தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

இருட்டை விரும்பாத இரவுகள்!   நூல் ஆசிரியர் : மகுவி !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Tue Sep 03, 2019 1:57 pm

இருட்டை விரும்பாத இரவுகள்!

நூல் ஆசிரியர் : மகுவி !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : பாவைமதி வெளியீடு, 
எண் : 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை, 
சென்னை – 600 081. பக்கங்கள் : 96, விலை : ரூ.80

******
நூலாசிரியர் கவிஞர் மகுவி அவர்கள் சென்னையில் ஒரே நாளில் தனது மூன்று நூல்களை வெளியிட்டவர். மூன்று நூல்களும் பாவைமதி பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தி. இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வடிவமைத்து உள்ளார்.

இந்த நூலை ‘சமர்ப்பணம் – என்னுயிர் அம்மாவுக்கு’ என்று சமர்ப்பித்து உள்ளார். சிறப்பு.  அடுத்த பதிப்பில் அம்மாவின் பெயரையும் பதியுங்கள். கவிஞர்கள் தமயந்தி, தமிழமுதன், திரு. சத்தியசீலன், பதிப்பாளர் ம. வான்மதி ஆகியோர் அணிந்துரை நல்கி உள்ளனர்.

பக்கத்து வீட்டு மாமி 
எதற்கெடுத்தாலும்
      பகவான் கையில் என்பார்! 

தன் மகள்
      எதிர்வீட்டுப் பையனோடு 

ஓடிப்போனது
      மட்டும் 

அவன் செயல் என்கிறாள்!


எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு விதைத்து உள்ளார். எல்லாம் அவன் செயல் என்பவர்கள் சிந்திக்கும் விதமாக குறும்பா வடித்துள்ளார். நன்று. 

மதுவை முதலில் 
அவன் குடிக்கிறான்
      மது பிறகு 

அவனைக் குடிக்கிறது!

      அடிமையாக்க நினைத்து 

அடிமையாகி விட்டான்
      மன ஆழத்தில் 

மதுவை ஊற்றி நிரப்பி விட்டான்!


இன்றைய இளைஞர்களில் பலர் மதுவிற்கு அடைமையாகி விட்டனர். நண்பர்களின் பிறந்த நாளில் குடிக்க ஆரம்பித்து தினமும் குடிக்கும் நிலைக்கு அடிமையாகி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் குடித்து விட்டு கைதாகி நீதிமன்றம் சென்றனர். நீதியரசர், காமராசர் இல்லத்தை சுத்தம் செய்திட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கிய செய்தி படித்தேன். மதுக்கடைகளை உடனடியாக மூடி இளைஞர்கள் சமுதாயத்தைக் காத்திட முன்வர வேண்டும்!

சர்க்கரைத் தூள் சுமக்கும் எறும்பின் முதுகில்
மிளகாய்த் தூள் தூவிய விரல்கள்
      அடுத்து நீள்கின்றன!



சமுதாயத்தில் பலர் பாராட்டி ஊக்கப்படுத்தாவிட்டாலும் கேலி செய்து காயப்படுத்தி விடுகின்றனர். அப்படிப்பட்ட நபர்களின் பேச்சைக் கேளாமல் செவிடாக இருப்பதே சிறப்பு. மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம்.

பச்சைத் தமிழனை 
பிச்சைத் தமிழனாய்
      ஆக்கி விட்டீர்கள் 

கொல்லைப்புறம்
      நுழைந்த இந்திக்கு 

நடுவீட்டில் பந்தி
பந்தி பரிமாறியவன் பட்டினி 
வாழ்க தமிழ் 
ஒழிக தமில் !


தமிழர்களுக்கு என்றுமே பிடிக்காத இந்தி மொழியை திணிப்பதற்கு முயற்சி நடந்து கொண்டே இருக்கின்றது. அதனைத் தடுக்க முடியாத தன்னலவாதிகளாக இருக்கும் அவலத்தை கவிதை வரிகளின் மூலம் நூலாசிரியர் கவிஞர் மகுவி உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

ஒரு சில பெண் கவிஞர்கள் போல கொச்சையான சொற்களை இனிவரும் காலங்களில் பயன்படுத்த வேண்டாம் என்பது வேண்டுகோள். திருவள்ளுவர் சொன்ன சொல்லை கடைபிடியுங்கள். கனி இருக்க காய் எதற்கு? நல்ல சொற்கள் நிறைய கெட்ட சொற்கள் எதற்கு?

பகலில் பழுத்த எலுமிச்சைச் சாற்றில்
      வெயில் சிந்தியது
      இரவில் பூத்த பூக்களைப் / பறிக்கையில்
      கைகளில் விண்மீன் பூத்தது!



இயற்கையைக் காட்சிப்படுத்தும் விதமாக சில கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.

ஒவ்வொரு முறை 
சாலையைக் கடக்கும் போதும்
      சிறு சிறு பிள்ளையாகவே 

எனை உணர்கிறேன்!


சாலையைக் கடக்கும் போது சிறு பிள்ளையின் பயத்துடனும் கவனமாக கடக்க வேண்டும். கவனம் சிதறினால் சாலையில் நாம் சிதறி விடுவோம். மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்தும் பெருகி விட்டது.

காடுகள் காடுகளாக இல்லை
      வயல்கள் வயல்களாக இல்லை
      மனிதன் மனிதனாக இல்லை
      உயிர்கள் உயிர்களாக இல்லை
      உலகம் உலகமாக இல்லை!



இந்த உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற தத்துவத்திற்கு ஏற்ப எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றன என்பது உண்மை. காடு, வயல் மாறலாம். ஆனால் மனிதன் மாறக் கூடாது. மனிதன் மனிதனாக இருப்பதே மனிதனுக்கு அழகு என்பதை உணர்த்தியது.

கடன் கொடுத்த 
பெட்டிக் கடைக்காரன்
      இறந்து விட்டான் 

கடனோடும் 
நன்றிக்
      கடனோடும் 

சுடுகாடு சென்றேன்.


கடன் கொடுத்த நன்றிக் கடனுக்காக மனிதாபிமானத்துடன் சுடுகாடு சென்ற நல்ல உள்ளம் வாழ்க! சுடுகாடு சென்றதோடு முடிந்து விடாமல் பெட்டிக் கடைக்காரன் மனைவி கடை திறந்தால் கடனையும் அடைத்து விட வேண்டும். நல்ல சிந்தனை. பாராட்டுக்கள்.

கடந்த காலத்தையும் 
எதிர் காலத்தையும்
      யோசித்துக் கொண்டிருந்தேன் 

நிகழ்காலத்தில் !

      யோசித்து யோசித்து காலம் கழிக்காதே  நிகழ்காலத்தை வீணாக்காதே நிகழ்காலத்தை பயனுள்ளதாக்கு பயன்படுத்து 

என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.          
      மனிதனை நான் வாசிக்கிறேன்
      மனிதர்களை நான் நேசிக்கிறேன்
      ஒவ்வொரு மழைத்துளியும்
      மண்ணில் மழையாகிறது!
      ஒவ்வொரு மனிதனும் மண்ணில்
      புத்தகமாகிறான்!



ஒரு படைப்பாளியின் கடமை ஒவ்வொரு மனிதனையும் உற்றுநோக்க வேண்டும் படைப்பிற்கான கருக்கள் கிடைக்கும். புத்தகங்களை வாசிப்பதோடு நின்று விடாமல் மனிதர்களையும் வாசிக்க வேண்டும்.

51ஆம் பக்கம் டம்ளர் என்பது டம்ளார் என்று உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.  

      நூலாசிரியர் கவிஞர்  மகுவி சமுதாயத்தை உற்றுநோக்கி கவிதைகள் வடித்துள்ளார். மனதில் பட்டதை எல்லாம் கவிதையாக்கி நூலாக்கி விடுகிறார். பாராட்டுக்கள்.

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நீ தான் ஒசத்தி! நூல் ஆசிரியர் : மகுவி !' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமுக்கடி! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ப்ளாஸ்டிக் இரவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum