தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்
2 posters
Page 1 of 1
கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்
நாம் தேவனுடைய
பிள்ளைகளாயிருக்கிறோமென்று
ஆவியானவர்தாமே நம்முடைய
ஆவியுடனேகூடச்
சாட்சிகொடுக்கிறார்.
நாம் பிள்ளைகளானால்
சுதந்தரருமாமே; தேவனுடைய
சுதந்தரரும்,
கிறிஸ்துவுக்கு உடன்
சுதந்தரருமாமே;
கிறிஸ்துவுடனேகூட நாம்
மகிமைப்படும்படிக்கு
அவருடனேகூடப்
பாடுபட்டால்
அப்படியாகும். - (ரோமர் 8:16-17).
இங்கிலாந்தில் ஒரு
பெண் மிகவும் அழுக்கான
உடைகளைத் தரித்துக்
கொண்டு, குப்பைத்
தொட்டிகளுக்கு அருகே
இருந்து அங்கிருந்த
உணவுகளை சாப்பிட்டுக்
கொண்டு, சடை பிடித்த
முடிகளுடன் அலைந்துக்
கொண்டிருந்தாள். அவளிடம்
பக்கத்தில் யாராவது
வந்தால், ‘நான் பெரிய
குடும்பத்துப்
பெண்ணாக்கும், என்னை
என்னவென்று நினைத்துக்
கொண்டிருக்கிறாய்’
என்று சத்தம் போடுவாள்.
இப்படி 20 வருடங்களாக
தெருதெருவாக அலைந்துக்
கொண்டிருந்தாள். அவள்
யாரோ பிச்சைக்காரி என்று
யாரும் அவளைக் கண்டுக்
கொள்ளவும் இல்லை.
ஒரு முறை அவள் ஏதோ சண்டை
செய்தாள் என்பதற்காக
போலீஸ் ஸ்டேஷனுக்கு
கொண்டு செல்லப்பட்டாள்.
அங்கிருந்த ஒரு காவல்
அதிகாரி, நேரமெடுத்து
அவளை விசாரித்த போது,
அந்தப் பெண் உண்மையாகவே
பெரிய இடத்துப் பெண்தான்
என்று தெரிய வந்தது. அவள்
அங்கிருந்த பெரிய
அரசாங்க அதிகாரியின்
மகள் என்றும், அவள் ஒரு
முறை கடைக்கு சென்றபோது,
அவள் திருடர்களால்,
தலையில் அடிக்கப்பட்டு,
மூளைகலங்கிப் போய் தான்
இருக்கும் இடம்
தெரியாமல் அலைந்து
திரிந்ததாக தெரிய
வந்தது.
20
வருடங்களாக குப்பையில்
கிடந்த உணவு பொருட்களை
சாப்பிட்டு வாழந்து வந்த
அவள் அத்தனை
நாட்களுக்குபிறகு, தன்
குடும்பத்தோடு, சரியான
இடத்திற்கு தன்
குடும்பத்தாரின்
சொத்துக்களுக்கு
உடன்சுதந்தரவாளியாக
அழைத்து
செல்லப்பட்டாள்.
நாம் அனைவரும்
கர்த்தருடைய சாயலில்
உருவாக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் நம்முடைய
பாவங்களினால் நாம் அவரை
விட்டு தூரப் போய்,
அலைந்து திரிந்தாலும்,
நாம் நம் பாவங்களை விட்டு
திரும்பி,
இயேசுகிறிஸ்துவின்
இரத்தத்தினால்
கழுவப்பட்டு,
திரும்பவும்
தேவனிடத்தில் வரும்போது,
பரலோகத்தின்
ஆசீர்வாதங்களுக்கு நாம்
சுதந்தரவாளிகளாக
மாறுகிறோம். நாம்
பிள்ளைகளானால்
சுதந்தரருமாமே; தேவனுடைய
சுதந்தரரும்,
கிறிஸ்துவுக்கு உடன்
சுதந்தரருமாமே என்று
வசனம் நமக்கு கூறுகிறது.
கெட்ட குமாரன் தன்
தந்தையின்
சொத்துக்களில் தன்னுடைய
பங்கை வாங்கிக் கொண்டு,
ஊதாரியாக செலவழித்து,
கடைசியில் பணமெல்லாம்
செலவழிந்து, பன்றி
சாப்பிடும் தவிட்டை
சாப்பிட வாஞ்சித்தும்
அது கிடைக்காதபடியால்,
மனம் திரும்பி,
‘எப்படியாவது என்
தகப்பனிடம் போய் அவருடைய
வேலையாட்களில் ஒருவனாக
இருப்பேன்; என்று
நினைத்துதான் அவன் தன்
தகப்பனிடம் வந்தான்.
ஆனால் தகப்பனோ, எத்தனை
கரிசனையுள்ளவராய்; அவன்
தூரத்தில் வரும்போதே,
அவனுடைய தகப்பன் அவனைக்
கண்டு, மனதுருகி, ஓடி அவன்
கழுத்தைக்
கட்டிக்கொண்டு, அவனை
முத்தஞ்செய்தான்.
குமாரன் தகப்பனை நோக்கி:
தகப்பனே, பரத்துக்கு
விரோதமாகவும், உமக்கு
முன்பாகவும்
பாவஞ்செய்தேன், இனிமேல்
உம்முடைய குமாரன் என்று
சொல்லப்படுவதற்கு நான்
பாத்திரன் அல்ல என்று
சொன்னான். அப்பொழுது
தகப்பன் தன் ஊழியக்காரரை
நோக்கி: நீங்கள் உயர்ந்த
வஸ்திரத்தைக்
கொண்டுவந்து, இவனுக்கு
உடுத்தி, இவன் கைக்கு
மோதிரத்தையும்
கால்களுக்குப்
பாதரட்சைகளையும்
போடுங்கள். கொழுத்த
கன்றைக் கொண்டுவந்து
அடியுங்கள். நாம்
புசித்து,
சந்தோஷமாயிருப்போம். என்
குமாரனாகிய இவன்
மரித்தான், திரும்பவும்
உயிர்த்தான்;
காணாமற்போனான்,
திரும்பவும்
காணப்பட்டான் என்றான்.
அப்படியே அவர்கள்
சந்தோஷப்படத்
தொடங்கினார்கள். - (லூக்கா
15:20-24) என்று பார்க்கிறோம்.
நாம் நம் பாவங்களில்
மடிவதை விரும்பாத தேவன்
அவரிடத்தில் திரும்பி
வருவதையே
எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறவராய்,
அந்த கெட்ட குமாரன்
திரும்பி வந்தபோது
எப்படி மகிழ்ந்தாரோ
அதைப் போலவே நம் தேவனும்
மகிழ்கிறவராய்
இருக்கிறார்.
இன்று நாம் எந்த
நிலைமையில் இருக்கிறோம்?
ஒருவேளை
கெட்டக்குமாரனைப் போல
இருக்கிறோமா? நாம் எந்த
நிலையில் இருந்தாலும்
நம்மை ஏற்றுக் கொள்ள நம்
தகப்பன் ஆவலாய்
காத்திருக்கிறார். அந்த
பெண் 20 வருடங்களாக,
குளிக்காமல் எத்தனை
அழுக்கோடு
இருந்திருந்தாலும்
அவளுடைய தகப்பன் அவளை
ஏற்றுக் கொண்டதுப் போல
நாம் எத்தனை பாவம்
செய்தவர்களாயிருந்தாலும்
நம்மை கழுவி ஏற்றுக்
கொள்ள தேவன் கிருபை
உள்ளவராயிருக்கிறார்.
உங்கள் பாவங்கள்
சிவேரென்றிருந்தாலும்
உறைந்த மழையைப்போல்
வெண்மையாகும்; அவைகள்
இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்
பஞ்சைப்போலாகும் என்று
ஏசாயா 1:18ல் பார்க்கிறோம்.
நாம் இருக்கிறவண்ணமாகவே
தேவனிடத்தில் வருவோம்,
அவர் நம்மை ஏற்றுக்
கொண்டு அவருடைய
பிள்ளைகளாய் நம்மை
மாற்றுவார். நாம்
பிள்ளைகளானால்
சுதந்தரருமாமே; தேவனுடைய
சுதந்தரரும்,
கிறிஸ்துவுக்கு உடன்
சுதந்தரருமாமே. ஆமென்
அல்லேலூயா!
கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேனையா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே
கள்ளனாயினும் நான்
நீர்
பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த
நீர்
தள்ளாதீர்
சிலுவைநாதா
ஜெபம்:
கெட்டகுமாரனாய்
இருந்தாலும், எங்களை
தள்ளிவிடாமல் எங்கைள
நேசித்து ஏற்றுக்
கொள்ளும் எங்கள் நல்ல
தகப்பனே உம்மைத்
துதிக்கிறோம். நாங்கள்
உம்முடைய பிள்ளைகள்
என்று சொல்வதற்கு
தகுதியில்லாதவர்களாயிருந்தாலும்,
உம்முடைய குமாரனாகிய
கிறிஸ்து சிந்தின
இரத்தத்தால்
கழுவப்படவும், நீர்
எங்களை ஏற்றுக்
கொள்ளவும் உம்முடைய
கிருபைக்காக
காத்திருக்கிறோம்.
உம்மிடத்தில் வந்த
யாரையும் புறக்கணியாத
நீர் எங்களை ஏற்றுக்
கொண்டு, உம்முடைய
பிள்ளைகளாக மாற்றி,
கிறிஸ்துவின்
உடன்சுதந்தரர்களாக
மாற்றுவதற்காக உமக்கு
கோடி நன்றி. எங்கள்
ஜெபத்தை கேட்டு
எங்களுக்கு பதில்
கொடுப்பவரே உமக்கே நன்றி.
இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் ஜெபிக்கிறோம்
எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாவே ஆமென்.
பிள்ளைகளாயிருக்கிறோமென்று
ஆவியானவர்தாமே நம்முடைய
ஆவியுடனேகூடச்
சாட்சிகொடுக்கிறார்.
நாம் பிள்ளைகளானால்
சுதந்தரருமாமே; தேவனுடைய
சுதந்தரரும்,
கிறிஸ்துவுக்கு உடன்
சுதந்தரருமாமே;
கிறிஸ்துவுடனேகூட நாம்
மகிமைப்படும்படிக்கு
அவருடனேகூடப்
பாடுபட்டால்
அப்படியாகும். - (ரோமர் 8:16-17).
இங்கிலாந்தில் ஒரு
பெண் மிகவும் அழுக்கான
உடைகளைத் தரித்துக்
கொண்டு, குப்பைத்
தொட்டிகளுக்கு அருகே
இருந்து அங்கிருந்த
உணவுகளை சாப்பிட்டுக்
கொண்டு, சடை பிடித்த
முடிகளுடன் அலைந்துக்
கொண்டிருந்தாள். அவளிடம்
பக்கத்தில் யாராவது
வந்தால், ‘நான் பெரிய
குடும்பத்துப்
பெண்ணாக்கும், என்னை
என்னவென்று நினைத்துக்
கொண்டிருக்கிறாய்’
என்று சத்தம் போடுவாள்.
இப்படி 20 வருடங்களாக
தெருதெருவாக அலைந்துக்
கொண்டிருந்தாள். அவள்
யாரோ பிச்சைக்காரி என்று
யாரும் அவளைக் கண்டுக்
கொள்ளவும் இல்லை.
ஒரு முறை அவள் ஏதோ சண்டை
செய்தாள் என்பதற்காக
போலீஸ் ஸ்டேஷனுக்கு
கொண்டு செல்லப்பட்டாள்.
அங்கிருந்த ஒரு காவல்
அதிகாரி, நேரமெடுத்து
அவளை விசாரித்த போது,
அந்தப் பெண் உண்மையாகவே
பெரிய இடத்துப் பெண்தான்
என்று தெரிய வந்தது. அவள்
அங்கிருந்த பெரிய
அரசாங்க அதிகாரியின்
மகள் என்றும், அவள் ஒரு
முறை கடைக்கு சென்றபோது,
அவள் திருடர்களால்,
தலையில் அடிக்கப்பட்டு,
மூளைகலங்கிப் போய் தான்
இருக்கும் இடம்
தெரியாமல் அலைந்து
திரிந்ததாக தெரிய
வந்தது.
20
வருடங்களாக குப்பையில்
கிடந்த உணவு பொருட்களை
சாப்பிட்டு வாழந்து வந்த
அவள் அத்தனை
நாட்களுக்குபிறகு, தன்
குடும்பத்தோடு, சரியான
இடத்திற்கு தன்
குடும்பத்தாரின்
சொத்துக்களுக்கு
உடன்சுதந்தரவாளியாக
அழைத்து
செல்லப்பட்டாள்.
நாம் அனைவரும்
கர்த்தருடைய சாயலில்
உருவாக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் நம்முடைய
பாவங்களினால் நாம் அவரை
விட்டு தூரப் போய்,
அலைந்து திரிந்தாலும்,
நாம் நம் பாவங்களை விட்டு
திரும்பி,
இயேசுகிறிஸ்துவின்
இரத்தத்தினால்
கழுவப்பட்டு,
திரும்பவும்
தேவனிடத்தில் வரும்போது,
பரலோகத்தின்
ஆசீர்வாதங்களுக்கு நாம்
சுதந்தரவாளிகளாக
மாறுகிறோம். நாம்
பிள்ளைகளானால்
சுதந்தரருமாமே; தேவனுடைய
சுதந்தரரும்,
கிறிஸ்துவுக்கு உடன்
சுதந்தரருமாமே என்று
வசனம் நமக்கு கூறுகிறது.
கெட்ட குமாரன் தன்
தந்தையின்
சொத்துக்களில் தன்னுடைய
பங்கை வாங்கிக் கொண்டு,
ஊதாரியாக செலவழித்து,
கடைசியில் பணமெல்லாம்
செலவழிந்து, பன்றி
சாப்பிடும் தவிட்டை
சாப்பிட வாஞ்சித்தும்
அது கிடைக்காதபடியால்,
மனம் திரும்பி,
‘எப்படியாவது என்
தகப்பனிடம் போய் அவருடைய
வேலையாட்களில் ஒருவனாக
இருப்பேன்; என்று
நினைத்துதான் அவன் தன்
தகப்பனிடம் வந்தான்.
ஆனால் தகப்பனோ, எத்தனை
கரிசனையுள்ளவராய்; அவன்
தூரத்தில் வரும்போதே,
அவனுடைய தகப்பன் அவனைக்
கண்டு, மனதுருகி, ஓடி அவன்
கழுத்தைக்
கட்டிக்கொண்டு, அவனை
முத்தஞ்செய்தான்.
குமாரன் தகப்பனை நோக்கி:
தகப்பனே, பரத்துக்கு
விரோதமாகவும், உமக்கு
முன்பாகவும்
பாவஞ்செய்தேன், இனிமேல்
உம்முடைய குமாரன் என்று
சொல்லப்படுவதற்கு நான்
பாத்திரன் அல்ல என்று
சொன்னான். அப்பொழுது
தகப்பன் தன் ஊழியக்காரரை
நோக்கி: நீங்கள் உயர்ந்த
வஸ்திரத்தைக்
கொண்டுவந்து, இவனுக்கு
உடுத்தி, இவன் கைக்கு
மோதிரத்தையும்
கால்களுக்குப்
பாதரட்சைகளையும்
போடுங்கள். கொழுத்த
கன்றைக் கொண்டுவந்து
அடியுங்கள். நாம்
புசித்து,
சந்தோஷமாயிருப்போம். என்
குமாரனாகிய இவன்
மரித்தான், திரும்பவும்
உயிர்த்தான்;
காணாமற்போனான்,
திரும்பவும்
காணப்பட்டான் என்றான்.
அப்படியே அவர்கள்
சந்தோஷப்படத்
தொடங்கினார்கள். - (லூக்கா
15:20-24) என்று பார்க்கிறோம்.
நாம் நம் பாவங்களில்
மடிவதை விரும்பாத தேவன்
அவரிடத்தில் திரும்பி
வருவதையே
எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறவராய்,
அந்த கெட்ட குமாரன்
திரும்பி வந்தபோது
எப்படி மகிழ்ந்தாரோ
அதைப் போலவே நம் தேவனும்
மகிழ்கிறவராய்
இருக்கிறார்.
இன்று நாம் எந்த
நிலைமையில் இருக்கிறோம்?
ஒருவேளை
கெட்டக்குமாரனைப் போல
இருக்கிறோமா? நாம் எந்த
நிலையில் இருந்தாலும்
நம்மை ஏற்றுக் கொள்ள நம்
தகப்பன் ஆவலாய்
காத்திருக்கிறார். அந்த
பெண் 20 வருடங்களாக,
குளிக்காமல் எத்தனை
அழுக்கோடு
இருந்திருந்தாலும்
அவளுடைய தகப்பன் அவளை
ஏற்றுக் கொண்டதுப் போல
நாம் எத்தனை பாவம்
செய்தவர்களாயிருந்தாலும்
நம்மை கழுவி ஏற்றுக்
கொள்ள தேவன் கிருபை
உள்ளவராயிருக்கிறார்.
உங்கள் பாவங்கள்
சிவேரென்றிருந்தாலும்
உறைந்த மழையைப்போல்
வெண்மையாகும்; அவைகள்
இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்
பஞ்சைப்போலாகும் என்று
ஏசாயா 1:18ல் பார்க்கிறோம்.
நாம் இருக்கிறவண்ணமாகவே
தேவனிடத்தில் வருவோம்,
அவர் நம்மை ஏற்றுக்
கொண்டு அவருடைய
பிள்ளைகளாய் நம்மை
மாற்றுவார். நாம்
பிள்ளைகளானால்
சுதந்தரருமாமே; தேவனுடைய
சுதந்தரரும்,
கிறிஸ்துவுக்கு உடன்
சுதந்தரருமாமே. ஆமென்
அல்லேலூயா!
கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேனையா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே
கள்ளனாயினும் நான்
நீர்
பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த
நீர்
தள்ளாதீர்
சிலுவைநாதா
ஜெபம்:
கெட்டகுமாரனாய்
இருந்தாலும், எங்களை
தள்ளிவிடாமல் எங்கைள
நேசித்து ஏற்றுக்
கொள்ளும் எங்கள் நல்ல
தகப்பனே உம்மைத்
துதிக்கிறோம். நாங்கள்
உம்முடைய பிள்ளைகள்
என்று சொல்வதற்கு
தகுதியில்லாதவர்களாயிருந்தாலும்,
உம்முடைய குமாரனாகிய
கிறிஸ்து சிந்தின
இரத்தத்தால்
கழுவப்படவும், நீர்
எங்களை ஏற்றுக்
கொள்ளவும் உம்முடைய
கிருபைக்காக
காத்திருக்கிறோம்.
உம்மிடத்தில் வந்த
யாரையும் புறக்கணியாத
நீர் எங்களை ஏற்றுக்
கொண்டு, உம்முடைய
பிள்ளைகளாக மாற்றி,
கிறிஸ்துவின்
உடன்சுதந்தரர்களாக
மாற்றுவதற்காக உமக்கு
கோடி நன்றி. எங்கள்
ஜெபத்தை கேட்டு
எங்களுக்கு பதில்
கொடுப்பவரே உமக்கே நன்றி.
இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் ஜெபிக்கிறோம்
எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாவே ஆமென்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்
-
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!
-
===================================
>கவியரசு கண்ணதாசன் அவர்களின்
"இயேசுகாவியம்"என்ற நூலின் முடிவுரையாக
உள்ள பாடல்
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!
-
===================================
>கவியரசு கண்ணதாசன் அவர்களின்
"இயேசுகாவியம்"என்ற நூலின் முடிவுரையாக
உள்ள பாடல்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கிறிஸ்துவின் பிறப்பு
» இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் நட்சத்திரம் தரும் நம்பிக்கையும்
» உடன் போக்கு
» ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உடன் ‘பிரியாணி’!
» உடன் நிறுத்துங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் நட்சத்திரம் தரும் நம்பிக்கையும்
» உடன் போக்கு
» ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உடன் ‘பிரியாணி’!
» உடன் நிறுத்துங்கள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|