தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எண்ணம்போல் நடக்கும்

2 posters

Go down

எண்ணம்போல் நடக்கும் Empty எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 27, 2011 11:39 pm

கிளாம்பாக்கம் என்னும் கிராமத்தில் கந்தன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும்
நல்லவன். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவன். அவன் ஏழையாக பிறந்தது
தான் பரிதாபம்.

முனுசாமி என்பவன் அந்த கிராமத்தில் மிகவும் செல்வச்
செழிப்புடன் வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் கெட்டவன். ஊர் மக்கள் அனைவரும்
தன்னைத் தெய்வமாக எண்ண வேண்டும் என்று முனுசாமி நினைப்பான். அதற்காக அவன்
பல சூழ்ச்சிகளையும் செய்வான்.

இவனைப் பற்றி கந்தனுக்கு நன்றாக தெரியும். முனுசாமி சூழ்ச்சி செய்தாலும் கந்தன் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.

இல்லை
என்று வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவைக் கொடுத்து நல்ல முறையில்
உபசரித்து வழி அனுப்புவான் கந்தன். அதனால் ஊர் மக்கள் அவனை மனமார
வாழ்த்துவார்கள். அதேபோல் முனுசாமியிடம் `இல்லை' என்று சென்றால் அவன்,
`என்னிடம் எதுவும் இல்லை, உங்களுக்குக் கொடுத்தால் நானும் உங்களைப் போன்றே
ஆகிவிடுவேன்' என்று அவர்களை அடித்து விரட்டுவான். இதனால் அவர்கள் மிகவும்
வேதனையுடன் திரும்புவார்கள்.

"நம்மிடம் பணம் இருக்கு. அதனால் நம்மை
யாரும் ஒன்று செய்துவிட முடியாது. எதையும் பணத்தால் சரி செய்துவிட
முடியும்'' என்ற எண்ணம் முனுசாமியிடம் இருந்தது. அதனால் அவன் தன்
குடும்பத்தில் உடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும் கூட மிகவும்
உதாசினப்படுத்தினான். ஆனால் கந்தன் ஏழையாக இருந்தாலும் அனைவரிடமும்
அன்பாகவும் பாசமாகவும் உறவு வைத்து இருந்தான்.

கந்தனை எப்படியாவது
இந்த ஊரைவிட்டு விரட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று
முனுசாமி நினைப்பான். அதனால் கந்தனுக்கு பல இடைஞ்சல்கள் செய்து வந்தான்.
ஆனால் அவனது திட்டங்கள் தோல்வியில்தான் முடிந்தது.

ஒருநாள் கந்தனின்
வீட்டுக்கு மிகவும் வயதான முனிவர் ஒருவர் வந்தார். அவர் பசியால் மிகவும்
வாடிப் போயிருந்தார். கந்தன் வீட்டு முன்வந்து நின்று, "ஐயா எனக்கு ஏதாவது
சாப்பிடக் கொடுங்கள், பசி உயிர் போகுது!'' என்றார். அந்த முனிவரின் குரல்
கேட்டதும் கந்தன் அதிர்ச்சியடைந்தான். உடனே முனிவரை தன் வீட்டிற்குள்
அழைத்து அமர வைத்து அவருக்கு மிகவும் அன்பாக அறுசுவை உணவுகளைப் பரிமாறி
உபசரித்தான். முனிவரின் வயிறும் மனமும் குளிர்ந்தன.

உடனே அந்த முனிவர் கந்தனைப் பார்த்து, "என் பசியைப் போக்கினாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்று கூறினார்.

அதற்குக்
கந்தன், "எனக்கு ஒன்றும் வேண்டாம் ஐயா. இல்லை என்று என்னிடம்
வருபவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறும் நிலை எனக்கு வராமலிருந்தால்
போதும்'' என்றான்.

அதற்கு அந்த முனிவர், "உன் எண்ணம்போல நடக்கும்''
என்று கூறி அங்கு இருந்து புறப்பட்டார். பிறகு கந்தனின் எண்ணம்போல எல்லாம்
நடந்தது. வருவோருக் கு எல்லாம் சாப்பாடு போடும் வகையில் அவன் வீட்டில் வளமை
பொங்கியது.

அதைக் கேள்விப்பட்ட முனுசாமி அந்த முனிவரை
தேடிப்பிடித்து அவரை வலுக் கட்டாயமாக உணவு உண்ணவைத்து உபசரித்தான்.
முனுசாமியின் எண்ணம் முனிவருக்குப் புரிந்தது. முனிவர் சாப்பிட்ட பிறகு
முனுசாமி, " கந்தனுக்கு வரம் கொடுத்தது போல எனக்கும் நீங்கள் வரம் தர
வேண்டும் சாமி'' என்றான். அதற்கு அந்த முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்'' என்றார். அதற்கு முனுசாமி, "இந்த ஊரில் நானே பெரிய செல்வந்தன் ஆக
வேண்டும்'' என்றான். அதற்கு முனிவர் "உன் எண்ணம்போல நடக்கும்'' என்றார்.

பிறகு
முனுசாமியின் எண்ணம் முழுவதும் செல்வம் சேர்க்கும் நோக்கத்துக்கு மாறியது.
அதனால் உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டான். முனுசாமி தனிமைக்கு
ஆளானான். ஊரில் ஏற்கனவே அவனை வெறுத்த மக்கள் அனைவரும் மேலும் ஒதுக்க
ஆரம்பித்தனர்.

பிறகு அவன் என்ன செய்வது என்று தெரியாமல் வாடினான். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தும் நிம்மதியின்றித் தவித்தான்.

கந்தன்
நல்லதே நினைத்து நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தான். அவனைச் சுற்றியும்
நல்ல உறவுமுறைகள் இருந்தன. அதனால் கந்தன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

மீண்டும்
ஒருநாள் அந்த முனிவர் அந்த கிராமத்திற்கு சென்றார். அப்போதும் கந்தன் அவரை
வணங்கி வரவேற்றான். உணவு அளித்து உபசரித்தான். அப்போது முனிவர், "என்ன
வரம் வேண்டும் கேள்'' என்றார்.

அதற்கு கந்தன், ``எல்லாரும் நல்லா இருக்க வேண்டும்'' என்றான். உடனே முனிவர்,
"நல்லதே
நடக்கும்'' என்று புறப்பட்டார். பிறகு முனுசாமியின் வீட்டுக்குச்
சென்றார். அப்போது அவனின் நிலையைக் கண்டு வருத்தம் கொண்டார்.

அவரிடம்
முனுசாமி, "ஐயா... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'' என்றான்.
முனிவர் "எல்லாம் அவரவர் எண்ணப்படிதான் நடக்கும்'' என்றார்.

அப்போதுதான்
அவனுக்குப் புரிந்தது, "நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதே நடக்கும்''
என்று. அன்றிலிருந்து அவன் தன்னிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும்
அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தான். பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து
சேர்ந்தன. முனுசாமியும் நிம்மதியாக வாழத் தொடங்கினான்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Wed Apr 27, 2011 11:51 pm

"நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதே நடக்கும்''
///

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 27, 2011 11:52 pm

நன்றி அக்கா கருத்துக்கு

ரொம்ப நாளா காணலையே உங்கள
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:00 am

ஓம் யூஜின், பதிவுபோட மனம் வரேல்லை, உடல்நிலை சரியில்லாமல் போச்சு. இன்று எப்படியும் இங்கு வந்திடோணும் என வந்தேன்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:04 am

arony wrote:ஓம் யூஜின், பதிவுபோட மனம் வரேல்லை, உடல்நிலை சரியில்லாமல் போச்சு. இன்று எப்படியும் இங்கு வந்திடோணும் என வந்தேன்.

அக்கா என்னாச்சு? மருந்து எடுத்தீங்களா? உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் நமது தோட்டத்தின் மீதுள்ள பாசத்தினால் வந்திருக்கீங்க எப்படி நன்றி சொல்ல என்றே தெரியல அக்கா உடம்பை கவனித்துக்கோங்க அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:06 am

இல்ல, இப்போ சரியாச்சு. மிக்க நன்றி யூஜின். நெட் பக்கம் வந்துகொண்டிருந்தேன் ஆனால், கதைக்க வர, மனம் வரேல்லை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:09 am

சொல்லியிருக்கலாம் இல்ல நானே மருந்துகள இலவசமா கொடுத்திருப்பேனே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:11 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சொல்லியிருக்கலாம் இல்ல நானே மருந்துகள இலவசமா கொடுத்திருப்பேனே

இப்பவும் ஒன்றும் பிந்திப் போகேல்லை யூஜின்.... பல் வலிக்குது நல்ல மருந்தா அனுப்புங்கோ... நாட்டு மருந்து வாணாம்..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:13 am

பல்லு தேக்கிற பழக்கமே இல்லையா? வேப்பம் குச்சி எடுத்து பல் துலக்குங்க அதோடு கிராம்பு எடுத்து பல்லில் வையுங்க அக்கா சரியாகிடம் (என்ன யூஜினும் டாகடர் ஆகிட்டானா என்று முழிக்கிறீங்களா)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:18 am

அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ... நான் என்ன சொல்லியிருக்கிறேன் நாட்டு மருந்து வேண்டாம் என்றல்லோ? சிரி சிரி சிரி.

//பல்லு தேக்கிற பழக்கமே இல்லையா?//
என்ன பல் தேய்க்கிறதோ? நீங்க பல் துலக்கிறனீங்களா யூஜின்? அதெப்பூடி எனக்குத் தெரியாதே.... [You must be registered and logged in to see this image.]

யூஜின் டாக்டர்தான்... வைத்தியத் துறையில இல்லாதுவிட்டாலும்... யூஜினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:22 am

அக்கா யூஜின் டாக்டர் பட்டம் பெற தகுதியே இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:26 am

முயற்சித்தால் கிடைக்கும் யூஜின், ஏன் தகுதி இல்லையெனச் சொல்றீங்க...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:28 am

இப்போ அதற்கான தகுதியில்ல என்று தானே சொன்னே அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:30 am

ஓ...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:34 am

அக்கா உங்களுக்கு எப்போ டாக்டர் பட்டம் கொடுக்க போறாங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:36 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்கா உங்களுக்கு எப்போ டாக்டர் பட்டம் கொடுக்க போறாங்க?

அடிவாங்கப் போறீங்க யூஜின்.. மறந்திட்டீங்களோ? நான் டாக்டர் பட்டம் வாங்கி பல வருஷமாச்சே...[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:39 am

டாக்டர் பட்டம் வாங்கினவங்க யாரையும் அடிக்க கூடாதே, அடித்தா பட்டத்தை திரும்ப வாங்குவாங்களாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by arony Thu Apr 28, 2011 12:41 am

இல்ல திரும்ப வாங்கிட்டு புதிசு கொடுப்பாங்க... ரினூவல்[You must be registered and logged in to see this image.]

யூஜின் நான் போயிட்டுப் பின்பு வாறேன்... உங்களுக்கும் நேரமாகுமென நினைக்கிறேன்.. நல்லிரவு.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 12:43 am

சரி அக்கா சென்று வாங்க [You must be registered and logged in to see this image.] உடம்பை கவனித்துக்கோங்க சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும் அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எண்ணம்போல் நடக்கும் Empty Re: எண்ணம்போல் நடக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum