தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயம் தொட்ட இலக்கியவாதிகள்! நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

கவிஞர் இரா  இரவி - இதயம் தொட்ட இலக்கியவாதிகள்!   நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !   Empty இதயம் தொட்ட இலக்கியவாதிகள்! நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sun Dec 08, 2019 8:09 pm

 

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்!

நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  



வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017.  பக்கங்கள் : 224  விலை : ரூ.175
******
கோவை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது விஜயா பதிப்பகம். விஜயா பதிப்பகம் என்றவுடன் நினைவிற்கு வருவது எளியவர், இனியவர், பண்பாளர் விஜயா. மு. வேலாயுதம் அவர்கள். எழுதி அமுதசுரபி மாத இதழில் தொடராக வந்தபோதே படித்து இருந்தாலும் மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி.
புகழ்பெற்ற வானதி பதிப்பகம், விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் அவர்களின் நூலினை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. அன்பின் வெளிப்பாடு. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நீண்ட அணிந்துரை நல்கி நூலிற்கு மகுடம் சூட்டி உள்ளார். சென்னையில் நடந்த முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் பங்குபெற்று வாழ்த்துரை வழங்கியவர் விஜயா. மு. வேலாயுதம் அவர்கள்.
மதுரை அருகே உள்ள மேலூரில் பிறந்தவர். விஜயா மு. வேலாயுதம் அவர்கள் வேலை பார்த்துக் கொண்டே மணப்பாறைக்கு வரும் நூல்களை வாசித்து சிறந்த வாசகராகி, பின்னர் பிரபல எழுத்தாளர்கள் பலருடன் நெருங்கிப் பழகி, பதிப்பகம் தொடங்கி, பெயரோடு விஜயா பதிப்பகம் என்ற பெயரும் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு பதிப்பகத்தில் முத்திரை பதித்து, நூல்கள் விற்பனை செய்து, வாசக நண்பர்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து வரும் மாமனிதர் அனுபவம் கூறிடும் முதல் நூல் இது.
எழுத்துலகின் இமயம் மு.வரதராசனார், கு. அழகிரிசாமி, கவியரசர் கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கவிஞர் மீரா, சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், வ. விஜயபாஸ்கரன், வானதி திருநாவுக்கரசு, அருட்செல்வர் நா. மகாலிங்கம், பழனியப்ப செட்டியார் சக்தி வை. கோவிந்தன் என   13 மிகச்சிறந்த ஆளுமைகளின் திறமையை, பண்பை படம்பிடித்துக் காட்டி உள்ளார். 
இன்றைய இளைய தலைமுறையினர் பார்த்திராத ஆளுமைகள் இவர்கள். இந்த நூலை வாங்கிப் படித்து அவர்களைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
     மு.வ.-வின் செல்லப்பிள்ளை தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் காலமாகி விட்டார். அவர் இருந்திருந்தால் இந்த நூல் பற்றி மிகச் சிறப்பான மதிப்புரை வழங்கி இருப்பார். குறிப்பாக மு.வ. பற்றிய கட்டுரைகள் படித்து மனம் மகிழ்ந்து இருப்பார்.
     மு.வ.வின் எழுத்து ஆற்றலை மட்டுமல்ல, அவரது உயர்ந்த பண்புகளை மிக அழகாக எடுத்தியம்பி உள்ளார். மு.வ. அவர்களிடம் அவர் மீது அன்பு கொண்ட நண்பவர்கள் மணி விழா கொண்டாட வேண்டும் என்று அனுமதி கேட்ட போது மறுத்தவர் மு.வ. ‘யான்’ எனது என்ற செருக்குக்கு இடம் தரும் எந்த விழாவும் குறைய வேண்டும். சமுதாய விழாக்கள் பெருக வேண்டும்’ என்று கூறி மறுத்து விட்டார்.
     மு.வ. அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்  துணை வேந்தராக இருந்தபோது 4 நாட்கள் அகிலன் பற்றிய கருத்தரங்கம் நடத்தி உள்ளார். அங்கு விருந்தினராக வந்திருந்த விஜயா மு. வேலாயுதம் உள்பட பலரையும் பல்கலைக்கழகத்தில் தங்க வைத்து துணைவேந்தர்களைப் போல கவனிக்க வேண்டும் என்று பணியாளர்களை பணித்து அவரும் நேரில் வந்து கவனித்த விருந்தோம்பல் மு.வ.-வின் உயர்ந்த உள்ளத்தை எடுத்து இயம்பி உள்ளார். மு.வ. பற்றி பல அறியாத பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன. பாராட்டுக்கள்.
     பதச்சோறாக மு.வ. பற்றி குறிப்பிட்டுள்ளேன். இப்படி ஒவ்வொரு ஆளுமையின் சிறப்பியல்பையும் எடுத்தியம்பி உள்ளார். அழகிரிசாமி இறந்த அன்று நடிகர் அசோகனும் இறந்திருந்தார். நடிகருக்கு தந்த முக்கியத்துவம் இலக்கியவாதிக்கு ஊடகங்கள் தரவில்லை என்று வருந்தி உள்ளார். அன்று மட்டுமல்ல, இன்றும் அதே நிலை தான். தமிழ்த்தேனீ இரா.மோகன் இறந்த அன்று நடிகர் கிரேசி மோகனும் இறந்திருந்தார். இலக்கியவாதியான தமிழ்த்தேனீ இரா. மோகன் இறப்பு பற்றி ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை என்பது என் வருத்தம்.
     கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூல்களை, வானதி பதிப்பகம் வெளியிட்டு வந்த காலம். ரூ.5000 பணம் தந்ததற்காக, கண்ணதாசன் ஒரு நூலை விஜயா வேலாயுதம் அவர்களிடம் தந்து வெளியிடுங்கள் என்று தந்த போது,உடனே மறுக்க வேண்டாம் என்று பெற்றுக் கொண்டு, பின்னர் கவியரசரிடம் திரும்ப தந்து விட்டார் விஜயா மு. வேலாயுதம். வானதியிலேயே வெளியிடுங்கள். அது தான் தொழில் தர்மம் என்று கவியரசரிடம் சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்து கவியரசரும் வியந்திருக்கிறார்.
     விஜயா மு. வேலாயுதம் அவர்கள், கடைபிடித்து வரும் தொழில் தர்மம் தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது என்பதை அறிய முடிகின்றது. நூல் முழுவதும் உண்மையை எழுதி இருப்பதால் நம் கண் முன்னே காட்சிகளாக விரிவடைகின்றன. தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை.
     பல நூல்களை விரும்பி வாசிக்கும் வாசகர் விஜயா மு. வேலாயுதம் அவர்கள். ஒரு நல்ல வாசகர் ஒரு நல்ல படைப்பாளியாக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல். மிகச்சிறந்த வாசகர், மிகச்சிறந்த எழுத்தாளர் போலவே சிறப்பாக எழுதியுள்ள நூல் இது.
     மறக்க முடியாத நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் வைத்திருந்து நிகழ்வின் போது உடன் இருந்த நண்பர்களின் பெயர்களுடன் மிக நுட்பமாக எழுதி உள்ளார்.
     இதயம் தொட்ட இலக்கியவாதிகளின் நூலின் மூலம் நம் இதயம் தொட்டு விட்டார் விஜயா மு. வேலாயுதம். ஆளுமைகளின் ஓவியங்கள் மிக நன்று. பல அரிய புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன. மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இதயம் ஒரு கோயில் ! நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum