தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1
கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கவிதைச்சுடர் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 90 .மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அவர்களின் கை வண்ணத்தில் உருவான ஹைக்கூ ஒளி வீசும் நூல் .
பதிப்புலகில் தனி முத்திரை பதித்து தமிழன்னைக்கு அணி சேர்த்து வரும் பெருமை மிகு வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. நூலின் அட்டைப்படங்கள் உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
கவிதைச்சுடர் என்ற இந்த நூல் ஹைக்கூ ஒளிப்பரவல் எனலாம்.சூரிய ஒளி போல ஹைக்கூ ஒளி எங்கும் பரவிட வழி வைக்கும் நூல் .ஹைக்கூ கவிதை பிடிக்காத மரபின் தீவிர ஆதரவாளர்களுக்கும் இந்த நூல் படித்தால் இனி ஹைக்கூ கவிதை பிடிக்கும் .ஹைக்கூ கவிதையின் சிறப்பைப் பறை சாற்றிடும் அற்புத நூல் .ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி ஈரோடு தமிழன்பன் தொடங்கி இளைய தலைமுறைப் பெண்ணான புதுவை கு .எ .தமிழ் மொழி வரை 23 ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ நூல்களைத் திறனாய்வு செய்து வடித்த நூல் .
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் அவர்கள் தந்த அணிந்துரைகளும் இடம் பெற்றுள்ளது. நூல் முழுவதும் ஹைக்கூ ! ஹைக்கூ ! ஹைக்கூ தவிர வேறு கவிதைகள் இல்லை .ஹைக்கூ கவிதையின் நுட்பம்,ஆழம் ,படிமம் சுவை, தாக்கம் அனைத்தையும் எடுத்து இயம்பி உள்ளார் .
ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கு ஹைக்கூ விருந்து இந்த நூல். ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு ஆய்வு வேலையை எளிதாக்கும் நூல் இது .பல்கலைக் கழகங்களில் கல்லூரிகளில் பாடமாகவேண்டிய அற்புத நூல் .துணைவேந்தர்களும்,தமிழ்த் துறைத் தலைவர்களும் பாடநூல் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நூல்.
கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் இனியவர் கலைமாமணி
ஏர்வாடியாரின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது .அணிந்துரை முத்தாப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக உள்ளது .
படிக்கும் வாசகர்களை படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கும் மட்டுமே உண்டு . இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார் என்று உறுதி கூறலாம் .ஹைக்கூ பற்றிய புரிதலை , தெளிவை உண்டாக்கும் நூல். பெரிய கவிஞர் வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரையும் சமமாக பார்க்கும் பார்வை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் பார்வை .
23 கவிஞர்களின் நூல்களான மலர்களில் இருந்து தேன் எடுத்து தேன் விருந்து தந்துள்ளார்கள் இந்த நூல் 15 வது கட்டுரையாக என்னுடைய "ஆயிரம் ஹைக்கூ " நூலிற்கு எழுதிய அணிந்துரையும் உள்ளது .அது மட்டுமல்ல நூலின் முகப்பு அட்டையில் ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் என் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது .நூல் ஆசிரியர் அய்யாவின் மனம் எனும் மந்திரி சபையில் எனக்கும் இடம் தந்து பெருமைப் படுத்தி உள்ளார்கள் .மற்றவர் நூலின் அட்டையில் எனது புகைப்படமும் இடம் பெற்ற முதல் நூல் இது . ஹைக்கூ கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுத்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார்கள் .
படித்தால் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகளின் அணி வகுப்பு .மனதில் பதிப்பு .பிரமிப்பு .
ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ என்று பதச்சோறாகப் படைத்துள்ளேன்.
ஈரோடு .தமிழன்பன் !
ஓட்டுப் பெட்டியில்
ஒரே துர்நாற்றம்
வேட்பாளர் பிணமல்ல ..பின் !
------------------------------------
மித்ரா !
கல்மனசுக்காரகள்
பாருங்கள்
பாறைகளை உடைக்கிறார்கள் !
--------------------------------------
அறிவுமதி !
மரம் வெட்டிய கோடரி
பார்த்துக்கொள்
கடைசி மழைத்துளி !
--------------------------------------
எஸ் .சங்கர நாராயணன் !
சவப்பெட்டி
செய்கிறான்
உயிர் வாழ !
--------------------------------
தங்கம் மூர்த்தி !
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
பீனிக்சாய் சாதிகள் !
---------------------------------------
பொன் .குமார் !
தேர்தல் திருவிழா
பலி ஆடுகள்
அப்பாவி மக்கள் !
------------------------------------
தமிழ்மணி !
மூன்றுமுறை முகத்தில் குத்தினால்
புத்தருக்கும் சினம் வரும்
வரவில்லை தமிழனுக்கு !
-------------------------------------
செ. ஆடலரசன் !
கோவிலில் கூட்டம்
தேவி தரிசனம்
நடிகை !
----------------------------------
செந்தமிழினியன் !
விலை நிலங்கள்
விளை நிலங்களாயின
வீடுகள் !
-----------------------------------
வசீகரன் !
எந்தநாடு சென்றாலும்
தாய் மொழிதான் பேசும்
வலசைப்பறவை!
-------------------------------------
நவதிலக் !
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விற்றோமென்று !
--------------------------------------------------
ந .முத்து !
பங்களா குழந்தைக்கு
உயிருடன் பொம்மை
வேலைக்கார சிறுமி !
-----------------------------------------------
பா .உதயகண்ணன் !
அவள் வரவில்லை
கலங்கிக் கொண்டிருந்தது
குளம் !
---------------------------------------------
க .இராமச்சந்திரன் !
தமிழர் திருநாள்
வாழ்த்து வந்தது
HAPPY PONGAL !
-----------------------------------
இரா .இரவி !
படித்தவன் பாட்டை
எழுதியவன் ஏட்டை
அரசியல்வாதி நாட்டை !
------------------------------------
ஆர் .வி .பதி !
துச்சாதனனால்
அவமானப்பட்டாள் பாஞ்சாலி
தமிழனால் தமிழ் !
---------------------------------------
ரமா .ராமநாதன் !
சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவேயில்லை
பூ !
-------------------------------------
இ .பரிமளா !
வாழ்நாளில்
வாழ்ந்தனால் ?
விரல்களுக்குள் !
--------------------------------------------
இளவல் ஹரிஹரன் !
மிட்டாய் கொடுத்த
இனிப்பைக் கூடத்
தரவில்லை சுதந்திரம் !
-------------------------------------------
கம்பம் மாயவன் !
எம் .எல் .ஏ. மகன்
அடிக்கடி வெளிநடப்பு செய்தான்
கல்லூரி வகுப்பில் !
------------------------------------
கம்பம் எம் .பி .புதியவன் !
விவசாயத்தில் வரவேற்பு
வீட்டில் எதிர்ப்பு
கலப்புத் திருமணம் !
-----------------------------------------
கவிவாணன் !
கல் கல்லை உரச தீ
மனிதன் மனிதனை உரச
சாதீ !
-------------------------------------
கு .அ.தமிழ் மொழி !
கனவில் கூட
வரவில்லை
அரசியல்காரன் திருந்துவதாய் !
-----------------------------------------------------
23 ஹைக்கூ கவிஞர்கள் தம் ஹைக்கூ கவிதைகளால் சமுதாயத்தின் அவலத்தை தோலுரித்துக் காட்டும் நுட்பத்தை எடுத்து இயம்பி உள்ள நூல்.நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் 100 கவிஞர்களின் தலா பத்து கவிதை வீதம் 1000 ஹைக்கூ கவிதைகளை தொகுத்த ஹைக்கூ ஆயிரம் நூலை சாகித்ய அகாதெமி சார்பில் வெளியிட்டார்கள் ஹைக்கூ என்ற இலக்கிய வரலாற்றில் அளப்பரிய முத்திரை பதித்து வருகிறார்கள் பாராட்டுக்கள் .ஹைக்கூ கவிதையின் புகழை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளார்கள் . மிக நல்ல
படிப்பால் வந்த படைப்பு .
ஹைக்கூ எழுதியபோது எழுதிய கவிஞருக்கு தோன்றாதவை எல்லாம் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக இருந்த நூல் ஆசிரியர் அவர்களுக்கு தோன்றி உள்ளது .மிகச் சிறப்பான ஹைக்கூ கவிதைகளை மேற்கோள்கள் காட்டி வடித்த ஆய்வுக் கட்டுரைகள் மிகச் சிறப்பு .தமிழ் கூறும் நல் உலகம் வாழ்த்தி வரவேற்கும் .
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 90 .மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அவர்களின் கை வண்ணத்தில் உருவான ஹைக்கூ ஒளி வீசும் நூல் .
பதிப்புலகில் தனி முத்திரை பதித்து தமிழன்னைக்கு அணி சேர்த்து வரும் பெருமை மிகு வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. நூலின் அட்டைப்படங்கள் உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
கவிதைச்சுடர் என்ற இந்த நூல் ஹைக்கூ ஒளிப்பரவல் எனலாம்.சூரிய ஒளி போல ஹைக்கூ ஒளி எங்கும் பரவிட வழி வைக்கும் நூல் .ஹைக்கூ கவிதை பிடிக்காத மரபின் தீவிர ஆதரவாளர்களுக்கும் இந்த நூல் படித்தால் இனி ஹைக்கூ கவிதை பிடிக்கும் .ஹைக்கூ கவிதையின் சிறப்பைப் பறை சாற்றிடும் அற்புத நூல் .ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி ஈரோடு தமிழன்பன் தொடங்கி இளைய தலைமுறைப் பெண்ணான புதுவை கு .எ .தமிழ் மொழி வரை 23 ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ நூல்களைத் திறனாய்வு செய்து வடித்த நூல் .
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் அவர்கள் தந்த அணிந்துரைகளும் இடம் பெற்றுள்ளது. நூல் முழுவதும் ஹைக்கூ ! ஹைக்கூ ! ஹைக்கூ தவிர வேறு கவிதைகள் இல்லை .ஹைக்கூ கவிதையின் நுட்பம்,ஆழம் ,படிமம் சுவை, தாக்கம் அனைத்தையும் எடுத்து இயம்பி உள்ளார் .
ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கு ஹைக்கூ விருந்து இந்த நூல். ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு ஆய்வு வேலையை எளிதாக்கும் நூல் இது .பல்கலைக் கழகங்களில் கல்லூரிகளில் பாடமாகவேண்டிய அற்புத நூல் .துணைவேந்தர்களும்,தமிழ்த் துறைத் தலைவர்களும் பாடநூல் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நூல்.
கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் இனியவர் கலைமாமணி
ஏர்வாடியாரின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது .அணிந்துரை முத்தாப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக உள்ளது .
படிக்கும் வாசகர்களை படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கும் மட்டுமே உண்டு . இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார் என்று உறுதி கூறலாம் .ஹைக்கூ பற்றிய புரிதலை , தெளிவை உண்டாக்கும் நூல். பெரிய கவிஞர் வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரையும் சமமாக பார்க்கும் பார்வை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் பார்வை .
23 கவிஞர்களின் நூல்களான மலர்களில் இருந்து தேன் எடுத்து தேன் விருந்து தந்துள்ளார்கள் இந்த நூல் 15 வது கட்டுரையாக என்னுடைய "ஆயிரம் ஹைக்கூ " நூலிற்கு எழுதிய அணிந்துரையும் உள்ளது .அது மட்டுமல்ல நூலின் முகப்பு அட்டையில் ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் என் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது .நூல் ஆசிரியர் அய்யாவின் மனம் எனும் மந்திரி சபையில் எனக்கும் இடம் தந்து பெருமைப் படுத்தி உள்ளார்கள் .மற்றவர் நூலின் அட்டையில் எனது புகைப்படமும் இடம் பெற்ற முதல் நூல் இது . ஹைக்கூ கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுத்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார்கள் .
படித்தால் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகளின் அணி வகுப்பு .மனதில் பதிப்பு .பிரமிப்பு .
ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ என்று பதச்சோறாகப் படைத்துள்ளேன்.
ஈரோடு .தமிழன்பன் !
ஓட்டுப் பெட்டியில்
ஒரே துர்நாற்றம்
வேட்பாளர் பிணமல்ல ..பின் !
------------------------------------
மித்ரா !
கல்மனசுக்காரகள்
பாருங்கள்
பாறைகளை உடைக்கிறார்கள் !
--------------------------------------
அறிவுமதி !
மரம் வெட்டிய கோடரி
பார்த்துக்கொள்
கடைசி மழைத்துளி !
--------------------------------------
எஸ் .சங்கர நாராயணன் !
சவப்பெட்டி
செய்கிறான்
உயிர் வாழ !
--------------------------------
தங்கம் மூர்த்தி !
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
பீனிக்சாய் சாதிகள் !
---------------------------------------
பொன் .குமார் !
தேர்தல் திருவிழா
பலி ஆடுகள்
அப்பாவி மக்கள் !
------------------------------------
தமிழ்மணி !
மூன்றுமுறை முகத்தில் குத்தினால்
புத்தருக்கும் சினம் வரும்
வரவில்லை தமிழனுக்கு !
-------------------------------------
செ. ஆடலரசன் !
கோவிலில் கூட்டம்
தேவி தரிசனம்
நடிகை !
----------------------------------
செந்தமிழினியன் !
விலை நிலங்கள்
விளை நிலங்களாயின
வீடுகள் !
-----------------------------------
வசீகரன் !
எந்தநாடு சென்றாலும்
தாய் மொழிதான் பேசும்
வலசைப்பறவை!
-------------------------------------
நவதிலக் !
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விற்றோமென்று !
--------------------------------------------------
ந .முத்து !
பங்களா குழந்தைக்கு
உயிருடன் பொம்மை
வேலைக்கார சிறுமி !
-----------------------------------------------
பா .உதயகண்ணன் !
அவள் வரவில்லை
கலங்கிக் கொண்டிருந்தது
குளம் !
---------------------------------------------
க .இராமச்சந்திரன் !
தமிழர் திருநாள்
வாழ்த்து வந்தது
HAPPY PONGAL !
-----------------------------------
இரா .இரவி !
படித்தவன் பாட்டை
எழுதியவன் ஏட்டை
அரசியல்வாதி நாட்டை !
------------------------------------
ஆர் .வி .பதி !
துச்சாதனனால்
அவமானப்பட்டாள் பாஞ்சாலி
தமிழனால் தமிழ் !
---------------------------------------
ரமா .ராமநாதன் !
சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவேயில்லை
பூ !
-------------------------------------
இ .பரிமளா !
வாழ்நாளில்
வாழ்ந்தனால் ?
விரல்களுக்குள் !
--------------------------------------------
இளவல் ஹரிஹரன் !
மிட்டாய் கொடுத்த
இனிப்பைக் கூடத்
தரவில்லை சுதந்திரம் !
-------------------------------------------
கம்பம் மாயவன் !
எம் .எல் .ஏ. மகன்
அடிக்கடி வெளிநடப்பு செய்தான்
கல்லூரி வகுப்பில் !
------------------------------------
கம்பம் எம் .பி .புதியவன் !
விவசாயத்தில் வரவேற்பு
வீட்டில் எதிர்ப்பு
கலப்புத் திருமணம் !
-----------------------------------------
கவிவாணன் !
கல் கல்லை உரச தீ
மனிதன் மனிதனை உரச
சாதீ !
-------------------------------------
கு .அ.தமிழ் மொழி !
கனவில் கூட
வரவில்லை
அரசியல்காரன் திருந்துவதாய் !
-----------------------------------------------------
23 ஹைக்கூ கவிஞர்கள் தம் ஹைக்கூ கவிதைகளால் சமுதாயத்தின் அவலத்தை தோலுரித்துக் காட்டும் நுட்பத்தை எடுத்து இயம்பி உள்ள நூல்.நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் 100 கவிஞர்களின் தலா பத்து கவிதை வீதம் 1000 ஹைக்கூ கவிதைகளை தொகுத்த ஹைக்கூ ஆயிரம் நூலை சாகித்ய அகாதெமி சார்பில் வெளியிட்டார்கள் ஹைக்கூ என்ற இலக்கிய வரலாற்றில் அளப்பரிய முத்திரை பதித்து வருகிறார்கள் பாராட்டுக்கள் .ஹைக்கூ கவிதையின் புகழை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளார்கள் . மிக நல்ல
படிப்பால் வந்த படைப்பு .
ஹைக்கூ எழுதியபோது எழுதிய கவிஞருக்கு தோன்றாதவை எல்லாம் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக இருந்த நூல் ஆசிரியர் அவர்களுக்கு தோன்றி உள்ளது .மிகச் சிறப்பான ஹைக்கூ கவிதைகளை மேற்கோள்கள் காட்டி வடித்த ஆய்வுக் கட்டுரைகள் மிகச் சிறப்பு .தமிழ் கூறும் நல் உலகம் வாழ்த்தி வரவேற்கும் .
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைச்சாரல் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைச்சாரல் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|