தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படிச்சு பாருங்க சிரிப்பீங்க

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 5:58 pm

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….

மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?

நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.
நம்ம மாடா…?
ஆமாங்க…

அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ­..
ஏன்டா…?
அவமானத்தில்தான் ­…
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்.­.:த

நன்றி ;மயூரேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 6:01 pm

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான். அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார் அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான். எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான். 

என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான் அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம். மருத்துவரும்  இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன் என்றார் பின் அவர் அவனிடம்திருபி கேட்டார் இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா?  அவன் சொன்னான் வராது. 

மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், மருத்துவர்  பார்த்தாயாஉன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா என்று கேட்டார். 

அவன் மிக அமைதியாக சொன்னான் : இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்

நன்றி ;மயூரேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 6:05 pm

நாராயணசாமிக்கு தற்போது பார்த்துவரும் பணியை தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளதால், ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்,

“புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று.

நாராயணசாமி சொன்னார்,

“நங்கூரத்தை நாட்டுவேன்”என்று.

“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”

இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில்,

“…பத்தாவது புயல் !” என்றார் தேர்வு நடத்தியவர்.

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”

“ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”

நாராயணசாமி சொன்னார்,

“தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான்”

நன்றி ;மயூரேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 27, 2013 3:26 pm

ஹ ஹ ஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 6:43 pm

இவர திருத்தவே முடியாதுங்க ….?

ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னையே
தொலைக்காட்சி விளம்பரம் செய்யும் ஒருவர் இருந்தார் …

கணவன் மனைவி அவரிடம் சென்றால் ..உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை அதானால் தான்
உங்களுக்குள் சண்டை என்பார் …!
யாரும் நோய் என்று சென்றால் …!
வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் …!

ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் …!
மனிதனுக்கு இருதயம் வலது பக்கம் இருக்கிறது என்றார்..பாருங்களேன் …! அப்படி இருந்தால் தான் வாழமுடியும் . வாஸ்து சாஸ்திரப்படி அவன் வாழமுடியும் …என்றார் ..!

இவருக்கு விளக்கம் கொடுக்க பலர் முன் வந்து
ஐயா இருதயம் பக்கம் இடது இருக்கிறது என்றார்கள் ..அவர் நம்புவதாக இல்லை .
அவரை அழைத்துக்கொண்டு ஒரு வைத்தியாசாலையில் இறந்தவரின் உடலை வெட்டி காட்டி பார்த்தீர்களா ..? இருதயம் பக்கம் இடது இருக்கிறது..என்றனர் ..!

இவருக்கு வாஸ்து சாஸ்திரப்படி வலது பக்கம் இருக்காததால்தான் இவர் இறந்து விட்டார் என்றார் …பாருங்களேன் …!

இவர திருத்தவே முடியாதுங்க ….!

படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 6:49 pm

நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.

பேச்சுவாக்கில் “அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது” என்று பந்தயமே கட்டினார் மண்ணுசாமி.

நாராயணசாமியும் விடவில்லை. “பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்” என்றார் நம்பிக்கையோடு

பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.

நாராயணசாமிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.

பந்தயத்தின்படி, வென்ற மண்ணுசாமிக்கு விருந்து வைத்தார் நாராயணசாமி.

அப்போது மண்ணுசாமி,

“உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன்” என்றார்.

அதற்கு நாராயணசாமி வருத்தத்தோடு சொன்னார்,

“நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 6:55 pm

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் ” நான் எனது கணவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.

அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்” இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை..

இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ருபாய் பனமும் இருந்தது.

அதை பார்த்து “இது என்ன?” என்று கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பதில்

” உனக்கு எப்பொழுதெல்லாம்­ துரோகம் செய்கிறேனோ..

அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்

“கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்”

சரி அதில் ஒரு லட்ச ரூபாய் என்ன?

கணவன் சொன்னான்.

அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு” என்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 6:57 pm

இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.

#யாருகிட்ட…நாங்கெல்லாம்…..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 7:00 pm

நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார்.

அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.

அவரைப் பார்த்ததும் மனைவி , “என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டாள்.

அதற்கு நாராயணசாமி, “ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது” என்றார்.

“அப்படியானால்… நீங்கள் யாரிடமாவது
கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே… உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?” என்றாள் அவர் மனைவி.

மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் நாராயணசாமி,

“அது எனக்கு தெரியாதா…நான் அப்படித்தான் நினைத்தேன்… ஆனால் என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை..காலியாக இருந்தது… அப்படி இருக்கும்போது நான் யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 28, 2013 11:10 am

ரொம்பவே சிரித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:23 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:06 pm

டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார் நம்ம நாராயணசாமி.

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,

“ஹலோ” என்றார்.

“என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…” என்றது மறுமுனை.

“எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…”

“இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…”

“ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..”

“சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…”

“ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார் நாராயணசாமி.

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியத்துடன்,

“என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட… நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க… கிரேட் மச்சி…’ என்றார்கள்.

ஆனால் நாராயணசாமியோ பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார்,

“எக்ஸ்கிஸ் மி சார் … இந்த மொபைல் போன் யாரோடது…?”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:07 pm

MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..
அங்கே ஒருசெக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..
அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,
பக்கத்திலஒருகுடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..
அவர்கிட்டகேட்டான்…
MBA : மாடுமட்டும்தனியாசெக்கு சுத்திட்டுஇருக்கே..?
விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,
MBA : நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..
MBA : அதுசுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டைகாலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by அரசன் Thu Nov 28, 2013 5:09 pm

மொபைல் யாரோடது தலைவரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:13 pm

ஒரு குளத்துல 20 எறும்புகள் குளித்துக் கொண்டு இருந்ததாம்! அப்ப ஒரு யானை டக்குனு குளத்துல குதித்ததாம். தண்ணி தெறிச்ச வேகத்துல 19 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்ததாம். 

ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம்.

என்னன்னு கத்துச்சாம்…..?

டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:14 pm

உண்மையா என்ர இல்லையுங ..<img src=" longdesc="90" />
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by அரசன் Thu Nov 28, 2013 5:15 pm

என்ன ஒரு தன்னம்பிக்கை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:19 pm

ஒரு முன் ஜென்ம கதை…
********************************
ஒரு காட்டில சிங்க ராஜாவின் ஆட்சியில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையா வசித்து வந்துச்சாம். தினமும் ஒரே மாதிரி வாழ்க்கை இருந்ததால மிருகங்களெல்லாம் சலிச்சுப் போய் ஒரு விரக்க்தியுடன் இருந்துச்சாம். இதைக் கவனிச்ச சிங்க ராஜா, எல்லா மிருகங்களும் சந்தோசமாக வாழ என்ன வழி செய்யலாம் என யோசிச்சு, அனைத்து மிருகங்களையும் ஒன்றா கூட்டிச்சாம்.

மிருகங்களைப் பார்த்து சிங்கம், எனதருமை சகோதரர்களே, இன்று முதல் நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் . அது மட்டுமில்ல மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே இந்தக் காட்டில இருக்கலாம். அதுக்கு ஆரம்பமாக இன்று ஒவ்வொரு மிருகங்களும் தனக்குத் தெரிந்த நல்ல ஜோக் ஒன்று சொல்ல வேண்டும். ஆனா, நீங்க சொல்லும் ஜோக்குக்கு யாராவது ஒரு மிருகமாவது சிரிக்காம இருந்தா ஜோக் சொன்ன மிருகத்தை நான் அடிச்சு சாகக் கொன்று விடுவேன். எனவே ஒவ்வொருவராக வந்து ஜோக் சொல்லுங்க என்று சொல்லிச்சு.

முதல்ல குரங்கை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. பயந்து கொண்டே வந்த குரங்கு மிகவும் அருமையான ஜோக் சொல்லிச்சு. எல்லா மிருகங்களும் விழுந்து விழுந்து சிரித்தன.சிங்கமும் சிரிச்சுக் கொண்டே நிமிர்ந்து பார்க்க ஆமை மட்டும் சிரிக்காம் உம்முனு இருந்திச்சு. என்ன செய்யிறது. ஒரு மிருகம் சிரிக்காதபடியால, சிங்கம் குரங்கை அடிச்சுகொன்னுடிச்சு.

பின்னர் கரடியை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. கரடியும் வந்து குரங்கைவிட நல்ல ஜோக் ஒன்று சொல்லிச்சு. அதுக்கும் சிங்கம் உட்பட எல்லா மிருகங்களும் சிரிக்க ஆமை மட்டும், ஊகூம்…… சிரிக்கவேயில்லை. கரடியும் செத்திச்சு. அடுத்தது யானை, அதுக்கும் அப்பிடியே நடந்துது.ஆமை சிரிக்கவேயில்லை யானையையும் சிங்கம் அடிச்சு கொன்டுடிச்சு
.
பிறகு கழுதை வந்திச்சு, வந்து “ஒரு ஊரில …” என்று ஜோக் சொல்ல ஆரம்பிக்கு முன்னரே ஆமை விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிச்சு.சிங்கத்துக்கும் மத்த எல்லா மிருகங்களுக்கும் ஆச்சரியமும் கோவமும் வந்திச்சு.
சிங்கம் ஆமையிடம் கேட்டிச்சு, ” இவ்வளவு நேரமும் சிரிக்காம இருந்திட்டு, இப்ப கழுதை ஜோக் சொல்லவே ஆரம்பிக்க இல்ல, ஆனா நீ இப்படி விழுந்து, விழுந்து சிரிக்கிறியே”.

அதுக்கு ஆமை சொல்லிச்சாம்,
“இல்ல குரங்கு சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வந்திச்சு, அதுதான் சிரிச்சேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:20 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:23 pm

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியாக நாராயணசாமி சென்றுருந்தார்! ! ! !

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..

”இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை ­யும் இல்லை..”அடுப்ப ங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்…

”எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான ­்..”கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன்…

”இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..” என்று அழ ஆரம்பித்தாள்…

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாம­ல் வெளியேறினார்..நாராயணசாமி

அவர் வெளியேறிவிட்டது­ம் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…

”எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்ப­து போல்அடித்தேனே.. .”என்றான் கணவன்..

”ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி ­ இருந்தது. என் நடிப்பு…”என்­றாள் மனைவி…

”பிராமாதம்..” ­ என்றான் கணவன்…

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…

”நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் ” நாராயணசாமி ………….
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 29, 2013 9:42 am

ரயில் பிரயாணி ஒருவர், பிளாட்பாரத்தில் டீ விற்றுக் கொண்டு போனவனைக் கூப்பிட்டு டீ வாங்கிக் கொண்டு, வேண்டுமென்றே, காசு கொடுக்காமல் தாமதப்படுத்தினார்.

ரயில் அதற்குள் பறப்பட்டுவிட்டது. டீ விற்கும் பையனுக்குக் காசும் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் டீ தம்ளரும் நஷ்டம்.

பக்கத்திலிருந்த அவனது நண்பன் அவனைச் சமாதானம் செய்தான்.

”கவலைப்படாதே..! கடவுள் அந்த ஆளைக் கவனித்துக் கொள்வார்..!”

டீ விற்ற பையன் சொன்னான்.

”கடவுளுக்கு எதற்கு சிரமம். 
என் ‘டீ’யே 
கவனித்துக் கொள்ளும்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 29, 2013 9:46 am

ஏய் ஆத்தா…. நீ என்ன லூசா?… ஈரத்துணிய கரண்டு கம்பில போடுரியே சாக்கடிச்சு சாகப்போற பாரேன்….

யாருடா லூசு…. கரண்டு 6 மணிக்குதான் வரும் அதுக்குள்ள காஞ்சிடும் 5 மணிக்கெல்லாம் எடுத்துடுவேன்….

மறுபடியும் நாந்தான் அவுட்டா….

உலகில் மிக நீளமான துணிகாயப்போடும் கம்பி தமிழ்நாடு மின்வாரிய கம்பி….. டொட்ட டொய்

படித்ததில் பிடிப்பு 
நன்றி மயூரன் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 29, 2013 9:48 am

விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.

“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டுகதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.

“யாரது?” என்று மனைவி கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”
“பார்த்தீங்களா?

3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.

இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.

“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”

“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”

“எங்கே இருக்கீங்க”
*
*
*
*
*


“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க….”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 29, 2013 9:53 am

தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான்.பணத்தையே தெய்வமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.

தனது மூன்று மகன்களையும் அழைத்து,”நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போதுதான் தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன்.ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது.நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,”என்றார்.

பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார்.அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர். வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான்,”தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை.எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,”

இரண்டாமவன் உடனே சொன்னான்,”நீ பரவாயில்லை.எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்,”கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து,”அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா?அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,”என்று கன்னாபின்னாவெனத் திட்டினான்.

அண்ணன்கள் இருவரும், ”பரவாயில்லை,நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?”என்று கேட்டனர்.கடைக்குட்டி சொன்னான்,”நான் நேர்மையானவன்.அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.”

படித்ததில் பிடிப்பு 
நன்றி மயூரன் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 29, 2013 9:55 am

”வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள்.நிம்மதியே இல்லை, ”என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.

நண்பன் சொன்னான், ”அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன். எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

”இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான்.இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான். ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.

அவன் இப்போது நடுத்தெருவில்.புலம்பியபடியே அவன் கோவிலுக்குப் போய் அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான். அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டிருந்தான். உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.

”என்னடா,நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?”என்று கேட்க அவன் சொன்னான்,”என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,”என்றான். ”பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?”என்று இவன் கேட்க அவன் சொன்னான்,”நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.

எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன். அப்போதுதான் நீ அகப்பட்டாய்.”

# சிக்கிட்டான்டா சேகரு..

படித்ததில் பிடிப்பு 
நன்றி மயூரன் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படிச்சு பாருங்க சிரிப்பீங்க  Empty Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum