தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !தொலைபேசி 0422-256313
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
குமரன் பதிப்பகம் ,19.கண்ணதாசன் சாலை ,சென்னை .17.தொலைபேசி 044- 24353742.
விலை ரூபாய் 70.
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களை கோவை வசந்த வாசல் கவி மன்றம் நடத்திய விழாவில் கோவையில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் .அவரது படைப்புகளை படித்து மகிழ்ந்தவன் .கோவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர் .எழுத்து பேச்சு செயல் மூன்றிலும் தன்னம்பிக்கை விதைத்து வருபவர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராகவும் ,கோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலாரகவும் பணியாற்றி வருகிறார் .
நமது நம்பிக்கை மாத இதழில் ஜனவரி 2011 தொடங்கி 20 மாதங்கள் தொடராக வந்தது .கட்டுரையாக இதழில் படித்தப் போதும் நூலாக மொத்தமாக படித்ததில் சுகம்.கவிதை உறவு இதழில் ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களும் மிகச் சிறப்பாக இந்நூலுக்கு விமர்சனம் எழுதி இருந்தார்கள் .சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நூல் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது .புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எட்டாம் வகுப்பு படித்தப்போது அவரை முதன் முதலில் மேடை ஏற வைத்து அழகு பார்த்த நற்றமிழாசிரியர் திரு .கா .ச .அப்பாவு அவர்களின் புகைப்படத்தை வாங்கி அச்சிட்டு அவருக்கு நூலைச் சமர்ப்பித்தது சிறப்பு .வாய்ப்புத் தந்த ஆசிரியரை மறக்காமல் நன்றியை நன்கு பதிவு செய்த பாங்கு .இன்றைய மாணவ சமுதாயம் மனதில் நிறுத்த வேண்டிய கருத்து .
.சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளை சிந்தனை வரிகளை அணிந்துரை எழுதிய முனைவர் கோ .சேகர் குறிப்பிட்டு உள்ளார்கள் .
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும் !
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழி கொடுக்கும் !
.சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் .இந்நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல் படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் .
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இனிமையான மனிதர் ,பண்பாளர் ,எழுத்தாளர் ,கவிஞர் ,பேச்சாளர் ,செயலர் ,அலுவலர் சகலகலா வல்லவர் .
இவரின் இன்றைய நிலைக்கு காரணம் ,அரசியல், திரைப்படம் இரண்டும் இன்றி கோவையில் இருந்து வரும் முதல் தன்முன்னேற்ற மாத இதழின் ஆசிரியர் இல .செ .கந்தசாமி அவர்களின் உரைதான் .கல்லூரி நாட்களில் விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டு இருந்த தன்னை மடைமாற்றம் செய்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டு உள்ளார் .நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளை வாழ்வில் கடை பிடித்த காரணத்தால் வெற்றிப் பெற்று உள்ளார் .
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் .இன்று உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் .ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க முடியாது .அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !
உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம் - ஆனால்
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது !
முற்றிலும் உண்மை ! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் .இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் .இதுதான் படைப்பாளியின் வெற்றி .நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார் ? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் .இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது .நம்மை புரட்டும் புத்தகம் .
"அவமானங்கள் நம்மைச் சிதைத்துவிடக் கூடாது .சீராகச் செதுக்க வேண்டும் .யாராவது நம்மை அவமானப்படுத்தினால் ,நாம் வார்த்தைகளால் அவர்களுக்கு பதில் சொல்லக் கூடாது .வாழ்ந்து காட்ட வேண்டும் .அவமானங்களையே எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும் ."
நூலில் உள்ள மேற்கண்ட வரிகளை வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் .வாழ்வியல் கருத்துக்களை வெற்றிச் சூத்திரங்களை சொல்லித் தரும் நூல் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கிக் கொண்டு இருக்கும் தன்னபிக்கையை உசுப்பி விடும் வரிகள் .
" முற்றுப்புள்ளிகளை முயற்சிப்புள்ளி களாக்கினால் நீங்களே ஒரு முக்கியப்புள்ளி ஆவீர்கள் ."
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கல்லூரி காலத்தில் கடைப்பிடித்த மூன்று கட்டளைகளை கவனியுங்கள் .
1.இனிமேல் நன்கு படிப்பது , நல்ல மதிப்பெண்களை பெறுவது .
2.எந்தப் போட்டியானாலும் அதில் கலந்து கொள்வது .வெற்றியோ தோல்வியோ அது குறித்து கவலைப்படுவதில்லை .
3.நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்வது .
மாணவ பேரவைத் தேர்தல் பற்றி ,பெற்ற வெற்றி பற்றி ,காந்தியடிகள் குறிப்பிட்ட 7 பாவங்கள் பற்றி குறிப்பிட்டு வல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ,நல்லவனாகவும் வாழ வேண்டிய அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .
கட்டுரைகளின் தலைப்புகளே நம்பிக்கை விதைக்கின்றன .நம்பிக்கைதான் என் மூலதனம் .
சிந்தனை மின்னல் தெறித்தது ,கூர்மையும் நேர்மையும் சிறகுகள் ,திறமை வளர்ந்தால் நம்பிக்கை பிறக்கும் ,உதவுபோதெல்லாம் உயர்கிறோம் ,முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் சிறகுகள் ,கூட்டு முயற்சி கோடி நன்மை ,மனதில் நம்பிக்கை நாற்று வளர்த்தேன் ,வெற்றியும் தோல்வியும் பாடநூல்களே .
நம்மை நாம் செதுக்கிக் கொள்ள உதவும் நூல் . விதி என்று ஒன்றும் இல்லை மதியால் உயரலாம் ,உழைப்பால் சாதிக்கலாம், முயற்சியால் முன்னேறலாம் என்பதை பயிற்றுவிக்கும் நூல் .வாழ்வில் சந்தித்த அனுபவங்களை , வெற்றியின் ரகசியத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
--
--
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !தொலைபேசி 0422-256313
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
குமரன் பதிப்பகம் ,19.கண்ணதாசன் சாலை ,சென்னை .17.தொலைபேசி 044- 24353742.
விலை ரூபாய் 70.
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களை கோவை வசந்த வாசல் கவி மன்றம் நடத்திய விழாவில் கோவையில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் .அவரது படைப்புகளை படித்து மகிழ்ந்தவன் .கோவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர் .எழுத்து பேச்சு செயல் மூன்றிலும் தன்னம்பிக்கை விதைத்து வருபவர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராகவும் ,கோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலாரகவும் பணியாற்றி வருகிறார் .
நமது நம்பிக்கை மாத இதழில் ஜனவரி 2011 தொடங்கி 20 மாதங்கள் தொடராக வந்தது .கட்டுரையாக இதழில் படித்தப் போதும் நூலாக மொத்தமாக படித்ததில் சுகம்.கவிதை உறவு இதழில் ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களும் மிகச் சிறப்பாக இந்நூலுக்கு விமர்சனம் எழுதி இருந்தார்கள் .சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நூல் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது .புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எட்டாம் வகுப்பு படித்தப்போது அவரை முதன் முதலில் மேடை ஏற வைத்து அழகு பார்த்த நற்றமிழாசிரியர் திரு .கா .ச .அப்பாவு அவர்களின் புகைப்படத்தை வாங்கி அச்சிட்டு அவருக்கு நூலைச் சமர்ப்பித்தது சிறப்பு .வாய்ப்புத் தந்த ஆசிரியரை மறக்காமல் நன்றியை நன்கு பதிவு செய்த பாங்கு .இன்றைய மாணவ சமுதாயம் மனதில் நிறுத்த வேண்டிய கருத்து .
.சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளை சிந்தனை வரிகளை அணிந்துரை எழுதிய முனைவர் கோ .சேகர் குறிப்பிட்டு உள்ளார்கள் .
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும் !
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழி கொடுக்கும் !
.சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் .இந்நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல் படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் .
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இனிமையான மனிதர் ,பண்பாளர் ,எழுத்தாளர் ,கவிஞர் ,பேச்சாளர் ,செயலர் ,அலுவலர் சகலகலா வல்லவர் .
இவரின் இன்றைய நிலைக்கு காரணம் ,அரசியல், திரைப்படம் இரண்டும் இன்றி கோவையில் இருந்து வரும் முதல் தன்முன்னேற்ற மாத இதழின் ஆசிரியர் இல .செ .கந்தசாமி அவர்களின் உரைதான் .கல்லூரி நாட்களில் விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டு இருந்த தன்னை மடைமாற்றம் செய்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டு உள்ளார் .நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளை வாழ்வில் கடை பிடித்த காரணத்தால் வெற்றிப் பெற்று உள்ளார் .
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் .இன்று உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் .ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க முடியாது .அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !
உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம் - ஆனால்
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது !
முற்றிலும் உண்மை ! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் .இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் .இதுதான் படைப்பாளியின் வெற்றி .நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார் ? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் .இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது .நம்மை புரட்டும் புத்தகம் .
"அவமானங்கள் நம்மைச் சிதைத்துவிடக் கூடாது .சீராகச் செதுக்க வேண்டும் .யாராவது நம்மை அவமானப்படுத்தினால் ,நாம் வார்த்தைகளால் அவர்களுக்கு பதில் சொல்லக் கூடாது .வாழ்ந்து காட்ட வேண்டும் .அவமானங்களையே எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும் ."
நூலில் உள்ள மேற்கண்ட வரிகளை வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் .வாழ்வியல் கருத்துக்களை வெற்றிச் சூத்திரங்களை சொல்லித் தரும் நூல் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கிக் கொண்டு இருக்கும் தன்னபிக்கையை உசுப்பி விடும் வரிகள் .
" முற்றுப்புள்ளிகளை முயற்சிப்புள்ளி களாக்கினால் நீங்களே ஒரு முக்கியப்புள்ளி ஆவீர்கள் ."
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கல்லூரி காலத்தில் கடைப்பிடித்த மூன்று கட்டளைகளை கவனியுங்கள் .
1.இனிமேல் நன்கு படிப்பது , நல்ல மதிப்பெண்களை பெறுவது .
2.எந்தப் போட்டியானாலும் அதில் கலந்து கொள்வது .வெற்றியோ தோல்வியோ அது குறித்து கவலைப்படுவதில்லை .
3.நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்வது .
மாணவ பேரவைத் தேர்தல் பற்றி ,பெற்ற வெற்றி பற்றி ,காந்தியடிகள் குறிப்பிட்ட 7 பாவங்கள் பற்றி குறிப்பிட்டு வல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ,நல்லவனாகவும் வாழ வேண்டிய அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .
கட்டுரைகளின் தலைப்புகளே நம்பிக்கை விதைக்கின்றன .நம்பிக்கைதான் என் மூலதனம் .
சிந்தனை மின்னல் தெறித்தது ,கூர்மையும் நேர்மையும் சிறகுகள் ,திறமை வளர்ந்தால் நம்பிக்கை பிறக்கும் ,உதவுபோதெல்லாம் உயர்கிறோம் ,முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் சிறகுகள் ,கூட்டு முயற்சி கோடி நன்மை ,மனதில் நம்பிக்கை நாற்று வளர்த்தேன் ,வெற்றியும் தோல்வியும் பாடநூல்களே .
நம்மை நாம் செதுக்கிக் கொள்ள உதவும் நூல் . விதி என்று ஒன்றும் இல்லை மதியால் உயரலாம் ,உழைப்பால் சாதிக்கலாம், முயற்சியால் முன்னேறலாம் என்பதை பயிற்றுவிக்கும் நூல் .வாழ்வில் சந்தித்த அனுபவங்களை , வெற்றியின் ரகசியத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
--
--
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» உலக உத்தமர் கலாம் ! நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உலக உத்தமர் கலாம் ! நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|