தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா?

Go down

தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா? Empty தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 22, 2011 1:31 pm

சமீபத்தில் கேள்விப்பட்ட மரணம் ஒன்று. அது இயற்கையான மரணம் அல்ல. தற்கொலை. இதற்கும் துயரர் பள்ளிப் பருவத்திலோ, கல்லூரிப்
பருவத்திலோ இருப்பவர் அல்ல. மணமாகி குழந்தையும் உள்ளவர். தற்கொலைக்குக்
காரணம் மன அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்படும் யாவரும்
சொல்லும் வசனம்- எப்படி இவர்கள் தற்கொலைக்குத் துணிந்தார்கள்? மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தால் இப்படி செய்ய எண்ணம் வருமா? அவர்கள் கஷ்டப்படுவார்களே என்று நினைக்க மாட்டார்களா? இப்படியாகத்தான் இருக்கும்.

ஆனால், துயரரின் பார்வையில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் வலியும், வேதனையும்
என்னவென்று தெரியும். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு கசப்பான சம்பவம்
அவர் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்
யாராவது இறந்தது மனதைப் பாதித்திருக்கலாம் அல்லது தொழிலில் ஏற்பட்ட இழப்பாக
இருக்கலாம் அல்லது தனக்கு இருக்கும் தீராத வியாதியைப் பற்றிய கவலையாக
இருக்கும் (தீராத வியாதி என்று அவராக நினைத்துக் கொள்வது) அல்லது யாராவது
மனதைப் புண்படுத்தும்படி பேசிய பேச்சாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு
விதத்தில் துயரர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் மொத்த விளைவாக அவர் மனதில்
தோன்றுவதுதான் உயிரோடு இருப்பதே வீண் என்று நினைத்தல். மற்றவர்களுக்குப்
பாரமாக இருக்கிறோமோ? என்றும், தான் எதற்கும் பயன்படாதவர் என்றும் நினைத்தல். தன் வியாதியை யாராலும் குணப்படுத்த முடியாது என்று நினைத்தல்.

இப்படிப்
பலவிதமான நினைவுகளால் அவர் மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணம்-மரணம். தான்
இறப்பது ஒன்றுதான் இதற்கு தீர்வு என்று முடிவு செய்தல். அதற்காக தற்கொலை
முயற்சியில் ஈடுபடுதல். அந்த எண்ணமே அவர் மனதில் அடிக்கடி சாகத்தூண்டிக்
கொண்டிருக்கும். திரும்பத் திரும்ப அதையே நினைத்துக் கொண்டிருப்பார்.
அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவார். இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி
சிறிதும் அவரால் சிந்திக்க முடியாது. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட
சிகிச்சை முறையின், மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், அவருடைய சிந்தனைத் திறன் பாதிக்கப்படலாம்.

ஒரு
சிலர் தற்கொலை செய்து கொள்ள எண்ணுவார்கள். ஆனால் தைரியம் இருக்காது. சில
துயரர்கள் அதற்கும் பயப்பட மாட்டார்கள். தன்னம்பிக்கையற்றவர்களாக
இருப்பார்கள். எதையும் எதிர்கொள்ளலாம் என்ற துணிவு இருக்காது. அவர்
எதிர்நோக்கும் ஒரே விஷயம் மரணமாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு
துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பார். விளைவு, அவரது மனமே அவரது மரணத்திற்கான தூது அனுப்பிக் கொண்டிருக்கும். இப்படி எத்தனையோ பேர் துயரங்களில் இருந்து வெளிவரத் தெரியாமல், வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

ஆனால், “ஹோமியோபதி” என்னும் மகத்தான மருத்துவ முறையில், துயரரின் உடல் நலக் குறிகள் மட்டும் கவனித்து சிகிச்சையளிக்கப்படுவதில்லை. மனக் குறிகளும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இதனால், துயரர் மனதில் என்ன நினைக்கிறார்? எப்படி பாதிக்கப்பட்டுள்ளார்? துயரத்தில் இருந்து மீள என்ன செய்கிறார்? தனிமையில் இருக்க விரும்புகிறாரா? மற்றவர்களோடு இருந்தாலும் தனிமையை உணர்கிறாரா? துயரப்படும்போது என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கிறார்? என்பதெல்லாம் கவனிக்கப்படும்.



t;இவ்வாறு துயரரின் உடல், மனம் இரண்டிலும் தோன்றும் குறிகளை வைத்து துயரரை முழுமையாக ஆய்வு செய்து, அவரை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்க முடியும். தன்னம்பிக்கை உடையவராக மாற்ற முடியும். தக்க சமயத்தில், தக்க ஹோமியோபதி மருத்துவரை நாடி, சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், மனமாற்றத்தை பக்க விளைவுகளற்ற மருந்துகள் மூலம், இயற்கையாகக் கொண்டு வந்து, இயற்கை மரணம் நிகழும் வரை தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையில் வெற்றிநடை போட முடியும்!

இதற்கான சில ஹோமியோபதி மருந்துகளைக் காண்போம்!

ஆரம் மெட்டாலிகம்;

இந்நோயாளி ஆழ்ந்த மன துக்கத்திலும், அளவு கடந்த மன ஏக்கத்துடனும், மிகுந்த
சோகத்துடனும் காணப்படுவார். வாழ்க்கையே இவருக்கு பாரமாகத் தோன்றும்.
தனக்கு ஏதோ கெடுதல் நிகழப் போவது உறுதி என்று எண்ணுவார். எதிலும் நம்பிக்கை
அற்றவராக இருப்பார். தனிமையை விரும்புவார். யாருடனும் பேச மாட்டார்.
யாராவது பேசினாலும் கோபப்படுவார். வெறுப்படைவார். தற்கொலை செய்து கொள்ள
இடைவிடாத தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும்
அதைப்பற்றியே பேசுவார். அப்படிப் பேசுவது ஒருவித மகிழ்ச்சியாக இருக்கும்.
துயரத்திலிருந்து மீள மரணம் ஒன்றே தீர்வு என எண்ணுவார்.

ஆரம் மூரியாடிக்கம்;

தன்னுடைய
வியாதியை நினைத்து வருத்தப்படுதல். தன் வியாதி தீராது என்று நினைத்தல்.
தன் உடல் பழையபடி ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள
எண்ணுதல். தன்னுடைய கடமைகளை, வேலைகளைக் கூட செய்ய சோம்பல், வெறுப்பு.

லாக்கானினம்;

மன வருத்தத்தில் பல வருடங்களாக ஆழ்ந்திருத்தல். பிரமை, பொய்த்தோற்றங்கள். எல்லா விஷயங்களும் கெட்டவையாகத் தோன்றுதல். தன்னுடைய வியாதி தீர்க்க முடியாதது, தனக்குப் பைத்தியம் பிடித்து விடும் என்று நம்புதல். அதிலிருந்து மீள மரணம் ஒன்றே வழி என்று தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல்.

சோரினம்;

வாழ்க்கையில்
அளவு கடந்த வெறுப்பு. தன் குடும்பத்துனருடனுமும் சேர்ந்து இருக்க
மாட்டார். தனிமையை விரும்புவார். தன்னுடைய வியாபாரத்தில் நஷ்டமடைந்து தான்
ஏழையாகி விடுவோம் என்ற பயம். தன் வியாதியால் உடல் ஆரோக்கியமடையாது, தான் இறந்து விடுவோம் என்று தோன்றும் மரண பயம். இதனால் சாவைப் பற்றி அடிக்கடி நினைத்து, தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுதல் ஏற்படும். மிக்க வேதனையினால், நம்பிக்கையிழந்தும், பலமில்லாமலும் இருப்பார்.

செபியா;

நெருங்கிய உறவுகளையே வெறுத்தல். கணவனை, மனைவியை, குழந்தைகளைக் கூட வெறுத்து அலட்சியப்படுத்துதல். கவலையும், அழுகையும் மேலோங்கி, தன்னுடைய
கடமைகளைக் கூட சரியாக நிறைவேற்றாமை. தனியே இருக்க விரும்புவார். பிறரைப்
பார்ப்பதைக் கூட தவிர்ப்பார். எந்த ஒரு நிகழ்வும் அவர் மனதை
சமாதானப்படுத்தாது. வாழத் தனக்கு தகுதியில்லை என்று எண்ணுதல்.

நாஜா;

ஆழ்ந்த
கவலை மற்றும் வேதனையினால் மனம் உடைந்து போகுதல். பொய்த்தோற்றங்களை எண்ணி
பிதற்றுதல். திடீரென்று தற்கொலை செய்து கொள்ள எண்ணம். அதற்கான தூண்டுதல்
இருந்து கொண்டே இருக்கும்.

(நன்றி: ஹோமியோமுரசு அக்டோபர் 2009)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum