தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தமிழ் தெலுங்கு பழமொழிகள் ஒப்பாய்வு - மா. இரவி
2 posters
Page 1 of 1
தமிழ் தெலுங்கு பழமொழிகள் ஒப்பாய்வு - மா. இரவி
பழமொழி நானூறு (தமிழ்) தெலுகு சாமெதலு (தெலுங்கு) இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் உண்மைகள் – ஓர் ஒப்பாய்வு
(Reflection of Human life in proverbs of Pazhamozhi Naanooru (Tamil) and Telugu Samethalu (Telugu) – A comparative study)
முகவுரை
உயிரியல், உளவியல், மொழியியல் என்னும் துறைகள் மனிதனின் உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றின் பொதுத்தன்மைகளைக் கண்டு அறிவியல் அடிப்படையில் நிறுவின. இதனைத் தொடர்ந்து மொழி என்பது மானுடப் படைப்பாயின், மொழியினால் இயற்றப்படும் இலக்கியமும் மானுடப் படைப்பே. அதாவது மனிதன் மட்டுமே இலக்கியத்தைப் படைக்க இயலும். எனவே உடலாலும், உள்ளத்தாலும், மொழியாலும் அடிப்படையில் ஒற்றுமையுடைய மனிதன் படைக்கும் இலக்கியமும் அடிப்படைப் பண்புகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்னும் கருதுகோளை இலக்கிய ஆய்வாளர்கள் முன்னிறுத்தி உலக இலக்கியங்களை ஒப்பிட்டு அறிவியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். இது அவ்விலக்கிய ஆய்வின் தொடக்கம் என்று கூறலாம்.
தமிழ் மொழியின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு கூறான பழமொழியின் இலக்கணத்தை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுமுடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதவிய முதுமொழி யென்ப. (தொல். பொருள், செய். நூ. எ. 479)
இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவுமென்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக் கருதின பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று விளக்கம் தருகின்றார்.
ஒப்பாய்வு என்றால் என்ன?
ஒன்றை அதனோடுதொடர்புடைய மற்றொன்றனோடு ஒப்பிட்டு அறிவதும் ஒப்பீடு எனப்படுகிறது. அதுபோல் இலக்கிய உலகில் ஓரினத் தொடர்புடைய இலக்கியங்களை மரபு, வடிவம், கருத்து, உத்தி ஆகிய கூறுகளின் அடிப்படையில் ஒத்து நோக்கி அவற்றின் தன்மைகளை எடுத்துரைப்பது ஒப்பியலாய்வு அல்லது ஒப்பாய்வு எனப்படுகிறது. – ச.வே. சுப்பிரமணியன்.
ஒப்பியலாய்வின் தேவை
ஒப்பியல் மாணவர்களுக்கு இலக்கியம் ஒரு சோதனைக்கூடம். சோதனைக் கூடத்தில் எப்படி பொருள்களைத் துல்லியமாக விதிகளின்படி நினைந்து ஆராய்ந்து அதன் பண்புகளை நிறுவுகின்றாரோ அதுபோல இலக்கியப் பண்புகளை அறிவியல் வழி ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும். - எச். எச். ரிமேக்.
ஒப்பாய்வில் இலக்கியம்
ஒப்பியல் இலக்கியம் என்னும் தொடர் இலக்கியங்களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆயும் ஆய்வுத்துறை என்று பொருள்தருவதாக உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒரு மொழி இலக்கியங்களை ஒப்பீடு செய்வது ஒருமொழி ஒப்பீடு என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட பலமொழி இலக்கியங்களை ஒப்பாய்வது பன்மொழி ஒப்பீடு என்றும் உணரப்பட்டு வருகின்றது.
ஒப்பாய்வு - அறிஞர் கருத்துகள்
பல்வேறு இலக்கியங்களை இணைக்கும் உயிருள்ள உறவுநிலைகளைப் பற்றிய ஆய்வு ஒப்பாய்வு – தமிழண்ணல்.
உலகில் என்று மனிதன் எண்ணத் தொடங்கினானோ அன்றே ஒப்பிட்டுநோக்கும்முறையும் உடன் தோன்றியது எனலாம். ஒற்றுமைகளை ஒத்துக்காண்பதும், வேற்றுமைகளை பிரித்தறிவதும் அவன்தன் இயற்கையாயிற்று. –கதிர். மகாதேவன்.
ஒரு புலவன் தன்னுள் ஒப்பு, புலவர்தம்முள் ஒப்பு, ஓர் இலக்கியந்தன்னுள் ஒப்பு, இலக்கியங்கள் தம்முள் ஒப்பு, ஒரு மொழி தன்னுள் ஒப்பு, பலமொழி தம்முள் ஒப்பு, காலங்கள் தன்னுள் ஒப்பு என ஆய்வு பலவாக வந்திருக்கின்றன. – வ.சுப. மாணிக்கம்.
பழமொழி விளக்கம்
பொதுவழக்கில் உள்ள உண்மை, அறிவுரையிலான குறுஞ்சொல் – ஆக்ஸ்ஃபோர்டு கலைக்களஞ்சியம்.
காலத்தால் தனிச்சிறப்புப் பெற்றது, சாதாரண பொது அறிவால் முதிர்ந்த வாக்கியம் எதுகை மோனையால் சிறந்த பண்பட்ட குறுகிய வாக்கியம். நாடுகளைக் கடந்து உலகளாவியதாகப் பரவித் திகழ்ந்திடும் சிறப்புடையது. மக்கள் மனதில் நின்று நிலவி நிலைக்கும் கூற்று. புதிய காக்ஸ்டன் கலைக்களஞ்சியம்.
நீண்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைகிற குறுகிய வாக்கியமே பழமொழியாகும்.
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டைப் பிரதிபலித்துக்காட்டும் காலக்கண்ணாடி, வாழ்வியலைச் சித்திரித்துக்காட்டும் எழுத்தோவியம். கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஒலிச்சித்திரம்.
‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்ற பழமொழிக்கேற்ப வடிவில் சிறியதாய் இருப்பினும் கருத்தில், பயன்பாட்டில் பெரிதாய் விளங்குவதே பழமொழியாகும்.
ஒரு நாட்டில் பயன்படுத்தும் பழமொழிகள் அந்நாட்டின் வாழ்க்கை முறையையும், மற்ற நாட்டினைவிட அந்நாட்டின் ஒற்றுமை வேற்றுமையைப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
பழமொழி - அறிஞர் கருத்து
ஒரு நாட்டின் அறிவுத்திறனின் விவேகத்தையும், உயிர்ப்பையும் பழமொழிகளின் மூலம் கண்டுபிடிக்கலாம் - பிரான்சிஸ் பேகன்.
பழமொழி - தொன்மை
உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. சுமேரியன் சட்டத்திலும் உரைகளிலும், சூத்திரங்களிலும் பழமொழிகள் சொல்லப்பட்டுள்ளன. பழைய சீனாவில் நீதிபோதனைக்கும், இந்தியாவில் தத்துவ உரைகளுக்கும் வேதங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பைபிளில் பழைய ஏற்பாட்டில் பழமொழிகளின் நூல் (Book of Proverbs) நீதிமொழிகள் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.
பழைய எகிப்தியருக்கும், சீரியர்களுக்கும், மொசபடோமியர்களுக்கும் அறிவு இலக்கியமாக பழமொழிகள் விளங்கியது. இந்த அறிவு இலக்கியம் இளைஞர்களுக்கு பொறுப்புகளை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.
பழமொழியினால் நன்மைகள்
பழமொழிகள் நமது சிந்தனையின் தூண்டுகோல்கள். வாழ்வின் ஊன்றுகோல்கள்.
சில பழமொழிகள் அச்சமூட்டி எச்சரிக்கின்றன.
புத்திமதிகள் கூறப்படுகின்றன.
சில பழமொழிகள் மக்களை நையாண்டி செய்து திருத்துகின்றன.
சிரிக்கவைத்து சிந்தனையூட்டுகின்றன.
வரலாற்றுக் கருத்துகளை அறிய துணைபுரிகின்றன.
பொருளாதாரத்தைப் பற்றி படம் பிடித்துக்காட்டுகின்றன.
சாதிகளைக் குறித்து அறியக் கருத்துகளை விளக்குகின்றன.
சில நாட்டின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இவை சிறந்த மொழிச்செல்வமாகும். பண்பட்ட இலக்கியச் செல்வமாகும். பயன்மிக்க அறிவியல் செல்வமாகும்.
எழுதப்படாத சட்டங்களாகப் பயன்படுகின்றன.
மதச் சடங்குகளுக்கும் வழிபாடுகளுக்கும் பழமொழி பயன்படுவதுண்டு.
ஆய்வு மூலம் – தமிழ்
நூல் - பழமொழி நானூறு
ஆசிரியர்: முன்றுரை அரையனார்
காலம்: கி.பி. 5-ஆம் நூற்றாண்டு
ஆய்வு மூலம் – தெலுங்கு
நூல்: தெலுகுலோ சாமெதலு – ஜன ஜீவனம்
ஆசிரியர்: நரசிம்மா ரெட்டி
காலம்: 15-ஆம் நூற்றாண்டு காலம் முதல் பழமொழிகள்
பழமொழி நானூறு- தெலுகுலோ சாமெதலு ஒப்பாய்வு - நோக்கம்
இந்நூலின்கண் அறியப்படும் முப்பத்துநான்கு தலைப்புகளில் - அதாவது, கல்வி முதலாக அறம்செய்தல் ஈறாக இடம்பெற்றுள்ள நானூறு செய்யுட்களில் அறியப்படும் பழமொழிகளோடு, தெலுங்கு மொழி நூலான தெலுகுலோ சாமெதலு-வில் அறியப்படும் பழமொழிகளோடு ஒப்பாய்வு செய்து, இவ்விருமொழியின் ஒற்றுமைப்பண்புகளை அறிவதும், பழமொழி நானூறில் கூறப்பட்டுள்ள பழமொழிகளுக்கு ஒப்பான தெலுங்கு பழமொழிகளைத் தேர்வு செய்து தமிழ்த் தெலுங்கு மொழி இலக்கியங்களுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவரும் தொடர்புகளைக் கண்டறிவது மேலும் இவ்விலக்கியங்களின் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் உண்மைகளைப் புலப்படுத்தும் பழமொழிகளை இனங் காண்பது ஆகியன இவ்வாய்வின் முக்கிய நோக்கங்களாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் தெலுங்கு பழமொழிகள்
விஜயநகர ஆட்சிக்காலத்திலும் தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்தபோதும் தமிழகத்தில் தெலுங்கர் குடியேறினர். அதனால் தெலுங்குமொழி தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அக்காலக்கட்டத்தில் தோன்றிய பழமொழிகள் சிலவருமாறு.
மரியாதை கெட்டால் மாயவாடு
டில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிட்டா
காதுகாது என்றால் நாதிநாதி என்கிறான்
அவசரக்காரனுக்கு ஆக்குலோ பெட்டு
பேரு பெத்த பேரு தாகுடானிக்கு நீலு லேது
ஒத்தக்கருத்துடைய தமிழ் – தெலுங்கு பழமொழிகள்
• நூலப்போல சேலை தாயப்போல பிள்ளை - தமிழ்
• தல்லி சாலு பொல்லி கோடி - தெலுங்கு
• கழுதை அறியுமோ கற்பூர வாசனை – தமிழ்
• காடிதிகி தெலுசுனா கந்துபொடி வாசனா – தெலுங்கு
• அக்கரைக்கு இக்கரைப் பச்சை – தமிழ்
• அவலிகட்டு ஆவுக்கு ஈவலிகட்டு பச்சனா – தெலுங்கு
• அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் – தமிழ்
• அல்புனிக்கி அஸ்வர்யம் வஸ்தே அர்த்த ராத்திரிலோ கொடுகு பட்ட மன்டாடு
தெலுங்கு
• ஆதாயம் இல்லாத செட்டி ஆத்தில் இறங்க மாட்டான் – தமிழ்
• ஆதாயம் லேனிதே செட்டி வரதபடி போடு – தெலுங்கு
• ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு – தமிழ்
• ஆத்தர கானிக்கி புத்தி மட்டு - தெலுங்கு
(Reflection of Human life in proverbs of Pazhamozhi Naanooru (Tamil) and Telugu Samethalu (Telugu) – A comparative study)
முகவுரை
உயிரியல், உளவியல், மொழியியல் என்னும் துறைகள் மனிதனின் உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றின் பொதுத்தன்மைகளைக் கண்டு அறிவியல் அடிப்படையில் நிறுவின. இதனைத் தொடர்ந்து மொழி என்பது மானுடப் படைப்பாயின், மொழியினால் இயற்றப்படும் இலக்கியமும் மானுடப் படைப்பே. அதாவது மனிதன் மட்டுமே இலக்கியத்தைப் படைக்க இயலும். எனவே உடலாலும், உள்ளத்தாலும், மொழியாலும் அடிப்படையில் ஒற்றுமையுடைய மனிதன் படைக்கும் இலக்கியமும் அடிப்படைப் பண்புகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்னும் கருதுகோளை இலக்கிய ஆய்வாளர்கள் முன்னிறுத்தி உலக இலக்கியங்களை ஒப்பிட்டு அறிவியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். இது அவ்விலக்கிய ஆய்வின் தொடக்கம் என்று கூறலாம்.
தமிழ் மொழியின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு கூறான பழமொழியின் இலக்கணத்தை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுமுடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதவிய முதுமொழி யென்ப. (தொல். பொருள், செய். நூ. எ. 479)
இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவுமென்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக் கருதின பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று விளக்கம் தருகின்றார்.
ஒப்பாய்வு என்றால் என்ன?
ஒன்றை அதனோடுதொடர்புடைய மற்றொன்றனோடு ஒப்பிட்டு அறிவதும் ஒப்பீடு எனப்படுகிறது. அதுபோல் இலக்கிய உலகில் ஓரினத் தொடர்புடைய இலக்கியங்களை மரபு, வடிவம், கருத்து, உத்தி ஆகிய கூறுகளின் அடிப்படையில் ஒத்து நோக்கி அவற்றின் தன்மைகளை எடுத்துரைப்பது ஒப்பியலாய்வு அல்லது ஒப்பாய்வு எனப்படுகிறது. – ச.வே. சுப்பிரமணியன்.
ஒப்பியலாய்வின் தேவை
ஒப்பியல் மாணவர்களுக்கு இலக்கியம் ஒரு சோதனைக்கூடம். சோதனைக் கூடத்தில் எப்படி பொருள்களைத் துல்லியமாக விதிகளின்படி நினைந்து ஆராய்ந்து அதன் பண்புகளை நிறுவுகின்றாரோ அதுபோல இலக்கியப் பண்புகளை அறிவியல் வழி ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும். - எச். எச். ரிமேக்.
ஒப்பாய்வில் இலக்கியம்
ஒப்பியல் இலக்கியம் என்னும் தொடர் இலக்கியங்களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆயும் ஆய்வுத்துறை என்று பொருள்தருவதாக உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒரு மொழி இலக்கியங்களை ஒப்பீடு செய்வது ஒருமொழி ஒப்பீடு என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட பலமொழி இலக்கியங்களை ஒப்பாய்வது பன்மொழி ஒப்பீடு என்றும் உணரப்பட்டு வருகின்றது.
ஒப்பாய்வு - அறிஞர் கருத்துகள்
பல்வேறு இலக்கியங்களை இணைக்கும் உயிருள்ள உறவுநிலைகளைப் பற்றிய ஆய்வு ஒப்பாய்வு – தமிழண்ணல்.
உலகில் என்று மனிதன் எண்ணத் தொடங்கினானோ அன்றே ஒப்பிட்டுநோக்கும்முறையும் உடன் தோன்றியது எனலாம். ஒற்றுமைகளை ஒத்துக்காண்பதும், வேற்றுமைகளை பிரித்தறிவதும் அவன்தன் இயற்கையாயிற்று. –கதிர். மகாதேவன்.
ஒரு புலவன் தன்னுள் ஒப்பு, புலவர்தம்முள் ஒப்பு, ஓர் இலக்கியந்தன்னுள் ஒப்பு, இலக்கியங்கள் தம்முள் ஒப்பு, ஒரு மொழி தன்னுள் ஒப்பு, பலமொழி தம்முள் ஒப்பு, காலங்கள் தன்னுள் ஒப்பு என ஆய்வு பலவாக வந்திருக்கின்றன. – வ.சுப. மாணிக்கம்.
பழமொழி விளக்கம்
பொதுவழக்கில் உள்ள உண்மை, அறிவுரையிலான குறுஞ்சொல் – ஆக்ஸ்ஃபோர்டு கலைக்களஞ்சியம்.
காலத்தால் தனிச்சிறப்புப் பெற்றது, சாதாரண பொது அறிவால் முதிர்ந்த வாக்கியம் எதுகை மோனையால் சிறந்த பண்பட்ட குறுகிய வாக்கியம். நாடுகளைக் கடந்து உலகளாவியதாகப் பரவித் திகழ்ந்திடும் சிறப்புடையது. மக்கள் மனதில் நின்று நிலவி நிலைக்கும் கூற்று. புதிய காக்ஸ்டன் கலைக்களஞ்சியம்.
நீண்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைகிற குறுகிய வாக்கியமே பழமொழியாகும்.
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டைப் பிரதிபலித்துக்காட்டும் காலக்கண்ணாடி, வாழ்வியலைச் சித்திரித்துக்காட்டும் எழுத்தோவியம். கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஒலிச்சித்திரம்.
‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்ற பழமொழிக்கேற்ப வடிவில் சிறியதாய் இருப்பினும் கருத்தில், பயன்பாட்டில் பெரிதாய் விளங்குவதே பழமொழியாகும்.
ஒரு நாட்டில் பயன்படுத்தும் பழமொழிகள் அந்நாட்டின் வாழ்க்கை முறையையும், மற்ற நாட்டினைவிட அந்நாட்டின் ஒற்றுமை வேற்றுமையைப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
பழமொழி - அறிஞர் கருத்து
ஒரு நாட்டின் அறிவுத்திறனின் விவேகத்தையும், உயிர்ப்பையும் பழமொழிகளின் மூலம் கண்டுபிடிக்கலாம் - பிரான்சிஸ் பேகன்.
பழமொழி - தொன்மை
உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. சுமேரியன் சட்டத்திலும் உரைகளிலும், சூத்திரங்களிலும் பழமொழிகள் சொல்லப்பட்டுள்ளன. பழைய சீனாவில் நீதிபோதனைக்கும், இந்தியாவில் தத்துவ உரைகளுக்கும் வேதங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பைபிளில் பழைய ஏற்பாட்டில் பழமொழிகளின் நூல் (Book of Proverbs) நீதிமொழிகள் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.
பழைய எகிப்தியருக்கும், சீரியர்களுக்கும், மொசபடோமியர்களுக்கும் அறிவு இலக்கியமாக பழமொழிகள் விளங்கியது. இந்த அறிவு இலக்கியம் இளைஞர்களுக்கு பொறுப்புகளை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.
பழமொழியினால் நன்மைகள்
பழமொழிகள் நமது சிந்தனையின் தூண்டுகோல்கள். வாழ்வின் ஊன்றுகோல்கள்.
சில பழமொழிகள் அச்சமூட்டி எச்சரிக்கின்றன.
புத்திமதிகள் கூறப்படுகின்றன.
சில பழமொழிகள் மக்களை நையாண்டி செய்து திருத்துகின்றன.
சிரிக்கவைத்து சிந்தனையூட்டுகின்றன.
வரலாற்றுக் கருத்துகளை அறிய துணைபுரிகின்றன.
பொருளாதாரத்தைப் பற்றி படம் பிடித்துக்காட்டுகின்றன.
சாதிகளைக் குறித்து அறியக் கருத்துகளை விளக்குகின்றன.
சில நாட்டின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இவை சிறந்த மொழிச்செல்வமாகும். பண்பட்ட இலக்கியச் செல்வமாகும். பயன்மிக்க அறிவியல் செல்வமாகும்.
எழுதப்படாத சட்டங்களாகப் பயன்படுகின்றன.
மதச் சடங்குகளுக்கும் வழிபாடுகளுக்கும் பழமொழி பயன்படுவதுண்டு.
ஆய்வு மூலம் – தமிழ்
நூல் - பழமொழி நானூறு
ஆசிரியர்: முன்றுரை அரையனார்
காலம்: கி.பி. 5-ஆம் நூற்றாண்டு
ஆய்வு மூலம் – தெலுங்கு
நூல்: தெலுகுலோ சாமெதலு – ஜன ஜீவனம்
ஆசிரியர்: நரசிம்மா ரெட்டி
காலம்: 15-ஆம் நூற்றாண்டு காலம் முதல் பழமொழிகள்
பழமொழி நானூறு- தெலுகுலோ சாமெதலு ஒப்பாய்வு - நோக்கம்
இந்நூலின்கண் அறியப்படும் முப்பத்துநான்கு தலைப்புகளில் - அதாவது, கல்வி முதலாக அறம்செய்தல் ஈறாக இடம்பெற்றுள்ள நானூறு செய்யுட்களில் அறியப்படும் பழமொழிகளோடு, தெலுங்கு மொழி நூலான தெலுகுலோ சாமெதலு-வில் அறியப்படும் பழமொழிகளோடு ஒப்பாய்வு செய்து, இவ்விருமொழியின் ஒற்றுமைப்பண்புகளை அறிவதும், பழமொழி நானூறில் கூறப்பட்டுள்ள பழமொழிகளுக்கு ஒப்பான தெலுங்கு பழமொழிகளைத் தேர்வு செய்து தமிழ்த் தெலுங்கு மொழி இலக்கியங்களுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவரும் தொடர்புகளைக் கண்டறிவது மேலும் இவ்விலக்கியங்களின் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் உண்மைகளைப் புலப்படுத்தும் பழமொழிகளை இனங் காண்பது ஆகியன இவ்வாய்வின் முக்கிய நோக்கங்களாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் தெலுங்கு பழமொழிகள்
விஜயநகர ஆட்சிக்காலத்திலும் தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்தபோதும் தமிழகத்தில் தெலுங்கர் குடியேறினர். அதனால் தெலுங்குமொழி தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அக்காலக்கட்டத்தில் தோன்றிய பழமொழிகள் சிலவருமாறு.
மரியாதை கெட்டால் மாயவாடு
டில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிட்டா
காதுகாது என்றால் நாதிநாதி என்கிறான்
அவசரக்காரனுக்கு ஆக்குலோ பெட்டு
பேரு பெத்த பேரு தாகுடானிக்கு நீலு லேது
ஒத்தக்கருத்துடைய தமிழ் – தெலுங்கு பழமொழிகள்
• நூலப்போல சேலை தாயப்போல பிள்ளை - தமிழ்
• தல்லி சாலு பொல்லி கோடி - தெலுங்கு
• கழுதை அறியுமோ கற்பூர வாசனை – தமிழ்
• காடிதிகி தெலுசுனா கந்துபொடி வாசனா – தெலுங்கு
• அக்கரைக்கு இக்கரைப் பச்சை – தமிழ்
• அவலிகட்டு ஆவுக்கு ஈவலிகட்டு பச்சனா – தெலுங்கு
• அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் – தமிழ்
• அல்புனிக்கி அஸ்வர்யம் வஸ்தே அர்த்த ராத்திரிலோ கொடுகு பட்ட மன்டாடு
தெலுங்கு
• ஆதாயம் இல்லாத செட்டி ஆத்தில் இறங்க மாட்டான் – தமிழ்
• ஆதாயம் லேனிதே செட்டி வரதபடி போடு – தெலுங்கு
• ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு – தமிழ்
• ஆத்தர கானிக்கி புத்தி மட்டு - தெலுங்கு
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 59
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் பழமொழிகள்
» ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் பழமொழிகள்
» ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|