தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
5 posters
Page 1 of 1
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
ஒரு படைப்பாளி நல்ல உளவியலாளனாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளியாக வந்து விட்டால்; தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஆயினும், உளவியலாளனாக இருந்தால் படைப்பின் பாத்திரங்களாக வருவோரின் உளநிலையை வெளிப்படுத்த உதவும்.
எழுதுகோல் ஏந்துவோரின் எண்ணத்தில் எப்போதுமே தனது படைப்புகள் யாவும் சிறந்தது என்ற உளப்பாங்கு இருந்து வருகிறது. அது அவர்களது உண்மைத் திறமைகளை வெளிக்கொணரத் தடையாகவுள்ளது. தான் எழுதுவதெல்லாம் சிறந்ததென எண்ணுவதால் மாற்றார் படைப்புகளைப் படித்து, மாற்றார் படைப்புகளை விடத் தனது படைப்புகளைச் சிறப்பாக ஆக்க முடியாது போகிறது.
தான் படைக்கும் படைப்புத் தான் சிறந்தது என்றும் மற்றவர்களுடையது கொஞ்சம் தரக்குறைவு என்றும் சிலர் எண்ணுகிறார்கள். அதனால், மற்றவர்களுடைய படைப்புகளைப் படித்து; மற்றவர்களுடைய எழுத்தாற்றல் நுட்பங்களை, கையாளும் குறுக்குவழிகளை, உருவாக்கும் பாத்திர அமைப்பை, கதைக் கருவை, கதை நகர்த்தும் முறையைக் (பாணியைக்) கற்றுக்கொள்ள முடியாது போகிறது. இதனால், தமது படைப்புகளின் தரம் குறைய வாய்ப்பு உண்டு.
ஒரு படைப்பாளி மற்றைய படைப்பாளி மீதான திறனாய்வை (விமர்சனத்தை) மேற்கொள்ளும் முன் மேலே நான் கூறிய மூன்று உளப்பாங்கையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய படைப்புகளைத் திறனாய்வு (விமர்சனம்) செய்யும் போது; படைப்புகளை ஆக்கியோன் மென்மேலும் சிறந்த படைப்புகளை ஆக்கத் தூண்டவும் மக்களுக்கு (சமூகத்திற்கு) நன்மை தரக்கூடியதுமான படைப்புகளை ஆக்கவும் தங்கள் திறனாய்வு (விமர்சனம்) பின்னூட்டமாக இருக்க வேண்டும். அதற்காக திறனாய்வுப் (விமர்சனப்) பக்கம் தலையைக் காட்டாமல் எந்தப் படைப்பாளியும் ஒதுங்கி இருக்க முடியாது. அதாவது, உங்களது திறனாய்வு (விமர்சன) ஆற்றல் தான் உங்களைச் சிறந்த படைப்பாளி ஆக்கிறது.
ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்ற போக்கில் சிலர் தாம் கையாளும் இலக்கிய வடிவம் தான் சிறந்தது மற்றைய இலக்கிய வடிவம் சிறந்ததல்ல என எண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாகக் கதையென்றால் பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும்; பா(கவிதை) என்றால் பத்து வரிகள் போதும்; கதையை விடக் பா(கவிதை) வாசிப்பவருக்கு வசதி என எந்தப் பாவலனும் (கவிஞனும்) எண்ணக் கூடாது. ஏனெனில், எல்லா இலக்கிய வடிவங்களும் சமவுரிமை பெற்றவை. அதாவது, தரத்தில் எல்லாம் சமனானவை. மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் துணைபுரியும் இலக்கியமே சிறந்தது. இதனால், இவ்வாறு சிறந்த இலக்கியத்தை ஆக்கியோருக்குப் பெயரும் புகழும் வந்து குவிகிறது.
சமகாலத்தில் சிலர் துளிப் பா (கைக்கூ) தான் சிறந்தது, புதுப் பா (புதுக் கவிதை) தான் சிறந்தது, இலக்கணப் பா (மரபுக் கவிதை) தான் சிறந்தது எனப் பட்டிமன்றம் அல்லது வழக்காடு மன்றம் நடாத்துவார்கள். இதற்கும் ஒரே பதில்; எல்லாப் பாக்களும் (கவிதைகளும்) சமனான தரம் வாய்ந்த இலக்கிய வடிவங்களே! களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்ட உதவும் பாக்(கவிதை)கள் மக்களை அல்லது வாசிப்பவரை எளிதாகச் சென்றடைகின்றது.
ஒரு நல்ல படைப்பாளி தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருந்தாலும் மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் தேவையான அவர்கள் பக்கத்தையும் அறிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக காதலியின் விருப்பத்தை காதலன் நிறைவேற்றுவது போல வாசகரின் விருப்பத்தைப் படைப்பாளி நிறைவேற்ற வேண்டும்.
உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண முன்வரும் படைப்பாளிகளே! உளவியல் நோக்கில் மேலே கூறிய எல்லாம் நல்லம் தான். உங்கள் படைப்புகளைத் தூய தமிழாக எழுதினால், எவரும் விரும்பமாட்டார்கள். தூய தமிழாக எழுதலாம்; தூய தமிழ் சொல்களுக்கு ஈடான புழக்கத்திலுள்ள பிறமொழிச் சொல்களை அடைப்புக்குள் இட்டு எழுதினால் எவரும் வாசிக்க இலகுவாயிருக்கும். இவ்வாறு தான் இன்றைய இலக்கியங்களில் தூய தமிழை இழையோட வைக்கமுடியும்.
எல்லோரும் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண எழுதுகோல் ஏந்த முன்வாருங்கள். ஒரு படைப்பாளி தன்னையும் வாசகரையும் படித்த பின், வாசகர் மீது தனது எதனையும் திணிக்காமல் வாசகர் விருப்பிற்கேற்ப தனது எண்ணங்களைப் பகிர முன்வரவேண்டும். அப்போது தான் இலக்கியங்களூடாக தூய தமிழைப் பேண முடியும்.
நன்றி: yarlpavanan.tk
எழுதுகோல் ஏந்துவோரின் எண்ணத்தில் எப்போதுமே தனது படைப்புகள் யாவும் சிறந்தது என்ற உளப்பாங்கு இருந்து வருகிறது. அது அவர்களது உண்மைத் திறமைகளை வெளிக்கொணரத் தடையாகவுள்ளது. தான் எழுதுவதெல்லாம் சிறந்ததென எண்ணுவதால் மாற்றார் படைப்புகளைப் படித்து, மாற்றார் படைப்புகளை விடத் தனது படைப்புகளைச் சிறப்பாக ஆக்க முடியாது போகிறது.
தான் படைக்கும் படைப்புத் தான் சிறந்தது என்றும் மற்றவர்களுடையது கொஞ்சம் தரக்குறைவு என்றும் சிலர் எண்ணுகிறார்கள். அதனால், மற்றவர்களுடைய படைப்புகளைப் படித்து; மற்றவர்களுடைய எழுத்தாற்றல் நுட்பங்களை, கையாளும் குறுக்குவழிகளை, உருவாக்கும் பாத்திர அமைப்பை, கதைக் கருவை, கதை நகர்த்தும் முறையைக் (பாணியைக்) கற்றுக்கொள்ள முடியாது போகிறது. இதனால், தமது படைப்புகளின் தரம் குறைய வாய்ப்பு உண்டு.
ஒரு படைப்பாளி மற்றைய படைப்பாளி மீதான திறனாய்வை (விமர்சனத்தை) மேற்கொள்ளும் முன் மேலே நான் கூறிய மூன்று உளப்பாங்கையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய படைப்புகளைத் திறனாய்வு (விமர்சனம்) செய்யும் போது; படைப்புகளை ஆக்கியோன் மென்மேலும் சிறந்த படைப்புகளை ஆக்கத் தூண்டவும் மக்களுக்கு (சமூகத்திற்கு) நன்மை தரக்கூடியதுமான படைப்புகளை ஆக்கவும் தங்கள் திறனாய்வு (விமர்சனம்) பின்னூட்டமாக இருக்க வேண்டும். அதற்காக திறனாய்வுப் (விமர்சனப்) பக்கம் தலையைக் காட்டாமல் எந்தப் படைப்பாளியும் ஒதுங்கி இருக்க முடியாது. அதாவது, உங்களது திறனாய்வு (விமர்சன) ஆற்றல் தான் உங்களைச் சிறந்த படைப்பாளி ஆக்கிறது.
ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்ற போக்கில் சிலர் தாம் கையாளும் இலக்கிய வடிவம் தான் சிறந்தது மற்றைய இலக்கிய வடிவம் சிறந்ததல்ல என எண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாகக் கதையென்றால் பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும்; பா(கவிதை) என்றால் பத்து வரிகள் போதும்; கதையை விடக் பா(கவிதை) வாசிப்பவருக்கு வசதி என எந்தப் பாவலனும் (கவிஞனும்) எண்ணக் கூடாது. ஏனெனில், எல்லா இலக்கிய வடிவங்களும் சமவுரிமை பெற்றவை. அதாவது, தரத்தில் எல்லாம் சமனானவை. மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் துணைபுரியும் இலக்கியமே சிறந்தது. இதனால், இவ்வாறு சிறந்த இலக்கியத்தை ஆக்கியோருக்குப் பெயரும் புகழும் வந்து குவிகிறது.
சமகாலத்தில் சிலர் துளிப் பா (கைக்கூ) தான் சிறந்தது, புதுப் பா (புதுக் கவிதை) தான் சிறந்தது, இலக்கணப் பா (மரபுக் கவிதை) தான் சிறந்தது எனப் பட்டிமன்றம் அல்லது வழக்காடு மன்றம் நடாத்துவார்கள். இதற்கும் ஒரே பதில்; எல்லாப் பாக்களும் (கவிதைகளும்) சமனான தரம் வாய்ந்த இலக்கிய வடிவங்களே! களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்ட உதவும் பாக்(கவிதை)கள் மக்களை அல்லது வாசிப்பவரை எளிதாகச் சென்றடைகின்றது.
ஒரு நல்ல படைப்பாளி தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருந்தாலும் மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் தேவையான அவர்கள் பக்கத்தையும் அறிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக காதலியின் விருப்பத்தை காதலன் நிறைவேற்றுவது போல வாசகரின் விருப்பத்தைப் படைப்பாளி நிறைவேற்ற வேண்டும்.
உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண முன்வரும் படைப்பாளிகளே! உளவியல் நோக்கில் மேலே கூறிய எல்லாம் நல்லம் தான். உங்கள் படைப்புகளைத் தூய தமிழாக எழுதினால், எவரும் விரும்பமாட்டார்கள். தூய தமிழாக எழுதலாம்; தூய தமிழ் சொல்களுக்கு ஈடான புழக்கத்திலுள்ள பிறமொழிச் சொல்களை அடைப்புக்குள் இட்டு எழுதினால் எவரும் வாசிக்க இலகுவாயிருக்கும். இவ்வாறு தான் இன்றைய இலக்கியங்களில் தூய தமிழை இழையோட வைக்கமுடியும்.
எல்லோரும் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண எழுதுகோல் ஏந்த முன்வாருங்கள். ஒரு படைப்பாளி தன்னையும் வாசகரையும் படித்த பின், வாசகர் மீது தனது எதனையும் திணிக்காமல் வாசகர் விருப்பிற்கேற்ப தனது எண்ணங்களைப் பகிர முன்வரவேண்டும். அப்போது தான் இலக்கியங்களூடாக தூய தமிழைப் பேண முடியும்.
நன்றி: yarlpavanan.tk
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
பாக்களை பாங்குற படைப்பவன் படைப்பாளன். பண்பட்ட படைப்பு பின்னரும் வாழும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
உண்மை
உண்மையிலும் உண்மை
உண்மையிலும் உண்மை
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Similar topics
» படைப்பாளி
» அசல் படைப்பாளி - வைரமுத்து பதில்கள்
» உளவியல் ஓர் அறிமுகம்
» கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)
» குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
» அசல் படைப்பாளி - வைரமுத்து பதில்கள்
» உளவியல் ஓர் அறிமுகம்
» கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)
» குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|