தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரேணு (சிறுகதை)

2 posters

Go down

ரேணு (சிறுகதை) Empty ரேணு (சிறுகதை)

Post by நெல்லை அன்பன் Sat Mar 03, 2012 11:40 am

பிரிஞ்சிடலாமாங்க?" என்று கேட்ட என் ஆசை மனைவி ரேணுவை மிகவும் கவலையுடன் பார்த்தேன்.


அழகான அவள் முகம் களையிழந்து காணப்பட்டது. கண்கள் கலங்கியிருப்பது போல் இருந்தது. எனக்குப் பிடித்த நீல நிற சேலையில் இருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ. நான் ஆபிஸ் விட்டு வந்தவுடனே கவனித்தேன். அவளிடம் எப்போதும் இருக்கும் அந்த உற்சாகம் இல்லை. சாதாரணமான நாட்களில் நான் வீட்டிற்கு வந்தவுடன் ஓடி வந்து என்னை செல்லமாக கட்டி அணப்ப்பள். இன்று அந்த கொஞ்சல், துள்ளல் எல்லாம் இல்லை. நானும் ஏதோ மூட் அவுட்டில் இருக்கிறாள் போல என்று விட்டுவிட்டேன்.


குளித்து முடித்து சாப்பிட்டு முடிக்கும் வரையில் நான் ஒன்றும் அவளை கேட்கவில்லை. எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என்று இருந்தேன். நான் சாப்பிட்டு முடித்து படுக்கை அறைக்குப் போய் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்கு பின் உள்ளே வந்தாள். அப்போதே அந்த வித்தியாசத்தை கவனித்தேன். படுக்கை அறைக்கு வரும் முன் சேலையை விடுவித்து நைட்டியில்தான் எப்போதும் வருவாள். இன்று சேலையுடன். அப்போதே எனக்கு 'சுருக்' என்றது.


வந்தவளை, "என்னம்மா? சாப்பிட்டியா?" என்ற போதுதான் அந்த கேள்வியைக் கேட்டாள். எனக்கு அந்த கேள்வியின் அர்த்தம் புரியவே இல்லை. என்னை விட்டு பிரியும் அளவிற்கு அவளுக்கு என்ன நடந்தது? என்ன ஆயிற்று அவளுக்கு?


ரேணு எனக்கு கிடைத்ததே ஒரு பெரிய கதை. ரேணு வேறு யாரும் அல்ல. என் நெருங்கிய நண்பன் ரமேஷின் தங்கை. சிறு வயதிலிருந்து பழக்கம். எல்லாரும் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒன்றாகவே படித்தோம், விளையாடினோம். எனக்கு ரேணு மேல் அப்போது எல்லாம் எந்த ஈடுபாடும் இருந்ததில்லை.


ரேணுக்கு கல்யாண வயது வந்தவுடன், வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். பார்க்கும் நல்ல இடங்களை எல்லாம், "வேண்டாம்" என மறுத்துக்கொண்டே இருந்தாள். யாரும் ரேணுவை வேண்டாம் என்று சொன்னதில்லை. 20 வயதுக்கே உரிய இளமையுடன் அழகாகவே இருந்தாள். ஒரு ஐந்து இடங்களை அவள் இப்படி மறுத்ததும், ஒரு நாள் ரமேஷ் அப்பா என்னைக் கூப்பிட்டு,


"டேய், ரேணு எந்த மாப்பிள்ளைய கூட்டி வந்தாலும் ஏதோ காரணம் சொல்லி வேணாம்ங்கறா. நாங்க எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கறா. நீ தான் அவ கிட்ட பேசி என்ன விசயம்னு சொல்லுடா. ஏதாவது லவ்வு கிவ்வுனு அசிங்கம் பண்ணிடப் போறா?"


"சரி அங்கிள். நான் பேசிப்பாக்கறேன்"


மெதுவாக ரேணுவின் அறைக்கதவை தட்டினேன். உடனே கதவைத் திறந்தவள் என்னை எதிர்பார்க்கவில்லை.


"என்ன நீங்க இங்க?" அவள் ஓரளவு பெரியவளானவுடன் என்னை எப்போதும் மரியாதையுடன் அழைக்க ஆரம்பித்திருந்தாள்.


"என்ன ரேணு, அம்மா அப்பா, ரமேஷ் எல்லாம் இப்படி கவலைப் படறாங்க. என்னாச்சு உனக்கு? ஏன் எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்கற?"


"ஒண்ணும் இல்லை. சும்மாத்தான்"


"சும்மாத்தான்னா புரியலை. யாரையாவது மனசுல லவ் பண்ணறியா?"


"ஏன் சொன்னா அப்பாட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சிடுவீங்களோ?"


"உங்க அப்பாவுக்கு காதல் கீதல்னா பிடிக்காது. ஆனால் நீ உண்மையை சொன்னால் என்னால் உங்க அப்பாவை சம்மதிக்க வைக்க முடியும்"


"பேச்சு மாற மாட்டீங்களே?"


"அப்படின்னா, யாரையாவது.... சொல்லு ரேணு"


"ஆமாம்"


"யாரு சொல்லு?"


"உங்களை மாதிரி மரமண்டை இனி பொறந்துதான் வரணும். நானும் எவ்வளவு சந்தர்ப்பங்கள்ல உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணறேன். இப்படி இருக்கீங்களே?"


என்னால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. நிச்சயமாய் ரேணுவின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று ஒரு துளி கூட நினைக்கவில்லை.


'என்ன சார், பதிலையே காணோம். போங்க பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்கள்ல. ரேணு என்னை தான் விருபுறானு எங்க அப்பாட்ட பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க"


எனக்கு சந்தோசம்தான் என்றாலும், அவர் அப்பா என்னிடம் பேசியதை நினைத்து ஒரு பயத்துடன்தான் அவரிடம் விசயத்தைச் சொன்னேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. உடனே ஒத்துக்கொண்டார்கள். இரண்டு வீட்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்த இரண்டு மாதங்களில் எங்கள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது.


தனி பங்களா. எல்லாவற்றிக்கும் வேலை ஆட்கள். மிகவும் சந்தோசமான வாழ்க்கை. எந்த குறையும் இல்லாமல் மிகவும் நிறைவான வாழ்க்கை.


ஒரு நாள் இரவு ரேணு என்னிடம், "என்னங்க, இந்த பக்கத்து வீட்டு பொண்ண பார்த்தீங்களா? ரொம்ப கஷடப்படுதுங்க. எப்பவுமே அவங்க வீட்டுல சண்டை தாங்க"


"ஆமாம்பா. அவளோட கணவன் சாதாரண கிளர்க்கா வேலைப் பார்க்குறான். ஆனா அந்தப் பொண்ணோ அளவுக்கு மீறி ஆசைப்படுது. அப்ப பிரச்சனை வரத்தானே செய்யும். அவனால எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தானே செலவு செய்ய முடியும்"


"இருந்தாலும். நம்மை மாதிரி..." என்று ஏதோ சொல்ல வந்தவள் என்னை இருக்கி அணைத்து கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். நானும் அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை.


அதே போல் மீண்டும் ஒரு நாள், பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். இவளின் புடுங்கல் தாங்காமல் என்னவென்று போய் பார்த்தேன். அந்தப் பெண்ணை அவளின் கணவன் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். ஏதோ பணப்பிரச்சனை என்று தெரிந்தது. ரேணு உடனே, "பாவங்க. கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்க. ரொம்ப அந்த பொண்ணு அழுவுது. நம்ம உதவுலனா அந்த பொண்ணு அவர் கூட சேர்ந்து வாழுமான்னு தெரியலை. ரொம்ப அந்தப் பொண்ண திட்டிட்டார் போல. இப்படியா ஒரு பொண்ண திட்டுவாங்க. பிரச்சனை தீர்ந்தோன எப்படி அவர்கூட அந்த பொண்னு இளிச்சிட்டு பேசுவா. அவர் திட்டினதுதானே நினைவு வரும்"


"அது அப்படி இல்லை ரேணு'


"இப்ப பணம் கொடுத்து உதவ முடியுமா? முடியாதா?"


இதற்கு மேல் பிரச்சனை வேண்டாம் என்று அவர்கள் வீட்டிற்கு சென்று பணம் கொடுத்துவிட்டு வந்தேன். இது நடந்த அடுத்த நாள், "ஏங்க இங்க பாருங்களேன்" என்று என் ரூமிற்கு ஓடி வந்தாள் ரேணு.


"என்னம்மா?"


"அங்க பாருங்க. நேத்து எவ்வளவு அந்த ஆள் திட்டினான். கொஞ்சம் கூட சொரணை இல்லாம எப்படி அவன் கூட உரசிட்டு போறா பாருங்க"


நான் மெல்ல சிரித்துக்கொண்டேன். பதில் சொல்ல நினைத்தாலும், சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் இரவுதான் ரேணு அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள்,


"பேசாம, நாம பிரிஞ்சிடலாமாங்க?"


"ஏண்டா இப்படி ஒரு கேள்வி கேட்கற. உனக்கு நான் என்ன குறை வைச்சேன். ஏதாவது நீ கேட்டு இல்லைனு சொல்லி இருக்கேனா? உன்னை எதுக்காச்சும் திட்டி இருக்கேனா?"


ரேணு நிதானமாக, "பிரச்சனையே அதாங்க. என்னை இப்படி தூக்கி வைச்சு கொஞ்சரது எனக்கு பிடிக்கலைங்க. காதல்ல பிரச்சனை வரும்னு நினைச்சேன். அதுவும் நல்லபடியா முடிஞ்சுது. கல்யாணம் ஆகி ஒரு வருசமாகப் போகுது. இன்னும் குழந்தை இல்லை. அதுக்கும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க. நான் ஏதாவது கோபப்பட்டாக் கூட என்னை திருப்பி திட்ட மாட்டேங்கறீங்க. எப்பவும் நீங்க என்னை திட்டறதோ கடிஞ்சு பேசறதோ இல்லை. பக்கத்து வீட்டுல பாருங்க தினமும் சண்டை போட்டுக்கறாங்க. ஆனா அதுக்கு அப்புறம் ஜாலியா சிரிச்சிட்டே வெளியே போறாங்க. அதான் வாழ்க்கை. ஊடல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? எனக்கு பிடிக்கலைங்க. அதனாலதான், நான் என்ன கேட்கறேன்னா......


அவள் சொல்லிக்கொண்டே போகப் போக எனக்கு தலைச் சுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது.


BY [You must be registered and logged in to see this link.]
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

ரேணு (சிறுகதை) Empty Re: ரேணு (சிறுகதை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 2:51 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum