தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
4 posters
Page 1 of 1
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
..ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
அலைபேசி 9842436640.
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
அன்பார்ந்த நண்பர் திரு .இரவி அவர்களுக்கு ,இல்லை ,இல்லை, ஹைக்கூ இரவி அவர்களுக்கு , வணக்கம் .உங்களுடன் கவச குண்டலமாய் ஹைக்கூ ,அப்படி அழைப்பதுதானே முறை !
உங்கள் 'ஹைக்கூ ஆயிரம் ' நூலினை ( விழா நாளிலேயே , 15.8..13.)இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன் .
நெட்டோட்டமான வாசிப்பு என்று நினைக்க வேண்டாம் .நிதானமாக உள்வாங்கிக் கொண்ட வாசிப்பு .மருத்துவர் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்துப் பின்னர் வெளியில் விடச் சொல்வாரே அது மாதிரி .
ஜப்பானில் ஹைக்கூ கவிதைகளுக்கு விளக்கம் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ,படித்துமிருக்கிறேன்.முனைவர் லீலாவதி அவர்களின் நூலுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் தந்துள்ள விரிவான விளக்கம் .
ஆனால் ஹைக்கூ வுக்கு அதற்குரிய வடிவிலேயே இலக்கணம் சொல்லியிருக்கிறீர்கள் ! இலக்கியம் தந்திருக்கிறீர்கள்.சாமுத்திரிகா லட்சணமுள்ள ஆணையோ , பெண்ணையோ கண்முன்னே நிறுத்துவது போல .
கணினியுகத்தின்
கற்கண்டு
ஹைக்கூ !
படித்தால் பரவசம்
உணர்ந்தால் பழரசம்
ஹைக்கூ !
இப்படி வேறு யாரும் இலக்கணம் சொல்லியிருப்பார்களா ? தெரியவில்லை .சொல்லியிருதாலும் குற்றமில்லை .தமிழ் யாப்புக்குப் பலபேர் இலக்கணம் செய்ய வில்லையா ,என்ன ?
அணிலின் கோணல் முதுகில் உள்ள மூன்று கோடுகளும் கூட, உங்களுக்கு ஹைக்கூவை நினைவூட்டுகின்றன .அந்த அளவிற்கு ஹைக்கூ பித்தர் நீங்கள் . காடும்' செடியும் அவளாகத் தோன்றும் என் கண்களுக்கே ' என்று பாடிய காதல் பித்ததனைப் போல .
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
நூலை விடாமல் தொடர்ந்து படிப்பதற்குக் காரணமானதே இந்த முதற் கவிதைதான் .( FIRST) ஓர் எதிர்பார்ப்பை என்னுள் ஏற்படுத்தியதும் இந்த " முதன்மைக் கவிதைதான் . ( BEST)
தாய் மொழிப் புறக்கணிப்பிலும் பிறமொழி வெறியிலும் மூழ்கிக் கிடக்கும் மூடர்களான நம்மவரை நினைத்து நினைத்துப் புண்ணாகும் தமிழ் நெஞ்சங்களுக்கு இதமான மருந்து இந்த ஹைக்கூ .புதுமைப் பித்தன் போன்றோருக்கே கைவரதக்க எள்ளலை மிக இலாவகமாக கையாண்டுருக்கிறீர்கள் .தொடக்கத்தில் உள்ள இந்தப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் கொள்ளலாம் .பொருந்தும் .
நூல் முடிவில் உள்ள ஆயிரமாவது கவிதை .
வழிமேல் விழிவைத்து
முதியோர்கள் இல்லத்தில்
முதியோர்கள் !
என்று முடிகிறது .முதற் கவிதைக்கும் இதற்கும் ஒரு வகையில் ' அந்தாதி முடிச்சுப் போட்டு அழகு பார்க்கலாம் .இதனைப் பொருளிசை' அந்தாதி ' எனக் கூறும் தமிழ் இலக்கணம் .
அன்றன்று தோன்றும் புதுமையோடும் கை குலுக்கும் தன்மை நம் பழந்தமிழருக்கு உண்டு . அதனை விளக்கிச் சொல்ல இங்கு இடமில்லை .
நம் சமகாலச் சரிவுகளின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊடுருவிச் சென்று விமர்சனம் செய்கிறது உங்கள் ஹைக்கூ .
உங்கள் விசாலப் பார்வையின் விளைவு இது .உதாரணங்கள் காட்டினால் ஒரு நூற்றையும் தாண்டி விடும் .ஹைக்கூக்களின் எண்ணிக்கை .ஒரு சோற்றுப் பதமாகச் சில .
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ்ச்சங்க ரோடு !
இடித்துக் கட்டியதால்
நொடித்துப் போனார்கள்
வாஸ்து பலன் !
விரல் நுனியில்
விரிந்தது உலகம்
இணையம் !
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவற்றைப் படிக்கும் வாசகர்கள் ஆவலுடன் நூலை வாங்கிப் படிக்க வேண்டாமா ?அதற்க்கு இடைச் சுவராய் நான் இருக்க விரும்பவில்லை .
அடி வயிற்றில்
இடி விழுந்தாற்ப்போல
அண்ணன் என்றாள் !
இது ,
அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகி விட்டாள் !
என்னும் கலாப் பிரியன் புதுக்கவிதையை நினைவூட்டியது .
நாய் பெற்ற
தெங்கம் பழம்
சுதந்திரம் !
இதுபோல பழைய இலக்கியத் தொடர்களையும் பழமொழிகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள ஹைக்கூக்கள் சிறப்பாக இருக்கின்றன . ' பழமையிலே புது நினைவு பிறக்கும் 'என்பதைக் காட்டுமிடங்கள் இவை .உங்களின் அத்தகைய கவிதைகளைப் படித்தபோது ,
கை புனைந்து இயற்றாக்
கவின்பெறு வனப்பு
இயற்கை !
என்று முருகாற்றுப் படையையும் !
நெடிது நாள் உண்ட
எச்சில்
தாம்பத்யம் !
என்று கம்பனையும் பயன்படுத்தி ஹைக்கூ எழுதலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது .இதைத் திருடி எழுதுபவர்கள் எழுதட்டும் .
தமிழ்நாட்டில் உண்மையான படைப்பாளிகளைத் தவிர இன்று பெரும்பாலோர் செய்யும் ' இலக்கியப்பணி ' இதுதானே !
' ஹைக்கூ ஆயிரம் ' என்று நீங்கள் தலைப்பிட்ட போதிலும் சில ஹைக்கூ கவிதைகள் திரும்பவும் முகம் காட்டுகின்றன .( பார்க்க பக் 62,68,120,73,83,168.)படைத்தவரின் பரவசத்தின் விளைவாகக் கூட இருக்கலாம் .தவறு இல்லை .
ஆயிரத்திற்குச் சில எண்கள் கூடினாலும் குறைந்தாலும் ' ஆயிரம் ' என்னும் பேரெண்ணாகவே கொள்ளும் மரபு தமிழ் உண்டு .சான்று நாலாயிரமும் ,அதன் ஒவ்வொரு ஆயிரமும் .
நீள நினைந்தும் அவற்றையெல்லாம் எழுத நேரமில்லை .அப்படி எழுதினாலும் படிக்க ஆளில்லை .
' சிறுகட்டுரைகளே இன்றைய வாசகர்களுக்கு ஏற்றவை ' என்பதை அனுபவத்துவமாக அறிந்து கொண்டவன் நான் .அண்மைக் காலத்தில் நிறைவாக உங்களின் ஹைக்கூ வைப் படித்த தாக்கத்தில் என் மனத்திலும் ஒரு ஹைக்கூ .
வைக்க இடமில்லை
வச்சதை எடுக்க முடியவில்லை
என் புத்தக அலமாரி !
இது கான மயில் அன்று என்பது எனக்கு நன்றாகவே தெரியும் .
உங்கள் படைப்பு எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பைக் ( IMPACT)காட்டவே எழுதினேன்.
.
தொடர்ந்து எழுதுக .வெல்க .
.
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
அலைபேசி 9842436640.
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
அன்பார்ந்த நண்பர் திரு .இரவி அவர்களுக்கு ,இல்லை ,இல்லை, ஹைக்கூ இரவி அவர்களுக்கு , வணக்கம் .உங்களுடன் கவச குண்டலமாய் ஹைக்கூ ,அப்படி அழைப்பதுதானே முறை !
உங்கள் 'ஹைக்கூ ஆயிரம் ' நூலினை ( விழா நாளிலேயே , 15.8..13.)இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன் .
நெட்டோட்டமான வாசிப்பு என்று நினைக்க வேண்டாம் .நிதானமாக உள்வாங்கிக் கொண்ட வாசிப்பு .மருத்துவர் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்துப் பின்னர் வெளியில் விடச் சொல்வாரே அது மாதிரி .
ஜப்பானில் ஹைக்கூ கவிதைகளுக்கு விளக்கம் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ,படித்துமிருக்கிறேன்.முனைவர் லீலாவதி அவர்களின் நூலுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் தந்துள்ள விரிவான விளக்கம் .
ஆனால் ஹைக்கூ வுக்கு அதற்குரிய வடிவிலேயே இலக்கணம் சொல்லியிருக்கிறீர்கள் ! இலக்கியம் தந்திருக்கிறீர்கள்.சாமுத்திரிகா லட்சணமுள்ள ஆணையோ , பெண்ணையோ கண்முன்னே நிறுத்துவது போல .
கணினியுகத்தின்
கற்கண்டு
ஹைக்கூ !
படித்தால் பரவசம்
உணர்ந்தால் பழரசம்
ஹைக்கூ !
இப்படி வேறு யாரும் இலக்கணம் சொல்லியிருப்பார்களா ? தெரியவில்லை .சொல்லியிருதாலும் குற்றமில்லை .தமிழ் யாப்புக்குப் பலபேர் இலக்கணம் செய்ய வில்லையா ,என்ன ?
அணிலின் கோணல் முதுகில் உள்ள மூன்று கோடுகளும் கூட, உங்களுக்கு ஹைக்கூவை நினைவூட்டுகின்றன .அந்த அளவிற்கு ஹைக்கூ பித்தர் நீங்கள் . காடும்' செடியும் அவளாகத் தோன்றும் என் கண்களுக்கே ' என்று பாடிய காதல் பித்ததனைப் போல .
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
நூலை விடாமல் தொடர்ந்து படிப்பதற்குக் காரணமானதே இந்த முதற் கவிதைதான் .( FIRST) ஓர் எதிர்பார்ப்பை என்னுள் ஏற்படுத்தியதும் இந்த " முதன்மைக் கவிதைதான் . ( BEST)
தாய் மொழிப் புறக்கணிப்பிலும் பிறமொழி வெறியிலும் மூழ்கிக் கிடக்கும் மூடர்களான நம்மவரை நினைத்து நினைத்துப் புண்ணாகும் தமிழ் நெஞ்சங்களுக்கு இதமான மருந்து இந்த ஹைக்கூ .புதுமைப் பித்தன் போன்றோருக்கே கைவரதக்க எள்ளலை மிக இலாவகமாக கையாண்டுருக்கிறீர்கள் .தொடக்கத்தில் உள்ள இந்தப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் கொள்ளலாம் .பொருந்தும் .
நூல் முடிவில் உள்ள ஆயிரமாவது கவிதை .
வழிமேல் விழிவைத்து
முதியோர்கள் இல்லத்தில்
முதியோர்கள் !
என்று முடிகிறது .முதற் கவிதைக்கும் இதற்கும் ஒரு வகையில் ' அந்தாதி முடிச்சுப் போட்டு அழகு பார்க்கலாம் .இதனைப் பொருளிசை' அந்தாதி ' எனக் கூறும் தமிழ் இலக்கணம் .
அன்றன்று தோன்றும் புதுமையோடும் கை குலுக்கும் தன்மை நம் பழந்தமிழருக்கு உண்டு . அதனை விளக்கிச் சொல்ல இங்கு இடமில்லை .
நம் சமகாலச் சரிவுகளின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊடுருவிச் சென்று விமர்சனம் செய்கிறது உங்கள் ஹைக்கூ .
உங்கள் விசாலப் பார்வையின் விளைவு இது .உதாரணங்கள் காட்டினால் ஒரு நூற்றையும் தாண்டி விடும் .ஹைக்கூக்களின் எண்ணிக்கை .ஒரு சோற்றுப் பதமாகச் சில .
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ்ச்சங்க ரோடு !
இடித்துக் கட்டியதால்
நொடித்துப் போனார்கள்
வாஸ்து பலன் !
விரல் நுனியில்
விரிந்தது உலகம்
இணையம் !
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவற்றைப் படிக்கும் வாசகர்கள் ஆவலுடன் நூலை வாங்கிப் படிக்க வேண்டாமா ?அதற்க்கு இடைச் சுவராய் நான் இருக்க விரும்பவில்லை .
அடி வயிற்றில்
இடி விழுந்தாற்ப்போல
அண்ணன் என்றாள் !
இது ,
அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகி விட்டாள் !
என்னும் கலாப் பிரியன் புதுக்கவிதையை நினைவூட்டியது .
நாய் பெற்ற
தெங்கம் பழம்
சுதந்திரம் !
இதுபோல பழைய இலக்கியத் தொடர்களையும் பழமொழிகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள ஹைக்கூக்கள் சிறப்பாக இருக்கின்றன . ' பழமையிலே புது நினைவு பிறக்கும் 'என்பதைக் காட்டுமிடங்கள் இவை .உங்களின் அத்தகைய கவிதைகளைப் படித்தபோது ,
கை புனைந்து இயற்றாக்
கவின்பெறு வனப்பு
இயற்கை !
என்று முருகாற்றுப் படையையும் !
நெடிது நாள் உண்ட
எச்சில்
தாம்பத்யம் !
என்று கம்பனையும் பயன்படுத்தி ஹைக்கூ எழுதலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது .இதைத் திருடி எழுதுபவர்கள் எழுதட்டும் .
தமிழ்நாட்டில் உண்மையான படைப்பாளிகளைத் தவிர இன்று பெரும்பாலோர் செய்யும் ' இலக்கியப்பணி ' இதுதானே !
' ஹைக்கூ ஆயிரம் ' என்று நீங்கள் தலைப்பிட்ட போதிலும் சில ஹைக்கூ கவிதைகள் திரும்பவும் முகம் காட்டுகின்றன .( பார்க்க பக் 62,68,120,73,83,168.)படைத்தவரின் பரவசத்தின் விளைவாகக் கூட இருக்கலாம் .தவறு இல்லை .
ஆயிரத்திற்குச் சில எண்கள் கூடினாலும் குறைந்தாலும் ' ஆயிரம் ' என்னும் பேரெண்ணாகவே கொள்ளும் மரபு தமிழ் உண்டு .சான்று நாலாயிரமும் ,அதன் ஒவ்வொரு ஆயிரமும் .
நீள நினைந்தும் அவற்றையெல்லாம் எழுத நேரமில்லை .அப்படி எழுதினாலும் படிக்க ஆளில்லை .
' சிறுகட்டுரைகளே இன்றைய வாசகர்களுக்கு ஏற்றவை ' என்பதை அனுபவத்துவமாக அறிந்து கொண்டவன் நான் .அண்மைக் காலத்தில் நிறைவாக உங்களின் ஹைக்கூ வைப் படித்த தாக்கத்தில் என் மனத்திலும் ஒரு ஹைக்கூ .
வைக்க இடமில்லை
வச்சதை எடுக்க முடியவில்லை
என் புத்தக அலமாரி !
இது கான மயில் அன்று என்பது எனக்கு நன்றாகவே தெரியும் .
உங்கள் படைப்பு எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பைக் ( IMPACT)காட்டவே எழுதினேன்.
.
தொடர்ந்து எழுதுக .வெல்க .
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
நாங்களும் வாழ்த்துகிறோம்... வளர்க... வெல்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
வாழ்த்துக்கள்!
mravikrishna- புதிய மொட்டு
- Posts : 22
Points : 24
Join date : 03/06/2012
Age : 60
Location : Tiruvannamalai
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
வாழ்த்துக்கள்!
mravikrishna- புதிய மொட்டு
- Posts : 22
Points : 24
Join date : 03/06/2012
Age : 60
Location : Tiruvannamalai
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|