தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

2 posters

Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Jul 15, 2013 10:25 pm

குழந்தைகள் குக்கூ   ... 
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavaideepan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com

குழல்இனிது யாழ்இனிது  என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர் .  


ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் படிக்கலாம் .'ஓடி  விளையாடு பாப்பா ' என்று பாடிய மகாகவி பாரதியார்தான் முதன் முதலில் குக்கூ    கவிதைகளை தமிழில் அறிமுகம்  செய்தவர் .அவர் வழி நின்று இவரும் குக்கூ   கவிதை எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .அவர்கள் அரசுப்பணியில் , பரபரப்பான வட்டாட்சியர் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியது . சுட்டிப் பூங்கா என்ற ஹைக்கூ கவிதை நூலின் மூலம் பரவலானப்  பாராட்டைப்  பெற்ற கவிஞரின் அடுத்த படிப்பு இந்நூல் 

குயிலின் கூவலாக கவிதை வடித்துள்ளார் . எவ்வளவு கவலை , சோகம் நம்மிடையே இருந்தாலும்  குழந்தைகளின் சிரிப்பைக் கண்டால் கவலை , சோகம்  காணமல் போகும் .இந்த நூல் வாசிக்கும் வாசகர்களுக்கும் கவலை , சோகம் காணமல் போகும் .என்று உறுதி கூறலாம் 
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு  யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை  வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும்  , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி  கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள அனைத்து குக்கூ   கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .


படபடக்கும் 
குழந்தைகளின் 
இமைகள் 
தெரித்து 
விழும் 
ஹைக்கூப் பூக்கள்  !

நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் ஹைக்கூப்  பார்வை மிக நன்று .

குழந்தைகள் விளையாடுவதை ரசித்து மகிழலாம் .குழந்தைகளோடு விளையாடினால் குழந்தைகளாகவே  மாறி விடலாம் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .


குழந்தை 
விளையாடும்போது 
ஆனந்தம் 
குழந்தைகளோடு 
விளையாடும்போது  
பேரானந்தம் !


நிலாவை எல்லாக் கவிஞர்களும் பாடி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்கள் வித்தியாசமாக பாடி உள்ளார் .பாருங்கள் .


தெருக்கள் தோறும் 
நிலாக்கள் 
விளையாடும் அதிசயம் 
குழந்தைகள் !

பணம் கூடக் கூட நடிகையின் ஆடை குறையும் அவலத்தை சுட்டும் விதமாக உள்ள கவிதை நன்று .


அரை குறை ஆடையில் 
முகம் சுளிக்க வைத்தபடி 
நடிகை !
முழுமையான நிருவாணத்தில் 
அழகாக குழந்தை !

பெற்றோர்கள் பலர் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிப்பதே இல்லை .குறிப்பாக அடுககங்களில் வாழும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பும் இல்லை .


விரட்டாதீர்கள் 
விளையாடவரும் 
விளையாட்டுக்களை 
அனுமதியுங்கள் 
குழந்தைளோடு விளையாட !



பலூன் கண்டதும் பரவசம் அடையும் குழந்தைகளின்  மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

விரிந்து கொள்கிறது  
பலூன்களை ஊதும்போது 
குழந்தைகளின் மனங்களும் !

அரும்புகளின் குறும்புகள் பார்த்திட அழகோ அழகு !அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .

குதூகலமாய்க் 
கும்மாளம் போட்டுக் கொள்கின்றன 
குறும்புகள் 
குழந்தைகளிடத்தில் !

படிக்கும்  வாசகர்கள் மனதில் குழந்தைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளார் .


தவழும் தண்ணீர் 
குளிக்கும் குழந்தை 
சுத்தமாகிக் கொள்ளும் 
நதி !


நிலாவே குழந்தைகளைத் தேடுமாம் நூல் ஆசிரியர் கற்பனை மிக நன்று .


வீடுதோறும் 
முற்றங்க்ளைத் தேடுகிறது 
நிலா !
குழந்தைகளுக்குப் 
பால்சோறு படைக்க !


பல  குடும்பங்கள் கிராமம் விட்டு நகரத்திற்கு நகர்ந்து விட்ட காரணத்தால் , நகரத்து வீட்டில் தாத்தா பாட்டி இருப்பது இல்லை .குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .


கிராமத்து 
வீட்டுத் திண்ணையில் 
நசுங்கிக் கிடக்கும் 
ஏராளமான கதைகள் 
குழந்தைகளுக்காக !


கடலையும் குழந்தையையும்  வாசகர்களுக்கு காட்சிப் படுத்தும் கவிதை நன்று .


கால்களை  
நனைத்துக் கொள்ள 
குழந்தைகள் வருகையில் 
களிப்படைந்து விடுகிறது கடல் !


குழந்தைகள் காலையில் கண் விழித்தவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவார்கள் .அவர்களை ரசித்தால் நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும் .


படுக்கையிலிருந்து 
குழந்தை எழுகையில் 
விழித்துக் கொள்கின்றன 
விளையாட்டுகள் !


இப்படி நூல் முழுவதும் குழந்தைகள் !குழந்தைகள் !குழந்தைகள் ! தவிர வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு குழந்தை இலக்கியம் படைத்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் 

.




-- 

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 1:05 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Thu Aug 29, 2013 7:50 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum