தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Tue Feb 23, 2021 10:55 am
» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm
» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm
» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm
» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm
» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm
» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm
» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm
» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm
» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm
» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm
» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm
» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm
» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm
» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm
» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm
» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm
» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm
» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm
» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm
» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm
» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm
» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm
» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm
» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm
» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm
» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm
» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm
» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
அறிவுத் தேடலில் குருவிடம் அமர்ந்து அவர் சொல்வது கேட்டு அறிந்துகொள்வது முதல் வகை. நாமே பல புத்தகங்களையும் படித்து அறிவு பெறுவது இரண்டாம் வகை. கேட்டும், படித்தும் முற்றிலும் தெளிவு பெறாத நிலையில் அதை எழுதிப் பார்த்து அறிய முயற்சிப்பது மூன்றாம் வகை. பலரும் முதல் வகையிலும், சிலரும் இரண்டாம் வகையிலும் பயில, வேறு சிலரோ மூன்றாம் வகையில் அதை முயன்று பார்க்கிறார்கள். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் வெளியீடான திருமதி. கனகம்மாள் எழுதிய நூலில் உள்ள “ஆன்ம போதம் – உரை“, மற்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடான Dr. V.S. நரசிம்மன் எழுதியுள்ள “ஆத்ம போதம்” இவை இரண்டின் துணை கொண்டும் இப்போது நான் எழுத ஆரம்பித்திருக்கும் இந்த “ஆன்ம போதம்” தொடர் அந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தது என்றுதான் நினைக்கிறேன். இத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது எனக்கும் நன்கு புரியவைத்தும், முடிவதற்கு முன்னால் முடிந்தவரை பலரையும் அடைந்து அவர்கள் பலருக்கும் நன்மை தரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
முன்னுரை
எதையும் படித்து அறிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அதில் பல பரிமாணங்கள் இருக்கும். படித்ததை உட்கொண்டு, சிந்தித்து, அசை போட்டு மேலும் நன்கு அறிய முயலும்போது அதற்குத் தேவையான காலம் வேண்டும் என்பது மிக மிக அவசியம். தங்க முலாம் பூசும்போது, மின்சார ஓட்டம் மற்றும் அது ஓடும் காலநேரம் இவ்விரண்டையும் வெவ்வேறு அளவில் வைக்கலாம். ஓரளவுக்கு மின்சார ஓட்டத்தை வைத்துவிட்டு, அது ஓடும் காலத்தை மாற்றிக்கொண்டே போனால் எப்போது காலநேரம் ஓரளவுக்கு மேலே இருக்கிறதோ அப்போதுதான் முலாம் நல்ல பூச்சுடன் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல சரியான கால அளவு என்பது எதிலும் இன்றியமையாத ஒன்று. எதை எப்போது செய்யலாம் என்பதும் கால அளவுதான்.

அதுபோல வேதங்கள் நாம் அறிந்து கொள்ளவேண்டியவைகளின் இறுதி நிலையில் இருக்கிறதென்றால், “பிரஸ்தானத் த்ரயம்” என்று சொல்லப்படும் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத் இவை மூன்றும் அதற்கும் முந்தைய நிலையில் இருந்து நமக்குப் பல விவரங்களைத் தருகின்றன. இதற்கும் முன்பாக “பிரகரண கிரந்தங்கள்” என்னும் முதல் நிலையில் ஆதி சங்கரர் இயற்றிய ஆத்ம போதம், தத்வ போதம் போன்ற நூல்கள் நாம் படிப்பதை மேற்கொண்டு புரிந்துகொள்ள உதவி செய்கின்றன. சாதாரண மக்கள் புரிந்துகொள்வதற்கு இவை மூன்றையும் ஆராய்ச்சி நூல் (Thesis or Reference book), பாட நூல் (Text book), வழிகாட்டி அல்லது கையேடு (Guide or Monograph) என்று மூன்று நிலைகளில் இருப்பதாக ஒப்பிட்டுச் சொல்லலாம்.
அனைவர்க்கும் புரியும்படியாக இன்னும் கொஞ்சம் விவரமான உதாரணம் கொண்டு விளக்கவேண்டும் என்றால், அந்த மூன்று நிலைகளில் இப்படி இருக்கும் என்று சொல்லலாம். ஒரு இடத்தின் பரப்பளவைக் கண்டுபிடிப்பது எப்படி என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேல் நிலையில் அதை அந்த இடத்தின் நீளம், அகலம் இரண்டும் அளந்தால் அதிலிருந்து பரப்பளவு கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கும். இடை நிலையில் அதையே ஒவ்வொரு வடிவமாக எடுத்துக்கொண்டு சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் ஒவ்வொன்றுக்கும் அந்த நீள, அகலங்கள் என்னும் அளவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த மாதிரி உண்டான விதிகளும் விவரமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். கடை நிலையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவத்தையும் பல படங்களாக வரைந்து, ஒவ்வொன்றுக்கும் புரிகிற மாதிரி அளவுகளையும் மாதிரிக்கு எடுத்துக்கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள விதிகளில் மாதிரி அளவுகளை எழுதி பரப்பளவு எவ்வளவு வருகிறது என்று காட்டியும், அத்துடன் வெவ்வேறு வடிவங்களுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும்.
அது போல, வேதத்தில் “பிரம்மம் ஒன்றே” என்று சொல்லியிருந்தால், அடுத்த நிலையான “பிரஸ்தானத் த்ரய”ங்களில் அதை விளக்கி “பிரம்மம் என்பது எங்கும், எப்போதும் இருக்கும் ஆத்மா. அது நீரில் நனையாது, நெருப்பில் எரியாது, வெயிலில் உலராது. அதை வெட்ட முடியாது, அதைப் பிரிக்க முடியாது. அது பிறப்பதோ, இறப்பதோ இல்லை. அதனால் அது என்றும் அழியாதது. அது இருப்பதால்தான் நாம் எல்லோரும் இப்போது இருக்கிறோம். நம் கண்ணுக்கு வெவ்வேறாகத் தெரிவது உடல்களே. மேலே சொல்லப்பட்ட குணங்கள் உடலுக்கு இல்லாததால் உடல் ஆத்மா அல்ல. ஒவ்வொரு உடலின் உள்ளும் இருந்து அதை இயக்கிக் கொண்டிருப்பதுதான் ஆத்மா. ஒவ்வொரு உடலின் உள்ளும் என்று சொன்னாலும், உடல்கள் வெவ்வேறு போல் ஆத்மா வெவ்வேறு அல்ல, ஒன்றேதான். இயக்கும் சக்தி ஒன்றேயாதளால் நாம் அனைவரும் ஒன்றே” என்று இப்படியாக மேலும் விளக்கிச் சொல்லும்.
அதற்கும் அடுத்த நிலையில் இருக்கும் “பிரகரண கிரந்தங்கள்” இவையெல்லாவற்றையும் எளிதில் விளக்க, தினப்படி வாழ்வில் பலருக்கும் மிகவும் அறிமுகமான சாதாரண உதாரணங்களைக் கையாளும். இருளை நீக்கும் ஒளி, கயிற்றில் தெரியும் பாம்பு, சூரியனை மறைக்கும் மேகம் என்ற உதாரணங்கள் எல்லாமே இப்படி அறிமுகம் ஆவது தான். ஒளி வந்தவுடன் இருள் தானாக விலகுவதுபோல பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு அதைப் பற்றிய அறியாமை தானாக விலகுகிறது. அதனால் பிரம்மம் ஒளி போன்றது. பாம்பு என்ற எண்ணம் இருட்டு இருக்கும் வரையில்தான். அங்கு ஒளி வந்ததும் அது கயிறு என்று தெரிகிறது. எங்கோ, எப்போதோ பார்த்த பாம்பு என்ற எண்ணத்தை இங்கு, இப்போது இருக்கும் வேறு ஒரு பொருளின்மேல் படரவிட்டாலும், ஒளி வரும்வரை பார்ப்பவனுக்கு அது பாம்புதான். இப்படியாக பலப் பலவாக இருப்பதைப் பார்க்கும் அறியாமை இருக்கும் வரை, எல்லாம் ஒன்றாய் இருக்கும் பிரம்மத்தை உணரமுடியாது. எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு. மேகம் மறைந்தவுடன் தானே ஒளிரும் சூரியன் தெரிவது போல, தானே தானாய் இருக்கும் பிரம்மம் நாம் செய்யும் கர்மங்களால் இடையில் வந்த நமது உபாதிகள் மறைந்ததும் தானாய் ஒளிரும். இப்படியெல்லாம் உவமானங்களை வைத்துக்கொண்டு மேல் நிலை உண்மைகளை “பிரகரண கிரந்தங்கள்” விளக்கிச் சொல்லும். இப்படியான உண்மைகளும், உவமைகளும் எந்த நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும், நிலைகளில் மேலிருந்து கீழே வர வர விவரங்களும், விளக்கங்களும் மிகுதியாக இருக்கும்.
அதாவது எந்த நிலையிலும் இருக்கும் சங்கதி ஒன்றுதான்; அதன் விளக்கங்களில்தான் அளவிலும், விவரங்களிலும் அந்தந்த நிலைகளில் சொல்லப்படுபவை மாறுபடுகின்றன என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
மங்கலம்
ஆன்மாவின் போதம் அருள் ஆசானாம் சங்கரன் அவ்
வான்மாவுக்கு அந்நியன் ஆவனோ – ஆன்மாவாய்
என்னகத்தே இருந்தின்று தமிழ் சொல்வானும்
அன்னவன் அன்றி மற்று யார்.
வான்மாவுக்கு அந்நியன் ஆவனோ – ஆன்மாவாய்
என்னகத்தே இருந்தின்று தமிழ் சொல்வானும்
அன்னவன் அன்றி மற்று யார்.

முன்பே நாம் பார்த்தபடி, ரமணர் தானாகவே எழுதியது என்பது மிகவும் குறைவு. தெரியாது மறைந்து இயக்கும் ஏதோ காரணங்களால் உந்தப்பட்டு, தெரிந்து அருகில் இருக்கும் எவராலோ அது பற்றி விசாரிக்கப்பட்டு, தானே உதிர்ந்த முத்துக்களைக் கோர்த்து வைக்கும் பணியைத்தான் அவர் செய்தார் என்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும். அது போன்றே இந்தப் படைப்பும் உருவான நிகழ்ச்சியை நம் நினைவில் வாழும் திருமதி. கனகம்மாள் தனது நூலில் எழுதியிருப்பதை அவர் சொற்களிலேயே இங்கு காண்போம்.
“சம்ஸ்க்ருத பாஷை ஓரளவுக்குத் தெரிந்திருந்த முஸ்லீம் பண்டிதர் ஒருவர், ஆதி சங்கரர் சம்ஸ்க்ருதத்தில் இயற்றிய “ஆத்ம போத” ஸ்லோகங்களுக்கு, தமிழ் அனுவாதமாக பாடல்கள் எழுதிப் பிரசுரித்திருந்தார்.
அதில் இரண்டு புஸ்தகங்கள் தபால் மூலமாக ஆஸ்ரமத்திற்கு வந்தன. மௌனி சீனிவாசராவ் தபால் கொண்டு வரும்போது, அத்துடன் சேர்த்து இந்த “ஆத்ம போத” புஸ்தகத்தையும் பகவானிடம் கொடுத்தார். வழக்கம் போல் தபாலைப் பார்த்து விட்டு, பிறகு அந்த புஸ்தகத்தைத் திறப்பதும் பார்ப்பதும் மூடி வைப்பதும், திரும்பப் புரட்டுவதுமாக இருந்தார் பகவான்.
புஸ்தகத்தை அப்படி இப்படி புரட்டும்போது பகவானின் முகத்தைப் பார்த்தால், உள்ளுக்குள்ளே ஏதோவொரு பிரேரேபணை இருப்பதுபோல் தோற்றமிருந்தது. அதன் பிறகு அந்தப் புஸ்தகத்தை லைப்ரரிக்குக் கொடுத்துவிட்டார். பிறகு வேங்கடரத்தினத்தைக் கூப்பிட்டு, சங்கரர் நாகரி லிபியில் எழுதியுள்ள ‘ஆத்ம போத”த்தைக் கொண்டுவரச் சொன்னார். அதை அடிக்கடி புரட்டிப் பார்த்து வந்தார். பிறகு ஒரு காகிதத்தில் இரண்டு பாட்டுக்களை தமிழில் வெண்பாவாக எழுதினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த குர்ரம் சுப்பராமையா என்னும் ஆந்திர பக்தர் (ரமணர் ‘கீதா சாரம்’ எழுதுவதற்குத் தூண்டுகோலாய் இருந்தவர்தான்) பகவானை நோக்கி, “என்ன, பகவான் ஏதோ புஸ்தகத்தைத் திறப்பதும், படிப்பதும், மூடுவதும், எழுதுவதுமாக இருக்கிறதே! அது என்ன புஸ்தகம்?” என்று கேட்டார். அப்போது பகவான் தான் எழுதிய ‘ஆன்ம போத’ சுலோகத்தின் தமிழ் அனுவாதமான இரண்டு பாடல்களை அவரிடம் காட்டினார். அதைப் பார்த்த அவர், “இப்படியே மீதி சுலோகங்களையும் எழுதினால் நன்றாயிருக்குமே” என்றார்.
பகவான் அதற்கு “சரி சரி, அதெல்லாம் எதற்கு?” என்று சொல்லி தட்டிக்கழித்து விட்டார். அதெல்லாம் எதற்கு என்று சொல்லளவிலே தட்டிக்கழித்தாரே ஒழிய, உள்ளே ஏதோவொன்று தூண்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களில் இன்னும் சில பாடல்கள் எழுதி வெங்கட்ரத்தினத்திடம் காட்டி “நாம் எதற்கு எழுத வேண்டுமென்று சும்மாயிருந்தால் இது நம்மை விடாதுபோல் இருக்கிறது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக எதிரே வந்து நிற்கிறது. என்ன செய்கிறது!” என்று சொன்னார். மேலும் சில பாடல்கள் எழுதியபிறகு, வெங்கட்ரத்தினத்தை பார்த்து “இனிமேல் இது நம்மை விடாது ஓய்! புஸ்தகம் தைச்சுக் கொண்டு வாரும்!” என்று சொல்லி தான் எழுதிய மங்கல வெண்பாவையும் அவரிடம் காட்டினார்.
பிறகு சில நாட்களுக்குள்ளாகவே நூல் முழுவதும் 69 சுலோகங்களும் தமிழ் வெண்பாக்களாக எழுதி முடிக்கப்பட்டன. பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்து “நாற்பது வருஷங்களுக்கு முன்னால் முதல் சாமானாக ஏற்பட்ட, அந்த சின்ன மலையாள நோட்டுப் புஸ்தகத்தில் இது இருக்கிறது. அப்போ அதற்கு தமிழில் எழுதவேண்டுமென்ற எண்ணமே உண்டாகவில்லை” என்று கூறினார். “எதற்கும் காலம் வரவேண்டாமா?” என்று ஒரு பக்தர் சொன்னார்.

“வெண்பாக்களாக இதுவரை யாரும் எழுதவில்லை” என்று எதிரில் இருந்த முருகனார் கூறிவிட்டு, மேலும் சொன்னார்; “பகவானுக்கு ஒன்றன் பின் ஒன்று தோன்றுவதில் என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு கல்பத்திலும் வேதங்கள் பிரம்மாவிற்கு எதிரில் தோன்றுமென்பதுதானே புராண வரலாறு. இதுவும் அதைப் போன்றதுதான்!” என்று கூறினார்.
அதற்கு பகவான் சிரித்துக்கொண்டே, “அது சரிதான்! ஜயதேவர் கதையில் வருவதுபோல யாராவது வந்து நான்தான் எழுதினேனென்று சண்டைக்கு வருவார்களோ என்னவோ!” என்று சொல்லி முடித்தார்.
இப்படி (முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்தப்பட்ட) ஒரு ரசமான பின்னணியுடன் இந்த “ஆன்ம போதம்” தமிழில் உருவெடுத்தது. பகவான் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. அந்த சம்பவங்களெல்லாம் யாரும் எழுதி வைக்காததினால் நமக்குத் தெரியவில்லை. ஏதோ சிலவற்றிற்கு மட்டுமே அவை எழுதப்பட்ட காரணங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.”
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
நூல்:
முன்பு ரமணரின் “கீதா சார”த்தில் தந்தது போலவே, இப்போதும் மூல சம்ஸ்க்ருத சுலோகத்தை முதலில் கொடுத்துவிட்டு, அதன் கீழேயே அதைத் தமிழிலும், அதன் பின் ரமணரின் மொழிபெயர்ப்பான தமிழ் வெண்பாவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சொற்களும், மூலத்தில் போல் அல்லாது, படிப்பதற்கு எளிதாக இருக்கும் வண்ணம் முடிந்த வரை சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
(1)
தபோபி⁴: க்ஷீணபாபானாம்ʼ ஶாந்தானாம்ʼ வீதராகி³ணாம்ʼ |
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ sயமாத்மபோ³தோ⁴ விதீ⁴யதே ||
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ sயமாத்மபோ³தோ⁴ விதீ⁴யதே ||
தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய் சாந்தி
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆன்ம
போதமாம் ஈது புகல்
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆன்ம
போதமாம் ஈது புகல்
சில தவங்கள் செய்ததனால் மேலும் பாவங்கள் செய்வதை தவிர்த்தவர்களாகவும், மனத்தில் சாந்தி அடைந்தவர்களாகவும், உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், பிறப்பிறப்புச் சுழல்களில் இருந்து விடுபட விரும்புவோர்களாகவும் இருப்போர்களுக்கு என்று இந்த ஆன்ம போதம் சொல்லப்படுகிறது.
எடுத்த எடுப்பிலேயே சங்கரர் இங்கு நமக்குப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார். இது அக்காலத்திலேயே சொல்லப்பட்ட முறை; இக்காலம் மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருத்தமானது. ஒன்றைச் சொல்லும்போதும், எழுதும்போதும் என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம், எவருக்காகச் சொல்கிறோம், ஏன் சொல்கிறோம் என்று விவரமாக முதலில் சொல்லிவிட்டால் எல்லோருக்கும் நல்லதுதானே? இந்த இலக்கணப்படி என்ன சொல்கிறோம் என்பதில் சொல்லப்போகிற தகவல்களின் குறிப்பு கிடைக்கிறது; எப்படிச் சொல்கிறோம் என்பதில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரும் வாதங்களின் தொகுப்பு கிடைக்கிறது; எவருக்கு என்பதில் கேட்கப்போகிறவரின் தகுதிகள் என்னவாக இருந்தால் சொல்லப்போவது நன்கு விளங்கும் என்று தெரிகிறது; ஏன் என்பதில் சொல்வதைக் கேட்பதால் கேட்பவருக்கு என்ன பயன் என்று மிகவும் தெளிவாகிறது.
முதல் ஸ்லோகத்திலேயே இந்தப் படைப்பின் தலைப்பு “ஆன்ம போதம்” என்றும் குறிப்பிட்டு, இதைப் படிப்பவர்களுக்கு வேண்டிய தகுதிகளையும், அதாவது யார் படிக்கலாம் என்றும், அவர்கள் படித்தால் என்ன பயன் விளையும், அதாவது ஏன் படிக்க வேண்டும், என்றும் விவரமாகச் சொல்கிறார். தகுதிகளைப் பற்றி நாம் மேலும் விவரமாக ஆராயலாம். இதைப் படிப்பவர்களுக்கு ஆன்மாவைப் பற்றிய ஞானம் (போதம்) கிடைக்கும் என்பது இதன் பயன் என்பதை அந்தத் தலைப்பிலேயே கொடுத்துள்ளார்.
மேலே இருக்கும் முதல் செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகளைப் படித்துவிட்டு வாசகர்கள் தனக்குத் தானே எடை போட்டுக்கொண்டு, தான் மேலும் படிக்கும் தகுதி வாய்ந்தவர்களா, இல்லையா என்று குழம்ப வேண்டாம். ஒரு வேளை அந்தத் தகுதிகள் தொடக்கத்தில் இல்லை என்றாலும் கூட, மேலும் படிக்கப் படிக்க அந்தத் தகுதிகளை எப்படிப் பெறுவது, எப்போது பெறுவது என்று தன்னை அறியாமலேயே ஒவ்வொரு மனதிலும் வேர்கள் விட்டுத் தழைத்து அதற்கேற்ற விளைநிலத்தை படிப்பவன் நாட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் எண்ணம் என்பது என் எண்ணம். இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு அதுதான் பயன் என்று நினைக்கிறேன்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
ஒரு வேலைக்கு நேர்காணல் என்று போகும்போது அங்கு நம் தகுதியை எடை போடுபவர்கள் நம்மிடம், இதற்கு முன் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாம். புதிதாக வேலை தேடுபவரிடம் அதை எப்படி எதிர்பார்ப்பது என்று தெரியாமலும் சிலர் அப்படிக் கேட்கிறார்கள். ஆனால் அப்படிக் கேட்பதற்குக் காரணம், வேலை தேடுபவரிடமிருந்து “வேலையில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதைச் சரியாகச் செய்து முடிப்பேன்” என்ற பதிலைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதே போன்று ஆன்மாவைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பும் நாம் அதற்கு வேண்டிய தகுதிகளின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாமே.
1. तपोभि: क्षीणपापानां शान्तानां वीतरागिणां |
मुमुक्षूणामपेक्ष्यो sयमात्मबोधो विधीयते ||
தபோபி⁴: க்ஷீணபாபானாம்ʼ ஸா²ந்தானாம்ʼ வீதராகி³ணாம்ʼ |
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ sயமாத்மபோ³தோ⁴ விதீ⁴யதே ||
தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய் சாந்தி
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆன்ம
போதமாம் ஈது புகல்
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆன்ம
போதமாம் ஈது புகல்
சில தவங்கள் செய்ததனால் மேலும் பாவங்கள் செய்வதைத் தவிர்த்தவர்களாகவும், மனத்தில் சாந்தி அடைந்தவர்களாகவும், உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், பிறப்பிறப்புச் சுழல்களில் இருந்து விடுபட விரும்புவோர்களாகவும் இருப்போர்களுக்கு என்று இந்த ஆன்ம போதம் சொல்லப்படுகிறது.
எவன் ஒருவனுடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டம் வரும். அதுதான் அவன் ஏதேனும் ஒரு மரண சம்பவத்தைச் சந்திக்கும் கட்டம். இது ரமணர் போன்ற ஞானிகளுக்கும் வந்திருக்கிறது; தெருவில் போகும் ஒருவனை இடித்துத் தள்ளியிருக்கக் கூடிய வாகனத்திலிருந்து மயிரிழையில் தப்பியவனுக்கும் வந்திருக்கிறது; வாழ்வில் ஒன்றை மிகவும் எதிர்பார்த்து அது கிடைக்காது அலுத்துப் போய் இறந்து போகலாமா என்று யோசித்தவனுக்கும் வந்திருக்கிறது. அல்லது தான் மிகவும் நேசித்தவர் இறந்ததும் அவரது உயிரற்ற உடலைப் பார்க்கும்போதும் அது வந்திருக்கிறது. இந்த எண்ணம் வருவதற்கு இதுதான் தகுதி என்று எதுவும் கிடையாது. அப்படி வரும்போது மரணத்தைப் பற்றிய அவனுக்குள் உதிக்கும் எண்ணங்கள்தான் அவரவர்க்கு ஏற்ப வகைவகையாய் மாறுகின்றன.
எல்லோருக்கும் ஆரம்பம் பிறப்பு என்றாலும், அவனை மிகவும் சிந்திக்க வைப்பது அவனுக்கு ஒரு நாள் வரக்கூடிய அவனது இறப்புதான். ஏனென்றால் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து ஒருவன் வேண்டியது அனைத்தையும் பெற்றவனுக்கும் மரணம் வருகிறது. அதேபோல வாழ்க்கையை வாழத் தெரியாது தவித்து, இருப்பதையும் இழந்து, இன்னும் என்ன செய்வது என்றும் தெரியாது, இறப்பது ஒன்றுதான் தனக்கு விடுதலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவனுக்கும் மரணம் வருகிறது. ஆக அனைவருமே மரணத்தை வாழ்க்கையின் உறுதியான ஒரு முடிவு என்றே பார்க்கின்றனர். ஆனால் இறப்பைப் பற்றித் தீவிரமாக யோசிப்பவனுக்குத்தான் அது பிறப்பின் மறுபக்கம் என்று தெரிகிறது.
அதாவது பிறந்தால் இறப்பது நிச்சயம் என்றும், அப்போது தான் ஏன் பிறந்தோம் என்ற எண்ணமும் வருகிறது. அப்படி யோசிப்பவனுக்குத்தான் பிறப்பதால் நிச்சயம் வரும் இறப்பு என்ற ஒரு பிறப்பிறப்புச் சுழலில் சிக்காமல் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணமும் கூடவே வருகிறது. அப்படி ஒரு சாகா நிலை இருக்குமானால் அதை எப்படி அடைவது என்ற உந்துதல் இருப்பவனையே முமுக்ஷூ என்று கூறுகிறார்கள். அதாவது இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்.
ஒருவன் இறந்துவிட்டால் அவன் இயற்கை எய்தினான் என்று சொல்கிறோம். தன்னைச் சுற்று முற்றும் பார்த்து இயற்கையில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து பார்ப்பவனுக்கு இதன் உண்மை புரியும். சுற்றியுள்ள மனிதர்கள் தன்னைப் போலவே விதவிதமாய் எண்ணுபவர்கள் ஆதலால், அவர்கள் தங்களது செயலால் தங்கள் சுற்றத்தை மாற்றி அதைத் தங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளமுடிகிறது. அதைச் செயற்கை என்று சொல்லி, அதைச் செய்வதுதான் அவனது இயற்கை என்று தெரிந்துகொள்கிறோம். அதுமட்டும் அல்லாமல் ஒவ்வொருவனும் வெவ்வேறு மாதிரியாக இருப்பவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிறது.
மனிதனைப் போலவே தன் இன விருத்தி என்று ஒரு சில விஷயங்களில் மற்ற ஜீவராசிகள் ஈடுபட்டாலும், மனிதனளவு ஒரு குடும்பம், சமூகம், தேசம், உலகம் என்ற விதவிதமான கட்டுக்கோப்பான வெளிப் பார்வைகள் இல்லாது, பொதுவாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவைகள் வாழ்வதையும் அவன் பார்க்கிறான். ஒரு சில மிருகங்கள் கூட்டாக வேட்டையாடினாலும், வேறு பல விஷயங்களில் சேர்ந்து இருந்தாலும், அவனது பார்வை போல பொதுவாக அவைகளுக்கு இல்லை என்பதால் மட்டுமே அவைகளை ஒதுக்கிவிட முடியாது; அவைகளில் சிலவற்றிற்கு அவனை விடவும் கூர்மையான பார்வையோ, மோப்பமோ, இருளில் காணும் சக்தியோ, அதிர்வுகளை உணர்வதோ அல்லது அதுபோன்ற வேறு சில இந்திரியாதி விஷயங்களிலோ அவனை விடவும் அவைகளுக்குத் தேர்ச்சி இருக்கின்றன என்றும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அவைகள் அப்படி இருப்பது அவனுக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதில் அவனுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. அது மட்டுமல்லாது ஒன்று தனக்குத் தெரியும் என்பதோடு, அது தெரியும் என்பதும் தெரியும். ஆனால் அவைகளுக்கோ ஒன்று தெரியும், அப்படித் தெரிவதாலேயே அவைகள் தங்கள் தினப்படி வாழ்க்கையை நடத்துகின்றன, ஆனால் தனக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் உண்டு. இங்குதான் மனிதன் அவைகளினின்றும் வித்தியாசப்படுகிறான் என்று இதுவரை தெரிந்து வைத்திருக்கிறான். அதாவது ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்.
அந்த ஜீவராசிகளைத் தவிர அவன் தன் சுற்றத்தில் தாவர வகைகளையும் காண்கிறான். மற்றவை போல் அவைகளுக்கு வளர்ச்சி இருந்தாலும், அவை இருக்கும் இடத்தைவிட்டு நகர்வதில்லை. இந்த அசல வகை உயிர்களும் விதையிலிருந்தோ அல்லது வேறு வழியிலோ முளைத்து பூ மலர்ந்து, காய், கனி என்று வளர்ந்து, மறுபடியும் அதில் உள்ள விதைகள் மூலமோ, வேறு முறையிலோ இன்னுமொரு தாவரம் அந்த இனத்தில் வளர்கிறது. இப்படியாகத் தன் இனவிருத்தியை இவைகள் செய்கின்றன. இப்படி தானும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளும் பிறந்து, வளர்ந்து, இறந்து போகும் காட்சியை அவன் இயற்கையில் நடப்பதாகப் பார்க்கிறான். இந்தச் சூழலில் அவன் தன் மரணத்தையும் இயற்கை எய்துவதாகக் கருதுகிறான்.
அப்படிப் பிறக்கும் எந்த ஜீவராசிகளுக்குமே அவைகளின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் அவை வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாக இருக்கிறது. எந்த உணவை எப்படிச் சாப்பிடுவது என்ற விஷயத்தில் மனிதன் மற்றவைகளைவிட மிகவும் வித்தியாசப்படுகிறான். தாவரம் அது இருக்கும் இடத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு, அது தவிர மற்றதற்கு வெளி உதவியைச் சார்ந்து இருக்கிறது. பிராணிகளோ அதன் இரையைத் தேடிப் பெறுகின்றன. அவற்றில் சில தன் இனத்தவரையே கொன்று தின்னவும் செய்கின்றன. சில பிராணிகள் அப்படிச் செய்யாது காய்கனிகளையே சாப்பிட்டாலும், அவை எதுவும் உணவைப் பக்குவப்படுத்தாமல், பறித்து அப்படியே பச்சையாகச் சாப்பிடுகின்றன.

அப்படித் தீர்மானித்த அவன், தான் காணும் உலகம் தன் இந்திரியங்களால் உணரப்பட்டது, அந்த இந்திரியங்கள் உடலுடன் சம்பந்தம் கொண்டவை. அந்த உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும் இருக்கிறது, தான் அந்த உடல் மட்டும்தானா என்ற கேள்வியுடன் தனது ஆராய்ச்சியைத் தொடங்குகிறான். மற்றவர் காண்பதுதான் நம் உடல், அதைத் தவிர அவர்கள் காணாதபடி நமக்கு மனம், அறிவு என்றும் இருக்கின்றன என்று உணர்கிறான். அதாவது உலகத்தில் காணக் கூடியது, காண முடியாதது என்றும் இருக்கின்றன என்று தெளிந்த அவன், மனம் என்பது நமது எண்ணங்களின் தொகுப்பு, “நான்” என்ற அகந்தையே நமது எண்ணங்களால் வளரும் உணர்ச்சிகளின் தொகுப்பு என்று அறிகிறான். அவை தன் இந்திரியங்கள் மூலம் முன்பு பெறப்பட்டது என்றும், அவைகளின் தொகுப்பைத் தவிர தற்போது வரும் இந்திரியங்களின் தகவலுமே அவனது உலகப் பார்வைகளாக உருவாகின்றன என்று தெளிகிறான்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
இவை யாவும் நமது என்று சொன்னாலும், அவை எப்போதும் காணப்படுவதோ, உணரப்படுவதோ இல்லை. அவை யாவும் நம் விழிப்பு நிலையில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனாலும் விழித்திருப்பது தவிர நமக்கு ஆழ்ந்த உறக்கமும், கனவும் ஆகிய இருவேறு நிலைகள் உள்ளன. அவைகளில் நமது அனுபவம் வேறு மாதிரி இருக்கின்றன, ஆனாலும் நாம் நாமாக எப்போதும் இருக்கிறோம் என்றால் நமது உண்மை நிலை என்ன என்று கேட்டு அதை அறிய முயற்சிப்பவன் தான் முமுக்ஷூ. அந்த அறிவைப் பெற முயல்பவன் இந்த ஆன்ம போதம் சொல்லப்போவதைக் கேட்பதற்குத் தகுதியுள்ளவன் ஆகிறான். அந்த வேட்கை தீவிரமாக இருக்க வேண்டும் என்றால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்ததால் அந்த நிலைக்கு வந்திருப்பான் என்றும் சங்கரர் இங்கு கூறியிருக்கிறார்.

எப்போதும் இருக்கும் உண்மையான நிலையைத் தேடுபவனுக்கு வந்து வந்து போகும் இந்த உலகங்கள் எப்படி உண்மையாய் இருக்கும் என்ற எண்ணம் தீவிரமாக வளரும்போது, அவனுக்கு உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாது போகின்றன. இதை “வீதராகிணாம்” என்ற சொல்லால் சங்கரர் குறிப்பிடுகிறார். ஆசை போகிறது என்றால் விரக்தி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்; அவைகளின் மேல் இருக்கும் ஈர்ப்பு வெகுவாகக் குறைகிறது என்று கொள்ளலாம். தினப்படி வாழ்வின் தேவைக்கு மேல் அநாசியமான ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது என்று சொல்லலாம்.
எப்போது உலகியல் விஷயங்களில் ஈடுபாடு குறைகிறதோ, அப்போதே அவை கிடைக்காததால் தனக்கு முன்பு வந்த ஓர் ஏக்கமும், பிறருக்குக் கிடைத்துவிட்டதால் வந்த பொறாமை, கோபம் முதலானவைகளும் போய்விட்டன என்று நம்ப இடம் இருக்கிறது. இவை தவிர மனமும் உண்மை நிலை ஒன்றைத் தேடி ஒரு வைராக்கியத்தோடு இருப்பதால், இவை எல்லாம் ஒருமுகமாகச் சேர்ந்து மனத்தளவில் ஒரு அமைதியைக் கொடுத்திருக்கிறது. இதை “ஷாந்தானாம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
உலக விஷயங்களிலும் முன்பு போல் நாட்டமில்லை, மனமும் அடங்கியிருக்கிறது என்னும்போது தனக்கும், பிறருக்கும் வேண்டிய வேலையை மட்டும் செய்வதால் நல்ல காரியங்கள் தவிர வேறு எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. தான், பிறர் என்ற பாகுபாடு இருந்தால்தானே தனக்கென ஒன்றும், பிறர்க்கு மற்றொன்றும் என்று செயல்கள் வளர்ந்து பாவம் செய்யத் தூண்டியிருக்கும். இப்போதுதான் அப்படி இல்லையே; அதனால் அவர்கள் பாவச் செயல்களை ஒழித்தவர்கள் ஆகிறார்கள். இந்த நிலையை “க்ஷீணபாபானாம்” என்ற சொல் குறிப்பிடுகிறது.
இந்த மாதிரி நிலைமையை அடைந்திருப்போர் பகவத் கீதை சொல்கிறபடி தன் சரீரத்தாலும், வாக்காலும், மனத்தாலும் ஒன்றுபட்டு தவம் செய்திருக்க வேண்டும். அப்படி அவை மூன்றும் நடந்திருக்கவில்லை என்றால் நான் என்ற அகந்தை ஓங்கியும், அதனால் இரட்டைகளான தான்-பிறர் என்ற பாகுபாடும், அதை ஒட்டிய பாவச் செயல்களும் நடந்துகொண்டிருக்கும்.
சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் வரைய வேண்டும் என்பது போல், உலகின் நிலையற்ற தன்மையையும் அதனால் என்றும் உள்ள உண்மையையும் அறிவதற்கு உடலே முதல் காரணம் என்று மட்டும் அல்லாமல் கருவியாகவும் ஆகிறது. முதலில் உடல் அளவில் உலக விவகாரங்களில் ஈடுபட்டு பல அனுபவங்களையும் பெற்று, அப்புறமாக சில சந்தேகங்கள் வரவும் அதைப் பலரிடம் கேட்டும், பேசியும், படித்தும் தெளிந்தும் ஒரு நிலைக்கு வரும்போது, மேற்கொண்டு கேட்டவைகளில் மனதை ஒருமுகப்படுத்தி மேலே செல்வதற்கு என்று ஒன்றன்பின் ஒன்றாக நமது பயிற்சி தொடங்குவதற்கு உடலும், அதைச் சார்ந்த மனமும் கருவிகளாக உள்ளன.

இத்தகைய தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. இவைகள் எல்லாம் ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும். இதனால் பாவச் செயல்கள் குறைந்து மனம் ஓர் அமைதி நிலைக்கு வந்து, அதனால் உலகச் செயல்களில் தேவைக்கு மேல் அதிகமான நாட்டம் நமக்கு இல்லாதபடி செய்து, பிறப்பு இறப்பு என்றால் என்ன என்று நம்மை முன்னே கூறியபடி சிந்திக்க வைக்கும். இத்தகைய தொடர் நிகழ்வுகளால் மட்டுமே ஆன்மாவைப் பற்றிய சிந்தனை பலப்படும்.
என்றும் உள்ள ஆன்மாவை உணர்வது என்பது வெறும் அறிவு பூர்வமானது என்றிருந்தால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துவைத்த வாதங்களைப் படித்ததுமே நாம் ஆன்மாவை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் படிப்பது, சிந்திப்பது என்பதெல்லாமே நமது மனம், அறிவு இவைகளின் மூலம் நடப்பதாலும், என்றும் உள்ள ஆன்மாவை திரை போட்டு நாமே மறைத்து வைத்திருப்பதால் அத்திரையை அகற்ற முயற்சி செய்வதே இந்தச் சிந்தனையின் முதல் பயன் என்பதாலும், நாம் அறிவு கொண்டு ஆன்மாவை உணரமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
பேரறிவு ஒளிரவேண்டும் என்றால் ஒளிரவேண்டியதுதானே? அது ஒன்றே உண்மை என்றால் பொய்யாகிய திரை எப்படி குறுக்கே நிற்க முடியும்? அது ஏன் வருகிறது? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாம். இப்போதைக்கு அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டாம். ஏனென்றால், இவைகளுக்கு பதில் சொன்னால் புரிவதற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் விவரங்கள் தேவை. அதனால் மேலே போவோம்.
2.
बोधोsन्यसाधनेभ्यो हि साक्षान्मोक्षैकसाधनम् |
पाकस्य वह्निवज्ज्ञानं विना मोक्षो न सिध्यति ||
बोधोsन्यसाधनेभ्यो हि साक्षान्मोक्षैकसाधनम् |
पाकस्य वह्निवज्ज्ञानं विना मोक्षो न सिध्यति ||
போ³தோ⁴sந்யஸாத⁴னேப்⁴யோ ஹி ஸாக்ஷான்மோக்ஷைகஸாத⁴னம் |
பாகஸ்ய வஹ்னிவஜ்ஜ்ஞானம்ʼ வினா மோக்ஷோ ந ஸித்⁴யதி ||
பாகஸ்ய வஹ்னிவஜ்ஜ்ஞானம்ʼ வினா மோக்ஷோ ந ஸித்⁴யதி ||
அறிவொன்றே நேர்முக்தி சாதன மாகும்
பிற சாதனங்களின் பேறாம் – அறிவின்றி
ஆகாது முக்தியுறல் அக்கினியின்றிப் பாகம்
ஆகாதவாறு என்று அறி
பிற சாதனங்களின் பேறாம் – அறிவின்றி
ஆகாது முக்தியுறல் அக்கினியின்றிப் பாகம்
ஆகாதவாறு என்று அறி
[எப்படி மற்ற எல்லாப் பொருட்கள் இருந்தாலும் நெருப்பு இல்லாமல் சமையல் செய்யமுடியாதோ, அப்படியே ஞானம் இல்லாது ஒருவனுக்கு முக்தி சித்திக்காது. ஏனென்றால் மற்ற வழிகள் எல்லாவற்றையும் விட தன்னைப் பற்றிய ஞானம் ஒன்றுதான் முக்தி அடைய நேர்வழி ஆகும்.]
இந்தச் செய்யுளில் ரமணர் “அறிவு” என்ற சொல்லை பேரறிவை உணர்த்தும் ஞானம் என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார். முன்பகுதியில் ‘அறிவு’ என்பதை நமது மூளையால் அலசப்பட்டு நமக்கு வரும் “knowledge” என்ற சொல்லைக் குறிப்பிடப் பயன்படுத்தினேன்.
இந்தச் செய்யுளை அலசுவதற்கு முன்னால், நாம் சிறிது பின்னோக்கி ஆதி சங்கரர் காலத்துக்குச் செல்லவேண்டும். அவரது காலத்தில் பற்பல சித்தாந்தக் கருத்துகள் பரவியிருந்தன. அவற்றில் ஒன்று பூர்வ மீமாம்ச வாதம். அதன்படி வேதத்தின் நோக்கம் ஒருவன் செய்யவேண்டிய கர்மங்களை விவரமாகக் கூறுவதே. அந்த முறைப்படி செய்யப்படும் எந்த விதமான யாகம், யக்ஞம் போன்ற கர்மத்திற்கும் பலன்கள் உண்டு. ஆதலால் அதற்கென்றே உண்டான சில யக்ஞங்களைச் செய்து ஒருவன் முக்தி நிலையையும் அடையலாம் என்பதே அவர்களுடைய நிலை. அவர்களுக்கு கர்மம் வெறும் ஜடம், அதற்குப் பலன் தருவது கர்மபல தாதாவாகிய இறைவன் என்பதை வாதங்கள் செய்து நிரூபித்து, அவர்களில் சிலரை, பாரதம் முழுதும் சுற்றி வந்து, தான் பரப்பிக் கொண்டிருந்த அத்வைத மார்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஆதி சங்கரர். அப்படி மாறி வந்தவர்களில் ஒருவரான மண்டன மிஸ்ரர் என்பவர்தான் சுரேச்வராசார்யர் என்று பெயர் மாறி ஆதி சங்கரரின் பிரதம சீடர்களில் ஒருவராகி, சிருங்கேரி சங்கர மடத்தின் முதல் ஆச்சாரியராக நியமிக்கப்படுகிறார்.

நால்வரில் ஒருவரான மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகத்தில் வரும் “திருவுந்தியார்” பாடலைப் போன்று எழுதப்பட்டதுதான் ரமணரின் “உபதேச உந்தியார்” நூலும். அதன் ஒவ்வொரு பாடலிலும் கடைசியில் வரும் “உந்தீபற” என்ற சொல்லினால்தான் அந்த நூல் “உந்தியார்” என்ற வகையிலும் வருகிறது. இந்தச் சொல்லை, ஒரு பாடலின் இலக்கணப்படி அதன் அசை அளவைச் சீர் செய்ய வரும் என்னோ, கொல்லோ போன்று வரும் இன்னுமொரு அசைச் சொல் என்பார்கள். வேறு சிலரோ இந்த ஈரசைச் சொல்லை “உந்தி” என்றும் “பற” என்று இரண்டாகப் பிரித்தும் பொருள் கொள்வார்கள்.
அதன்படி முமுக்ஷூ ஒருவன் அந்த அளவுக்கு விவேகம் கொண்டு, வேகத்தோடு “உந்து”வதால் அடையும் திறன் கொண்டு, அவன் “பற”க்கும் நிலைக்கு வரவேண்டும் என்றும் பொருள் கொள்வார்கள். ஓர் ஆகாய விமானம் தரையில் வேகமாகச் சென்று உந்திக்கொண்டு பறக்கும் நிலையை அடைவது போன்றதுதான் இதுவும். இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தரை வழியாக ஓர் இடத்தை அடைவதைவிட ஆகாய மார்க்கமாக அங்கு அடைவது ஒரு நேர் கோட்டில் செல்வதாகவும் இருக்கிறது, அதே சமயம் தரையில் இருக்கும் மலை, ஆறு போன்ற பல தடைகளையும் தாண்டுவதாகவும் அமைகிறது. அதே போன்று இங்கும் இந்த ஞான மார்க்கத்தில் சென்றால் உடல், மனம் இவைகளினால் வரும் தடைகளையும் தாண்டி, நேராக முக்தி நிலையை அடைய முடிகிறது. இது அர்ஜுனன் பறவையைக் குறிபார்த்து அம்பெய்தும் போது, அதன் கண் மட்டும்தான் தெரிகிறது, வேறெதுவும் தெரியவில்லை என்பது போலவும்தான்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
முக்தியடைய வெவ்வேறு வழிகள் சொல்லப்பட்டிருப்பதன் காரணமே ஒவ்வொருவரும் அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றார்கள் என்பதே. பலருக்கும் தன் வாழ்க்கையின் பயனைப் பற்றியோ, அல்லது அதன் காரணத்தைப் பற்றியோ யோசனை வருவதில்லை. எல்லோருக்கும் வாழ வேண்டும் என்றும், வாழ்க்கையில் சுகமாய் இருக்க வேண்டும் என்ற ஆவல் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் எதைச் செய்தால் அந்த சுகம் கிடைக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதென்றால், பலரும் உலகை ஒட்டியும் அதன் பலப்பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி சிலவற்றை அடைவதிலும், வேறு சிலவற்றை ஒதுக்குவதிலும் இன்பம் காண்கிறார்கள். அப்படி அவர்கள் செல்லும்போது விரும்பியதைத் தான் அடையாதபோதும், அதே சமயம் மற்றவர்கள் அதை அடையும்போதும் அவர்கள் துன்பம் அனுபவிக்கிறார்கள். அதே சமயம், தான் விரும்பியதைப் பெற்றாலும், அதை இன்பத்துடன் அனுபவித்த நாட்கள் கொஞ்சம் கழிந்ததும், அவர்களுக்கு அந்தப் பொருள்கள் மேல் இருந்த ஆர்வம் குறையவே, அவைகளுக்குப் பதிலாக வேறு பொருள்களை நாடுகிறார்கள். இப்படியாக அவர்கள் நாடுதல்- இன்பம்- தவிர்த்தல் என்ற ஒரு சக்கரச் சுழற்சியில் வாழ்நாளைக் கழிக்கின்றார்கள்.
ஒன்றன்பின் ஒன்றாகப் பொருளும் மாறி, அதன் மேல் உள்ள ஆசையும் மாறி ஒரு விதமாக ஓயும்போதும், அல்லது என்னதான் முயன்றும் ஏதும் நாம் ஆசைப்பட்டது கிடைக்காமலோ, கிடைத்தும் அதை அனுபவிக்க முயலாமல் போவதாலோ விரக்தி வரும்போதும், ஒருவனுக்கு உலகின் மீதும் அதன் பொருள்களின் மீதும் உள்ள கண்ணோட்டம் நாளடைவில் மாறுகின்றன. எது செய்கிறதோ இல்லையோ, காலம் இந்த நிலைக்கு ஒருவனைத் தள்ளிக்கொண்டு வரும். சிலருக்கு இந்தக் கால அளவு குறைவாகவும், வேறு சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கலாமே தவிர கடைசியில் ஒருவன் இந்நிலைக்கு வந்தே ஆக வேண்டும். அப்போதும் ஒருவனது மனோநிலையைப் பொருத்தே அவன் எப்படி மாறுவான், அடுத்து என்ன செய்வான் என்பதும் இருக்கிறது. ஏனென்றால் எந்த நிலையிலும் மனிதன் மனிதன் தான். அவனது மிஞ்சியிருக்கும் ஆசாபாசங்களைப் பொருத்தே மேலே வரப்போவது அமையும்.
அப்படிப் பல நிலைகளைக் கடந்து வந்த முமுக்ஷூ தான் செய்த தவங்களின் பலனாய் அவனுக்குக் கிடைத்த பல வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன்படி சென்று கொண்டிருக்கும்போது முன்பு அவன் காணாத பல அனுபவங்களையும் பெறுகிறான்; புதிய சூழ்நிலைகளையும் எதிர்நோக்குகிறான். முன்பு உலகக் காரியங்களில் ஈடுபட்ட போது காரணம்-விளைவு என்று நடந்ததுபோலவே இப்போதும் நடக்கிறது என்றும், ஆனால் விளைவுகள் வெறும் தூலமாக இல்லாமல் மேலும் நுண்ணியதாக அமைகின்றன என்றும் உணர்கின்றான். அதாவது எதைக் கொடுக்கிறானோ அதற்கேற்றாற்போல் ஒன்றைப் பெறுகிறான். அப்படிக் கொடுப்பதால் பெறுவது என்றவொரு நிலை இல்லாமல், எப்போதும் இருப்பது என்பது என்ன என்று அவன் ஆராய முயற்சிக்கும்போது அவன் ஏதும் கொடுக்காமல் அதனால் எதுவும் பெறாமலும், ஆனால் அந்த நிலையை அனுபவித்துக்கொண்டு வெறுமனே இருப்பது என்றால் என்ன என்ற அந்த நிலைக்கு அவன் தயாராகிறான். இப்படியாகப் பல விதங்களிலும் உலகக் காரியங்களில் ஈடுபட்ட அவன், தன் அனுபவங்களால் உந்தப்பட்டு, பின் தான் கண்ட பல வழிகளிலும் வாழ்வின் உண்மையை உணரத் துடித்து, இறுதியில் தன் இருப்பு என்னும் அனுபவத்தைக் காணும் நிலைக்கு வருகிறான்.
முமுக்ஷூவுக்குப் பல வழிகள் இருந்தன என்று சொன்னோம். அதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
பலரும் செல்லும் பக்தி வழியின் முக்கிய அம்சம் இறைவனிடம் சரண் அடைவது. இது வெறும் சொல்லளவிலே மட்டும் இல்லாது மனத்தளவில் ஆழமாக இருந்தால்தான், அது பரிபூரண சரணாகதி ஆகும். அப்படி இருந்தால் சரணடைந்தவன் நான் தான் இறைவனிடம் சரணடைந்துவிட்டேனே, எனக்கு இது நடக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே என்று நினைக்கவும் மாட்டான், சொல்லவும் மாட்டான். அப்படிச் சரணடையும்போது மனம் பூரண அமைதி கொள்ளும். அப்போது அந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருப்பவன் யார் என்று கேட்டால் அவனால் என்ன சொல்லமுடியும்? நான் என்று சொல்வானா அல்லது இறைவன் என்பானா, அல்லது இறைவன் தன்னுள் இருப்பதால் என்பானா? அப்படியே எதுவும் சொன்னாலும் முன்பு இறைவன் அவனுள் இல்லாது போயிருந்தானா, இல்லாது போய் இருந்தால் அப்போது அவன் என்னவாய் இருந்தான் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் வரும்? ஆக பக்தி வழி மன அமைதியைக் கொடுக்கும் என்பதோடு சரி. அமைதியாய் இருக்கும் அவன் யார் என்பதற்கு அங்கு பதில் இல்லை. பக்தி வழியில் வரும் பெரும்பாலானோரின் செயலாக பூஜையையும், ஜெபத்தையும் எடுத்துக்கொண்டு, ரமணர் அவைகளை முறையே உடலாலும், வாக்காலும் செய்யப்படும் கர்மம் என்பார்.

மேலே சொல்லப்பட்ட முறைகள் எல்லாமே ரமணரைப் பொருத்தவரை விதம் விதமான கர்ம யோகங்கள்தான். இவை தவிர, செய்யப்படும் எந்தச் செயலும் இறைவனுக்காக என்றும், இறைவன் நமக்குக் கொடுத்த சக்தியால் என்றும் கருதிச் செய்வதையே குறிப்பாக கர்ம யோகம் என்கிறார்கள். மேலே சொன்னதுபோல இதுவும் நிச்சயம் கதி வழி காட்டும். மன அமைதியையும் கொடுக்கும். ஆனாலும் நாம் செய்யும் கர்மத்தோடு பந்தப்பட்டது போல, அதாவது கட்டுண்டது போல, ‘நாம் செய்கிறோம்’ என்கிற நினைப்பு நமக்குச் சிறிதாவது இருக்கலாம். அதிலிருந்தும் கர்மத்திற்கு உண்டான விளைவுகளை எதிர்பார்ப்பதில் இருந்தும் நமக்கு விடுதலை கிடைக்குமா என்றால் அது நாம் செய்யும் கர்மத்தால் இல்லை என்பதே பதில். விடுதலை அல்லது முக்தி வேண்டுமானால், அதற்கு உரிய மனோநிலையும், அறிவும் வேண்டும். வெறும் கர்மத்தால் அது ஆவது இல்லை. மேலும் கர்மத்தில் ஈடுபடுவதால் அதன் நேரடி விளைவாக ஆன்மாவைப் பற்றித் தெளியலாமா என்றால் அதுவும் இல்லை.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
சாஸ்திரங்கள் சொல்கிறபடி கர்மங்கள், அதன் விளைவுகளையும், முறைகளையும் பொருத்து நான்கு வகைகளில் இருக்கின்றன.
ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறலாம். இது ‘ஆப்ய கர்மம்’ எனப்படுகிறது. அதாவது ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று அரிசி வாங்குவதையும், ஒரு பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆன்மா ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்று இல்லாததால் ஆன்மாவை அப்படி அடைய முடியாது.
கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது ‘உத்பாத்ய கர்மம்’ எனப்படுகிறது. ஆன்மா இப்போது இல்லாது வேறொரு சமயத்தில் கிடைக்கும் என்பதும் கிடையாது. ஏனென்றால் ஆன்மா எங்கும் அல்லாது எப்போதும் இருப்பது.
மூன்றாவது வகையான கர்மம், ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது ‘விகார்ய கர்மம்’ எனப்படுகிறது. இது பாலைத் தயிராக மாற்றிக் காட்டுவது போலத்தான். ஆன்மாவை அப்படி மாற்றுவதற்கு முன்பு ஓர் உருவம், பின்பு வேறொன்று என்று அதற்குக் கிடையாது என்பதால் ஆன்மாவை அப்படியும் அறிய முடியாது.
நாலாவதாக ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்கினால் அந்தப் பொருளை நன்கு காணலாம். அதற்கு ‘சம்ஸ்கார்ய கர்மம்’ என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவில் அசுத்தம் என்று ஏதும் கிடையாது. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே. ஆக இந்தக் கர்மம் செய்தும் நாம் ஆன்மாவை உணர முடியாது.
இப்படியாக எந்த விதமான யோக முறைகளைப் பின்பற்றினாலும் அதைச் செய்வதில் மனம் ஈடுபடுவதால், மனத்திற்குச் சாந்தி கிடைக்கும். ஆக எல்லா வழிகளும் நன்மை தருபவையே. ஆனால் ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்து முக்தி நிலை அடைவதற்கு ஞானம் ஒன்றே நேரடியான சாதனம்.
சமையல் செய்வதற்கு பாத்திரம், அடுப்பு, பல வகைச் சாமான்கள், தண்ணீர் என்று எல்லாம் வேண்டும் என்பது போல மேலே சொன்ன வழிகள் எல்லாமே பயன் தரும் என்கிறார் சங்கரர். இங்கு முக்கியமாக என்ன இல்லை என்றால் அடுப்பை உபயோகிக்க வேண்டும் என்றால் நெருப்பு வேண்டுமல்லவா, அது இல்லாதுபோனால் மற்றவை இருந்து என்ன பயன்? அதேபோல மன அமைதி, உலகில் பற்றில்லாமை, நுண்ணிய அறிவு என்ற மற்றதெல்லாம் இருந்தும் அமைதி கொள்பவன் யார், பற்றில்லாதிருப்பவன் யார், அறிவுடன் இருப்பவன் யார் என்ற அந்தத் தேடல் இல்லாதுபோனால் மற்றவை இருந்தும் பயன் இல்லை என்கிறார். ஆகவே அந்தத் தேடலின் மூலம் நமக்கு சித்திக்கும் ஞானம் இல்லாது போனால் மற்றவை பயனில்லை என்று ஆகிறது.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
சாத்திரங்களில் பலவிதமான கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. முறைப்படி செய்தால் ஒவ்வொன்றுக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பதும் உண்மை. அஷ்டமா சித்திகளும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். அதாவது, செய்யப்படும் கர்மத்திற்கு அதன் விளைவு என்று ஒன்றிருக்கிறது, அவைகளை அனுபவிப்பவன் என்றும் ஒருவன் இருக்கிறான். கர்மங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு அதற்கான பலன்களையும் தொடர்ந்து அனுபவிப்பவன் என்ற நிலைதான் அவனுக்கு மிஞ்சுமே தவிர, அதனால் அவனுடைய முக்திக்கு வேண்டிய அறிவு கிடைக்காது. கர்மங்கள் செய்து கொண்டிருப்பதால் அவைகளைச் செய்பவனுக்கு, தான் செய்கிறோம் என்ற கர்வம் தலைக்கேறவும் வாய்ப்பு இருக்கிறது. அது தூலமாகவும் இருக்கலாம், நுண்ணியதாகவும் மாறலாம்.
தூலமாக இருக்கும்போது அவனது அகந்தை வெளிப்படையாக மற்றவர்களை விரட்டுவது, உதாசீனமாகப் பார்ப்பது என்று இவ்வாறாகத் தெரியும். நுண்ணியதாக மாறும்போது, இவ்வளவு செய்திருக்கிறேனே அதற்கு இதுதானா பலன் என்று புலம்புவதாகவோ, இவ்வளவு என்னிடம் வாங்கிக் கொண்டார்களே அதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று அரற்றுவதாகவோ ஆகிவிடும். அதனால் கர்மம் செய்பவன் எந்த மனநிலையில் செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி செய்பவனுக்கே ஞானம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
3. अविरोधितया कर्म नाविध्यां विनिवर्तयेत् |
विध्याविध्यां निहन्त्येव तेजस्तिमिरसंघवत ||
विध्याविध्यां निहन्त्येव तेजस्तिमिरसंघवत ||
அவிரோதி⁴தயா கர்ம நாவித்⁴யாம்ʼ வினிவர்தயேத் |
வித்⁴யாவித்⁴யாம்ʼ நிஹந்த்யேவ தேஜஸ்திமிரஸங்க⁴வத ||
வித்⁴யாவித்⁴யாம்ʼ நிஹந்த்யேவ தேஜஸ்திமிரஸங்க⁴வத ||
அறியாமைக்குப் பகை அன்று அதனால் கன்மம்
அறியாமை தன்னை அகற்றாது – அறிவே
அழிக்கும் அறியாமை ஒளி அந்தகாரக் கும்பு
ஒழிக்குமாறு என்றே உணர்
அறியாமை தன்னை அகற்றாது – அறிவே
அழிக்கும் அறியாமை ஒளி அந்தகாரக் கும்பு
ஒழிக்குமாறு என்றே உணர்
அஞ்ஞானம் போக வேண்டுமென்று செய்யப்படும் கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படக் கூடியதால் அது ஒன்றே ஞானம் எனக்கு இல்லை என்ற அறியாமையைப் போக்கும். காரிருளை நீக்குவதற்கு எப்படி ஒளி தேவைப்படுகிறதோ அப்படியே அஞ்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் தேவைப்படுகிறது.

கும்மிருட்டைப் போக்குவதற்கு ஒளி தேவைப்படுவது போல தனக்கு ஞானம் இல்லை என்ற அறியாமையைப் போக்குவதற்கு வேண்டியதே ஆன்ம அறிவு; அதைக் கர்மத்தால் செய்யமுடியாது என்று இதைச் சுருக்கமாகச் சொல்லாம். கர்மங்களைப் பற்றி விலாவாரியாக வரும் சாத்திரங்களில், ஞானம் பெறுவதற்கும் ஏன் ஒரு கர்மம் சொல்லப்படவில்லை என்றால் அதன் காரணமே அப்படிச் செய்யமுடியாத காரியம் அது என்பதால்தான். எந்தக் கர்மமும் ஒருவனுடைய மனத்தின் ஈடுபாட்டால்தான் முடியும். ஆனால் ஆத்ம ஞானத்தின் முதல் படியே மனத்தைப் பற்றி விசாரிப்பதே. அதனால் கர்மம் செய்வதின் மூலம் அறிவது என்பது மனத்தைக்கொண்டே மனத்தைப்பற்றி விசாரிப்பது என்பதால், அது ஒரு திருடன் திருடனைப் பிடிப்பது போன்றது. அது முடியுமா? அது நாடகத்தில் வேண்டுமானால் நடக்கும், ஆனால் நடக்கும் வாழ்க்கையில் ஒருபோதும் நடப்பதில்லை
கர்மம் என்பது ஒரு வேலையில் ஒரு குறிக்கோளோடு ஈடுபடுவது. அது வேலை செய்யாது சோம்பேறித்தனமாக இருக்கும் தமஸ் நிலைக்கு எதிரானது. ஆகவே கர்மம் தமஸ் நிலைக்கு எதிரி. கர்மம் தொடங்கியதும் தமஸ் நிலை முடிவடைகிறது என்று சொல்லலாம். ஆனால் கர்மம் செய்வதால் ஞானம் வரும் என்று எப்படிச் சொல்லமுடியும்? அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது இல்லையே. மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கிற வாழ்க்கையின் பயன் என்ன என்று கேள்வி கேட்டு, அதன் தொடர்பாக தனது வெவ்வேறு நிலைகளையும் அலசிப்பார்த்துவிட்டு, அவை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக “நான் இருக்கிறேன்” என்ற ஒரு தொடர் உணர்வு என்பதென்ன என்ற தேடலில் இருக்கும் முமுக்ஷூவிற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உள்ள கர்மம் எப்படிஒரு தொடக்கமோ முடிவோ இல்லாத ஞானத்தைப் பற்றி அறிய உதவும்?
நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டும்; ஏனென்றால் அவை ஒன்றுக்கொன்று எதிரி. அங்கு தண்ணீருக்குப் பதிலாக மண்ணெண்ணையோ, பெட்ரோலோ உபயோகப்படுத்தினால் என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமா? அதே போன்று அறியாமையைப் போக்க கர்மம் என்றால், நாம் முன்னே பார்த்தவாறு அகந்தை வேறு விதமாக வளர்ந்து, இருக்கும் பிரச்சினைகளை மேலும் வளர்க்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
இருளும் வெளிச்சமும் ஒன்றுக்கொன்று முரணானவை. அதனால் இருட்டைப் போக்குவதற்கு ஒளி கொண்டு வந்தால் போதும். இருட்டைப் போக்க இருட்டால் முடியாது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வதுபோல “உன்னுடைய இதயம் என்னும் குகையில் அஞ்ஞானம் என்னும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. ஞானம் என்னும் வெளிச்சத்தை ஏற்றிவை. அஞ்ஞானம் தானே அகன்று விடும்” என்றபடி செய்வதுதான் சரியான வழி.

இருளுக்கு என்று ஒரு தனி இருப்பு கிடையாது. எங்காவது இருட்டைக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த இடத்திற்கு வரும் ஒளியை மறைக்கும் செயலைச் செய்வது ஒன்றே அந்த வழி. ஆக ஒளி தானே தானாக இருக்க முடியும், ஆனால் இருள் அப்படியல்ல. அதனால் ஓரிடத்தில் ஒளி வரவேண்டும் என்றால் அந்த இடத்தில் இருக்கும் மறைப்புகளையும், திரைகளையும் விலக்க வேண்டும் என்பதுதான் ஒருவன் செய்ய வேண்டியது. அப்படி ஒளி வந்ததும் இருள் எங்கே போயிற்று? எங்கேயும் போகவில்லை. இருள் என்று ஒன்று இருந்தால்தானே அது எங்கேயாவது போவதற்கு! அதனால் இருள் என்பதை மாயை என்பார்கள். இருட்டையே பார்த்துக்கொண்டு இருப்பவன் இருள் உண்மையாகவே இருக்கிறது என்றுதான் சொல்வான். கொஞ்சம் யோசித்தால்தானே அதன் உண்மை புலப்படும். உண்மையில் நடந்தது என்னவென்றால், ஒளி இல்லாத இடத்திற்கு ஒளி வந்தது என்று சொல்வதுதானே பொருத்தம்? அதுபோலத்தான் அறிவு-அறியாமை என்ற இரட்டையின் குணமும்.
ஆன்மாவைப் பற்றிய ஞானம் என்பது மட்டுமல்ல; எந்த வகையான உலகியல் அறிவைப் பொருத்தும் அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது. ஆனாலும் மற்ற உலகியல் அறிவுக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் முன்னது தன்னை விட்டு மற்றவைகளைப் பற்றி அறிவது, பின்னதோ அறிவுறும் தன்னைப் பற்றியே அறிவது. எப்படி ஒருவன் தானே திருடனாகவும் தானே போலீசாகவும் இருக்கமுடியும் என்பதுதானே உங்கள் சந்தேகம்? மேலும் படித்துப் புரிந்துகொள்ளலாம்.
4. परिच्छिन्न इवाज्ञानात्तन्नाशे सति केवलः |
स्वयम् प्रकाशते ह्यात्मा मेघापायेंsशुमानिव ||
स्वयम् प्रकाशते ह्यात्मा मेघापायेंsशुमानिव ||
பரிச்சி²ன்ன இவாஜ்ஞானாத்தன்னாஸே² ஸதி கேவல: |
ஸ்வயம் ப்ரகாஸ²தே ஹ்யாத்மா மேகா⁴பாயேம்ʼsஸு²மானிவ ||
ஸ்வயம் ப்ரகாஸ²தே ஹ்யாத்மா மேகா⁴பாயேம்ʼsஸு²மானிவ ||
அறியாமையால் மறைவானது போல் ஆன்மா
அறவே அஹ்து ஏகமதாகி – நிறைவாய்
இலகுமே தானாய் இரியவே மேகம்
இலகும் ஆதித்தன் எனவே
அறவே அஹ்து ஏகமதாகி – நிறைவாய்
இலகுமே தானாய் இரியவே மேகம்
இலகும் ஆதித்தன் எனவே
எங்கும் இருக்கும் ஆன்மா அதைப் பற்றிய அறியாமையால் ஏதோ எல்லைக்குள் அடக்கப்பட்டது போல் மறைந்து கிடக்கின்றது. அந்த அறியாமை அழிந்ததும், மேகத்தால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மேகம் கலைந்ததும் எப்படி பளிச்சென்று தெரியுமோ, அப்படியே இருக்கும் ஒன்றேயான ஆன்மா பரிபூரணமாகப் பிரகாசிக்கும்.
ஏதோ ஒன்று புதிதாக அடையப்பட வேண்டியது என்றால், அது முன்னதாக இல்லாது இருந்தது என்றாகிறது. நம் உடல் அப்படிப்பட்டதுதான். முன்பு இல்லாது இருந்தது, பின்பும் இல்லாது போகிறது. ஆன்மா அப்படிப்பட்டதாக எப்படி இருக்க முடியும்? நாம் இருக்கும் ஒன்றைத்தானே தேடுகிறோம். ஏனென்றால் நாம் முன்பு பார்த்த நமது வெவ்வேறு நிலைகள் எல்லாம் வந்து வந்து போய்க்கொண்டு இருந்தனவாக உணர்ந்தோம். அதனால் அவை அனைத்துக்கும் ஆதாரமாய் இருக்கும் ஒன்றைத் தேடுகிறோம் என்றுதானே சொன்னோம். அந்த ஆதாரமே இல்லை என்றால் நாம் இருப்பது எப்படி? நமது ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் இருப்பதை உணராதபோதும், நாம் இருந்திருக்கிறோம். அது மட்டுமல்ல, அதை அனுபவித்தும் இருக்கிறோம். இல்லையென்றால் நாம் விழித்தபின் சுகமாக உறங்கினோம் என்று சொல்லமுடியாது. எப்போதும், எந்த நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதனால் மாறாத ஒரு நிலை இருந்தாக வேண்டும். அதனால் இல்லாத ஒன்றை நாம் புதிதாகத் தேடவில்லை. இருக்கும் அதை எப்படி உணர்வது என்று தெரியாததால் தேடுகிறோம் என்பதுதான் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை.
அதாவது நமக்குத் தெரியாமல் இருப்பதைத்தான் அறியாமை என்கிறோம். சாஸ்வதமான ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நம் அனுமானம். ஏனென்றால் அது இல்லையென்றால் நாமும் இல்லை என்றாகிவிடும். நமது மற்ற நிலைகளை எல்லாம் கடந்தும், அவைகளை உள்ளடக்கியும் இருக்கும் ஒன்று ஏதோ காரணங்களால் தெரியாதபடி மறைந்து இருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன, ஏன், எப்படி என்று கேட்பது இருக்கட்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கியதால் பரந்து விரிந்து இருக்கவேண்டிய அது, மறைந்து இருப்பதால் ஒரு எல்லைக்குள் குறுக்கப்பட்டு இருக்கிறதாக நமக்குத் தோன்றுகிறது. மறைக்கும் தடைகளை நீக்கி விட்டால் இருப்பது தானாகத் தெரியும் என்பது சரிதானே?
எப்படி சூரியனை மறைத்து வைத்திருக்கும் மேகங்கள் விலகியவுடன் சூரியன் பளீரென்று தெரிகிறதோ, அதே போல அறியாமையால் மறைந்து இருப்பது போல் தோன்றும் அந்த ஆத்மாவை மறைத்திருக்கும் திரைகளை விலக்கிவிட்டால் ஆத்மாவும் தானாகவே ஒளிரும். காணப்படும் எல்லா நிலைகளுக்குமே அந்த ஆத்மா காரணம் என்பதனால் அது சூரியன் போல் எல்லாவற்றையும் ஒளிர வைக்கவேண்டும். எப்படி சூரியன் உதித்ததுமே மலர்கள் மலர்ந்து என்பதில் ஆரம்பித்து சகல உயிர்களும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அதே போல ஆத்மாவின் சந்நிதானத்தில் நம் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் இவை எல்லாம் உலகில் நடக்க வேண்டும் என்பதற்காக சூரியன் உதிப்பதில்லை. அதேபோல நடக்கும் வேலைகளுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. இப்போது நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மறைக்கும் திரைகள் என்னென்ன என்பதும், முமுக்ஷூ எடுக்கும் பயிற்சிகள் எல்லாம் அந்தத் திரைகளை அகற்றுவதற்கே என்பதும்தான்.
5. अज्ञान कलुषं जीवं ज्ञानाभ्यासाद्विनिर्मलम् |
कृत्वा ज्ञानं स्वयम् नश्येज्जलं कतकरेणुवत् ||
कृत्वा ज्ञानं स्वयम् नश्येज्जलं कतकरेणुवत् ||
அஜ்ஞான கலுஷம்ʼ ஜீவம்ʼ ஜ்ஞானாப்⁴யாஸாத்³வினிர்மலம் |
க்ருʼத்வா ஜ்ஞானம்ʼ ஸ்வயம் நஸ்²யேஜ்ஜலம்ʼ கதகரேணுவத் ||
க்ருʼத்வா ஜ்ஞானம்ʼ ஸ்வயம் நஸ்²யேஜ்ஜலம்ʼ கதகரேணுவத் ||
அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்
அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்
அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு
அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்
அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்
அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு
அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்
கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங்கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்.
மேலே உள்ள அர்த்தத்தைக் கொடுக்கும் ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும்போது, சென்ற தொடரில் நான்கு வகையான மகா வாக்கியங்களின் அடிப்படையில் ஏதோ ஒன்றின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு மந்திரத்தை குரு சொல்லக்கேட்டு சாதகன் தன் முயற்சியை ஆரம்பிக்கிறான் என்று பார்த்தோம்.
பிரம்மத்தைப் பற்றிச் சொல்லப்படும் இந்த நான்கு முறைகளிலிருந்தே நாம் மனிதர்களின் வகைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். சிலருக்கு வேத வாக்கு என்று சொன்னால் போதும், அவர்கள் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறுவார்கள். “ப்ரக்ஞாநாம் ப்ரஹ்ம” : அவர்களுக்கு இதுதான் இலக்கணம் என்று சொன்னால் போதும். வேறு சிலருக்கு இதுதான் எங்களது அனுபவம்: “அஹம் ப்ரஹ்மாஸ்மி”. முடிந்தால் நீங்களும் அதைச் செய்து பார்த்து அனுபவிக்கலாம் என்கிற மாதிரி சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் அனுபவத்தில் சொல்லப்படுவதை நம்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த மாதிரி சொல்லப்படுகிறது. மற்றொரு வகையினருக்கு தன்னுடைய முன்னோர்களும், பெரியோர்களும் அவர்கள் வாயால் ஒன்றைச் சொன்னால் போதும், அதை பின்பற்றலாம் என்ற அளவு நம்பிக்கை இருக்கும்: “தத் த்வமஸி”. அத்தகையவர்களுக்கு உபதேசம் மாதிரி சொன்னால் போதும். வேறு சிலருக்கோ எதையும் ஏன், எப்படி என்று ஆராய்ந்து கேட்ட பின்பும், அதைக் கடைப்பிடித்தவர்களின் அனுபவமும் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் அறிவினால் முதலில் தெளிந்து, பின் அதன் செய்முறையின் விளைவுகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள்: “அயம் ஆத்மா ப்ரஹ்ம”. அத்தகையவருக்கு அவர்கள் புத்திக்கு ஏற்றவாறும் சொல்லி, அதுவே செய்தும் காட்டப்பட்டு இருக்கிறது என்ற விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இருக்கும் ஒன்றே ஒன்றான ஆத்மாவைப் பற்றி இவ்வாறாக நால்வகை மனிதர்களுக்கு என்று, நான்கு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் அதற்குத் தேவைதான் என்ன? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஒன்று இருக்கிறது. மனிதர்களாலேயே, அதாவது அவர்களின் எண்ணங்களாலும் செயல்களினாலுமே, எல்லாம் வெவ்வேறாகத் தெரிகின்றன. அப்படி வெவ்வேறு விதமான மனத்திறன் கொண்டவர்களால் ஏற்பட்டிருக்கும் திரைகளை நீக்குவதற்குத்தான், விதவிதமான பயிற்சிகளும் அவரவர் வழிகளில் செய்வதற்கு என்று சொல்லப்பட்டிருக்கின்றன.
அதே போல மக்களில் பலரும் பலப்பல கண்ணோட்டங்களுடனும் இருந்து, தங்களது முதிர்ச்சியில் வெவ்வேறு நிலைகளிலும் இருப்பதால், இந்து சமயத்தில் விதவிதமான கடவுளர்களும் சொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தீர்மானமாகச் சொல்லலாம். ரமணரிடம் வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் முறைகளையும், தங்கள் அனுபவங்களையும், சந்தேகங்களையும் கேட்கும்போது அவரவர்க்கு அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று அவர்களுக்கு ஏற்ப பதில் சொன்னாலும், குறிப்பாக எதையும் சொல்லாமல் உபதேசம் கேட்பவர்களுக்கு ரமணர் “நான் யார்?” என்று அவரவரும் தன்னுள் ஆழ்ந்து தானே காண வேண்டிய முறையைப் பற்றி மட்டும்தான் சொல்வார். அதாவது ஒருவர் செல்லும் பாதையைப் பற்றி அவருக்குக் குழப்பம் எதுவும் வராதவாறு நமது சொல்லும், செயலும் அமையவேண்டும். எல்லாப் பாதைகளும் கடைசியில் ஆத்மாவைப் பற்றிய அறிவுக்குத்தான் இட்டுச் செல்லும். செய்யும் முயற்சியில் சாதகனது தீவிரம்தான் முக்கியமே தவிர மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
சாதகனுக்கு முதலில் கலக்கம் வரும், பின்பு அவனுக்கு வரும் குழப்பத்திலும் ஒரு முதிர்ச்சி தென்பட்டு தன்னைப் பற்றிய உண்மை நிலையை அறிந்துகொள்ள ஓர் ஆவலும் வரும். அப்போதுதான் அவனது தீவிரத்தைப் பொருத்து மேலும் அவனுக்கு வேண்டியன எல்லாம் அமையும். தீவிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லும் கதை ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. இறைவனைப் பார்க்க நாரதர் செல்லும் வழியில் தவம் செய்துகொண்டு இருக்கும் இரண்டு முனிவர்களைப் பார்க்க நேரிட்டது. தங்களுக்கு எப்போது முக்தி கிட்டும் என்பதை அறிய ஆவலாய் இருந்ததால், அதனை இறைவனிடம் கேட்டுச் சொல்லுமாறு அவர்கள் நாரதரை வேண்டிக் கொண்டார்கள். நாரதர் திரும்பி வரும்போது, அவர்களில் ஒருவரைப் பார்த்து அவருக்கு இன்னும் மூன்று பிறவிகள்தான் இருக்கின்றன என்றார். அதைக் கேட்ட அவர் திகைத்து, “இன்னும் மூன்று இருக்கிறதா?” என்று சொல்லி வருத்தப்பட்டார். நாரதர் இரண்டாம் முனிவரிடம் ஒரு மரத்தைக் காட்டி அதில் இருக்கும் இலைகளின் எண்ணிக்கை அளவு அவருக்குப் பிறவிகள் இருக்கின்றன என்றார். அதைக் கேட்ட அவர் “பரவாயில்லையே! அதற்கப்புறம் நிச்சயமாக எனக்கு முக்தி இருக்கிறதே” என்று மகிழ்ந்தார். அதைக் கேட்ட நாரதர் உங்களுக்குத்தான் மனம் நல்ல பக்குவ நிலையில் இருக்கிறது; இக்கணமே உங்களுக்கு முக்தி என்று அருளினார். அதுதான் தீவிரமும், அது தரும் நம்பிக்கையும், எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டுவிடும் மனப்பான்மையும்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
சீவனுடைய கலக்கம் எதனால் வந்திருக்கிறது? அவன் தன்னுடைய உண்மை நிலையை அறியாது, பிறப்பு-இறப்பு, சுகம்-துக்கம் போன்ற இரட்டைகளை உடலுடனும், மனத்துடனும் மட்டுமே சம்பந்தப்படுத்தாது தன்னுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். அந்த அறியாமையோடு இருப்பவனை நிர்மலம் ஆக்குவதுதான் ஞானம் பெறுவதன் குறிக்கோள். அதற்குத்தான் ஆத்ம சாதனையாக அவன் மந்திரோபாசனை பெறுதல், அந்த ஒன்றிலேயே மனத்தை இருத்தல், தியானம் செய்தல் போன்ற எல்லாவற்றையும் முறையாகக் கடைப்பிடிக்கிறான். வேறு எந்த வழியைப் பின்பற்றி வந்தாலும் இறுதியில் அவன் ஆன்மாவைப் பற்றி அறிந்து இவ்வாறு சாதனை செய்யும்போது, அவனது விருத்தி ஞானம் (perceivable power) அவனுக்கு அவனது உண்மை நிலையான சொரூப ஞானம் (existential knowledge) பற்றி அறிவிக்கின்றது. கேள்வி கேட்டு, முயற்சி செய்யும் ஞானம் வேறு, தான் இருக்கும் இருப்பை தானாய் இருந்து தன்னை அறியும் சொரூப ஞானம் வேறு. பின்னதுதான் ஆன்ம ஞானம். அந்த நிலையில் சதா சர்வ காலமும் இருக்கும் சொரூப ஞானம் அவனுக்கு வந்ததும், அவனது விருத்தி ஞானம் அழிந்து போகிறது. இதைத்தான் தேத்தாங்கொட்டைப் பொடி எப்படி நீரை சுத்தமாக்கி, அத்துடன் தானும் அழிகிறதோ அதைப் போல விருத்தி ஞானம் அழிகிறது என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.

அப்படிப் பல எண்ணங்களாக இருந்த மனம் மந்திரத் தியானப் பயிற்சியினால் குவிந்து, எடுத்துக்கொண்ட ஒரே எண்ணத்தில் லயிக்கிறது. இதை மனோ லயம் என்பார்கள். எண்ணம் பலவோ அல்லது ஒன்றோ, மனம் மனம்தானே. அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அது எப்படி என்று விளக்குவதற்கு வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமையை “உள்ளது நாற்பது” நூலில் சேர்த்திருக்கிறார். கட்டைகள் போட்டு நெருப்பில் இடப்பட்ட பிணம் ஒன்றை எரிப்பதற்கு கழி ஒன்றை உபயோகப்படுத்துவார்கள். அதை வைத்துக்கொண்டு அவ்வப்போது சிதையை கிண்டிக் கிளறிக்கொண்டு இருப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் சாம்பல் கீழே இறங்கி, கட்டைகள் நன்கு எரிந்து, உயிரற்ற உடலும் சீராக வேகும். கடைசியில் பிணம் நன்கு சுடுவதற்கு இருந்த கழியையும் அந்த சிதை மேலேயே போட்டுவிடுவார்கள். இப்படியாக மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள். இருக்கும் ஒன்றைப் பலப்பலவாகக் காட்டிய மனம் நாசமடைவதால், எப்போதும் உள்ள ஆன்மா ஒன்று மட்டுமே அங்கு இருப்பதை உணரலாம். அங்கு உணர்வு மட்டுமே உள்ளதால், அந்த உணர்வே நமது இருப்பு என்றாகிறது. அது இப்போதும் இருப்பதை நாம் உணராததுதான் அறியாமை என்று சொல்லப்படுகிறது.
(6)
ஸம்ʼஸார: ஸ்வப்னதுல்யோ ஹி ராக³த்³வேஷாதி³ ஸங்குல: |
ஸ்வகாலே ஸத்யவத்³பா⁴தி ப்ரபோ³தே⁴ ஸத்யஸத்³ப⁴வேத ||
ஸ்வகாலே ஸத்யவத்³பா⁴தி ப்ரபோ³தே⁴ ஸத்யஸத்³ப⁴வேத ||
விருப்பு வெறுப்பு ஆதி விகார சம்சாரத்து
இருப்பும் கனாவுக்கு இணை அஹ்து – உருப்படும்
போது மெய் போலப் பொலியுமே போதம் உதி
போது அதுவும் பொய்யாகிப் போம்.
இருப்பும் கனாவுக்கு இணை அஹ்து – உருப்படும்
போது மெய் போலப் பொலியுமே போதம் உதி
போது அதுவும் பொய்யாகிப் போம்.
நமது விருப்பு வெறுப்பு முதலான குணங்களால் மாறுபட்டுக் காண்கின்ற இந்த சம்சாரத்தில் நாம் காணுவதெல்லாம் நம் கனவுக்கு நிகரானது. கனவு காணும்போது அவை எல்லாமே மெய்போலத் தோன்றினாலும் அவை எல்லாமே பொய் என்பதை நாம் பின்பு உணர்கிற மாதிரி, அறியாமை அகன்று ஆன்மாவைப் பற்றி நாம் அறிந்ததும் சம்சாரத்தில் காணுவதைப் பொய் என்பதையும் உணர்வோம்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - தத்துவம் - எஸ். ராமன்
உலகம் எப்போதும் அதனுடைய தன்மையில் தானாக இயற்கையாக இருக்கிறது. அதைப் பார்க்கும் நாம்தான் நமது கண்ணோட்டத்தினால் அதை வெவ்வேறு மாதிரியாகப் பார்க்கிறோம். நமது விருப்பங்களுக்கும், வெறுப்புகளுக்கும் தகுந்தாற்போல் அதை மாறுபட்டதாகக் காண்கிறோம். அதனாலேயே ஒவ்வொருவருக்கும் உலகம் வெவ்வேறாகத் தெரிகிறது. உலகில் இருப்பதை அது இருக்கிறபடியே பார்ப்பவனுக்கு எந்த வித விகாரமும் தெரியாது. அப்போது அவன் மிகவும் அமைதியோடு இருப்பான்.

அடைவது என்பதால் முதலில் அதன் மேல் ஆசையும், அடைந்த பின் அதன் மேல் நமக்கு ஆளுமையும் தோன்றுகிறது. இங்குதான் அகங்காரம் வேர் விட்டு வளர்கிறது. ஆக நம் ஈடுபாடு உலகை இப்படி படுத்தினாலும், ஒரு கட்டத்தில் அந்தப் பொருளால் நமக்கு வெறுப்பு வந்தால், உலகம் நம்மை படாதபாடு படுத்துவதாக நாம் சொல்வோம். அதாவது உண்மை நிலையையும் நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதோடு, நம் அகங்காரமும் நுண்ணியதாக மாறிவிட்டது என்றாகிறது. நமது பார்வைகளையும், எண்ணங்களையும் சரிசெய்ய வேண்டியது நமது முதல் கடமை என்று நமக்கு இதிலிருந்து தெரிகிறது.
ஒருமுறை ரமணாஸ்ரமத்தில் சில நாட்கள் தங்குவதற்குச் சென்றவரால் இரவில் நன்கு தூங்கவே முடியவில்லை. அவரைச் சுற்றியிருந்த அனைவரும் நன்கு தூங்கிக் கொண்டிருக்க, அவரைச் சுற்றிலும் ஒரே சத்தமாகவும், யாரோ வருவதும் போவதுமான சலசலப்பும் இருந்தது. மறுநாள் அவரைப் பார்க்கும் போது அவர் நன்கு தூங்கினாரா என்று ரமணர் விசாரிக்க, தான் தூங்கமுடியாது இரவில் அவர் கேட்ட சத்தங்களைப் பற்றிச் சொன்னாராம். இரவில் எந்த வேலையும் அங்கு நடைபெறாததால், உடனே ரமணர் மற்றவர்களிடம் அது பற்றி விசாரிக்க எல்லோருமே தாங்கள் நன்கு தூங்கியதாகச் சொல்ல, ரமணரும் அவரைப் பார்த்து அந்த சத்தமெல்லாம் உங்களுக்குள் இருந்து வந்திருக்க வேண்டும் என்றாராம்.
அவர் மாதிரி இன்னுமொரு அன்பர் மூன்று நாட்கள் ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டுத் தன்னுடைய ஊருக்குப் புறப்படும் முன் ரமணரிடம் ஆஸ்ரமத்தில் என்ன என்ன நடக்கிறது, எப்படி அதெல்லாம் மாறவேண்டும் என்று சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ரமணர் அவர் எதற்காக ஆஸ்ரமத்திற்கு வந்தார் எனக் கேட்க, அவரும் தன்னைத் திருத்திக்கொள்ள என்று சொன்னாராம். அதற்கு ரமணர் “அதைச் செய்யாமல், தங்களைச் சுற்றியுள்ளதைத் திருத்தப் பார்க்கிறீர்களே” என்றாராம்.
மேலே சொன்ன இரு நிகழ்ச்சிகள் மாதிரித்தான் உலகில் நடக்கின்றன. எவருமே நடப்பதைத் தங்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளை வைத்துக்கொண்டு பார்க்கின்றனர். உலகத்தைத் திருத்துவதைவிடத் தன்னைத் திருத்திக்கொள்வதே மேலானது. அது ஒருவனுக்கு அமைதியைக் கொடுக்கும். உலகம் அப்படித்தான் இருக்கும் என்ற தெளிவு ஒருவனுக்கு அவசியம். சமூக வேலைகளில் மூழ்கியுள்ளவனுக்கும் இந்த வார்த்தைகள் நிச்சயமாகப் பொருந்தும். தினப்படி பலரிடம் தொடர்புகொள்ள வேண்டியவனுக்கு அது எப்படி முடியும் என்றால், ஒருவன் அந்த மாதிரி வேலையையோ, சேவையையோ தேர்ந்தெடுத்துச் செய்கிறான் என்றால் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்துச் செய்வதை அவன் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அர்த்தம். வேறு மாதிரி அவை இருந்திருக்கவேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பதுதான் தவறு. அதை இயல்பு என எடுத்துக்கொண்டால்தான், அவன் உண்மையில் அமைதியாக இருக்க முடியும்.
அதற்காக இயற்கை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சொல்வதாக அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. இயற்கையில் ஒன்று எப்படி இருக்கிறதோ அது நம் எண்ணத்திலும் அப்படியே இல்லாமல் வேறு விளைவுகளைத் தோற்றுவித்தால், அப்போது நமக்கு வரும் எண்ணங்கள்தான் நம்மை ஏதேனும் செய்யவைக்கின்றன. அப்போது நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது, உள்ளத்தில் ஒன்றும் வெளியே வேறொன்றுமான நமது சோம்பேறித்தனமான அல்லது கோழைத்தனமான நிலை என்று ஆகிவிடும். மாற்றம் செய்ய விரும்புபவன் அதற்கேற்ப ஏதும் செய்யும் போது, அதன் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற மனநிலையோடு, வருவதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். விளைவு நாம் விரும்புவது போல்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.
ஒன்றைச் செய்ததற்கும், செய்ததால் வரும் விளைவுகளுக்கும் பொறுப்பு ஏற்பவனாய் ஒருவன் இருக்கும்போது, அவன் மேலும் செல்ல வேண்டிய வழி அவனுக்கு நன்கு தெளிவாகத் தெரியவரும். மனத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக இருப்பவனுக்குக் காலம் முழுவதும் வாழ்க்கை ஒரு பிரச்சினை ஆகிவிடும். ஒன்றை நாம் ஏன் செய்தோம் என்றால், அதைச் செய்வதற்குரிய எண்ணங்கள் நமக்கு வந்தன என்பதை ஏற்பவனே பொறுப்பானவன் ஆகிறான். ஒன்றைச் செய்துவிட்டு, புகழ் வந்தால் நமக்கு பழி வந்தால் பிறருக்கு என்று இருப்பவன் சமுதாயத்தில் பொறுப்பற்றவன் என்பது மட்டுமல்ல, அவன் வாழ்க்கையே முதலில் சொகுசாக இருப்பது போலத் தோன்றினாலும் நாளடைவில் தினந்தோறும் அனுபவிக்கும் நரகமாக ஆகிவிடும்.

வாழ்க்கை என்பதை அனுபவிக்கத்தானே பிறந்திருக்கோம், அதில் இன்பம்-துன்பம் இல்லாதிருந்தால் எப்படி சுவாரசியமாக இருக்கும் என்பதே பலரது கேள்வி. அவர்களுக்கு ஒரே பதில்தான் இருக்கிறது. இன்பம் அடைந்தால் மகிழ்வதும், துன்பம் நீங்கினால் மகிழ்வதும் தானே நமது இயல்பு என்றால் எப்போதும் மகிழ்வுடன் இருப்பதே நமது குறிக்கோள் என்றாகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியை உலகில் நமக்கு விரும்பிய பொருட்களை அடைவதற்கும், வெறுக்கும் பொருட்களைத் தவிர்ப்பதற்கும் உண்டான செயல்களின் விளைவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் நாம் விருப்பு-வெறுப்பு அற்ற நிலையைத் தேடி அதனை அடைந்தால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இது உங்களுக்குச் சரி என்று தோன்றினால் நீங்களும் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கலாம், இல்லையென்றால் உங்கள் வழியிலேயே போய்ப் பாருங்கள் என்பதுதான் அவர்களுக்கான பதில்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|