தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்!
Page 1 of 1
சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்!
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைப் பெறுவதற்கு
திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு மாநிலங்களவை
இடம் ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி திமுகவில்
எழுந்திருக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு
அதிமுகவிலும் 50-க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்து
வருகின்றனர். அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை
உறுப்பினர்களாக இருக்கும் டி.ரத்தினவேல், மைத்ரேயன்,
கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லஷ்மணன், அதிமுகவின்
ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகிய 5 பேரின்
பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய
உள்ளது.
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக
இருந்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில்
போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை
உறுப்பினராகியுள்ளார். தமிழகத்தில் காலியாகும்
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி
நடைபெற உள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு
34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்படும்.
இதில், 34 உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
என்கிற அவசியம் இல்லை. ஓரிரு வாக்குகள் குறைந்தாலும்
மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு
விடுவர்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் பேரவைத் தலைவருடன்
அதிமுகவின் பலம் நூற்றி இருபத்து மூன்று ஆக உள்ளது. திமுகவின் பலம்
காங்கிரஸ் முஸ்லிம் லீக் உறுப்பினர்களையும் சேர்த்து 108-
ஆக உள்ளது. இதனால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே
தலா மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெறுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது.
மாநிலங்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மட்டும்
அதிமுகவும் திமுகவும் போட்டியில்லாமல் ஒருங்கிணைந்து
செயல்படுவது என்பது கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து
வரும் ஆரோக்கியமான அரசியலாகவே இருந்து வந்துள்ளது.
அந்த அடிப்படையில் இப்போதும் எந்தவித பிரச்னையும்
இல்லாமல் இரு கட்சிகளும் தலா 3 மாநிலங்களவை
உறுப்பினர்களைப் பெறப் போகின்றன.
ஆனால், இந்த 3 இடங்களையும் யார் யாருக்கு கொடுப்பது
என்பது குறித்துதான் இரு கட்சிகளுமே திணறிக்
கொண்டிருக்கின்றன.
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தருவதாக மக்களவைத்
தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் உறுதியளித்து, அதற்கான
உடன்பாட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதனால், மதிமுகவுக்கு ஓர் இடத்தைக் கொடுத்தது போக
மீதம் இரண்டு இடங்கள் இருக்கின்றன.
காங்கிரஸுக்கு மறுப்பு:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக திமுகவிடம்
மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை காங்கிரஸின்
அகில இந்திய தலைமை கேட்டிருந்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்துகூட, தற்போது
காங்கிரஸால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற
முடியாத இக்கட்டான சூழல் இருப்பதாலேயே திமுகவைக்
கடைசியாக காங்கிரஸ் நாடியிருந்தது.
ஆனால், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு
9 இடங்கள் ஒதுக்கிய தொடர்பாகவே திமுகவிற்குள்
விமர்சனங்கள் எழுந்து, விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால், மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை உறுப்பினர்
பதவியைக் கொடுக்க திமுக மறுப்பதாகத் தெரிகிறது.
தேனி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்த
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் மாநிலங்களவை
உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.
அதற்கும் திமுக மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால்,
மீதமுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும்
திமுகவினரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த 2 பதவிகளைப் பெறுவதற்காக திமுகவில் பலத்த
போட்டி ஏற்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர்
வி.பி.துரைசாமி, தொமுச பேரவை பொதுச்செயலாளர்
சண்முகம், வழக்குரைஞர் வில்சன், நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் என இந்தப் பட்டியல்
நீண்டுகொண்டே இருக்கிறது.
இதில், யாரை மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் போகிறார்
எனத் தெரியவில்லை. மருமகன் சபரீசனை மாநிலங்களவை
உறுப்பினராக்கும் முடிவில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக
திமுகவிலேயே சிலர் தெரிவிக்கின்றனர்.
கருணாநிதிக்கு, அவரது பிரதிநிதியாக மருமகன் முரசொலி
மாறன் தில்லியின் செயல்பட்டது போல, தனக்கும் மருமகன்
சபரீசன் செயல்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலினின்
விழைவதாகவும் திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதன் காரணமாகத்தான் திமுகவின் இளைஞரணிச்
செயலாளராக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதில்
தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர்.
இருவரையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தால், அது
விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால் முதலில் சபரீசன்
மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட உள்ளார்.
அடுத்த கட்டமாக, உதயநிதி ஸ்டாலின் இளைஞரணித்
தலைவராக நியமிக்கப்படுவார் என்கிறது விவரம் தெரிந்த
திமுக வட்டாரம்.
அதிமுகவில் கடும் போட்டி: திமுகவைப் போல
அதிமுகவுக்கும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைக்க
உள்ளனர். இதில் ஓரிடத்தை பாமகவுக்குத் தருவாக
அதிமுக மக்களவைத் தேர்தலின்போதே உறுதியளித்து
விட்டது.
ஆனால், இப்போது அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள்
பலர் மாநிலங்களை உறுப்பினர் பதவியில் கோருகிறார்கள்.
இதனால், பாமகவுக்கு ஓரிடத்தை அதிமுக கொடுக்குமா
என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால், உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாத சூழலில்
தான் அதிமுக தலைமையும் இருந்து வருகிறது. உள்ளாட்சித்
தேர்தல் வர இருக்கும் நிலையில், கூட்டணி பலவீனப்படுவதை
அதிமுக தலைமை விரும்பவில்லை என்பதால், பாமகவுக்கு
ஓர் இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
--------------------------
தினமணி
திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு மாநிலங்களவை
இடம் ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி திமுகவில்
எழுந்திருக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு
அதிமுகவிலும் 50-க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்து
வருகின்றனர். அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை
உறுப்பினர்களாக இருக்கும் டி.ரத்தினவேல், மைத்ரேயன்,
கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லஷ்மணன், அதிமுகவின்
ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகிய 5 பேரின்
பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய
உள்ளது.
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக
இருந்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில்
போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை
உறுப்பினராகியுள்ளார். தமிழகத்தில் காலியாகும்
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி
நடைபெற உள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு
34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்படும்.
இதில், 34 உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
என்கிற அவசியம் இல்லை. ஓரிரு வாக்குகள் குறைந்தாலும்
மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு
விடுவர்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் பேரவைத் தலைவருடன்
அதிமுகவின் பலம் நூற்றி இருபத்து மூன்று ஆக உள்ளது. திமுகவின் பலம்
காங்கிரஸ் முஸ்லிம் லீக் உறுப்பினர்களையும் சேர்த்து 108-
ஆக உள்ளது. இதனால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே
தலா மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெறுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது.
மாநிலங்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மட்டும்
அதிமுகவும் திமுகவும் போட்டியில்லாமல் ஒருங்கிணைந்து
செயல்படுவது என்பது கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து
வரும் ஆரோக்கியமான அரசியலாகவே இருந்து வந்துள்ளது.
அந்த அடிப்படையில் இப்போதும் எந்தவித பிரச்னையும்
இல்லாமல் இரு கட்சிகளும் தலா 3 மாநிலங்களவை
உறுப்பினர்களைப் பெறப் போகின்றன.
ஆனால், இந்த 3 இடங்களையும் யார் யாருக்கு கொடுப்பது
என்பது குறித்துதான் இரு கட்சிகளுமே திணறிக்
கொண்டிருக்கின்றன.
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தருவதாக மக்களவைத்
தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் உறுதியளித்து, அதற்கான
உடன்பாட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதனால், மதிமுகவுக்கு ஓர் இடத்தைக் கொடுத்தது போக
மீதம் இரண்டு இடங்கள் இருக்கின்றன.
காங்கிரஸுக்கு மறுப்பு:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக திமுகவிடம்
மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை காங்கிரஸின்
அகில இந்திய தலைமை கேட்டிருந்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்துகூட, தற்போது
காங்கிரஸால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற
முடியாத இக்கட்டான சூழல் இருப்பதாலேயே திமுகவைக்
கடைசியாக காங்கிரஸ் நாடியிருந்தது.
ஆனால், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு
9 இடங்கள் ஒதுக்கிய தொடர்பாகவே திமுகவிற்குள்
விமர்சனங்கள் எழுந்து, விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால், மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை உறுப்பினர்
பதவியைக் கொடுக்க திமுக மறுப்பதாகத் தெரிகிறது.
தேனி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்த
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் மாநிலங்களவை
உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.
அதற்கும் திமுக மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால்,
மீதமுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும்
திமுகவினரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த 2 பதவிகளைப் பெறுவதற்காக திமுகவில் பலத்த
போட்டி ஏற்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர்
வி.பி.துரைசாமி, தொமுச பேரவை பொதுச்செயலாளர்
சண்முகம், வழக்குரைஞர் வில்சன், நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் என இந்தப் பட்டியல்
நீண்டுகொண்டே இருக்கிறது.
இதில், யாரை மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் போகிறார்
எனத் தெரியவில்லை. மருமகன் சபரீசனை மாநிலங்களவை
உறுப்பினராக்கும் முடிவில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக
திமுகவிலேயே சிலர் தெரிவிக்கின்றனர்.
கருணாநிதிக்கு, அவரது பிரதிநிதியாக மருமகன் முரசொலி
மாறன் தில்லியின் செயல்பட்டது போல, தனக்கும் மருமகன்
சபரீசன் செயல்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலினின்
விழைவதாகவும் திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதன் காரணமாகத்தான் திமுகவின் இளைஞரணிச்
செயலாளராக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதில்
தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர்.
இருவரையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தால், அது
விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால் முதலில் சபரீசன்
மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட உள்ளார்.
அடுத்த கட்டமாக, உதயநிதி ஸ்டாலின் இளைஞரணித்
தலைவராக நியமிக்கப்படுவார் என்கிறது விவரம் தெரிந்த
திமுக வட்டாரம்.
அதிமுகவில் கடும் போட்டி: திமுகவைப் போல
அதிமுகவுக்கும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைக்க
உள்ளனர். இதில் ஓரிடத்தை பாமகவுக்குத் தருவாக
அதிமுக மக்களவைத் தேர்தலின்போதே உறுதியளித்து
விட்டது.
ஆனால், இப்போது அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள்
பலர் மாநிலங்களை உறுப்பினர் பதவியில் கோருகிறார்கள்.
இதனால், பாமகவுக்கு ஓரிடத்தை அதிமுக கொடுக்குமா
என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால், உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாத சூழலில்
தான் அதிமுக தலைமையும் இருந்து வருகிறது. உள்ளாட்சித்
தேர்தல் வர இருக்கும் நிலையில், கூட்டணி பலவீனப்படுவதை
அதிமுக தலைமை விரும்பவில்லை என்பதால், பாமகவுக்கு
ஓர் இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
--------------------------
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» தேர்தல்!!!!!!!!!!!!!!
» தேர்தல் ..... !!!
» தேர்தல்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» தேர்தல்!!!!!!!!!!!!!!
» தேர்தல் ..... !!!
» தேர்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|