தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு - சிறுகதை - வித்யாசாகர்

Go down

மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு - சிறுகதை - வித்யாசாகர் Empty மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு - சிறுகதை - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 4:30 pm

“பாக்கிஸ்தான் தில்லு தில்லு தாண்டா"

"பத்தியா, வீட்டுக்குள் வரும்போதே இவன் இப்படி எதனா ஒரு கதையோடு தான் தம்பி வருவான்"

"ஹேய்... சத்யா.., வா வா உனக்காகத் தான் காத்திருக்கிறேன், அம்மா கூட பேசினதுல நேரம் போனதே தெரியலை சத்யா, நான் வந்து ஒருமணிநேரம் ஆகப் போகுது"

"அப்படியா அதை விடு, விஷயம் தெரியுமா?" உள்ளே வந்ததும் வராததுமாகக் கேட்டான் சத்யா

"என்ன, என்ன விஷயம்? "

"வெச்சான்டா பாகிஸ்தான் காரன், இந்தியாவிற்கு ஆப்பு” வெளியிருந்து வந்த சத்யா ஏதோ ஒரு இன்றைய வாதத்தோடு ஆசாத்தின்முன் வந்து நிற்க அதுவரை ஆசாத்திடம் பேசிக் கொண்டிருந்த சத்யாவின் தாய் எழுந்து சமையலறைக்குள் போனாள். சத்யா அவளுக்குப் பின்னாலேயேச் சென்று தட்டில் கொஞ்சம் சிற்றுண்டி வைத்துச் சாப்பிட்டுக் கொண்டே வந்து ஆசாத்தின் பக்கத்தில் அமர்ந்தான்.

"ஆசாத் தம்பி நீயும் எதனா சாப்பிடேம்பா..???!"

"இல்லமா, நீங்க கேட்டதே மகிழ்ச்சி, வேண்டாம்"

"என்னப்பா நீ, நான் தான் இவ்வளவு நேரமா குடிக்க தண்ணிக் கூட கொடுக்காம பேசியிருந்திருக்கேன் நீயாவது சொல்லக் கூடாதா, சரி கொஞ்சம் தேனிர் மட்டுமாவது குடியேன்.."

"பால் சேர்க்காம கருந்தேநீர் வேணும்னா கொஞ்சம் கொடுங்க.. சர்க்கரைக் கூடுதல் வேண்டாம்..”

"சத்யா உனக்குடா?"

"குடுமா......... சர்க்கரை நிறையப் போடு, பால் திக்கா ஊத்து..”

"என்ன வேணும் காப்பியா டீயா?

"எதனாஒன்னு, நோ.. நோ.. பெட்டர் வித் காஃபி"

சத்யா சொல்லி நிறுத்துவதற்குள் ஆசாத் சத்யாவினுடைய அம்மாவை நோக்கி "என்னம்மா என்கிட்ட மட்டும் சுத்த தமிழ்ல, தேநீர் வேணுமான்னு கேட்டீங்க, அவன் கிட்ட டீயா காப்பியான்னு.... கேட்குறீங்களே ???"

"உன்னை பார்த்தாதாம்பா தமிழ் தன்னால வருது, இவன் மூச்சுக்கு முன்னூறுதடவை ஆங்கிலம் கலந்து தான் பேசுவான், அவுங்கப்பாவுக்கு பெருசா மகன் ஆங்கிலத்துல பீத்தனும்னு ஆசை, எப்படியோப் போகட்டும் கழுதை, தமிழ் இனிதுன்னு பேசினா தானே தெரியும், பேசாத ஜடங்களுக்கு எப்படிப் புரியும்"

"ம்மா... போதும் விடும்மா...' போ.. போயி டீ போடு.., நீ சொல்லுடா மச்சி"

"செய்தி பார்த்தியா சத்யா"

"நானா, நான் நியூஸ் பாக்குறதா???!! நெவர்.. அந்தப் பழக்கமேக் கிடையாது, ஒரே அரசியல் கிருமீஸ்”

"ஏன் ஆசாத் தம்பி அவனைப் போய் செய்தி பத்தியெல்லாம் கேக்குறியே' உனக்குத் தெரியாதா அவனைப்பத்தி.."

"ஆமா, இந்தம்மாவுக்கு உலக செய்தி என்னன்னு ஒத்த விரலு விடமாத் தெரியும்னு நினைப்போ, பேசாம டீ’யப் போட்டுக் கொண்டு வா’ இல்லைனா அப்பாவுக்குப் போன் பொட்டு வரச் சொல்வேன்..”
“டேய் சத்யா என்னடா இது அம்மாகிட்டப் போய் இப்படி?”
“நீ சொல்லுடா மச்சி பாகிஸ்தான் பத்தித் தானேக் கேட்ட"

"ஆமா(ம்)...."

"அவன்தாண்டா கொம்பன். நம்மாளுங்க சுத்த வேஷ்ட மச்சி, காரித் துப்புறானுங்க வெளிய, எல்லாம் செல்ஃபீஸ் கம்முனாட்டிங்க”

"ஏன்டா எல்லாரையும் இப்படி மொத்தமா சேர்த்துப் பேசுற?"

"பேசாம, அவன் எப்படி அடிச்சான் பத்தியா, என்ன துணிச்சலா நம்ம பார்டர்ல வந்து நிக்கிறான் பார்த்தியா?"

"நின்னா, அவன் பெரிய ஆளா? மன்னிக்கிற நாம தான் பெரியாலு சத்யா"

"கிழுச்சீங்க. பார்டர் ல நின்னு உபதேசம் செய்யவாடாப் போனீங்க? அவனை ஒருத்தனை அடிச்சா அவன் நம்மை நூறு பேரை அடிப்பான், பார்க்குரியா???"

"சத்யா, என்ன பேசுற நீ, நம்ம பலம் என்ன தெரியுமா ?"

"என்ன பலம் இருந்து என்ன செய்ய, வேற யாரையாவது அப்பாவிய அடிச்சா கூட நின்னு கைதட்டத் தெரியும்”

“இல்ல..”

“என்ன இல்ல, அதலாம்விட நமக்குச் சேர் தான் முக்கியம் ஆசாது, எங்க போயிடுமோன்னு பயம் இவனுங்களுக்கு, முஸ்லிம் ஓட்டு கிடைக்காமப் போயிடுமோன்னு குருட்டுபுத்தி, இவனுங்க அல்ப பசங்க மச்சி"

"என்னடா பேசுற சத்யா, இஸ்லாமியருக்கும் இந்தியக் கனவு இருக்கு, இந்தியா நமது லட்சிய தேசம்டா”

“நாமதான் நினைக்கிறோம், இந்தியா தமிழரை அப்படி நினைப்பதாத் தெரியலை ஆசாத். என்னதான் நாம இப்படி ஒற்றுமையா இருந்தாலும், அதையும் பிரித்துவைத்து லாபம் சம்பாதிக்கதான் பாக்குறாங்க நம்மைச் சுற்றி இருப்பவர்கள்....”

“அது அரசியல்”

“அரசியல்னா?”

“நம் தவறான அரசியல், நமக்குக் கிடைத்த அரசியல்வாதிங்க அப்படி”

“அவர்கள் ஏன் அப்படி? யார் அவர்களை உருவாக்கியது?”

“நீயும் நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும்”

“நீயும் நானும் என்பது வேற, அவர்கள் செய்யும் அரசியல் வேற, மதராசின்னு சொன்னாலே ஒரு இளக்காரமா பார்க்குற பார்வை பளார் பளார்னு அடிக்கிற மாதிரி இருக்கு எனக்கு, தோ இன்னைக்கு வந்த சேட்டுக் கூட இங்க உட்கார்ந்து நம்மலை அதிகாரம் பண்றான், எப்படி இதலாம்? அவனுக்கு ஒண்ணுன்னா எல்லாம் நடக்குது’ தமிழனுக்கு ஒண்ணுன்னா நாம தான் போய் கொடி புடிக்கனும்’ அப்பவும் வன்முறையை தூன்றோம்னு உள்ளத் தூக்கிப் போட்டு நம்ம ஆளே நம்மை முட்டிக்கு முட்டி தட்டுவான், இதலாம் ஒட்டுமொத்த தேசத்தின் ஒரு இனத்தின் மீதான காழ்ப்புணர்வில்ல? அப்புறம் எனக்கு மட்டும் எங்கருந்து வரும் தேச அக்கறை?”

“இதெல்லாம் நாம சரிசெய்ய வேண்டிய தவறுகள் சத்யா, அதலாம் கடந்துதான் நாம இந்தியரா இருக்கோம்”

“நீ இரு. நான் அதற்கும் முன் ஒரு தமிழன்”

“ம்ம்ம்... கண்டிப்பா.., நான் அதை மறுக்கவேல்ல. நானொரு தமிழன் என்பதை என் உயிருக்கு நிகரா நினைக்கிறேன் சத்யா, ஒரு தமிழனோட பிரச்சனைதான் மிக முக்கியம்னு முதலா நானும் நம்புறேன், அதேவேளை இந்தியாவும் நான் வாழும் தேசமில்லையா?”

“அதை நம்பி நம்பி வெருத்துப் போச்சுடா மச்சி..”

“எனக்கும் கோபம் இருக்கு சத்யா, ஆனா இந்தியாவா பாக்கிஸ்தானான்னு வந்தா நானொரு இந்தியன். இந்தியமக்களுக்கு ஒரு ஆபத்து வருதுன்னா அதைத் தடுப்பதும் தடுக்க நினைப்பதும் என்னில் யதார்த்தமா நிகழும்.., ஒரு நல்ல குடிமகனுக்கு தேசம் தான் முக்கியம். தேசம் தான் கனவு. தேசம்தான் லட்சியம் எல்லாம்.., எனக்கு மதம் கூட பெருசாத் தெரியலை சத்யா, ஆனா ஒரு இனம், எம் மக்கள்ன்றது மிகப் பெருசாப் படுது..”

"எஸ்... எஸ்.. அயாம் நாட் டாக்கிங் அபௌட் யூ மேன், அபௌட் த இன்டியன்!!"

"தயவுசெய்து இனி அப்படிப் பேசாதே சத்யா, நம் நாட்டை பற்றி இழிவாப் பேசுவது தவறு, நீ வேறெதனா பேசு"

"ஏண்டா உனக்கு இவ்வளவு கோபம் வருது?

"வேற, நீ வேற்று நாட்டான் போலப் பேசுறியே..."

"ஒய் நாட், என் இனம்னு சொன்னியே யாரைச் சொன்ன, இவன் எம் மக்களை அழிக்க துணைப் போவான் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவா?”

“இல்லை, பார்க்காதே எட்டி சட்டைப் பிடி, ஏனென்றுக் கேள், அது வேறு”

“இங்க மட்டும் என்ன வாழுது, அவன் வந்து அவ்வளவு தைரியமா நின்னு அடிக்கக் கூப்பிடுறான், இவனுங்க திரும்பி வேண்டாம்னு நின்னா அசிங்கம்ல, நான் ஒன்னும் கோழையில்லை ஆசாத். ரெண்டுமுறை அவனுங்க இப்படி பார்டர்ல மிலிட்டிரிய நிறுத்திட்டு போவானுங்க, நின்னு மாரைத் தட்டிக் காட்டுவானுங்க, நாம இன்னும் வாயில கை வெச்சி யோசிக்கிறோம். பிலாசப்பி பேசுறோம், கேட்டா மேலிடம் இதுபத்தி ஆலோசிக்கிதாம், விளங்குமா இதலாம்? அ’யாம் ஷேம்.... மச்சி"

"அதுதாண்டா நம்ம மண்ணோட கண்ணியம்றது, எளியவனை அடிப்பது வீரமில்லை சத்யா"

"வேற யாருகிட்டயும் போயி இப்படி சொல்லிடப் போற.. அசிங்கமா கேட்பானுங்க உன்னையும் சேர்த்து, நாறுது வெளிய இவனுங்க பொழைப்பு"

"இல்லை சத்யா இங்க தான் நீ யோசிக்கணும்.."

"என்னடா யோசிக்கணும், அமேரிக்கா காரென்லாம் அவனை அடின்றான் டா, இவன் பார்டர்ல வந்துநின்னு என் மேல கையை வச்சிப் பாருன்றான், இவன எண்ணப் பண்ணனும் நாம’ சும்மாத் தூக்க வேணாம்"

"அமெரிக்கா ஒன்னும் பாரம்பரிய பக்குவ நாடில்லை சத்யா. அது நமக்குக் கால் தூசுக்கு வராது. எத்தனை நாடுகள், எத்தனை நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம்னு, மனிதர்களின் வலி புரியாம தன் வெற்றியை மட்டுமே பெருசா கொண்டாடும்’ மக்களை உடல் கூசாம அழிக்கும்’ அசிங்கம் பிடித்த நாடு அது. தனிமனித விருப்பு வெறுப்பிற்காக ஒரு நாட்டையே அழித்த மட்டமான துணிச்சல் அமெரிக்காவோட துணிச்சல்"

"நான் இந்தியாப் பற்றி பேசுறேன், அமெரிக்காவைப் பற்றியில்ல, உனக்கு நேரா பேச முடியலைனா விடு நான் போறேன்...”

"கோபம் படாதே சத்யா, யோசித்து பாரு, நம்ம தேசம்' பாரம்பரியம் மிக்க தேசம்டா, தியாகம் நிறைந்த மண்"

“என்னடா பெரிய பாரம்பரியம் தியாகம்ற, உனக்கு உன் மண்ணு பெருசுன்னா, அடுத்தவனுக்கு அதே அடி படயில நீ கூட நிக்கனும் அதை விட்டுட்டு கண்டவனுக்கெல்லாம் ஒத்து ஊதின நாடு தானே இது? த்தூ.., நன்றி கெட்டவனுங்கடா இவனுங்க. இந்தியாவுக்கு ஒண்ணுன்னா முதல்ல நிக்கிறவன் இன்னைக்கும் தமிழன்தான் தெரியுமில்ல? அதே தமிழனுக்கு ஒன்னுன்னா மட்டும் இவனுங்களுக்கு தொட்டுக்குற ஊருகான்னு நினைப்பு அதான் அடிக்கிறான் அவன் ஆப்பு”

“அது வேற மச்சி, அதலாம் அரசியல் சூழ்ச்சி. நம்மப் பக்கத்துலே இருந்து நம்ம ஊரிலேயே பிழைத்து நம்மையே அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் பக்கத்து மாநிலங்களின் சதி அது”

“நீ சொன்னா ஆச்சா??? தமிழன் வாழ்ந்தா இவனுங்களுக்கு மொளகா வெச்சமாதிரி. அதான் பக்கத்து நாட்டுக்கு வெளக்குப் பிடிக்கிறானுங்க நாய்ங்க”

“யார சத்யா சொல்ற நீ?”

“எல்லோரையும் தான். என் தமிழன் அழிய எவனெல்லாம் உடந்தையா இருந்தானோ அவனை எல்லாந் தான் சொல்றேன். செய்யாதவனுக்கு உரைக்காது. செய்றவனுக்கு சுள்ளுன்னு ஏறும்’ ஏறட்டும்..”
“சத்யா நீ சொல்றதெல்லாம் சரிதாண்டா உன் கோபம் எனக்கும் உண்டு. அது வேறு. இது நம்ம மொத்த தேசத்தைப் பற்றியது. போர்னா என்னன்னே யோசிக்காம நீ வேறேதேதோ பேசுறியே!!”

உள்ளிருந்து வந்த அம்மா இடைப்புகுந்தாள் "சரியா சொன்னீங்க தம்பி, போர் மூண்டா பெருசா மூளும், பெரிய அழிவுகள் நடக்கும், அதலாம் எங்கே இவனுக்குப் புரிய.."

அவன் நின்று அம்மாவையும் ஆசாத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"அதுமட்டுமில்லை சத்யா, நாம எத்தனை பலசாளின்னு காட்டிய நிறைய இடம் நம் வரலாற்றில் இருக்கு. கார்கில் சண்டையில நிரூபிச்சோமே, மறந்துட்டியா? அவனுங்களுக்கு மறந்துப் போயிருக்கும், அதான் அடிப்பட்ட பூனை தெளிவில்லாம வந்திப்போ பார்டர்ல நிக்குது"

"வந்து நிக்கிறான்..ல, நம்மை அடிக்கிறேன்னு அறிவிப்பு விடுறான்ல, அப்போ என்ன பண்ணனும்? ஒரு தூக்கா தூக்க வேணாம்.."

"இல்லைடா சத்யா, உனக்கு அந்த வலி புரியலை.., போர் மிகக் கொடியதுடா முடிந்தவரை அதை நடக்கவிடாமத் தான் பார்த்துக்கனும், ஒருத்தர் ரெண்டுப் பேரோட போற விசயமல்ல ஒரு போரென்பது. பல உயிர்களின் அழிவு. அதும் இன்றைய நிலவரப்படி, அதை நடக்கவிடாமல் தடுப்பதுதான் உலகத்துக்கே நல்லது. ஏன்னா இனி இதுபோன்ற வளர்ந்த நாடுகளுக்கிடையே ஒரு போர் வந்தால் போதும் அது மூன்றாவது உலகப் போர்ல தான் போயி முடியும். அதுக்குத் தயாரா காத்து நிக்குது அத்தனை நாடுகளும். சும்மா வெறுங்கையை வீசிக்குனு நிக்கலை.. அணு உலைகளை தலைல தூக்கிவைத்துக் கொண்டு சோதனைக்கு ஆள் தேடிட்டு இருக்கு சத்யா.

உனக்கு நான் எனக்கு நீன்னு மொத்த நாடுகளும் ஒவ்வொரு பிரிவா நின்னு உன்னை நான் என்னை நீன்னு மொத்த நாடுகளையும் அழித்துக் கொல்லும் மிகப்பெரிய விபரீதம் இந்த இரு நாடுகளின் போருக்குள்ள இருக்கு. அப்படி ஒன்னு மட்டும் நடக்கும்னா அதுக்கப்புறம் மக்கள் இதுபோன்ற சகஜ வாழ்வுநிலைக்கு வரவே குறைஞ்சது பல்லாயிரம் வருடங்கள் பிடிக்கும், ஒரு புல்லு பூண்டுக் கூட பிறகு முளைக்காமப் போகலாம்..

காணுமிடமெல்லாம் ஹிரோசிமா நாகசாகியைப்போல ஒரு பேரழிவே உலக நெடுங்கிலும் நிகழ்ந்துப் போகலாம்.. அப்படி ஒரு நிலை வந்துடக் கூடாதுன்னு தான் இத்தனை வருடம் கழித்து கிடைத்திருக்கிற நம் தமிழர் ஒற்றுமையைப் பயன்படுத்தி அப்படி ஒரு தொழிற்சாலையே நமக்கு வேண்டாம்னு அணு உற்பத்தியை எதிர்த்து தடுத்துன்ருக்காங்க கூடங்குலத்துல”
“அதலாம் அரசியல் ப்ளே மச்சி”

“இருக்கலாம். அன்னைக்கு, வறுமை வெடிப்புற்ற இடம்தானே’ கேட்க யாரிருக்கான்னு நினைத்து இத்தனைப் பெரிய சதியை நம் தமிழ்மண் மீது திணிக்க திட்டமிட்டதும் அதே அரசியல் விளையாட்டு தானே? தமிழன் மாடா உழைப்பான், அவனுக்குள்ளே அவனே தலைமையேற்று அவனை அவனே அடக்கியும் விடுவான்னு’ தப்பாவே கணக்குப் போட்டு, நம் ஒற்றுமை என்னும் ஒற்றைக் குறையை பயன்படுத்தி’ உலகமே மறுக்கும் அணு உற்பத்தியை ஆரம்பிக்க எண்ணியதும் அதே அரசியல் விளையாட்டு தானே?”

“ஆமாம் எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டைங்கதானே, எவனும் அவ்வளவு யோக்கியன் இல்ல. எல்லாருக்கும் ஒரு சுயநலம் இருக்கு. ஏன் இத்தனை வருடம் இந்த போராட்டமெல்லாம் எங்கே போச்சி? இருபத்துமூனு வருடம் இவர்கள் எந்த கொடியைத் தூக்கி பிடித்திருந்தார்கள்?”

“வறுமைக் கொடி சத்யா. ஆம், அது பசிக்கு தவித்துக் கொண்டும் தண்ணித் தேடி திரிந்துக்கொண்டும் இருக்கும்’ ஏழைகளின் பசிக்கு’ ஒரு பிடி சோறு தேடி அலைந்த காலம். அன்னைக்கு ஏதோ தொழிற்சாலை வருது வேலைவாய்ப்புகள் கிடைக்கும்னு நம்பி இருந்தாங்க. நாட்பட நாட்பட அதன் விபரீதம் முழுமையா தெரியத் தெரிய அதை எதிர்த்தும், அணு உற்பத்தியே வேண்டாம்னு மறுப்பதற்கான போராட்டங்களை ஆவணச் செய்தும்தான் வராங்க. அங்க அப்போதுல இருந்தே ஒரு எதிர்ப்பு இருந்துக் கொண்டுதான் சத்யா இருக்கு. இன்னைக்கு தமிழர் எல்லாம் ஒண்ணாக் கூடி நின்றிருப்பதால உடனே வெளிய தெரிந்திருக்கு அவ்வளவுதான்”

“அப்போ அங்க நடப்பது எல்லாமே சரின்றியா?"

“நெல்லு விதைத்தா நாலு புல்லும் முளைக்குந்தானே, அங்கும் சில சுயநலவாதிகளின் கபட நாடகமும், ஏழைகளை முன்னிறுத்தி பணம்பார்க்கும் கொடுமையும் நடக்காம இல்ல, அதைப்பற்றி எல்லாம் நமக்கேன் கவலை? அதைவிடப் பெரிது இந்த அணு உலை. அதை இத்தனை வருடம் விட்டுட்டோமே என்பது வருத்தம் தான், ஆனாலும், அதற்காக இனியும் விட்டுவிடுவது பெரிய முட்டாள்தனம்.
வீரம் காட்டுற இடமில்லை இது. நாம சவால் விட எவ்வளவோ விசயங்க இருக்கு. இன்னைக்கு மாடிக்கு மாடி சின்டெக்ஸ் இருக்கே இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் எத்தனை வீட்டில் சின்டெக்ஸ் இருந்தது? பத்து பதினைந்து வருடத்திற்கு முன் மழைநீர் சேமிப்பு பற்றி இத்தனை நாம் யோசித்திருந்தோமா? அப்படி இந்த இருபத்தி மூன்று வருடத் திட்டமா அரசு ஏன் மின்சாரம் சேமிக்கத் தக்க, அல்லது இலகுவாக மின்னுற்பத்தி செய்யத் தக்க வேறு ஏதேனும் நீண்ட நெடும் விளைவில்லாத திட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கக் கூடாது? இதென்னவோ ஒரு சட்டை வாங்கி மானம் மறைப்பதற்கு பதிலாக பார்ப்பவர் கண்களை எல்லாம் நோண்டிவிட்டால் நாம நிர்வாணமாகவே திரியலாமே என்பதுபோல இருக்கு. அவர்கள் நோக்கம் மின்சாரம் மட்டுமில்லை சத்யா, அணு உற்பத்தியும்.

அணு உற்பத்திதான் மனிதனின் நாளைய அழிவிற்கு முதல் மூலதனம். இன்னைக்கு ஆயிரம் காரணம் காட்டி ஏதும் நடக்காதுன்னு சொல்லலாம், ஆனா நடந்துட்டா? அதற்கு பிறகு ஒரு புள்ளி கூட பதிலாகக் கிடைக்காது. இன்றைய சாப்பாடு பெருசுன்றதைவிட நாளைய மரணம் அதைவிடப் பெருசு. அழிவைப் பத்தி யோசிக்கையில பட்டுன்னு ஒரு எச்சரிக்கை உள்ளே வந்துடனும். ஒரு அணு உலை நம்ம ஊர்ல இருக்குன்னா அது நம்ம தமிழ்மண்ணின் தலையில ஒரு அணுகுண்டைத் தூக்கிவைத்துக்கொண்டு நிக்கிறதுக்குச் சமம்.

எந்த நேரம் யார் திரி கொளுத்தி அதுமேலப் போடுவாங்கன்னு யாருக்கும் தெரியாது, அதற்கான ஒரு பயம் இருந்துக் கொண்டேயிருப்பது பெரிய அவஸ்த்தை சத்யா. இன்னைக்கு இல்ல, இன்னையில இருந்து பத்து வருடமா ஒருத்தன் வேலை செய்துகொண்டுயிருந்துவிட்டு அதன்பிறகு ஏதேனும் ஒரு அணு உலையை வெடிக்கச் செய்துவிட்டால் அவனை என்னசெய்துவிட முடியும். ஒருவேளை அப்படி ஏதேனும் ஒன்னு நம்ம மண்ணுல நடந்துதுன்னா, அவ்வளவுதான், நம்ம தமிழினம்னு சொல்லிக்க ஒருத்தர்கூட தமிழகத்துல உருப்படியா இருக்கமாட்டோம்”

“ரிஸ்க்னு பார்த்தா எல்லாமே ரிஸ்க் தான் மச்சி, வீட்டை சுத்தி ரிபைனரி வைத்துக் கொண்டிருக்கிறோம் அது வெடிச்சா சாக மாட்டோமா?”

“ரிபைனரி வெடித்தால் ஒரு ஊரே அழியும், பல ஊர் சேதமாகும், ஆனால் சேதத்தை சரிசெய்து சரிநிலை செய்துவிடலாம். அணு உலை வெடித்தால் செய்வியா? நம்ம தமிழ்மண் பாதி அழியும். ஒரு பில்லு கூட முளைக்காதாம்? கேட்க கொடுமையா இல்லை? அதலாம் விட, ஏதோ முன்ன தெரியாம, சுடுகாடு கட்டினாக் கூட சுவர் எழுப்ப வேலைக் கிடைக்குமேன்னு பார்த்தோம், இப்போ அதுல கட்டுற சமாதி நமக்குன்னு புரிந்தப் பிறகும்’ போய் படுத்துக்கலாம் பணம் தருவாங்கன்னு பார்ப்பது அறிவீனமில்லையா சத்யா?”

“அதற்காக, இத்தனை வருடம் கழித்து நாம காட்டுற இந்த எதிர்ப்பால, இதை தமிழ்நாட்டுல கட்ட திட்டமிட்டிருக்கு அரசு என்கிற ஒரே காரணத்தை சாதகமா வைத்து மொத்த இந்தியாவோட வளர்ச்சியையே நாம முடக்குறதா இது ஆகாதா தம்பி?” சத்யாவின் அம்மா வந்து குறுக்கிட்டுக் கேட்டாள்.

“ஆகட்டும். உன் வீட்டை தாண்டி வந்து நீ என் வீட்டுல நெருப்பு வைப்பதாலதானே எனக்கு கோபம வருது? தவிர இது வளர்ச்சி இல்லையேம்மா பசிக்கு விசத்தை தின்பதற்குச் சமம். பெருசா பத்து வருஷம் உழைத்து ஒரு மாடிவீடு வானளவிற்கு கட்ட கடகால் தொண்டுறோம்னா தொண்டும்போதே அதன் எதிர்காலம் பற்றி யோசிக்கவேன்டாமா? பதினோறாவது வருடம் அந்த கட்டிடமே சரிந்துப் போகலாம் எனும் ஒரு உண்மை தெரிந்தும் கட்டுவது எப்படி நமக்கான வளர்ச்சியாக இருக்கும்? நான் ஒருத்தன் செத்தா அது ஒரு தமிழனோட மரணம். என் தமிழர் மொத்தப் பேரும் சாகும் நிலை வரும்னா அது இந்தியாவின் இழப்பில்லையா? எதிர்கால இழப்புன்றது என் தேசத்தின் வீழ்ச்சி தானேம்மா வளர்ச்சி எப்படியாகும்?

நம்பிக்கைதான் வாழ்க்கைன்றதால தான் எல்.பீ.ஜி. வாயுவைக் கூட வீட்டில் அடைத்து பயன்படுத்த பழகிட்டோம். ஆனா இது வெடித்துவிட்டு தீர்ந்துவிடுவது இல்லையே, காலத்தையே தின்றுவிட்டு சுடுகாட்டின் வெறுமையை கைக்கெட்டிய தூரம்வரை இரைத்துப் போகும் கொடுமையாயிற்றேம்மா’ அதனாலதானே உலகமே இதன் விசயத்தில் இத்தனைப் பயப்படுது..”

“என்னைய சொல்லிட்டு நீ எங்கெங்கயோ போறியே மச்சி, பாகிஸ்தான்காரன் நம்மையடிக்க பார்டர்ல நிக்கிறானாம் வாய் போய் ஆல் த பெஸ்ட் சொல்லிட்டு வருவோம்”

“தம்பி சொல்றதை காது கொடுத்து கேளு” பின்னால் வந்து சத்யாவின் தலையில் தட்டினாள் அம்மா. அவன் சிலிர்த்து திரும்ப..

“அதை விடுறா., பாக்கிஸ்தான்லாம் நம்ம சக்திக்கு ஒன்னுமேக் கிடையாது. நின்ன இடத்துல இருந்தடிச்சாலே அந்த நாட்டோட பாதி காணாம போற அளவுக்கு நாம என்னைக்கோ பலமாயிட்டோம்.. அந்தளவுக்கு நம்மலுடைய பலம் நமக்கே தெரியாத அளவுக்கு நம்ம இந்திய ராணுவம் ரகசியமா செயல்பட்டு வருது. இதுக்கு மத்தியில அவனை அடிக்கிறதுன்றது நமக்குச் சாதாரணம் சத்யா?”
“நம்ம நினைக்கிற மாதிரி இல்லை மச்சி பாக்கிஸ்தான்காரைங்க. அவனுங்களுக்கு அடிச்சாதான் புத்தி வரும்..”

என்னதான் ஆசாத் விளக்கி விளக்கி வேறு பல காரணங்களும் விளக்கங்களும் சொன்னாலும் சத்யா மேலும் மேலும் அதையேப் பேசினான். பிறகு அவனொன்று சொல்ல அதற்கு பதிலாக ஆசாத் ஒன்று சொல்ல அப்படியே நேரம் வெகுவாய் கடந்துப் போனது. பிற்பகல் மெல்ல நகர்ந்து மாலையாகி, மாலையும் முடிய இரவுபோர்வை மூடி நிலவு வானக் கதவை வந்து தட்டியது.

சூரியன் நகர்ந்து போய் இரவின் இருட்டு வெளிச்சத்தின் வெண்மையை திருடிக் கொள்ள அங்கே இருள் சூழ்ந்து, தீரா இருட்டின் கருமைக்குள்ளிருந்து துவங்கித் தொலைக்கிறது அந்த உயிர்கொள்ளும் மூன்றாம் உலகப் போர்......

“டமால்....”

“டுமீல்.....”

“டமால்.....”

“ஓடு.. ஓடு... உயிர்... பயம்.. சண்டை.. போர்!!! போர்!!!!! ஓடு ஓடு என மக்கள் விரட்டிக் கொண்டு ஓடுகிறது. எங்கே ஓடுவது.. எத்தனை தூரம் ஓடுவது..? எங்கே ஓடினாலும்தான் உயிரை ஒரு நொடியில் மென்றுத் துப்பிவிடுகிறது மனிதன் கண்டுபிடித்த அந்த அணுகுண்டுகள்..

வாய்ப்பேச்சி பேசிய காலம் முடிந்தது. இதோ இந்தியா முதன் முதலாய் ஏவுகிறது பாக்கிஸ்தான் மீதான அந்த ஏவுகணையை. அடித்த ஒரு அடியில் பாக்கிஸ்தானின் ஒரு பெரிய பகுதியே ஒரு நொடியில் சிதறிப் போகிறது.. ரத்தக் காட்டாறு சிலமணித் துளிகளில் கடல் போலப் பாய்கிறது.., அவன் மட்டுமென்ன சளைத்தவனா தில்லியின் தலையில் தூக்கி வீசுவது போல் அங்கிருந்தே பாகிஸ்தான் காரன் ஏவினான் அடுத்த ஏவுகணையை. அது மிக சாதாரணமாக வந்து தில்லியின் ஒரு பெரும்பகுதியை மென்று துப்பியது. அடுத்து பாம்பே அடுத்துக் கல்கத்தா அடுத்து அஸ்ஸாம் அடுத்து வைசாக்.....,

அடுத்த அடி எங்கு இருக்கலாம் என்று யோசிப்பதற்குள் வந்து விழுகிறது கூடங்குளத்தின் மீது ஒரு குண்டு..

நல்லவேளை அணு உலை உற்பத்தியெல்லாம் இன்னும் துவங்கியிருக்கவில்லை என்று ஒரு பெருமூச்சு விடுவதற்குள் சென்னையின் மேல் வந்து விழுகிறது அடுத்த குண்டு...

“டமால்.........................”

சிதறியது சென்னை ஒரே அடியில். மக்கள்வெள்ளம் கருகியும் உயிர் சிதைந்தும், உடல் சிதைந்தும் எஞ்சியதுமாய் ஓடுகிறது மரணபயத்தில் இங்குமங்குமாய்..

“ஐயோ பயம் பயம் பாம்.. பாம்... வருது மேல விழப்போகுது ஓடு ஓடு.. டமால்.....“ சுக்குநூறாய் போகிறது மக்கள் வெள்ளம். குண்டு விழும் இடமெல்லாம் குழிதோண்டிப் புதைத்துக் கொள்கிறது மனிதர்களை. பரிதவித்துப் போகின்றனர் மக்கள். ஆடு மாடு கோழி கொசு எறும்பு மனிதன் யாரிலும் பாரபட்சமில்லை. யார் வந்து யாரைக் காப்பது? யாரைக் காக்கவும் யாருக்கும் அவகாசமில்லை. அவரவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவரவர் கண்ணுக்கெட்டிய தூரம் சந்து பொந்துகளிலெல்லாம் பதறியடித்துக் கொண்டு ஓடினர. ஓட ஓட ஒவ்வொரு குண்டாய் வந்து வந்து தலையில் விழ அதிலொன்று வந்து சத்யா வீட்டின் அருகேயும் விழுகிறது..

“ஓடு ஓடு எனக் கத்திக்கொண்டே ஓடுகிறான் சத்யா..., தலைத் தெறிக்க ஓடுகிறான்... மேலே பறக்கும் விமானங்கள் தன் தலையை சீவுவது போல தரையிறங்கி மீண்டும் மேலேறின.. ஒடுபவரின் தலையில் எளிகாப்டர்கள் நேராக குண்டுகளைத் தூக்கி வீசின.. எத்தனைவரை ஓட இயலுமோ அத்தனைவரை ஓடுவோமென்று ஓடுகிறான் சத்யா..

திடீரென எல்லோரும் நினைவிற்கு வருகிறார்கள்.. “ஐயோ....... அம்மா எங்கே? அப்பா? தம்பி????? யாரையும் எங்குமே காண இயலாதே.., என்ன ஆனார்களோ அவர்கள். மனம்’ ஓட ஓட அவர்களை எண்ணித் தவிக்கிறது. யார் யார் எங்கு போனார்களோ என்ன ஆனார்களோ?? கடவுளே... கடவுளே... காப்பாற்று, அம்மாவைக் காப்பாற்று’ மனசு கெஞ்சியது..

என்ன ஆயிருப்பார்களோ அவர்கலெல்லாம் நாம் மட்டும் இப்படி ஓடி ஒளியப் பார்க்கிறோமே, நின்று விடலாமா இங்கேயே? ஐயோ... அம்மா எங்கிருக்கிறாய், அம்மா என்ன ஆனாயோ.., என்ன செய்வேனம்மா.., ஒன்றுமேப் புரியலையே.. அவன்கதறிக் கொண்டே ஓட இன்னொரு குண்டு அவனருகிலேயே விழ, மக்கள் சிதறி சிதறி சிதைந்துப் போவதைப் பார்த்து திரும்பி வேறு வழி புகுந்து மரணத்தை கண் முழுதும் நிரப்பிக் கொண்டு தலைதெறித்தாற்போல் ஓடுகிறான் சத்யா..

எப்படியும் இன்னும் ஓரிரு வினாடிகளில் தன்மீதும் ஒரு குண்டு விழுந்துவிடும், நானும் சுக்குநூறாய்ப் போவேன்.. அதற்கு முன் எப்படியாவது தப்பிக்கனும் ஓடனும், காற்றுப் போல ஓடனும், ஓடு ஓடு மரணம் மரணம், இதோ மரணம் வந்துவிடும் ஓடு, உடல் சிதைந்துப் போகும், ரத்தசகிதமாய்ப் போவோம் சீக்கிரம் சீக்கிரம் என அவனும் அவனின் முன்னாலும் பின்னாலும் எல்லோருமாய் சேர்ந்து எஞ்சிய மக்களெல்லாம் ஓடினார்கள்..

திடீரென காப்பாற்று காப்பாற்று என்று தனியாக ஒரு குரலின் அலறல் சப்தம் வந்து காதில் விழ, கவனித்துப் பார்த்தால் அவனுடைய அம்மா அலறும் சப்தம் கேட்டது.., ஒரு வினாடி தனையறியாமல் சத்யா ஸ்தம்பித்து நின்றுப் போனான்.. உயிரைக் கையில் பிடுங்கிக் கொண்டுள்ளதுபோல் தவிக்கிறான்... கத்தி அலறுகிறான்... உயிரைப் பிய்த்து கையில் எடுத்து எங்கேனும் கிடாசிவிட்டு எங்கோ கண்ணுக்கெட்டிய தூரம் போய் விழுந்துவிடலாம்போல் ஒரு கோபமும் அழையும் ஒருசேர வர, அதை விடவும் கொடியதாக இருந்தது அவன்மேல் எங்கு அந்த குண்டு வந்து விழுந்துவிடுமோ எனும் உயிர்பயம்..

எதையுமே பொருட்படுத்தாமல் இருக்கமுடியவில்லை என்றாலும் தனைமீறிய ஒரு உணர்வாக நடுத் தெருவில் நின்று தன் தலையில் கைவைத்துக் கொண்டு அம்மா அம்மா என்றுக் கத்துகிறான்..
அடுத்த “அம்மா..............” என்று வாய்திறந்து மூடுவதற்குள் சரமாரியாக நான்கைந்து குண்டுகள் வந்து விழுகிறது. எங்கு தானும் செத்துப் போவோமோ எனும் பயம் அந்த குண்டு விழுவதற்குள் வந்து விரட்ட, அங்கிருந்து நகர்ந்து சீறிக் கொண்டு ஓடுகிறான் மீண்டும்.

ஆங்காங்கே காணுமிடமெல்லாம் ஓடு ஓடு மரணம் மரணம் என்ற கூச்சல் ஐயோ ஐயோவெனும் அலறல்.. பயத்தில் காதடைக்கிறது சத்யாவிற்கு. உயிர் மனதை இறுக்கி அழுத்த, விழுந்தடித்துக் கொண்டு மீண்டும் பித்துபிடித்தாற்போல் ஓடுகிறான்.

ஆனால் அவனின் போதாத காலம், ஒரு குண்டு அவன் மேலேயும் வந்துவிழ, விழப்போகும் இடைவெளிக்குள் தலைநிமிர்ந்து அதை மேலேப் பார்க்கிறான், அந்த குண்டு உஸ்ஸ்ஷெனும் சப்தத்தில் மேலிருந்து கீழ் வந்துக் கொண்டுள்ளது. நிமிர்ந்து மேலே பார்த்து மேலிருந்து அந்த குண்டு சொய்ய்ய்யென்று அவன் தலையில் விழுமந்த வினாடிக்குள் மூச்சுத் தெறிக்க கையை தட்டிக்கொண்டே முன்னோக்கி மாறி மாறி நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறான்.., என்னதான் மூச்சுக்கு எட்டிய தூரம் அவன் ஓடினாலும் ஆள்தராதரமெல்லாம் பார்க்காமல் குண்டு அவன் தலைநோக்கி அருகில் வந்துவிட, தட்டிவிடுவதாய் நினைத்து தட்ட எத்தனிப்பதற்குள் பொதீரென அவன் தலையில் விழுந்து கணீரென்று வெடிக்கிறது..., டமால்.. எனும் சப்தத்தோடு அவன் தலைச் சிதறிப் போக -

“அம்மா....”

“அம்மா.....”

“ஐயோ....”

“என்னடா சத்யா...”

“அம்மா அப்பா நான் செத்தேன்.. செத்தேன் குண்டு... ஐயோ...நான் செத்துட்டேனே...”

“என்னாச்சிடா சத்யா?”

“அம்மா அம்மா .... எம்மேல குண்டுமா“

“சொல்லுப்பா என்னாச்சி?”

“குண்டுமா குண்டு வெடிகுண்டு என் தலை வெடிச்சி... நான் சிதறிப் போயிட்டேன்மா”

“டேய்.. பெனாத்தாத..டா இங்க பார், பாரிங்க”

அவன் கண்ணைத் திறக்காமலே “இல்லமா இல்லமா நீ கூட செத்துட்டியேம்மா..., அந்த குண்டு அப்பா தம்பி எல்லார்மேலையும் விழுந்து நாமெல்லாம் செத்தேப் போயிட்டோமேம்மா, நானும் கூட”
அவன் பேசி முடிப்பதற்குள், அவள் எழுந்து உள்ளேப் போய் ஒரு சின்னக் குவலையில் தண்ணீர் குளுமையாக கொண்டுவந்து சலக்கென சத்யாவின் முகத்தில் ஊற்ற.., அவன் திகைத்துத் திணறி கண்திறக்க, அம்மா அவனருகில் இருப்பதைப் பார்த்ததும் அம்மா அம்மா என்று கத்துகிறான். வேகவேகமாகக் அவளைக் கட்டிக் கொண்டு அழுகிறான். “நீ செத்தெல்லாம் போல இல்லையாம்மா” என்று பாவமாகக் கேட்டான்.

“இல்லடா சத்யா.. என்னாச்சிடா கனவு ஏதேனும் கண்டியா?”

“சண்டைம்மா சண்டை பெரிய சண்டை, பாக்கிஸ்தான் நம்ம மேல குண்டுகளாப் போட்டான்மா நான் என் கண்ணாலப் பார்த்தேன்.. நீ போயிடாதம்மா, எங்கயும் நீ போவாதம்மா, என் கூடவே இரும்மா...”

“போலப்பா, இங்க பார். அம்மா தோ உன் பக்கத்துலேயே இருக்கேன் பார். இங்க பார்.. என்னைத் தொட்டுப் பார்..”

தொட்டுப் பார்க்கிறான்.. உயிர்பயத்தில் அம்மாவைத் தொட்டு கை காலெல்லாம் தடவுகிறான்... “பாம் விழுந்துச்சிம்மா அதும் என் தலையிலேயே....” சொல்லிக் கொண்டே அழுதான் சத்யா..

“இல்லைப்பா சத்யா உனக்கு அதலாம் ஒன்னும் ஆகாது நீ நல்லா இருக்க”

“நீ கூட கத்துனியே, ஐயோ ஐயோ ன்னு கத்துனியே, பாக்கிஸ்தான்காரன் உன்னை அடிச்சானே..”

சத்யாவிற்கு முகமெல்லாம் வெளிறிப் போயிருந்தது. மயிர்க்கால் குத்திட்டு நின்றிருந்தது. கண் பிதுங்கி பயத்தில் பாதி வெளியே வந்திருந்தது. முகம் வியர்க்க கண்கள் இரண்டிலும் மரணத்தின் பயம் என்பது இதுதான் பார்த்துக் கொள் என்றுக் காட்டுவதாய் இருந்தது.

அவள் மார்பில் அவன் தலையை அணைத்து முதுகில் தடவிக் கொடுக்க, மெல்ல மெல்ல சுயநினைவு வந்தாலும், அவன் கண்டக் காட்சிகள் எல்லாம் உயிர்ப்போடு கண்களில் இருந்து மறையாததில் தன்னைத் தானே பார்த்து பார்த்து மீண்டும் அழத் துவங்கினான் சத்யா.

அவளுக்கு தன் பிள்ளையின் வலியும், இத்தனை வலிக்கத் தக்க கொடூரமாக கனவுக் கண்டுள்ளான் என்பதும் புரிந்தது. உள்ளே ஓடிப் போய் ஒரு கண்ணாடிக் குவளையில் நீர் ஊற்றிக் கொண்டுவந்து அவனை அரவணைத்து ‘ஒன்னுமில்ல சத்யா, பயப்புடாத, எல்லாம் கனவுதான்’ என்றுச் சொல்லி தன் மேல் சாய்த்தவாறு அவன் வாயில் கொஞ்சம் நீர் பருகச் சொல்லி ஊற்றினாள். அவன் ஓரிரு மினர் நீர்ப் பருகி முகத்தை திருப்பிக் கொள்ள.., வாவென்று அழைத்து தன் மடியில் தாய்மையின் தவிப்போடு சாய்த்து படுக்கவைத்துக் கொண்டாள்.

தாயின் மடியில் படுத்த சத்யாவிற்கு என்றோ அவன் குடித்த தாய்ப்பாலின் வாசம் அவள்மீது இன்றும் படர்ந்திருப்பதுபோல் ஒரு நிம்மதி பரவ இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அவள் அவனுடைய தலைக் கோதியவாறே... “பத்தியா? மரணம் எவ்வளவு கொடிதுப் பார்த்தியா? எப்படி உயிர்பிடுங்காமல் உன்னை நடுநடுங்க வைக்குது பார்த்தியா? உன் ஒருத்தனால முதல்ல சாகத் துணிய முடியுதா?
பிறகு போர் போர் என்றாயே, போர் வந்தால் எத்தனை உயிர்கள் அழியும் எண்ணிப் பார்த்தாயா?

உயிர் என்பது எல்லோருக்கும் பொது சத்யா. ஒருத்தர் இரண்டு பேரோட அழிவு அல்ல நீ கேட்டது, இரண்டு நாட்டின் மீதான போர். இரண்டு தேசத்து மக்களின் அழிவு அது. அதோடு போகுமா..? எத்தனை நாட்டைத் துணைக்கு அழைத்து எத்தனைப் பேரைக் அது கொல்லுமோ என்று இப்போது யோசித்தாயா சத்யா. ஒரு நாட்டின் அத்தனை உயிரின் விளைக்கும் அந்த நாடு பிறகு பொறுப்பில்லையா?
என்னைக் கேட்டா இந்திய தேசம் பாக்கிஸ்தான் எனுமந்த நாட்டைக் கண்டு ஒருதுளியும் அஞ்சவில்லை, தன் மக்களின் உயிரோட விலையில்லா மதிப்பிற்குத் தான் அது அஞ்சுகிறது..

அப்போ ஏம்மா இதையெல்லாம் கண்டுபிடித்தோம்? இப்படிப்பட்ட அணு உலைகளை எல்லாம் பிறகு ஏன் நாம உற்பத்தி பண்றோம்..? இப்படி அவனுக்குள் கேள்விகள் நீண்டு எழுகிறது ஆனால் அவனால் அதை கேட்க முடியவில்லை. கைகாலெல்லாம் தனையறியாமல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தது. ஆனாலும், அந்த உயிர்பயத்தின் உலுக்களுக்கு மத்தியிலும் போரைப் பற்றி அவள் சொல்வது சரியெனப் பட்டது. போர் மிகக் கொடிது, மிகக் கொடிது என்று எண்ணியவாறே.. அவள் மடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்... இரவு அவனை போரில்லா ஒரு தேசத்திற்கு உறங்கச் சொல்லி அழைத்துப் போனது.

மீண்டும் வந்த கனவில் ஆசாத் “அணு உலையை அடியோடு மூடுவோம்; போரில்லா ஒரு தேசம் அமைப்போம்..” என்று கத்தி கத்தி ஆர்பாட்டம் செய்துக் கொண்டிருக்க இவனும் உடன் சென்று “அணு உலைகளை அறவே ஒழிப்போம்; மின்சாரம் வேண்டுமெனில் புது உத்தியைக் கொடுப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum