தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்

3 posters

Go down

ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள் Empty ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்

Post by thaliranna Tue Aug 16, 2011 10:14 pm

டெல்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னாவை மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில், டெல்லி காவல்துறை கைது செய்து சிறையில் போட்டு விட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அன்னா கைது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளையும், ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கூட இந்த மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா என்ற கொதிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அன்னா கைது செய்யப்பட்ட விதமும் மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தலைநகர் டெல்லியில் அலை அலையாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.அதேபோல நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு பேரணி

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியினரும், பெரும் திரளானோரும் இணைந்து பேரணி நடத்தினர். நாயுடு அன்னா கைது குறித்துக் கூறுகையில், அமைதியான முறையில், ஜனநாயகமுறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அராஜகமானது, சட்டவிரோதமானது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்

மேலும் அவர் கூறுகையில், அன்னா கைது செய்யப்பட்டதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசு என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது என்றார் கோபமாக.

லக்னோவில்

உ.பி. தலைநகர் லக்னோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர்.

மகாராஷ்டிராவில்

அன்னாவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும் போராட்டம் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் மறியல்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

ஹஸாரேவின் சொந்த ஊரான அகமது நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் மக்கள் சாலைகளில்திரண்டு போராட்டத்தில் குதித்தனர். மேலும் கால்நடைகளுடனும் அவர்கள் சாலைமறியலில்ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அன்னாவின் நண்பரான 73 வயது தத்தா அவாரி கூறுகையில், ஒட்டுமொத்த கிராமும் இன்று பந்த் அனுசரிக்கிறது. நாங்கள் அன்னாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளோம் என்றார்.

மும்பையில் ஆங்காங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு மும்பையில், ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மேதா பத்கர் கலந்து கொண்டார்.

புனேவில், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் கூட்டம் நடந்தது. அதேபோலநாசிக்கிலும் கண்டனப் பேரணி நடந்தது.

நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நிதீஷ் குமார், அர்ஜூன் முண்டா கண்டனம்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா ஆகியோர் அன்னா கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் போராட்டம்

தமிழகத்திலும் ஆங்காங்கு ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்துள்ளன. இருப்பினும் வட மாநிலங்களைப் போல பெரிய அளவில் நடைபெறவில்லை.

மதுரையில் 50க்கும் மேற்பட்டோர் கூடி உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையிலும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதேபோல கோவை உள்ளிட்ட சில இடங்களிலும் ஹஸாரே ஆதரவாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் சார்பில் அமைதி வழியில் போராட்டங்கள் நடந்துள்ளன.

நாளை நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

இதற்கிடையே அன்னா கைதுக்குக் கண்டனம் தெரிவித்து நாளை நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்த அன்னா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து வக்கீலும், அன்னா அணியின் முக்கியஉறுப்பினர்களில் ஒருவருமான பிரஷாந்த் பூஷன் கூறுகையில், இந்தியா கேட்டிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி நாளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளோம். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். மக்கள் அனைவரும் திரண்டு வந்து இதில் பங்கேற்று தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

நாடு முழுவதும் மக்கள் தங்களது கோபங்களை அமைதியான போராட்டங்கள் மூலம் காட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில்தான் அன்னாவைக் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சர்கள்தான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். டெல்லி போலீஸ் இந்த முடிவை எடுக்கவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள சிலரே இதைச் செய்துள்ளனர்.

மிசா சட்டத்தில் கைது செய்ததைப் போல அன்னாவைக் கைது செய்துள்ளது போலீஸ். இது சட்டவிரோதமானது என்றார் அவ
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள் Empty Re: ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்

Post by அ.இராமநாதன் Wed Aug 17, 2011 6:15 am

[You must be registered and logged in to see this image.]
-
நன்றி: தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள் Empty Re: ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 17, 2011 12:04 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள் Empty Re: ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum