தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே

Go down

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே Empty பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே

Post by RAJABTHEEN Thu Mar 31, 2011 9:32 pm

தமிழகத்தில் "மைனர் திருமணங்களும்',அது தொடர்பான ஆள்கடத்தல் புகார்களும் அதிகரித்து வருகின்றன. காதல் வயப்பட்டு காணாமல் போகும் சிறார்களை தேடி கண்டுபிடித்து, பஞ்சாயத்து பேசி தீர்வு காண்பதிலேயே போலீசாரின் பணி நேரம் விரயமாகிறது.



திருமண வயது ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்கிறது திருமணச்சட்டம். திருத்தப்பட்ட திருமணச் சட்டமோ ஆணுக்கு 23, பெண்ணுக்கு 21 வயது என்கிறது. இருவீட்டார் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், பெரும்பாலும் சட்டப்படி நடக்கிறது. ஆனால் காதல் வயப்படுவோர், வயது வித்தியாசம் ஏதும் பார்ப்பதில்லை. பெற் றோர் எதிர்ப்பால் தாங்கள் பிரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், வீட்டிலிருந்து "ஓடி' திருமணம் செய்து கொள்கின்றனர். பிள்ளைகளை காணாத பெற்றோர் போலீசில் புகார் அளிக்கும்போது, பல நாள் தேடலுக்கு பின் "காதலர்களை' பிடித்து அழைத்து வருகின்றனர்.இவருமே, திருமண வயதை எட்டாதவர்கள் என்கிற நிலையில், வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணையை துவக்க வேண்டியது போலீசின் கடமை. ஆனால், சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்களது படிப்பு பாழாகிவிடுமே என்ற அக்கறையுடனும் பஞ்சாயத்து பேசி, பெற்றோருடன் அனுப்பி விடுகின்றனர். மனமுவந்தோ அல்லது வேறுவழியில்லாமலோ "காதலர்கள்' பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே கோவையில் நடந்தன. தற்போது, அதிகளவில் நடக்கிறது.


கோவை மாநகர கிழக்கு சப்-டிவிஷனிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், கடந்த வாரத்தில் மட்டுமே 5 "காதலர் ஓட்டம்' சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் என்ன வியப்பு என்றால், ஒரு புகாரில், "காதலன்' வயது 17; காதலி வயது 19. நகரில் கிளினிக் நடத்தும் டாக்டரின் மகள் (இவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்கிறார்), தன்னைவிட இரண்டு வயது இளையவனை காதலித்து வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்; காதலன் 8ம் வகுப்பு படித்தவன். டாக்டர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஜோடியை பிடித்து வந்து இருவருக்கும் தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதற்கான பேச்சு, நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்து, ஒரு வழியாக தீர்வு ஏற்பட்டது.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே Empty Re: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே

Post by RAJABTHEEN Thu Mar 31, 2011 9:32 pm

மற்றொரு சம்பவத்தில், இன்ஜி., கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவன், 17 வயது இளம்பெண்ணுடன் காதல் கொண்டு, இருவரும் காணாமல் போயினர். மாணவனின் தந்தை போலீசாரிடம் அளித்த புகாரில், "பெண் வீட்டார், தனது மகனை கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளனர்' என தெரிவித்திருந்தார். விசாரணை நடத்திய போலீசார், இளம்பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு பேர் மீது "ஆள்கடத்தல்' பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



மூன்றாவது சம்பவத்தில் பள்ளி மாணவி ஒருவர், கூலி வேலை செய்யும் இளைஞனுடன் காணாமல் போனார். இருவரையும் மீட்டு வந்த போலீசார், அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போன்று மேலும் இரு சம்பவங்கள் வேறு இரு போலீஸ் எல்லைக்குள் நிகழ்ந்து பஞ்சாயத்து பேசி தீர்க்கப்பட்டுள்ளன.



கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை நகரில் 11 மைனர் காதல் ஜோடிகள் மாயமாகி, போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில ஜோடிகள், திருமணமும் செய்து கொண்டன. இவர்களது திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால், இருதரப்பு பெற்றோர் முன் நடந்த பேச்சில் ஜோடிகள் பிரிக்கப்பட்டு, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே Empty Re: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே

Post by RAJABTHEEN Thu Mar 31, 2011 9:32 pm

இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சினிமாவும், "டிவி'யும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டுவிடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, வீட்டிலிருந்து வெளியேறி திருமணமும் செய்து கொள்கின்றனர். "பிள்ளையை காணவில்லை' என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து மீட்கிறோம். இரு வீட்டாரும் கண்ணீர் மல்க போலீஸ் ஸ்டேஷனில் தங்கள் பிள்ளைகளிடம் அழுது புரண்டு சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவங்களும் இதற்கு முன் நடந்துள்ளன. பள்ளி வயதிலேயே கர்ப்பமடைந்த மாணவி ஒருவர், காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி எங்களிடம் புகார் அளித்த சம்பவமும் நடந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது ஆள்கடத்தல், கற்பழிப்பு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து "காதலனை' கைது செய்து சிறையில் அடைக்கவே முடியும்; தவிர்க்க முடியாத நிலையில், இவ்வாறான நடவடிக்கையையும் மேற்கொள்கிறோம்.


அதே வேளையில் மைனர் திருமணம் நடந்திருக்காவிடில், பெற்றோருடன் பேச்சு நடத்தி "பிரித்து' அனுப்புகிறோம். இருதரப்பும் உடன்பட்டால் மட்டுமே இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது; இல்லாவிடில், வழக்குப்பதிவு செய்வதை தவிர வேறு வழியில்லை. மைனர் காதல் திருமண முயற்சி புகார்களை விசாரிப்பது சாதாரண காரியமல்ல; பல மணி நேரம் பேச்சு நடத்தியே தீர்வு காணமுடியும். இதற்கான பேச்சுகளின் போது போலீசாரின் பணி நேரம் விரயமாகிறது; அவசியமற்ற பல தொல்லைகளும், அதனால் தலைவலியும் எங்களுக்கு ஏற்படுகிறது.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், பள்ளியில் அவர்கள் என்ன செய்கிறார்கள், முறையாக வகுப்புக்கு செல்கிறார்களா என, அவர் களது நடத்தையை மறைமுகமாக கண்காணிப்பதும் அவசியம். வீட்டில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது எண்ணம், நோக்கம், செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கு அனுப்புவதோடு கடமை முடிந்தது என நினைத்தால், பிள்ளைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே Empty Re: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum