தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும்

Go down

சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும் Empty சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும்

Post by RAJABTHEEN Wed Dec 22, 2010 2:58 am




சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) நோயாளிகளுக்கு இரத்த சோகை
பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். அதிலும் கண்டிப்பாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து
கொண்டிருப்பவர்களுக்கு 100 % இருக்கும்.

இரத்த சோகை என்றால் என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? அதை எவ்வாறு
கிசிச்சிப்பது என்று இக்கையேட்டில் காண்போம்.

நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இரத்த சிவப்பணுக்களில்
உள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் சிவப்பு வண்ண நிறமிதான் இரத்தத்தில் ஆக்சிஜன்
எனப்படும். பிராண வாயுவை உடலெங்கும் சுமந்து செல்கின்றது. எந்த காரணத்தால் இதன்
அளவோ அல்லது அதைக் கொண்டுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அது இரத்த சோகை
(ANEMIA) என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு குறைவதால் உடலின் உள்ள பல உறுப்புகளுக்கும் பிராண வாயுவின்
விநியோகமும் பாதிக்கப்படுகின்றது. இதனால் சக்தி, செயல்திறன் குறைக்கின்றது. இவை
உடல் வெளுப்பு, தளர்ச்சி, பலவீனம், சோர்வு, அதிகம் வேலை செய்தால் மூச்சிரைப்பு, என
பல விதமாக வெளிப்படலாம்.

இரத்தச் சோகைக்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக உடலில் இரும்புச்
சத்து குறைவு, B-வகை விட்டமின் சத்துக்கள் குறைவு, கண்ணுக்கு தெரிந்து அல்லது
தெரியாமல் இரத்த சேதம் என இன்னும் பல காரணங்கள் உண்டு. ஆனால் சிறுநீரக செயலிழப்பு
நோயாளிகளுக்கு இரத்த சோகை வர ஒரு பிரத்யேக காரணம் உண்டு. இவற்றோடு மேலே கூறிய
சத்துக் குறைவுக்காரணங்கள் இரத்த சேதம் ஆகியனவும் கூட இருக்கலாம்.








சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும் Kiney%20workingசிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும் Blood

நம் உடலில் இரத்த சிவப்பணுக்கள் தொடை, இடுப்பு போன்ற பெரிய எழம்புகளில்
உள்ள மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகின்றன. உற்பத்தியான சிவப்பணுக்கள் தொடர்ந்து
அழிந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு இரும்பு சத்து போன்ற பல விதமான சத்துக்களுடன்
சிறுநீரகத்தில் இருந்து உற்பத்தியாகும் எரித்ரோபாய்ட்டின் (ERYTHROPOIEITIN)
எனப்படும் சத்தும் தேவை. சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிறுநீரகத்தின் பல வித
பணிகளுடன் இந்த வேலையும் பாதிக்கப்பட்டு எரித்ரோபாய்ட்டின் உற்பத்தி படிப்படியாக


குறைந்து விடுகின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்
அவைகளில் உள்ள ஹீமோக்ளோபினின் அளவு படிப்படியாக குறைந்து விடுகின்றது. இதனை நாம்
இரத்தச் சோகை அல்லது இரத்தக் குறைவு - ஆனீமியா என்று சொல்கின்றோம். கிட்னி
ஃபெயில்யரில் இரத்தச் சோகைக்கு எரித்ரோபாய்ட்டின் குறைவு தவிர வேறு சில காரணங்களும்
இருக்கலாம் என்றாலும் முக்கிய காரணம் இதுதான் மற்ற காரணங்கள் முன்பு கூறியிருந்தது
போல் இரும்புச் சத்து குறைவு, விட்டமின்கள் குறைவு, குடல் வழியே கண்ணுக்கு
தெரியாமல் இரத்த சேதாரம், டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிலுள்ள இரத்த
சேதாரம் ஆகியன கூடுதல் காரணங்களாகும்.

இரத்த சோகையால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன?

இரத்த சோகையில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை / அவற்றினுள் உள்ள
ஹீமோக்ளோபின் அளவு இவை சாதாரணமாக இருக்க வேண்டிய அளவை விட வெகுவாக குறைந்து
விடுகின்றன. இதனால் இரத்த சிவப்பணுக்கள் வழியாக ஆக்சிஜன் மற்ற உறுப்புகளுக்கு
சென்று சேர்வது தடைபடுகின்றது. முக்கியமாக மூளை, இதயம் , தசைகள். இதனால் நிறம்
வெளுத்தல், சோர்வு சக்தியின்மை, கவனக் குறைவு ஆகியன ஏற்படலாம். நீண்ட கால விளைவாக
இதய பலவீனம், செயலிழப்பு உண்டாகலாம். இதனால் சிறிது அதிகமான உடல் வருத்தி செய்யும்
வேலைக்கு கூட மூச்சுத் திணறல் உண்டாகலாம்.

இரத்த சோகையை எவ்வாறு கண்டறிவது?

சிறுநீரக செயலிழப்பு உள்ள ஒவ்வொருவருக்கும் இரத்த அணுக்களின்
எண்ணிக்கை, இரத்த அளவு இவற்றை கண்டறியும் சில பரிசோதனைகளை சிறுநீரக மருத்துவர்
செய்திருப்பார். ஒரு சில வியாதிகளால் உண்டாகும் சிறுநீரக செயலிழப்புகள் தவிர மற்ற
எல்லா வகை கிட்னி ஃபெயில்யரிலும் அதன் தீவிரத்தைப் பொறுத்து கண்டிப்பாக இரத்த சோகை
இருக்கும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு ஹெமடோக்ரிட் (HEMATOCRIT) என்று
அளக்கப்படும். இது சாதாரணமாக 40-45% இருக்கும். பெண்களுக்கு சிறிது குறைவாக
இருக்கும். சிவப்பு நிறமியான ஹீமோக்ளோபின் அளவும் அளக்கப்படும். இதன் அளவு 12-15
கிராம் ஆண்களுக்கும் 12-14 கிராம் பெண்களுக்கும் இருக்கும். இரத்தத்தில் உள்ள
க்ரியேட்டினின் அளவைப் பொறுத்து ஹீமோக்ளோபின் அளவு குறையும். எனவே இவ்வளவுகளை
வைத்தே இரத்த சோகை உண்டா அதன் கடுமை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும் Components%20of%20blood

இதைத் தவிர இரத்தத்தை ஒரு சொட்டு எடுத்து அதை ஒரு கண்ணாடி துண்டில்
மெல்லிய படலமாக்கி உறுப்பெருக்கியில் பார்க்கும் போது (PERIPHERAL SMEAR) இரத்த
சிவப்பு அணுக்கள் எவ்வாறு காட்சியளிக்கின்றன என்பதை வைத்து சில காரணங்களை
கண்டறியலாம். உதாரணமாக விட்டமின் குறைவு, மேலும் இரத்தத்தில் இரும்புச் சத்தின்
அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய ஃபெர்ரிடின் (FERRITIN) என்ற சத்தின் அளவும்
பரிசோதிக்கப்படும். இவற்றை வைத்து இரத்த சோகையின் கடுமை அதன் காரணங்கள் ஆகியவற்றை
கண்டறியலாம்.

கிட்னி ஃபெயில்யரில் இரத்த சோகையை எவ்வாறு சிகிச்சை செய்வது?

முன்பே கூறியிருந்தது போல கிட்னி ஃபெயில்யரில் இரத்த சோகையின் முக்கிய
காரணம் எரித்ரொபாய்ட்டின் குறைவுதான். தற்போது இந்த சத்தை ஆய்வகத்திலேயே செயற்கை
முறையில் உண்டாக்க முடியும் முன்பு விலை மிகவும் அதிகமாக இருந்த இந்த மருந்து
இப்போது ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கின்றது.

இந்த மருந்தை ஊசியாக வாரம் 1-2 முறை தோலிற்கு கீழ் போட்டுக்கொள்ள
வேண்டும். ஹீமோடயாலிசிஸ் செய்பவர்கள் மருத்துவமனைக்கு வரும் போது இதை போட்டுக்
கொள்ளலாம். டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு முன்பு உள்ளவர்கள் இதை தாங்களே போட்டுக்
கொள்ளக்கூட பழகிக் கொள்ளலாம்.

இம்மருந்தோடு இரும்புச் சத்து மாத்திரைகளாகவோ அல்லது பலருக்கும்
குறிப்பாக டயாலிசிஸ் செய்பவர்க்கு நரம்பு வழியாக இரும்பு சத்தை செலுத்தும் பொது
உங்களுக்கு இந்த மருந்துக்கு அலர்ஜி உள்ளதா என்பதை அறிய கொஞ்சம் டெஸ்ட் டோஸ் என
செலுத்திப் பார்த்து எதுவும் தொந்தரவு இல்லை என்றால் மட்டுமே முழு மருந்தையும்
கொடுப்பார்கள். நரம்பு வழியாக இரும்புச் சத்து மருந்தை மருத்துவமனையில் மட்டுமே
வைத்து கொடுக்க வேண்டும். இதைத் தவிர இரத்த உற்பத்திக்கு தேவையான B வகை
விட்டமின்கள் முக்கியமாக B-12 , B-6 ஆகிய மருந்துகளும் மாத்திரைகளாகவோ அல்லது ஊசி
மூலம் டயாலிசிஸின் போதோ செலுத்தப்படும்.

இந்த சிகிச்சையின் பலன்களை எப்போது உணர முடியும்?

இம்மருந்துகளை ஆரம்பித்த பிறகு சில வாரங்கள் அல்லது 1-2 மாதங்களுக்கு
பிறகே நீங்களே அதன் நற்பலன்களை உணர முடியும். நீங்கள் நன்கு ஆரோக்யமாக
உணர்வீர்கள். வேலைத்திறன் அதிகரிக்கும். நமைச்சல் குறையும், சோர்வு, தளர்ச்சி,
ஆகியன சரியாகும். மேலும் ஹீமோக்ளோபின் அதிகமாவதால் இதயத்திற்கு ஆக்சிஜன் செல்வது
அதிகரித்து இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைந்து விடும். அதன் முன்பே
மருத்துவர் வாரா வாரம் ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிப்பதன் மூலம் மருந்து சரியாக வேலை
செய்கின்றதா? அதன் அளவு உங்களுக்கு சரியானதா அதிகமா? குறைவா? என்று அதற்கு
தகுந்தபடி மாற்றங்கள் செய்வார். மேலும் சிலருக்கு இச்சிகிச்சையை ஆரம்பித்து இரத்த
அளவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கலாம். சில சமயம்
இரத்த அழுத்த மருந்துகளை மாறுதல் செய்ய வேண்டி வரும் பொதுவாக எரித்ரோபாய்ட்டின்
மருந்தை ஊசி மூலம் செலுத்தும் போது எந்த தொந்தரவும் உண்டாவதில்லை. சிலருக்கு ஊசி
போட்டதூடன் கொஞ்சம் வலி உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சிறிது நேரம் கழித்து
குளிர் ஜுரம் உண்டாகலாம் பொதுவாக இவற்றால் மருந்தை நிறுத்த வேண்டிய அவசியம்
ஏற்படுவதில்லை.

இவ்வாறு எரித்ரோபாய்ட்டின் ஊசி போட்டுக் கொள்ள வசதியில்லாதவர்கள் என்ன
செய்வது?

இவர்கள் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் மாத்திரைகளை தவறாமல்
எடுத்தக் கொள்வதன் மூலம் டயாலிசிஸ் செய்பவரானால் அதனை சரியாக மருத்துவ ஆலோசனைபடி
செய்வதன் மூலமும் ஓரளவு இரத்த அளவு குறைவதன் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.
அனபாலிக் ஸ்டீராய்ட்ஸ் (ANABOLIC STEROIDS) எனப்படும் வகையைச் சேர்ந்த சில ஊசி
மருந்துகள் வாரம் ஒரு முறை செலுத்திக் கொள்வதால் சில சமயம் ஓரளவு உற்பத்தி ஆகலாம்.
இவற்றின் விலை குறைவுதான். இளவயதுள்ள பெண்களுக்கு இந்த மருந்து ஆண்மைத் தன்மையை
உண்டாக்கும் என்பதால் கொடுக்க இயலாது. ஆனாலும் ஒரு நிலையில் இரத்த மிகவும்
குறைந்து விட்டால் (<9 கி.க்கு கீழ்) மாற்று இரத்தத்தை அவ்வப்போது செலுத்திக்
கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிடுபவராக
இருப்பின் முடிந்த வரை இரத்தம் கொடுக்காமல் எரித்ரோபாய்ட்டின் ஊசி மூலம் இரத்த அளவை
அதிகப்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுநீரகப் பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பும் அதன் மாற்றங்களும் அவற்றின் சிகிச்சை முறைகளும் - அறிமுகம் (Chronic Kidney Disease (CKD) – Its progression and treatment)
» தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்
» சிறுநீரக நுண்தமனி அழற்சி-(க்ளோமெருலோநெப்ரைடிஸ் – Glomerulonephritis)
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum