தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

+3
கவிக்காதலன்
தங்கை கலை
ஆளுங்க
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Fri Dec 16, 2011 1:23 am

தமிழா!!! "இதை நீ படிக்கணும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!!


[You must be registered and logged in to see this link.]

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள்!

116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.


கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத்
தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள்
பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ்
நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப்
பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது
இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்
இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான்
இருந்தது). எனவே, பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும்,
மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999
ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப்
பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை
நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152
அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை,
தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம்
விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை
நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள்
ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா,
இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10
டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால்
இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக்
கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு
இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட
சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய
அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை
இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு
வந்து அதை நிரப்பும்.

' சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே?' என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே
தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல்
மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக்
குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு
வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை
கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட
முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட
உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி
நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே
வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.
மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எனவே அணை எப்போதுமே
முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.

35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்!!! வடிகட்டிய அயோக்கியத்தனம்!!


முதலாவதாக
- பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப்
பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.
பெரியாறு
அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில்
வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத்
தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.


[You must be registered and logged in to see this link.]

வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர்
பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக
இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக
- 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை
போனார்கள்.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்
பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை
அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில்
துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள்
செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது.
வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட்
போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.
[You must be registered and logged in to see this link.]

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம்
கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம்
உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று
அனுமதியே கொடுத்தது.


விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது,
இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும்
நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள்
குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்...

பொங்கி எழு தமிழா!!

பி.கு:
* எனக்கு முகநூலில் வந்த கட்டுரை இது. தகுந்த நேரத்தில் பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.

* வந்தே மாதரம் சசி அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையைக்
கொண்டு செல்லும் நோக்கில், ஒரு படிவம் ஏற்படுத்தி உள்ளார். அதில் சென்று
அனைவரும் பதிவு செய்யும் படி அனைவரையும் வேண்டுகிறேன்.

படிவம் இருக்கும் இடம்: [You must be registered and logged in to see this link.]


அவரது கட்டுரையை படிக்க: [You must be registered and logged in to see this link.]

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது.. பார்க்க:
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Fri Dec 16, 2011 8:05 pm

நண்பர்களே அணையைப் பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Fri Dec 16, 2011 8:53 pm

நீங்க சொல்லுவது சரி தான் .....
கேரள தான் தண்ணீர் கொடுக்குரோம்முன்னு சொல்லுறங்கள் அதையும் கொஞ்சம் யோசிக்கலாமே .....

நாம நம்மளோட உரிமையை விட்டுக் கொடுக்க வேணாம் ...ஏமாறவும் கூட வேணாம்..... அதை நேரம் தமிழர்களை அவங்க அடிப்பதும் ,நாம அவங்களை அடிப்பதும் விட்டு விட்டு கொஞ்சம் நிதானமா யோசிச்சி பார்க்கலாம் ....
நம்மோளோட பிரச்சனை அவர்களும் ,அவர்கோளோட பிரச்சனையை நாமளும் யோசிக்கணும் ...

நமக்கு விவசாயம் பாதிக்கும் ..
சப்போஸ் அணை உடஞ்சது என்றால் என்னாகும் ...
இடுக்கி அணைக்கு காப்பாற்றும் சொல்லுவதை எந்த அளவு நம்புவது ....

100 வருஷத்துக்கு முன்னாடி சுண்ணாம்புக் கலைவை ன்னு சொல்லுரிங்க ....
அணை வலுவாக இருந்தால் எதுக்கு மூன்று தடவை பலப் படுத்தப் பட்டது ....
யார இருந்தாலும் யுய்ருக்கு பயப்படுவாங்க தான ....

நாம நல்ல இருக்கணும் நிறதுக்காக அடுத்தவங்க உசுரோட விளையாடவும் கூடாது ல? .....

என்னோட கருத்து என்னதுன்னா முதலில் தமிழர்களை கேரளர்கள் தாக்குவது ,கேரளா மக்களை தமிழர்கள் தாக்குவதும் நிறுத்த வேணும் ....

கேரள மக்கள் நிம்மதியா இருக்குற மாறி அணை யோட க்வாலிட்டி இருக்கணும் ....
அதே நேரத்தில் தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் கொடுக்கணும் ....

இதுக்கு நான் ஒரு புதுசா ஐடியா வைத்து இருக்கேன் ...
ஆனா அது காமெடி ன்னு சிரிபிங்கூ ,,ஷோ நீங்க சிர்க்க மாட்டீங்கன்னு தைரிஞ்சா சொல்லுவேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by கவிக்காதலன் Fri Dec 16, 2011 11:50 pm


என்னோட கருத்து என்னதுன்னா முதலில் தமிழர்களை கேரளர்கள் தாக்குவது ,கேரளா மக்களை தமிழர்கள் தாக்குவதும் நிறுத்த வேணும் ....
100 வருஷத்துக்கு முன்னாடி சுண்ணாம்புக் கலைவை ன்னு சொல்லுரிங்க ....
அணை வலுவாக இருந்தால் எதுக்கு மூன்று தடவை பலப் படுத்தப் பட்டது ....
யார இருந்தாலும் யுய்ருக்கு பயப்படுவாங்க தான ....
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 1:43 am

தங்கை கலை wrote:நீங்க சொல்லுவது சரி தான் .....
கேரள தான் தண்ணீர் கொடுக்குரோம்முன்னு சொல்லுறங்கள் அதையும் கொஞ்சம் யோசிக்கலாமே .....

அதுக்கு வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியுள்ளேன்!!!
தங்கை கலை wrote:
100 வருஷத்துக்கு முன்னாடி சுண்ணாம்புக் கலைவை ன்னு சொல்லுரிங்க ....
அணை வலுவாக இருந்தால் எதுக்கு மூன்று தடவை பலப் படுத்தப் பட்டது ....

பலப்படுத்தல் வேலையே கேரளா பயப்பட்டதால் தான் செய்யப்பட்டது.
அப்படியே, முதலில் பலவீனமா இருந்தாலும், பலப்படுத்தப்பட்டதை ஆராய்ந்த பின்னால் தானே, உச்ச நீதிமன்றம் தண்ணீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்தது??

அதே போன்ற வடிவமைப்பைக் கொண்ட கல்லணை 1000 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கிறதே!!
மேலும், எந்த அணையிலும் எவ்வளவு பெரிய உடைப்பு ஏற்பட்டாலும், தண்ணீர் மேலே நோக்கி பாயாது..
அப்படி பாய்ந்தால், அனைத்து அறிவியல் பாடங்களையும் மாற்ற வேண்டி
இருக்கும்!!!
பெரியாறு அணையில் இருந்து கீழே 60 கி.மீ தூரத்திற்கு வெறும் காடுகள் தான்.. ஊரே கிடையாது!! இடுக்கி 58 கி.மீ தூரத்தில்...
(சந்தேகம் இருந்தால், நேரிலேயே போய் பாருங்கள்.. பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்!!)

மற்றப்படி , இடுக்கி அணை தாங்குமா இல்லையா என்பததெல்லாம் ஏற்கனவே கணக்கிடப்பட்டவை. (அந்த கணக்கு தான் அணை அடி/ டி. எம். சி என்று வருது).
கொள்ளளவை வைத்துப் பார்க்கும் போது இடுக்கி மிகப்பெரியது!! நிச்சயம் தாங்கும்!! அப்படி தாங்காது என்றால், அதுவும் பலவீனமான அணை தானே?? அதிலும் தண்ணீர் வேண்டாம்!!! என்ன சரி தானே?

எல்லா அணைகளும் உடையக் கூடிய அபாயம் உள்ளவை தான்!!! அதற்காக, அணைகளே வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
"சுண்ணாம்பு அணை" என்று வெட்டி கோஷம் போடுபவர்களால் இடுக்கி அணை உடையவே உடையாது என்று 100% உறுதியாக கூற முடியுமா???
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Sat Dec 17, 2011 3:00 am

தங்கை கலை wrote:கேரள தான் தண்ணீர் கொடுக்குரோம்முன்னு சொல்லுறங்கள் அதையும் கொஞ்சம் யோசிக்கலாமே .....

அவங்க சொல்லுவதை எப்படி நம்புவது? ஒருவேளை புதிய அணை கட்டிய பிறகு அவர்கள் தண்ணீர் தரவில்லையென்றால் என்ன செய்வது? உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று சொல்வீர்கள். அணுகினாலும் பயனிருக்காதே. உச்ச நீதிமன்றம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

அதை நேரம் தமிழர்களை அவங்க அடிப்பதும் ,நாம அவங்களை அடிப்பதும் விட்டு விட்டு கொஞ்சம் நிதானமா யோசிச்சி பார்க்கலாம் ....

அடிப்பதெல்லாம் தவறுதான்.... ஆனால் இன்னும் எவ்வளவு நாளைக்கு நிதானமா யோசிக்கிறது?

நம்மோளோட பிரச்சனை அவர்களும் ,அவர்கோளோட பிரச்சனையை நாமளும் யோசிக்கணும் ...

இன்னும் எத்தனை வருடங்களுக்கு யோசித்துக் கொண்டே இருப்பீங்க?

சப்போஸ் அணை உடஞ்சது என்றால் என்னாகும் ...
இடுக்கி அணைக்கு காப்பாற்றும் சொல்லுவதை எந்த அளவு நம்புவது ....

கூடங்குளம் விவாதத்தில் ஒருவேளை விபத்து ஏற்பட்டால் என்று கேட்டதற்கு அறிவியல் என்றால் சில குறைகள் இருக்கதான் செய்யும், அவற்றையெல்லாம் பார்த்தால் இந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியாது என்று தாங்கள் சொல்லியது நினைவிருக்கிறதா? அது அணைக்கெல்லாம் பொருந்ததா?

100 வருஷத்துக்கு முன்னாடி சுண்ணாம்புக் கலைவை ன்னு சொல்லுரிங்க ....
அணை வலுவாக இருந்தால் எதுக்கு மூன்று தடவை பலப் படுத்தப் பட்டது ....

முதலில் அணையைப் பலப்படுத்த சொன்னாங்க.

அணையைப் பலப்படுத்தியப் பிறகு அதை உடைத்து புதிய அணைக் கட்ட வேண்டும் என்று சொல்றாங்க.

புதிய அணை கட்டியப் பிறகு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்லப் போறாங்க.

யார இருந்தாலும் யுய்ருக்கு பயப்படுவாங்க தான ....

ஆமாம். ஆனால் இது தேவையில்லாத பயம். பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் முழுவதும் இடுக்கி அணையைத் தான் சென்று சேரும் என்று மேலே படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

நாம நல்ல இருக்கணும் நிறதுக்காக அடுத்தவங்க உசுரோட விளையாடவும் கூடாது ல? .....

இதைத்தான் கேரள அரசியல்வாதிகளுக்கு நாங்களும் சொல்ல நினைக்கிறோம். அவர்கள் விளையாடுவது தமிழக விவசாயிகளின் உயிரோடு.

என்னோட கருத்து என்னதுன்னா முதலில் தமிழர்களை கேரளர்கள் தாக்குவது ,கேரளா மக்களை தமிழர்கள் தாக்குவதும் நிறுத்த வேணும் ....

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து.

கேரள மக்கள் நிம்மதியா இருக்குற மாறி அணை யோட க்வாலிட்டி இருக்கணும் ....

கேரள அரசியல்வாதிகள் தேவையில்லாமல் பயத்தை கிளப்புவதை நிறுத்தினாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

அதே நேரத்தில் தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் கொடுக்கணும் ....

புதிய அணைக் கட்டினால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ளது.

இதுக்கு நான் ஒரு புதுசா ஐடியா வைத்து இருக்கேன் ...
ஆனா அது காமெடி ன்னு சிரிபிங்கூ ,,ஷோ நீங்க சிர்க்க மாட்டீங்கன்னு தைரிஞ்சா சொல்லுவேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

உங்கள் யோசனையை சொல்லுங்கள். சிரிப்பதா வேண்டாமா என்று பிறகு பார்க்கலாம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Sat Dec 17, 2011 8:03 pm

தமிழன் அவர்களுக்கு ,

1.தண்ணீர் கொடுக்க வில்லை என்றால் நாம் ஒண்ணும் வேடிக்கை பார்க்க மாட்டோம் ...பதிலடி பயங்கரமத்தான் கொடுப்போம் கேரளாவுக்கு ...கேரளா நம்மளை மிகவும் சார்ந்துள்ளது என்பது உங்களுக்கே தைரியும் ....

2.நான் குறிப்பிட்ட நிதானம் தேவை என்பது கால நீட்டிப்பு இல்லை ...ஒவ்வொருவரும் மாறி மாறி அடிப்பதை விட்டு சிந்திக்கணும் என்று தான் ...

3.வருட வருடம் கேரளா மக்களும் இந்த பிரச்சனையை எழுப்பி கொண்டு தான் இருக்கிறாராகலாம் ...

4.நான் ஒண்ணும் அரசியல் வாதியோ இல்லை அரசாங்கத்திர்க்கு சப்போர்ட் பண்ணுறவளோ இல்லை ...100% தமிழ் நாடு நல்ல இருக்கணும் நினைக்கிற தமிழச்சி தான் நான் ...நீங்க என்னை கூடங்குளம் ஆதரவாளர் என்று நினைக்கிறீங்கன்னு நல்லாத் தைரியுது ....நான் அந்த பிரோஜெட் யை எதிர்க்கிறேன் ...இப்போ நம்மோளோட மின் தேவைகள் ரொம்ப அதிகம் ...அந்த இடதுல இருந்தும் கொஞ்சம் சிந்திச்சி பார்த்தேன் அவ்வளவு தான் ...
அதுக்காக கூடங்குளமுக்கு ஆதரவுன்னு சொல்லாதீங்க ...

அதேபோல் அணை உடஞ்சதுன்னா ன்னு கொஞ்சம் சிந்தனை ,
அதுக்காக என்னை நீங்க கேரளாக்கு சப்போர்ட் பண்ணுறேன்னும் நினைக்காதீங்க ...
தமிழ் மக்களுக்கு தண்ணீர் கண்டிப்பா கொடுக்கணும் ...
கேரளா கொடுக்க வில்லை ண்ணா நாம பதிலடி பயங்கரமா கொடுக்கணும் .


நன்றி தமிழன் ...


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 8:15 pm

தங்கை கலை wrote:
தண்ணீர் கொடுக்க வில்லை என்றால் நாம் ஒண்ணும் வேடிக்கை பார்க்க மாட்டோம் ...பதிலடி பயங்கரமத்தான் கொடுப்போம்

இன்று வரை காவிரி பிரச்சனையிலும் தண்ணீர் தரவில்லை என்பது தான் அம்சம்..
என்ன செய்து விட்டோம் சகோதரி?
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by லாவன்யா Sat Dec 17, 2011 10:39 pm

தமிழ் மக்களுக்கு தண்ணீர் கண்டிப்பா கொடுக்கணும் ...
கேரளா கொடுக்க வில்லை ண்ணா நாம பதிலடி பயங்கரமா கொடுக்கணும் .

கொடுக்களைனா அப்பறம் பார்க்கலாம் என்ற பச்சுக்கே இடம் இல்லை.
அண்ணன் தமிழன் சொன்னமாதிரி
தமிழ் நாடு ஏமாந்தது போதும்...
பொங்கி எழு தமிழா!!

தங்கை கலை கொஞ்சம் காவிரி பிரச்சனை-இஉம்
நினசு பார்க்கணும்.
அப்புரும் தமில்ழர்கல்னாவே இப்படி தாணு எல்லா மாநிலமும்
கணக்கு பொடா ஆரம்பிசுடுவாங்க.
அதனால

அடுதவங்க உரிமையை பரிக்கவும் வேண்டாம் ...
நம்ம உரிமையை விட்டு வும் வேண்டாம் ...

இது குறித்து தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம் .

இப்படிக்கு ,
உங்கள் புதிய தோழி ,
லாவன்யா
(தமிழன் என்று சொல்லடா ...!தலை நிமிர்ந்து நில்லடா...!)

லாவன்யா
லாவன்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 4
Join date : 17/12/2011
Age : 31
Location : Karur

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 17, 2011 10:57 pm

பிரச்சினைக்குரிய மாநிலமாகிவிட்டது... தமிழ்நாடு

1. பெக்ரம் ஊழல்
2. காவிரி
3. முல்லைபெரியாறு
4. ஈழத் தமிழர்களை கைவிட்டது
5. தூக்குத் தண்டனை
6. கூடங்குளம்
7. தமிழ் மீனவர்கள்
8. அரசியல் முரண்பாடு
9. ஓட்டுக்காக இலவசங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by லாவன்யா Sat Dec 17, 2011 11:11 pm

பிரச்சினைக்குரிய மாநிலமாகிவிட்டது... தமிழ்நாடு

ஏன் ? எப்படி ? எதற்கு ?
என்று உங்களுக்குள் இதற்கான கேள்வி எழுப்புங்கள்.....?
அதற்கான விடை உங்களிடம் உள்ளது [You must be registered and logged in to see this image.]

சில பல அரசியல் வாதிகளும் ..,
கோபமுடன் நாட்டை குட்ற்றதுடன் பாற்போர் இருக்கும் வரை
இந்தமாதிரி பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருக்கும்.

பிரச்சனை பல கண்டுபிடிப்பதுடன் ,
பிரச்சனையை தீர்க்கும் வழியில் இறங்குவோம் நண்பர்களே..

இப்படிக்கு .
உங்கள் புதிய தோழி,
லாவன்யா
லாவன்யா
லாவன்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 4
Join date : 17/12/2011
Age : 31
Location : Karur

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Sat Dec 17, 2011 11:11 pm

தங்கை கலை wrote:தமிழன் அவர்களுக்கு ,

1.தண்ணீர் கொடுக்க வில்லை என்றால் நாம் ஒண்ணும் வேடிக்கை பார்க்க மாட்டோம் ...பதிலடி பயங்கரமத்தான் கொடுப்போம் கேரளாவுக்கு ...கேரளா நம்மளை மிகவும் சார்ந்துள்ளது என்பது உங்களுக்கே தைரியும் ....

அப்பவும் இதே மாதிரிதான் சொல்லுவீங்க. ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போட்டுவிட்டு, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அமைதியாக இருக்க சொல்வீர்கள்.

2.நான் குறிப்பிட்ட நிதானம் தேவை என்பது கால நீட்டிப்பு இல்லை ...ஒவ்வொருவரும் மாறி மாறி அடிப்பதை விட்டு சிந்திக்கணும் என்று தான் ...

வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும்தான். ஆனால் அவர்கள் அடிக்கும்போது கூட கைக்கட்டிக் கொண்டிருப்பீர்களா?

3.வருட வருடம் கேரளா மக்களும் இந்த பிரச்சனையை எழுப்பி கொண்டு தான் இருக்கிறாராகலாம் ...

மக்களை குறை சொல்வது தவறு என்று நினைக்கிறேன். இதற்கு காரணம் கேரள அரசியல்வாதிகள்தான். அவர்கள்தான் மக்களிடம் தேவையற்ற பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.

4.நான் ஒண்ணும் அரசியல் வாதியோ இல்லை அரசாங்கத்திர்க்கு சப்போர்ட் பண்ணுறவளோ இல்லை ...100% தமிழ் நாடு நல்ல இருக்கணும் நினைக்கிற தமிழச்சி தான் நான் ...நீங்க என்னை கூடங்குளம் ஆதரவாளர் என்று நினைக்கிறீங்கன்னு நல்லாத் தைரியுது ....நான் அந்த பிரோஜெட் யை எதிர்க்கிறேன் ...இப்போ நம்மோளோட மின் தேவைகள் ரொம்ப அதிகம் ...அந்த இடதுல இருந்தும் கொஞ்சம் சிந்திச்சி பார்த்தேன் அவ்வளவு தான் ...
அதுக்காக கூடங்குளமுக்கு ஆதரவுன்னு சொல்லாதீங்க ...

நீங்கள் ஆதரவாளரோ இல்லையோ, நடு நிலையாக யோசியுங்கள்.

அதேபோல் அணை உடஞ்சதுன்னா ன்னு கொஞ்சம் சிந்தனை ,
அதுக்காக என்னை நீங்க கேரளாக்கு சப்போர்ட் பண்ணுறேன்னும் நினைக்காதீங்க ...

அதே போல் இடுக்கி அணை உடைஞ்சது என்றால் என்னாகும்?

மேலே படங்களுடன் தெளிவாக விளக்கியும் நீங்கள் இப்படி கேரள அரசியல்வாதிகள் போல் அடம்பிடிப்பது கேரளாவுக்கு ஆதரவு என்றுதான் தோன்றுகிறது.

தமிழ் மக்களுக்கு தண்ணீர் கண்டிப்பா கொடுக்கணும் ...
கேரளா கொடுக்க வில்லை ண்ணா நாம பதிலடி பயங்கரமா கொடுக்கணும் .

இப்போது கொடுப்பதும் பதிலடிதான்.

நன்றி தமிழன் ...

நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by கவிக்காதலன் Sun Dec 18, 2011 5:11 pm

தமிழன்...
மாற்றி மாற்றி அடிச்சுகிட்டே இருப்போம் என சொல்ல வறீங்களா...? இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என சொல்ல வறீங்க..??
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Sun Dec 18, 2011 7:06 pm

அப்போ நீங்க சொல்லுற மாறி அவங்க நம்மளை அடிக்கட்டும் ..நாம இங்க இருந்து அவங்களை அடிப்போமா ............


இதுல பாதிக்கப் படுறது பொது மக்கள் தான் .....
அங்க இருக்குற தமிழர்களை காபத்துறது தான் புத்திசாலித் தனம்...
நாம கொடுக்குற பதிலடி கேரளா மக்கள் சஃபர் ஆகணும் ....
அந்த மாறி போராட்ய்டங்கள் பண்ணலாம் ...நாம இங்க இருந்து எதையும் அனுப்பாமல் இருக்கணும் ....

ரெண்டு பெரும் அடிக்கிறதுல பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் ...
அதுவும் பேரும்பான்மையான கேரளத்தில் வாழும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் தான் ....

பொறுமை வேணும் ன்னு நான் சொல்லல ....வன்முறை தீர்வாகாதுன்னு நான் சொல்ல வருகிறேன் .....

நடுநிலையா ரெண்டு பெரும் யோசிக்கணும் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Sun Dec 18, 2011 7:06 pm

கவிக்காதலன் wrote:தமிழன்...
மாற்றி மாற்றி அடிச்சுகிட்டே இருப்போம் என சொல்ல வறீங்களா...? இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என சொல்ல வறீங்க..??
சியர்ஸ் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Sun Dec 18, 2011 11:46 pm

கவிக்காதலன் wrote:தமிழன்...
மாற்றி மாற்றி அடிச்சுகிட்டே இருப்போம் என சொல்ல வறீங்களா...? இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என சொல்ல வறீங்க..??

நானும் வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றுதானே சொல்லியுள்ளேன்... அவர்கள் அடிக்கும்போது கூட கைக்கட்டிக் கொண்டிருக்காமல், அதை தடுக்க வேண்டும் என்று பொருளில்தான் சொல்லியிருக்கிறேன்.

இப்போதிருக்கும் அணையே பலமாக இருக்கிறது என்று மேலே விளக்கப்பட்டுள்ளது. புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை கைவிடுவதுதான் தீர்வு.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Mon Dec 19, 2011 12:00 am

தங்கை கலை wrote:அப்போ நீங்க சொல்லுற மாறி அவங்க நம்மளை அடிக்கட்டும் ..நாம இங்க இருந்து அவங்களை அடிப்போமா ............
நான் எங்கே அவர்களை அடிப்போம் என்று சொல்லியிருக்கிறேன்? அவர்கள் அடிக்கும்போது கூட கைக்கட்டிக் கொண்டிருக்காமல் தடுக்க வேண்டாமா என்ற பொருளில்தானே சொல்லியிருக்கிறேன்.


இதுல பாதிக்கப் படுறது பொது மக்கள் தான் .....

எல்லா பிரச்சனைகளிலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

அங்க இருக்குற தமிழர்களை காபத்துறது தான் புத்திசாலித் தனம்...
நாம கொடுக்குற பதிலடி கேரளா மக்கள் சஃபர் ஆகணும் ....
அந்த மாறி போராட்ய்டங்கள் பண்ணலாம் ...நாம இங்க இருந்து எதையும் அனுப்பாமல் இருக்கணும் ....

நாம் இங்கிருந்து எதையும் அனுப்பாமல் இருந்தால் பாதிக்கப்படப் போவது ஏழை மக்கள்தான். அங்கு ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் விற்கிறது என்றால் ஏழை மக்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு இதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ரெண்டு பெரும் அடிக்கிறதுல பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் ...
அதுவும் பேரும்பான்மையான கேரளத்தில் வாழும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் தான் ....

பொறுமை வேணும் ன்னு நான் சொல்லல ....வன்முறை தீர்வாகாதுன்னு நான் சொல்ல வருகிறேன் .....

போராட்டாங்கள் கேரள மக்களை நோக்கி இருக்கக் கூடாது, கேரள அரசியல் கட்சிகளை நோக்கித்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். இந்தப் பிரச்சனைக்கு காரணமே கேரள அரசியல்வாதிகள்தான்.

நடுநிலையா ரெண்டு பெரும் யோசிக்கணும் ....

கேரள அரசும் நடுநிலையாக யோசித்தால் பிரச்சனையே வராதே.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 19, 2011 3:14 pm

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியில் இருந்து, 136 அடியாக குறைக்கப்பட்டதால், தென் மாவட்டங்களில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து தரிசு நிலங்களாக மாறி உள்ளது.

பென்னிக்குக் கட்டிய பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 155 அடி. அணை பாதுகாப்பை கருதி நீர் மட்டத்தை 152 அடியாக பென்னிக்குக் நிலை நிறுத்தினார். அணையின் குறைந்தபட்ச நீர் மட்ட உயரம் 136 அடி. அணையில் 136 அடிக்கு மேல் வரும் நீர் மட்டுமே மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேறும் வகையில், அணை அமைந்துள்ளது. அணையில் எப்போதுமே கிடக்கும் நீரின் அளவு 104 அடி. ஆக அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அதற்கு கீழ் உள்ள நீரை நாம் நினைத்தாலும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அதற்கு கீழ் உள்ள தண்ணீர் வெளியேற வழியில்லை. அணையில் 152 அடி தண்ணீர் தேங்கியிருக்கும் போது கூட நாம் 48 அடி நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நீரினால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. லோயர்கேம்ப் மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் மூலம் தினமும் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

அணை பலம் குறித்து கேரளா சந்தேகம் கிளப்பி, அதன் விளைவாக நீர் மட்டம் 152 அடியில் இருந்து குறைந்தபட்ச அளவான 136 அடியாக குறைக்கப்பட்டதால் நமக்கு கிடைத்து வந்த நீரின் அளவு 18 டி.எம்.சி.,யில் இருந்து வெறும் 6 டி.எம்.சி.,யாக குறைந்தது. மீதம் 12 டி.எம்.சி., தண்ணீர் கேரளாவிற்குள் சென்று விடுகிறது. ஆக தற்போது முல்லை பெரியாறு அணையில் மூன்றில் இரண்டு பங்கு நீர் கேரளாவிற்குள் செல்கிறது. ஒரு பங்கு நீர் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்கிறது. பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் உபரி நீர் மூலம் கேரளாவில் இடுக்கி மின் நிலையத்தில் முழுமையாக இரண்டு ஜெனரேட்டர்கள் ஆண்டு தோறும் மின் உற்பத்தி செய்கின்றன. அந்தளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி இல்லாமல் தரிசாக போய் விட்டது. மீதம் உள்ள 73 ஆயிரம் ஏக்கரில் மட்டும் பாசனம் நடக்கிறது. அதிலும் 40 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இருபோக சாகுபடி செய்ய முடிகிறது. 40 லட்சம் மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பினை கணக்கிட்டால் ஸ்பெக்ட்ரம் இழப்பினை போல் நீண்டு கொண்டே செல்லும்.அந்த அளவுக்கு உணவு உற்பத்தி, மின் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு பாதிப்பு, மனித உழைப்பு இழப்பு, பால் பொருள் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவிற்கு கிடைத்த ஒரே ஆதாரயம் கூடுதல் மின் உற்பத்தி, தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு கணக்கில் அடங்காது. இதனை எல்லாம் கணக்கிட்டே சுப்ரீம் கோர்ட் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்தலாம் என உத்தரவிட்டது. அணை நீர் மட்டம் 136 அடியில் இருந்து 6 அடி உயர்த்தி, 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் தரிசாக கிடக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் வசதியும், சில லட்சம் மக்களுக்கு குடிநீரும் வழங்க முடியும். அணையில் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டுமே மீண்டும் தென் மாவட்டங்கள் பழைய பொழிவினை பெறும். இதற்கு உரிய முயற்சிகளை சுப்ரீம் கோர்ட் மூலம் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

பூகம்பத்தால் பாதிப்பில்லை: உலகில் மொத்தம் 23 ஆயிரம் அணைகள் உள்ளன. உலகில் இதுவரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கரீபா அணை, கிரீஸிலுள்ள கிரமிஸ்டா அணை, சீனாவில் உள்ள சிங்பெங்கியாங், குஜராத்தில் உள்ள புட்ஜ் அணைகளில் மட்டுமே 6.5 ரிக்டர் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிலநடுக்கத்திலும் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் 2 ரிக்டர் அளவுக்கு மேல் இதுவரை நிலநடுக்கம் ஏற்பட்டது இல்லை. அதிகபட்சம் 3.5 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. எனவே தற்போதே அணையில் 152 அடி தண்ணீர் தேக்க முடியும். 1901ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையும் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் பெரியாறு அணையில் இருந்து 25 கி.மீ., தொலைவிற்கு அப்பால் மட்டுமே இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எனவே நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பில்லை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Mon Dec 19, 2011 3:19 pm

தமிழன் அண்ணா உங்களுக்கு எனக்கும் என்ன தான் பிரச்சனை ....

கூடங்குளத்தில் ஆரம்பித்தது இ[ப்போ கேரளா போயி டெல்லி வரைக்கும் போகப் போகுது ....

கூடங்குளத்தில் நான் நடுநிலையாக சிந்தித்தேன் ,,,,ஆனால் ரஷியா ஒப்பந்தத்தை அறிய வந்த போது நான் முழுமையாக எதிர்க்கிறேன் ...

நான் கேரளாக்கு சப்போர்ட் பண்ண வில்லை ...பொது மக்கள் யாரும் பாதிக்க கூடாது என்பது தான் என் கருத்து ....

இங்க இருந்து ஏற்றுமதி செய்யாமல் இருந்தோம் எனில் எல்லா மக்களும் தான் பாதிப்படைவாங்க ...அதுவே அரசியல் ஆகும் .....

வன்முறை தீர்வு இல்லை ...


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Mon Dec 19, 2011 4:11 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியில் இருந்து, 136 அடியாக குறைக்கப்பட்டதால், தென் மாவட்டங்களில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து தரிசு நிலங்களாக மாறி உள்ளது.

பென்னிக்குக் கட்டிய பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 155 அடி. அணை பாதுகாப்பை கருதி நீர் மட்டத்தை 152 அடியாக பென்னிக்குக் நிலை நிறுத்தினார். அணையின் குறைந்தபட்ச நீர் மட்ட உயரம் 136 அடி. அணையில் 136 அடிக்கு மேல் வரும் நீர் மட்டுமே மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேறும் வகையில், அணை அமைந்துள்ளது. அணையில் எப்போதுமே கிடக்கும் நீரின் அளவு 104 அடி. ஆக அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அதற்கு கீழ் உள்ள நீரை நாம் நினைத்தாலும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அதற்கு கீழ் உள்ள தண்ணீர் வெளியேற வழியில்லை. அணையில் 152 அடி தண்ணீர் தேங்கியிருக்கும் போது கூட நாம் 48 அடி நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நீரினால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. லோயர்கேம்ப் மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் மூலம் தினமும் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

அணை பலம் குறித்து கேரளா சந்தேகம் கிளப்பி, அதன் விளைவாக நீர் மட்டம் 152 அடியில் இருந்து குறைந்தபட்ச அளவான 136 அடியாக குறைக்கப்பட்டதால் நமக்கு கிடைத்து வந்த நீரின் அளவு 18 டி.எம்.சி.,யில் இருந்து வெறும் 6 டி.எம்.சி.,யாக குறைந்தது. மீதம் 12 டி.எம்.சி., தண்ணீர் கேரளாவிற்குள் சென்று விடுகிறது. ஆக தற்போது முல்லை பெரியாறு அணையில் மூன்றில் இரண்டு பங்கு நீர் கேரளாவிற்குள் செல்கிறது. ஒரு பங்கு நீர் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்கிறது. பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் உபரி நீர் மூலம் கேரளாவில் இடுக்கி மின் நிலையத்தில் முழுமையாக இரண்டு ஜெனரேட்டர்கள் ஆண்டு தோறும் மின் உற்பத்தி செய்கின்றன. அந்தளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி இல்லாமல் தரிசாக போய் விட்டது. மீதம் உள்ள 73 ஆயிரம் ஏக்கரில் மட்டும் பாசனம் நடக்கிறது. அதிலும் 40 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இருபோக சாகுபடி செய்ய முடிகிறது. 40 லட்சம் மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பினை கணக்கிட்டால் ஸ்பெக்ட்ரம் இழப்பினை போல் நீண்டு கொண்டே செல்லும்.அந்த அளவுக்கு உணவு உற்பத்தி, மின் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு பாதிப்பு, மனித உழைப்பு இழப்பு, பால் பொருள் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவிற்கு கிடைத்த ஒரே ஆதாரயம் கூடுதல் மின் உற்பத்தி, தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு கணக்கில் அடங்காது. இதனை எல்லாம் கணக்கிட்டே சுப்ரீம் கோர்ட் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்தலாம் என உத்தரவிட்டது. அணை நீர் மட்டம் 136 அடியில் இருந்து 6 அடி உயர்த்தி, 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் தரிசாக கிடக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் வசதியும், சில லட்சம் மக்களுக்கு குடிநீரும் வழங்க முடியும். அணையில் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டுமே மீண்டும் தென் மாவட்டங்கள் பழைய பொழிவினை பெறும். இதற்கு உரிய முயற்சிகளை சுப்ரீம் கோர்ட் மூலம் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

பூகம்பத்தால் பாதிப்பில்லை: உலகில் மொத்தம் 23 ஆயிரம் அணைகள் உள்ளன. உலகில் இதுவரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கரீபா அணை, கிரீஸிலுள்ள கிரமிஸ்டா அணை, சீனாவில் உள்ள சிங்பெங்கியாங், குஜராத்தில் உள்ள புட்ஜ் அணைகளில் மட்டுமே 6.5 ரிக்டர் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிலநடுக்கத்திலும் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் 2 ரிக்டர் அளவுக்கு மேல் இதுவரை நிலநடுக்கம் ஏற்பட்டது இல்லை. அதிகபட்சம் 3.5 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. எனவே தற்போதே அணையில் 152 அடி தண்ணீர் தேக்க முடியும். 1901ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையும் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் பெரியாறு அணையில் இருந்து 25 கி.மீ., தொலைவிற்கு அப்பால் மட்டுமே இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எனவே நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பில்லை.

யுஜின் annaa தங்கள்;அது கருத்தா இது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Tue Dec 20, 2011 2:22 am

தங்கை கலை wrote:தமிழன் அண்ணா உங்களுக்கு எனக்கும் என்ன தான் பிரச்சனை ....

கூடங்குளத்தில் ஆரம்பித்தது இ[ப்போ கேரளா போயி டெல்லி வரைக்கும் போகப் போகுது ....

கூடங்குளத்தில் நான் நடுநிலையாக சிந்தித்தேன் ,,,,ஆனால் ரஷியா ஒப்பந்தத்தை அறிய வந்த போது நான் முழுமையாக எதிர்க்கிறேன் ...

நான் கேரளாக்கு சப்போர்ட் பண்ண வில்லை ...பொது மக்கள் யாரும் பாதிக்க கூடாது என்பது தான் என் கருத்து ....

இங்க இருந்து ஏற்றுமதி செய்யாமல் இருந்தோம் எனில் எல்லா மக்களும் தான் பாதிப்படைவாங்க ...அதுவே அரசியல் ஆகும் .....

வன்முறை தீர்வு இல்லை ...



கூல் கூல் கூல்

நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 1:47 pm

தமிழன் அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி என்மேல் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஒவ்வொரு பொய்ண்டையும் குஓட்டே பண்ணி என்னை தாக்குநீங்க ,,,,

நான் கேக்குறதுக்கு சொல்லுங்க நேற்று ஒரு அண்ணா திக்குளிச்சங்களே இதனால் யாருக்கு நஷ்டம் ன்னு .....நீங்க மாறி ஆளுகள் தான் இந்த மாறி சின்ன பசங்களை மோடிவாட்டே பண்ணி இந்த மாறி நடக்குது ....வாழ வேண்டிய பையன் நிதானம் இல்லாமல் யோசிச்சி இனிமேல் அவன் வாழ்க்கை ??/??/??//?எரிஞ்சி போன அவன் உடம்பு திரும்ப வருமா ....
பார்க்குறதுக்கு அவ்வளவு வேதனையா இருக்கு ......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Tue Dec 20, 2011 1:55 pm

தங்கை கலை wrote:தமிழன் அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி என்மேல் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஒவ்வொரு பொய்ண்டையும் குஓட்டே பண்ணி என்னை தாக்குநீங்க ,,,,

நான் கேக்குறதுக்கு சொல்லுங்க நேற்று ஒரு அண்ணா திக்குளிச்சங்களே இதனால் யாருக்கு நஷ்டம் ன்னு .....நீங்க மாறி ஆளுகள் தான் இந்த மாறி சின்ன பசங்களை மோடிவாட்டே பண்ணி இந்த மாறி நடக்குது ....வாழ வேண்டிய பையன் நிதானம் இல்லாமல் யோசிச்சி இனிமேல் அவன் வாழ்க்கை ??/??/??//?எரிஞ்சி போன அவன் உடம்பு திரும்ப வருமா ....
பார்க்குறதுக்கு அவ்வளவு வேதனையா இருக்கு ......

நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும் கேரளாவின் நியாயமற்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் இருந்ததால் தான் ஒவ்வொன்றையும் தனித்தனியாக "Quote" செய்து பதில் சொன்னேன். நாங்களும் தீக்குளிப்பு போன்ற செயல்களை ஆதரிப்பதில்லை. இதனால் கூடுதல் வருத்தம்தான் ஏற்படுகிறது. வன்முறை, தீக்குளிப்பு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 2:32 pm

வன்முறை வேணம்முன்னு தான் சொன்னேன் ... நான் ஒன்னும் கேரளாவை ஆதரிக்கவில்லை .....
இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு ....இந்த பையன் பழையபடி கொடுப்பிங்களா .....
நீங்க சொல்லுற அந்த வருத்தம் அந்த பையனை திரும்பி கொண்டு வந்துடுமா ....
பிரச்சனைக்கு இந்த மாறி வன்முறை தீர்வாகதுன்னு தான் சொல்லுறேன் ஸ்டார்டிங் ல இருந்து ...

அணை பிரச்சனைக்கு இரண்டு மாநிலங்களும் உட்காந்து பேசனும் ....
மக்களை மொத விட்டு வேடிக்கை பார்க்க குடாதுன்னு ன்னு தான் சொல்லுறேன் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Tue Dec 20, 2011 7:39 pm

தங்கை கலை wrote:வன்முறை வேணம்முன்னு தான் சொன்னேன் ... நான் ஒன்னும் கேரளாவை ஆதரிக்கவில்லை .....
இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு ....இந்த பையன் பழையபடி கொடுப்பிங்களா .....
நீங்க சொல்லுற அந்த வருத்தம் அந்த பையனை திரும்பி கொண்டு வந்துடுமா ....
பிரச்சனைக்கு இந்த மாறி வன்முறை தீர்வாகதுன்னு தான் சொல்லுறேன் ஸ்டார்டிங் ல இருந்து ...

அணை பிரச்சனைக்கு இரண்டு மாநிலங்களும் உட்காந்து பேசனும் ....
மக்களை மொத விட்டு வேடிக்கை பார்க்க குடாதுன்னு ன்னு தான் சொல்லுறேன் ....

நானும் வன்முறையை ஆதரிக்கவில்லை..
அதே நேரம் அமர்ந்து பேசினாலும் தீர்வு கிடைக்காது.. (எத்தனை வருடங்களாக பேச்சு வார்த்தை அடக்குது????? )
தீர்வு மக்கள் போராடுவது தான்... அரசியல் வியாதிகளை நம்பி பயனில்லை...
ஆனால், நான் சொல்வது அறவழிப்போராட்டம்!!

பையன் இந்த கட்டுரையைப் படித்து தான் தீக்குளித்தானா?
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum