தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மண் குதிரை

4 posters

Go down

மண் குதிரை Empty மண் குதிரை

Post by ramkumark5 Wed Jun 06, 2012 10:27 pm

மண் குதிரை


[You must be registered and logged in to see this image.]

பெரியன்ன கருப்பசாமி கோவில் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள மந்தையில் இருக்கும் மண்குதிரை தான். கோவிலுக்கும் எனக்குமான உறவு சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கோவிலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் பல மாறுதலுக்கு உட்பட்டாலும் மண்குதிரை மட்டும் தான் நான் சிறு வயதில் பார்த்ததை போலவே இப்போதும் கம்பீரமாய் தோற்றமளித்து கொண்டிருக்கிறது. ஊரில் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான ஒரு இடம் என்றால் கருப்பசாமி கோவில் மந்தை தான் என்று கூற வேண்டும்.

எறி பந்து, கபடி, கிட்டி(கில்லி), கோ கோ, குண்டு உருட்டல், பம்பரம் சுத்துறது என்று பல விதமான விளையாட்டுகளும் அரங்கேறும். ஜாதி பாகுபாடின்றி ஊரின் அத்தனை சிறுவர்களும் ஒன்றாய் கூடி விளையாடும் இடம் என்றால் அது மந்தை மைதானம் தான். வயதிற்கு ஏற்றார் போல இரண்டு, மூன்று குழுக்களாய் விளையாடுவோம்.

சுமார் 17,18 வருடங்களுக்கு முன் ஒரு நாள் அன்று விடுமுறை என்பதால் காலையிலேயே மந்தையை அடைந்து இருந்தேன். அன்றும் மந்தை மிகவும் கலகலப்பாகவே இருந்தது. காலையிலேயே கபடி போட்டி தொடங்கி இருந்தது. பொதுவாக கபடி போட்டியில் சிறுவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நானும், லோகநாதனும் கபடி போட்டியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எனது வேடிக்கை அப்படியே மண் குதிரையின் பக்கம் திரும்பியது.

ஊரில் கோவிலின் மீதும் மண் குதிரையின் மீதும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அமாவாசை தினத்தில் கருப்பசாமி இந்த குதிரையில் ஊரையே வலம் வருவார் என்பதும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என்பது தான் அந்த நம்பிக்கை. பல வருடங்களாகவே இன்றளவிலும் இந்த நம்பிக்கை ஊரில் இருந்து வருகிறது.

அப்போது லோகநாதனின் அண்ணன் யோகநாதனும் மந்தைக்குள் நுழைந்தான். எங்களை விட இரு வயதே மூத்தவன் என்பதால் அவனுக்கும் கபடி போட்டியில் இடம் மறுக்கப்பட்டது. இப்போது மூன்று பேர் சும்மா இருக்கிறோம் என்பதால் ஒரு யோசனை தோன்றியது. மூவரும் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி லோகநாதன் சென்று மந்தையில் இருக்கும் கலையரங்க தூணினை நோக்கி ஒன்று, இரண்டு என என்ன ஆரம்பித்தான். யோகநாதன் கோவிலுக்குள் ஓடி ஒளிந்து விட்டான். சிறிது யோசித்தவனாய் நான் மண் குதிரையின் புற பக்கம் சென்று ஒளிந்து கொண்டேன்.

லோகநாதன் தன் தேடல் படலத்தை ஆரம்பித்தான். கோவிலின் ஒவ்வொரு பகுதியாக தேடினான். முதலில் யோகநாதனை கண்டுவிட்டான். எப்படியாவது அவனிடம் மாட்டக் கூடாது என்ற எண்ணத்தில் மண் குதிரையின் பின் பக்கம் சென்றேன். அப்போது தெரியாமல் நான் குதிரையின் வாலில் இடித்து விட்டேன். வலியுடன் திரும்பி பார்த்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. நான் இடித்ததில் குதிரை வாலின் முனை இரண்டு அங்குலம் அளவிற்கு உடைந்து விட்டது.

பயத்தில் நான் வாலின் உடைந்த சிறு பகுதியை எடுத்து தூரமாய் தூக்கி எறிந்து விட்டேன். பயத்தில் என்ன செய்வதென்று அறியாத நான் மந்தையில் இருந்து ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

வீட்டுக்குள் நுழையவும் ஆத்தா என்னிடம் வந்து “என்னடா ராசா அதுக்குள்ள வந்துட்ட. மந்தையில பயலுக யாரும் இல்லையா” என கேட்டது. “இல்லை ஆத்தா எல்லாம் பெரிய பசங்களா இருக்காங்க. என்னை ஆட்டத்துக்கு சேத்துகிற மாட்டேன்கிறாங்க. அது சரி அடுத்து என்னிக்கி அமாவாசை வரும்” என்று கேட்டேன்.

“இன்னிக்கு தான் ராசா அமாவாசை. அடுத்து ஒரு மாசம் கழிச்சு வரும். இன்னிக்கு பொழுது இறங்கின அப்புறம் வெளிய எங்கேயும் போகாத ராசா. கருப்பன் குதிரையில தீர்ப்பு கொடுக்க வருவாரு” என ஆத்தா கூறியது.

எனக்கு உடல் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. நேராக சென்று பாயை எடுத்து விரித்து படுத்து கொண்டேன். ஆத்தா நேராக வந்து என் கழுத்தையும், நெஞ்சையும் தொட்டு பார்த்துவிட்டு “அடி ஆத்தி புள்ளைக்கு இப்பிடி காய்ச்சல் அடிக்குதே” என்று புலம்பியது. அந்த நேரம் அங்கு வந்த என் அப்பத்தா “புள்ளை எதையாச்சும் பாத்து பயந்திருக்கும் போல. இளங்கி பூசாரிகிட்ட கூட்டிட்டு போய் திருநீறு வாங்கி கொடு என்று சொல்லிவிட்டு சென்றது. பூசாரியிடம் சென்று திருநீறு வாங்கி வந்த பிறகும் காய்ச்சல் குறைவதாய் இல்லை. இரவு கருப்பசாமி வந்து என்னை தண்டிப்பார் என்று பயம் என் மனதை ஆழ்த்தியது.

அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. ஆறு முறை எழுந்து அடுப்படிக்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தேன். தண்ணீர் 6 முறை என்றால் அதை பயத்தில் பதினைந்து முறையாவது வெளியேற்றம் செய்திருந்தேன். அதையும் மீறி நள்ளிரவு இரண்டு மணி அளவில் சற்று கண் அசர்ந்தேன். கருப்பன் அருவாளுடன் வந்து என்னை வெட்டும் கனவுகள் நிரம்பியதாய் இருந்தது அந்த தூக்கம். மறுநாள் காலை விடிந்த பின் தான் எனக்கு காய்ச்சல் சற்று குறைந்திருந்தது.

வாழ்க்கையின் தேடலுக்காக இன்று வெளி மாநிலத்தில் வந்து குடியேறி விட்டாலும், ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று மண் குதிரையும் அதன் உடைந்த வாலையும் சிறிது நேரம் நின்று ஆழ்ந்து நோக்கிய பின்னே வீட்டிற்கு திரும்புவேன். இன்றளவிலும் கூட அமாவாசை நாட்கள் என்றால் மனதில் சிறிதளவும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். இருக்காதா பின்னே!!!
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by RAJABTHEEN Wed Jun 06, 2012 11:32 pm

படிப்பினைதரும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழரே தொரருங்கள் உங்கள் பயணத்தை
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 07, 2012 7:48 am

நல்ல கதை. நண்பரே எனக்கு ஒரு சந்தேகம். நான் சேலம், ஈரோடு பக்கம் பயணிக்கும்போது இப்படித்தான் பெரிய பெரிய குதிரைகள் காணப்படுகின்றன ஏதாவது காரணம் இருக்கிறதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 07, 2012 11:46 am

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி சகோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by ramkumark5 Fri Jun 08, 2012 12:02 am

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல கதை. நண்பரே எனக்கு ஒரு சந்தேகம். நான் சேலம், ஈரோடு பக்கம் பயணிக்கும்போது இப்படித்தான் பெரிய பெரிய குதிரைகள் காணப்படுகின்றன ஏதாவது காரணம் இருக்கிறதா?

பொதுவாக இது போன்ற மண் குதிரைகள் காவல் தெய்வங்களான கருப்பன், அய்யனார், வீரண்ணன் ஆகியோரின் கோவில்களிலேயே பார்க்க முடியும். முன் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த காவல் வீரர்களே இந்த கருப்பன், அய்யனார் போன்றோர்கள். இவர்களின் வீரத்தை பறை சாற்றவே இது போன்ற கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது போன்ற கோவில்கள் ஊரின் எல்லையிலேயே அமைந்து இருக்கும். முன் காலத்தில், நாம் கிராமங்களை காக்க காவல் வீரர்கள் குதிரையில் வலம் வருவது வழக்கம். சிறு கிராமங்கள், குதிரை வாங்க பணம் இல்லாததால் ஊர் எல்லையில் குதிரை சிலைகளை வைத்தனர். இரவில் தூரத்தில் நிற்கும் மண் குதிரைகளை பார்த்து விட்டு, குதிரை நிற்கிறது காவலன் அருகில் தான் இருப்பான் என்ற பயத்தில் திருடர்கள் ஊருக்குள் வராமல் பயந்து ஓடிய வரலாறுகள் கூட உண்டு.

பிற்காலத்தில் இவை ஊரின் கௌரவ சின்னங்கள் ஆகின. ஒவ்வொரு ஊரும் பெரிய பெரிய மண் குதிரைகளை ஊரில் வைக்க ஆரம்பித்தன. இப்போது இவை நம் தமிழர்களின் கலாச்சார சின்னங்களாக நிற்கின்றன. இவை அனைத்தும் நான் செவி வழியாக கேள்விபட்டதே.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 08, 2012 8:56 am

ரொம்ப மகிழ்ச்சி நண்பா.

விரிவான தகவல்.

நம் வீரம் வெளிப்பட்டு நிற்கட்டும். மண் குதிரைகள் வாழட்டும்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum