தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழர் முழக்கம்! நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Go down

தமிழர் முழக்கம்!   நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’   கவிஞர் சி. சக்திவேல் !    அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Empty தமிழர் முழக்கம்! நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu May 31, 2018 9:36 pm

தமிழர் முழக்கம்!


நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ 

கவிஞர் சி. சக்திவேல் !



அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !



******

நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். விவேகானந்தா கல்வியியல் கல்லூரி (கும்மங்குடி) முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  ஓய்வுக்குப் பின் ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு ஓய்வின்றி தமிழ்ப்பணி செய்து வருபவர்.  மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கில் பாடிய கவிதைகளையும் மற்ற கவிதைகளையும் தொகுத்த "தமிழ் முழக்கம்" நூலாக வழங்கி உள்ளார்.


நூலின் தலைப்பிற்கு ஏற்ப நூல் முழுவதும் தமிழ் முழக்கம் கவிதைகளே உள்ளன.  இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் தேவைப்படும் கவிதைகள் இவை.  எங்கும் எதிலும் தமிங்கிலம் பரவி வரும் இக்காலத்தில் உலகத்தமிழர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கும் கவிதைகள் மிகச்சிறப்பு. 


அன்னைத் தமிழ் வாழ்த்து!



[size=13]அன்னைத் தமிழே ஆரமுதே 

அகிலம் காக்கும் ஒளிவிளக்கே
முன்னை விதித்த பரம்பொருளே 

மூச்சாய் உயிராய் இருப்பவளே!


[/size]
     நூலாசிரியர் பேராசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.
[size][size]


     மம்மி எனும் போதினிலும் 
     டாடி எனும் போதினிலும்
     இம்மியேனும் மகிழ்வுண்டா ?

     இனியதமிழ் ஒலியுண்டா
     மம்மிதானே சடலமென்ற 

     மதி தானும் நமக்குண்டா ?
     வம்படியாய் ஆங்கிலத்தை 

     வந்தவாறு பேசுகிறார்.


[/size][/size]
     பெற்ற தாயை செத்தப் பிணமே என்று அழைக்கும் மடமையைச் சாடி உள்ளார்.  பலமுறை எடுத்துரைத்தும் பலர் இன்னும் மம்மி டாடி விடவில்லை.


     தமிழைக் காக்கும் தகுந்த வழி!


     இன்றே எழுக தமிழர் கூட்டம் 
 இனிக்கும் தமிழை எடுத்துக் கொள்க !
     ஒன்றே கருதுக; ஒன்றே செயக !
 ஊர்கள் தோறும் தமிழைச் சொல்க !


நூல் முழுவதும் மரபுக் கவிதைகளின் மூலம் மாண்புகள் மிக்க கனித்தமிழை உயர்த்திப் பாடி உள்ளார்.  பாராட்டுக்கள்.


நற்றமிழின் நாயகன்!
[size][size]


சிறுகூடற்பட்டி தந்த கண்ணதாசன் 
          செப்பு கவிதத்துவத்தில் தமிழின் அரசன்
     மருவில்லா வளர் தமிழின் கவிமாமல்லன் 
           மாசற்ற தெள்ளுதமிழ் உரைத்த ஈசன் !



[/size][/size]
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதிலும் ஒப்பற்ற பாடல்களால் மக்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கிய பாமாலை, அவர் புகழ் பரப்பும் புகழ்மாலை.


வள்ளுவரும் வாழ்வியலும்!
[size][size]


கனிந்துள பழத்தை உண்டு 
 காய்களை ஒதுக்குதல் போல்
     இனித்திடும் சொற்கள் கூட்டி 

 இயம்பலாம் கசப்பை விட்டு
     தனிமிகு சொற்கள் கொண்டு 

 நயம்படப் பேசச்சொன்ன
     த்னிப்பெரும் தெய்வப்புலவன் 

 தமிழ்மறை அய்யன் வாழ்க!


[/size][/size]
‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என்ற திருக்குறளையும் அதன் பொருளையும் ஆங்கிலத்தில் படித்துவிட்டு மூல்மொழியான தமிழில் படிக்க, செக்கோசுலேவியாவிலிருந்து ஓர் அறிஞர் வந்தார்.  அவ்வளவு பெருமைமிக்க திருக்குறளை அழகாக கவிதையில் வடித்தது சிறப்பு.


தமிழாலே உயரும் நாடு!
[size][size]


சிங்கப்பூர்ப் பேரழகைச் சொன்னா லின்பம்
      சிந்தைகவர் அந்நாட்டில் வாழ்ந்தா லின்பம்
      மங்காத விளக்காகச் சுடரும் நாடு
      மாசில்லா உழைப்பாலே உயரும் வீடு !



சிங்காரமிக்க சிங்கப்பூர் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு.  அதன் சிறப்பை கவிதையால் விளக்கியது சிறப்பு.


தடைகளை உடைத்துத் தமிழை உயர்த்து !

     தமிழ்நாட்டில் தமிழுக்குத் தடையா தொல்லை
     தகராத அவற்றிற்கு விடையா இல்லை
     தமிழ்நாட்டில் செம்மொழிக்கு இன்னல் என்றால்
     தள்ளாத முதுமையிலும் எதிர்த்து நிற்போம்!



[/size][/size]
உடல் முதுமை கண்டாலும், உள்ளம் போராடும் குணம் உண்டு.  தமிழுக்கு ஒரு தடை என்றால் அதனை உடைப்போம் என தமிழ்க்குரல் உரிமைக்குரல் தந்துள்ளார்.  உயர்நீதிமன்றத்திலும் கடவுளின் கருவறையிலும் ஒப்பற்ற தமிழ் ஒலிக்கும் நாளே தமிழருக்கு வாழ்வில் சிறந்த நாளாகும்.  இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக கவிதைகள் பல உள்ளன.  பாராட்டுக்கள்.
[size][size]


தமிழா, உன் தமிழ் தமிழா?

     தாயினமுத மொழி மறந்தால் – நீ
     தரிகெட்டலைந்து மடிந்திடுவாய்!
     ஆயிரம் சொற்கள் இருக்கையிலே – நீ
     ஆங்கிலம் சேர்த்துப் பேசுகிறாய்!



[/size][/size]
ஆயிரக்கணக்கான சொற்களின் சுரங்கம் களஞ்சியம் நம் தமிழ்மொழி.  வளமான இலக்கிய இலக்கணம் உள்ள மொழி தமிழ்.  இல்லாதவன் கடன் வாங்கலாம்.  இருப்பவன் எதற்கு கடன் வாங்க வேண்டும்.  ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி நல்ல தமிழில் அனைவரும் பேசிட முயல வேண்டும்.  தமிங்கிலத்தைத் தொடர விடுவது தமிழ் மொழிக்கு இடராகவே அமையும்.
[size][size]


தேமதுரத் தமிழோசை ...

     முத்தான சொல்லெடுத்து முழங்கு கவி வடித்தெடுத்து
     வித்தான தமிழ் பரப்ப வேண்டும் – அதன்
     சொத்தான தமிழ் காக்கத் தூண்டும்.



[/size][/size]
மரபுக்கவிதைகளை பல்வேறு வகை மரபுகளைக் கையாண்டு மரபுக்கவி விருந்து வைத்துள்ளார். மரபுக் கவிதை காலத்தால் அழியாமல் நிலைத்து இருக்கும், படிக்கும் வாசகர்கள் மனதில் நன்கு பதியும்.  புது எழுச்சியை உருவாக்கும் தமிழ்ப்பற்றை வளர்க்கும்.  தமிழ்இனஉணர்வை ஊட்டும்.
[size][size]


நற்றமிழில் வேற்றெழுத்தைக் கலக்கல் நன்றா?

     மாற்றுமொழி எழுத்துக்களை 

 மதிகெட்டுத் திணிக்கின்றாய்!
     ஏற்றமிகு தாய்த்தமிழை 

 எடுத்தெறிந்து சிதைக்கின்றாய்!
     போற்று தமிழ் பொன்னெழுத்தைப் 

 பிழையென்று தள்ளுகிறாய்!
     துள்ளுமடா தமிழுலகம் 

 துணிந்தாயோ பழியேற்க!


[/size][/size]
உலக மொழிகளில் அதிக எழுத்துக்கள் உள்ள் மொழி தமிழ்மொழி.  எழுத்துக்கா பற்றாக்குறை தமிழில். எதற்காக தமிழில் பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டுமென்ற கேள்வியை எழுப்பி அழகு தமிழில், அமுதத் தமிழில் சுத்தமான தமிழில் பிறமொழி எழுத்து எனும் நஞ்சை கலப்பதை நிறுத்துங்கள் என்று சொல்லி வடித்த கவிதை நன்று.
[size][size]


பெருமைமிகுதமிழ்மொழியா? 
பிற எழுத்துக் குப்பைமேடா?

     கனிச்சுவை சிந்தும் நற்றமிழில் 

 கலப்படம் செய்வதை நிறுத்தி விடு 
தனித்துவம் மிளிரும் மொழிவிட்டு 
 தரமில் சொல்லை எறியெடுத்து !


உணவில் கலப்படம் உயிருக்குக் கேடு தரும்.  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் என்பதை கவிதையால் உணர்த்தியது சிறப்பு.


[/size][/size]
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போல தமிழ் முழக்கம் செய்து, உறங்கிடும் தமிழரை மரபுக் கவிமுரசால் எழுப்பி உள்ளார்.  நூலாசிரியர், தேசிய நல்லாசிரியர், கவிஞர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
[size]





நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi[/size]

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com


http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
»  புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum