தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நோயின்றி வாழ சில இரகசியங்கள்
2 posters
Page 1 of 1
நோயின்றி வாழ சில இரகசியங்கள்
நோயின்றி வாழ குறைவற்ற வழிகள்
உடலில் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்றால், அது நம்மை நாமே சரியாக பார்த்துக் கொள்வது தான். அதிலும் உடலில் நோயின்றி, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு பல வகையான வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளை சரியாக பின்பற்றி வந்தால், நோயின்றி பல நாட்கள் வாழ முடியும். குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அடிக்கடி நோயால்
பாதிக்கப்படுவதற்கு பெரும் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். எனவே அத்தகைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால், அனைவருமே சூப்பராக வாழ முடியும்.
எனவே இப்போது நோயின்றி வாழ்வதற்கான சில இரகசியங்களுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்தும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் செயல்களாகத் தான் இருக்கும். ஆகவே அத்தகைய செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி, நோயின்றி வாழுங்கள்.
1) சாப்பிடும் முன் மட்டும் தான் கைகளை கழுவ வேண்டும் என்பதில்லை. தினமும் அவ்வப்போது வெளியே சென்று வந்தாலோ அல்லது ஏதேனும் உணவுப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து வைக்கும் போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும். இதனால் உடல் மற்றும் சருமத்தில் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
2) நிறைய பேருக்கு மூக்கில் விரலை வைத்து குடையும் பழக்கம் இருக்கும். இவ்வாறு அடிக்கடி மூக்கை நோண்டிக் கொண்டிருந்தால், அவையும் நிறைய கிருமிகளை மூக்கின் மூலம் உடலுக்கு செல்ல வழிவகுக்கும். எப்படியெனில் கண்ட பொருட்களை தொட்டுவிட்டு, பின் விரலை மூக்கில் வைத்தால், கிருமிகள் உள்ளே செல்லாதா?
3) எப்போதும் ஒரே நிலையில் உட்காராமல், அவ்வப்போது நீட்டி மடக்கி, நெளிந்து உட்கார வேண்டும். இதனால் நிறைய வலிகள், பிடிப்புக்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். சொல்லப்போனால் தினமும் காலையில் சிறிது நேரம் ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
4) உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதில் சுவாச்சத்தலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் நுரையீரலானது நன்கு செயல்பட்டு, அதிகமான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைத்து, உடலில் இரத்த ஓட்டமும், செயல்பாடும் அதிகரிக்கும்.
5) தவறாமல் காலையில் சாப்பிட வேண்டும் அதிலும் நன்கு ஆரோக்கியமான உணவுகளை காலையில் உட்கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். எப்படியெனில் மற்ற நேரத்தில் சாப்பிடுவதை விட, காலையில் சாப்பிடுவதில் தான், ஒரு நாளைக்கு வேண்டிய சக்தியானது கிடைக்கும். அவ்வாறு காலை உணவை தவிர்த்தால், பின் அந்த நாளில் வேறு எப்போது சாப்பிட்டாலும், உடல் வலிமையிழந்து தான் இருக்கும்.
6) தினமும் மறக்காமல் குளிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் உடலில் இருக்கும் கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
7) நீளமான நகங்கள் இருந்தால், எந்த ஒரு செய்யும் செயலும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் நுழைந்து, பின் எவ்வளவு தான் கைகளை கழுவி சாப்பிட்டாலும், கிருமிகள் போகாமல், உண்ணும் உணவின் மூலம் உடலில் சென்று நோயை உண்டாக்கும். எனவே அடிக்கடி நகங்களை வெட்டும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.
8) சிலர் நண்பர்கள், உறவினர்கள் தான் என்று நினைத்து, எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். கொடுப்பது தவறல்ல. ஆனால் ஒருசில முக்கிய உடைமைகளான ரேசர், டூத் பிரஷ், நெயில் கிளிப் போன்றவற்றை பகிரக் கூடாது. இவ்வாறு பகிர்வது கிருமிகளை பகிர்வதற்கு சமமானது.
9) வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் லோசனை தடவிச் செல்லும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தினால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளான சரும புற்றுநோய், பழுப்பு நிற சருமம் போன்றவை வராமல் தடுக்கலாம். மேலும் நீண்ட நாட்கள் இளமையோடும் இருக்க முடியும்.
10) இனிப்பு உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடிப்பதற்கு சமம். ஏனெனில் அதிகப்படியான இனிப்பு உடலில் இருந்தால், உடல் எடை அளவுக்கு அதிகமாவதோடு, நீரிழிவு ஏற்படும் அபாயமும் ஏற்படும். எனவே இனிப்புப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
11) உடலில் இருந்து தினமும் வியர்வையானது நிச்சயம் வெளியேற வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் சரியான வழி. எனவே குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுவாவதோடு, மன அழுத்தம் குறைந்து, உடல் எடையும் சீராக இருக்கும்.
12) தினமும் குறைந்துது 8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ, அதைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் உள்ளது. மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டால், டென்சன் அதிகரித்து, மன இறுக்கம் ஏற்பட்டு, எந்த செயலையும் பொறுமையாக சரியாக செய்ய முடியாது.
13) எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து கவலைக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கவலைப் பட்டால், மன அழுத்தம், மன தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கவலை மனதில் ஏற்பட்டால், அதனைப் போக்க தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
14) தற்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. மேலும் சிறு குழந்தைகளும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு கம்ப்யூட்டர் முன் வேலை பார்க்கும் போது, கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
15) தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டு, செல்கள் சரியாக செயல்படாமல் போய்விடும்.
16) ஜங்க் உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்துவதால், உடலில் மிகவும் மோசமான நோய்கள் உண்டாகும். அந்த நோய்கள் என்னவென்று சொல்ல முடியாது. அந்த அளவில் நோய்களானது உடலில் வந்துவிடும்.
17) ஒரு சிகரெட் பிடித்தாலும், அவை உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து, நுரையீரல்களில் அடைப்புக்கள், இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
18) உடலுறவு கொள்வது என்பது ஒருவித சந்தோஷமான ஒரு அனுபவம். இத்தகைய உறவில் சிறிது முட்டாள்தனமாக செயல்பட்டாலும், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலுறவு கொள்ளும் போது, குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்வது எப்போதும் சிறந்தது.
19) உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமெனில், முதலில் ஒருவர் தன்னையே நேசிக்க வேண்டும். உடலில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், தன்னையே நேசித்து, அத்தகைய பிரச்சனைகளை தம்மால் சரிசெய்துவிட முடியும் என்று நினைத்து, தன்னையே நேசித்து, மன உறுதியுடன் செயல்பட்டாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
20) உணவுகள் சாப்பிடுவதில் அனைத்து வகையான காய்கறிகளையும் விரும்பி சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும். ஏனெனில் உடலுக்கு வேண்டிய சத்துக்களை உணவுகள் மூலம் பெறுவதால், உணவுகளில் காய்கறிகளை அதிகம் விரும்பி சாப்பிட வேண்டும். மேலும் காய்கறிகளில் நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை தினமும் உணவில் சேர்க்க, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
http://www.muruganandam.in/
உடலில் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்றால், அது நம்மை நாமே சரியாக பார்த்துக் கொள்வது தான். அதிலும் உடலில் நோயின்றி, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு பல வகையான வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளை சரியாக பின்பற்றி வந்தால், நோயின்றி பல நாட்கள் வாழ முடியும். குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அடிக்கடி நோயால்
பாதிக்கப்படுவதற்கு பெரும் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். எனவே அத்தகைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால், அனைவருமே சூப்பராக வாழ முடியும்.
எனவே இப்போது நோயின்றி வாழ்வதற்கான சில இரகசியங்களுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்தும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் செயல்களாகத் தான் இருக்கும். ஆகவே அத்தகைய செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி, நோயின்றி வாழுங்கள்.
1) சாப்பிடும் முன் மட்டும் தான் கைகளை கழுவ வேண்டும் என்பதில்லை. தினமும் அவ்வப்போது வெளியே சென்று வந்தாலோ அல்லது ஏதேனும் உணவுப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து வைக்கும் போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும். இதனால் உடல் மற்றும் சருமத்தில் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
2) நிறைய பேருக்கு மூக்கில் விரலை வைத்து குடையும் பழக்கம் இருக்கும். இவ்வாறு அடிக்கடி மூக்கை நோண்டிக் கொண்டிருந்தால், அவையும் நிறைய கிருமிகளை மூக்கின் மூலம் உடலுக்கு செல்ல வழிவகுக்கும். எப்படியெனில் கண்ட பொருட்களை தொட்டுவிட்டு, பின் விரலை மூக்கில் வைத்தால், கிருமிகள் உள்ளே செல்லாதா?
3) எப்போதும் ஒரே நிலையில் உட்காராமல், அவ்வப்போது நீட்டி மடக்கி, நெளிந்து உட்கார வேண்டும். இதனால் நிறைய வலிகள், பிடிப்புக்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். சொல்லப்போனால் தினமும் காலையில் சிறிது நேரம் ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
4) உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதில் சுவாச்சத்தலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் நுரையீரலானது நன்கு செயல்பட்டு, அதிகமான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைத்து, உடலில் இரத்த ஓட்டமும், செயல்பாடும் அதிகரிக்கும்.
5) தவறாமல் காலையில் சாப்பிட வேண்டும் அதிலும் நன்கு ஆரோக்கியமான உணவுகளை காலையில் உட்கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். எப்படியெனில் மற்ற நேரத்தில் சாப்பிடுவதை விட, காலையில் சாப்பிடுவதில் தான், ஒரு நாளைக்கு வேண்டிய சக்தியானது கிடைக்கும். அவ்வாறு காலை உணவை தவிர்த்தால், பின் அந்த நாளில் வேறு எப்போது சாப்பிட்டாலும், உடல் வலிமையிழந்து தான் இருக்கும்.
6) தினமும் மறக்காமல் குளிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் உடலில் இருக்கும் கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
7) நீளமான நகங்கள் இருந்தால், எந்த ஒரு செய்யும் செயலும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் நுழைந்து, பின் எவ்வளவு தான் கைகளை கழுவி சாப்பிட்டாலும், கிருமிகள் போகாமல், உண்ணும் உணவின் மூலம் உடலில் சென்று நோயை உண்டாக்கும். எனவே அடிக்கடி நகங்களை வெட்டும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.
8) சிலர் நண்பர்கள், உறவினர்கள் தான் என்று நினைத்து, எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். கொடுப்பது தவறல்ல. ஆனால் ஒருசில முக்கிய உடைமைகளான ரேசர், டூத் பிரஷ், நெயில் கிளிப் போன்றவற்றை பகிரக் கூடாது. இவ்வாறு பகிர்வது கிருமிகளை பகிர்வதற்கு சமமானது.
9) வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் லோசனை தடவிச் செல்லும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தினால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளான சரும புற்றுநோய், பழுப்பு நிற சருமம் போன்றவை வராமல் தடுக்கலாம். மேலும் நீண்ட நாட்கள் இளமையோடும் இருக்க முடியும்.
10) இனிப்பு உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடிப்பதற்கு சமம். ஏனெனில் அதிகப்படியான இனிப்பு உடலில் இருந்தால், உடல் எடை அளவுக்கு அதிகமாவதோடு, நீரிழிவு ஏற்படும் அபாயமும் ஏற்படும். எனவே இனிப்புப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
11) உடலில் இருந்து தினமும் வியர்வையானது நிச்சயம் வெளியேற வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் சரியான வழி. எனவே குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுவாவதோடு, மன அழுத்தம் குறைந்து, உடல் எடையும் சீராக இருக்கும்.
12) தினமும் குறைந்துது 8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ, அதைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் உள்ளது. மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டால், டென்சன் அதிகரித்து, மன இறுக்கம் ஏற்பட்டு, எந்த செயலையும் பொறுமையாக சரியாக செய்ய முடியாது.
13) எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து கவலைக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கவலைப் பட்டால், மன அழுத்தம், மன தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கவலை மனதில் ஏற்பட்டால், அதனைப் போக்க தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
14) தற்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. மேலும் சிறு குழந்தைகளும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு கம்ப்யூட்டர் முன் வேலை பார்க்கும் போது, கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
15) தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டு, செல்கள் சரியாக செயல்படாமல் போய்விடும்.
16) ஜங்க் உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்துவதால், உடலில் மிகவும் மோசமான நோய்கள் உண்டாகும். அந்த நோய்கள் என்னவென்று சொல்ல முடியாது. அந்த அளவில் நோய்களானது உடலில் வந்துவிடும்.
17) ஒரு சிகரெட் பிடித்தாலும், அவை உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து, நுரையீரல்களில் அடைப்புக்கள், இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
18) உடலுறவு கொள்வது என்பது ஒருவித சந்தோஷமான ஒரு அனுபவம். இத்தகைய உறவில் சிறிது முட்டாள்தனமாக செயல்பட்டாலும், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலுறவு கொள்ளும் போது, குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்வது எப்போதும் சிறந்தது.
19) உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமெனில், முதலில் ஒருவர் தன்னையே நேசிக்க வேண்டும். உடலில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், தன்னையே நேசித்து, அத்தகைய பிரச்சனைகளை தம்மால் சரிசெய்துவிட முடியும் என்று நினைத்து, தன்னையே நேசித்து, மன உறுதியுடன் செயல்பட்டாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
20) உணவுகள் சாப்பிடுவதில் அனைத்து வகையான காய்கறிகளையும் விரும்பி சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும். ஏனெனில் உடலுக்கு வேண்டிய சத்துக்களை உணவுகள் மூலம் பெறுவதால், உணவுகளில் காய்கறிகளை அதிகம் விரும்பி சாப்பிட வேண்டும். மேலும் காய்கறிகளில் நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை தினமும் உணவில் சேர்க்க, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
http://www.muruganandam.in/
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசி யமான ஒன்றாகிவிட்டது இன்று.
» GOOGLE தேடுதல் இரகசியங்கள் !
» பேசும் உதடுகளின் பேசாத இரகசியங்கள்
» நோயின்றி வாழலாம் வாழை இலையில் சாப்பிட்டால்
» நோயின்றி வாழ... இருந்தாலும் நீங்கி குணம் பெற... எளிமையான வழி
» GOOGLE தேடுதல் இரகசியங்கள் !
» பேசும் உதடுகளின் பேசாத இரகசியங்கள்
» நோயின்றி வாழலாம் வாழை இலையில் சாப்பிட்டால்
» நோயின்றி வாழ... இருந்தாலும் நீங்கி குணம் பெற... எளிமையான வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|