தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா
3 posters
Page 1 of 1
சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா
சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி
நூல் விமர்சனம் .குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற
முனைவர் யாழ் சு .சந்திரா, பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .
சுட்டும் விழியின் மின்னல்கள்
ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும் கவிஞர் இரா .இரவியின்
பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப்
பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்
பாஸோ ஹைகூவின் பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன்
கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை
நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல் .என
ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச் சுட்டுவார்.அந்த வித்தை
இரவிக்கு இயல்பாக உள்ளது .
இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை
என்ற நதியின் ஓசை ,கவிதையைப் படிக்கும் போதே காதில் ஒலிக்கிறது.
பாரதியின் இன்பத்தேன் நதியின் இசையாகிறதோ ?
கலை கலைக்காகவே என்ற அழகியல் கோட்பாட்டை விட கலை வாழ்க்கைக்காகவே என்ற
வாழ்வியல் கோட்பாடு உயர்ந்தது! உன்னதமானது ! அந்த வகையில் ,இயற்கையின்
சிலிர்ப்பையும் ,ரசனையையும் வருணிப்பையும் எழுதுவதை விட இன்றைய சமூக
நிலையின் பதிவுகளை எழுதுவது அவசியமான ஒன்றாகும் .அத்தகு பதிவுகள் இரவியின்
படைப்புகளில் பரவலாக ,இல்லையில்லை முழுமையாகவே இடம் பெறுகின்றன எனலாம் .
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
என்ற ஹைக்கூ இடபெயர்தலின் நுண்ணிய உணர்வோடு சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சகோதரர்களின் வலியையும் குறிப்பிடுகிறதே !
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
என்ற ஹைக்கூவில் தமிழுணர்வு பெரும் இடம் சுட்டப்படுகிறது .
தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலிதீன் !
தள்ள வேண்டிய ஒதுக்க வேண்டிய குப்பைகளையும் பதிவு செய்கிறார் கவிஞர் !
பழமொழிகளும் ,பழந்தமிழ் இலக்கியமும் கூட கவிஞரின் கைவண்ணத்தில்,
ஹைக்கூவாகிறது .சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி !
அசுத்தம்
சோறுபோடும்
துப்புரவு தொழிலாளி !
என்றும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் ! என்ற குறள் தொடர் ,
குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை !
என்றும் வடிவம் பெறுகிறது !பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபின் மீது உள்ள கவிஞரின் மனத்தாங்கல் ,
பெண்ணை விட
ஆணே அழகு
மயில் !
என ஹைக்கூவாகிறது.சிதைவுகளும் சிதலங்களும் கூட காலத்தின் பதிவாக அமையும் யதார்த்த உண்மையை ,
கூறியது
வரலாறு
குட்டிச்சுவர் !
என்பார் இரவி !மென்மையான காதலும் பதிவாகிறது கவிஞரிடம் ,
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
என்பதும் ,
உயிரோடு
கண்தானம்
காதலர்கள்
என்பதும் ,
வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கிறது
'தாஜ்மகால்
என்பதும் காதலின் ஹைக்கூ வாகிறது .சமுதாயத்தின் கோபத்தை ,
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை
என ஒலிக்கிறார்.அதேபோல்
முளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம் !
என்ற ஹைக்கூவில் அனைவருக்குமான சமுதாயக் கடப்பாடு தொக்கி நிற்கிறது .
வெறும் வார்த்தைகளால் சித்திரம் மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில்
சிந்தனைகள் ,அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு .என்பார் எழுத்தாளர் சுஜாதா !
இவ்வாறெல்லாம் இரவியின் ஹைக்கூ வில் இடம் பிடிக்கின்றன .இன்னமும் கொஞ்சம்
அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்
ஹைக்கூவிற்கு வாய்க்கும் !
ஹைக்கூவின் அனுபவங்களைச் சூட்டியதோடு நின்றுவிட முடியவில்லை ! நூலின்
அட்டையே - வரைபடமே ஓர் அனுபவமாகிறது .நூல்களால் செதுக்கப்பட்ட சிற்ப
ஓவியமாக அமைகிற அட்டைப்படம் ,
ஏதாவதொரு வாசகனின் அடியாழ மனதில் செருகிக் கொண்டு இருக்கிற கவிதை நுட்பத்தை நிச்சயமாக வெளிக்கிளப்பும் !
.
நூல் விமர்சனம் .குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற
முனைவர் யாழ் சு .சந்திரா, பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .
சுட்டும் விழியின் மின்னல்கள்
ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும் கவிஞர் இரா .இரவியின்
பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப்
பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்
பாஸோ ஹைகூவின் பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன்
கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை
நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல் .என
ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச் சுட்டுவார்.அந்த வித்தை
இரவிக்கு இயல்பாக உள்ளது .
இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை
என்ற நதியின் ஓசை ,கவிதையைப் படிக்கும் போதே காதில் ஒலிக்கிறது.
பாரதியின் இன்பத்தேன் நதியின் இசையாகிறதோ ?
கலை கலைக்காகவே என்ற அழகியல் கோட்பாட்டை விட கலை வாழ்க்கைக்காகவே என்ற
வாழ்வியல் கோட்பாடு உயர்ந்தது! உன்னதமானது ! அந்த வகையில் ,இயற்கையின்
சிலிர்ப்பையும் ,ரசனையையும் வருணிப்பையும் எழுதுவதை விட இன்றைய சமூக
நிலையின் பதிவுகளை எழுதுவது அவசியமான ஒன்றாகும் .அத்தகு பதிவுகள் இரவியின்
படைப்புகளில் பரவலாக ,இல்லையில்லை முழுமையாகவே இடம் பெறுகின்றன எனலாம் .
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
என்ற ஹைக்கூ இடபெயர்தலின் நுண்ணிய உணர்வோடு சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சகோதரர்களின் வலியையும் குறிப்பிடுகிறதே !
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
என்ற ஹைக்கூவில் தமிழுணர்வு பெரும் இடம் சுட்டப்படுகிறது .
தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலிதீன் !
தள்ள வேண்டிய ஒதுக்க வேண்டிய குப்பைகளையும் பதிவு செய்கிறார் கவிஞர் !
பழமொழிகளும் ,பழந்தமிழ் இலக்கியமும் கூட கவிஞரின் கைவண்ணத்தில்,
ஹைக்கூவாகிறது .சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி !
அசுத்தம்
சோறுபோடும்
துப்புரவு தொழிலாளி !
என்றும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் ! என்ற குறள் தொடர் ,
குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை !
என்றும் வடிவம் பெறுகிறது !பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபின் மீது உள்ள கவிஞரின் மனத்தாங்கல் ,
பெண்ணை விட
ஆணே அழகு
மயில் !
என ஹைக்கூவாகிறது.சிதைவுகளும் சிதலங்களும் கூட காலத்தின் பதிவாக அமையும் யதார்த்த உண்மையை ,
கூறியது
வரலாறு
குட்டிச்சுவர் !
என்பார் இரவி !மென்மையான காதலும் பதிவாகிறது கவிஞரிடம் ,
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
என்பதும் ,
உயிரோடு
கண்தானம்
காதலர்கள்
என்பதும் ,
வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கிறது
'தாஜ்மகால்
என்பதும் காதலின் ஹைக்கூ வாகிறது .சமுதாயத்தின் கோபத்தை ,
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை
என ஒலிக்கிறார்.அதேபோல்
முளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம் !
என்ற ஹைக்கூவில் அனைவருக்குமான சமுதாயக் கடப்பாடு தொக்கி நிற்கிறது .
வெறும் வார்த்தைகளால் சித்திரம் மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில்
சிந்தனைகள் ,அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு .என்பார் எழுத்தாளர் சுஜாதா !
இவ்வாறெல்லாம் இரவியின் ஹைக்கூ வில் இடம் பிடிக்கின்றன .இன்னமும் கொஞ்சம்
அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்
ஹைக்கூவிற்கு வாய்க்கும் !
ஹைக்கூவின் அனுபவங்களைச் சூட்டியதோடு நின்றுவிட முடியவில்லை ! நூலின்
அட்டையே - வரைபடமே ஓர் அனுபவமாகிறது .நூல்களால் செதுக்கப்பட்ட சிற்ப
ஓவியமாக அமைகிற அட்டைப்படம் ,
ஏதாவதொரு வாசகனின் அடியாழ மனதில் செருகிக் கொண்டு இருக்கிற கவிதை நுட்பத்தை நிச்சயமாக வெளிக்கிளப்பும் !
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா
இன்னமும் கொஞ்சம்
அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்
ஹைக்கூவிற்கு வாய்க்கும் !
- இதை கொஞ்சம் கடைபிடியுங்கள் என்பதும் என்னுடைய பணிவான வேண்டுகோள்
நன்றி கவிஞரே
அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்
ஹைக்கூவிற்கு வாய்க்கும் !
- இதை கொஞ்சம் கடைபிடியுங்கள் என்பதும் என்னுடைய பணிவான வேண்டுகோள்
நன்றி கவிஞரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» நூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|