தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கதை பேசும் காற்று! நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

கவிஞர் இரா  இரவி - கதை பேசும் காற்று!  நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன்,    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Empty கதை பேசும் காற்று! நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Mon Oct 07, 2019 3:39 pm

http://www.tamilauthors.com/04/504.html

கதை பேசும் காற்று!

நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன்,

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  

பாவை மதி வெளியீடு, 55, வ.உ.சி. நகர், மார்க்கெட் தெரு, தண்டார்பேட்டை, சென்னை – 81.


******

     இந்நூலை திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். ஹைக்கூ கவிஞர் இயக்குநர் ஏகாதேசி திரைப்பட பாடலாசிரியர் அருண்பாரதி, கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர். பதிப்பாளர் ம. வான்மதி பதிப்புரை வழங்கி உள்ளார்.  

குடித்துக் குடித்து விழுந்தான்
நிமிரவே முடியவில்லை
குடிகாரனின் குடும்பம்!

THE DRUNKARD CANNOT BE STABLE
IN HIS WALK AND NEITHER CAN
HIS FAMILY BE STABLE

தடுக்கி விழுந்தால் மதுக்கடை. சாலை இல்லாத கிராமங்களில் கூட மதுக்கடை உண்டு. இளைய தலைமுறையினர் குடிக்கு அடிமையாகி குடி நோயாளிகள் பெருகி விட்டனர். மதுக்கடைகளை உடனடியாக மூடினால் தான் சமுதாயம் சீர் பெறும் என்பதை ஹைக்கூவால் உணர்த்தி உள்ளார். ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளில் அனைத்து ஹைக்கூக்களும் இடம் பெற்றுள்ளன.

குப்பைகளின் கூடாரம்
அள்ள அள்ளக் குறைவில்லை
மனதிற்குள்!

THE HEAP OF UNWATED TRAITS
CANNOT BE REMOVED EVEN WITH CONSTANT EFFORT.

சிலர் வெள்ளுடை அணிந்து இருப்பார்கள். மனம் அழுக்காக இருக்கும். புறம் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது. அகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஹைக்கூ நன்று.

வாழ்க்கைப் பூட்டைத் திறக்கும்
அற்புத சாவிகளே
புத்தங்கள்!

THE TREASURE OF LIFE IS
BEVEALED THROUGH
THE KNOWLEDGE BY BOOKS

புத்தகத்தின் பயனை வித்தியாசமாக உணர்த்தி உள்ளார்.

புத்தகம் என்பது ஒரு மனிதனை பண்படுத்தும், சீர்படுத்தும், தெளிவுபடுத்தும், அறியாமை நீக்கும். இப்படி எத்தனையோ பயன் தரவல்ல புத்தகத்தை வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வருவது நல்லதல்ல.

முன்நோக்கியே செல்
உன்னைப் பின்தொடர காத்திருக்கும்
புதிய பாதைகள்!

MOVE FORWARD
THERE IS A WAY
WHICH IS LEADING WAY.

LEADING WAY என்பதற்குப் பதிலாக NEW WAY என்று எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பாதை இல்லையே என வருந்தாதே. நடந்து செல் புதிய பாதை உருவாகும் என்ற பொன்மொழியை நினைவூட்டும் விதமான ஹைக்கூ நன்று.

தன்னையே தொலைத்த பின்னர்
நமக்கு கிடைத்தார்
ஒரு புத்தர்!

AFTER HE HAS LOST HIMSELF
THERE ARISES THE
AWAKENED BUDDHA.

     உண்மை தான். புத்தர் தன் குடும்பத்தை, சொத்தை, ஆட்சி அதிகாரத்தை, அரண்மனை என அனைத்தையும் துறந்தபின்பு தான் துறவியானார். ஆசையை அறவே அழித்து விட்டுத்தான் ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதனை செய்தார்.

முடிந்தது திருவிழா
களையிழந்து நிற்கிறது
தேர்!

AFTER THE GLORY OF THE FESTIVAL
THE CHARIOT IS
LEFT FORGOTTEN.

ஊர் கூடி தேர் இழுப்பார்கள். லட்சக்கணக்கானோரின் கவனம் பார்வை முழுவதும் தேரின் மீதே இருக்கும். திருவிழா முடிந்து தேர் நிலைக்கு வந்தபின் அதனைப் பார்க்க கவனிக்க யாரும் வருவதில்லை. பயன் முடிந்ததும் மறந்து விடும் சுயநல மனிதர்களை உணர்த்துவதாகவே புரிந்து கொண்டேன்.

தொடர் வண்டி முன்பு
அழகாக எடுத்துக் கொண்டான்
கடைசிச்செல்பி

THE FRONT OF THE FAST
MOVING TRAIN, THE VAIN PERSON
TAKES HIS LAST SELFIE.

விளையாட்டு விபரீதம் ஆவது போல பலர் ஓடும் ரயிலில் தன்படம் எடுத்து பலியான செய்தி, செய்தித்தாளில் படித்து இருக்கிறோம். அதனை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ நன்று. செல்பி என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பதிலாக தன்படம் சுயமி என்று தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி இருக்கலாம்.

தமிழோடு ஆங்கிலம் கலக்காது எழுதுவது சிறப்பு. சில இடங்களில் உள்ள ஆங்கிலம் சொற்களை அடுத்த பதிப்பில் நீக்கிட வேண்டுகிறேன்.

தெளிவாக தெரிகிறது
மனிதர்களிடம்
பல முகமூடிகள்!

THAT PEOPLE WEAR
MASKS IS
CLEARLY VISIBILE

மனிதர்கள் பலவிதம். பலர் பலவிதமாக நடிக்கின்றனர். நிறம் மாறும் பச்சோந்தியைப் போல மாறுகின்றனர். இந்த உலகம் எனும் நாடக மேடையில் நடிகர்களாகவே மாறி விடுகின்றனர். இயல்பாக இன்று பலர் இருப்பதில்லை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

புத்தரிடம்
ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறது
ஆழ்ந்த நிசப்தம்!

THE BUDDHA IS CONTINUALLY
MEDITATING
SPEAKING WITH SILENCE

பேசிக் கொண்டிருத்தல், நிசப்தம், அமைதி, முரண்சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று. புத்தர் சிலை உள்ள கோயில்களில் நிலவும் அமைதியை ஹைக்கூவின் மூலம் உணர்த்தி உள்ளார்.

இரவைத் தூங்கவிடாமல்
பேசிக் கொண்டிருக்கின்றன்
மழைக்கான தவளைகள்!

THE FROGS WHICH EMERGE DURING THE RAINY SEASON DO NOT ALLOW THE SILENCE OF THE NIGHT TO REMAIN.

சப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் பெரும்பாலும் இயற்கை தொடர்பான ஹைக்கூவே எழுதி வருகின்றனர். சப்பானியர்களுக்கு தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தமிழக் கவிஞர்களும் இயற்கை தொடர்பான ஹைக்கூக்களும் வடித்து வருகின்றனர். இந்த ஹைக்கூ மழைக்கால இரவையும், தவளையின் கத்தலையும் நினைவுபடுத்தி வெற்றி பெறுகின்றது.

உயரும்
தங்கும் விலை
வீட்டில் முதிர்கன்னி!

THE PRICES OF GOLD KEEPS
CLAIMING THE GIRLS ALLIANCES
REMAIN IN QUESTION

தங்கம் விலை ஏற ஏற ஏழைகளின் திருமணம் தள்ளிப் போகின்றன. முதிர்கன்னிகள் பெருகி வருகின்றனர். இதனால் முதிர்காளைகளும் பெருகி வருகின்றனர். நாட்டில் கொலை, கொள்ளைக்கும் தங்கம் விலையேற்றம் காரணமாகின்றது. உலக சந்தை என்று கூறி கை கழுவாமல் தங்கத்தின் விலையை குறைத்திட ஆள்வோர் முயல வேண்டும். இப்படி பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் ஹைக்கூக்களின் தொகுப்பு நன்று பாராட்டுக்கள்.
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
»  எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum