தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

+3
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
குணமதி
7 posters

Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Mon Nov 08, 2010 4:36 pm


பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?


பாடல்களைப் படிப்போர் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் நோக்கத்தில், பலர், பாடலின் சொற்களை உடைத்துப் பிரித்துத் தனித்தனிச் சொற்களாக எழுதுகின்றனர்.
சிலர் உரைநடை எழுதும்போதும் சொற்களைப் பிரித்து எழுதுவதைப் பார்க்கின்றோம்.

அவனுடனே என்று சேர்த்தெழுதினால் with him என்று பொருள்படும்.
அவன் உடனே என்று பிரித்தெழுதினால் he at once என்று பொருள்படும்.
வந்தானானால் என்று சேர்த்தெழுதினால் if he comes என்று பொருள்படும்.
வந்தான் ஆனால் என்று பிரித்தெழுதினால் He came, but என்று பொருள்படும்.

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு என்று சேர்த்து எழுதினால், நன்மை செய்வதிலுங்கூடத் தவறுண்டாகிவிடும் என்று பொருள்படும்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு என்று பிரித்தெழுதினால், நன்மை செய்ய நினைக்கும் தவறு உண்டு என்று பொருள் மயக்கம் ஏற்பட நேரும்.

எனவே, மிகக் கவனத்தோடு இடமறிந்து பொருள்மயக்கம் ஏற்படாதவாறு சேர்த்தோ பிரித்தோ எழுத வேண்டும்.

பொருள் உணரும் திறன் குறைந்த இக்காலத்தில், பாடல்களில் எல்லாச் சொற்களையும் பிரித்தே எழுதுதல் வேண்டும் என்ற கொள்கை பெரும்பாலானவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கீழே உள்ள கம்பராமாயணப் பாடல் 797-ஐப் பாருங்கள்:

நற்றாயினு நல்ல னெனக்கிவ னென்று நாடி
இற்றேயிறை யெய்தினை ஏய்ந்தது கோடி யென்னாற்
பொற்றாரகன் மார்பத மில்லுழை வந்த போதே
உற்றார்செயன் மற்றுமுண் டோவென வுற்று ரைத்தான்.
இப் பாடலை,

நல்தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி
இற்றே இறை எய்தினை ஏய்ந்தது கோடி என்னால்
பொன்தார் அகல்மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான்.


என்று பிரித்து எழுதுகிறார்கள்; அச்சிடுகிறார்கள். முதல் முறைப்படி எழுதுகையில் நான்கடிகளின் முதற்சீர்கள் நற்றா, இற்றே, பொற்றா, உற்றார் என்றமைந்ததால் ஏற்படும் பாடலின் எதுகை இன்பத்தைப் பிரித்தெழுதுவதால் இழக்கிறோம் என்பது மட்டுமன்றிப் பாடலைப் படைத்தவனின் முழுத்திறமும் பாடலின் முழு நயமும் அறிய முடியாமற் போகின்றது.

எல்லாச் சொற்களையுமே சேர்த்தெழுதுதலும் எல்லாச் சொற்களையுமே பிரித்தெழுதுதலும் இக்காலத்தில் தமிழுக்குச் சிறப்பளிக்காது. தேவையான இடங்களில் பொருள் கெடாதபடி, நிறுத்தக் குறிகளையும் பயன்படுத்திச் சேர்த்தோ பிரித்தோ எழுதலே சிறப்பாம்.

உதவி : பாவாணரின் ‘கட்டுரை வரைவியல்’ நூல். பாவாணருக்கு நன்றி
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 5:17 pm

மிகவும் பயனுள்ள பாடம் நன்றி குணமதி, தொடர்ந்து தோட்டத்து உறவுகளுக்கு கற்று தாருங்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by கலைநிலா Mon Nov 08, 2010 10:30 pm

தமிழ்த்தோட்டம் wrote:மிகவும் பயனுள்ள பாடம் நன்றி குணமதி, தொடர்ந்து தோட்டத்து உறவுகளுக்கு கற்று தாருங்கள்..

நன்றி :shake2
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by நிலாமதி Mon Nov 08, 2010 11:20 pm

தமிழின் சிறப்பு பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by RAJABTHEEN Tue Nov 09, 2010 12:03 am

மிக மிக பயனுள்ளபதிவைத்தந்துள்ளீர்கள் அன்புபாராட்டுக்கள் தொடர்ந்தும் வழங்க அன்போடு வேண்டுகிறேன்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 10:49 am

RAJABDEEN wrote:மிக மிக பயனுள்ளபதிவைத்தந்துள்ளீர்கள் அன்புபாராட்டுக்கள் தொடர்ந்தும் வழங்க அன்போடு வேண்டுகிறேன்
:héhé: சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 12:10 pm

nilaamathy wrote:தமிழின் சிறப்பு பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by parthie Tue Nov 09, 2010 1:47 pm

நன்றி குணமதி பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Thu Dec 02, 2010 12:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மிகவும் பயனுள்ள பாடம் நன்றி குணமதி, தொடர்ந்து தோட்டத்து உவுகளுக்கு கற்று தாருங்கள்..

நன்றி ஐயா.

வாய்க்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 02, 2010 12:03 pm

குணமதி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மிகவும் பயனுள்ள பாடம் நன்றி குணமதி, தொடர்ந்து தோட்டத்து உவுகளுக்கு கற்று தாருங்கள்..

நன்றி ஐயா.

வாய்க்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Thu Dec 02, 2010 12:05 pm

kalainilaa wrote:
தமிழ்த்தோட்டம் wrote:மிகவும் பயனுள்ள பாடம் நன்றி குணமதி, தொடர்ந்து தோட்டத்து உறவுகளுக்கு கற்று தாருங்கள்..

நன்றி :shake2

நன்றி கலைநிலா.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Thu Dec 02, 2010 12:07 pm

nilaamathy wrote:தமிழின் சிறப்பு பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி.

உங்கள் நன்றிக்கு நன்றி நிலாமதி.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Thu Dec 02, 2010 12:09 pm

RAJABDEEN wrote:மிக மிக பயனுள்ளபதிவைத்தந்துள்ளீர்கள் அன்புபாராட்டுக்கள் தொடர்ந்தும் வழங்க அன்போடு வேண்டுகிறேன்

அன்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. வாய்க்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Thu Dec 02, 2010 12:11 pm

இளநெஞ்சன் wrote:
nilaamathy wrote:தமிழின் சிறப்பு பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இளநெஞ்சத்தின் நன்றிக்கு நன்றி.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by குணமதி Thu Dec 02, 2010 12:12 pm

parthie wrote:நன்றி குணமதி பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? 69767

நன்றி பார்த்தி.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி? Empty Re: பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எது சரி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum