தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலங்கமற்ற காதல் உள்ளம் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்

Go down

கலங்கமற்ற காதல் உள்ளம் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் Empty கலங்கமற்ற காதல் உள்ளம் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 1:29 pm

அழகன் : அவன் பெயர்; அவன் குடும்பத்தலைவன் - கணவன்!
அழகி : அவள் பெயர்; அவள் குடும்பத்தலைவி - மனைவி!

ஒரு தொழிலை மேற்கொண்டு, அதன் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்று, அந்தத் தொழிலைச் செய்து பொருள் திரட்டி வருதல் ஆண்களின் கடமை ஆகும்! -

தொழிலே ஆடவர்க்கு உயிர் ஆகும்! -
வினையே ஆடவர்க்கு உயிரே!

அந்த வரம்புக்கு ஏற்ப - முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த கடமைகளுக்கு ஏற்ப அழகனும் தன் இல்லற வாழ்க்கையை இனிமையுடன் நடத்திச் செல்வதற்குத் தேவையான பொருளைத் திரட்டுவதற்காகத் தலைவி அழகியை விட்டுப் பிரிந்து வெளியூர் சென்றான்.

அவன் பிரிந்து சென்றது முதலே அழகி அவன் நினைவாகவே இருந்தாள்.

அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில்லை. அப்படியே சில சமயங்களில் அழகுபடுத்திக் கொண்டாலும் கண்களில் மையிட்டுக் கொள்வது இல்லை. ஏன் தெரியுமா? கண்ணிலே தங்கிக் காட்சி அளித்துக் கொண்டிருக்கும் கணவனின் உருவத்தை அந்த மை மறைத்து விடுமாம்! என்னே அவள் அன்பு.

சரியாக அவள் உண்பதில்லை. அப்படியே உண்டாலும் உண்ணும் உணவை நன்கு ஆற வைத்துக் குளிர வைத்தே உண்பாள். ஏன் தெரியுமா? அவள் நெஞ்சுக்குள்ளே தலைவன் நிலைத்துத் தங்கி உள்ளான். சுடுசோற்றை உண்டால் - சுடு பொருள்களை உட்கொண்டால் அந்தச் சூடானது நெஞ்சத்தில் தங்கியிருக்கும் கணவனைச் சுட்டுப் பொசுக்கி விடுமாம்! என்னே அவள் பாசம்!

இவ்வாறு அவனுடைய பிரிவை ஆற்ற மாட்டாமல் - தாங்க முடியாமல் உள்ளத்தையும் உடலையும் வருத்திக் கொண்டு, கவலை தோய்ந்த முகத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள்!

அவள் தோழி அங்கே வந்தாள். அன்புத் தோழியை - அழகியை நோக்கினாள்.

“ஏண்டியம்மா அழகு! அவர்தான் விரைவில் திரும்பி விடுவாரே! அதுவரைக்கும் பொறுக்கக் கூடாதா? அவர் உன் அருகிலேயே இருக்க வேண்டுமா? கொஞ்சம் நாள்கூடப் பிரிந்திருக்கக் கூடாதா? என்று கேலியும் கிண்டலும் கலந்திட, அதே சமயம் ஆறுதலும் தேறுதலும் கூறும் வகையில் கேட்டாள்.

அது கேட்ட அழகு,

“அடியே தோழி! அமுது! அப்படி இல்லையடி! இந்தச் சில நாள் பிரிவைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் கோழை இல்லையடி - பொறுமையும் பொறுப்பும் அற்றவள் இல்லையடி!

அவருடைய பிரிவுக்காக நான் வருந்தவில்லை. இல்லறத்தின் நன்மைக்காக என் தலைவர் பிரிந்துள்ளார் - விரைந்து வந்து சேர்ந்திடுவார்-

குளிர்ச்சி நிறைந்த என் மார்பிலே தலை வைத்துத் தூங்குவதை வெறுத்துத் தொழிலை விரும்பிப் பிரிந்து சென்றுவிட்டாரே என்று எண்ணி நான் சிறிதும் வருந்தவில்லை. இது தற்காலிகப் பிரிவே ஆகும் - அவர் தன் கடமைக்காகப் பிரிந்த பிரிவே ஆகும்.

ஆனால்,

அவர் சென்றுள்ள வழியை நினைத்துத் தான் வருந்துகிறேன். அப்பாதையை நினைத்தாலே பயமாக இருக்கிறதடி! அப்பாதையை நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறதடி!

அதுவோ பாலை வழி! பாலை நிலம்!
அந்த வழி எப்படிப்பட்டது தெரியுமா?
வெப்பம் நிறைந்த காற்று வேகமாக வீசிக் கொண்டே இருக்கும்;
ஓங்கி நிற்கும் வாகை மரங்கள்! அவற்றில் முதிர்ந்து, முற்றி, உலர்ந்து போன காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.

அந்தக் காய்களுக்குள் காற்சிலம்புக்கு உள்ளே இருக்கும் உள்ளிடு பரல்லகளைப் போல விதைகள் இருக்கும்.

வெப்பக் காற்று வீசுகின்ற பொழுது அவ்விதைகள் கலகலவென ஒலிக்கும். ஆனால் அந்த வாகை மரங்களில், உலர்ந்து போன காய்கள் மட்டும் தொங்கிக் கொண்டிருக்குமே தவிர ஓர் இலை கூட இருக்காது.

இலைகள் எல்லாம் வெப்பத்தால் கருகி உதிர்ந்து போய் மரங்கள் எல்லாம் பட்டுப் போய் மொட்டையாய் நிற்கும்.

அதனால், வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்ளவும், சற்று இளைப்பாறிக் கொள்வதற்கும் ஒதுங்குவதற்குக்கூட சிறிதளவு நிழல் கூட கிடைக்காதே!

அவ்வளவு கொடிய வழி ஆயிற்றே!
அதை எப்படித்தான் அவர் தாங்கிக் கொள்வாரோ?
அது மட்டுமா?
அந்தப் பாலை நிலத்தில் உள்ள மலைகள் கூட அங்கு வீசும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பிளந்து போகுமே?

அவ்வளவு கொடிய அனல் வீசும் பாதை ஆயிற்றே! - பாலை ஆயிற்றே! - அருஞ்சுரம் ஆயிற்றே!

அந்தப் பாதையில் அவர் எப்படித்தான் பயணம் செய்வாரோ? அந்த வெப்பத்தை அவர் பாதங்கள் எப்படித்தான் தாங்கிக் கொள்ளுமோ?

ஐயோ!
தோழி! அமுது! அன்பிற்குரியவளே!

இதற்காகத்தான் வருந்துகிறேனே தவிர, அவருடைய பிரிவை எண்ணிச் சிறிதும் வருந்தவில்லை. அதனை ஆற்றிக் கொள்ளும் ஆற்றல் எனக்கு நிரம்பவுண்டு என்று அழகி வருத்ததிற்கான உண்மைக் காரணத்தை கூறினாள்.

அவள் உரை கேட்ட அமுது, அழகி தன் கணவனிடம் கொண்டுள்ள களங்கமற்ற காதலையும், பாசத்தையும், பற்றையும், கடுங்கதிர் வெம்மையில் காதலன் படும் பாட்டை எண்ணி இவள் நடுங்கி வருந்துவதையும் எண்ணி எண்ணி வியந்தாள்.

“வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென,
நெற்றுவினை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப! நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே” ( குறுந்தொகை-39)


எழுத்து : டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் 558286.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» உருக்குலைந்த உறவு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» மாறியது உள்ளம் மாற்றியவர் யாரோ? - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» ஒளியினைத் தேடும் குத்துவிளக்கு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» அதுவரை பொறுத்திரு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» தொடர்கின்ற பயணம்! - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum