தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்ககாலத் தொழில்நுட்பம்.

2 posters

Go down

சங்ககாலத் தொழில்நுட்பம். Empty சங்ககாலத் தொழில்நுட்பம்.

Post by gunathamizh Mon Jul 05, 2010 11:59 am


வீட்டைவிட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்பி வந்தால் தான் உண்டு.
அந்த அளவுக்கு வெளியே ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.

சாலை விபத்து
திருடர் பயம்
இயற்கை சீற்றங்கள்
தீவிரவாதிகளின் தாக்குதல்….

என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் நம் உறவினர்களோ, நண்பர்களோ எங்கும் சென்றால் அவர்கள் சென்றவுடன் நல்லபடியாகச் சென்றுசேர்ந்துவிட்டோம் என்பதைத் தெரிவிக்கச்சொல்லுவோம். அல்லது நாமாவது அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வோம்.

இன்றைய தகவல் பரிமாற்றத்துக்கு…

அலைபேசி
இணையவழி பேசி (ஒலி - ஒளி)

ஆகியன பெரிதும் பயன்படுகின்றன…

கொஞ்ச காலம் பின்னோக்கிச் சென்றுபாருங்கள்..

பேஜர் - தொலைபேசி - கடிதம் - தூதன் - புறா - அன்னம் ………………


எத்தனை படிநிலைகளைக் கடந்து நாம் வந்துள்ளோம்.

சங்ககாலத்தில் இதே தகவல் பரிமாற்றத்துக்கு என்ன பயன்படுத்தியிருப்பார்கள்?


◊ வழிதவறியவாறு காட்டில் சிக்கிக்கொண்டவர்கள் சேர்ந்து இசைக்கருவிகளை முழக்குவர்.

◊ மதம்பிடித்த யானையின் வருகை, கரைகடந்து வரும் ஆற்றுவெள்ளம் மற்றும் போர்தொடர்பான அறிவிப்புகளை முரசரைந்து தெரிவி்த்தனர்.


சரி அன்பு கலந்த தகவல்தொடர்புப் பரிமாற்றம் ஒன்றைக் காண்போம்..

தலைவியை மணந்துகொள்ளும் எண்ணமின்றி நாள்தோறும் துன்பம் நிறைந்த காட்டுவழியில் தலைவன் இரவுக்குறியின்கண் வந்துவந்து தலைவியைச் சந்தித்து மீண்டான். அதுகண்ட தோழி,

இரவில் வரும்போது அவன் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து எடுத்துக்கூறி இனி இரவில் வராதே என இரவுக்குறியை மறுத்துத் தலைவியை மணந்துகொள்ளமாறு வற்புறுத்தினாள்.


மலையிலிருந்து ஓடிவரும் அருவியின் ஒலியுடன், வண்டின் ஒலி சேர்ந்தது. முழவின் ஒலியுடன் யாழ் ஒலி சேர்ந்து ஒலிப்பதுபோல இம்மென்று ஒலிக்கும், மேலான வெற்றியினையும், அகன்ற இடத்தினையும் உடைய எல்லோருக்கும் பயன்கொடுக்கும் மலையையுடைய தலைவனே!

நீ கடந்து வரும் காடோ சிறுவழிகளையுடையது.
விலங்குகள் செல்லும் அவ்வழிகளில் யானைகளும் திரியும்.
வானத்தின் மீது இடிமுழங்கும். மேலும்,
அச்சம் தரும் பாம்பும் புலியும் அவ்வழிகளில் அதிகமாக இருக்கும்.
இத்தகைய வழியில் நீ இரவில் தனியாக வருகின்றாய்….

நீ தலைவியை மணந்துகொள்ள விரும்பினால் அதற்குத் தடையேதும் இல்லை! நீ விரும்பிய வாறே மணந்துகொள்ளலாம்.

“ஆதலால் இன்றுமுதல் இரவில் இங்கு அவ்வாறு வருதல் வேண்டாம்!
அவ்வாறு நீ வந்தால் நீ வரும்,செல்லும் வழிகுறித்து அஞ்சியிருக்கும் எங்கள் துன்பம் தீரும் பொருட்டு உன் மலையை நீ அடைந்தபின்னர்,

வேடுவர்கள் நாயை அழைக்க ஊதும், ஊதுகொம்பினை நீ சற்றே ஊதுதல் வேண்டும்.“

என்கிறாள் தோழி.

கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
5 வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
10 ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
15 நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!


கபிலர்


அகநானூறு 319. பாலை

இரவுக்குறி வந்த தலைமகனை வரவுவிலக்கி வரைவு கடாயது.

வரவு விலக்குதல் - வருகையை நிறுத்துதல்
வரைவு கடாவுதல் - திருமணத்துக்குத் தூண்டுதல்.

பாடல் வழி…

○ வரைவு விலக்குதல், வரைவு கடாவுதல் என்னும் அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.

○ நம் அன்புக்குரியவர்கள் எப்போதும் துன்பமின்றி வாழவேண்டும் என்றே நம் மனது நினைக்கும். ஆனால் வெளியே சென்றால் துன்பம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களின் நலத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதாவதொரு தகவல்தொடர்புக் கருவிகள் தேவைப்படுகின்றன.

இன்று நம் நலனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவி்ட்டன. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துவிட்டனவோ என்று நான் சில நேரங்களில் எண்ணுவதுண்டு.


இப்பாடலில் தலைவன் மீது தலைவி கொண்ட அன்பு.
அவன் வரும் வழிகுறித்த அச்சம் ஆகியன நீங்க அவர்கள் கடைபி்டித்த தொழில்நுட்பம் - ஊதுகொம்பு ஊதுதல் ஆகும்.

தொழில்நுட்ப வசதி மிகவும் பழமையானதாக இருந்தாலும் அன்பு கலந்து இதனைப் பார்க்கும் போது நெகிழ்வாகவுள்ளது.

இப்படியெல்லாம் படிநிலைகளைக் கடந்துதான் நாம் வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இப்பாடல்வரிகள் துணைநிற்கின்றன.

http://www.gunathamizh.blogspot.com/
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

சங்ககாலத் தொழில்நுட்பம். Empty Re: சங்ககாலத் தொழில்நுட்பம்.

Post by eeranila Mon Jul 05, 2010 7:19 pm

கற்று வந்த அனுபவங்கள் தானே இன்று புதியவைகளாக புடம் போட பட்டு மின்னுகிறது, நல்ல தகவல் தொகுப்பு வாழ்த்துக்கள்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சங்ககாலத் தொழில்நுட்பம். Empty Re: சங்ககாலத் தொழில்நுட்பம்.

Post by gunathamizh Tue Jul 06, 2010 11:21 am

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே. அடிதான் விழும் ஓ
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

சங்ககாலத் தொழில்நுட்பம். Empty Re: சங்ககாலத் தொழில்நுட்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum