிச்... பளிச்...
வீடு திரும்பினேன்.  பீரோ இடுக்கிலே சுவருப் பக்கம் திருப்பி வெச்சிருந்த அவரோட போட்டோவை எடுத்து, துடைச்சு சுவரிலே மாட்டி, பூ மாலையை அணிவிச்சேன்.
"உங்க மகிமையைத் தெரிஞ்சுகிட்டேன்ங்க. தெரிஞ்சுக்கிட்டேன்'' அப்படியே விழுந்து கும்பிட்டேன்.
 கண்ணன் மகேஷ்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்! Empty Re: கரடிக்கு வாழ்க்கைப்பட்டவள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum