தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீ தான் ஒசத்தி! நூல் ஆசிரியர் : மகுவி !' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

கவிஞர் இரா  இரவி - நீ தான் ஒசத்தி!    நூல் ஆசிரியர் : மகுவி !'    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty நீ தான் ஒசத்தி! நூல் ஆசிரியர் : மகுவி !' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Aug 01, 2019 9:20 pm

நீ தான் ஒசத்தி!

நூல் ஆசிரியர் : மகுவி !'

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : பாவைமதி வெளியீடு, 
எண் : 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை, 
சென்னை – 600 081. பக்கங்கள் : 96, விலை : ரூ.80


******

நூலாசிரியரின் பெயர் மகுவி வித்தியாசமாக உள்ளது. பெயரைப் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன. நூல் முழுவதும் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். காதல், காதல், காதல் தவிர வேறில்லை என்றபடி முழுக்க காதல் கவிதைகள்.

திரைப்படப் பாடல்களை உற்றுநோக்கும் பழக்கம் நூலாசிரியருக்கு இருப்பதால் பாடல்களின் பாதிப்பு கவிதை வரிகளில் தெரிகின்றன. கவிஞர் மனுஷி டாக்டர் மு. வான்மதி இருவரும் அணிந்துரை நல்கி உள்ளனர்.

விழியினால் தொடரும் 
 உன் பார்வை ஒரு மனம்
     மனதினால் வளரும் 
 மௌனம் கதை எழுதும்
     பூங்காற்றே நெருங்கி வராதே 
 பெண்காற்று என் அருகே

‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’ என்ற புகழ்பெற்ற வரிகளை நினைவூட்டும் விதமாக, கவிப்பேரரசு வைரமுத்து, ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ என்று எழுதினார். காதலின் முன்னுரை கண்களால் எழுதப்படுவதை நூலாசிரியர் உணர்ந்து வடித்த கவிதை நன்று.

என் மனதில் 
 உனக்காக இடஒதுக்கீடு
  நூறு சதவீதம் 
 என் விழியில் 
   உனக்கான
 தனி மதிப்பீடு 
    நூறு சதவீதம் 
 என் உயிரில்
     இருக்கும் ஆயுள் கணக்கீடு
 நீ மட்டும்!

பெண்களுக்கு முப்பத்தி மூன்று சதவீத இடஒதுக்கீடு இன்னும் கிடைத்தபாடில்லை. நிறைவேற்றிட ஆள்வோருக்கும் மனமில்லை.

நூலாசிரியர் கவிஞர் மகுவி காதலிக்கு மனதில் நூறு சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது மகிழ்ச்சி. பாராட்டுக்கள். ஆண்கள் அனைவருமே மனதில் உள்ள ஆணாதிக்கச் சிந்தனைகளை விடுத்து பெண்ணிற்கு குறிப்பாக இல்லத்தரசிக்க்கு மனதில் இடஒதுக்கீடு தந்திட முன்வர வேண்டும். இப்படி பல சிந்தனையை விதைத்தது கவிதை.

     மணல் கொள்ளையைப் போலே
     என் நிழல் கொள்ளையடித்தாய்
     பார்வையில் ஊழல் செய்து 
     காதல் விசாரணையில் என்னை சிக்க வைத்தாள்.

காதல் கவிதையில் கூட மணல் கொள்ளையை சாடும் விதமாக ஒப்பீடு செய்தது சிறப்பு. அரசியல்வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டை காதல் கவிதையிலும் உணர்த்த முடியும் என்று மெய்ப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

ஆண் யானை 
 மா மரத்தை ஒடிக்கும்
     பெண் யானை பசிக்கு 
 பேரன்புப் பசிக்கு
     என் ஓர் அன்பை ஒடித்தேன் 
 உன் உள்ளங்கையில்
      வைத்து மடித்தேன்.

ஒடித்தேன், மடித்தேன் என்று சொல் விளையாட்டு விளையாடி பெண் யானையின் பசியினைப் போக்கிட ஆண் யானை மாமரத்தையும் ஒடிக்கும் என்ற தகவலையும் கவிதை செய்து ஆண் யானை போல ஆண்மகனும் பெண்ணின் பசி போக்கிட உதவிட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக வடித்த கவிதை நன்று.

உனக்குள் எனக்குள் 
 கிரிக்கெட் வேண்டாம்
     ஊழல் ஒட்டிக் கொள்ளும்

மட்டை விளையாட்டில் ஊழல் உள்ளது எனபதை காதலிக்கு உணர்த்தும் விதமாக வடித்த வரிகள் நன்று.

விளையாட்டில் உள்ள ஊழல் அறியாமல் ரசிகர்கள் நேரத்தையும், பணத்தையும் விரையம் செய்து ரசித்து வருகின்றனர். ஊடகங்கள் மட்டை விளையாட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கு தருவதில்லை என்பது கசப்பான உண்மை. இப்படி பல சிந்தனை விதைத்தது கவிதை.

கச்சை மூடிய 
 இச்சை தேவி
     எச்சில் ஊறிய 
 அழகுத் தலைவி
     இம்சை அரசி 
 என் பருவப் பசியின்
     பொன்னி அரிசி 
 மடியில் வைத்த 
 மடிக்கணினி!
     மனதை ஈர்த்த 
 கந்தர்வ கன்னி நீ!
     மூடுபனி மூடிய முக்கனி
 நீ மூடி வைக்காதே!
     என்னிடம் தள்ளி ஓடி படுக்காதே!

இந்தக் கவிதை வரிகளை படிக்கும் போது திரைப்பட பல்கலை வித்தகர் நல்ல கவி ஞர் டி. ராஜேந்தர் அவர்களின் வைர வரிகளை நினைவூட்டும் விதமாக சில திரைப்படப் பாடல்களை நினைவூட்டும் விதமாக எழுதி உள்ளார். திரைப்படத்துறையில் முயற்சி செய்வதால் அந்த பாதிப்பு அவரையும் அறியாமல் அவர் எழுத்தில் வந்துள்ளன.

என்னை நீ விலகி இருக்க
     என் மீது பல காரணம் சொன்னாய்
     விளையாட பொம்மை ஏதுமற்ற
     பிள்ளை போல நின்றேன்.

காதல் கவிதையில் வந்து விழுந்துள்ள உவமை நன்று. ‘பொம்மை இழந்த குழந்தை போல தவிக்கிறேன்’ என்ற ஒப்பீடு நன்று.

விண்மீன்களை காவல் வைத்து 
 நிலவு உறங்கியது!
     நிலவை காவல் வைத்து 
 வானம் உறங்கியது!
     இருளை காவல் வைத்து 
 காற்று உறங்கியது!
     காற்றை காவல் வைத்து 
 பூமி உறங்கியது!
     பூமியின் என்னை காவல் வைத்து 
 என்னவள் உறங்கினாள்!

காதலன் பொறுப்புள்ள காவல்காரனாக காதலியை காவல் காத்திட காதலி நிம்மதியாக உறங்கும் காட்சியை கவிதையின் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். பாராட்டுக்கள்.

ஒட்டென ஒட்டுதே
     ஓடி வந்து உன் வாசம்
     என் நெஞ்சில்
     தட்டென தட்டுதே
     என் மனசை
     உன் பார்வை!

இப்படி நூல் முழுவதும் ‘நீ தான் என் ஒசத்தி’ என்ற பெயருக்கு ஏற்றபடி காதலியை காதலை ஒசத்தி ஒசத்தி கவிதை வடித்துள்ளார்.

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ள பாவையர் மலர் ஆசிரியர் டாக்டர் ம. வான்மதி அவர்களுக்கும், நூல் ஆசிரியர் கவிஞர் மகுவி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி விடுகிறார். எழுதிய எல்லாவற்றையும் நூலாக்கி விடாமல் எழுதியவற்றில் தேர்ந்தெடுத்து நூலாக்கினால் இன்னும் சிறப்பாக அமையும். தொடர்முயற்சிக்கு பாராட்டுக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமுக்கடி! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum