தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
தியான யாத்திரை ஈஷாவுடன் இமாலயா! – ஈஷாவின் சிக்ஸ் பேக் சிகிச்சை!
3 posters
Page 1 of 1
தியான யாத்திரை ஈஷாவுடன் இமாலயா! – ஈஷாவின் சிக்ஸ் பேக் சிகிச்சை!
நான் மதங்களை வெறுப்பவன்.
அப்படி ஒன்று இருந்தால் நியாயமாக A பாஸிட்டிவ்
மதம் B நெகட்டிவ் மதம் என்றுதான் இருந்திருக்க
வேண்டும். காரணம் மனித உடல்கள் இம்முறையால்தான்
வகைப்படுத்தப்படுகின்றன.
மாறாக ரத்தத்தில் இந்து ரத்தம், இஸ்லாம் ரத்தம்,
கிறித்துவ ரத்தம் என்று எதுவும் இல்லை.
அவரவர் புவியியல் அமைப்பு அவரவர்க்கான மன
அமைப்பை உருவாக்க அதன்வழியாக மனிதன்
இயற்கைக்கும் தமக்குமான தொடர்பைத் தேடினான்.
ஆன்மிகம் வாழ்வாகி கலாசாரமாகி பின் இறுகி மதம்
ஆனது.
ஈஷாவோடு நான் ஈடுபாடு கொள்ள முதல் காரணம்
அது மதத்தை முன்னிறுத்தவில்லை. பல இஸ்லாமிய
நண்பர்கள், கிறித்துவ நண்பர்கள் ஈஷாவின் தீவிர
அபிமானிகளாக இருந்து வருகிறார்கள்.
ஈஷா எல்லோருக்கும் பொதுவான ஓர் கதவைத் திறந்து
விடுகிறது. தியான லிங்கம் எனும் அதன் மையப் பொருள்
வழியாக அது மனித மனங்களை சமநிலைப்படுத்துகிறது.
ஈஷாவில் என்னை ஈர்த்த இரண்டாவது அம்சம் இரண்டே
சொற்கள்.
"அண்ணா... அக்கா'
எத்தனை வயதான மூத்த பெண்மணியானாலும் இளைஞன்
ஒருவனைப் பார்த்து அண்ணா என அழைப்பதும், எவ்வளவு
வயதான முதியவரானாலும் இளையப் பெண்ணைப் பார்த்து,
அக்கா என அழைப்பதும் ஆச்சர்யமூட்டும் அழகு.
ஹரித்துவாரில் பிரம்மாண்டமான 300 அறைகள் கொண்ட
அந்த நாற்கர விடுதிக்குள் நாங்கள் மூட்டை முடிச்சுக்களுடன்
இறங்கியவுடன் எங்கு பார்த்தாலும் இதே குரல்கள்.
"அண்ணா ஒரு கை கொடுங்க...'
"அக்கா இங்க பாத்ரூம் எங்க இருக்கு...'
அறிமுகமில்லாத ஆட்கள் சட்டென நம் மனத்துக்குள் எந்த
விகற்பமும் இல்லாமல் உட்கார்ந்து விடுகின்றனர்.
ஒரே நாளில் 200 உறவுகள்... புதிய உறவுகள் கிடைத்த மகிழ்ச்சி
அங்கு நமக்குக் கிடைத்துவிடும். அதன்பிறகு அவர் யார், எவர்,
என்ன தகுதி, கல்வி போன்ற அனைத்தும் ஒரே நிமிடத்தில்
மாயமாய் மறைந்து அன்பு நிறைந்த மனித இதயங்களாக
நம் முன் முகம் மலர்ந்து காட்சியளிப்பர்.
அந்த மலர்ச்சிக்குக் காரணம் ஈஷாவின் யோக வகுப்புகள்.
அதன் தொடக்க வகுப்புக்குப் பெயர் சாம்பவை மகாமுத்ரா.
இந்த ஏழுநாள் வகுப்பு செய்தாலே போதும் ஒருவருக்குள்
இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை அடித்து
நொறுக்கப்பட்டு மனத்துக்கு சிக்ஸ் பேக் போடப்பட்டு
வெளியேற்றப்படும்.
மேலும் மூச்சுப் பயிற்சி, ஆற்றலை பெருக்குவதால் இயல்பாக
ஈஷா பயின்றவர்களிடம் எனர்ஜி இருக்கும். நல்ல எண்ணமும்
சிந்தனைகளும் அதன்வழியாக அவர்கள் மனத்தில் சதா
பெருக்கெடுக்கும்.
அப்படிப்பட்ட 200 பேர் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மில்
தாமாக ஊற்றெடுக்கும் மலர்ச்சிக்கும் புத்துணர்வுக்கும் பஞ்சமே
இல்லை.
அதே சமயம் ஈஷா வகுப்பே எடுக்காமல் நேரடியாக சிலரும்
ஆர்வம் காரணமாக பயணத்தில் வந்திருந்தனர்.
அவர்கள் நிலை?
ஹரித்துவார் விடுதியில் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட
அறைகளுக்குள் புகுந்து அரைமணி நேரத்தில் புது ஆடைகளுடன்
புத்துணர்ச்சிமிக்கவர்களாக மத்தியிலிருக்கும் பிரம்மாண்டமான
ஹாலில் கூடினோம்.
ஹாலின் ஒரு பக்கம் சிறிய பளிங்குக் கோயில். அதன் எதிரே
ஈஷாவின் குருமார்கள் வரிசையாக நின்றிருந்தனர்.
தியான யாத்திரையின் தொடக்க காலங்களில் பயணத்தில்
தலைமையேற்ற சத்குரு அவர்கள் தம் பயண திட்டங்களின்
மாறுதல் காரணமாக, பிற்பாடு அந்தப் பொறுப்பை தம் சீடர்களான
ஈஷாவின் யோக குருமார்களிடம் ஓப்படைத்தார்.
எங்களுடன் மொத்தம் எட்டு குருமார்கள் வந்திருந்தனர். அவர்களில்
ஆண் குருமார்களை அனைவரும் ஸ்வாமி என்றும் பெண்
குருமார்களை மா என்றும் அழைத்தனர்.
ஈஷாவின் முக்கிய சக்கரங்கள் இவர்கள்தான். சுறுசுறுப்புக்குப்
பொதுவாக எல்லோரும் எறும்பை உதாரணமாக சொல்வார்கள்.
ஆனால் நான் இவர்களைத்தான் சொல்வேன். பார்வைக்கும்
அவர்கள் உடை, தோற்றம் கூட நடமாடும் எறும்பைப்
போலத்தான் இருக்கும்.
ஆனால் என்ன? எறும்புகள் இனிப்பைத் தேடி ஓடும்.
ஆனால் இவர்களோ இனிப்பைத் தருவார்கள். தம் சுபாவத்தால்
இனிமையை இதயத்துள் உருவாக்குவார்கள்.
அதேபோல இவர்கள் சாதுக்கள் என்றும் சாதாரணமாக அளவிட
முடியாது. எல்லோரும் அனைத்துத் துறைகளிலும் மிகுந்த
பயிற்சியும் திறனும் மிகுந்தவர்கள்.
ஈஷாவில் வகுப்பில் பங்கெடுத்தாலே மனத்துக்கு சிக்ஸ்
பேக் எனும் போது, அதன் ஆசிரியர்கள் என்றால் சும்மாவா.
நாங்கள் கூடியிருந்த கூடலுக்கு சத் சங்கம் என்று பெயர்.
புத்தர் தன் சீடர்களுடன் உரையாடும் நிகழ்வில் தொடங்கிய
இந்த சத் சங்கம், குரு - சீட மரபின் அஸ்திவாரம்.
அன்றைய சத் சங்கத்தில் பயணத்தை வழிநடத்திச் செல்லும்
தலைமை ஆசிரியரான சுவாமி, ஆங்கிலத்தில் அடுத்த
பதினான்கு நாட்களின் பயண திட்டத்தைக் கூறினார். அவர்
ஆங்கிலத்தில் கூறுவதை ஒருவர் தமிழில் உடனடியாக மொழி
பெயர்த்தார். இருவரது குரலிலும் அத்தனை கனிவு. ஒளி.
யார் யார் இதற்கு முன் ஈஷா பயிற்சி எடுக்காதவர்கள்?
ஆங்காங்கு பலர் கை தூக்கினர்.
அவர்கள் தனியாக வரவழைக்கப்பட்டனர்.
"உங்களுக்காக நாளை ஒருநாள் முழுக்க நாம் இங்கேயே
தங்கப்போகிறோம்.'
"ஒருநாள் முழுக்க ஈஷா பயிற்சி வகுப்பு உங்களுக்கு எடுத்த
பின்தான் நமது இமயமலைப் பயணம்,' எனச் சொன்னார்.
அதற்குள் ஒருவர் எழுந்து, "அந்த ஒருநாள் முழுக்க நாங்க என்ன
பண்ண.'
"ஹரித்துவார் உங்களுக்காகக் காத்திருக்கு. இங்கு கங்கையைச்
சுற்றி பல கோயில்கள் இருக்கு. நாம எல்லோரும் அதைச் சுத்திப்
பார்க்க போறோம்.'
உடனே அனைவரது முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் மின்னியது.
"இப்போ உங்களுக்காக உணவு காத்திருக்கு எல்லோரும்
சாப்பிடலாம்.'
சட்டென கூட்டம் கலைந்தது.
இரண்டாவது மாடியிலிருக்கும் எனது அறைக்குச் சென்று சில
அழைப்புகளை அட்டண்ட் செய்துவிட்டுத் திரும்புவதற்குள்,
எனது சென்னை நண்பரான சுந்தர்ராஜன் இரண்டு பேரை
அறிமுகப்படுத்தினார். ஒருவர் எனது வாசகர் செந்தில்,
தேனிக்காரர். இன்னொருவர் துரை. ஆள் நல்ல உயரமாக வாட்ட
சாட்டமாக இருந்தார். பார்த்தாலே ஏதோ ரவுடி மாணவர் போல
இருந்தவரை விசாரித்தபோது, கல்லூரிப் பேராசிரியராம்.
நம்ப முடியவில்லை.
எங்கள் பயணத்தின் மகிழ்ச்சிக்கும் அவர்தான் பேராசிரியர்
என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.
கீழே எட்டிப் பார்த்தபோது பாம்பு போல பெரும் வரிசைக்
கூட்டம். கையில் தட்டுடன் நகர்ந்து கொண்டிருந்தது.
பசி வயிற்றை கிள்ளியது.
கீழே ஓடி வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
ஒரே அப்பர் கிளாஸ் அப்பா ரோலுக்கு ஏற்ற ஒரு முகம்
என்னை நோக்கி நெருங்கியது.
யார் அவர் என நான் ஊகிப்பதற்குள்...
"நீங்கதான் அஜயன் பாலாவா...'
"ஆமாம்...'
"என் பேரு திலீப் ஷா.. என் பையன் உங்களுக்கு நல்ல தெரியுமாமே...
நீங்களும் இங்க வந்திருக்கிறதா ஃபோன் பண்ணிச் சொன்னான்.'
"அப்படியா... உங்க மகன் பேரு.'
"நீரவ் ஷா'
"அட நம்ம கேமராமேன்.'
மகிழ்ச்சியுடன் அவரோடு கைகுலுக்கி அவரையும் வரிசையில்
நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருக்க.. என் தட்டு நகர்ந்துகொண்டே
ஒரு ஆப்பிள், கொஞ்சம் சாதம் சாம்பாருடன் இரண்டு சப்பாத்தியும்
குருமாவும். அதோடு ஒரு இனிப்பையும் வாங்கிக் கொண்டு நகர
கண்கள் அமர இடம் தேடி அலைந்தது.
பயணக்குறிப்புகள்
இமயமலைக்குப் பயணிப்பவர்கள் பயணத்துக்கு அவசியம்
தேவைப்படும் குளிர் பாதுகாப்பு பொருட்களான ஸ்வெட்டர், ஜெர்கின்,
கையுறை, காலுறை, மங்கி கேப், மலையேறும் ஷூக்கள்
போன்றவற்றை இங்கிருந்தே வாங்கி, தேவையில்லாத சுமைகளை
ஏற்றிக் கொள்ளத் தேவையில்லை.
காரணம் இமயமலை அடிவாரமான ஹரித்துவாரிலேயே அனைத்தும்
கிடைக்கும். மேலும் இங்கு நாம் வாங்கும் விலையைவிட அவை
குறைவான விலையிலும் தரமாகவும் இருக்கும்.
=============================================
>அஜயன் பாலா
நன்றி: கல்கி
அப்படி ஒன்று இருந்தால் நியாயமாக A பாஸிட்டிவ்
மதம் B நெகட்டிவ் மதம் என்றுதான் இருந்திருக்க
வேண்டும். காரணம் மனித உடல்கள் இம்முறையால்தான்
வகைப்படுத்தப்படுகின்றன.
மாறாக ரத்தத்தில் இந்து ரத்தம், இஸ்லாம் ரத்தம்,
கிறித்துவ ரத்தம் என்று எதுவும் இல்லை.
அவரவர் புவியியல் அமைப்பு அவரவர்க்கான மன
அமைப்பை உருவாக்க அதன்வழியாக மனிதன்
இயற்கைக்கும் தமக்குமான தொடர்பைத் தேடினான்.
ஆன்மிகம் வாழ்வாகி கலாசாரமாகி பின் இறுகி மதம்
ஆனது.
ஈஷாவோடு நான் ஈடுபாடு கொள்ள முதல் காரணம்
அது மதத்தை முன்னிறுத்தவில்லை. பல இஸ்லாமிய
நண்பர்கள், கிறித்துவ நண்பர்கள் ஈஷாவின் தீவிர
அபிமானிகளாக இருந்து வருகிறார்கள்.
ஈஷா எல்லோருக்கும் பொதுவான ஓர் கதவைத் திறந்து
விடுகிறது. தியான லிங்கம் எனும் அதன் மையப் பொருள்
வழியாக அது மனித மனங்களை சமநிலைப்படுத்துகிறது.
ஈஷாவில் என்னை ஈர்த்த இரண்டாவது அம்சம் இரண்டே
சொற்கள்.
"அண்ணா... அக்கா'
எத்தனை வயதான மூத்த பெண்மணியானாலும் இளைஞன்
ஒருவனைப் பார்த்து அண்ணா என அழைப்பதும், எவ்வளவு
வயதான முதியவரானாலும் இளையப் பெண்ணைப் பார்த்து,
அக்கா என அழைப்பதும் ஆச்சர்யமூட்டும் அழகு.
ஹரித்துவாரில் பிரம்மாண்டமான 300 அறைகள் கொண்ட
அந்த நாற்கர விடுதிக்குள் நாங்கள் மூட்டை முடிச்சுக்களுடன்
இறங்கியவுடன் எங்கு பார்த்தாலும் இதே குரல்கள்.
"அண்ணா ஒரு கை கொடுங்க...'
"அக்கா இங்க பாத்ரூம் எங்க இருக்கு...'
அறிமுகமில்லாத ஆட்கள் சட்டென நம் மனத்துக்குள் எந்த
விகற்பமும் இல்லாமல் உட்கார்ந்து விடுகின்றனர்.
ஒரே நாளில் 200 உறவுகள்... புதிய உறவுகள் கிடைத்த மகிழ்ச்சி
அங்கு நமக்குக் கிடைத்துவிடும். அதன்பிறகு அவர் யார், எவர்,
என்ன தகுதி, கல்வி போன்ற அனைத்தும் ஒரே நிமிடத்தில்
மாயமாய் மறைந்து அன்பு நிறைந்த மனித இதயங்களாக
நம் முன் முகம் மலர்ந்து காட்சியளிப்பர்.
அந்த மலர்ச்சிக்குக் காரணம் ஈஷாவின் யோக வகுப்புகள்.
அதன் தொடக்க வகுப்புக்குப் பெயர் சாம்பவை மகாமுத்ரா.
இந்த ஏழுநாள் வகுப்பு செய்தாலே போதும் ஒருவருக்குள்
இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை அடித்து
நொறுக்கப்பட்டு மனத்துக்கு சிக்ஸ் பேக் போடப்பட்டு
வெளியேற்றப்படும்.
மேலும் மூச்சுப் பயிற்சி, ஆற்றலை பெருக்குவதால் இயல்பாக
ஈஷா பயின்றவர்களிடம் எனர்ஜி இருக்கும். நல்ல எண்ணமும்
சிந்தனைகளும் அதன்வழியாக அவர்கள் மனத்தில் சதா
பெருக்கெடுக்கும்.
அப்படிப்பட்ட 200 பேர் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மில்
தாமாக ஊற்றெடுக்கும் மலர்ச்சிக்கும் புத்துணர்வுக்கும் பஞ்சமே
இல்லை.
அதே சமயம் ஈஷா வகுப்பே எடுக்காமல் நேரடியாக சிலரும்
ஆர்வம் காரணமாக பயணத்தில் வந்திருந்தனர்.
அவர்கள் நிலை?
ஹரித்துவார் விடுதியில் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட
அறைகளுக்குள் புகுந்து அரைமணி நேரத்தில் புது ஆடைகளுடன்
புத்துணர்ச்சிமிக்கவர்களாக மத்தியிலிருக்கும் பிரம்மாண்டமான
ஹாலில் கூடினோம்.
ஹாலின் ஒரு பக்கம் சிறிய பளிங்குக் கோயில். அதன் எதிரே
ஈஷாவின் குருமார்கள் வரிசையாக நின்றிருந்தனர்.
தியான யாத்திரையின் தொடக்க காலங்களில் பயணத்தில்
தலைமையேற்ற சத்குரு அவர்கள் தம் பயண திட்டங்களின்
மாறுதல் காரணமாக, பிற்பாடு அந்தப் பொறுப்பை தம் சீடர்களான
ஈஷாவின் யோக குருமார்களிடம் ஓப்படைத்தார்.
எங்களுடன் மொத்தம் எட்டு குருமார்கள் வந்திருந்தனர். அவர்களில்
ஆண் குருமார்களை அனைவரும் ஸ்வாமி என்றும் பெண்
குருமார்களை மா என்றும் அழைத்தனர்.
ஈஷாவின் முக்கிய சக்கரங்கள் இவர்கள்தான். சுறுசுறுப்புக்குப்
பொதுவாக எல்லோரும் எறும்பை உதாரணமாக சொல்வார்கள்.
ஆனால் நான் இவர்களைத்தான் சொல்வேன். பார்வைக்கும்
அவர்கள் உடை, தோற்றம் கூட நடமாடும் எறும்பைப்
போலத்தான் இருக்கும்.
ஆனால் என்ன? எறும்புகள் இனிப்பைத் தேடி ஓடும்.
ஆனால் இவர்களோ இனிப்பைத் தருவார்கள். தம் சுபாவத்தால்
இனிமையை இதயத்துள் உருவாக்குவார்கள்.
அதேபோல இவர்கள் சாதுக்கள் என்றும் சாதாரணமாக அளவிட
முடியாது. எல்லோரும் அனைத்துத் துறைகளிலும் மிகுந்த
பயிற்சியும் திறனும் மிகுந்தவர்கள்.
ஈஷாவில் வகுப்பில் பங்கெடுத்தாலே மனத்துக்கு சிக்ஸ்
பேக் எனும் போது, அதன் ஆசிரியர்கள் என்றால் சும்மாவா.
நாங்கள் கூடியிருந்த கூடலுக்கு சத் சங்கம் என்று பெயர்.
புத்தர் தன் சீடர்களுடன் உரையாடும் நிகழ்வில் தொடங்கிய
இந்த சத் சங்கம், குரு - சீட மரபின் அஸ்திவாரம்.
அன்றைய சத் சங்கத்தில் பயணத்தை வழிநடத்திச் செல்லும்
தலைமை ஆசிரியரான சுவாமி, ஆங்கிலத்தில் அடுத்த
பதினான்கு நாட்களின் பயண திட்டத்தைக் கூறினார். அவர்
ஆங்கிலத்தில் கூறுவதை ஒருவர் தமிழில் உடனடியாக மொழி
பெயர்த்தார். இருவரது குரலிலும் அத்தனை கனிவு. ஒளி.
யார் யார் இதற்கு முன் ஈஷா பயிற்சி எடுக்காதவர்கள்?
ஆங்காங்கு பலர் கை தூக்கினர்.
அவர்கள் தனியாக வரவழைக்கப்பட்டனர்.
"உங்களுக்காக நாளை ஒருநாள் முழுக்க நாம் இங்கேயே
தங்கப்போகிறோம்.'
"ஒருநாள் முழுக்க ஈஷா பயிற்சி வகுப்பு உங்களுக்கு எடுத்த
பின்தான் நமது இமயமலைப் பயணம்,' எனச் சொன்னார்.
அதற்குள் ஒருவர் எழுந்து, "அந்த ஒருநாள் முழுக்க நாங்க என்ன
பண்ண.'
"ஹரித்துவார் உங்களுக்காகக் காத்திருக்கு. இங்கு கங்கையைச்
சுற்றி பல கோயில்கள் இருக்கு. நாம எல்லோரும் அதைச் சுத்திப்
பார்க்க போறோம்.'
உடனே அனைவரது முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் மின்னியது.
"இப்போ உங்களுக்காக உணவு காத்திருக்கு எல்லோரும்
சாப்பிடலாம்.'
சட்டென கூட்டம் கலைந்தது.
இரண்டாவது மாடியிலிருக்கும் எனது அறைக்குச் சென்று சில
அழைப்புகளை அட்டண்ட் செய்துவிட்டுத் திரும்புவதற்குள்,
எனது சென்னை நண்பரான சுந்தர்ராஜன் இரண்டு பேரை
அறிமுகப்படுத்தினார். ஒருவர் எனது வாசகர் செந்தில்,
தேனிக்காரர். இன்னொருவர் துரை. ஆள் நல்ல உயரமாக வாட்ட
சாட்டமாக இருந்தார். பார்த்தாலே ஏதோ ரவுடி மாணவர் போல
இருந்தவரை விசாரித்தபோது, கல்லூரிப் பேராசிரியராம்.
நம்ப முடியவில்லை.
எங்கள் பயணத்தின் மகிழ்ச்சிக்கும் அவர்தான் பேராசிரியர்
என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.
கீழே எட்டிப் பார்த்தபோது பாம்பு போல பெரும் வரிசைக்
கூட்டம். கையில் தட்டுடன் நகர்ந்து கொண்டிருந்தது.
பசி வயிற்றை கிள்ளியது.
கீழே ஓடி வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
ஒரே அப்பர் கிளாஸ் அப்பா ரோலுக்கு ஏற்ற ஒரு முகம்
என்னை நோக்கி நெருங்கியது.
யார் அவர் என நான் ஊகிப்பதற்குள்...
"நீங்கதான் அஜயன் பாலாவா...'
"ஆமாம்...'
"என் பேரு திலீப் ஷா.. என் பையன் உங்களுக்கு நல்ல தெரியுமாமே...
நீங்களும் இங்க வந்திருக்கிறதா ஃபோன் பண்ணிச் சொன்னான்.'
"அப்படியா... உங்க மகன் பேரு.'
"நீரவ் ஷா'
"அட நம்ம கேமராமேன்.'
மகிழ்ச்சியுடன் அவரோடு கைகுலுக்கி அவரையும் வரிசையில்
நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருக்க.. என் தட்டு நகர்ந்துகொண்டே
ஒரு ஆப்பிள், கொஞ்சம் சாதம் சாம்பாருடன் இரண்டு சப்பாத்தியும்
குருமாவும். அதோடு ஒரு இனிப்பையும் வாங்கிக் கொண்டு நகர
கண்கள் அமர இடம் தேடி அலைந்தது.
பயணக்குறிப்புகள்
இமயமலைக்குப் பயணிப்பவர்கள் பயணத்துக்கு அவசியம்
தேவைப்படும் குளிர் பாதுகாப்பு பொருட்களான ஸ்வெட்டர், ஜெர்கின்,
கையுறை, காலுறை, மங்கி கேப், மலையேறும் ஷூக்கள்
போன்றவற்றை இங்கிருந்தே வாங்கி, தேவையில்லாத சுமைகளை
ஏற்றிக் கொள்ளத் தேவையில்லை.
காரணம் இமயமலை அடிவாரமான ஹரித்துவாரிலேயே அனைத்தும்
கிடைக்கும். மேலும் இங்கு நாம் வாங்கும் விலையைவிட அவை
குறைவான விலையிலும் தரமாகவும் இருக்கும்.
=============================================
>அஜயன் பாலா
நன்றி: கல்கி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சிக்ஸ் பேக் ஆக்கணும்கறதுதான் ஆசை...!!
» சூர்யாவிற்கு போட்டியாக சிக்ஸ் பேக் உடம்புடன் வேலாயுதம் விஜய் அவதாரம்
» ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
» "சிக்ஸ் பேக்ஸ்??????
» "சிக்ஸ் பேக்ஸ்
» சூர்யாவிற்கு போட்டியாக சிக்ஸ் பேக் உடம்புடன் வேலாயுதம் விஜய் அவதாரம்
» ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
» "சிக்ஸ் பேக்ஸ்??????
» "சிக்ஸ் பேக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|