தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
2 posters
Page 1 of 1
குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
குடிமகனுக்கு ஒரு கடிதம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா. 9282111071.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் கணபதி அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. பேச : 92821 11071. விலை : ரூ. 55
*****
நூலாசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டு வரும் படைப்பாளி. ஒவ்வொறு நூலையும் சமகால படைப்பாளிகளுக்கு காணிக்கை ஆக்கி வருகிறார். இந்த நூலை பல்வேறு தொகுப்பு நூல்களில் கவிதை எழுதி வருபவரான கவிஞர் முனைவர் கஸ்தூரிராசா அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
முன்பு யாராவது ஒருவர் குடிப்பார். குடித்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று தலையில் முக்காடு போட்டு செல்வார். ஆனால் இன்று மதுக்கடை பெருகிவிட்ட காரணத்தால் குடிப்பவர்களும் பெருகி விட்டனர். குடிக்காதவர்களை கேலி செய்யும் அளவிற்கு சமுதாயம் சீர்கெட்டு விட்டது. குடிக்காதவர் முக்காடு போட்டு செல்லும் நிலை வந்து விட்டது. குடியின் கேடு குறித்து ஒரு நூல் முழுவதும் முழுக்க முழுக்க பாடுபொருளாகக் கொண்டு லிமரைக்கூ வடிவிலேயே வடித்து இருப்பது சிறப்பு.
இந்த நூலை ஆழ்ந்து படித்து சிந்தித்துப் பார்த்தால் குடிகாரர் குடியை விட்டு விடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மிக நுட்பமாக குடியின் கொடுமையை நன்கு உணர்த்தி உள்ளார். ஒருவருக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் குடிகாரராக இருந்தால் பிறர் மதிப்பதில்லை என்பது உண்மை.
கற்ற கல்வி தேனானது
பெற்ற புகழ் நாசம் ஆகி
குடிகாரன் என்றே வீணானது!
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்று ஆகி விட்டது. மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை பாழ்.
தெருவெல்லாம் இருக்கிறது மதுக்கடை
உன்னை நீயே வென்று வாகைச் சூடி
மனதிற்குப் போடு தடை!
சொல் விளையாட்டு விளையாடி நூல் முழுவதும் புத்தி புகட்டி உள்ளார். பாராட்டுக்கள். முதல் வரியின் கடைசியும், மூன்றாம் வரியின் கடைசியும் ஒன்றி வர வேண்டும். இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயத்துடன் லிமரைக்கூ இலக்கணத்துடன் நன்கு படைத்துள்ளார்.
உழைக்காத சில சோம்பேறிகள் மனைவி உழைத்து சேமித்து வைத்திருக்கும் பணத்தை திருடி விட்டு குடிக்கச் செல்லும் அவலம் பல குடும்பங்களில் நடந்து வருகின்றது.
மனைவி சேமித்த காசு
திருடிச் சென்று குடித்து விட்டாய்
மதிப்பில் நீயொரு தூசு!
குடியை பழகிவிட்டு அதனை மறக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக கவனத்தைக் குடியிலிருந்து விட்டு புத்தகத்தில் செலுத்து என்கின்றார்.
குடிக்கும் பழக்கத்தை தீயிடு
நூலகத்தில் உள்ள நல்ல நூல்களை
தினமும் கையில் நீயெடு !
யானை போன்ற பலம் மிக்கவனும், குடிப்பழக்கத்தால் சீரழிவான் என்பதை நன்கு உணர்த்திடும் லிமரைக்கூ நன்று.
குடியறியாதவன் பலமிக்க யானை
குடித்து சீரழிபவன் ஒன்றுக்கும் உதவா
உடைந்த மண் பானை!
மதுவைக் குடிப்பதால் அது நம் உடலில் உறுப்புகளை அரித்து வாழ்நாளை குறைத்து விரைவில் மரணத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்கள், சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்ற முன்வர வேண்டும்.
மது ஒரு திருடன்
உன் உள் உறுப்புகளை திருடிவிடும்
நீ ஒரு மூடன்!
சிலர், தான் குடிப்பதோடு நின்று விடாமல், நண்பர்களையும் வலுக்கட்டாயமாக குடிக்க பழக்கி விடும் தீயவர்களும் இருக்கின்றனர். ஆனால் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். “நண்பனை குடி என்று சொல்பவன் நண்பனே அன்று” என்பதை உணர் வேண்டும். குடிக்கச் சொல்லும் நண்பனிடமிருந்து நட்பை முறித்துக் கொள்வது நல்லது.
குடிக்கச் சொல்லும் நண்பன்
மாற்று உண்மையில் அவன்தான்
உனது வருங்காலப் பகைவன்!
உண்மை தான். நண்பர்களாக மதுக்கடை உள்ளே சென்று மதுவை குடித்து விட்டு, தன்னை மறந்து சண்டையிட்டு பகைவர்களாக வெளியே வரும் அவலம் நாள்தோறும் நடக்கின்றது.
சமுதாயம் நம்மை மதிக்க வேண்டுமென்றால், குடிப்பழக்கம் கூடாது. சாதனைகள் நிகழ்த்த வேண்டுமென்றால் குடிப்பழக்கம் கூடாது. புகழ் பெற வேண்டுமென்றால் குடிப்பழக்கம் கூடாது.
நல்லோரை வாழ்த்தும் நாக்கு
நலமில்லா மதுவை குடித்து சீரழிந்தால்
நீ கிழிந்துப் போன சாக்கு!
குடியின் காரணமாக கிழிந்த சாக்கு ஆவாய் என்று நன்கு உணர்த்தி உள்ளார். இப்படி நூல் முழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தும் லிமரைக்கூ வடித்துள்ளார். மதுவிலக்குத் துறையின் சார்பில் இந்த நூலிற்கு விருது வழங்கி நூலாசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்களை கௌரவிக்கலாம். அவர்கள் தொடர்ந்து எழுதிட ஊக்கமளிப்பதாக இருக்கும்.
இன்றைய இளைஞர்கள் பலரும் நண்பர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பீர் குடிக்கிறோம் என்று ஆரம்பித்து பிராந்தி, ரம் என்று பழகி வருகின்றனர். நமது பண்பாடு மறந்து, சமுதாயம் சீரழிந்து வருகின்றது. குடியை நாம் தடுக்காவிட்டால் சமுதாயம் சீரழிந்து விடும். இளைஞர்கள் சாதிக்க வேண்டிய வயதில், குடிக்கு அடிமையாகி வாழ்வை இழக்கின்றனர். பல்வேறு குற்ற செயல்களுக்கும் உந்து சக்தியாக, காரணியாக குடியே உள்ளது.
வாழ்வோடு ஏன் தகராறு
அரிதான வாழ்வில் மேம்பட அறிந்தால்
வாழ்க்கை ஒரு வரலாறு!
குடியை ஒழித்து நல்ல வரலாறு படைக்க உதவும் நூல் எழுதிய நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
.
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா. 9282111071.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் கணபதி அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. பேச : 92821 11071. விலை : ரூ. 55
*****
நூலாசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டு வரும் படைப்பாளி. ஒவ்வொறு நூலையும் சமகால படைப்பாளிகளுக்கு காணிக்கை ஆக்கி வருகிறார். இந்த நூலை பல்வேறு தொகுப்பு நூல்களில் கவிதை எழுதி வருபவரான கவிஞர் முனைவர் கஸ்தூரிராசா அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
முன்பு யாராவது ஒருவர் குடிப்பார். குடித்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று தலையில் முக்காடு போட்டு செல்வார். ஆனால் இன்று மதுக்கடை பெருகிவிட்ட காரணத்தால் குடிப்பவர்களும் பெருகி விட்டனர். குடிக்காதவர்களை கேலி செய்யும் அளவிற்கு சமுதாயம் சீர்கெட்டு விட்டது. குடிக்காதவர் முக்காடு போட்டு செல்லும் நிலை வந்து விட்டது. குடியின் கேடு குறித்து ஒரு நூல் முழுவதும் முழுக்க முழுக்க பாடுபொருளாகக் கொண்டு லிமரைக்கூ வடிவிலேயே வடித்து இருப்பது சிறப்பு.
இந்த நூலை ஆழ்ந்து படித்து சிந்தித்துப் பார்த்தால் குடிகாரர் குடியை விட்டு விடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மிக நுட்பமாக குடியின் கொடுமையை நன்கு உணர்த்தி உள்ளார். ஒருவருக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் குடிகாரராக இருந்தால் பிறர் மதிப்பதில்லை என்பது உண்மை.
கற்ற கல்வி தேனானது
பெற்ற புகழ் நாசம் ஆகி
குடிகாரன் என்றே வீணானது!
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்று ஆகி விட்டது. மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை பாழ்.
தெருவெல்லாம் இருக்கிறது மதுக்கடை
உன்னை நீயே வென்று வாகைச் சூடி
மனதிற்குப் போடு தடை!
சொல் விளையாட்டு விளையாடி நூல் முழுவதும் புத்தி புகட்டி உள்ளார். பாராட்டுக்கள். முதல் வரியின் கடைசியும், மூன்றாம் வரியின் கடைசியும் ஒன்றி வர வேண்டும். இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயத்துடன் லிமரைக்கூ இலக்கணத்துடன் நன்கு படைத்துள்ளார்.
உழைக்காத சில சோம்பேறிகள் மனைவி உழைத்து சேமித்து வைத்திருக்கும் பணத்தை திருடி விட்டு குடிக்கச் செல்லும் அவலம் பல குடும்பங்களில் நடந்து வருகின்றது.
மனைவி சேமித்த காசு
திருடிச் சென்று குடித்து விட்டாய்
மதிப்பில் நீயொரு தூசு!
குடியை பழகிவிட்டு அதனை மறக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக கவனத்தைக் குடியிலிருந்து விட்டு புத்தகத்தில் செலுத்து என்கின்றார்.
குடிக்கும் பழக்கத்தை தீயிடு
நூலகத்தில் உள்ள நல்ல நூல்களை
தினமும் கையில் நீயெடு !
யானை போன்ற பலம் மிக்கவனும், குடிப்பழக்கத்தால் சீரழிவான் என்பதை நன்கு உணர்த்திடும் லிமரைக்கூ நன்று.
குடியறியாதவன் பலமிக்க யானை
குடித்து சீரழிபவன் ஒன்றுக்கும் உதவா
உடைந்த மண் பானை!
மதுவைக் குடிப்பதால் அது நம் உடலில் உறுப்புகளை அரித்து வாழ்நாளை குறைத்து விரைவில் மரணத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்கள், சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்ற முன்வர வேண்டும்.
மது ஒரு திருடன்
உன் உள் உறுப்புகளை திருடிவிடும்
நீ ஒரு மூடன்!
சிலர், தான் குடிப்பதோடு நின்று விடாமல், நண்பர்களையும் வலுக்கட்டாயமாக குடிக்க பழக்கி விடும் தீயவர்களும் இருக்கின்றனர். ஆனால் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். “நண்பனை குடி என்று சொல்பவன் நண்பனே அன்று” என்பதை உணர் வேண்டும். குடிக்கச் சொல்லும் நண்பனிடமிருந்து நட்பை முறித்துக் கொள்வது நல்லது.
குடிக்கச் சொல்லும் நண்பன்
மாற்று உண்மையில் அவன்தான்
உனது வருங்காலப் பகைவன்!
உண்மை தான். நண்பர்களாக மதுக்கடை உள்ளே சென்று மதுவை குடித்து விட்டு, தன்னை மறந்து சண்டையிட்டு பகைவர்களாக வெளியே வரும் அவலம் நாள்தோறும் நடக்கின்றது.
சமுதாயம் நம்மை மதிக்க வேண்டுமென்றால், குடிப்பழக்கம் கூடாது. சாதனைகள் நிகழ்த்த வேண்டுமென்றால் குடிப்பழக்கம் கூடாது. புகழ் பெற வேண்டுமென்றால் குடிப்பழக்கம் கூடாது.
நல்லோரை வாழ்த்தும் நாக்கு
நலமில்லா மதுவை குடித்து சீரழிந்தால்
நீ கிழிந்துப் போன சாக்கு!
குடியின் காரணமாக கிழிந்த சாக்கு ஆவாய் என்று நன்கு உணர்த்தி உள்ளார். இப்படி நூல் முழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தும் லிமரைக்கூ வடித்துள்ளார். மதுவிலக்குத் துறையின் சார்பில் இந்த நூலிற்கு விருது வழங்கி நூலாசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்களை கௌரவிக்கலாம். அவர்கள் தொடர்ந்து எழுதிட ஊக்கமளிப்பதாக இருக்கும்.
இன்றைய இளைஞர்கள் பலரும் நண்பர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பீர் குடிக்கிறோம் என்று ஆரம்பித்து பிராந்தி, ரம் என்று பழகி வருகின்றனர். நமது பண்பாடு மறந்து, சமுதாயம் சீரழிந்து வருகின்றது. குடியை நாம் தடுக்காவிட்டால் சமுதாயம் சீரழிந்து விடும். இளைஞர்கள் சாதிக்க வேண்டிய வயதில், குடிக்கு அடிமையாகி வாழ்வை இழக்கின்றனர். பல்வேறு குற்ற செயல்களுக்கும் உந்து சக்தியாக, காரணியாக குடியே உள்ளது.
வாழ்வோடு ஏன் தகராறு
அரிதான வாழ்வில் மேம்பட அறிந்தால்
வாழ்க்கை ஒரு வரலாறு!
குடியை ஒழித்து நல்ல வரலாறு படைக்க உதவும் நூல் எழுதிய நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|