தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by அ.இராமநாதன் Sun Jul 28, 2019 10:22 pm

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! E_1475058099



ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே, இருகரங்கள் 
மட்டும் கொண்ட ரங்கநாதரைக் காண வேண்டுமா?


திருமோகூர் போலவே உள்ள சக்கரத்தாழ்வாரை 
தரிசிக்க வேண்டுமா?


பார்வதி தேவியார் தவமியற்றி வணங்கிய பெருமாளை 
வழிபட வேண்டுமா?


தசாவதாரத் திருவுருவங்களும் கருங்கல் சிலையாக 
வடிக்கப்பட்டு அருள் வழங்கும் கோலத்தை நோக்க 
வேண்டுமா?


திருப்பதி போல ரத்னாங்கி சேவையில் ஜொலிக்கும் 
பெருமாளை ஆராதிக்கவேண்டுமா?


இந்த அற்புதங்கள் அனைத்தும் காண நீங்கள் செல்ல 
வேண்டிய புனிதத்தலம், காரைக்கால் நித்ய கல்யாண 
ரங்கநாதர் கோயில்!


பார்வதிதேவி தன் அண்ணாவான பெருமாளைக் குறித்துத் 
தவமியற்றிய தலம் இது. பெருமாள் தங்கையின் தவத்தை 
மெச்சி காட்சியளித்தார்.


'என்ன வரம் வேண்டும் தங்கையே?' என்ற பெருமாள் 
கேட்க, 'சாகம்பரி' என்ற பெயரில் அவதாரம் செய்திருந்த 
பார்வதிதேவி கேட்ட வரம் தனக்கல்ல; வரம் தர 
வந்தவருக்கே வரம் தந்த வரம்!


'அண்ணா, சகோதரனான நீ திருமணம் செய்து கொண்டு
 ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக எனக்கு காட்சி தரவேண்டும்.
 உன் திருமணத்தை நான் காண வேண்டும்' தாய் - தந்தை
 ஸ்தானத்தில் தன் திருமணப் பேச்சையே வரமாகக் கேட்ட, 
புத்திசாலித் தங்கையை பெருமாள் பாசமாய்ப் பார்த்தார்.


'தந்தேன் வரம்!' என்றார். தங்கைக்கு மட்டுமல்ல.. 
தன்யர்களாகிய நமக்கும் சேர்த்துத்தான் நித்ய கல்யாண 
ரங்கநாதராக இன்றும் என்றும் அருள் வழங்கி வருகிறார் 
பெருமாள்.


திருமணத்திற்கு வந்த ஈசனும், உமையும் எதிரிலேயே உள்ள 
கைலாயநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.


ஆதிஅந்தமிலாத ஈசனே தமது திருவாக்கினால், 
'அம்மையே' என்று அழைத்த காரைக்கால் அம்மையார் 
கோயில் பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.


இம்மூன்று கோயில்களுக்கும் பொதுவானது, சந்திர 
புஷ்கரணி தீர்த்தக்குளம். இதில் நீராடி, பகவானை 
தரிசித்தால் சந்திர தோஷமும் திருமணத் தடையும் 
நீங்குகிறதாம்!


108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றான
 திருக்கண்ணபுரத்தின் அபிமான தலமாக இது 
விளங்குகிறது.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty Re: ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by அ.இராமநாதன் Mon Jul 29, 2019 10:49 am

தாயார், ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், 
ஆழ்வார் சன்னதிகள் என நியமப்படி எல்லா சன்னதிகளும்
 உள்ளன. அபிஷேக, ஆராதனைகளும், விழாக்களும் 
பிரம்மோற்சவமும் திவ்ய தேசங்கள் போலவே வெகு சிறப்பு 
இங்கே.


ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு ஸ்ரீரங்கம் போலவே 
சிவப்பு ரத்னாங்கி சேவை, மூலவருக்கு வஜ்ராங்கி 
எனப்படும் விலையுயர்ந்த கற்களாலான வஸ்திர அலங்காரம்.


இக்கோயில் பாண்டிச்சேரி அரசின் அறநிலைத்துறையால்
 நிர்வாகம் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் மாசி மாதம் 
நிகழ்கிறது.


கருட பஞ்சமி அன்று இத்தலத்தில் 7 கோயில பெருமாள்கள் 
கருட வாகனத்தில் கூடுகின்றனர். ஒரு கருடவாகனரைப் 
பார்த்தாலே பரமபதம் கிட்டும் எனில் ஏழு பேரை ஒரே இடத்தில்
 சேவிப்பது மகாபாக்கியம். 


நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப்
பெருமாள், தென்னங்குடி வரதராஜப்பெருமாள், கோயில் 
பத்து கோதண்டராமப் பெருமாள், திருமலைப்பட்டினம் 
இரு பெருமாள்கள், காரைக்கால் பெருமாள் என அந்த எழுவர் 
தான் இங்கு அன்று எழுவர்!


புண்டரிக மகரிஷியும், பராசர மகரிஷியும் இப்பிரதேசத்தில் 
தவம் இயற்றியவர்கள். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் 
பரிதவிக்க, இவர்கள் இருவரும் பெருமாளைக் குறித்து தவம் 
செய்து நீர்வளம் கேட்டனர்.


பெருமாள் ரங்கநாதராக காட்சி தந்து, அரிசில் ஆறு எனப்படும் 
காவிரியின் கிளை நதியை இப்பிரதேசத்தில் பாயவிட்டார்.
 ஹரி தந்தால் ஹரி சொல் ஆறு. அதுவே தற்போது அரிசிலாறு... 
அரிசிலாறு!


இத்தலத்தில் மூலவரான ரங்கநாதர் இங்கு வந்து சேர்ந்ததற்கும் 
ஒரு வரலாறு உண்டு. அது பெருமாளே இங்கு விரும்பி வந்து 
சேர்ந்ததை விளக்கும்.


சிறுபுலியூர் என்றொரு பெருமாள் தலம் அருகில் உள்ளது. 
அங்குள்ள மூலவருக்கு தயாநிதிப் பெருமாள் என்னும் திருநாமம்.


அக்கோயிலுக்காகச் செய்யப்பட்டவர்தான் இந்தப் பெருமாள். 
ஆற்று வழியாக படகில் இருந்தத் திருமேனியைக் கொண்டு 
வருகையில் சிறுபுலியூரில் கரையேறாமல், ஆற்று வௌ்ளத்தில்
 இங்கே வந்து நிலை கொண்டார் பெருமாள். 


இப்போது காரை மக்களின் பக்தி வௌ்ளத்தில் அருள் ஆட்சி 
செய்து வருகிறார்.


நித்ய கல்யாண ரங்கநாதரை தரிசிப்போருக்கு அனைத்து 
நலமும் வளமும் நிச்சயம்!


எங்கே இருக்கு: காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 
500 மீட்டர் தூரம். நடந்தே போகலாம்.


தரிசன நேரம்: காலை 7-12; மாலை 5-9.
-
---------------------
 சிங்காரவேலன்
நன்றி-குமுதம் பக்தி செய்திகள் & வாரமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum