தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Yesterday at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm

» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm

» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm

» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm

» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm

» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm

» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா

Go down

ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா Empty ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா

Post by eraeravi Wed Aug 31, 2011 10:58 pm

ஹைக்கூ ஆற்றுப்படை

ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி
(ஹைக்கூ விமர்சனக் கட்டுரை)

கவிஞர் மஞ்சுளா
மணலை எண்ண முடியாது. அதுபோல இன்று கவிஞர்களும் பெருகியிருப்பது
கவிதைக்குப் பெருமையா? கவிஞனுக்குப் பெருமையா? கவிஞர்கள்தான் இன்று
பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஹைக்கூ கவிஞர்கள். ஏனெனில்
மூன்று வரிகளில் மொழியை நம்மிடையே விட்டு விட்டு வாசகனை முன்னூறு நாளும்
சிந்தனையாளானாக்குவதுதானே ஹைக்கூவின் வேலை! கண் பார்த்தவையெல்லாம்
கவிதையாகப் புரண்டு வருகிறது. ஆனால் கவிஞர்கள் விதைகளை தேர்வு
செய்கிறார்கள்.
கவிதையில் ஒரு விதையை வைத்து விட்டால் பின்னால் வருவது விருட்சம்தான்!
கவிதைகளை படிக்கும் போது வேரிலிருக்கும் நீர் கிளையின் நுனிவரை செல்வதுபோல
வாசகன் செல்லுமிடமெல்லாம் கவிதையும் செல்லுமேயானால் அதுவே கவிதையின்
வெற்றியும் ஆகும். இந்த வெற்றியை நிர்ணயிக்கும் தகுதி வெறும் பேனா
முனைக்கு இருக்குமா? கவிஞர்களின் உள்ளார்ந்த உணர்வினாலும் உலக
அனுபவங்களாலுமே இத்தகுதி பெறப்படுகிறது.
உண்மை உணர்வுகளாலும் அனுபவங்களாலும் எண்ணற்ற துளிப்பாக்களை படைத்து துளி
மையில் தீட்டிய கோலங்களை எல்லாம் இணைத்து நூலாசிரியர் தனது துளி மையைக்
கொண்டு தோரணம் கட்டியருப்பதுதான் இந்த ஹைக்கூ ஆற்றுப்படை.
பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரையில் இன்னும் அழகாக மின்னுகிறது
இந்த ஆற்றுப்படை. நூலாசிரியர் அவர்கள் ஹைக்கூக்களை நேசிப்பது போலவே ஹைக்கூ
கவிஞர்களையும் நேசித்திருக்கிறார்.
கவிஞன் கவிதையை மட்டும் படித்தால் போதாது. சக கவிஞனையும் படிக்க வேண்டும்
என்று படித்துப் படித்து நிருபித்துவிட்டதாகவே இந்த தொகுப்பை முழுவதும்
படித்தபோது எனக்குத் தெரிந்தது.
கவிஞனுக்குள் கவிதை நிகழும் தருணங்கள் மென்மையானவை. பலநேரம் வன்மையானவை.
தென்றலாக வருடவும், அம்பாகப் பாயவும் கவிதைக்கும் தெரியும். காலமே கவிதை
தருகிறது. கவிஞனின் காலம் எதுவோ அதுவே கவிதையின் காலம் என்று அறிந்து
கொள்ளலாம். சிறிய படைப்பு காலம் தாண்டியும் பேசப்படுகிறது. இதுவே
ஹைக்கூவின் சிறப்பு.
இந்த இயந்திரமயமான உலகில் எதிலும் வேகம் வேகம் என்று ஓடிக்
கொண்டிருக்கின்ற மக்களிடையே இன்று கவிதையை நிலைபெறச் செய்ய முடியும்? என்ற
கேள்வியும் நம் உள்ளத்தில் எழாமல் இல்லை. ஆனால், கவிதை என்றால்
ஹைக்கூதான்! என்று கவிதையிலும் ஒரு வேகத்தைக் கொடுத்து கழுகுபோல் பறந்து
திரியும் மனிதர்களை பட்டாம் பூச்சிகளாக மாற்றி சற்றே மலர்கள் மீது
அமர்ந்து ஓய்பெடுக்க அழைத்து வருகிறார்கள் இந்த ஹைக்கூ கவிஞர்கள். இந்த
இலக்கிய மலர்கள் இனிய நறுமணத்தை வாசிப்பவர்களுக்கு வழங்குகிறது.
நம் இந்தியத் திருநாட்டில் வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே குமரி
வரையிலும், கிழக்கிலும் மேற்கிலும் ஏற்பட்ட எண்ணற்ற பிரிவினைகள்
சாதிகளாலும் மதங்களாலும் மட்டும் ஏற்பட்டதல்ல. இவற்றையெல்லாம் தன் கையில்
வைத்துக் கொண்ட அரசியல் அதிகார வர்க்கங்கள், அரசியல் அமைப்பை தன் பிடியில்
வைத்திருக்கும் சமயத்தலைவர்கள், மதத் தலைவர்கள், இன்னபிற அதிகார
அமைப்புகள் என இவையனைத்தும் இணைந்தேதான் நம்நாட்டு மக்களை சீர்குலைய
வைத்துவிட்டன. இதை அறியாமல் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே
மடிகின்றனர். இயற்கை அழிப்பு, பொது நலம் குறைந்து சுயநலமே பெரிதென்று வாழ
முற்படுதல், தாய்மொழியை மறந்து அன்னியமொழியை நேசித்தல், உழைப்பாளர்
பிரச்சினைகள், சுரண்டல், மணல் கொள்ளை, பெண்ணுரிமை, பெண்சிசுக் கொலை,
குழந்தைத் தொழிலாளர் பிரச்சைனைகள் என் அனைத்துப் பிரச்சினைகளுமே ஹைக்கூ
கவிஞர்களுக்குப் பாடுபொருளாக உள்ளன. இந்த நூலை ஒருமுறை படித்தால் போதும்
என்ன வளம் இல்லை இந்த ஹைக்கூவில்? என்று கவிஞரே கூறுவது போல,

சிறகுகள் சிறியவைதான்
சிந்தனையோ பெரிது
ஹைக்கூ
என்ற இந்தச் சீரிய சிந்தனை எனக்குள்ளும் தோன்றியது.
ஹைக்கூ படைப்பாக்கத்திலிருந்து தன் சிந்தனையை விரிவுபடுத்தி ஹைக்கூ பற்றிய
தனது தெளிவான விமர்சனங்களையும் துணிவோடு நூலாக்கம் செய்துள்ளார்
நூலாசிரியர்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2642
Points : 6362
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum