தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்களின் அந்தச் சில நாட்கள்.....!!

Go down

பெண்களின் அந்தச் சில நாட்கள்.....!! Empty பெண்களின் அந்தச் சில நாட்கள்.....!!

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 2:22 am

பெண்களின் வாழ்வில் மாதவிலக்கு சுழற்சி மிக முக்கிய நிகழ்வாகும். இது இனப்பெருக்க உறுப்புகளின் செயற்பாடு தொடர்பானது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த மாதவிலக்கு அல்லது இரத்தப்போக்கு ஏற்படும். ஒரு பெண் பூப்படைந்த காலம் தொடங்கி வயது முதிர்ந்ததும் மாதவிடாய் நிற்கும். மாதவிடாய் காலம் (மெனோபாஸ்) வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

மாதவிலக்கு சுழற்சியின் போது சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் வேதிப் பொருட்களின் அளவு மாறிக் கொண்டே இருக்கும். மாதச் சுற்றின் முதல் பாதியில் சினைப்பையில் பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். அவ்வேளையில் கருப்பையில் உட்சுவர்களில் இரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உருவாகிறது. மாதச்சுற்றின் மத்தியில் கருப்பையில் மிருதுவான உட்சுவர் தயாரான உடன் ஏதாவது ஒரு சினைப்பையிலிருந்து முட்டை ஒன்று வெளியேறி கருக்குழாய் வழியே கருப்பையை அடையும்.

மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில் அதாவது அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரை புரோஜெஸ்டொரோன் சுரக்கின்ற வேதிப் பொருள் கருத்தரித்தலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகின்றது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் சினை முட்டை கருத்தரிக்காது. எனவே கருப்பையின் உட்சுவர் படலத்திற்கும் தேவை இருக்காது.

அதுபோலவே சினைப்பைகளும் வேதிப்பொருட்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன் விளைவாக கருப்பையின் சுவர்படலமானது உடைந்து சிதைந்து இரத்தக் குழம்பாக கருப்பையிலிருந்து உடலை விட்டு வெளியேறும். இதனோடு சினைமுட்டையும் வெளியேறும். மாதவிடாய் நின்றவுடன் மீண்டும் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜனை சுரக்கும், மீண்டும் மிருதுவான சுவர்படலம் உருவாகும்.

பொதுவாக மாதவிலக்கு 3-7 நாட்களுக்கு இருக்கும். ஆரம்ப காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். மாதவிலக்கின் போது சராசரியாக 30மில்லி லிட்டர் இரத்தம் வெளியேறுகிறது. மற்றவை திசுப் படலமாகும். பெண்கள் நல்ல சத்துள்ள உணவினை உட்கொண்டால் இரத்த இழப்பை விரைவில் ஈடு செய்யலாம். ஒரு பெண், தன் வாழ்நாளில் கணிசமான பகுதியினை மாதவிலக்கில் கழிக்கின்றாள். மாதவிடாய் சுழற்சி இயக்குநீர் சுரத்தலையே அடிப்படையாகக் கொண்டது.
மாதவிலக்கு நிகழாமல் இருப்பது: (அமோனாரியா)

பதினான்கு வயதுக்குப் பிறகும் சில பெண்களுக்கு முதல் மாதவிலக்கே நிகழாமல் இருக்கும். கருப்பை வளர்ச்சிக் குறைபாடு – கருமுட்டை வளர்ச்சிக் குறைபாடு – வேதிப்பொருட்கள் சுரப்பிக் குறைபாடு -நாளமில்லா சுரப்பிக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படலாம்.

சிலருக்கு ஒவ்வோரு மாதமும் மாதவிலக்கு ஏற்பட்டு பின் நின்று விடுவதுண்டு. இதற்கு இரண்டாம் நிலை அமோனார்யா என்று பெயர். இதற்கு நாம் மேலே சொன்ன காரணங்களுடன் நீண்ட நாள் நோய்கள் – அதிகமான வேலை பளு – உடல் சோர்வு – சத்து குறைபாடு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம்.

நல்ல சத்துள்ள உணவு, காய்கறிகள், கீரை, மூட்டை, பால், பேரிச்சைப்பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். அத்துடன் உடற்பயிற்சியும் அவசியம் செய்ய வேண்டும். அப்படியும் மாதவிலக்கு முறையாக வரவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இதைத் தவிர பிரசவ காலங்கள் – மகப்பேறுக்குப் பின் தாய்ப்பால் புகட்டும் காலங்களிலும் மாதவிலக்கு வராது. பெண்களின் 45 வயதிலிருந்து 50 வயதில் மாதவிலக்கு இயல்பாகவே நின்றுவிடும். இதனை மெனோபாஸ் என்று சொல்வார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பெண்களின் அந்தச் சில நாட்கள்.....!! Empty Re: பெண்களின் அந்தச் சில நாட்கள்.....!!

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 2:23 am

அதிக இரத்தப்போக்கு:

சிலருக்கு மாதவிடாய் காலங்களில் ஏழு நாட்களை கடந்தும் அதிக இரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு அணிந்துள்ள நாப்கின் ஒரு மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஈரமாகிவிடும். இவற்றை அதிக இரத்தப்போக்கு என்று சொல்லலாம். இதற்கு இயக்குநீர் சுரப்பிகளின் வேதிப்பொருள் மாற்றம் அல்லது இரத்த சோகையின் துவக்க அறிகுறி கூட காரணமாக இருக்கலாம். எனவே ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.

மாதவிடாய்க்கான முன் அறிகுறிகள்:

மாதவிடாய் நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு சில அறிகுறிகள் தோன்றும். அச்சமயத்தில் உடலில் அதிக அளவு நீர் சேர்வதால் உடல் எடை அதிகரிக்கும். அதனால் அவர்கள் அவதிப்படுவார்கள். அத்துடன் தலைவலி, மார்பகங்களில் வலி, எரிச்சல், மனச்சோர்வு போன்றவைகள் தோன்றலாம். மாதவிலக்கு வந்த உடன் இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். மாதவிலக்கு வருவதற்கு முன் தேதிகளில் அதிகக் கொழுப்பு, அதிக உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை உணவுல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாயின் போது உண்டாகும் வலி:

மாதவிடாயின் போது கருப்பை சுருங்கி விரிந்து இரத்த மற்றும் திசுக்களாலான சுவர்படலத்தை வெளியேற்றுகிறது. இவ்வாறு கருப்பை சுருங்கி விரிவதால் அடிவயிறு மற்றும் பின்பக்கத்தில் வலி ஏற்படும். இந்த வலி எந்த நோயினாலும் ஏற்படுவதில்லை. உடலில் ஒருவித இயக்கு நீர் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த வலி ஏற்படுகின்றது.

இது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். வலியைப் போக்க சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். அடிவயிறு, கீழ்முதுகைத் தடவிக் கொடுக்கலாம். இதனால் இறுக்கமான தசைகள் தளரும். யோகாசனப் பயிற்சிகள் மூலமும் வலியைக் குறைக்கலாம். அதிக வலியாக இருந்தால் மட்டும் வலி மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

இந்நேரத்தில் அதிக சத்துள்ள உணவு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டின் உள்ள தானியங்கள், மீன், பால் போன்றவற்றை உட்கொள்வது அடிவயிற்று கனத்தைக் குறைக்கும். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட டீன் வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கொஃபின் உள்ள கோப்பி,தேநீர், கோலா போன்றவற்றைத் தவிர்க்கவும்.

வேகமான நடைப்பயிற்சியின் போது உண்டாகும் வேதிப்பொருளான எண்டார்பின் அதிக அளவில் உற்பத்தியாகி நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். வெதுவெதுப்பான நீரில் குளித்துப் புத்துணர்ச்சி பெறலாம்.

மாதவிலக்கு குறித்துப் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அது தேவையில்லாதது. ஏனெனில் மாதவிலக்கு என்பது உடலின் ஆரோக்கியமான வளர்ச்சியின் ஒரு பகுதியாதும். கர்ப்பமடைந்து, தாய்மைப் பேறு பெற உடல் தயாராக, ஏற்றதாக உள்ளது என்பதை உணர்த்துவதுதான் மாதவிலக்காகும். மாதவிலக்கின் போது சுத்தமாக இருந்தாலே அதுவே சுதந்திரமாகவும். சுறுசுறுப்பாகவும் இருப்பதாக அர்த்தம். மாதவிலக்கின் போது உடலுறவு கொள்ளலாமா என்ற விபரீத ஆசையோ அல்லது ஐயமோ தோன்றலாம்? மாதவிடாய் காலத்தில் பெண் சோர்வுற்றிருப்பாள். இரத்தப் போக்கின் காரணமாக பெண் மனதளவிலும் உடலுறவினை விரும்பமாட்டாள். இயல்பாகவே பெண்களின் பிறப்புறுப்புக் குழாயினில் அமிலம் போன்ற திரவம் அதிக அளவில் இருக்கும். மாதவிலக்கின் போது அத்திரவம் அமிலத்தன்மை குறைந்து காணப்படும். எனவே சுலபமாக நோய் தொற்றக்கூடிய வாய்ப்பு அதிகமுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பெண் உடலுறவுக்கு சம்மதித்தால் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை.

சரி, பிறகு எப்போது உறவு வைத்துக் கொள்வது என்று கேட்டால் மாதவிடாயின் 5ஆவது நாளில் இரத்தப்போக்கு நின்றுவிடும். அதன் பின் உறவு வைத்துக் கொள்ளலாம். மாதவிலக்கின் போது உடலுறவு கொள்வதால் பால்வினை நோய் மற்றும் எச்.ஐ.வி ஏற்படுமா என்றால், ஆம்! அதிக வாய்ப்புள்ளது. என்பதுதான் பதிலாகும்.

உடலுறவில் ஈடுபடும் இருவரில் யார் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்தாலும் அடுத்தவருக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. பொதுவாக மாதவிலக்கின் போது உடலுறவு கொள்வதென்பது மற்ற சந்தர்ப்பங்களை விட அதிக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. ...

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum