தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

+3
ஹிஷாலீ
ramkumark5
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 04, 2012 6:35 pm

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 10:41 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty மழை நண்பன்

Post by ramkumark5 Thu Jun 07, 2012 11:00 pm

மழை நண்பன்


னந்த் பொறியியல் படிக்கும் மாணவன். மிகவும் கலகலா துறுதுறு வகையறாவை சேர்ந்தவன். எல்லோரிடமும் மிக எளிதில் நட்பாகி விடுவான். தன் வகுப்பில் படிக்கும் ரம்யாவை ஒரு தலையாக காதலிக்கிறான்.

அன்று தன் நண்பர்களுடன் திரைப்படத்திற்கு செல்ல கிளம்பியிருந்தான். வானம் சற்று மேகமூட்டமாக இருந்தது. சிறுவயது முதலே ஆனந்துக்கு மழை என்றால் பிடிக்காது. இயற்கையையும், மனிதர்களையும் மிகவும் ரசிக்கும் ஆனந்திற்கு மழை என்றாலே பயத்துடன் கூடிய ஒரு வெறுப்பு.

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Rain

பள்ளி காலங்களில் தன் நண்பர்கள் மழையில் நனைந்து விளையாடும் போது கூட ஆனந்த் தன் வீட்டு பூஜை அறையில் மழை நிற்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டிருப்பான்.

அன்றும் மழை தூறல் விழ ஆரம்பிக்க எப்போதும் போல் ஆனந்த் மட்டும் தன் விடுதி அறையிலேயே முடங்கினான். நாளை தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் தன் தேவதை ரம்யாவிடம் காதலை வெளிப்படுத்துவது என்று முடிவு செய்திருந்தான்.

மறுநாள் தன் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் ரம்யாவிடம் தன் காதலை கூறினான். அதை கேட்ட ரம்யாவின் முகத்தில் அதிர்ச்சி. தான் பள்ளி காலத்தில் தன்னுடன் படித்த மாணவன் ஒருவனை காதலிப்பதாக கூறினாள். இதை கேட்டதும் ஆனந்துக்கு மனம் கலங்கியது.

மிகவும் சோகத்துடன் வகுப்பறையில் இருந்து வெளியேறினான். அவன் கல்லூரி கட்டிடத்தில் இருந்து வெளியே வர மழையும் பொழிய தொடங்கியது.

ஆனந்துக்காக மேகங்கள் கூடி அழ தொடங்கின. வாழ்வில் முதன் முறையாக மழையில் நனைய ஆரம்பித்தான். சில நொடிகள் மழைத்துளி அவன் மீது விழுவது வெறுப்பை ஏற்படுத்தினாலும் நேரம் செல்ல செல்ல அவன் மழையை ரசிக்க ஆரம்பித்தான்.

முதல் முறை மழையில் நனைவது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. தன் மனதிற்குள் இருக்கும் கவலையை மறந்து மழையில் நனைந்து, ஆட ஆரம்பித்தான். அன்று முதல் மழை அவனின் நண்பன் ஆனது.

இப்படிதாங்க நம்ம வாழ்க்கை’ல பல விஷயங்களை காரணமே இல்லாம வெறுத்து அந்த விஷயங்களை கடைசி வரைக்கும் அனுபவிக்காமலே விட்டுறோம். ஆக கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா “காரணமின்றி எதையும் வெறுக்காதீங்க. எந்தவொரு விஷயத்தையும் வெறுக்குறதுக்காகவே காரணம் தேடாதீங்க”.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty சிவ! சிவா!!

Post by ramkumark5 Fri Jun 15, 2012 2:34 pm

சிவ! சிவா!!

சிறு வயது முதலே மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் மழையில் நனைவது என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். பள்ளி நாட்களில் நனைந்து கொண்டே கிரிக்கெட் விளையாடிய ஞாபகங்கள் இன்னும் மனதிலே பசுமையான நினைவுகளாய் உள்ளன.

மழை என்றால் எவ்வளவு இஷ்டமோ அந்த அளவு இடி என்றால் பயந்திடுவேன். இடி விழுந்தால் அடுத்த நொடி வீட்டுக்குள் ஓடி வந்து காதுகளை மூடிக் கொள்வேன். இந்த பயம் சில நேரங்களில் காய்ச்சல், ஜுரம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தியது. எனது இந்த பயத்தை கவனித்த என் தந்தை இடி விழும் நேரங்களில் சிவ! சிவா!! என்று சொல்லுமாறு கூறினார். அப்படி சொன்னால், இடி நம்மை பார்த்து பயந்து ஓடி விடும் என்றார்.

இடி பயந்து ஓடியதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் சிவ! சிவா!! என்று சொல்லும் போது மனதிற்குள் பயம் குறைந்து ஒரு விதமான நம்பிக்கை ஏற்படும்.

பின் ஒரு நாள் இரவு வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று பலத்த இடி சத்தம் கேட்க நான் சிவ! சிவா!! என்று கூறி மனதை சாந்தபடுத்தினேன் அப்போது ஒரு குட்டி பெண் என்னிடம் ஓடி வந்து “என்னைய கூப்பிட்டீங்களா அண்ணா?” என்றாள்.

அந்த பெண் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாய் கூடி வந்திருக்கும் கனகராஜ் வாத்தியாரின் மகள் சிவானி. என்னை விட நான்கைந்து வயது இளையவள். அவளின் குரல் மழலை தனம் நிரம்பியதாய் இருந்தது. அக்கா, தங்கை என்று யாரும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ அவள் என்னை அண்ணா என்று அழைக்கவும் ஒரு விதமான ஈர்ப்பும், பாசமும் அவள் மீது தோன்றியது.

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Images?q=tbn:ANd9GcRggT9gRZ6hnG3q8DpoFqQpBcXgyaOMLeTZ3h2f7Zjvma47ckm6yy5KyPP1LA

அவளை தூக்கி திண்ணையில் அமர வைத்து அவளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் மழை ஆரம்பிக்கவே இருவரும் மழையில் நனைந்து விளையாட ஆரம்பித்தோம். என்னை போன்றே அவளுக்கும் மழையில் நனைவது என்றால் ரொம்ப பிரியம்.

அன்று முதல் இருவரும் ரொம்ப நெருக்கமாகி விட்டோம். தினம் தினம் மாலை என் வீட்டிற்கு “அண்ணா நானும் வந்துட்டேன்” என்று ஓடி வந்துருவாள். தன் மழலை பேச்சாலும் சுட்டி செயல்களாலும் என் வீட்டில் எல்லோருக்கும் செல்லம் ஆனாள். என் பொம்மைகளும் விளையாட்டு உபகரணங்களும் அவளுக்கும் செல்லம் ஆனது.

அவள் குடும்பத்தில் எங்காவது ஊருக்கு கிளம்பினார்கள் என்றால் ‘அண்ணனை விட்டு வர மாட்டேன்’ என்று அடம் பிடிப்பாள். பல நேரங்களில் அவள் அம்மா வேறு வழியில்லாமல் சிவானியை அடித்து அழைத்து செல்வாள். அதை பார்க்கும் போது மனதிற்கு வருத்தமாய் இருக்கும்.

என் குடும்பத்தினர் கோவில், சுற்றுலா என்று வெளியூர் செல்லும் நேரங்களில், சிவானியை பிரிய மனமில்லாமல் நான் மட்டும் வீட்டிலேயே தங்கி விடுவேன். சில நேரம் சிவானியின் பெற்றோர் அனுமதியுடன் அவளையும் எங்களுடன் வெளியூருக்கு கூட்டி செல்வதுண்டு.

சிவானியின் அன்பும் பாசமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களுக்கு பின் மீண்டும் அவள் தந்தைக்கு இட மாறுதலாகி விட அவர்கள் குடும்பம் வேறு ஊருக்கு புலம் பெயர்ந்தது. என் குடும்பமும் தந்தையின் தொழில் சம்பந்தமாக வெளி நாட்டில் குடியேற அதன் பின்னர் சிவானியை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. அவள் நினைவுகள் மட்டும் இன்னும் என்னுள் நீங்காமல் நிற்கிறது.

இன்றுடன் பதினைந்து வருடங்கள் ஆகிறது அவள் என்னை விட்டு சென்று. இன்று இடி இடித்த போது கூட சிவ! சிவா!! என்று கூறி விட்டு கதவுகளை நோக்கினேன், சிவானி அண்ணா என்று ஓடி வருவாள் என்ற எண்ணத்தில். சிவ! சிவா!!
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Mon Jun 18, 2012 4:12 pm

மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்

ஓர் அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேர் என்று வயல்வெளிகள் பார்ப்பவர்கள் எல்லாம் வியப்புடன் தான் செல்வார்கள். அப்படி இருக்கையில் சில வருடங்கள் கழித்து தன் விவசாய ஆராச்சியை முடித்து வருகிறாள் ராணி.

அங்கே ஒரே மாடி வீடுகள் கூரை வீடே இல்லை அதைக் கண்டு ஆச்சிரியத்தில் மகிழ்ந்தாலும் அங்குள்ள அழிவைக் கண்டு கண்ணீர் வடித்தாள் காரணம் .....

படிப்பறிவில்லா மக்கள் எல்லாம் நாகரீகத்தில் மாறினாலும் விவசாயத்தில் கோட்டை விட்டார்கள் அதானால் மும்மாரிப் பேய வேண்டிய "மழை" பேயாமலே போனதால் விவசாய நிலங்கள் எல்லாம் தருசு நிலமாய் கிடந்தது. இந்த நிலை வரக் காரணம் எது என்றால் நம் பழக்க வழக்கங்கள் தான்

நாம் ஒரு நாயை வளர்த்தாலும் அதை எந்த முறையில் பழக்க படுத்துகிறோமோ அந்த முறைக்கே அதன் பண்பு மாறிவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆடு மாடு கழுதை குதிரை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் குழந்தைகள் கூட இன்றைய இயற்கைக்கு மாறாகவே வளர்கிறார்கள் வாழ்கிறார்கள் இது தான் உண்மை.

இதே போல் தான் இன்றைய பூமியும் மாறிவிட்டது எப்படி தெரியுமா....?
நெற்பயிர் விளைய வேண்டிய இடத்தில் வீட்டு மனைகள் பெருகியதால் அந்த கிராம மக்கள் விவசாயத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் மழையும் அவர்களை மறந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு காய் கரிகளுக்கு ஏற்ப காற்றின் மணத்தில் வானம் காதல் கொள்ளும் அப்போது அந்த "வாசத்தில் மயங்கி மழையாக பொழியும்" என்பது நம் முன்னோர்கள் சொன்ன வேதம். ஆனால் இந்த கிராம மக்கள் மற்றப் பயிர்கள் விளைய வேண்டிய காலத்தில் வெறும் தருசு நிலமாய் விட்டு விடுகிறார்கள்.

இப்படியே ஆண்டு தோறும் செய்வதால் காற்றின் வரப்பு குறைகிறது இயற்கை சுழல்கள் தன் பண்பை மாற்றிக்கொண்டு அவர்கள் சூழலுக்கேற்ப தன் பருவ மழையை மாற்றிவிட்டது மேலும் அவர்கள் எப்போது பயிர்கள் விளைவிக்கிறார்களோ அப்போதைக்கு மழை பொழியும் பண்பு அந்த மண்ணில் மாறிவிட்டது.

இதனால் தன் தேவைக்கு மேல் பயிரிடுவதை நிறுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் அங்கே கிரிக்கெட் கபடி, கொட்டங்குச்சி இப்படி பல ரக விளையாட்டுகள் விளையாடும் இடமாகவே பயன் படுத்த தொடங்கினார்கள். இதனால் மழை வரத்து குறைந்து அந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது இதைக் கண்ட ராணி அவர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு விலக்கினாள் அவர்களும் தன் தவறை உணர்ந்து விவசாயம் செய்ய முடிவு செய்தார்கள்.

ஆனால் வீடுகளை அழித்து மீண்டும் விவசாயம் செய்தால் விவசாயம் வருமா....? இல்லை மழை தான் பொழியுமா...? என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளே வந்தது. உடனே தன் தவறுகளை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அப்போது தான் முன் போல் வான் மகள் மாறி மும்மாரி பருவ மழை பொழிவாள் என்று நம்பினார்கள்.

உடனே தங்கள் ஊர் போல் மற்ற ஊர்களும் மாறிவிட்டால் அடுத்து வரும் ஜென்மங்களில் சோறும்,தண்ணி இல்லாமல் உலகமே அழியும் தருவாய் வந்துவிடும் என்று உணர்ந்தார்கள். மற்றவர்களையும் தன் தவறை உணரும்படி ஊர் ஊராய் சென்று விழிப்புணர்வு செய்தார்கள்.

இறுதியில் ஊர் மக்கள் அனைவரும் நல்லவேளை இந்த ராணி விவசாயத்தை கற்று வந்ததாள் எங்கள் ஜென்மங்கள் இன்னும் பசி பட்டினி மழை என்ற பஞ்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது மேலும் எங்கள் பிள்ளைகளையும் விவசாய படிப்புக்கே அனுப்புவோம் என்று சபதம் செய்ததுடன் ராணிக்கு நன்றி கூறினார்கள். அவளும் நான் என் கடமையை தான் செய்தேன் என்றும் தான் கற்ற கல்விக்கு நன்றி கூறினாள்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 30, 2012 10:40 pm

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

முதல் இடம்
ramkumark5 on Fri Jun 15, 2012 1:04 pm
சிவ! சிவா!!


இரண்டாம் இடம்
ஹிஷாலீ on Mon Jun 18, 2012 2:42 pm
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்...


நண்பர்களுக்குப் பாராட்டுகள். மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Jun 30, 2012 10:43 pm

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்...
-
மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு DSC04199
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Jun 30, 2012 11:45 pm

வெற்றி பெற்ற (ராம், ஹிஷாலீ) கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ramkumark5 Sun Jul 01, 2012 11:39 am

நன்றி நன்றி நன்றி நன்றி

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Sun Jul 01, 2012 1:36 pm

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றியோருக்கும் எனது பாராட்டுகள்...
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 02, 2012 3:59 pm

வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Jul 03, 2012 12:56 pm

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி  முடிவு Empty Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum