தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
Page 1 of 1
ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
ஹைக்கூ ஆற்றுப்படை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
நூல் வெளியீடு : மின்னல் கலைக்கூடம்,
117, எல்டாம்ஸ் சாலை,சென்னை – 600 018.
பக்கம் : 96. விலை : 96 பதிப்பு ஆண்டு : 2010
117, எல்டாம்ஸ் சாலை,சென்னை – 600 018.
பக்கம் : 96. விலை : 96 பதிப்பு ஆண்டு : 2010
*****
“பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்தும் புகழ்த்தன்மை கொண்டது ஆற்றுப்படை”. ஹைக்கூ கவிதைகளின் இலக்கியப் பெருவளத்தை வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் ஆற்றுப்படுத்தும் புதிய முயற்சியில் “ஹைக்கூ ஆற்றுப்படை” எனும் நூலைப் படைத்த கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.
படைப்பாளனின் படைப்பு வாசகனின் ஆழ்மனதைக் கவர்ந்து, படைப்பு முழுவதும் பயணிக்க, அதன் உள்ளடக்கம் துணை நிற்கின்றது. அதேப் படைப்பு அவ்வாசகனால் விமர்சனத்திற்கு உட்படும் பொழுது படைப்பும் வெற்றியடைகிறது. அப்படைப்பாளனும் வெற்றி-யடைகிறான். 26 தலைப்புகளில் (படைப்புகளில்) .... படைப்பாளிகளை அறிமுகம் செய்து அவர்களின் படைப்பு பெருவளத்தை தான் பெற்று, பெறாத இவ்வுலக வாசகனுக்குப் படைத்தளித்த திறம் போற்றுதற்-குரியது.
நூலின் அட்டைப்படம், ‘வழியறியாத ஒருவனுக்கு நீண்ட பாதையைக் காண்பிப்பது போன்று’ ஹைக்கூ என்பது அறியாத ஒருவனுக்கு ஹைக்கூ வானில் சிறகடிக்க வழிகாட்டும் விதமாக தெரிவு செய்தது, தலைப்பிற்கேற்பப் புதுமுயற்சி. இரா. மோகன் அவர்களின் அணிந்துரை நூலின் உள்ளே பயணிப்பதற்கு வாயிலாக அமைந்துள்ளது.
மூன்றடிகளால் உலக நிகழ்வை தன் உள்ளடக்கமாகக் கொண்டு உருப்பெறுவது ஹைக்கூ. சிலர் இந்த ஹைக்கூவை இன்றளவும் குறை கூறியவண்ணம் இருந்து வருகின்றனர். இத்தகைய குறை சொல்லும் மேதைகளுக்கு ஆசிரியர்,
“ஹைக்கூ கவிதையைக் கிண்டல் செய்து கேலி பேசியவர்களின் கன்னத்தில் அறையும் விதமாக இந்நூலானது வந்துள்ளது”.
“ஹைக்கூவை பொய்கூ என்றவர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம்” போன்ற வரிகளால் ஆசிரியர் ஹைக்கூ மீது கொண்ட மாளாக் காதல் வெளிப்படையாகின்றது.
ஹைக்கூ படைப்பாளிகளின் படைப்புகளுக்கு ஆசிரியர் திறனாய்வாளனாக மட்டுமல்லாமல் சிறந்த உரையாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஹைக்கூ கவிதைக்கு உள்ளார்ந்த உட்பொதிந்துள்ள செய்திகளை இரா. இரவி சிறந்த விளக்கங்களின் மூலம் வாசகர்களுக்கு தெளிவாக்கியுள்ளார். குறிப்பாகத் தமிழகத்தில் எத்தனையோ கோவில்களும் கடவுள்களும் இருக்க, தமிழர்கள் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும், கேரளாவில் உள்ள சபரிமலைக்கும் சென்று பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்து வருகின்றனர். இது நோய் போல பரவி விட்டது” என்று ................................,
“பருவ காலம்தமிழின நோய்
சாமியே சரனம் ஐயப்பா”
என்ற ஹைக்கூவிற்கு விளக்கவுரை போன்ற நம் கருத்துரையை வழங்கியுள்ளார். இது ஒருவகையில் திறனாய்வாளரின் துணிவிற்குச் சான்று. இன்று மதம் சார்ந்த செய்தியினை பேசுவதற்கே அச்சமுறும் படைப்பாளிகளின் மத்தியில் ஆசிரியரின் இத்தன்மை வியக்கத்தக்கது. சில இடங்களில் இரவி அவர்கள் உழைப்பாளி வர்க்கத்தின் வாழ்வியல் சிக்கல்களை தனது சிந்தனை வரிகளில் வெளிப்படுத்தியதும் அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
திறனாய்வு என்பது நடுநிலையாளனின் மனத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் உன்னதப் பொருள். அத்தகு நோக்கில் ஆசிரியரின் நடுநிலைத் தன்மை.
“நூலில் நிறைவு தான் உள்ளது, குறையே இல்லை படித்துப் பார்த்தால் வாசகர்கள் உணர்வார்கள்”.
“தரமான ஹைக்கூ நூலில் புணர்ச்சி பற்றிய தரமில்லாத ஒரு ஹைக்கூவைத் தவிர்த்திருக்கலாம். அவரையும் அறியாமல் அதில் ஓர் எழுத்துப்பிழையும் உள்ளது.”
என்று சிறுபிழைகளைக் கூட சொல்ல வேண்டிய முறையில் கூறும் ஆசிரியர்,
“மறுபதிப்பில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும்”
என்று படைப்பாளனின் தவறை நிழல் போல நடுநிலையில் நின்று உணர்த்தும் தன்மை சிறப்பாக வெளிப்படுகின்றது.
படைப்பாளிகளில் பெரும்பான்மையும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே அல்லாமல் புதுவை சார்ந்த படைப்பாளிகளுக்கும் முதன்மை கொடுத்து, தமது நூலில் சேர்த்ததற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.
திறனாய்வு என்பது வெறுமனே ஆய்வாக மட்டுமல்லாமல் சில இடங்களில் வாசகனுக்கு அறிவுரை கூறும் பாங்கிலும், தான் எடுத்துக் கொண்ட பொருள் கூறிடும் முறைக்கு வள்ளுவன், பாரதி, அப்துல் கலாம் என அனைவரையும் துணைக்கழைத்த எடுத்துரைப்பியல் நோக்கு தெளிவான முயற்சியாக அமைந்துள்ளது சில இடங்களில் எழுத்து பிழைகள் (22, 31, 55, 62, 72, 73, 80, 83,..........) இருப்பினும் வாக்கியப் பிழை என்பது நூல் முழுவதும் காணப்படவில்லை. ... படைப்புகளைக் குறைத்து படைப்பாளனின் திறனை மேலும் நுணுக்கமாக கூறியிருக்கலாம். இருப்பினும் ஆற்றுப்படை நூல் எனும் காரணமாகவோ என்னவோ, பானை சோற்றில் ஒரு சோற்றுப் பதத்தைக் கொடுத்து விட்டார் ஆசிரியர். சில இடங்களில் கூறியது கூறல் இருப்பினும் திறனாய்வு நூலிற்கு பெரும்பான்மையும் பெரும் பிழையாக தெரியவில்லை.
கடந்த காலம், நிகழ்காலம் என இவ்விரு காலத்தையும் பின்னணியாகக் கொண்டு படைப்புருவாக்கம் பெரும் படைப்புகளில் அடிநாதம் எதிர்காலத்தில் வளமான சமூகத்தை உருவாக்கும் நோக்கமே ஹைக்கூ ஆற்றுப்படை எனும் இந்நூல். எதிர்காலத்தில் சமூகத்தின் மதிப்புமிக்க ஒரு சிறந்த ஹைக்கூ வாசகனையும், ஹைக்கூ படைப்பாளனையும் உருவாக்கும் முயற்சியே என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு ஆசிரியரும் விதிவிலக்கல்ல. “துளிப்பாவின் தூதன்” என்று இரா.இரவி அவர்களைக் கூறுவதில் ஒப்பற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஆசிரியரின் முயற்சி பன்மடங்கு உயர வாழ்த்தி வணங்குகிறேன்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை: ப. மகேஸ்வரி, பாரதியார் பல்கலை, கோவை.
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்
» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்
» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|