தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் !  நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue Sep 10, 2013 9:21 am

மழைப் பேச்சு !
இது இன்பத் தமிழ் !

நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! 
மின் அஞ்சல் arivumathi@hotmail.com
 
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
மின் அஞ்சல்  annamakaram@gmail.com செல் 94431 59371 
விலை ரூபாய் 200.

 நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி அவர்கள் தமிழ் உணர்வும் தமிழ் இன உணர்வும் மிக்கவர் .திரைப்படத்திற்கு ஆங்கிலச் சொற்கள் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என்ற உறுதியோடு தரமான பாடல்களை மட்டுமே எழுதி வரும் பாடல் ஆசிரியர் . ஈழத் தமிழருக்காக தொடர்ந்து  குரல் கொடுப்பவர் .நான் மதிக்கும் நல்ல கவிஞர் .
.
திருவள்ளுவரின் காமத்துப்பால் போல இன்பத்துப்பால்   வடித்துள்ளார் .
 .மழைப் பேச்சு ! இது  இன்பத் தமிழ் ! உண்மைதான் படிக்கப் படிக்க இன்பம் பிறக்கும் நூல் .எல்லோருக்கும் காதல் நினைவுகளை மலர்விக்கும் அற்புத நூல் .சிறிதும் ஆபாசமின்றி , விரசமின்றி  இன்பத்துப்பால் விருந்து வைத்துள்ளார்கள் .கயிறு மேல் நடக்கும் விதமாக கூடல் பற்றி மென்மையாகவும் , மென்மையாகவும் வடித்துள்ளார் .நூலின் பின் அட்டையில்' மணமக்களுக்கான மகிழ்ச்சி' நூல் என்று உள்ளது . மணமக்களுக்கு மட்டுமல்ல 'மக்களுக்கான மகிழ்ச்சி ' நூல் இது .வாங்கிப் படித்து இன்பம் பெறுக.சின்னச் சின்ன வரிகளின் மூலம் பேரின்பம் விதைத்துள்ளார் .   

மிகத் தரமான அச்சு . கை அடக்க நூல் ,கட்டியான அட்டை ,வண்ணப் புகைப்படங்கள் யாவும் மிக நன்று .அன்னம் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள் .இந்த நூலில் கவிதைகள் சிறப்பா ? வண்ணப் புகைப்படங்கள் சிறப்பா ? என்று வாசகர் மனதில் பட்டிமன்றம் நிகழ்ந்து விடும் .

திருக்குறள் போலவே இரண்டே வரிகளில் இனிய கவிதைகள் வடித்துள்ளார் .இன்ப மழைக்கும் ,இயற்கை  மழைக்கும் பொருந்துவதாக உள்ளது .

நிகழ்கையில் சாரல் 
நினைக்க நினைக்கத்தான் மழை ! 

இளம் இணையர்களின் இனிய உள்ளத்தை கவிதை வரிகளால் படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .உணர்ச்சிகள்  பற்றி இலை மறை காய் மறையாக  நூலில் உள்ள கவிதைகள் உணர்த்துகின்றன .

குளித்துவிட்டுத்தான்  வந்திருக்கிறோம் 
வியர்க்க !  

மண்ணில் வாழும் நிலவு  காதலியையும் ,விண்ணில் உலவும் நிலவையும் ஒப்பிட்டு  ஒரு கவிதை மிக நன்று .

விண்மீன்கள் விழுங்கிச் சிலிர்க்கிறது 
உச்சத்தில் நிலா !

பரவசமான இன்ப நிலையை பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்றார் .காதலியின்   பரவச நிலை கவிதையில் காட்டுகின்றார் .படிக்கும் வாசகனுக்கு அவன் காதலி நினைவு வருவது உறுதி .

மூடிய இமைகளின் மேல் உருட்டும் எலுமிச்சை 
என் உடல் ! 

பாறைகளின் மேல் விழும் அருவியை நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

எல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும் 
உருண்டு கொண்டுதான் இருக்கின்றன 
பாறைக்குள் கூழாங்கல் !

இன்பத்துப்பாலை இனிக்க இனிக்க மணக்க மணக்க கவிதையாக வடித்துள்ளார் .

மூடிய இமை  திறந்த உதடு உச்சம் !  

காதலனிடம் போலியாக வேலை இருப்பதாகச் சொல்லி பொய் சொல்லி  மகிழும் காதலியைப் பற்றி உள்ள வரிகள் .

எத்தனை  எத்தனை   வேலைகள் இருப்பதாக 
எப்படி எப்படியெல்லாம்  பொய் சொல்லியிருக்கிறார்கள் !

ஆண்மையில் பெண்மை ,பெண்மையில் ஆண்மை இருப்பது உண்மை என்பதை உணர்த்தும் வைர வரிகள் .

உச்சத்தில் மீசை முளைத்துப் பார்த்தாய் நீ 
பெண்ணாகிப்  போயிர்ந்தேன் நான் ! 

காதல் எப்படி இருக்க வேண்டும் தீண்டல் எப்படி இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் விதமாக வடித்த வரிகள் நன்று .

தொடுகிற பாவனையில் தொடாமல் வருடு !
இருக்கப்படுவாய் !
நாகரிகம் என்பது காமற்ற தழுவல் !

வான்  மழையையும் இன்ப மழையையும் உணர்த்தும் விதமான உன்னத வரிகள் .இதோ !

இது வானத்தின் சுமையைக் கடலறிதல்  !

காதல் வருடலை , காதலர்களின்  கூடலை கவிதை வரிகளில் உணர்த்துகின்றார் .

அடி வயிற்றில் தலை சாய்த்தால் சுகம் !
தலை வருடல் வாய்த்தால் சுகமே சுகம் !

.பெண்களின் ஒய்வு தினங்களில் அவர்களுக்கு ஒய்வு  வேண்டும் என்ற மனிதாபிமானத்தை நன்கு உணர்த்திஉள்ளார்  .சொற்ச்சிக்கனத்துடன் உணர்த்திஉள்ளார்  .எல்லா ஆண்களுக்கும் புரியும் விதத்தில் உணர்த்திஉள்ளார்  .

அந்த மூன்று நாட்களில் நீ தாய் ! 

காதல் கவிதைகளில் முத்தம் பற்றி இல்லாமல் இருக்குமா ?இதோ முத்தம் பற்றி .

சொல்ல முடியாத பாராட்டுதல்கள் முத்தங்களாகின்றன !
கண்களை திறக்காதே ! முழுமையாகப்  பார்க்கலாம் திருடப்படுவதை !

நூலில் உள்ள பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்ட வேண்டும் என்பதற்காக மேல பக்கத்தை மடித்து வைத்து வந்தேன் .நூலின் எல்லாப் பக்கத்தையும் மடித்து விட்டேன் .பின் மறு பரிசீலனை செய்து மடித்ததை எடுத்து விட்டு மேற்கோளைக் குறைத்துக் கொண்டேன் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .





நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum