தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

2 posters

Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:03 am



* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அறச் செட்டு முழு நட்டம் .
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றும் போகும்.
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அற்ப அறிவு அல்லற் கிடம்.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:03 am



* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
* ஆழமறியாமல் காலை இடாதே.
* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:03 am

இ, ஈ

* இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
* இஞ்சி இலாபம் மஞ்சளில்.
* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
* இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
* இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
* இராச திசையில் கெட்டவணுமில்லை
* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
* இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
* இருவர் நட்பு ஒருவர் பொறை.
* இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
* இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
* இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
* இளங்கன்று பயமறியாது
* இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
* இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
* இறங்கு பொழுதில் மருந்து குடி
* இறுகினால் களி , இளகினால் கூழ்.
* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
* ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
* ஈர நாவிற்கு எலும்பில்லை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:04 am

உ, ஊ

* உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
* உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
* உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
* உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
* உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
* உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
* உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
* உலோபிக்கு இரட்டை செலவு.
* உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
* உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
* உளவு இல்லாமல் களவு இல்லை.
* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
* உள்ளது போகாது இல்லது வாராது.
* உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
* உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
* ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
* ஊண் அற்றபோது உடலற்றது.
* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:04 am

எ, ஏ

* எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
* எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
* எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
* எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
* எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
* எதார்த்தவாதி வெகுசன விரோதி.
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
* எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
* எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
* எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
* எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
* எலி அழுதால் பூனை விடுமா?
* எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
* எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
* எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
* எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
* எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
* எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
* எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
* எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
* எறும்பு ஊர கல்லுந் தேயும்.
* எறும்புந் தன் கையால் எண் சாண்
* ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
* ஏரி நிறைந்தால் கரை கசியும்.
* எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
* ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
* ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
* ஏழை என்றால் எவர்க்கும் எளிது
* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
* ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:05 am

ஐ, ஒ, ஓ, ஒள

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
* ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
* ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
* ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
* ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
* ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
* ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:05 am



* கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
* கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
* கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
* கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
* கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
* கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
* கரணம் தப்பினால் மரணம்.
* கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
* கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
* கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
* கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
* கல்லாதவரே கண்ணில்லாதவர்.
* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
* கல்வி அழகே அழகு.
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:06 am

கா

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
* காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காற்றில்லாமல் தூசி பறக்குமா?
* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:06 am

கி, கீ, கு, கூ

* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:06 am

கெ, கே

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
* கெட்டும் பட்டணம் சேர்
* கெண்டையைப் போட்டு வராலை இழு.
* கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
* கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
* கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
* கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
* கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
* கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:07 am

கை

* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
* கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
* கையிலே காசு வாயிலே தோசை
* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
* கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
* கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:07 am

கொ

* கொடிக்கு காய் கனமா?
* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
* கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
* கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
* கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
* கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:07 am

கோ

* கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
* கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
* கோபம் சண்டாளம்.
* கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
* கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
* கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:08 am

ச, சா

* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
* சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
* சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
* சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
* சாண் ஏற முழம் சறுக்கிறது.
* சாது மிரண்டால் காடு கொள்ளாது.
* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
* சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:08 am

சு, சூ

* சுக துக்கம் சுழல் சக்கரம்.
* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
* சுட்ட சட்டி அறியுமா சுவை.
* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
* சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:08 am

செ, சே, சை

* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
* செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
* செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
* செயவன திருந்தச் செய்.
* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
* செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
* சேற்றிலே செந்தாமரை போல.
* சைகை அறியாதவன் சற்றும் அறியான்.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:09 am

சொ, சோ

* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
* சொல் அம்போ வில் அம்போ?
* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
* சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
* சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
* சொல்வல்லவனை வெல்லல் அரிது.
* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Nov 11, 2010 3:10 am



* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
* தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
* தவளை தன் வாயாற் கெடும்.
* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 11, 2010 10:37 am

அருமையான மிகவும் பயனுள்ள பழமொழி தொகுப்புகள். நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by RAJABTHEEN Thu Jun 28, 2012 1:10 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான மிகவும் பயனுள்ள பழமொழி தொகுப்புகள். நன்றி தோழரே
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் Empty Re: தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum