தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

2 posters

Go down

கவன ஈர்ப்பு  * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Thu Jun 24, 2010 12:15 pm


* நூல் ஆசிரியர் : புதகை மு. தருமராசன்

“புதுகை தென்றல்” என்ற பல்சுவை மாத இதழின் ஆசிரியர் புதகை மு. தருமராசன் நூல் ஆசிரியர் புதுகைத்

தென்றல் இதழில் எழுதி வந்த தலையங்கக் கட்டுரைகள் 63-ஐ நூலாக்கி “கவன ஈர்ப்பு” என்று பெயரிட்டு இருக்கிறார்கள். வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் நூலாகா உள்ளது.
புதுகைத் தென்றல் இதழின் வாசகனாகிய நான் மாதா மாதம் படித்து வியந்து பாராட்டிய தலையங்கத்தை ஒட்டுமொத்த நூலாகப் பார்க்கும் போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நூலாசிரியரின் எழுத்து நடையை பாராட்டியே தீர வேண்டும். நூலிற்கு
அணிந்துரை திறனாய்வுத் தென்றல் தி.க.சி அவர்களின் மொழியில் இதோ.

“சுருங்கக்கூறின் இந்நூலில் உள்ள தலையங்கக் கட்டுரைகள் அனைத்திலும் உயரிய
நாட்டுப்பற்று, மொழிப்பற்று கல்வி கலாச்சாரப் பற்று” ஆகியவை ஒளி வீசுகின்றன.

கல்வெட்டு வார்த்தைகள் நூலின் சிறப்பை ரத்தினச் சுருக்கமாக விளக்கிடும் வைர
வரிகள்.

காலத்தை சுட்டிக் காட்டுவது இலக்கியம் என்பார்கள். இன்னும் 100 ஆண்டுகள்
கழித்து இந்த நூலைப் படித்தால் 100 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் என்ன நடந்தது.
அதற்கு இதழ் ஆசிரியர் எதைப் பாராட்டினார். எதைக் கண்டித்தார். என்பதை எதிர்கால
சமுதாயமும் அறிந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்ட வரலாற்று ஆவணம் இந்த நூல்

அக்டோபர் 2003 தொடங்கி டிசம்பர் 2008 வரை புதுகைத் தென்றல் இதழ்களை
பத்திரப்படுத்தி வைத்தமைக்கே நூல் ஆசிரியரைப் பாராட்ட வேண்டும். முனைவர்
இரா.மோகன் அவர்கள் கலந்து கொள்ளும் விழாக்களை எல்லாம் ஆவணப்படுத்தி வருவார்கள்.
நாளை கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எத்தனாவது நிகழ்ச்சி என்று அறுதியிட்டுக்
கூறுவார்கள். அதுபோல புதுகைத்தென்றல் இதழ்களை ஆவணப்படுத்தி பழத்திலிருந்து சாறு
எடுப்பதைப் போல தலையங்கக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து நூலாக்கியது
மிகச்சிறப்பு. “உலகப் பொதுமறையாம் திருக்குறளில் பாடாத பொருளே இல்லை”
என்பார்கள். அதுபோல கவன ஈர்ப்பு நூலில் “சொல்லாத பொருளே இல்லை” என்று
சொல்லுமளவிற்கு அனைத்தையும் தொட்டு இருக்கிறார் நூல் ஆசிரியர்.

முதல் கட்டுரையே முத்தாய்ப்பாக தொடங்குகின்றது. தமிழர்களுக்கு மானமும் அறிவும்
தந்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் பாராட்டைப் பெற்ற பகுத்தறிவுக்கவிஞர்
புரட்சித் கவிஞர் பாரதிதாசனின் வைரவரிகளோடு தொடங்குகின்றது. “நம்பிக்கையுடன்
நடவு செய்கிறோம்” என்ற கட்டுரை தலைப்பே சிறப்பாக உள்ளது.விவசாயி நம்பிக்கையுடன்
தான் நடவு செய்ய வேண்டும். இது விளையுமா? என்ற அவநம்பிக்கை இருந்தால் நடவு
செய்ய முடியாது. ஆது போல இந்நூலின் தலைப்புக்களை தேர்ந்தெடுத்து எழுதியதற்கே
பாராட்ட வேண்டும். இந்தக் கட்டுரையின் இதழியல் நோக்கத்தைச் சொல்லி நடவு
செய்யவில்லை. வாசகர்களின் உள்ளத்தி;ல் பதியம் செய்கிறார். அக்டோபர் 2003
தலையங்கத்தில் குறிப்பிட்டப்படி இன்று வரை கொண்ட கொள்கையில் சமரசம் செய்து
கொள்ளாமல் நடிகைகளின் ஆபாசப் படங்கள் எதுவுமின்றி சினிமா செய்திகள் இன்றி,
அரசியல் சார்பு இன்றி குடும்பத்துடன் அமர்ந்து படிக்கும் அற்புத இதழாக புதுகைத்
தென்றல் இதழை நடத்தி வருவது” எழுதியபடி வாழ்கிறார். வாழ்கிறபடி எழுதுகிறார்
என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மகாகவியின் வைரவரிகளுக்கு செயல் வடிவம்
தந்தவர் புதகை மு.தருமராசன்.

புகழ்பெற்ற பிரபல இதழ்கள் கூட போட்டி போட இயலாமல் தரத்தை தாழ்த்திக் கொண்டு
சமரசம் கொண்டு ஆபாசங்களை அள்ளி விதைக்கும் காலம் இது. கொண்ட கொள்கையில்
சிறிதும் விலகாமல் இயங்கி வரும் இணையற்ற எழுத்தாளர் என்பதை நிரூபிக்கும் நூல்
இது.

இதழ் ஆசிரியர் பணியினை செவ்வன செய்து உள்ளார்கள். பாராட்ட வேண்டியதை
பாராட்டுகின்றார். குறைகளைச் சுட்டிக் காட்டவும் தயங்குவது இல்லை. புதகை மு.
தருமராசன் என்று பிறந்த ஊரை தனது பெயரோடு இணைத்துக் கொண்ட பிறந்தமண் பற்றாளர்.
நூல் ஆசிரியர் புதகை நாடாளுமன்ற தொகுதி பறிக்கப்பட்டதைக் கொண்டு மகாகவி பாரதி
பாடுவானே “நெஞ்சு பொறுக்குதில்லையே” என கொதித்து எழுந்து கட்டுரை வடிக்கிறார்.

இப்படி நூல் முழுவதும் கட்டுரைகள் சிந்தனை விதை விதைக்கின்றன. வாசகர்களுக்கு
நாட்டு நடப்பு பற்றிய பட்டறிவை வளர்க்கின்றன. ஐயுளு படிக்க விரும்பும்
மாணவர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல். இந்த நூல் படித்தால்
பொது அறிவு வளரும். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகள் பெறலாம்.
இந்நூலை கல்லூரிகளில் இதழியல் பிரிவில் பாடநூலாக வைக்கும் தகுதி உள்ளது
எல்லோரும்; வாங்கிப் படியுங்கள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

கவன ஈர்ப்பு  * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty Re: கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

Post by eeranila Tue Jul 06, 2010 4:24 pm

எழுத்துக்கள் கால நிகழ்வுகளைக் காட்டும் கண்ணாடி, அத்தகைய எழுத்துக்கள் வாயிலாக உணரப்படும் கருத்துக்களின் மூலமாக அறியப்படும் விஷயங்களின் தூய்மை எழுத்தாளரின் வாய்மைத் தரத்தினைக் கொண்டும் தங்களை போன்றவர்களின் அரிய பணியான நூலகளின் மதிப்புரையினை கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது அரியதோர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

கவன ஈர்ப்பு  * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty வணக்கம் மிக்க நன்றி அன்புடன் இரா .இரவி

Post by eraeravi Tue Jul 06, 2010 5:49 pm

வணக்கம் மிக்க நன்றி
அன்புடன் இரா .இரவி :P
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

கவன ஈர்ப்பு  * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty Re: கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum