தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் ஜெயகாந்தன்

Go down

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்            ஜெயகாந்தன்  Empty ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் ஜெயகாந்தன்

Post by udhayam72 Fri May 10, 2013 5:39 pm

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

கதையாசிரியர்: ஜெயகாந்தன்





கண்ணாடியின் முன்னே நின்று படிய வாரிய கிராப்பின்மேல் சீப்பின் பின்புறத்தை வைத்து அழுத்தி அழுத்தி வளைவுகள் ஏற்படுத்தும் முயற்சியிலேயே கடந்த பதினைந்து நிமிஷமாய் முனைந்திருக்கிறான் சீதாராமன்.

ஹேர் ஆயில், ஸ்னோ, பவுடர், சென்ட் ஆகியவற்றின் கலவை மணம் ஒரு நெடியாய்க் கமழ்கிறது அந்த அறையில்.
கண்ணாடிக்குப் பக்கத்தில் அந்த சிறிய மேஜையின்மேல் அவனது அலங்கார சாதனங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் நடுவே அவனது ‘ஷேவிங் ஸெட்’ சுத்தம் செய்யப்படாமல் அப்படியே சோப்பு நுரையுடன் கிடக்கிறது. அலங்காரம் செய்துகொள்ள அரைமணிநேரத்துக்கு மேல் செலவழிக்கும் சீதாராமனுக்கு அந்த ஷேவிங் ஸெட்டைக் கழுவி வைக்க நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட காரியங்களை யெல்லாம் செய்வதற்கே தவம் கிடந்து வந்தவள் போல் அதோ காத்து நிற்கிறாள் மதுரம் . . .

மதுரத்துக்குத் தன் கணவன் சீதாராமனைப் பற்றி உள்ளூர எத்தனையோ விதமான பெருமைகள்! . .
காபி தம்ளருடன் காலை நேரத்தில் அவன் கட்டிலருகே நின்று எழுப்பும்போது . . . இவ்வளவு நேரம் தூங்கும் கணவனைப் பார்த்து ஒருவகை பெருமிதம்!
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுக் குழாயடியில் நின்று, கொஞ்சமும் மடிப்புக் கலையாத அவனது சட்டைகளை மீண்டும் ஒரு முறை துவைக்கும்போது – அதனுள்ளிருந்து தண்ணீரில் நனைந்து அகப்படும் சிகரட் பாக்கெட்டை எடுத்துப் பார்க்கும்போது – தன் எதிரே இல்லாத கணவனை எண்ணிச் சிரித்த முகத்தோடு கண்டிருக்கிறாளே – அப்போது ஒருவகை பூரிப்பு.

ஒவ்வொரு நாளும் ஆபீசுக்குப் புறப்படும்போது ஒரு கர்ச்சிப்பைக் கொடுத்து, முதல் நாள் கொடுத்த கர்சிப் என்னவாயிற்று என்று கேட்கையில் அவன் அசடு வழிய சிரிக்கிறானே – அப்போது ஒரு மகிழ்ச்சி.
இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவனின் இதுபோன்ற பொறுப்பில்லாத செயல்களில் அலுப்போ சலிப்போ இல்லாமல் ஒவ்வொரு நாளும் பூரிப்பும் பெருமிதமும் கொண்டு தொடர்ந்து பணிவிடை புரிகிறாளே இதன் ரகசியம்தான் என்ன?

இரண்டு உள்ளங்களுக்குத் தெரிந்த எந்த விஷயமும் ஒரு ரகஸியமாகாது. ஆகவே அது அவளுக்கு மட்டும்தான் தெரியும்! ஆம், அவனுக்குக் கூட தெரியுமா என்பது சந்தேகம்தான். அதுபற்றிய ஞானமோ சிந்தனையோ இருந்தால், தன்னருகே நின்று பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போகும் அவளது உழைப்பையும் பணிவிடைகளையும் பெற்றுக்கொண்டு தன் போக்கில் போய்க்கொண்டிருக்க முடியுமா அவனால்?

ஆனால் அவனது போக்கை அலட்சியம் என்று கருதமாட்டாள் மதுரம். அவன் எப்பொழுதுமே அப்படித்தானாம். அவனது நடை, பேச்சு, பார்வை, தோரணை – எல்லாமே மிடுக்காக, கம்பீரமாக இருப்பதால் ஒரு அலட்சியம் போல் தோன்றுமாம்! . . அவனைப்பற்றி அவளுக்கு ரொம்பத் தெரியுமாம் . . . .
“சீதாராமன் மகா அதிர்ஷ்டசாலி” என்று அவன் ஆபீசில் வேலை செய்கிறவர்கள் கூறுவது, அவன் மனைவியைப் பற்றி இவ்வளவும் தெரிந்ததனால் அல்ல.
ஆபீசில் ‘ஹீரோ சீதாராமன்’ என்றுதான் எல்லோரும் அவனை அழைப்பார்கள்.

அவன் ஆபீஸ் ரிக்ரியேஷன் கிளப் நாடகங்களில் நடிப்பான்; ஹீரோவாகத்தான் நடிப்பான். அந்தத் தகுதி அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று அவனும் நினைக்கிறான்; ஆபீசில் உள்ள மற்றவர்களும் சொல்கிறார்கள்.

‘ஹீரோ சீதாராம’னுக்கு இருக்கும் அழகுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் அவனுக்கு நிச்சயமாக சினிமாவில் ஒரு சான்ஸ் அடிக்கத்தான் போகிறதாம்.
அந்த ஆபீசில், தான் ஒரு குமாஸ்தாவாக இருப்பதில் தன்னால் ஆபீசுக்கே ஒரு பெருமை என்ற தோரணையுடன்தான் அவன் தனது இருக்கையில் உட்கார்ந்திருப்பான். வேலை ஏதும் செய்யாமல் அவுட்டுச் சிரிப்பும் அட்டகாசப் பேச்சுமாய் அவன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பதை எல்லோருமே அனுமதிக்கிறார்கள். வேலை ஏதும் செய்யாமல் பேசிக்கொண்டிருக்கும் அவனிடம் முதுகு ஒடிய உட்கார்ந்து எழுதிக்கோண்டே பல்லிளித்துப் பேசிக்கொண்டிருப்பதில் மற்ற குமாஸ்தாக்களுக்கும் ஒரு சுகம்!
அங்கே வேலை செய்யும் ஜூனியர் கிளார்க்குகள் – கலியாணமாகாத தனிக் கட்டைகள்கூட – இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனும் கிட்டத்தட்ட நாற்பது வயதானவனுமான சீதாராமனைப் போல் உடையணிந்துகொள்ளவும், சினிமா பார்க்கவும், செலவுகள் செய்யவும் முடியவில்லையே என்று பொருமுவது உண்டு.

அவர்களுக்குத் தெரியுமோ இவன் இப்படியெல்லாம் இருப்பதற்குக் காரணமே – இரண்டு குழந்தைக்களுக்குத் தகப்பனாகவும், மதுரத்தைப் போன்ற ஒருத்திக்குக் கணவனாகவும் அவன் இருப்பதனால்தான் என்று . . .?

அவர்கள் அதை உணரவேண்டிய அவசியமுமில்லை; உணராதிருந்தால் ஒரு பொருட்டுமில்லை. ஆனால் மதுரத்தைப் பொருத்தவரை அவன் கூட அவற்றை உணரவேண்டிய அவசியமோ அவன் உணராதிருந்தால் ஒரு பொருட்டோ அல்லதான்; எனினும் அவனைப்பொருத்தவரை-அவனது ஆத்ம உயர்வுக்கு அவன் அதை உணர்ந்திருக்க வேண்டாமா?
‘ஹீரோ சீதாராமனை’ப் பொருத்தவரை வாழ்க்கையும் உத்தியோகமும், குடும்பமும் மனைவியும் – எல்லாமே ரொம்ப அலட்சியமாகத்தான் இருக்கின்றன . . . . அவனுக்கிருக்கும் லட்சியமெல்லாம் ஒன்றுதான்! சினிமாவில் கிடைக்கப் போகும் அந்த ஹீரோ சான்ஸ்!
அவன், ஆபீசில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதில் தன்னை ஒரு நவயுக வாலிபனைப்போல் அலங்கரித்துக்கொண்டு திடீர் என்று ஒரு நாள் வரவிருக்கும் அந்த சினிமா சான்ஸ§க்காகக் காத்திருப்பவனாகவே தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறான். ரொம்பப் பேர் வாழ்க்கையில் அப்படி வந்திருக்கிறதாமே! . . .
அவன் கண்களில் மற்ற எதைப்பற்றியுமே-சதா ஒர் அலட்சிய பாவமே மின்னிக்கொண்டிருக்கிறது.

அந்தக் கண்கள் ரொம்ப அழகாய் இருக்கின்றன என்று எண்ணி அவன் அழகிலும் புகழிலும் மயங்கிப் பெருமூச்செறிந்து கொண்டிருக்கும் டைபிஸ்ட் கமலா இந்த ஹீரோவுக்குப் பொருத்தமான ஹீரோயினாக, சில மாதங்களுக்கு முன் நடந்த ரிக்ரியேஷன் க்ளப் டிராமாவில் நடித்தாள். . . .


இதோ, இப்போது அறையில் கண்ணாடியின் முன்னால் நின்று அலங்காரம் செய்துகொள்ளும் இந்த ஹீரோவைப் பார்ந்து மகிழ்ந்து நிற்பதுபோலத்தான், அன்றும் அந்த நாடகத்தில் அவளோடு அவனைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தாள் மதுரம்.

கழுத்தில் கிடக்கும் மைனர் செயின் வெளித் தெரிய அணிந்த ஸில்க் ஜிப்பா, காலிலுள்ள அழகிய செருப்பை மறைத்துப் புரளும் வேட்டி இத்தியாதி அலங்காரங்களுடன் கண்ணாடியின் அருகிலிருந்து சற்றுப் பின்னால் வந்து தன் முழுத் தோற்றத்தையும் பார்த்துக்கொண்டபோது – அறையின் ஒரு மூலையில், புகையும் வியர்வையும் படிந்த முகத்தையும், ஈரக் கைகளையும் முந்தானையில் துடைத்தவாறு நின்றிருக்கும் மதுரத்தைக் கண்ணாடியினூடே பார்த்தான் சீதாராமன்.

அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்ட மதுரம் கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தை நோக்கிச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவனருகில் வந்த மதுரம் ஆதரவான குரலில் சொன்னாள், “பாருங்க, நான் இந்த மாசத்திலிருந்து சாப்பாட்டுக்காரியை ஏற்பாடு பண்ணப்போறேன். நீங்க காலையிலேயே சாப்பிட்டு போங்கன்னாலும் கேக்கறதில்லே . . .காலையிலே டிபன் சாப்பிட்டதோடப் போயி கண்ட ஓட்டல்லேயும் சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காகும்?” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவள் சொல்லும் வார்த்தைகளே காதில் விழாதவன் போல் அவள் பக்கம் திரும்பிய சீதாராமன், எதிரில் நிற்கும் மதுரத்தின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் ஊன்றி அவள் முகத்தையே கூர்ந்து நோக்கினான் . . அந்தப் பார்வையில், வழக்கத்திற்கு மாறாக ஆழமானதொரு சிந்தனை தேங்கியிருந்தது.

“என்ன அப்படிப் பார்க்கறீங்க?” என்று நாணமுற்றவள் போல் சற்றுத் தலைகுனிந்தாள் மதுரம்.

“ம் . . நீ என்னமோ சொன்னியே. நான் கவனிக்கல்லே . . ” என்று தன் மனதில் இருப்பதை, சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் ஒரு பேச்சுக்குக் கேட்டுவைத்தான் சீதாராமன்.
“அப்படி என்ன யோசனை? ஏதாவது புது நாடகத்துக்கு ஏற்பாடோ” என்று சிரித்தவாறே அவள் கேட்டபோது, அதை மறுத்து அவன் தலையாட்டுகையில் அவனது நெற்றியில் படிந்த சுருண்ட கேசம் அசைகின்ற அழகை ரசித்தவாறே மதுரம் விளக்கினாள்:
“நீங்க எதுக்கு ஓட்டல்லெ சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கணும்னு நான் ஒரு சாப்பட்டுக்காரியை ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளையிலிருந்து ஆபீசுக்கே சாப்பாடு வந்துடும் . . என்ன சரிதானே என் ஏற்பாடு?” – அவன் தன் யோசனையைப் பாராட்டுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனும் ரொம்ப அலட்சியமாக, “சாப்பாட்டுக்கு என்ன, ஏதாவது செய் . . ” என்று அந்த விஷயத்தை ஒதுக்கிவிட்டு, மீண்டும் என்னவோ சொல்வதற்குத் தயங்குகிறவனாகவே அவள் தோள் மீது வைத்த கைகளை எடுக்காமல் “மதுரம் . . ” என்று கனிந்த குரலில் அழைத்தான்.

“என்ன வேணும்?” என்று அன்புடன் கேட்டாள். அவன் பதிலுக்குப் புன்னகை காட்டினாள்.

ஆபீசுக்குப் போகிற நேரத்தில் அவசர அவசரமாக சீட்டியடித்தவாறு அவளைக் கவனிக்காமல் ஓடுகின்ற சீதாராமன், இன்று வழக்கத்திற்கு மாறாய், தன்னிடம் தயங்கித் தயங்கி நிற்பதற்கான காரணம் புரியாமல் நின்றிருந்தாள் மதுரம்.

சீதாராமன் மௌனமான சிந்தனையோடு தன் கைப் பையைத் திறந்தான். நேற்றே வீட்டுச் செலவுக்குக் கொடுத்திருக்க வேண்டிய சம்பளப் பணம் அதிலிருக்கும் நினைவு அப்போதுதான் வந்தது அவனுக்கு. அந்த ரூபாய்களை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் அதனை வாங்கி எண்ணிப்பார்த்தாள்! ஐம்பது ரூபாய்கள் இருந்தன.
‘என்ன இது? இவ்வளவுதானா?’ என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தாள். அவன் மீண்டும் சிரித்தான்; அவளும் திருப்தியடைந்து சிரித்துவிட்டாள்.

அவ்வளவுதான்! அந்த விஷயம் முடிந்துவிட்டது.
இப்படிப்பட்ட புருஷனின் சம்பளப் பணத்தை நம்பியா ஒருத்தி குடும்பம் நடத்த முடியும்? . .

மதுரத்தின் தாய் சாகும்போது இந்த வீட்டை மகளுக்குக் கொடுத்துவிட்டுக் கண்ணை மூடினாள். அதன் ஒரு பகுதியைத் தங்களுக்கு வைத்துகொண்டு பின்கட்டு முழுவதையும் மூன்று போர்ஷன்களாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறாள்; இரண்டு மாடுகள் வாங்கி வைத்து வீட்டுக்குள்ளிருக்கும் குடித்தனகாரர்களுக்கு வாடிக்கைப் பால் அளக்கிறாள். தன் இரண்டு குழந்தைகளையும் இந்தப் புருஷனையும் வைத்துப் போஷிக்க அவள்படும் கஷ்டங்களை அவள் கஷ்டமாகவே நினைப்பதில்லை. அவளுக்கு அதுவே சுகமாக இருப்பினும் ‘நூத்தி எழுவது ரூபாய் சம்பளத்தை இவர் என்னதான் பண்ணுகிறார்!’ என்ற நினைப்பு உள்ளே எழந்தாலும், ‘ம், ஆண்பிள்ளைகளுக்கு எவ்வளவோ செலவு, போகட்டும்’ என்று அந்தப் புன்னகையிலேயே எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள் மதுரம். எனினும் அதை லேசாகவாவது அவனுக்கு உணர்த்தாவிட்டால் சரியில்லையல்லவா?

“இதுக்குத்தான் சொல்றேன் – காசுக்குக் காசும் செலவு; ஒடம்பும் கெட்டுப் போகும். மத்தியான சாப்பாடு நீங்க வெளியே சாப்பிட ஆரம்பிச்சதிலிருந்து உடம்பே பாதியா போச்சு – நாளையிலிருந்து சாப்பாட்டுக்காரியை நான் ஏற்பாடு பண்ணிடறேன் . . ” என்று அவள் திரும்பத் திரும்ப அந்த விஷயத்தையே கூறுவதைக் கேட்டதும் சலிப்புற்ற அவன், திடீரெனப் பொறுமை இழந்து கத்தினான்!

“சரி, சரி, சரி! . . . அதுதான் ஒரு தடவை சொன்னியே . . . நீ அனுப்பறதையே திங்கறேன்; இனிமே ஓட்டலுக்குப் போயித் தின்னு தொலையலே – சரிதானே – ” என்றுக் கத்திக்கொண்டே புறப்பட்டான் சீதாராமன்.

தான் சொன்னதைத் தப்பாய் எடுத்துக்கொண்டு அவன் போவதைக் கண்டு – ஆபீசுக்குப் புறப்படுகிற நேரத்தில் அவனுக்குக் கோபம் வருவதுபோல் தான் நடந்து கொண்டதை எண்ணி – மதுரம் கண்கலங்கி நின்றாள்.

ஆனால் கோபித்துக் கொண்டு வேகமாய் வெளியேறிய சீதாராமன், வழக்கத்திற்கு மாறாக, அவள் ஆச்சரியம் கொள்ளும் விதத்தில் அறை வாசலில் ஒரு விநாடி நின்றான். அந்த ஒரு விநாடியில் அமைதியடைந்து திரும்பிப் பார்த்தான்.
மதுரம் கலங்கிய கண்களுடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.

அவன் அவளருகே வந்து அவள் தோளை நெருக்கி அணைத்து ஒரு சிறு குலுக்கலுடன் கேட்டான்: ‘வருத்தமா?’
மதுரத்துக்கு மேலும் மேலும் வியப்பாக இருந்தது.

“எனக்கு என்னத்துக்கு வருத்தம்?” என்று நனைந்த இமைகளுடன் சிரித்தாள் மதுரம். தன் கணவன் ஏதோ ஒரு காரியத்துக்காகத்தான் இவ்வளவு பீடிகையும் போடுகிறான் என்று உணர்ந்த அவள் ‘என்னிடம் காரியம் சாதிக்க இதெல்லாம் எதற்கு’ என்று யோசித்தவளாகக் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
“மது . . . மது . . உள்ளே வாயேன் – உன்கிட்டெ ஒரு விஷயம் ” என்று ஒருவகைப் பொய்க் குதூகலத்துடன் அவள் தோள்மீது போட்ட கையுடன் அவளை அணைத்தவாறு அறைக்குள் வந்தான் சீதாராமன். அவளை அழைத்தபோதும் அறைக்குள் நுழைந்தபோதும் இருந்த ஆர்வமும் வேகமும் திடீரென்று தணிந்து, ஆழமான யோசனை வயப்பட்டவனாய்க் கட்டிலின் மீது அமர்ந்தான் அவன்.

“என்ன விஷயம், சொல்லுங்கோ” என்று அவன் எதிரே இடுப்பில் கைகளை ஊன்றி நின்று மதுரம் கேட்டபோது அவள் கைப்பிடியில் அந்த ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைதான் அவன் கேட்கப்போகிறான், ‘இந்தாங்க’ என்று கொடுத்து விடலாம் என்று தயாராய் நின்றிருந்தாள் அவள்.

“ஒண்ணுமில்லெ . . . நான் ரொம்ப யோசிச்சுப் பார்த்துத் தான் . . . . அதனாலெ உனக்கும்கூட நல்லதுதான்” என்று சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் அவன் தவிப்பதைக் கண்டு, ஒரு புன்னகையுடன் அவன் பக்கத்தில் நெருக்கமாய் உட்கார்ந்தாள் மதுரம்.

“என்னத்தை இப்படி மென்னு மென்னு முழுங்கறீங்க . . ம் . . என்ன வேணும்” என்று அவன் மோவாயைத் தன்பக்கம் திரும்பினாள். ‘கேட்டதைக் தருகிறேன் ‘ என்ற நம்பிக்கை தரும் நல்லுணர்ச்சி அவள் கண்களில் மின்னிற்று. அவன் அப்போதும் மௌனமாய்த் தலை குனிந்து இருப்பதைக் கண்டதும், “சரி, சரி . . எனக்கு வேலை கெடக்குது . . ” என்று கொஞ்சம் பிகுவுடன் எழுந்தாள்.

“இரு . . இரு ” என்று அவள் கையைப் பிடித்து அருகே இழுத்து அவளைத் தழுவிக் கொண்ட சீதாராமன் உணர்ச்சி வயப்பட்டவன் போல அவள் முகத்தருகே குனிந்தான்.
“மது . . நீ சொல்வியே . . என் சந்தோஷம்தான் உன் சந்தோஷம்னு, நெஜம்தானே?” என்று கேட்கையில் அவனது சுவாசம் அவள் கன்னத்தை தகித்தது.
“அதுக்கு இப்ப என்ன? ஆபீசுக்குப் புறப்படற நேரத்திலே சட்டையெல்லாம் கசக்கிக்கிட்டு . . .” என்று அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள் மதுரம்.

அவள் மனத்துள் “இந்த மாசம் ஐயா ரொம்ப தாராளமா செலவு பண்ணிட்டார் போல இருக்கு . . கையிலே இருந்த பணத்தை ஒப்புக்குக் காட்டிட்டுத் திரும்பவும் வாங்கிக்கறத்துக்கு இவ்வளவு சாகஸமா? ஓ! இந்த ஐம்பது ரூபாய் இல்லாட்டித்தான் என்ன? கஷ்டத்தோட கஷ்டமா நான் கவனிச்சுக்குவேன். இவர் தயங்கறதையும் கொஞ்சறதையும் பார்த்தா பாவமா இருக்கு! சரி, இப்படி சம்பளம் பூரா என்னதான் செலவு பண்றார்? . . ” என்று எண்ணினாலும், ஒரு ஆண்பிள்ளையை, அதுவும் புருஷனை, அவன் சம்பாதிக்கும் பணத்தைப்பற்றி அப்படிக் கணக்கு கேட்பதற்கு, தனக்கு அதிகாரமில்லை என்றும், அப்படிக் கேட்பது அழகில்லை என்றும் அவள் உணர்ந்த பண்பினால் ஒரு துயரத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.

அவன் அவளது காதோரத்தை உதடுகளால் லேசாக ஸ்பரிசித்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான்!
“நீ ஒரு உதவி செய்யணும் . . உதவின்னா அது எனக்குச் செய்யற உதவி மட்டும் இல்லெ; அதனாலேதான் தயக்கமா இருக்கு . . . உனக்குத்தான் தெரியுமெ – எங்க ஆபீஸ் டைபிஸ்ட் கமலா இல்லெ, கமலா . . .” என்று கூறுகையில் தொண்டை அடைத்துக் கொண்டது அவனுக்கு.

“யாரு – உங்க ஹீரோயின் கமலாவா” என்று கேலியாக விசாரித்தாள் மதுரம்.

“- ம்ஹ்ம் . . . இந்த மனுஷன் பண்ற செலவு போதாதுன்னு அவளுக்கும் இவளுக்கும் வேறே கைமாத்து கொடுத்தாகிறது போல இருக்கு . . . எல்லாம் வீண் ஜம்பம்!” என்று மனத்துள் முனகிக்கொண்டாள். அதே நேரத்தில் ‘உங்க ஹீரோயின் கமலாவா?’ என்று கேட்ட தன் கேள்விக்கு அவனிடமிருந்து ஒரு பதிலையும் எதிர்பார்த்தாள் மதுரம்.

அன்று -நாடகம் முடிந்து வீட்டிக்கு வந்ததும் ‘எப்படி நம்ப ஹீரோயின்’ என்று மதுரத்தை அவன் கேட்டபோது! . .
“கேள்வியைப் பாரு, நம்ப ஹீரோயினாம்!”என்று மதுரம் பொய்க் கோபத்தோடு முகம் திருப்பிக் கொண்டவுடன் -
“மது . . . நாடகத்திலே அவள் எனக்கு ஹீரோயின் . . . வாழ்க்கையிலே எனக்கு நிஜமான ஹீரோயின் நீ தானே?” என்று சொன்னானே, அந்தப் பதிலைத்தான் மீண்டும் ஒரு முறை எதிர்ப்பார்த்து இப்போதும் அவள் அவ்விதம் கேட்டாள்.
ஆனால் அவனோ பதிலேதும் சொல்லாமல் எதையோ சற்று நேரம் தலை குனிந்து யோசித்துவிட்டு “ம் . . அவளுக்குத்தான், இன்னக்கி மத்தியானம் அவ வருவா . . . இங்கே! . . நீயே அவள் கேட்கிற உதவியை தாராள மனத்தோட செய்யணும் . . . எனக்காகச் செய்வியா? அவள் உன்னைத்தான் நம்பியிருக்கா, அந்த உதவிக்குத் தகுந்த மாதிரி உன்கிட்டெ அவ நடந்துக்குவா . . . பாவம், அவ ரொம்ப நல்லவ . . . அவளுக்கு யாருமில்லெ . . ” என்று அவன் இவ்வளவு கரிசனையுடன் கேட்கும்போது, அந்தக் கரிசனை மதுரத்துக்கு பிடிக்கவில்லை; கொஞ்சம் எரிச்சல்கூட வந்தது.
“சரி . . சரி, அவள் வரட்டும் . . . உங்களுக்கு நாழியாகலியா?” என்று பேச்சை மாற்றினாள் மதுரம்.
“அப்போ நான் வரட்டா?” என்று அவளிடமிருந்து பிரியாவிடைப்பெற்றுச் செல்பவன் போல் அவன் வெளியேறினான்.
மதுரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் மனத்தில் அன்று நாடகத்தில் சீதாராமனின் ஹீரோயினாக நடித்த கமலாவின் குழந்தை முகம் தோன்றியது . . . இவருக்கு ஏன் இவளுக்கு கடன் கொடுக்க இவ்வளவு கரிசனை என்ற கேள்விக்கு எழுந்த பதில்களை யெல்லாம் எண்ணி ‘சீ, சீ! நான் எவ்வளவு மோசமாக ஒரு பெண்ணைப்பற்றி நினைக்கிறேன்’ என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள்.
அது அவள் சுபாவம். தன் புருஷன் விவகாரமாகட்டும், வீட்டுப் பிரச்னையாகட்டும், குழந்தைகளின் தொல்லையாகட்டும் – எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சமாதானம் தேடிக்கொள்ள முடியும் அவளால்.
இல்லாவிட்டால் இதுபோன்ற நினைவுகளிலேயே அவள் நின்றிருக்க முடியுமா? இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளிக்கூடத்திலிருந்து பசியோடு ஓடிவந்து நிற்குமே . . . .
சோப்புப் பவுடரில் ஊறவைத்த – கணவனின், குழந்தைகளின் – துணிமணிகளையெல்லாம் அலசிப்போட வேண்டுமே . . . .
அடுப்பில், உலை கொதித்துக் கொண்டிருக்கிறதே . . . .
மாடுகளுக்குத் தீவனம் வைக்கவேண்டும் . . .
‘எவ்வளவு வேலைகள் இருக்கின்றன’ என்ற மலைப்பும், வேலைகளைச் செய்யவேண்டும் என்ற துடிப்பும் பிறந்தது அவளுக்கு. உடனே அவள் மற்ற எல்லாவற்றையும் மறந்தாள். முதல் வேலையாக கணவன் அப்ப்டியே போட்டுவிட்டுப் போன ஸேவிங் ஸெட்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமை நோக்கிப் போனாள் மதுரம்.
மத்தியானம் இரண்டு மணிக்குமேல்தான் மதுரத்துக்கு சிறிது ஓய்வு. அந்த ஒரு மணி நேரத்துக்கும் குறைவான சந்தர்ப்பத்தில் ஹால் நடுவே, பின்கட்டு வாசற் கதவுக்கு நேரே நன்றாகக் காற்று வரக்கூடிய வழியில் வாசற்படியில் தலைவைத்து முந்தானையை விரித்துப் படுப்பாள் . . . கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போதுமென்றாகிவிடும். எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்து தலைவார உட்கார்ந்துகொள்வாள். அந்த நேரத்தை விட்டால் அவளுக்குத் தலைவாரிக்கொள்ளும் சந்தர்ப்பமே இல்லாமற் போய்விடும். அதனாலென்னவென்று இருந்துவிட முடிகிறதா அவளால்? சாயங்காலம் அவர் வரும்போது என்னத்தான் வெட்டி முறிக்கும் வேலை கிடந்தாலும், தலை ஒரு வேஷம் துணி ஒரு கோலமாய் நின்றால் வீடு உருப்படுமா? . . . அதற்காகத்தான் மூண்று மணிக்கே தனது அலங்காரத்தை முடித்துக் கொள்வாள் மதுரம்.

. . . .அதற்கு என்ன அர்த்தம்? அவன் வருகையை மூன்று மணியிலிருந்தே எதிர்பார்க்கிறாள் என்பது தானா? நாலு மணிக்குப் பூக்காரி வருவாள்! அது வாடிக்கை! இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனவே! அவர்களுக்கும் சேர்த்துதான் வாங்குகிறாள்; ஆனால் அவர்களுக்காகவே வாங்குவதாகச் சில சமயங்களில் சொல்லிக் கொள்கிறாளே, அது அவ்வளவு உண்மையல்ல.
பொழுது சாய்ந்ததும் அவள் வாசற்படியில் வந்து வந்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருப்பாள்; அவன் காலையில் அலங்காரம் செய்துகொண்டு போகும்போது பரட்டைத் தலையும் அழுக்குத் துணியுமாய் நின்று கொண்டிருந்தாளே, ‘அவள் தானா இவள் ‘ என்று வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு விநாடி நின்று அவன் பார்க்கவேண்டாமா?
அவன் பல சமயங்களில் அவளைக் கவனிக்காமலேயே போவான்; அவள் அந்த அலட்சியத்தைப் பொருட்படுத்த மாட்டாள். சில சமயங்களில் அவளது அலங்காரத்தைக் கண்டு அவன் சிரிப்பான்; அந்தக் கேலியை அவள் புரிந்துகொள்ள மாட்டாள்.
மத்தியானம் மூன்று மணிக்குக் கூடத்து ஹாலில் கண்ணாடியைச் சுவர் அருகே சாய்த்து வைத்துக்கொண்டு அவள் தலைவார ஆரம்பித்தபோது , வழக்கமாகக் கவனிக்கின்ற அந்த முன்புற நரையை, கூந்தலை வகிடாய்ப் பிரித்து ஒரு முறை பார்த்துக்கொண்டாள் மதுரம் . . . எண்ணெய் தடவி வாரிவிட்டால் அந்த நரைதான் மறைந்து கொள்கிறதே!
அவள் எண்ணெய் தடவிக்கொள்ளும்போதுதான் அவள் வந்தாள். அந்த ஹீரோயின் கமலா, தனது நரைத்த கூந்தலைப் பார்க்கக்கூடாது என்ற பதைப்பில், சீப்பை எடுத்துக்கொண்டு விடுவிடென்று உள்ளே நுழைந்து, அறையிலுள்ள நிலைக்கண்ணாடியில் அவசர அவசரமாய்த் தலையை வாரிக் கொண்டையிட்டுக் கொண்டபோது மதுரம் தன்னுள் பேசிக்கொண்டாள்: ‘ஏன்? இவள் பார்த்தால் என்ன? எதற்கு இவள் எனது நரையைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன் . . .’
‘ . . . . அந்த ஹீரோவுக்குப் பொருத்தமான ஹீரோயினாய் மேடையில் தோன்றிய கமலா, வாழ்க்கையில் இப்படிப் பொருத்தமில்லாத ஒரு ஹீரோயினோடு அவன் வாழ்கிறான் என்று நினைத்துவிடக் கூடாது என்ற அச்சத்தினாலா? . . . .
அவள் உள்ளே வந்தாள்.

“வாம்மா . . . அன்னிக்கி நாடகத்திலே பார்த்ததுதான். எங்க வீட்டுப் பக்கம் வரக்கூடாதோ . . உட்காரு, இதோ வந்துட்டேன்!” என்று முன்புற கூந்தலை ஒரு தடவைக்கு மூன்று தரம் சீப்பால் அழுந்த வாரிக் கொண்டையிட்டுக் கொண்டபின், நட்பு முறையில் புன்னகை தவழும் முகத்துடன் ஹாலுக்கு வந்தாள் மதுரம்.

“உட்காரம்மா . . நிற்கிறாயே . . . ” என்று ஹாலில் கிடந்த பிரம்பு சோபாக்களில் ஒரு இரட்டைச் சோபாவை அவளுக்குக் காட்டி, தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டாள் மதுரம்.

- யாராவது புதிய மனிதர்கள் வரும்போதெல்லாம் அவள் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பாள்.
அவள் எதிரே இரட்டைச் சோபாவில் உட்கார்ந்திருந்த கமலா, ஹாலை ஒரு முறை சுற்றிலும் திரும்பிப்பார்த்து, “எங்கே குழந்தைகளைக் காணலே” என்றாள்.
“இன்னும் பள்ளிக்கூடத்திலிருந்து வரல்லெ.”

“ஓ! சின்னவளும் போறாளா ஸ்கூலுக்கு?”
“ஆமாம் . . . இப்பத்தான் சேர்த்தேன் . . . ஒரு நாளைக்குப் போவா; ஒரு நாளைக்கு ‘மாட்டேன்’னு அடம் பிடிப்பாள் . . .” என்று கூறி சிரித்தாள் மதுரம். பதிலுக்கு அவளும் சிரித்தாள். அதன் பிறகு ஒரு விநாடி என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்த மதுரம், தொடர்ந்து தன் இளைய மகளைப் பற்றிக் கூறினாள்: “பள்ளிக்கூடம் போகலேன்னா விட்டிலே அவ பண்ற அட்டகாசம் தாங்க முடியறதில்லேம்மா . . . பெரியவ ரொம்ப சாது. இது என்னவோ இப்படி வந்திருக்கு . . உடம்பிலே சட்டை இருக்கப்படாதுங்கறா . . பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் கவுனை ஒரு மூலையிலே, ஜட்டியை ஒரு மூலையிலே அவுத்து எறிஞ்சுட்டுத்தான் சுத்தி சுத்தி வரா . . .நானும் எவ்வளவோ அடிச்சுப் பார்த்தாச்சு; ம்ஹ§ம் ” என்று சிரிப்பிற்கிடையே விவரித்தாள்.
“கொழந்தைதானே ” என்று கூறியவாறே தன் கைப்பையிலிருந்து ஒரு பிஸ்கட் டின், இரண்டு பெரிய சாக்லெட் பாக்கெட் முதலியவற்றை எடுத்து சோபாவின்மேல் வைத்தாள் கமலா.
‘கடன் கேட்க வந்தவள் இதையெல்லாம் ஏன் வாங்கி வந்திருக்கிறாள்’ என்று யோசித்தாள் மதுரம்.
‘முதல் தடவை வீட்டுக்கு வரும்போது வெறுங்கையோட வரலாமா?’ – என்று, எதிலுமே ஒரு சமாதானம் தேடிக் கொள்ளும் தன் இயல்புக் கேற்ப யோசித்துக் கொண்டிருந்த மதுரம், “இதெல்லாம் எதுக்கம்மா? . . . வீண் செலவு’ என்றாள்.
“நீங்க என்ன அக்கா, யாரோ விருந்தாளிகிட்டெ சொல்ற மாதிரி சொல்றீங்களே!” என்று உரிமையான பாவனையில் மதுரத்தைப் பார்த்தாள் கமலா.
மதுரம் நன்றி கலந்த புன்னகையுடன் கமலாவை, அவளது அலங்காரத்தை, உடை மோஸ்தரை, கூந்தல் சிங்காரத்தையெல்லாம் – தங்க நகையை எத்தனை மாற்று என்று எடைபோடும் பொற்கொல்லன் மாதிரிப் பரிசீலித்துக் கொண்டிருந்தாள். நடுவில் ஒரு முறை உள்ளே எழுந்து போய்க் காப்பிக்கு அடுப்பு மூட்டிவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்துகொண்டாள்.
இவ்வளவு நேரமாய் வந்த காரியத்தைப் பேச கமலா தயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் தானே ஆரம்பித்தாள் மதுரம்.
“அவர் காலையிலேயே சொல்லிவிட்டுப் போனார் ” என்றதும் கமலா, முகத்தில் ஒரு மாற்றத்துடன், “என்ன சொல்லிட்டுப் போனார்?” என்று கேட்டாள்.
“ஒண்ணுமில்லெ, நீ வருவேன்னு சொன்னார்; ம் . அப்புறம் உனக்கு யாருமே இல்லேன்னு சொன்னாரே . . நான் அவர்கிட்டேயே கேக்கணும்னு நினைச்சேன்; நேரமில்லே அப்போ. ஆமா, நீ இப்போ யார் வீட்டிலெ இருக்கே . சொந்த ஊர் எது? தாய் தகப்பன் இல்லாட்டியும் சொந்தக்கார மனுஷாள் இருப்பாங்க இல்லே?” என்று ஒரு அடுக்கு விஷயத்தை இரண்டு மூன்று கேள்விக்குள்ளே திணித்துக் கேட்டாள் மதுரம்.
கமலா மதுரத்தின் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லிவிடவில்லை. ஒரு நிமிஷம் மௌனமாய்த் தலைக்குனிந்து உட்கார்ந்திருந்தாள். . . . . . குனிந்த தலை குனிந்து, குனிந்து தாழ்ந்தது. கழுத்து நரம்புகள் புடைத்துப் புடைத்து விம்மின. காதோரம் சிவந்தது . . .
அவள் தலை நிமிர்ந்து பார்த்தபோது கமலாவின் கண்கள் கலங்கிச் சிவந்திருப்பது கண்ட மதுரம் திகைத்தாள்.
‘நாம் ஏதாவது தப்பாகக் கேட்டு விட்டோமோ?” என்ற அச்சத்துடன் அவளருகே வந்து ‘ஏம்மா வருத்தப்படறே? ..” என்று ஆறுதலாகக் கேட்டாள் மதுரம்.
‘என்கூடப் பொறந்த சகோதரியைப்போல நினைச்சுத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று உணர்ச்சியால் அடைத்த குரலுடன் கூறி, அதற்குமேல் சொல்லமுடியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டாள் கமலா. . .
“பெத்தவங்களைச் சின்ன வயதிலேயே பறிகொடுத்திட்டு மாமா விட்டிலே படாதபாடுபட்டு எப்படியோ படிச்சு முடிச்சுட்டு ஒரு வேலை கிடைச்சதும் அந்த நரகத்திலேருந்து விடுதலையானேன். ஒரு ஹாஸ்டல்லே தங்கி – ஒரு அனாதையாகவே துணையில்லாத வாழ்க்கை எவ்வளவு காலத்துக்கு வாழறது?” என்று சிவந்த நாசி விரிந்து துடிக்க அவள் கேட்டபோது, மதுரத்துக்கு அந்த நிலைமையின் சோகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“ஏன்? ஒரு கல்யாணத்தைப் பண்ணிகிட்டு, குடியும் குடித்தனமுமா ராணி மாதிரி இருக்கலாமே நீ? உனக்கென்ன குறைச்சல்? என்னைமாதிரி எழுத்துவாசனை இல்லாதவள்னாலும் சொல்லலாம்? . . இதுக்கா வருத்தப்படறே?” என்று தைரியம் கூறினாள் மதுரம்.
கமலா ஒரு பெருமூச்செறிந்தாள்.

“அதுக்கெல்லாம் சொந்தக்காரர்களோ, வேறே பொறுப்பான பெரியவங்களோ இருந்தாத்தானே நடக்கும் . . அப்பிடி எனக்கு யாரும் இல்லியே . . . இந்த இரும்பத்தாறு வயசுக்குள்ளேயே எனக்கு அதெல்லாம் குடுத்து வைக்கலேங்கற தீர்மானத்தோட இப்படியே வாழ்ந்துடலாம்னுதான் இருந்தேன். ஒரு ஆதரவுமில்லாத எனக்கு எல்லாவிதமான உதவியும் செய்யறதுக்கு அன்பா, ஆதரவா இருக்கிறவர் ஆபீஸிலேயே இவர் – மிஸ்டர் சீதாராமன் – ஒருத்தர்தான் . . .” என்று அவள் கூறி நிறுத்தியதும் இருவரும் கவனமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மதுரத்துக்கு திடீரென என்னவோ விபரீதமாய் ஒரு கற்பனை, ஒர் எண்ணம் – ஒரு தீர்மானம் உள்ளூற எழுந்தது. அது கொஞ்சம்கூட வெளியே தெரியவில்லை. வெளியே தெரியாத, சலனம் காட்டாத அது, அவளைச் சிலைப்போல் ஸ்தம்பிக்க நிறுத்தி, கமலாவின் உள்ளே ஊடுருவுவது போல் அவளைப் பார்க்க வைத்தது. தான் சொல்லவந்த விஷயத்தைச் சொல்லாமலேயே இவள் புரிந்துகொண்டுவிட்டாளோ என்ற திகைப்பில், கமலாவும் அவளையே வெறித்துப் பார்த்தாள்.
‘இவள் மறுத்துவிட்டால்? தன்னைத் தூஷித்துத் துரத்தி விட்டால்? . . . தன் மானத்தைக் கெடுப்பதுபோல் ஊர் கூட்டி நியாயம் கேட்டுவிட்டால்?’ என்ற திகில்கள் படிப்படியாய் விளையவே, திடீரெனக் குமுறி, வாய்விட்டுக் கதறியவாறு மதுரத்தின் கரங்களில் முகம் புகைத்துக்கொண்டாள் கமலா.
இப்போது ‘ஏன் அழுகிறாய்? எதற்கு வருந்துகிறாய்?’ என்றெல்லாம் மதுரம் கேட்கவில்லை. அவள் நின்றிருக்கும்போது வெறித்ததுபோலவே, அந்த இடத்தைவிட்டு விலகி வந்து தன் கரத்தில் முகம் புதைத்தழும்போதும்-அவள் பார்வை வெறித்து நிலைகுத்தியிருந்தது . . .
மதுரத்தின் கைகளை இறுகப்பற்றி அழுதுகொண்டே அவள் தௌ¤வான குரலில் சொல்லிவிட்டாள்: “உங்க வாழ்க்கையில் பங்கு கேட்கிறேன், அக்கா!”
- அழுகையென்ற கேடயத்தை ஏந்திக்கொண்டு அந்தக் கூரிய வாளை ‘சரே’லென மதுரத்தின் இருதயத்தில் ஆழமாகச் செருகிவிட்டாள் கமலா.
“இந்த அனாதைக்கு வாழ வழிகாட்டணும் . . . என் மானமே உங்க கையிலே இருக்கு. உங்களுக்கு நான் செஞ்ச துரோகத்தை மன்னிச்சு நீங்க என்னைக் காப்பாத்தணும் . . உங்க குழந்தை வேறே, என் வயித்திலே இருக்கிறது வேறே இல்லே அக்கா!”
செருகிய வாளை உருவி, மீண்டும் பாய்ச்சியபோது, தன் மனோபலம் முழுவதையும் திரட்டி, பல்லைக் கடித்துக் கண்களை மூடித் தாங்கிக்கொண்டாள் மதுரம்.
“இந்த நன்றியை உயிர் உள்ளவரைக்கும் நான் மறக்கமாட்டேன் . . .உங்களுக்கும் – நம்ப குடும்பத்துக்கும்” என்று கமலா கூறுவதை இடைமறித்து அமைதியான குரலில் மதுரம் முனகினாள்.
“போதும் கமலா . . . போதும் . . ஐயோ, என்னாலே, தாங்கமுடியலேடி அம்மா . . .” என்று படுகாயமுற்றவள்போல் அந்தச் சோபாவில் கிடந்து அண்ணாந்த தலையை இடமும் வலமும் புரட்டிப் புரட்டி உலுப்பியவாறு துடித்தாள் மதுரம்.
அரைமணி நேரம் வரை மதுரம் அசையவில்லை; விழிகளைத் திறக்கவில்லை.
சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்ட பிறகு, அவளது சம்மதிப்பை, பதிலை எதிர்நோக்கி உள்ளூர ஒரு தவிப்பும், பார்வையில் ஒரு திகைப்பும் கொண்டு உட்கார்ந்திருந்தாள் கமலா.
மதுரத்தின் நிலையைப் பார்க்கும்போது, அவளுக்குப் பயமாகவும் வருத்தமாகவும் இருந்தது. தான் நினைத்து எதிர்ப்பார்த்ததுபோல் அவள் ஆத்திரமோ வெறுப்போ கொண்டு தன்னைத் தூஷிக்கவோ, சபிக்கவோ செய்யாததால் – இந்த நல்லவளின் இதயத்தை நொறுக்கிவிட்ட, குற்றம் புரிந்துவிட்ட உணர்ச்சியில் அவளுக்குக் குமுறிக் குமுறி அழுகை வந்தது.
வெகுநேரம் மௌனமாய் அழுதுகொண்டிருந்த பின் இவளருகே வந்து “அக்கா . . அக்கா . . .” என்று அழுதுகொண்டே உசுப்பினாள் கமலா.
ஒன்றுமே நடக்காததுபோல் தௌ¤வான
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum