தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

+2
தங்கை கலை
Ponmudi Manohar
6 posters

Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:11 pm

கவிதையை மாற்றிய கண்ணதாசனும், அடிப்பட்ட கிளியும்
பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Kannadasan
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது. 


பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Kundu+killi
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.

கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''

நன்றி ;கவிதை வீதி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:12 pm

இப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...!
பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Arhtie+r
அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.


ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.


அதற்கு ஆர்தர், “பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.


“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.


அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.

‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.

ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!

நன்றி ;கவிதை வீதி தளம்


______
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:12 pm

இவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...!

Enlarge this image
பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  07-NS+Krishnan
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. 

அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், "உப்பை எடுத்தார்...உப்பை எடுத்தார்' என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார். 

மக்கள் திருதிருவென விழித்தனர்.உடனே கலைவாணர், "எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்' என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு.

பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:13 pm


Enlarge this image

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Vbk-24opedbhashyam_847094e
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார் வி.பாஷ்யம் ஐயங்கார். அவர் தம்முடைய ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். 

ஒருநாள் அந்த வெள்ளைக்காரர் இல்லத்துக்குள் ஐயங்கார் நுழைந்ததும் அங்கே இருந்த நாய் பாய்ந்து குரைத்தது. அதனால் ஐயங்கார் ஓட நேரிட்டது. அதைக் கண்ட வெள்ளையர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்."

"என்ன ஐயங்கார்! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியை மறந்து விட்டீர்களோ?'' என்றார்.""நண்பரே! அந்தப் பழமொழியை நீங்கள் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஆனால் நாய்க்கு அந்த பழமொழி தெரியுமா?'' என்று சாமர்த்தியமாகக் கேட்டார் ஐயங்கார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:13 pm

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  200px-Swami_Vivekananda_Jaipur
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்....

என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதைவிட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட, அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...
(அறிஞர்கள் வாழ்வில்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:14 pm


Enlarge this image

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  481179_244798875653173_1157080669_n
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். பிறகு அல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. 
டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை… ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.

அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு 
கஷ்டபடுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார். உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:14 pm

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Funny-team-meeting
அரசவைக் கவிஞர் பீர்பாலுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. அதை அமைச்சர் ஒருவர் அறவே வெறுத்தார்.

ஒரு சமயம் அக்பர் நமது அமைச்சர்களுடனும், பீர்பாலுடனும் உலாவச் ‌சென்றார்.

அப்போது வழியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதை ஒரு புகையிலைச் செடியைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு அப்பால் சென்றது.

குறிப்பிட்ட அமைச்சர் அதனை பீர்பாலுக்கு சுட்டிக்காட்டி, அந்த கழுதையைப் பாருங்கள், அதுகூட புகையிலைச் செடியையே வெறுக்கிறது என்று கேலி பேசினார்.

பீர்பாலோ அடக்கமான குரலில் உண்மைதான் அமைச்சரே! கழுதைகளுக்கு எப்போதுமே புகையிலையைக் கண்டால் பிடிப்பதில்லைதான் என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:15 pm

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Anna
அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்

யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு

-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.

எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.

அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.


___________________________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:15 pm

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Mohandas_gandhi_586
மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அவர் காந்திஜியை மட்டம் தட்ட விரும்பி அவரிடம் “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களைவிட சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாக கேட்டார்.

இதைப்புரிந்து கொண்ட காந்திஜி மெல்ல புன்னகைத்தபடி “உங்களது ஆங்கிலேய அரசை சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப்போன்ற மிகச் சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...” என்றார்.

காந்திஜி அவர்களின் வாழ்க்கை, அவருடைய நாட்கள், அவருடைய வார்த்தைகள் அத்தனையும் இன்று வாழும் தலைமுறைக்கு வேதங்கள். இன்று உலகம் இந்தியாபைப்பார்த்து... மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உத்தமர் காந்தி. அவருடைய கொள்கைகள்.. அவருடைய போராட்டங்கள், அவருடைய வழிமுறைகளை உலகம் பின்பற்றிக்கொண்டு வருகிறது.. அதை நாம் மறந்துக்கொண்டு வருகிறோம்...

உத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:16 pm

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  K.kamaraiar+image.jpg+%25285%2529
ஒரு சமயம் காங்கிரஸ் பேரியக்கத்தோடு தொடர்புடைய ஒரு பட அதிபரின் படத் தொடக்க விழாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார்.


படப்பிடிப்பைத் தொடங்கிவைத்து பெருந்தலைவர் பேசும்போது 'எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும், தயாரிப்பாளருக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால் நான் இவ்விழாவிற்கு வந்திருக்கிறேன்.


என்னை கைராசிக்காரன், அது, இது என்றெல்லாம் இங்கே புகழ்ந்து ‌பேசினார்கள். கைராசியை நான் நம்புகிறவன் இல்லை, உழைப்பை மட்டுமே நம்புகிறவன். 

என்னைப் படத் தொடக்க விழாவிற்கு கூப்பிட்டதும் படத்துக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அதற்கு பார்த்தால் பசி தீரும்-னு சொன்னாங்க. அதெப்படி பார்த்தால் பசிதீரும்? கார்லே வரும் போது கூட அதைப் பற்றித்தான் யோசனை பண்ணிக்கிட்டு வந்தேன்.


இங்கே எல்லோரும் பேசினபோதுதான் எனக்கு விவரம் புரிஞ்சது. நீங்க எல்லாம் படாத பாடுபட்டு எடுக்கிற படத்தை ஏரளாமான மக்கள் பார்த்தாங்கன்னா உங்களோட பசி தீரும் அப்படித்தானேன்னேன்.” என்று சொல்ல கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 9:16 pm

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Stalin
இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ‌‌அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது... என்னுடைய கனவில் நேற்று கடவுள் வந்து போரில் நேசநாடுகள் பெற்ற வெற்றிக்கு உன்னுடைய ராஜதந்திரம்தான் காரணம் என்று சொன்னதாக சர்ச்சில் குறிப்பிட்டார்.

உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன் என்றால் நேற்றுதான் கடவுள் என்னுடைய கனவில் வந்து அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உதவிய போர்க் கருவிகள்தான் வெற்றிக்குக் காரணம். என்று என்னிடம் சொன்னார், என்று குறிப்பிட்டார்.

இரண்டு பேர் பேசியதையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஸ்டாலின் நீங்கள் இருவர் சொல்வதிலும் உண்மை இல்லை. நான் உங்கள் இருவருடைய கனவிலும் வரவில்லையே. என்றார்.

நேரத்தில் கையாளும் வார்த்தை நகைச்சுவையாகவும், வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாறியதை இது காட்டுகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by Ponmudi Manohar Sun Sep 22, 2013 9:24 pm

மிக்க மகிழ்ச்சி
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by தங்கை கலை Sun Sep 22, 2013 10:28 pm

அனைத்தும் அரும
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by Muthumohamed Mon Sep 23, 2013 1:27 am

நல்ல வரலாற்று பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 24, 2013 1:28 pm

அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 4:40 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by ranhasan Tue Sep 24, 2013 6:19 pm

இந்த மாதிரி செய்திகள் படிப்பதில் எனக்கு மிகவும் ஆர்வம்... இனியவன் இனிக்க இனிக்க பதிவுகள் இடுகிறீர்கள்.... தொடருங்கள் தங்கள் நற்பயணத்தை...ஆமோதிக்கிறேன்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 8:55 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 8:55 pm

நாவடக்கம் யாருக்கு தேவை..? எதிர்கட்சி தலைவர் கேள்வி..?

அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்

யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு

-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும்.  அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.

எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.

அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை  Empty Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum