தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

3 posters

Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்  Empty 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by udhayam72 Mon May 13, 2013 2:10 pm

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நகைச்சுயைாக நடித்து வெளிவந்திருக்கும் 'எதிர்நீச்சல்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

[You must be registered and logged in to see this link.]


எதிர்நீச்சல் படத்திற்கு விமர்சகர்களும் நல்ல கருத்துக்களைக் கூறி இருப்பதால் நாளுக்கு நாள் திரையரங்குகளின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிசில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

[You must be registered and logged in to see this link.]

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் "உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.

வேண்டுதலின் படி தனது குலசாமியின் பெயரான ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவனாகி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய பெயரை அனைவரும் சுருக்கி அழைப்பது மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது.

இதனால் வேலையை விட்டுவிடுகிறார். இவர் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் பெயர் சரியில்லை என்று சொல்லி இவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

விரக்தியடைந்த சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரிஷ் என்று மாற்றி அதை பதிவும் செய்கிறார். தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொள்கிறார். இதையடுத்து பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ப்ரியா ஆனந்தை சிவகார்த்திகேயன் சந்திக்கிறார். பார்த்தவுடனேயே அவர் மீது காதல் வயப்படும் சிவகார்த்திகேயன், அவருடன் நட்பாக பழகி இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் பழைய பெயர் ப்ரியா ஆனந்த்-க்கு தெரிய வருகிறது. இந்த சிறு விஷயத்தை தன்னிடம் மறைத்ததற்காக சிவகார்த்திகேயன் மீது கோபப்படுகிறார் பிரியா ஆனந்த். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், பெரிதளவில் ஏதாவது சாதித்தால் தனது பழைய பெயர் மறைந்துவிடும் என்ற நண்பனின் யோசனைப்படி, சென்னையில் நடக்கும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற முடிவெடுக்கிறார்.

அவருக்கு பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகனான சிவகார்த்திகேயன் குஞ்சிபாதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவஸ்தைபடுவதாகட்டும், ப்ரியா ஆனந்தை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், முதல் பாதியில் கொமடியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் பிற்பாதியில் ஓட்ட வீரனாக ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார். முற்பாதியில் ஆசிரியராக வரும் ப்ரியா ஆனந்த்-க்கு தனது முந்தைய படங்களை விட இப்படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். பிற்பாதியில் இவர் அவ்வளவாக தலைகாட்டாதது ஏமாற்றத்தை தருகிறது.

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாக, சிவகார்த்திகேயனுக்கு பயிற்சியாளராக வருகிறார் ‘அட்டக்கத்தி’ நந்திதா. அருமையான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் சதீஷ் தன்னுடைய பங்குக்கு பின்னியெடுத்திருக்கிறார். சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களில் ஒரு புது கொமடி கூட்டணியை உருவாக்கலாம். மனோபாலா, மதன்பாப் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் நல்ல வெற்றியடைந்துள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின் நாடித் துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார்.

‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பாடல் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும், தனுஷ், சிவா, நயன்தாரா ஆகியோரின் குத்தாட்டம் ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது. ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘வெளிச்ச பூவே’ பாடல் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதற்பாதியை கொமடிகளை கட்டினாலும், பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. அடுத்து என்ன காட்சி என்பதை முன்பே ஊகிக்கும் விதமான காட்சிகளே நிறைய அமைந்திருக்கிறது. சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். மற்றபடி ‘எதிர்நீச்சல்’ ஜாலியாக பயணம் செய்யலாம்.[You must be registered and logged in to see this image.]
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்  Empty Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 13, 2013 2:14 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்  Empty Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by udhayam72 Mon May 13, 2013 3:40 pm

இது ஆக்சுவலா ரெண்டு படம். இரண்டு வேறுவேறு கதைகள் ஒன்றுடன் ஒன்று பெரிதும் சம்பந்தம் இல்லாத, ஒன்றிலிருந்து ஒன்று முற்றுலும் வேறுபட்ட, வெவ்வேறு உணர்வுகள், வெவ்வேறு தளங்களில் பயணிக்கிற இரு கதைகளை கொண்ட படம்.

கதை ஒன்று: ஒரு பெயரினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை காமெடியாய் சொல்லும் கதை. குஞ்சுதபாதம் என்ற பெயரை சிவகார்த்திகேயனுக்கு அவன் பெற்றோர் வைத்துவிட அதன் விளைவாக அவர் சிறுவானாக விளையாடுவதிலிருந்து, காதலில் விழுவது வரை அனைத்திடங்களிலும் படும் அவஸ்தைகளை கலகலப்பாய் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு மனுசனுக்கு பிரச்சினை வேற எதுவும் இல்லை அவன் பெயர்தான் என்ற அடிப்படையில் ஒரு கதை என்ற போதே அட புதுசா இருக்கே என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. தன் பெயரை சொல்லி கிண்டல் பண்ணுவார்கள் என்பதால் ஒரு விளையாட்டில் முன்னிலையில் இருக்கும் சிறுவன் கூட தன்னை பின்தள்ளிக்கொள்கிறான் என்ற விசயத்தை லைட்டாய் டச் பண்ணிய இயக்குநருக்கு பாராட்டுகள். அதை இன்னும் ஆழமாய் சொல்வதற்கு இந்தக் கதையில் இடமில்லை என விட்டுவிட்டார்.
[You must be registered and logged in to see this link.]


முதலில் ஒரு பொண்ணை குஞ்சிதபாதம் டாவடிக்க, அவரும் திரும்ப லுக்கெல்லாம் குடுத்து ஒரு டூயட் பாடலையும் ஆடிவிட்டு எல்லாம் ஓக்கே ஆனா உன் பேருதான்.. எதுக்கும் ஒரு ரெண்டு நாள் யோசிச்சு சொல்றேன் என்றவர் சொல்லாமல் கொல்லாமல் வீட்டை காலிபண்ணிவிட்டு எஸ்கேப்.

இனி ஆவதில்லை என பெயரை மாற்றுகிறார். ஹரீஸ் ஆகிறார். அன்றே கீதா மிஸ்( ப்ரியா ஆனந்த்) இவர் கண்ணில் படுகிறார். அடுத்தடுத்து எல்லாமே நல்லவிதமாய் போகிறது.

காதலில், விழுந்து, அப்படி இப்படி தட்டுத்தடுமாறி செட்டில் ஆகும் சமயத்தில் ஒரிஜினல் பெயர் வேறு என தெரியவர ஏன் சொல்லவில்லை என்ற சின்ன சண்டையில், இன்டர்வெல் விட்டு, அப்புறம் தனுஷையும் நயன்தாராவையும் ஆடவிட்டு, சரி நாம பெயர் நிக்குற மாதிரி எதாச்சும் உருப்படியா செய்யனும்னு யோசிச்சு மராத்தான்ல ஓடுவோம்னு சிவகார்த்திகேயன் முடிவெடுக்கிறது தான் கதை ஒண்ணு. இதுவரை பார்க்கும் போது பரவாயில்லை.. பெரிய விசயம் இல்லாட்டியும் காமெடியா இருக்கு.. என நாம் யோசித்துக்கொண்டிருக்கும் போது கதை இரண்டு துவங்குகிறது.

கிராமத்து பள்ளியில் படிக்கும் நந்திதா. மின்னலாய் ஓடுகிறார். ஓட்டப்பந்தயத்தில் அவ்வளவு ஆர்வமும் திறமையும். இந்த கிராமத்து பொண்ணெல்லாம் மேல வர்றது கஷ்டம்.. அடுத்த வருசம் கட்டிக்குடுத்துடுவானுங்க.. அதுக்கடுத்த வருசம் கையில புள்ளையோட இருக்கும் என ஒரு பிடி வாத்தியார் சொல்வதைக் கேட்ட நந்திதாவின் அப்பா ஒரு முடிவெடித்து தன் மகளுக்கு வேண்டிய அனைத்தையும் தன் சக்திக்கு மீறி செய்து ஆசிய அளவில் பெரிய சாதனையை படைக்கும் இடத்திக்கு போகும் போது, பணபலம், விளையாட்டுக்குள் அரசியல் என புகுந்து அவர் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பது இரண்டாவது கதை. கொஞ்ச நேரம் வந்தாலும் மிக அழுத்தமான கதை இது.

இறுதியில் இந்த நந்திதா அந்த சிவகார்த்திகேயனுக்கு கோச்சிங் கொடுத்து ஜெயிக்க வைக்கிறாரா என்பது கிளைமாக்ஸ்.

முதல் பாதி கதை சிவகார்த்திகேயனுக்காவே எழுதப்பட்டது. அவரது ட்ரேட்மார்க் டைமிங் காமெடிகள், அதற்கேற்ற சிச்சுவேசன்கள் என அடுத்தடுத்து எதாவது காரணத்தால் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே செல்கிறார்கள். சிவா மிக எளிதாய் ஸ்கோர் பண்ணுகிறார்.

ப்ரியா ஆனந்த் நர்சரி பள்ளியில் கீதா மிஸ்ஸாக. பள்ளிப்பருவத்து வயதில் எல்லாப் பசங்களுக்கும் பிடித்த ஒரு மிஸ் இருப்பாரே.. அந்த அத்தனை மிஸ்களின் மொத்த உருவமாய். சேலையில் வரும் போது நிஜமாகவே சிலைபோலத்தான் இருக்கிறார். என்னா அழகு சார். இவரை இத்தனை வருடங்களாய் சுடிதாரில் காண்பித்து நம்மையெல்லாம் ஏமாற்றிய அத்தனை இயக்குநர்களையும் இந்த நேரத்தில் நாம் வன்மையாய் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இரண்டாவது பாதியில் நந்திதாவுக்கு மிக அழுத்தாமான கதாபாத்திரம். ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம் புடிக்காம இதை ஏற்று நடித்த அவருக்கு பாராட்டுக்கள். ஏழ்மையில் திறமை என்ற அவஸ்தையான அனுபவத்தை கண்முண் கொண்டு வரும் கதையில் நம்மை வெகுவாய் பாதிப்பது அவரது தந்தையின் கதாபாத்திரம். கிராமத்து ஆள் எனக்கென்ன தெரியும் என இருந்துவிடாமல்.. ஒரு வீராங்கனையாவதற்கு என்னெல்லாம் செய்ய வேண்டும் எனத்தெரியாவிட்டாலும் எந்த ஒரு சின்ன அட்வைஸ், சின்ன தடம் கிடைத்தாலும் அதைப் பிடித்து எப்படியாவது மகளுக்கு வேண்டியதை செய்துவிடத்துடிக்கும் பாசக்கார தகப்பனாய் வாழ்ந்திருக்கிறார் மனிதர். எதற்காகவோ பஸ்ஸில் போய்கொண்டிருக்கும் போது வழியில் ஏதோ ஒரு கிரவுண்டில் யாரோ ஒருவர் சிலருக்கு ஓட்டப்பந்தய பயிற்சி கொடுப்பதை பார்த்து பரபரத்து கண்டக்டரினில் விசிலை எடுத்து ஊதி பஸ்ஸை நிறுத்தி, அந்த கோச்சிடம் போய் ஏதோ பேசி எப்படியோ தன் மகளுக்கும் அந்த பயிற்சியை பெற்றுத்தருகிறார் பாருங்கள். நிச்சயமாய் இயக்குநர் இதை ஒரு நிஜ கதாபாத்திரத்திலுருந்தான் எடுத்திருக்க வேண்டும். அத்தனை ஆயிரம் உணர்வுகள் அதில் பொதிந்திருக்கிறது.

பயிற்சியாளராய் வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல் கம்பீரம்.

அவ்வப்போது காதலுக்கும், டாஸ்மாக்கும் உதவும் நண்பனாய் சதீஷ். காமெடிக்கும் உதவுகிறார்.

இசை அனிருத். ஏற்கனவே அனைத்துப் பாடல்களும் பட்டையை கிளப்பிய ஹிட். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின்னணி இசையிலும் ஜொலிக்கிறார். அதிலும் இறுதிக்கட்ட ஓட்டபந்தய காட்சிகளை வேல்ராஜின் ஒளிப்பதிவுடன் சேர்ந்து உயிரூட்டுவது இசையும் எடிட்டிங்கும் தான்.

படத்தில் சின்ன உருத்தல் என்றால் சிவகார்த்திகேயன் கதையில், அவர் இந்த மராத்தானில் கலந்து கொள்ள சொல்லும் காரணங்கள் அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாய் இல்லை என்பதுதான். அதிவும் காதலி ப்ரியா ஆனந்தும் அடுத்த நாளே வந்து இவரைப் புரிந்து கொண்டு சண்டையை மறந்து ஷாப்பிங் கூட்டிச்சென்று ஷு வாங்குக்குடுத்துவிடுவதால் கதையில் அடுத்த பெரிய எதிர்பார்ப்போ டிவிஸ்டோ இல்லை. ஆனால் அதையெல்லாம் நந்திதா கதை ஈடுகட்டிவிடும் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு இருந்திருக்க வேண்டும். உன்மைதான்.

ஆனாலும் நந்திதாவின் கதையை ஒரு முழுப்படமாய் எடுத்திருக்க வேண்டுமே இப்படி பாதியிலேயே சுருக்கிவிட்டாரே என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. விளையாட்டில் நடக்கும் பாலிடிக்ஸை இன்னும் ஆழமாய் காண்பித்திருந்தால் படம் நிச்சயம் இன்னொரு லெவலுக்கு போயிருக்கும்.

எனினும் படம் முடியும் போது நமக்கு எந்த உருத்தலும் கேள்வியும் இல்லை. நிறைவாகவே இருக்கிறது. இயக்குநர் துரை செந்தில்குமாருக்கும் தயாரிப்பாளர் தனுஷுக்கும் நமது பாராட்டுக்கள். கட்டாயம் பாருங்கள்.


********************************************************************************************
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்  Empty Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by அ.இராமநாதன் Tue Jun 04, 2013 3:20 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்  Empty Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 3:51 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்  Empty Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum