தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர்களே கவனியுங்கள்

+6
பார்த்திபன்
நெல்லை அன்பன்
pakee
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
10 posters

Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Tue Jan 17, 2012 8:49 am

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.
ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான
மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும்
நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம்
வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள்
உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன்
விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு
எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்!

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஷெர்பா டென்சிங் நார்கே.

இன்னும் கொஞ்சம் தவ்விக் குதித்து ஒரே தாவலில் அந்த நிலவையே எட்டிப் பிடித்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்.

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும்
இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு...

பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி.


இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள்
இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு
போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல
ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம்
சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த
மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்,

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே
உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்,

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து
பார்க்கும் விமானங்கள்,

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்,

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்,

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க
டிஸ்குகள்,

இண்டர்நெட்டுகள்,

செல்போன்கள்,

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த
மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம்
செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும்
பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா
நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின்
அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில்
மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கும் உழைப்பு!
மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.



மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல்,


மலரைப்பாடுதல்,

இயற்கையைப்பாடுதல்,

நாணத்தைப்பாடுதல்,

காதலைப்பாடுதல்,


கன்றாவியைப்பாடுதல்,

காறிதுப்பியதைப்பாடுதல்


என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா!


உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகின் ஒரே செல்வம்
உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.


Last edited by சுந்தரபாண்டி on Tue Jan 24, 2012 5:24 pm; edited 1 time in total
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 17, 2012 8:57 am

//இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.
//

சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by தமிழ்1981 Tue Jan 17, 2012 1:50 pm

வரிகள் ஒவ்வொன்றும் பல தகவல்களையும், உழைப்பின் பயனை சிந்திக்கத் தூண்டுவதாய் உள்ளது.......
"சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான். "

உண்மை தான் நண்பரே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty நன்றி

Post by கவினா Tue Jan 17, 2012 4:01 pm

தமிழ்1981 wrote:வரிகள் ஒவ்வொன்றும் பல தகவல்களையும், உழைப்பின் பயனை சிந்திக்கத் தூண்டுவதாய் உள்ளது.......
"சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான். "

உண்மை தான் நண்பரே......



நன்ற தோழி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by pakee Tue Jan 17, 2012 5:10 pm

அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.


சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty தோழி

Post by கவினா Tue Jan 17, 2012 5:22 pm

pakee wrote:அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.


சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்

வாழ்த்திய நாள் உள்ளத்திற்கு நன்றிகள் தோழி.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty தோழி

Post by கவினா Tue Jan 17, 2012 5:24 pm

pakee wrote:அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.


சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்



வாழ்த்திய நல் உள்ளத்திற்கு நன்றி தோழி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by நெல்லை அன்பன் Tue Jan 17, 2012 5:30 pm

புதிய எந்த இலையை பறிக்கிறது?

கருத்து கொஞ்சம் நீளம். படிக்க பொறுமை இல்லை. படித்த வரை நன்றாக இருந்தது. இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம், சினிமா செய்திகள் தவிர்த்து.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty தோழரே

Post by கவினா Tue Jan 17, 2012 5:40 pm

நெல்லை அன்பன் wrote:புதிய எந்த இலையை பறிக்கிறது?

கருத்து கொஞ்சம் நீளம். படிக்க பொறுமை இல்லை. படித்த வரை நன்றாக இருந்தது. இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம், சினிமா செய்திகள் தவிர்த்து.

"புதிய எந்த இலையை பறிக்கிறது?" என்பதன் அர்த்தம் புரியவில்லை தோழர்.

இனி சற்று சுருக்கமாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.

நானும் கூட சினிமா செய்திகளை வெறுக்கவே செய்கிறேன்.

நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by பார்த்திபன் Tue Jan 17, 2012 6:22 pm

நன்றாகப் புரிகிறது,
உழைப்பைப் போற்றும் உங்கள் கவிதையும்,
கவிதைக்குப் பின்னால் உள்ள உங்கள் உழைப்பும்!

மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Tue Jan 17, 2012 6:25 pm

உங்கள் பாராட்டும் கூட ஒரு கவிதையைப் போல்தான் உள்ளது.

நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by நெல்லை அன்பன் Tue Jan 17, 2012 7:19 pm

புதிய மொட்டு எந்த இலையை பறிக்கிறது?


நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Tue Jan 17, 2012 7:51 pm

நெல்லை அன்பன் wrote:புதிய மொட்டு எந்த இலையை பறிக்கிறது?


இந்த புதிய மொட்டு

இலையை பறித்துப் பார்க்கவில்லை.

இலையை பிரித்து பார்க்கிறது

இது மொட்டு அவிழ ஏற்றத் தருணமாயென்று.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by நெல்லை அன்பன் Tue Jan 17, 2012 7:59 pm

அடடா பதிலே கவிதையாக உள்ளது
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by நிலாமதி Tue Jan 17, 2012 8:07 pm

மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி ..........சற்று ஒழுங்கு படுத்துங்கள் என் பாராட்டுக்கள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by தோழி பிரஷா Tue Jan 17, 2012 10:11 pm

அருமை... [You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கலைநிலா Tue Jan 17, 2012 11:20 pm

மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 17, 2012 11:24 pm

//புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து //

இந்த வரிகள் அற்புதம்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Thu Jan 19, 2012 3:18 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.
//

சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே

பாராட்டுக்களுக்கு நன்றி தம்பி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Thu Jan 19, 2012 3:20 am

கவி கவிதா wrote://புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து //

இந்த வரிகள் அற்புதம்.

வாழ்த்திய நல் உள்ளத்திற்கு நன்றி தோழி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Thu Jan 19, 2012 3:21 am

கலைநிலா wrote: [You must be registered and logged in to see this image.]

நன்றி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Thu Jan 19, 2012 3:24 am

தோழி பிரஷா wrote:அருமை... [You must be registered and logged in to see this image.]

கைத்தடி என்னை உற்சாகப் படுத்திய தோழி பிரஷாவிற்கு என் உளமார்ந்த நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by கவினா Thu Jan 19, 2012 3:26 am

நிலாமதி wrote:மிக மிக அருமை [You must be registered and logged in to see this image.] ..........சற்று ஒழுங்கு படுத்துங்கள் என் பாராட்டுக்கள்

பாராட்டிய நிலாமதிக்கு என் மனமார்ந்த நன்றி.

கூடிய விரைவில் ஒழுங்கு படுத்திவிடுகிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

கவிஞர்களே கவனியுங்கள்  Empty Re: கவிஞர்களே கவனியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum