தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் சமுதாய கவிதைகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 10:15 am

எண்சாண் உடம்பில் 
ஒருசாண் வயிற்றுக்கு 
நாளும் போராட்டம் 
நிமிடம் தோறும்
திண்டாட்டம் 

மூடை தூக்கி தூக்கி 
கேள்விக்குறியாகவில்லை 
முதுகு - அடுத்த நொடி ..
என்ன நிலை என்று கேட்டு 
கேட்டுத்தான் கூனலாகியது 
முதுகு .....!!!

படித்தவன் முதுகு 
கூனவில்லை -அவன் 
தலை  கூனுகிறது 
தேவைக்கும் 
தேவையில்லாமலும் .....!!!

மொத்தத்தில் ஒருசாண் வயிறு 
கேள்விக்குறியாக்குகிறது 
மனிதனை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 22, 2013 11:00 am

சமூக கவிதைகள் அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 11:28 am

இதன் கீழ்தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:30 am

படித்தவனுக்கு வேலைவாய்ப்பு - கனவு
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு 
பக்கத்துவீட்டாருக்கு  என் வீட்டில் -கனவு 
பருவ வயதில் காதலில் -கனவு 
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு 
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு 
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு 
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு 
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு 
அடுத்தென்ன 
அடுத்தென்ன 
என்பதே கனவு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:31 am

அறிவில்லாதவனை 
பெரியவனாக்கி 
அறிவுள்ளவனை
சிறியவனாக்கும் 
சக்தி எனக்கு 
மட்டும் உண்டு 
-பணம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:31 am

உன்னை கண்டவுடன் 
காதலிக்கவே தோன்றியது 
என் மனம் ...........!!!

என்னசெய்வது -உணர்வை விட ...
என் குடும்பக்கடமை தடுக்கிறது..... 
திருமணமாகாத தங்கைகள்.... 
முதுமையில் இருக்கும் பெற்றோர் ...
என்னையே நம்பி படிக்கும் தம்பி ...
இப்படிதான் ...... 
எத்தனையோ அண்ணன்கள் 
காதலை புதைத்துவிட்டார்கள் ....
நிறைய அண்ணன்களின் ...
இதயம் மயானம் தான் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:32 am

வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில் 
நிற்கும் வெட்டப்படாத மரத்தின் 
பரிதாப நிலை இது ....!!!

அடுத்த மரணதண்டனை 
தனக்கு தான் என்று தெரிந்த 
தூக்கு தண்டனை கைதிபோல் 
துடித்துக்கொண்டு இருக்கிறது 
வெட்டுப்படாத மரம்...!!!

காற்றடிக்கிறது 
மரம் அசையாமல் இருக்கிறது 
சாகப்போகிறவனுக்கு 
தென்றலென்ன புயலென்ன ...?
காற்றடிக்க அசைந்து கவர்ச்சி காட்ட ...!!!

அந்தோ ஒரு வாகன இரைச்சல் 
இன்று எனக்கு மரணதண்டனையோ 
கருணைமனுக்கூட கொடுக்க முடியாத 
கொடும் பாவியாகி விட்டேனே ...?
நான் விட்டதவறு 
வெட்ட வருபவனுக்கு மூச்சுவிட 
காற்று கொடுத்ததுதான் ....!!!
[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:33 am

தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான் 
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:33 am

எதிர் காலத்தை யோசி ...
நிகழ்காலத்தில் அதிக நுகர்வும் ...
அளவுக்கு மிஞ்சிய வனவழிப்பும்...
தேவையற்ற முதலீடும் ...
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையல்ல ..
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள் சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:34 am

குழந்தை பருவத்தில் 
எதை சொன்னாலும் 
மறுக்கும் மனசு ....!!!

இளமை பருவத்தில் 
காதலி எதை சொன்னாலும் 
தாங்கும் மனசு ...!!!

முதுமை பருவத்தில் 
எதைசொன்னாலும் 
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு 
பார்க்கும் மனசு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:34 am

எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம் 
மண்குழிக்குள் ...!!!

மாருதி வந்தது 
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம் 
மாண்டு போனது ....!!!

தகவல் தொழில் நுட்பம் வந்தது 
தந்தி இறந்தது ...!!!

மாற்றங்கள் வேண்டும் 
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத 
சமுதாயத்துடனும் 
இறந்து போகாத நம் 
கலாச்சாரத்துடனும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:35 am

எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
என்ற நினைப்பே -இன்றைய 
பொருளாதார சமத்துவமின்மைக்கு ..
காரணம் .....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால் 
பொருளாதார சமத்துவம் தானாக 
தோன்றும் ....!!!

வறிய நாடு 
செல்வந்த நாடு 
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ன கோடுதான் 

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல 
மனித எண்ணவிருத்தி தான் 
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் -முயற்சி 
எல்லோருக்கும் வேண்டும் -தியாகம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:36 am

தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!

குப்பையை 
தூக்கியெறியவில்லை 
உனக்கும் பிறருக்கும் 
நோயை தூக்கி எறிகிறாய் ...

சீராக கழிவை சீர் படுத்த 
தெரியாத பகுத்தறிவாளா ...!!!

பன்றிக்காய்ச்சல் 
பறவைக் காய்ச்சல் 
சிக்குன் குனியா 
என்று பகுத்தறிவற்ற ..
உயிரினங்களின் பெயர் ..
கொண்டு படுத்தறிவாளா ..
உனக்கு நோய் வருகிறது ...!!!

தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:36 am

முச்சக்கர வண்டியோடி 
மூன்று வேளை உண்டிக்காக 
முக்காலமும் பாடுபடும் 
கடின உழைப்பாளிகள் 
நாங்கள் .....!!!

கைதட்டுதல் வெற்றியின் 
சின்னம் - எங்கள் சின்னமே 
கைதட்டல் தான்- நீங்கள்
தட்டும் ஒவ்வொரு தட்டலும் 
எங்கள் வீட்டில் பல வயிறுகள் 
நிரப்பப்படுகின்றன ....!!!

தட்டுங்கள் திறக்கப்படும் 
என்றார் -பிரான் 
நீங்கள் தட்டுங்கள் 
நிறுத்தப்படும் முச்சக்கர வண்டி 
என்கிறோம் நாங்கள் ...!!!
எங்கள் வண்டி சிறிது 
ஆனால் நாங்கள் செய்யும் 
சமூக சேவையோ பெரிது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:38 am

படித்தவனுக்கு வேலைவாய்ப்பு - கனவு
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு 
பக்கத்துவீட்டாருக்கு  என் வீட்டில் -கனவு 
பருவ வயதில் காதலில் -கனவு 
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு 
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு 
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு 
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு 
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு 
அடுத்தென்ன 
அடுத்தென்ன 
என்பதே கனவு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 23, 2013 8:59 am

வீடு முழுக்க மாம்பழம்.... 
நல்லவை எல்லாம் ......
நல்லவிலைக்கு விற்பேன் .....
கொஞ்சம் பழுதடைந்தவற்றை .....
ஏழை எளியவர்களுக்கு .....
கொடுப்பேன் -நானும் ......
கொடைவள்ளல் தான்.........!!!

நல்லசோறு நிறைய இருக்கும் 
நாள்முழுவதும் சாப்பிடயாருமில்லை 
விடியல் காலையில் ஏழை எளியவருக்கு 
அன்னமிடுவேன் -நானும் 
கொடைவள்ளல் தான் .....!!!

விதை நெல்லை வைத்திருப்பேன் 
ஏழைவிவசாயிகளுக்கு மனமிரங்கி 
கொடுப்பேன் -காசுவாங்க மாட்டேன் 
நகை வாங்க மாட்டேன் 
விளைச்சலில் ஒரு மூடைக்கு 
இரண்டு மூடை கேட்பேன் 
நானும் கொடைவள்ளல் தான் ....!!!

அலுமாரி முழுவதும் விதம் 
விதமாய் ஆடைகள் ..
சிறுவயதில் பாவித்த 
ஆடை முழுவதும் அழகாக  
அடுக்கி வைப்பேன் -சின்னானாய் 
கிழிந்த ஆடையை ...
ஏழை எளியவர்களுக்கு ...
அன்பளிப்புசெய்வேன் ...
நானும் கொடைவள்ளல் தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 23, 2013 12:27 pm

சமூக வரிகள் அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 9:11 am

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 11:20 am

சொர்க்கத்துக்கோ 
நரகத்துக்கோ 
செல்லவேண்டுமா ..?
காதலித்துப்பார் 
இரண்டும் உன்னருகில் 
இருக்கும் ...!!!
இதைத்தான் ஞானிகள் 
சொன்னார்கள் 
சொர்க்கம் நரகம் 
என்பது நீ வாழும் 
ஒருநாள் வாழ்க்கை 
காதலில் இது 
உடனுக்குடன் புரியும் 
பட்டு தெளிந்த ஒருவனின் 
பட்டுப்போன வார்த்தைகள் 
யார் இருக்கப்போகிறார்கள் 
காதலில் விழாமல் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 24, 2013 2:18 pm

தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 5:59 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 26, 2013 6:27 pm

என்று....
அடங்கும் இந்த 
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட 
கழற்றி எடுக்கும் 
பொன் மோகம் ....!!!

பாடையிலே 
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும் 
பட்டுப்புடவை பல ஆயிரம் 
ரூபாக்கள் ...!!!

துயில் கொள்ளும் 
பட்ட உடல் தூங்கும் 
பெட்டி பல ஆயிரம் 
ரூபாக்கள் ....!!!

பட்ட உடலில் 
காதிலொரு தங்க கம்மல் 
பட்ட உடல் வேக முன் 
பறித்தெடுக்கப்படுகிறது  
என்று மறையும் இந்த 
பொன் மோகம் ....???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 11:25 am

நன்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 5:44 pm

மாட்டு வண்டியில் போன சுகம் 
மாருதியில் இல்லையடா ....!!!

பாட்டி சொன்ன நம் ஊரைப்போல் 
பட்டணம் இல்லையடா ....!!!

நாட்டு நடப்பு எல்லாவற்றையும்
நாழிகையில் சொல்லும் தாத்தா 
நாளிதழை திறந்து பார்த்தால் 
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!

தெருவோர தாக சாந்தி 
தேர் திருவிழாவை 
சிறப்படையும் வைக்கும் 
இப்போ -தெருவுக்கு தெரு 
கோயில் வந்ததால் 
தெருவோரத்தை காணோமடா ...!!!

சமுதாய முன்னேற்றம் 
ஒரு சாண் ஏறினால்
சமூக சீரழிவு முழம் கணக்கில் 
ஏறுதடா .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 8:03 am

நான்கு திசையும் வயல்கள்
நாலாபுற‌மும் குளங்கள்
ஊர் மத்தியில் அம்மன் 
ஆலயம் எல்லை புறத்தில்
வீர‌ பத்திரர் 
பைரவர்
அய்யனார் ஊரை காக்கும்
கடவுள்களாய்.....!!!

சிறு படகுடன் நிறைந்த‌
கடற்கரை தொலைதூரத்தில்
உடைந்த‌ கட்டுமரங்களும்
ஆங்காங்கே சிதறிகிடக்கும்
வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள்
கிராமிய‌ பண்பாட்டை
மாற்றாத‌ வாழ்க்கை முறை....!!!

மாலை நேரத்தில் ஆலமரத்தடி
அறிவு தாத்தாக்களின் மன்றம்
மழைக்கு கூட‌ பாடசாலை 
பக்கம் ஒதுங்காதவர்கள்
புராணக்கதையிலும்
உலக‌ நடப்பிலும் 
படிக்காதமேதைகள்.......!!!

பச்சை மரமொன்றில்
பழங்கள் எதுமில்லை 
கறுப்பாய் ஒரு கனி
அதன் பெயர் தேன் கூடு
அதற்கு ஒரு கல்லால் எறிந்து
தேனிகலைக்கும்போது
தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்....!!!

இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌
அற்புத‌ மனிதன் நான் 
காலம் கடந்து என் பிள்ளையுடன் 
என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்
அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை
காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள்
முடங்கி இருந்தால் என் தாய் 
காவல் தெய்வங்கள் இருந்த‌ 
கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ......!!!

என் கனவு மட்டும் 
தவுடு பொடியாகவில்லை 
என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது
ஆலமரம் கூட‌ அங்கவீனமாய்
கிளைகள் உடைந்த்த‌ நிலையில்
வீடுகள் எல்லாம் துப்பாக்கி 
துளையால் அரிதட்டானது 
ஓடி விலையாடிய‌ வயலுக்குள்
இறங்க‌ விரும்பினேன் அருகில்
ஒரு பலகை ..கவனம்
வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்....!!!

என் ஊரை காணவில்லை 
என் உறவுகளை காணவில்லை 
ஓடி விளையாடிய‌ என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில் 
கண்ட‌ அனுபவித்த‌ துன்பங்கள்
தூரத்தில் என் பழைய‌ நண்பன் 
ஓடி வந்து கட்டிப்பிடித்தான் 
முடியவில்லை அவனால் 
ஒரு கை இல்லை .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சமுதாய கவிதைகள்  Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum